காவ்யா - கவிதை இலக்கியம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:15 | Best Blogger Tips

தேவையில்லா web திறக்க கூடாது என்ற ஒரு Web adress

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:13 | Best Blogger Tips
http://www1.k9webprotection.com/

பருவமழை தொடங்கியாச்சு: என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா?!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:36 | Best Blogger Tips
ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை வெயில் கொளுத்திய நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பருவமழை கொட்டி வருகிறது. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வரும் நிலையில் மழைக்காலத்தில் நோய்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். என்னென்ன நோய்கள் ஏற்படும், அதற்கு எவ்வாறு நிவாரணம் காணலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.

தொற்றுநோய்களின் தொல்லை

மழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்க் காடாகவே இருக்கும். இதனால் எளிதில் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கியவர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும். இப்படிப் பரவும் நோய்களிலிருந்து தப்பிக்க, வருமுன் காக்கும் பாலிஸிதான் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

சளி, தும்மல், காய்ச்சல்

தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களை இந்த வைரஸ் நோய்க்கிருமிகள் தாக்கி இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை கவனிக்காமல் விட்டு-விட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும்- அபாயமும் இருக்கிறது. மழைக்காலத்தில் ஒருவர் பயன்படுத்திய டவல், கைக்குட்டை ஆகியவற்றை மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

டெங்கு வரும் எச்சரிக்கை

மழைக்காலத்தில் விலைவாசி போல விறுவிறுவென உயர்ந்துவிடும் கொசுக்களின் எண்ணிக்கையும். கொசுக்கள் மூலமாக எளிதில் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல். இதற்கும் உடல்வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும். கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.

மலேரியாவா இருக்கலாமோ?

மழைக்காலத்தில் பாரசைட் என்ற கிருமிகள், மலேரியாவை ஏற்படுத்தும். இது பெண் கொசுவால் பரவும். ரத்த சோகை, மலத்தில் ரத்தம், நடுக்கம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.
ரத்த சோகை, மூளை தொற்றுநோய், ஈரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், நுரையீரலில் நீர்த்தேக்கத்தால் மூச்சிரைப்பு, சுவாசத் தடை, மண்ணீரலீல் சிதைவு ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்படும். இந்த நோய் ஏற்படுவதை தடுக்க உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும்.

உலைவைக்கும் மஞ்சள் காய்ச்சல்

ப்ளாவி வைரஸ் மூலம் மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது. தொற்று நோய்க் கொசுக்களால் மட்டும் பரவும். தலைவலி, உடல்தசை மட்டும் மூட்டுகளில் வலி, காய்ச்சல், முகத்தில் சிவப்புத்தன்மை, பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் உடனே மறைந்து விடும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு 3 - 4 நாட்களில் காய்ச்சலும் மற்ற அறிகுறிகளும் மறைந்து போகும்.

கோமா நிலை ஜாக்கிரதை

காய்ச்சல் அதிகரித்தால் நோயாளிகளுக்கு மயக்க நிலை ஏற்படும். தாறுமாறான இதய துடிப்பு, ரத்தக் கசிவு, சிறுநீர் கழித்தல் குறைந்து விடும், மனப்பதற்றம், வாந்தி, உடல்தசை வலி, காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை, தசைவலி, கண்கள் சிவத்தல், மற்றும் கோமா நிலையை கூட அடையலாம். இதனால் மரணம் கூட ஏற்படும்.

எலிகள் மூலம் பரவும் எலிக்காய்ச்சல்

ஹெப்படிடிஸ் ஈ வகை வைரஸ் கிருமி எலி மூலமாக பரவுகிறது. இதனை எலிக் காய்ச்சல் என்று கூறுவார்கள். ஜுரம், மூட்டு வலி, மஞ்சள் காமாலை ஆகியவை எலிக் காய்ச்சலின் அறிகுறிகள். இந்தக் காய்ச்சல் உயிரையே பலிவாங்கக்கூடியது என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தலைவலி தரும் டைபாய்டு

மழைக்காலத்தில் டைபாய்டு காய்ச்சல் ஏற்படுவது இயற்கை. வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் இந்த காய்ச்சலினால் அடிவயிறு வலிக்கும். தலைவலி வாட்டி எடுக்கும். விட்டு விட்டு காய்ச்சல் வரும். எனவே உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். நன்றாக ஓய்வெடுக்கவேண்டியது அவசியம்.

பூஞ்சை தொற்றுநோய் ஜாக்கிரதை

மழைக்காலத்தில் ஜாலியாக இருக்கிறது என்பதற்காக மழையில் நனைவதும் நல்லதல்ல. ஈரமான ஆடைகளை அணிவதையும் தவிர்க்க வேண்டும். ஈரத் துணிகளில் இருந்து நம் உடலில் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புகளும் இருக்கின்றன. மழைக்காலம், வெயில் காலம் என்று எந்தக் காலமாக இருந்தாலும் நம்மையும் நாம் சார்ந்த இடத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டாலே போதும். நோய்கள் குறித்த கவலை இல்லாமல் இருக்கலாம்

வாட்டி எடுக்கும் வயிற்றுப்போக்கு

மழைக்காலத்தில் தண்ணீரின் மூலம் பரவும் நோய் காலரா. இதனால் வாந்தி பேதி ஏற்பட்டு வாட்டி எடுக்கும். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உடனடியாக செய்யவேண்டியது காய்ச்சி ஆறவைத்த நீரில் சர்க்கரை, உப்பு கலந்து பருக கொடுக்கலாம்.

கண்வலி வரும் ஜாக்கிறதை

மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி மழைக் காலத்தில்தான் அதிகம் பரவும். இது கஞ்சக்டிவ் வைரஸ் மூலமாகப் பரவுகிறது. இந்த வைரஸ் முதலில் நுரையீரலைத் தாக்கும். அதன் பிறகுதான் கண்ணைத் தாக்கும். லேசான கண்வலி, எரிச்சல் வந்தால் வெதுவெதுப்பான நீரில் கண்களைக் கழுவ வேண்டும்.

காய்ச்சிய தண்ணீரை குடிங்க

தண்ணீரின் மூலம்தான் அநேக நோய்கள் பரவுகின்றன. எனவே எந்த சீசனாக இருந்தாலும் தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும். மினரல் வாட்டரோ மெட்ரோ வாட்டரோ எந்த தண்ணீராக இருந்தாலும் காய்ச்சி, வடிகட்டி குடிப்பதுதான் நல்லது.

செருப்பில்லாமல் போகாதீங்க

மழைக்காலத்தில் செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. பாதாள சாக்கடைகள்தான் இதுபோன்ற நோய்கள் பரவுவதற்கான முக்கிய பொறுப்பை ஏற்கின்றன. எனவே சாக்கடைகள் நிரம்பி வழியும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கலாம். சாலைகளில், வீடுகளின் வெளிப்புறத்தில், எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும். வீட்டிற்குள் வந்தவுடன், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவவும்.

சூடான உணவுகளை சாப்பிடுங்களேன்

எப்போதும் சுத்தமான உணவுகளைச் சாப்பிடுவதுடன் தெருக்களில் விற்கும் ஜூஸ், பொரித்த உணவுகள், ஓட்டல் சாப்பாடு ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. பழைய, மீதமான உணவை குளிர்பெட்டியில் வைத்து, மீண்டும் சூடுபடுத்தி உண்ணக் கூடாது.

பற்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:23 | Best Blogger Tips
பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.
தற்போது நிறைய மக்கள் பற்கள் வெள்ளையாக மாறுவதற்கு எவ்வளவோ முயற்சிகளை எடுக்கின்றனர். மேலும் பற்களை வெள்ளையாக்குவதற்கும், வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும் நிறைய இயற்கை வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, வேப்பங்குச்சி, கடுகு எண்ணெய், உப்பு, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தினால், சொத்தை பற்கள், துர்நாற்றம் போன்றவற்றை எளிதில் நீக்கிவிடலாம். பற்களும் வெள்ளையாகும்.
பொதுவாக பற்களில் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளே காரணங்களாகின்றன. அதிலும் அவற்றை உண்பதால், பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதோடு, பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தையாகவும், துர்நாற்றம் உள்ளதாகவும் மாற்றுகிறது. ஆகவே அத்தகைய உணவுகளை உண்ட பின், பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுப் பொருட்களை நீக்க டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்துவது நல்லது.
இப்போது அவ்வாறு எந்த உணவுகளை சாப்பிடுவதால், பற்களில் சிக்கி பற்களை ஆரோக்கியமற்றதாக மாற்றுகின்றன என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, அவற்றை சாப்பிட்டப் பின் டூத் பிக் அல்லது டென்டல் ப்ளாஸ் பயன்படுத்தி, பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாமா!!!

சீஸ்

உணவுகளில் வித்தியாசமான சுவைக்காக சேர்க்கும் பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். இதனை சேர்ப்பதால், அந்த உணவை சாப்பிடும் ஆர்வம் அதிகரிக்கும். அவ்வாறு சேர்க்கும் சீஸை சாப்பிடும் போது, அவை பற்களில் சிக்கிக் கொண்டு, பற்களை சொத்தை ஆக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் உண்டாக்குகிறது

சாக்லேட்

அனைவருக்குமே சாக்லேட் மிகவும் பிடிக்கும். சாக்லேட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் அதில் உள்ள இனிப்பு பற்களில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை தங்க வைக்கும். ஆகவே அதனை தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதை சாப்பிட்டப் பின் பற்களை மறக்காமல் பிரஷ் செய்துவிட வேண்டும்.

பாப்கார்ன்

ஸ்நாக்ஸிலேயே டிவி அல்லது தியேட்டர் சென்று படம் பார்க்கும் போது சாப்பிட பாப்கார்ன் தான் சிறந்ததாக இருக்கும். அவ்வாறு சாப்பிடும் பாப்கார்ன் பற்களுக்கிடையே மாட்டிக் கொள்ளும். அதனை நீக்குவது என்பது கடினமானது. ஆகவே அதனை நீக்க டென்டல் ப்ளாஸ் (dental floss) தான் பயன்படுத்த வேண்டும்.

பிரட்

அதிகமான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ள பிரட் கூட பற்களில் மாட்டும் உணவுப் பொருட்களில் ஒன்று. இது வறட்சியுடன் இருப்பதால், ஈறுகளில் மாட்டிக் கொண்டு, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நூடுல்ஸ்

நூடுல்ஸ் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இதனை எந்த நேரத்தில் கொடுத்தாலும் சாப்பிடுவோம். அத்தகைய நூடுல்ஸ் கூட பற்களில் மாட்டிக் கொண்டு, நீண்ட நேரம் இருந்தால் பாக்டீரியாவை அதிகரிக்கும்.

இறைச்சி

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் இறைச்சியை நன்கு கடித்து இழுக்கும் போது, அதில் உள்ள சிறிய பகுதி கண்டிப்பாக பற்களில் மாட்டிக் கொள்ளும். அவ்வாறு மாட்டிக் கொள்வதை நீக்க முடியாமல் இருக்கும். மேலும் அவை பற்களில் இருப்பதால், அதிக எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே எப்போது அதனை சாப்பிட்டாலும், டென்டல் ப்ளாஸை பயன்படுத்துவது நல்லது.

கல்யாணமாகி புருசன் வீட்டுக்கு போக போறீங்களா? இத படியுங்களேன்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:17 | Best Blogger Tips
எப்போது திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்கிறோமோ, அப்போது புகுந்த வீட்டில் நிறைய பேரை சமாளிக்க வேண்டியிருக்கும். அவ்வாறு அவர்களை கஷ்டப்பட்டு சமாளிப்பதற்கு, அவர்களுக்கு உங்களை பிடிக்கும் வகையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருந்தால், அவர்கள் அனைவரையும் எளிதில் அன்பால் வெல்ல முடியும். ஏன் நீங்களே அவர்களது செல்லமாக கூட மாற முடியும். மேலும் எப்படி புதிதாக ஒருவர் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களை ஏற்பது சற்று கடினமோ, அப்படி தான், நீங்கள் செல்லும் வீட்டில் இருப்பவர்களும் உங்களை ஏற்க சற்று நாட்கள் ஆகும். ஆகவே அவர்களுக்கு உங்களை விரைவில் பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அவ்வாறு நடந்து உங்கள் புகுந்த வீட்டில் இருப்போரின் செல்லமாக மாறுங்கள்.
* திருமணம் ஆவதற்கு முன்பு அவர்களை சந்திக்க வேண்டும். அவ்வாறு சந்திக்கும் போது சற்று அழகாக, குடும்பப் பாங்கான பெண்ணைப் போல் அழகாக சேலையை அணிந்து, அவர்களை சந்தித்து பேச வேண்டும். மேலும் பேசும் போது, நன்கு கலகலப்போடு, அன்போடு பேச வேண்டும். அதிலும் சந்திக்கச் செல்லும் முன் எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை ரிகர்சல் செய்து கொண்டு செல்வது நல்லது.
* மாமனார், மாமியார் நிறைய அனுபவம் உள்ளவர்கள். ஆகவே திருமணம் ஆனப் பின்பு, அவர்கள் எது சொன்னாலும் சரியாக இருக்கும் என்பதை புரிந்து நடந்து கொண்டால் நல்லது. அதிலும் அவர்கள் பழங்காலத்தவர். எனவே அவர்கள் என்ன சொன்னாலும், அது உங்களுக்கு பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, அதற்காக அவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், பொறுமையாக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் நடந்து வந்தால், நீங்கள் நிச்சயம் அவர்களுக்கு ஒரு செல்லமாக மாறலாம்.
* புகுந்த வீட்டிற்கு சென்றால், அங்கு மாமனார், மாமியார் தான் அம்மா, அப்பா போன்று. எப்படி அம்மா, அப்பாவிடம் இருப்போமோ, அந்தவாறே அவர்களிடம் நடக்க வேண்டும். வாழ்க்கை என்றால் நிறைய புதிய மனிதர்களை சந்திக்க நேரிடும். ஆகவே அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். இல்லை முடியாது என்று இருந்தால், ஒருபோதும் அவர்களுக்கு உங்களை பிடிக்காமல் போய்விடும். மேலும் இதனாலேயே பெரும்பாலான வீடுகளில் மாமியார், மருமகள் சண்டைகள் ஏற்படுகின்றன. ஆகவே இந்த பிரச்சனையை தவிர்க்க, அவர்களை தன் அம்மா, அப்பா போன்று நினைத்து பழக வேண்டும்.
* கணவர் வீட்டிற்கு சென்றால், அங்கு இருப்பவர்களுக்கு பிடித்தது, பிடிக்காதது என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். சரி, உங்களுக்கு உங்களது அப்பாவின் பிறந்தநாள் வந்தால், என்ன செய்யலாம் என்று யோசித்து, எவ்வாறு ஒரு அதிர்ச்சி கொடுப்போம். அதேப்போல் தான் திருமணத்திற்கு முன் மாமனார், மாமியாரை சந்திக்கும் போது, அவர்களிடம் அவர்களது பிறந்தநாள், திருமண நாள், பிடித்தது, பிடிக்காதது என்பவற்றை கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கும் ஒரு அதிர்ச்சி கொடுத்தால், அவர்கள் சந்தோஷத்திற்கு அளவில்லாமல் போய்விடுவதோடு, அன்று முதல் நீங்களே அவர்களது மகனை விட செல்லமாகிவிடுவீர்கள்.
* எப்போது உங்கள் மாமியார், மாமனார் உங்களை அழைத்தாலும், அவர்களுக்கு மரியாதைக் கொடுக்கும் வகையில் சென்று என்ன வேண்டும் என்பதை கேட்டு, அதை செய்ய வேண்டும். உதாரணமாக, மாமியார் சமையறையில் இருக்கும் போது, அவர்களுக்கு சென்று சிறு உதவிகள் செய்வது, மாமனார் தோட்டத்தில் வாக்கிங் செல்லும் போது அவருடன் செல்வது போன்றவற்றை செய்தால், உங்கள் மீது அன்பு அதிகரிக்கும்.

சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் & உடல்நல நன்மைகள்:-

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:42 | Best Blogger Tips
சோளத்தில் உள்ள ஊட்ட சத்துக்கள் & உடல்நல நன்மைகள்:-

சோளம் பொதுவாக நாம் மெரினா பீச்சில் சாப்பிட்டு இருப்போம் சோளத்தை சுட்டு தருவார்கள் தின்பதற்கு மிகவும் அருமையாய் இருக்கும் மற்றும் பொழுது போக்கு சார்ந்த இடங்களிலும் சாப்பிட்டு இருப்போம் . நவீன காலத்தில் பெரும்பான்மையான வணிக வளாகங்கள் தியேட்டர்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களில் சோளம் சில கலவைகளை சேர்த்து விற்பனை செய்கிறார்கள் . சோளத்தில் இவளவு நன்மைகள் இருக்கிறது என்று நமக்கு தெரியாது .சோளம் மிகவும் ஒரு சத்தான பொருளாகவே இருக்கிறது

இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சோளத்தில் உள்ள ஊட்டசத்து விபரம்

ஆற்றல்-349 கி.கலோரி, புரம்-10.4 கிராம், கொழுப்பூ1.9 கி, மாவுச்சத்து - 72.6 கி, கால்சியம் - 25 மி.லி, இரும்புசத்து 4.1 மி.கி, பி-கரோட்டின் – 47 மி.கி, தயமின் - 0.37 மி.கி, ரிபோப்ளோவின் 0.13 மி.லி, நயசின் - 3.1 மி.கி

வெல்லம்... ரத்த சோகையை வெல்லும்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:40 | Best Blogger Tips


பழங்குடி மக்களின் உடல்நலம் கருதி இனி, அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ரேஷன் கடைகளில் வெல்லம் வழங்கத் திட்டமிட்டு இருக்கிறது அரசு. ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆயிரக்கணக்கான பதின்பருவப் பெண்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஓர் இனிப்புச் செய்தி. ரத்தசோகையைக் குறைக்கும் ஆற்றல் நிறையவே வெல்லத்தில் உண்டு. வெல்லத்தின் துணையுடன் ரத்தசோகையை எப்படி வெல்வது? ஈரோடு அரசு சித்த மருத்துவர் ஆர்.கண்ணன், உணவியல் நிபுணர் குந்தலா ரவி சொல்லும் வழிகள் உங்களுக்காக!


ரத்தசோகை?

இரும்புச் சத்துக் குறைவுதான் ரத்தசோகைக்கு முக்கியக் காரணம். உடல் வெளுக்கும். நகம் வெளுக்கும். முகம் வீங்கும். கண் இமை மற்றும் உள் உதடுகளில் வெண்படலம் தெரியும். அடிக்கடி மூச்சுத் திணறும். கை, கால் வலிக்கும். இவை எல்லாம் முக்கிய அறிகுறிகள்.

இரும்பு வெல்லம்!

பனைவெல்லத்தைவிடவும் கரும்பி-ல் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உண்டு. 100 கிராம் வெல்லத்தில் 2.64 மில்லி கிராம் இரும்புச் சத்தும் 80 மில்லி கிராம் கால்ஷியமும் உள்ளது. இரும்புச் சத்தும் கால்சியமும் சேரும்போது உடலுக்கு நல்ல வலு கிடைக்கும். தவிர பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் வெல்லத்தில் உண்டு.

நீடித்த பலன்!

சீனியை உட்கொள்ளும்போது சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேரும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கிவைத்துத் தேவைப்படும்போது தரும்.
பெண்களுக்கு மாதவிடாயின்போது சோர்வாகவும், படபடப்பாகவும் இருக்கும். அந்த நிலையில் வெல்லம் சாப்பிட்டால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வாதம், பித்தம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தைத் துணை மருந்தாகத் தரலாம். வெல்லத்தைச் சமையலில் பயன்படுத்தும்போது சுவை அதிகரிக்கும்.
ஓமம், மிளகு வெல்லம் மூன்றையும் சம அளவில் எடுத்துப் பொடி செய்து, காலை மற்றும் இரவு அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவந்தால், வயிற்றுக் கடுப்பு கழிச்சல் தீரும். குடல் புழுக்களைக் கட்டுப்படுத்த அதிகாலையில் வெல்லத்தைச் சிறிது அளவு உட்கொள்ளலாம்.

காளான் மருத்துவ பயன்கள் பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:38 | Best Blogger Tips
காளான் மருத்துவ பயன்கள் பற்றிய தகவல்.

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

பசு – சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:28 | Best Blogger Tips
பசு – சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்

பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.
பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.
பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும்.

பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.
ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.

சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.

ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8 மணி நேரம் அதனை அசை போடவும் பசுவுக்குத் தேவை.

அசை போடும் போது நிமிடத்திற்கு சுமார் 40 – 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.
ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறுநீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளி யேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.

பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல்லது.

மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது.
பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.

மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத் தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.

பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மை யானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.
கறக்கும் பசு மாடு நாளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுகிறது..

பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட். உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.

உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.
ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகச்சாதனை செய்த மாட்டின் பெயர் 'உர்பே' ஆகும்.

இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்.

- vidhai2virutcham

சுரைக்காய் உடல்நல நன்மைகள்:-

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:27 | Best Blogger Tips
சுரைக்காய் உடல்நல நன்மைகள்:-

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.
• சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

• உடலை வலுப்படுத்தும்.

• பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

• இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

• குடல் புண்ணை ஆற்றும்.

• மலச்சிக்கலைப் போக்கும்

• மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:16 | Best Blogger Tips
நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?
============================

கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் அழகு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். ரங்கோலி இட்டால் எடுப்பாக இருக்கும். மேடை அமைத்து பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும்.
கொலு பொம்மை தத்துவம் மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது. கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது சிறப்பு.

முதல் படியில் புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது.

இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள்.

மூன்றாம் படியில் எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.

நான்காம் படியில் நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்றுவதை இந்த பொம்மைகள் குறிக்கும்.

ஐந்தாம் படியில் மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.

ஆறாம் படியில் மனித பொம்மை வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம் படியில் முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள்.

எட்டாம் படியில் தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தேவர் நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது.

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதி பராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும். உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது.

நம் வீட்டு குழந்தைகளிடம் கொலு பொம்மைகளை காட்டி மகிழ்ச்சிப்படுத்துவதுடன், அவர்களின் வயதுக்கேற்ற முறையில், இந்த தத்துவார்த்தங்களையும் எளிதில் புரியுமளவு கற்றுத்தர வேண்டும்.

கொலுமேடைக்கு பூஜை செய்யும் முறை: ------------------------------------------------------------

நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க, இந்த உணவுகளை சாப்பிடுங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:13 | Best Blogger Tips
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க, இந்த உணவுகளை சாப்பிடுங்க...

தற்போதுள்ள காலத்தில் கூந்தல் பிரச்சனைகள் அதிகம் உள்ளன. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதற்கு பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சில சமயங்களில் அந்த கூந்தல் உதிர்வதால், பெண்களுக்கு கூந்தல் மெல்லியதாக தான் காணப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு அழகை கெடுக்கும் வகையில் வலுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஆண்கள் இளமையிலேயே முதிய தோற்றத்திற்கு ஆளாகின்றனர்.

இத்தகைய கூந்தல் உதிர்தலுக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று பரம்பரையாக வீட்டில் இருப்பவர்களுக்கு வலுக்கை இருந்தால், அது தலைமுறை தலைமுறையாக தொடரும். அவற்றை தடுக்க முடியாது.

சிலர் ஆரம்பத்திலேயே கூந்தலை நன்கு பராமரிக்காமல், ஏனோ தானோ வென்று இருப்பார்கள். பின் கூந்தல் நிற்காமல் உதிரும் போது, உதிருகிறது என்று வருத்தப்படுவார்கள். தேவையில்லாமல் அடிக்கடி எதற்கெடுத்தாலும் வருத்தப்படுவது, டென்சன் ஆவது போன்வற்றால் கூட கூந்தல் உதிர்தல் ஏற்படும். மேலும் சிலருக்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லாவிட்டாலும் கூந்தல் உதிர்தல் ஏற்படும். அதிலும் உடலில் ஜிங்க், வைட்டமின்கள் போன்றவை குறைவாக இருந்தால், கூந்தல் உதிர்ந்து கொண்டே இருக்கும்.

ஆகவே அத்தகைய கூந்தல் உதிர்தலை தடுக்க சில உணவுகள் இருக்கின்றன. மேலும் அந்த உணவுகளில் ஜிங்க் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பாதாம்

கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் ஈ பாதாம் பருப்பில் உள்ளது. அதிலும் இதனை சாப்பிட்டால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சியடையும்.

வால்நட்

வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் வால்நட்டில் அதிகம் நிறைந்துள்ளது. கூந்தல் உதிர்வதற்கு உடலில் போதுமான ஜிங்க் இல்லாதது ஒரு காரணம். ஆகவே இதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், கூந்தல் உதிர்தல் நின்று கூந்தலும் நன்கு வளரும்.

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதையில் அதிக அளவில் புரோட்டீன், பொட்டாசியம், ஜிங்க், இரும்புச்சத்து, வைட்டமின் பி, ஈ, மக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கூந்தலானது புரோட்டீனால் ஆனது. மேலும் இதை சாப்பிட்டால், தலைக்கு இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, கூந்தல் நன்கு வலுவோடு வளர்ச்சி அடையும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், கூந்தல் நன்கு வளரும். ஏனெனில் இதிலும் வைட்டமின்கள் ஏ, பி & சி, ஜிங்க், சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதனால் கூந்தல் வளர்ச்சியோடு, உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

ஆப்ரிக்காட்

கூந்தல் வறட்சியால், முடியானது வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும். ஆகவே இந்த பிரச்சனையை போக்க ஆப்ரிக்காட் பழத்தை சாப்பிடலாம். இதனால் இதில் உள்ள இரும்புச்சத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, இரும்புச்சத்து குறைவினால் ஏற்படும் அனீமியா, சருமத்தில் வெளுப்பு ஏற்படுவது, கூந்தல் ஈரப்பசையின்றி, வலுவிழந்து காணப்படுவது போன்றவை சரியாகும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபேன் என்னும் உடலுக்கு தேவையான அமினோ ஆசிட் மற்றும் பொட்டாசியம் உள்ளது. ஆகவே இந்த பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, கூந்தலும் பட்டுப்போன்று இருக்கும். ஏனெனில் இதில் கூந்தலுக்கு தேவையான இயற்கை எண்ணெயும் அடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மயிர்கால்களுக்கு மென்மையை தரும்.

பெர்ரி

பெர்ரிப் பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளது. இதிலும் நெல்லிக்கனி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்றவற்றில் அதிகம் உள்ளது. இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் போன்றவை உள்ளன. ஆகவே இதனை சாப்பிடுவதால், ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் நன்கு வளர்ச்சியடையும். மேலும் கூந்தலுக்கு சரியான அளவு ஊட்டச்சத்துக்களும் கிடைத்து, கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.


உலர் திராட்சை

இரும்புச்சத்து உலர்ந்த திராட்சையில் அதிகம் உள்ளது. இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் ஆக்ஸிஜன் சீராக பாயும். மேலும் இது மயிர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தந்து, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். கூந்தலும் நன்கு வளரும்.

கொடிமுந்திரி

இந்த கொடிமுந்திரியில் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால், இரத்த சோகை, சோர்வு, பழுப்பு நிற தோல், உலர்ந்த நகங்கள் மற்றும் மந்தமான கூந்தல் போன்றவை நீங்கும்.

பால் பொருட்கள்

மாட்டுப்பாலில் வைட்டமின் ஏ மற்றும் பி12 நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள பயோடின் என்னும் புரோட்டீன், கூந்தலை நன்கு வலுவாக்கும். வேஷ்டுமென்றால், ஸ்கிம் மில்க், கொழுப்பு குறைவாக இருக்கும் தயிர் போன்றவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வரலாம்.

தானியங்கள்

தானியங்களில் வைட்டமின் பி5 மற்றும் இனோசிட்டால் போன்றவை இருக்கிறது. ஆகவே தானியங்களால் ஆன ஸ்நாக்ஸ் பாரை உணவில் சாப்பிட்டு வந்தால், மயிர்கால்கள் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, கூந்தலும் நன்கு வளர்ச்சியடையும்.

ஆலயங்களில் இறைவனை தரிசிக்க‍ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:12 | Best Blogger Tips
ஆலயங்களில் இறைவனை தரிசிக்க‍ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் 100

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6. போகும்போதோ வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண் டாம்.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
11.சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற உணவு வகைகளை சாப்பிடலாம்.
12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
13.ஆலயம் வர இயலாதவர்கள், வெளிநாடுவாசிகள், விரும்பாதவர் கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாச முள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷ யமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல் லாமல் இருப்பது நல்லது.
16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப் பூஜையை செய்ய வேண்டும்.
18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வரு வது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
20.தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர் கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.
21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதி டரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.
25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தல த்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழ வகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை,அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.
33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.
35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக் காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.
39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.
41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதி யான தரிசனம் கிடைக்கும். வசதி இருப்பின் செய்து கொள்ளவும். குற்ற உணர்ச்சி தேவையில்லை.
44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண் டாம்.
46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண் ணவும்.
50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமி ச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.
52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம்.
53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனி யான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக் கூடாது.
57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங் களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத் துடன் பிரதட்சணம் வருவது தவறு.
59. ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை
கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌவ்யமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.
60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.
61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.
62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.
64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.
65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.
66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.
67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.
68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை. அல்லது மெல்லிய குரலில் பாடவும்.
70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.
71.சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.
75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.
76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.
77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.
78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.
79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.
80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.
81. சங்கல்பம் மிக முக்கியம்.
82. கோபுர தரிசனம் கோடி நன்மை.
83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழி படுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார் த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.
86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1.பித்ருக்கள், 2.குல தெய்வம், 3.விநாயகர், 4.திசாநாதன், 5.பிரச்சனை அல்லது கோரி க்கை சார்ந்த தெய்வம்.
91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங் கள்.
93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதி ற்குள் செய்து விடுங்கள்.
94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.
95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ் திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறை யான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடை க்கும்.
100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும் போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

நன்றி:- விதை2விருட்சம்