ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட விதி! ? ? ? ?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:13 | Best Blogger Tips


இப்பொழுது விவாகரத்து அதிகரித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் விவாகரத்துக்கு பெண் ஆண் மீதும், ஆண் பெண் மீதும் போடும் காரணமில்லாத குற்றச் சாட்டு தான். இப்படி பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற கட்டாய மில்லை. ஆனால் வாதத்திற் காக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ள லாம்! 
ஒரு பெண் ஒழுக்கமானவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார் க்கும் ஆண், அதே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மனை வியின் நடத்தையில் அவமானப்படும் ஆண், அதேபோல மனை வியும் தன் நடத்தையில் அவமானப்படுவாள், வேதனைப்படுவா ள் என்ற உண்மையை உணர வேண்டும். ஒழுக்கம் என்பது இருவ ருக்கும் பொதுவானது. 
 
கணவன், மனைவி இருவரும் சேர்ந்துதான் திருமண பந்தத் தை காப்பாற்ற வேண்டும். அதில் ஒருவர் மட்டுமே நேர் மையாக வாழ்ந்து மற்றவர் நம்பிக்கை துரோகம் செய்வது நியாயமாகாது. நம் சமுதாயத்தில் ஒழுக்கம் என்பது பெண்களுக்கு மட்டுமே விதி க்கப்பட்ட விதி. ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். 
 
மனைவிக்கு கணவன் செய்யும் துரோகம் இயல்பானது. அதே துரோகத்தை மனைவி செய்தால் நடத்தை கெட்டவள் என்று சொல் கிறார்கள். இது காலகாலமாக நடந்து வரும் வழக்கம். இது ஆண் ஆதிக்கத்தின் பிரதிபலிப்பு. தான் செய்யும்   தவறுகளை மனைவி கண்டு கொள்ளாமல் விட்டுவிட வேண்டும். அப்படியே தெரிந்து விட்டாலும் மன்னித்து விட வேண்டும். 
 
ஒரு ஆண் திருமண பந்தத்தை மீறி ஒழுக்கக் கேடாக நடப்பதற்கு பல காரணங்களை சொல்வார். குறிப் பாக மனைவி சரியில்லை என்று சொல்வார். ஆனால் அதே காரண த்தை ஒரு மனைவி சொன் னால் சமூகம் ஏற்காது. திருமண உறவு என்பது நம் நாட்டைப் பொறுத்த வரையில் மரியாதைக்குரியது. 
 
அதை இருவரும் மாறி மாறி கேலிக்குரியதாக்குவது திருமண பந்தத்தையே திகைக்க வைத்துவிடும். இன்று சாதாரண காரண ங்களுக்காக திருமண உறவுகளை முறித்துக் கொள் கிறார்கள். அந்த உறவுகளை, எத்தனை லட்சங்கள் செலவிட்டாலும் மீண்டும் இணைக்க முடியாது. திருமண பந்தத் தில் கிடைக்கும் பாதுகாப்பு, எதிர்கால ம் இதெல்லாம் தாறுமாறான பந்தங்களால் கிடைக் காது. 
 
இதை இருவரும் புரிந்து கொள்ளவேண்டும். தவறான ஆண்களை இந்த சமூகம் நிறைய பார்த்திருக்கிறது. தவறான பெண்க ளை சமூகத்தால் ஜீரணிக்கமுடியாது. காரணம் பெண்களை எப்போதும் தெய்வங்களாக வும், நல்லவர்களாகவும் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டது இந்த சமூகம். இதனால் ஆண்களை திரு த்த பெண்கள் படுகுழியில் விழவேண்டிய அவசி யமில்லை. 
 
கற்பு என்பது இருவருக்கும் பொதுவான ஒன்று என்ற கருத்தை யே இன்றளவில் ஏற்க மறுக்கும் ஆண்வர்க்கம் தன்னுடைய புத்தி சாலித்தனத்தை பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பெண்களை ஏமாற்றுவதிலேயே செலவிடுகிறது. திருமணம் எனும் புனிதமான பந்தத்தை காப்பாற் றும் கடமை நமக்கும் இருக்கிறது என்ற உணர்வு ஆண்களுக்கும் வர வேண்டும். 
 
வந்தால், விவாகரத்துகள் அதிகரிக்காது. விவாகரத்து என்பது ஒரு சாபக்கேடான விஷயம். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, சமூகத்தி ன் பார்வையிலிருந்து அவர்களை கீழிற க்கும் விஷயம். அதனால் விவாகரத்து செய்வதை பெரிய சாத னையாக நினைக்காமல் கூடுமானவரை அதை தவிர்ப்பதே நல்ல து. பண்பு தவறிய மனித வாழ்க்கை ஒருபோதும் நிம்மதியைத் தராது.
நன்றி விதை2விருட்சம் இணையம்

இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் பத்து பிரச்ச‍னைகள்! – மனநல மருத்துவர் ஷாலினி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:36 | Best Blogger Tips




குழந்தைகளாய் இருக்கும் வரை அப்பா அம்மா என்றாலே அடங்கிப் போய் அன்பாய் பழகியவர்கள் எல்லாம் இந்த பதின் பருவத் தை தொட்டு விட்டாலே போதும், புது புது பிரச்சனைகள் பல தலை தூக்கி விடுகின்ற ன. இப்படி பலதரப்பட்ட பதின் பருவ பிரச்ச னைகள் இருந்தாலும், மிக அதிகமாய் ஆலோசனை மையத் திற்கு வருபவை எவை தெரியுமா?

1. படிப்பில் வீக்
  
ஐந்தாம் வகுப்பு வரைக்கும் அவ்வளவு சூப்பரா படிச்ச பிள்ளை தான், என்னனே தெரியல, வர வர படிப்புல ரொம்வ வீக்காயிட்டேபோய், மார்க்கெல்லாம் சொல்லிக்கி றா மாதிரியே இல்லை” என்ற புகாரு டன் வரும் பெற்றோர்களின் எண்ணிக் கை தான் மிக அதிகம். குழந்தையை அழைத்து விசாரித்தால், “எவ்வளவு படிச்சாலும் மறந்து போயிடுது” என்கி றார்கள், அல்லது, “புக்கை திறந்தாலே , பகல் கனவா வருது” என்கிறார்கள். பரிசோதித்து பார்த்தால் அநேக குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருந்தாலும், வெறு மனே மக் அடித்து, அர்த்தமே புரியாமல் படிக்கும் பாணி தெரிய வரும். இந்த “டப்பா அடிக்கும்” பாணி எல்லாம் சின்ன கிளாஸ் சிம்பிள் பாடங்களுக்கு ஓகே. ஆனால் பெரியகிளாஸ் போக போக , பாடங்களின் ஆழம் அதிகம், புரிந்து க்கொள்ள வேண்டிய மேட்டரின் அகல மும் அதிகம் என்பதால் இந்த மனப் பாட யுத்தி அதற்குமேல் பிரயோஜன மே படாது. 
முழு பாடத்தையும் அப்படியே முறுக்கி பிழிந்து வெறும் முக்கிய மான சாரை மட்டும் கரந்தெடுத்து, கரைத்து குடிக்கு ம் யுத்திகள் பல உள்ளன. நியாயமாய் பாடம் நடத்தும் ஆசிரியர்களே இந்த யுத்திகளையும்சேர்த்து மாண வர்களுக்கு சொல்லித்தந்தால்தான் கற்றவை நிற்கும் அதற்கு தக. ஆனால் என்ன செய்வது, இந்த யுத்திகளை எல்லாம் சொல்லி த்தர ஆசிரிய பெருமக்களுக்கு நேரம் இல்லா காரணத்தினால், இதை யெல்லாம் தனியாக சொல்லித்தர வேண் டியுள்ளது. இப்படி புரிந்து, படித்து, கிரகித்துக் கொள்ளும் யுத்திகளை தெரிந்துக் கொண்டாலே, அநேக மாணவர்கள் படிப்பில் முன்னேறி விடுகி றார்கள். அப்படியும் கொஞ்சம் முன்னே பின்னே என்று இருக்கும் மாணவர்களுக்கு மூளையை கூராக்கும் சில ஊக்க மாத்திரைகளை,  மருத்து வர்களின் பரிந்துரையின்பேரில் கொடுத்து முன் னேற்ற பார்க்கலாம்.
2. ஓவர் டென்ஷன்:
  
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பொதுவாய் எல்லா பதின்பருவக்கார்ர்களை பற்றியும் வரும் அடுத்த புகார், இந்த முன் கோபம். அது வரை சொல் பேச்சை கேட்டு, அமைதியாய் வளைய வந்த பிள்ளைகள், பருவ வயதை தொட்ட உடனே, “எல் லாம் எனக்கு தெரியும், நீங்க ஒண்ணும் சொல்லவேண்டாம்” . என்று பெற்றோரையே எதிர்த்து பேசி விடுகிறார்கள். சரி பிள்ளை தான் ஏதோ மனநிலையில் ஏடா கூடமாக பேசுகிறதே, நாமாவது கொஞ்சம் விட்டு கொடுத்து போ வோமே என்கிற விவஸ்த்தையில்லாம ல் பெற்றோர், “உன்னை எவ்வளவு கஷ்ட ப் பட்டு, பெத்து வளர்த்து, இவ்வளவு பெரியா ஆளாக்கினேன், என்னையே நீ….” என்று முழம் முழமாய் லெக்சர் அடிக்க ஆரம்பித்து விட, பொருத்து பொரு த்து பார்த்து விட்டு, “உங்களை யாரு பெக்க சொன்னா ?” என்று பொறித்து தள்ளி விடு கிறார்கள் பிள்ளைகள். உடனே தாய்மா ர்கள் எல்லாம் மனமுடந்துபோய், இந்த பிள்ளைக்காக நான் என்னவெல்லாம் செய்திருப்பேன், என் அரு மை புரியாமல் என்னையே இப்படியெல்லாம் …” என்று இன்னும் நொந்துப் போகி றார்கள்.
இந்த வயதில் இந்த இளைஞர்களின் ரத்தத்தில் எக்கசெக்க ஹார் மோன்கள் பிரவாகமாய் சுரக்கின்றன. அதனால், தொட்டதிற்கெ ல்லாம் டென்ஷன், எரிச்சல், மூட் அவுட் என்று இள ரத்தம் எப் போதுமே ஒரு சல சலப்பை ஏற்படு த்திக் கொண்டிருக்கும். எதை யும் சகித்துக் கொள்ளும் தன்மை, பொரு த்துபோகும் பக்குவம், அடங்கி போகு ம் லாவகம் எதுவுமே இந்த வயதில் ஏற்படுவதில்லை. இதை புரிந்துக் கொண்டு, பெரிசுகள் நாம் மிக பக்குவமாய், ஹாசியமாய், தோழ மையாய் முக்கியமாய், பொறுமையாய் இவர்களை கையாண்டா ல் தான் ஹார்மோன்களின் ஆக்ரோஷம் தணிந்து அமைதியாவார் கள். இதை விட்டு விட்டு, “முளைச்சி மூணு இலை விடலை, அதுக்குள்ள இவ்வளவு திமிரா, உனக்கே இவ்வளவு னா, எனக்கு எவ்வளவு இருக்கும்” என்று போட்டி போட்டுக் கொண்டு, அவர்களை விட அதிக முதிர்ச்சியின் மையை பெரிசுகள் வெளிபடுத்தினால் , பிரச்சனை பெரிதாகிவிடும். அதனால் சிறியவர்கள் சினம் கொள் ளும் போது இந்த மாதிரி கோபதாபங்களை எப்படி நேர்த்தியாய் சமாளிப்பது என்பதை கற்றுத்தர இதையே ஒரு சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டு, பெரியவர்கள் சாந் தமாய் விஷயத்தை கையா ண்டாலே போதும். மனிதர்கள் இயல்பிலேயே மற்றவர்களை பார்த்து காப்பியடித்து தான் பலதும் பற்றுக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள் என்ப தால், முன் மாதிரி சரியாக் இருந்தால், இளைஞர்களும் தங்களை திறித்திக்கொள்வார்கள்,
3. ஓவர் கூச்சம்:

”விருந்தினர் வந்தால் ஒரு வணக்கம் சொல்வதில்லை, கடைக்கு போனால், எல்லாரும் பார்க்கு றாங்க, நான் இந்த பையை தூக் கீட்டு வந்தா சிரிப்பாங்க னுறது, மத்தவங்க முன்னாடி என்னை பத்தி ஏன் சொன்னே னு எல்லாரும் போன பிறகு திட்டுறது…” இப்படியாக, பதின் பருவ சிறுசுகளின் வெட்க உணர்வை பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு. என்ன செய்வது, இந்த வயதில் நேரும் உடல் மாற்றங்கள் இவர்களை பிறர் எதிரில் கூசி போக செய் கிறது. போக போக இந்த கூச்சமெல்லாம் குறைந்து, முதிர்ச்சி வர வர தன்னம்பிக்கையும் தானே அதிகரி த்து, “ஆமா, நான் இப்படி தான், எனக்கு என்னை பிடிச்சிருக்கு, வேறு யாருடை ய அபிப்ராயமும் எனக்கு முக்கியமி ல்லை” என்று சுயமதிப்புக் கொள்ளவு ம் இவர்கள் முடிகிறது. என்ன இந்த அளவு சுவாபிமானம் வர குறைந்தது நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன- அதுவரை இந்த வெட் கத்தை பெரிது படுத்தாமல் விட்டாலே, தானாய் தெளிந்து விடுகி றார்கள் இளையவர்கள். 

4. பியர் பிரஷர்.
  
பதின் பருவத்தினருக்கு தங்கள் சம வயதுக்காரர்களின் அபிப்ராயம் மிக முக்கியம் என்று தோன் றுகிறது. இந்த சமவயதுக்காரர் கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படி விஷய ங்களை அனுகுகிறார்கள் என்ப தை எல்லாம் மிக மும்முரமாக நோட்டம் விட்டு, அதை போல வே தானும் இருந்தால் தான் தன் னை “செட்டில் சேர்த்துக் கொள் வார்கள்” என்று அரும்பாடுபட்டு, மந்தையோடு மந்தையாய் கலந்து விட முயல்கிறார்கள். “உன் ஃபிரெண்டு சொன்னா தான் கேட்பியா? நான் சொன்னா கேட்க மாட்டியா?” என்று பெரிசுகள் என்ன தான் தலை பாடாய் அடித்துக் கொண்டாலும் இளையவ ர்களின் இந்த பழக்கத்தை மாற்ற முடியாது. காரணம் பெற்றவர்க ளை விட இந்த மாதிரி சமவயதுக்கார peers சிடமிருந்து அதிக விஷயங்க ளை கற்றுக்கொள்ளூம் படியாகத் தான் மனித மூளை யின் டிசைனே அமைந்திருக்கிறது. இந்த இயற்கை ஏற்பாட்டை மீறி அவர்களால் செயல் படமுடியாது. “ அப்படினா, கண்டவங்களோட சேர்ந்து கெட்டு குட்டிசுவரா போயி ட்டா?” என்று பெற்றவ ர்கள் பதைபதைக்கத் தான் செய்வார்கள். இதற்கு ஒரே வழி, உங்கள் குழந்தையின் பியர்க ளை பரிச்சைய படுத்திக்கொள்ளுங் கள். எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் என்பதை நேரடியாக கண் காணித்தால் தானே, அவர்கள் போக் கு எப்படி என்பதை நீங்கள் சதா கண்காணிக்க முடியும். 

5. வயதிற்கு வருதல்: 
பெண்களூக்காவது பரவாயில்லை, புட்டு சுற்றுகிறேன் பேர்வழி என்று ஏரியா பெண்கள் எல்லாம் கூடி, தங்கள் வயதிற்கு வருதல் அனுபவத்தை பற்றி பேசி பகிர்ந்து க்கொள்கிறார்கள், அதனால் பெண்களுக்கு தங்கள் வயதிற்கு வரும் சமாசாரம் பற்றி தெளிவு ஏற்படிகிறது. பாவம், ஆண் குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை. இவன் வயதிற்கு வந்தால், அம்போ என்று அப்ப டியே விடபடுகிறான். என்ன ஏது என்று சொல்லித்தர நாதியே இரு ப்பதில்லை. விளைவு, விந்து வெளியேறும் வயதுக்கு வருதல் அறிகுறியை இவன் ஏதோ பெரிய விபரீதம் என்று எண்ணி கல வரம் கொள்கிறான். இருக்கவே இருக்கிறார்கள் போலி டாக்டர் கள், இந்த சாதரண உடலியக்கத்தை பெரிய வியாதி மாதிரி பில்ட் அப்கொடுத்து இவர்கள் அச்சுறுத்த, “அய் நான் வயது க்கு வந்துட்டேனே,” என்று எண்ணி பெருமை கொள்ளவேண்டிய வாலிவ ன், “அய்யோ, எனக்கு வியாதி வந்து விட்டது” என்று தவறாக எண்ணி கவலை கொள்கிறான்.
”விந்து வெளியேறி விட்டது, அதனால் சாகக்கிடக்கிறேன்” என்ற வகை புகாருடன் ஆலோசனை பெற வரும் இளைஞர்களின் எண் ணிக்கை நல்ல வேலையாக இப்போதெ ல்லாம் குறைந்துக் கொ ண்டு வருகிறது. தமிழ் நாட்டு ஆண் சிங்கங்கள் எல்லாம் அறிவி யலை புரிந்துக்கொண்ட அறிவாளி கள் ஆகிவிட்டார்கள் போல. அப்படியே, தப்பித்தவறி, ஒன்றிரண்டு ஆண்கள் இந்த பிரச்சனை யோடு வந்தாலும், அவர்களது பயத்தை கிளப்பும் மூட நம்பிக்கை களை தெளிவு படுத்தி, அநாவசிய பதட்டத்தை தணிக்கும் மருந்து களை கொடுதாலே போதும், ”இதெல்லாம் ஒரு மேட்டருனு யாரா வது கவலைபடுவாங்களா!” என்று மாறிவிடுகிறார்கள் ஆண்கள் எல்லாம்.
6. சுய இன்பம்: 
என்ன தான் வேற்று கிரகத்தில் கொண்டு போய் வைத்து எவர் சவகாசமும் இல்லாமல் குழந்தையை மஹா பவி த்திரமாக வளர்க்க வேண் டும் என்று பெற்றோர்கள் முயன்றாலும் பருவ வயது வந்ததுமே பாலுணர்வும் தலை தூக்கிவிடும். நூறு ஆண்டுக ளுக்கு முன் என்றால் இந்த பருவம் வந்த உடனே திரு மணம் என்று ஒன்றை நடத்தி, ஒரு கலவியல் துணையை பெற் றோரே ஏற்பாடு பண்ணித் தந்திரு ப்பார்கள், தாபம் தோன்றும் போதெல்லாம் தாம்பத்தியம் கொள்ள ஏதுவாக இருந்துருக்கும். ஆனால் இந்த நூற்றாண்டிலோ, வயதி ற்கு வந்து பல வருடங்கள் கழித்து தான் திரு மணம் என்று நிலை ப்பாடுகள் மாறிவிட்டன. இதை பற்றி எல்லாம் சட்டையே செய்யாமல் இயற்க்கை இன்ன மும் அதே பதிமூன்று – பதி னேழு வயதிற்குள் எல்லோரையும் வயதிற்கு வர வைக்க, கூடவே தலையெடுக்கும் உடல் ரீதியான தேவைகளை எப்படி சமாளிப்பது என்று யாருமே சொல்லி தருவ தில்லை. தாபம் ஏற்படும் போதெல்லாம் தன்னை தானே சாந்தப் படுத்திக் கொள்ளும் டெக்னிக்கை அநேகமாக எல்லா ஆண்களும் சுயமாகவே தெரிந்துக் கொள்கிறார்கள். ஆனா ல் இது ஒரு பெரிய குற்றம் என்று சிலருக்கு தோன்றுவ தால், கவலை பட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் இதில் பெரிய ஆட்சரியம் என்ன தெரியுமா? அமெரிக்கா, ஐரோபா, ஆஸ்தி ரேலியா, ஸ்காண்டினேவியா மாதிரியான பகுத்தறிவு அதிகம் உள்ள நாடுகளில் எந்த ஆணும் சுயஇன்பத்தை பெரிய தவராகவே நினைப்பதில்லை. பாலில்லாத குறையை போக்க, குழந்தை கையை சுவைப்பது போல, துணையில்லா சமயத்தில் தாபத் தை தணிக்க இதுஒரு சிம்பிள் டெக்னிக் , இதில் பெரிதாக ஃபீல் பண்ண என்ன இருக்கிறது என்பது இவர் களது மனப்பான்மை. ஆனால், இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் தான், அதுவும் படிக்காத ஆண்களிடம் தான் சுய இன்ப த்தை பற்றின அநாவசிய பயங்களும் குற்ற உணர்வும் இருக்கிற து. இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா? இதே இந்தியாவில் தான் அந்த காலத்தில் ’ஜீவ காருண்யம்’ என்ற பெயரில், பொது இடங்களில் நடு கல்லை நிறுத்திவைக்கும் வழக்கம் ஒரு தர்ம காரியமாய் கருதப்பட்டு, பலரால் பின்பற்ற பட்டது. நடு கல்லை நடுவதில் என்ன பெரிய ஜீவ காருண்யம் என்று யோசிக்க தோன் றூகிறதா? போகிற வருகிற மிருகங்களுக்கு மதம் பிடித்தால், இந்த கல்லில் உராய்து சாந்தபடுத்த உதவுவது, புண்ணியங்களில் சிறந்த புண்ணியமாய் கருதப்பட்ட்து. ஆக, மிருகங்கள் சுய இன்பம் புரியகூட சாதனங்களை ஏற்பாடு செய்து கொடுத்த கலாச் சாரத்தில், மனிதன் சுய இன்பம் கொள்வதை பற்றி இத்தனை மூட நம்பிக்கைகள் தோன்றியது வேடிக்கை தான்! ஆக, மனிதர்கள் உட்பட, எல்லா ஜீவராசிகளிலும் தகுந்த துணை இல்லாத போது சுய இன்பம் கொள்வது என்பது இயல்பான ஒரு நடவடிக்கையே. என்ன, நடுகல்லே கதி என்று இதே வேலையாய் இருக்காமல், விளை யாட்டு, படிப்பு, பாட்டு, கூத்து, கேளி, கும்மாளம் என்று வேறு பல வழிகளிலும் சுகம் காணும் தன்மையை வளர்த்துக் கொண்டால், இன்பம் கொள்ளை கொள்ளையாகுமே!

7. முதல் காதல்: 

மூளை சுரக்கும் ஹார்மோன்கள் ஏற்கனவே எதிர்பாலின கவர்ச்சி யை தூண்டிவிட, கூடவே உடகங் களும், அதன் ஊக்கத்தால் நண் பர்களும் ”சூப்பரா இருக்கும் செய்து பார்”, என்று காதலை பெரி தும் சிபாரிசு செய்ய, கேட்க வேண்டுமா! காதல் என்கிற போதை இளமனதுகளை ஈர்க்க ஆரம்பித்துவிடுகிறது. இதனால் “எட்டாவ து தான் படிக்கிறா, அதுக்குள்ள காதல் என்ன வேண்டி கிடக்குது. வயசுக்கு மீறுன வேலையெல்லாம் செய்யுறாளே” என்று பதறும் தாய்மார்கள் பலர்.
உண்மை என்ன தெரியுமா?
பதிமூன்று வயதில் ஒரு பெண் காதல் வயப்படுவதென்பது வயதி ற்கு மீறிய செயலே இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல் பெண்களுக்கு முதல் காதல் ஏற்படும் வயதே இது தான். முதல் காதல் என்றால், இன்னும் நிறைய முறை வேறு காதல் வருமோ என்கிறீர்களா? ஆமாம். உயிர் உள்ள வரை எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பும் அவ்வப்போது காதலும் ஏற்படும் படி யாக தான் இயற்கை மனிதர்களை வடிவமைத்துள்ளது. அதனால் மகள் காதல் கொண்டு விட்டாளே என்று ஓவராய் பதராதீர்கள். அந்த வயதில் முதல் காதல் கொள்வது அவள் உடம்பில் ஹார்மோன் கள் நார்மலாய் ஊருகின்றன, அவள் ஒரு நார்மல் பெண் என்பதற்கான அறிகுறி. 
ஆனால் இது அவளுக்கு முதல் அனுபவம் என்பதால் சினிமாவில் வருவது போல காதல் மஹா அழகான, புனிதமான உணர்வு என்றெ ல்லாம் அவள் தவறான கற்பனையில் மிதக்கக்கூடும். உடனே அத்தை, மாமி என்று யாராவது ஒரு பெண் உறவினரை பிடியுங்கள். அல்லது ஒரு கவின்சிலரை அனுகுங்கள். முதல் காதல் சொதப்பல்களை பற்றி விளையாட்டாக பேசி புரியவைத் தாலே, ’ஓகோ, இது இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படுகின்ற ஒரு மிக சாதாரண் உணர்ச்சி தான்’, என்பதை புது இளைஞி புரிந்துக்கொள்வாள். இந்த புரிதலே அவள் முதல் காதலின் புனித த்துவத்தை குறைத்து விடும் என்பதால், கொஞ்ச நாள் கழித்து இந்த உணர்வு அவளுக்கே போரடிக்க ஆரம்பித்துவிடும். சினிமா வில் சொல்வது போல காதல் அவ்வளவு ஒன்றும் ஸ்வாரசிய மான உணர்வு இல்லை என்று புரிந்த்துமே, அதன் போதையிலி ருந்து அவள் வெளி வந்துவிடுவாள்.
8. மூட் அவுட்

தின் பருவத்தினர் பலரும் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவ தால், திடீர் கோவம், திடீர் அழுகை, திடீர், “என்னை கண்டாலே யாருக்கு பிடிக்கல!” மாதிரியான உணர்ச்சி வெடிப்புக் கள் ஏற்படுகின்றன. மூளை யின் நரம்புகள் இந்த வயதில் அதிக மாக வளருவதால் அடிக்கடி சிக்காகி விடுவதாலும், புதிதாய் ரத்ததில் ஓடும் ஹார்மோன்கள் இன்னும் ஒருனிலைபடாத தாலும் இந்த வயதுக்காரர்களுக்கு அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆவது சகஜம். பெண் குழந்தைகள் “என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க!” என்று புலம்பி அழுவதும், ஆண்கள் “என்னை கவனிக்கிறதே இல்லை” என்றி எரிந்து விழுவதும் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, ரசாயண ஸ்ருதிபேதத்தினால். அத னால் சிறுசுகளோடு சரி சம்மாய் கத்தி சண்டையை பெரிதாக்கா மல், அந்த நேரத்திற்கு அமைதி காத்து, பிறகு விளக்கம் தந்து புரிய வைக்க முயன்றால் தான் குடும்ப நிம்மதியை காப்பாற்ற முடியும்.
9. ஆக்ரோஷம். 

குறிப்பாக நிறைய இளைய ஆண்களை அவர்களது பெற்றோர்கள் இந்த காரணத்திற்காக தான் சிகிச்சை க்கை அழைத்து வருகிறார்கள். “முன் னெல்லாம் அவன் உண்டு அவன் வேலை உண்டுனு குட் பாயா இருந்த பையன் தான். பெரியவங்கன்னா அவ்வ ளவு மரியாதையா இருந்த பிள்ளை, இப்ப எல்லாம், நீ சொன்னா, நான் கேட்கணூ மானு எதிர்த்து பேசுறான். அடிக்க கைய ஓங்குனா, பதிலுக்கு அடிக்க வர்றான். நேத்து ஏதோ திட்டினேனு ரிமோட்டை தூக்கிஎரிஞ்சதுல அது ஒடஞ்சே போச்சு. எங்கிருந்து தான் அவ னுக்கு இவ்வளவு ஆத்திரம் வருதோ?”
வேறெங்கும் இல்லை. அதே ஹார்மோ ன்கள் தான். ஆண் குழந் தை வயதிற்கு வருவதே டெஸ்டோஸ் டீரான் என்ற ஹார்மோனி ன் சுரத்தலால் தான். இந்த ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து விட்டால், ஆக்ரோஷம் ததும்ப அரம்பித்து விடும், உடல் பலம் அதிகரி த்து விடும், எதிலுமே வேகம், வீரம், அவசரம் என்கிற போக்கு ஏற்படும். பழக பழக டெஸ்டோஸ்டீ ரானின் இந்த தன்மையை எப் படி சாமார்தியமாய் கையாள்வது என்பதை இவர்கள் காலப்போக் கில் கற்றுக்கொள்வார்கள் தான் என்றாலும் வயதிற்கு வரும்போதே இந்த உணர்ச்சி மேலாண்மை எதுவும் சாதியமாவதில்லை தானே. அதனால் தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை ஓவராய் மிரட்டி அவன் “நானும் ஆம்பிளை தான்” என்கிற ஆக்கிரோஷத் தை கிளறாமல் முடிந்த மட்டும் அன்பாய்பேசி, தண்டத்தை எடுக் காமல் வெறும் சாம, தான, பேத முறைகளிலேயே இளம் ஆண்க ளை கையாள்வது தான் புத்திசாலி தனம்.

10. தீயவை தீய பயத்தலால்…..

குழந்தை பருவம் போய் வாலிய வயதை அடையபோகும் எக்களி ப்பில், எதை எதையோ பரிட்சை செய்து பார்க்க தோன்றும் இள மனம். புகை, மது, மாது, பிற போதை வஸ்துக்கள் என்று களவும் கற்றுமறக்க முயலும் வயது இது தான். இந்த போதை வஸ்துக் கள் கூட ஒரு வகையில் மனிதர்களை தரம் பிரித்து யார் பிழக்க தோதானவர்கள் என்று சோதித்து பார்க்கும் ஒரு test for survival தான். இத்தனை வகை போதை பொரு ட்கள் இருந்தும் யார் இதில் எது வும் மாட்டிக் கொள் ளாமல் தப்பித்து பதின் பருவத்தை தாண்டி வருகிறார்களோ, அவர்க ளே வாழ்வை ஜெயிக்க லாயக்கான புத்திசாலிகள் ஆகிறார்கள். ஏன் தெரியுமா? பெட்டிக் கடையில் சின்ன சின்ன பாக்கெட்டில் தொங்கும் வாசனைமிக்க பான் ரக பொருளானாலு ம், ஃபாரின் சரக்கு, ஒஸ்தி சரக்கு, லோக்கல் சர க்கு என இந்த வகை மது பானமானாலும், அவ்வளவு ஏன், சட்டம் போட்டு தடுக்கப்படும் மிக மோசமான போதை பொருட்களானா லும், அவை எல்லாமே அடிப்படையில் வேலை செய்கின்ற விதம் ஒன்றுதான். மூளை யின் இன்ப மையத்தை தூண்டி, மதி மயக்குகி ன்றன. அத்தோடு, ஆண்மை /பெண்மை திசுக்களை அழித்து விடுகி ன்றன. ஆக, போதை வயப்பட்ட மனிதர் கள் இன பெருக்க வாய்ப் பை இழப்பது தான் இயற்கையின் ஏற்பாடு. இந்த விவரங்கள் எல்லாம் சிறுசுகளுக்கு தெரியாதென்பதால் விளையாட்டு தனமா ய் போதை பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் ஒரு முறை மட்டுமே உபயோகித்தாலும், உடனே தொற் றிக்கொள்ளூம் தன்மை இருப்பதனால் தானே அதை போதை பொருள் என்றே சொல்கி றோம். ஆக சர்வைவலு க்கு ஃபிட் ஆன புத்திசாலிகள் அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என்று இந்த பழக்கதுக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டு ஜகா வாங்கி விடுவார் கள்.
எவ்வழி பெரிசுகள்…

என்ன இருந்தாலும் பதின் பருவம் என்பது காற்றாற்று வெள்ளம் மாதிரி ஹார்மோன்கள் எந்த பதப டுத்தலும் இன்றி பச்சையாய் ஓடும் வயது. இந்த வெள்ளத்தை எப்படி அனைகட்டி அமோக விளைச்சலு க்கு ஆட்படுத்துவது என்று சொல்லி த்தர யாரவது தேவை. அப்பா அம்மா, அண்ணன் அக்கா, ஆசிரியர், மதகுரு ஆகிய பெரிசுகள் எல்லாம் மொக்கை போடுங்கள், பெரிதாய் லெக்சர் அடிப்பார்கள். இப்படி இல் லாமல் தம்முள் ஒருவராய் இருந்து கேலிபேச்சு, சிரிப்பு, கலகலப்புடனே ”சரக்கு வேண்டாம் மச்சி, இனிக்கு கிரவுண்டு பக்கம் போய் கலாய்சிட்டு வரலாம்” என்று வாழ்வியல் வித்தைகளை சுலபமாக சொல்லித்தரும் ஒரு சீனிய ரின் ஜாலி டிப்ஸ் இருந்தால் இளைஞர்கள் எப்போதுமே சரியான தடத்தில் இருக்க உதவும். 
இளைஞர்களுக்கு விளையாட்டாய் விவரங் களை சொல்லித்தர எப்போதுமே ஒரு மூத்த ஸ்நேகிதர் தயாராக இருப்பது அவசியம். சும்மா இளைஞர்களை குறை சொல்லிக் கொ ண்டில்லாமல் நம்மை போன்ற பெரிசுகள் எல் லாம் இப்படிப்பட்ட ஜாலியான சீனியர்களாய் மாறினாலே போதும், பதின் பருவ பிரச்சனைக ளை தாண்டி பிரமாதமாய் வெளிவந்து விடுவா ர்கள் நம் இளைஞர்கள்.
- thanks to knowingyoutself  & விதை2விருட்சம்

பெண்களின் மிக முக்கிய பருவம் தாய்மைப் பருவம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:29 | Best Blogger Tips

 
தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும் பாலான பெண்கள் கர்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்ற னர். கர்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. பிரசவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் பெண்கள் தங்களைப் பற்றி யும், உடலமைப்பு பற்றியும் கவலைப் படுவதில்லை.
ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் பிரசவ கால தழும்புகளும், இதனால் பெண் களுக்கு அதீத கவலையும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. குழந் தையை 
பாதிக்காத வகையில் தாய்மார்கள் தங்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்கின்றனர் மகப் பேறு மருத்துவர்க ள்.

தழும்புகள் மறைய

கர்ப்பமாக இருக்கும் போது விரிவடை யும் தசைகள் பிரசவத்திற்குப் பின்னர் சுருங்குகின்றன. ஒரு பெண்ணின் தாய்மையை உணர்த்துவதே இந்த தழும்புகள்தான். பெண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், தோல், தொடை பகுதிக ளிலும் தழும்புகள் ஏற்படுகின்றன. கர்பமாக இருக்கும் போதே அரிக்கத் தொடங்கு ம். அந்த இடத்தில் உடனே கைகளால் அரிப்ப தைவிட மென்மையான துணிகளை க் கொண்டு அந்த இடத்தை ஒத்தடம் தரலாம். மேலும் பாதாம் எண் ணெய், கிரீம் போன்ற வைகளை அரிக்கும் இடத்தில் தடவினால் தழும்புகள் ஏற்படாது.

கருவளையக் கண்கள்


 
ச்சிளம் குழந்தையை பாதுகாக்க வேண்டும் என்ற கவனத்தில் தாயின் தூக்கம் பறிபோகிறது. இதனால் கண்களைச் சுற்றி கரு வளையம் போன்றவை ஏற்படுகின்றன. இது அதிக சோர்வை ஏற் படுத்துகின்றன. எனவே வைட்டமின் கே பற்றாக் குறையினால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. எனவே சத்தான உணவுகளையும், சீரான உறக்கத்தையும் மேற்கொள்ளவேண்டும் .

கூந்தல் உதிர்வு


கர்பகாலத்தில் சத்தான உணவுகளை உண்ணும் பெண்கள் குழந் தை பிறந்த பின்னர் உணவுகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. பெரும் பாலான சத்துக்கள் பிரசவத்தின் போதி லேயே இழந் து விடுவதால் சரியான போஷாக்கு கிடைப்பதில்லை. இதனால் பிரசவித்த பெண்களுக்கு கூந்தல் உதிர் கிறது. எனவே இரும்புச் சத்துள்ள காய் கறிகள், கீரைகள் போன்ற உணவுகளை உண்பதன் இழந்த சத்துக்களை பெறமுடியும். கூந்தலுக்கு வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் கூந்தல் உதிர்வது தடுக்கப்படும். உதிர்ந்த கூந்தல் வளர்ச்சியடையும்.  கர்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப்பெண்களுக்கு பிரச்சினை. இக்காலத்தில் எனனதான் போஷக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சரியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெ டுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உண வை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.

வறண்ட சருமம்


கர்பகாலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் உடல் வறட்சித் தன்மையடைகிறது. இதனால் சருமம், செதில்செதி லாக மாறும். மென்மையான மாய்ஸரைசர் பூசிவர சருமம் மென்மைய டையும். பிரசவித்த பெண்களுக்கு கரும்புள்ளிகள் ஏற்படுவது இயற்கை. வெளியி ல் கிளம்பும்போதே வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கான கிரீம் உபயோகிக்கலாம். போலி க் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பச்சைக் காய்கறிகள், முட் டை போன்ற வைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முகத்தில் கருவளையம் உள்ள இடங்களில் ஸ்க்ரப் வைத்து தேய்த்தால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.

பித்த வெடிப்பு


நீர்ச்சத்து குறைவினால் பெண்க ளுக்கு கால்களில் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. தினசரி காலை, மாலை நேரங்களில் பித்தவெடிப் பை போக்கும் கற்களைக் கொண் டு தேய்க்க இறந்த செல்கள் உதிர்ந்து விடும். வாஸலின் பூசி வர பித்தவெடிப்பு குணமடையும்.

 
நன்றி விதை2விருட்சம் இணையம்

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது, கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:02 | Best Blogger Tips

                          
  
ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுக வேண்டும்? இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன?
.
ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!
.
 
ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த்தாள்க ளை லோடுசெய்வதற்கு முன் அவை ஏ.டி.எம். ஃபிட் கரன்சிகளா க (ATM fit currency) மாற்றப் படுகின்றன. இந்தசெயல்பாட்டின் போதே கள்ளநோட்டுகள் பெரும் பாலும் தவிர்க்கப் பட்டுவிடும். ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதி முறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறை யைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும்.  
 .
 
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து வைத் திருப்பது அவசியம் . ஏனெனில், எந்த ரூபாயாக இருந்தாலும் அது ஒரு முறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது. கள்ள நோட்டு கள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத் திருந்தால் முதல் முறையிலேயே அதைத் தடுத்துவிடலாம்.
.
எப்படி வருகிறது?
.
  
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும் பாலான ஏஜென்சிகள் இந்தச் சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின் றன. இவர்களின் பணி வங்கியி லிருந்து மொத்த மாகப் பணத்தை ப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும், தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன வங்கிகள்.
 .
யாரை அணுகுவது?
 .
 
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப் படுத்துவதற்கு முன் னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி. வி. கேமரா வில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களை க் காட்டுவது அவசியம். ஏனெ னில், ஏ.டி.எம். மெஷினுக்கு ள் போடப்படும் ரூபாய் தாள்களில் இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற் குரிய தாள்களை கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியா னது உங்களைப் பற்றி விசாரி க்கும்போது உங்களின் மீதான நம்ப கத்தன்மையை அதிகரிக்கும்.
 .
  
பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank) அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென் டருக்கு உள்ளேயே ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி. எம். தொடர்பான பிரச்னைகளை இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படு த்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு எண்களைத் தந்திருப் பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம் தெரியப்படு த்திவிட்டு, நேரில் சென்று உறுதி ப்படுத்திக் கொள்ள லாம்.
 

வங்கி நடைமுறைகள்!
 .
  
ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித் தருவதில் வங்கியில் இருக்கும் நடை முறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல் இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்) சந்தேகத்திற்குரிய ரூபாய்த் தாளுட ன் வங்கியை அணுகியதும், அவர் கள் அந்த ரூபாய் கள்ள நோட்டு தானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு,
 
 
அந்த ரூபாய் தாளில் இருந்த எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன் றை தருவார்கள். உங்களிடம் பெறப் பட்ட ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள் பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி. எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில் பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப் பதன் மூலமும், உங்களின் பின்புலன்க ளை விசா ரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு) அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம் வந்தால் அவர் மீது வங்கி யானது சட்ட ரீதியான நடவடிக் கை எடுக்கத் தயங்காது. 
.
எஃப்.ஐ.ஆர். ஃபைல்!
.
  
பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக் கணக் கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பண த்தை எடுத்து அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் போதோ, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ரூபாய்த் தாள்கள்கள்ள நோட்டுகளாக இருக்கும் பட்ச த்தில் மட்டுமே அவர்களின்மீது வங்கி உடனடியாக காவல் நிலையத் தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல் செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள நோட்டு களாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக் கொண்டு விசாரிக்கும். தனது ஏ.டி.எம் -ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி இருக் கிறது என்று நிரூப ணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர் களி டம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத இறுதி யில் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.
.
ஆர்.பி.ஐ.-ன் உதவி!
 .
வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த் தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து வங்கியை அணுகும் போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்க ளுக்கு சந்தேகம் நீடித்தால் 
 
 
 
  
அந்த வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு(Currency chest branches) சென்று உங்களின் சந்தேகத் தை நிவர்த்தி செய்து கொள்ள லாம். அதற்கு அடுத்தும் உங்க ளின் சந் தேகம் நீடித்தால் ஆர். பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண் மையானது தானா என்பதை பரிசோதித்து தெரி ந்து கொள்ளலாம். இதுதொடர் பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www. paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்க ளை நாட லாம்.”
 
நன்றி விகடன் & vidhai2virutcham