அர்த்தமுள்ள இந்து தர்மம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:19 | Best Blogger Tips
அர்த்தமுள்ள இந்து தர்மம்:

இந்து தர்மம் இதுநாள் வரை எதிர்கொள்ளாப் பல்வேறு கேள்விகளையும், சவால்களையும் எதிர் நோக்கியுள்ளது . மக்களுக்கு இந்து தர்மம் கொடுத்த அளவற்ற சுதந்திரத்தின் பயனாக எழுந்துள்ள இக்கெள்விகளால், பெரும் நன்மை ஒன்று ஏற்படப் போகிறது. மக்களுக்கு இதுநாள் வரையில் இருந்த அறியாமை இருளை விளக்கும் ஒரு வாய்ப்புததான் அது. தர்மத்தின் வேறினை சாதியின் பெயரால் அறிய முடியாமல் போனவாரும் அறிந்திடும் ஓர் அறிய வாய்ப்பு.

ஒரு இழையில் கோர்க்கப்படாத முத்துக்கள் எப்படி மாலையாய் அழகு பெறாதோ, அதுபோல் சாதீயச் சிதறலாய் பெருமை மறந்து (இழந்தல்ல) கிடக்கிறது இந்து தர்மம்,.

இந்த பேதத்தை யார் தோற்றுவிததது, யார் வளர்த்தது என்று ஆராய்ந்து நேரம் வீன்ாக்குவதை விட இனி எவ்வாறு இந்தப் பேதங்களைக் களைந்து மேலேறலாம் எனச் சிந்திப்பதே தேசீய உணர்வும், ஆறாவது அறிவும் உடைய பாரதப் பெருமக்கள் செய்ய வேண்டியது.

மதத்தைக் காக்க மட்டுமல்ல,உலகளவில் பாரதம் இதுநாள் கொண்டிருக்கும் கலாசாரப் பெருமையின் சீர் காக்கவும் இது அவசியமாகிறது. எவ்வாறு?????

பன்னெடுங்காலமாக தன்னிககரில்லாப் பண்பாடு, ஆன்மீக ஒருமைப்பாடு, போரில் கூட மதிக்கப்படும் தர்மம் என்று உலகையே வியக்க வைத்த பாரதக் கலாசாரமும், இன்று அனைவரும் தூஷித்து அரசியல் செய்யும் இந்துதுவமும் வேறு வேறல்ல.

இந்து தர்மத்தைக் கைவிட்டு பாரதக் கலாசாரத்தைக் காத்து விட முடியும் என்று நம்பினால் மூடத்தனமாகும். மழையை வேண்டாமென்றும், ஆனால் குடிக்க நீர் மட்டும் வேண்டும் என்றும் கூறும் மூடாத்திற்கு ஒப்பாகும்,

இந்து மதம் தன் மக்களுக்களித்த சுதந்திரத்தின் வெளிப்பாடுதான் பாரதம் பல்வேறு பழைமைவாத்ங்களையும், தீவிரவாதத்தையும் கடந்து ஒரு வெற்றிகரமான சுதந்திர நாடாக நிற்பது. சதி, கைம்மை போன்ற பழைமைவாத்த்தில் ஒன்றான சாதீயமும் காலப்போக்கில் ஒழியும். இது சத்தியம். ஆனால், இதைக் காட்டி நம்மைப் பிரிக்க முற்படுபபவர் சதியில் வீழ்ந்தால் விளைவு, நாம் அழகிய பட்டுச் சேலையில் இருந்து பிரிதத்ெடுக்கப்படும் ஒற்றைப் பத்து நூலாய்ப் பாழ்பட்டுப் போவோம்.

உணர்வால், தர்மதால் பல்லாயிரம் காலம்மாகா ஒன்றுபட்ட பாரதம் மாற்றுக் கொள்கையுடையோரின் வரவால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எனத் தூண்டாதப்பட்ததே அதற்குச் சான்று.

இன்னும் நாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று அடித்துக் கொண்டு பிரிந்து கிடப்பதைபோல் பாரத அன்னைக்குச் செய்யும் துரோகம் வேறில்லை. தங்களுக்குத் தேவையானதை மட்டும் ஊதிப் பெரிதாக்கும் அரசியலே திருக்குறளையும், ஆத்திசூடியையும் விட்டு வரூநாசிரமத்தையும், மநுவையும் மக்களின் மனத்தில் திணிப்பதாகும்.

பிறப்பால் அமையாது, ஒருவர்தம் குணமே ஒருவன் சாதியைத் தீர்மானிக்கும் என்பதே ஆன்றோர் கூற்று. ஆனால், சாதிக்குச் சான்றிதழ் கொடுத்து அதைத் தலைமுறை தாண்டிக் கடத்திச் செல்வது அரசியல்.

இதை நிறுத்த வேண்டும்.

பிராமிநர்கள், மற்ற மேல்ஜாதியினர் தாங்கள் கற்ற தர்மத்தின் சாரத்தை கடைநிலையில் இருப்போருக்கும் பகிர முன் வர வேண்டும்.
இதுநாள் வரை கீழ்ஜாதி எனத் தவறாக முத்திரை குத்தப் பட்டவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மை விடுத்து தர்மத்தை அறிய ஆர்வம் கொள்ள வேண்டும்.

என்ன பெயர் சொல்லி இறைவனை அழைத்தாலும், எந்தச் சாதியின் சான்றிதழை அரசு அளித்தாலும் தர்மம் என்னும் கடலில் பேதம் கடந்து சங்கமித்தால் நலமே.

''ஏனென்றால் தர்மத்தின் வாழ்வே, தேசத்தின் வாழ்வு''

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்து தர்மம் இதுநாள் வரை எதிர்கொள்ளாப் பல்வேறு கேள்விகளையும், சவால்களையும் எதிர் நோக்கியுள்ளது . மக்களுக்கு இந்து தர்மம் கொடுத்த அளவற்ற சுதந்திரத்தின் பயனாக எழுந்துள்ள இக்கெள்விகளால், பெரும் நன்மை ஒன்று ஏற்படப் போகிறது. மக்களுக்கு இதுநாள் வரையில் இருந்த அறியாமை இருளை விளக்கும் ஒரு வாய்ப்புததான் அது. தர்மத்தின் வேறினை சாதியின் பெயரால் அறிய முடியாமல் போனவாரும் அறிந்திடும் ஓர் அறிய வாய்ப்பு.

ஒரு இழையில் கோர்க்கப்படாத முத்துக்கள் எப்படி மாலையாய் அழகு பெறாதோ, அதுபோல் சாதீயச் சிதறலாய் பெருமை மறந்து (இழந்தல்ல) கிடக்கிறது இந்து தர்மம்,.

இந்த பேதத்தை யார் தோற்றுவிததது, யார் வளர்த்தது என்று ஆராய்ந்து நேரம் வீன்ாக்குவதை விட இனி எவ்வாறு இந்தப் பேதங்களைக் களைந்து மேலேறலாம் எனச் சிந்திப்பதே தேசீய உணர்வும், ஆறாவது அறிவும் உடைய பாரதப் பெருமக்கள் செய்ய வேண்டியது.

மதத்தைக் காக்க மட்டுமல்ல,உலகளவில் பாரதம் இதுநாள் கொண்டிருக்கும் கலாசாரப் பெருமையின் சீர் காக்கவும் இது அவசியமாகிறது. எவ்வாறு?????

பன்னெடுங்காலமாக தன்னிககரில்லாப் பண்பாடு, ஆன்மீக ஒருமைப்பாடு, போரில் கூட மதிக்கப்படும் தர்மம் என்று உலகையே வியக்க வைத்த பாரதக் கலாசாரமும், இன்று அனைவரும் தூஷித்து அரசியல் செய்யும் இந்துதுவமும் வேறு வேறல்ல.

இந்து தர்மத்தைக் கைவிட்டு பாரதக் கலாசாரத்தைக் காத்து விட முடியும் என்று நம்பினால் மூடத்தனமாகும். மழையை வேண்டாமென்றும், ஆனால் குடிக்க நீர் மட்டும் வேண்டும் என்றும் கூறும் மூடாத்திற்கு ஒப்பாகும்,

இந்து மதம் தன் மக்களுக்களித்த சுதந்திரத்தின் வெளிப்பாடுதான் பாரதம் பல்வேறு பழைமைவாத்ங்களையும், தீவிரவாதத்தையும் கடந்து ஒரு வெற்றிகரமான சுதந்திர நாடாக நிற்பது. சதி, கைம்மை போன்ற பழைமைவாத்த்தில் ஒன்றான சாதீயமும் காலப்போக்கில் ஒழியும். இது சத்தியம். ஆனால், இதைக் காட்டி நம்மைப் பிரிக்க முற்படுபபவர் சதியில் வீழ்ந்தால் விளைவு, நாம் அழகிய பட்டுச் சேலையில் இருந்து பிரிதத்ெடுக்கப்படும் ஒற்றைப் பத்து நூலாய்ப் பாழ்பட்டுப் போவோம்.

உணர்வால், தர்மதால் பல்லாயிரம் காலம்மாகா ஒன்றுபட்ட பாரதம் மாற்றுக் கொள்கையுடையோரின் வரவால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எனத் தூண்டாதப்பட்ததே அதற்குச் சான்று.

இன்னும் நாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று அடித்துக் கொண்டு பிரிந்து கிடப்பதைபோல் பாரத அன்னைக்குச் செய்யும் துரோகம் வேறில்லை. தங்களுக்குத் தேவையானதை மட்டும் ஊதிப் பெரிதாக்கும் அரசியலே திருக்குறளையும், ஆத்திசூடியையும் விட்டு வரூநாசிரமத்தையும், மநுவையும் மக்களின் மனத்தில் திணிப்பதாகும்.

பிறப்பால் அமையாது, ஒருவர்தம் குணமே ஒருவன் சாதியைத் தீர்மானிக்கும் என்பதே ஆன்றோர் கூற்று. ஆனால், சாதிக்குச் சான்றிதழ் கொடுத்து அதைத் தலைமுறை தாண்டிக் கடத்திச் செல்வது அரசியல்.

இதை நிறுத்த வேண்டும்.

பிராமிநர்கள், மற்ற மேல்ஜாதியினர் தாங்கள் கற்ற தர்மத்தின் சாரத்தை கடைநிலையில் இருப்போருக்கும் பகிர முன் வர வேண்டும்.
இதுநாள் வரை கீழ்ஜாதி எனத் தவறாக முத்திரை குத்தப் பட்டவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மை விடுத்து தர்மத்தை அறிய ஆர்வம் கொள்ள வேண்டும்.

என்ன பெயர் சொல்லி இறைவனை அழைத்தாலும், எந்தச் சாதியின் சான்றிதழை அரசு அளித்தாலும் தர்மம் என்னும் கடலில் பேதம் கடந்து சங்கமித்தால் நலமே.

''ஏனென்றால் தர்மத்தின் வாழ்வே, தேசத்தின் வாழ்வு''

குழந்தை கீழே விழுந்து அடியா? அவசர குறிப்பு இதோ.. First Aid

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:11 | Best Blogger Tips
குழந்தை கீழே விழுந்து அடியா? அவசர குறிப்பு இதோ.. First Aid 

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, நமக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் கீழே விழுந்தாலோ அல்லது நோய்களில் பாதிக்கப்பட்டாலோ, என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்போம்.. மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாம். அவசர காலத்தில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே முதலுதவி அளிக்கலாம். அப்படிப்பட்ட சில குறிப்புகள் இதோ,

குழந்தை விளையாடும் போது கீழே விழுந்து அடி

பஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால்போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. வீட்டு வைத்தியம் என்ற பெயரில் மஞ்சள் பொடி, சர்க்கரை, காபி பொடி என்று எடுத்து பூச வேண்டாம். 

தலைக்குள் நீர் கோர்த்துக் கொள்ளுதல்

நீலகிரி தைலம் எனப்படும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைக்கு மேல் குழந்தையின் தலையை சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி ஒன்றை வைக்கலாம்.

திடீர் காய்ச்சல்

க்ரோசின் என்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம். சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். உடனடி நிவாரணம் தரும்.

தசைப்பிடிப்பு மற்றும் சுளுக்கு

விரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெய்யைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).

விஷப்பூச்சிக்கடி

டாக்டரிடம் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். ஆனால் அதற்குமுன் பாதிக்கப்பட்ட பகுதியை பலமுறை சோப்புத் தண்ணீரால் நன்கு கழுவிவிடுங்கள். இது அவசியம்.

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, நமக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் கீழே விழுந்தாலோ அல்லது நோய்களில் பாதிக்கப்பட்டாலோ, என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்போம்.. மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாம். அவசர காலத்தில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே முதலுதவி அளிக்கலாம். அப்படிப்பட்ட சில குறிப்புகள் இதோ,

குழந்தை விளையாடும் போது கீழே விழுந்து அடி

பஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால்போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. வீட்டு வைத்தியம் என்ற பெயரில் மஞ்சள் பொடி, சர்க்கரை, காபி பொடி என்று எடுத்து பூச வேண்டாம்.

தலைக்குள் நீர் கோர்த்துக் கொள்ளுதல்

நீலகிரி தைலம் எனப்படும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைக்கு மேல் குழந்தையின் தலையை சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி ஒன்றை வைக்கலாம்.

திடீர் காய்ச்சல்

க்ரோசின் என்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம். சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். உடனடி நிவாரணம் தரும்.

தசைப்பிடிப்பு மற்றும் சுளுக்கு

விரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெய்யைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).

விஷப்பூச்சிக்கடி

டாக்டரிடம் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். ஆனால் அதற்குமுன் பாதிக்கப்பட்ட பகுதியை பலமுறை சோப்புத் தண்ணீரால் நன்கு கழுவிவிடுங்கள். இது அவசியம்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு
 

மன அழுத்தத்திற்கு என்ன மருந்து

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:06 | Best Blogger Tips



மன அழுத்தம் அனைவருக்கும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் வெற்றி வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. இதற்கான காரணங்கள் பல. அதைக் கண்டறிந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் செயல்படுவதே சிறந்தது. சில டிப்ஸ்களை தொடர்ந்து கடைபிடித்தால் மன அழுத்தத்தை குறைக்கலாம்

1.பலம் மற்றும் பலவீனத்தைஅறிதல்:

உங்களிடம் உள்ள பலம் என்ன என்பதை அறிந்து அதை வெற்றிக்கான படிக்கல்லாக கொள்ள வேண்டும்.மேலும் உன்னுடைய பலவீனத்தை அறிந்து, அதனையும் உங்களுடைய பலமாக மாற்ற முயல வேண்டும்.

2.மாற்றத்திற்கு தயாராக இருத்தல்:

நமது வாழ்வின் ஒரு பகுதி மாற்றம். வாழ்க்கை மாற்றத்தை ஏற்று அதன் நிறை குறைகளை அறிந்து செயல்படும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம்.

3.முன்னெச்சரிக்கையோடு இருத்தல்:

எந்த செயலையும் செய்யும் போது பல முறை யோசித்து செய்தல் நலம் பயக்கும். தனக்கென கட்டுப்பாடுகளை வகுத்து, அதை
செயல்படுத்தும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையை சிறப்பாக செய்ய முயற்சி செய்தல் வேண்டும்.

4.சிறந்த சமுக உறவு:

நல்ல சமுக உறவுகள் கொண்டிருப்பதே, மன அழுத்தத்தை குறைக்க வழி. உங்கள் நண்பர்களில், சரியான வழிகாட்டுதல் செய்கிறவர் யார், என கண்டறிந்து அவரோடு நட்பை தொடருங்கள். அதே நேரத்தில் தீமை செய்யும் நண்பர்களின் நட்பை துண்டித்து விடுங்கள்.

5.உறுதியாக இருத்தல்:

உங்கள் பாதை மற்றும் கட்டுப்பாடுகளில் உறுதியாக இருங்கள்.

6.நல்ல பழக்க வழக்கம்:

பிறரது மனம் நோகாமல், அன்போடு செயல்படுங்கள். சிறந்த பழக்கம் மற்றும் பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

7.தேவைப்படும் பொழுது உதவி:

நமது கை தான் நமக்கு பலம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களிடம் தேவைப்படும் பொழுது உதவியை நாடுங்கள்.

8.பிரச்னையை தீர்க்க கற்றுக் கொள்ளல்:

பிரச்னையை நேர்வழியில் எதிர் கொள்ளுதல். சிறந்த மனப்பாங்குகளை வளர்த்துக் கொள்ளுதல். வயது முதிர்ந்தவர்களிடம் பிரச்னைக்கான காரணங்களை கூறி ஆலோசனை பெறுதல் சிறந்தது.

9.ஓய்வு எடுத்தல்:

மனிதனுக்கு ஓய்வு அவசியம். ஓய்வு எடுப்பதால் மூளை மற்றும் உடம்பு புத்துணர்ச்சி பெறுகிறது. தகுந்த ஓய்வு எடுக்கும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம்.

10.சிறந்த வாழ்க்கை முறை:

உணவு, தூக்கம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சிறந்த வாழ்க்கை முறைக்கு அவசியம். இதனை சரியாக மேற்கொண்டு மன அழுத்தத்தை குறைக்கலாம். இந்த டிப்ஸ்களையும் தொடர்ந்து கடைபிடிக்கும் போது மன அழுத்தத்தை குறைத்து, வெற்றிப் பாதையில் செல்லலாம்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:01 | Best Blogger Tips

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு

ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்
Via FB தமிழ்
 

காய்... கறி... கனி... மருத்துவ குணங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:56 | Best Blogger Tips


காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.

பீட்ரூட்: ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.

வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.

மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்: இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.

முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.


Via FB Karthikeyan Mathan