வெந்தயத்தின் மருத்துவக்குணம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:43 | Best Blogger Tips
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.


வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.


கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.


வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.


வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.


வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.



வெந்தய லேகியம்:

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.


நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.


வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.


மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.


இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.


வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.


வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.


மா.பிரபாவதி
நன்றி -kumutham healt
வெந்தயத்தின் மருத்துவக்குணம்

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.


வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும். 


கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.


வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.


வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.


வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.



வெந்தய லேகியம்: 

வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.


நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.


வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.


மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.


இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.


வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.


வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.


மா.பிரபாவதி
நன்றி -kumutham health


உங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உணவின் மூலம் உடல் எடையைக் குறைக்க சில டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:34 | Best Blogger Tips
சில உணவு வகைகளை சாப்பிடுவது கரையாத கொழுப்பையும் கரைய வைக்கலாம் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள்.

புரதச்சத்து அதிகம் உள்ள முட்டைகள் கொழுப்பை வேகமாக எரிக்கின்றன. இதில் உள்ள வைட்டமின் பி12, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, எட்டுவித தாது உப்புகள் இந்த பணியை செய்கின்றன.

புரதச்சத்து நிறைந்த மீன் அதிக கொழுப்பை எரிக்கின்றது. மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை உருவாக்க பயன்படும் ரசாயனப் பொருட்களை தடுக்கின்றன.

காலை, மாலை இரண்டு வேளை கிரீன் டீ பருகினால் கொழுப்பு உட்கிரகிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் நீண்ட நேரம் இரைப்பையில் தங்கி இருப்பதால், அதிக பசியை குறைப்பதுடன் கொலஸ்ட்ராலை தடுக்கிறது.

ஓட்ஸ் கஞ்சியில் தேன் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது.

காலை,இரவு இரண்டு வேளையும் வெந்நீரில் எலுமிச்சை சாறு, தேனைக் கலந்து குடிப்பது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும்.

பாலில் நிறைய சுண்ணாம்பு சத்து உள்ளது. இது கொழுப்பை எரிப்பதற்கும், கொழுப்பு உருவாகாமல் தடுப்பதற்கும் மிகவும் தேவை.

முட்டைக்கோஸ், அவரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வெள்ளரிக்காய், வெங்காயம், பூண்டு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

திராட்சைப்பழம், அன்னாசிப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, சப்போட்டோ, மாதுளை போன்ற பழங்களில் ஒன்றோ இரண்டோ தினமும் சாப்பிட வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்தால் கொழுப்பை எளிதாக கரைக்கலாம். இவற்றோடு போதிய உடற்பயிற்சியும் சேரும் போது கொழுப்பு காணாமலே போய் விடும்
 
உணவின் மூலம் உடல் எடையைக் குறைக்க சில டிப்ஸ்

சில உணவு வகைகளை சாப்பிடுவது கரையாத கொழுப்பையும் கரைய வைக்கலாம் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள்.

புரதச்சத்து அதிகம் உள்ள முட்டைகள் கொழுப்பை வேகமாக எரிக்கின்றன. இதில் உள்ள வைட்டமின் பி12, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, எட்டுவித தாது உப்புகள் இந்த பணியை செய்கின்றன. 

புரதச்சத்து நிறைந்த மீன் அதிக கொழுப்பை எரிக்கின்றது. மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், கொழுப்பை உருவாக்க பயன்படும் ரசாயனப் பொருட்களை தடுக்கின்றன. 

காலை, மாலை இரண்டு வேளை கிரீன் டீ பருகினால் கொழுப்பு உட்கிரகிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. 

காலையில் ஓட்ஸ் கஞ்சி குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ் நீண்ட நேரம் இரைப்பையில் தங்கி இருப்பதால், அதிக பசியை குறைப்பதுடன் கொலஸ்ட்ராலை தடுக்கிறது. 

ஓட்ஸ் கஞ்சியில் தேன் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது.  

காலை,இரவு இரண்டு வேளையும் வெந்நீரில் எலுமிச்சை சாறு, தேனைக் கலந்து குடிப்பது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். 

பாலில் நிறைய சுண்ணாம்பு சத்து உள்ளது. இது கொழுப்பை எரிப்பதற்கும், கொழுப்பு உருவாகாமல் தடுப்பதற்கும் மிகவும் தேவை. 

முட்டைக்கோஸ், அவரைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வெள்ளரிக்காய், வெங்காயம், பூண்டு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். 

திராட்சைப்பழம், அன்னாசிப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, சப்போட்டோ, மாதுளை போன்ற பழங்களில் ஒன்றோ இரண்டோ தினமும் சாப்பிட வேண்டும். 

இவற்றையெல்லாம் செய்தால் கொழுப்பை எளிதாக கரைக்கலாம். இவற்றோடு போதிய உடற்பயிற்சியும் சேரும் போது கொழுப்பு காணாமலே போய் விடும் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Thanks to Doctor Vikatan.

ரோஜா.!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:25 | Best Blogger Tips
ரோஜா.!

 அனைவரும் விரும்பும் ஒரு மலர் ரோஜா. ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் பிரச்சனைகளை நிறுத்தும். மலமிளக்கியாக செயல்படும்.

ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.

ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடியளவு ஆய்ந்து வந்து , அம்மியில் வைத்தோ அல்லது மிக்ஸியில் போட்டோ மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பூரணமாகக் குணமாகும்.

பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீலை வடிகட்டி, காலையில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும், குடிக்கவேண்டும் ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.

அனைவரும் விரும்பும் ஒரு மலர் ரோஜா. ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் பிரச்சனைகளை நிறுத்தும். மலமிளக்கியாக செயல்படும்.

ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும். நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்.

ரோஜா மொக்குகளில் ஒரு கைப்பிடியளவு ஆய்ந்து வந்து , அம்மியில் வைத்தோ அல்லது மிக்ஸியில் போட்டோ மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பூரணமாகக் குணமாகும்.

பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து தண்ணீலை வடிகட்டி, காலையில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும், குடிக்கவேண்டும் ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.
Thanks to ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

கருமை மறையா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:16 | Best Blogger Tips
சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்;

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
Photo: சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்;

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:40 | Best Blogger Tips

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

மூலிகைகளும், தீரும் நோய்களும்...!
-மன்னை வை.ரகுநாதன் -

நமது முன்னோர்களெல்லாம் மூலிகைகளை கொண்டுதான் எல்லா வியாதிகளுக்கும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். இன்றைய ஆங்கில மருந்துகளில் பக்க விளைவுகளும், வீரியமும் அதிகம் இருப்பதால் எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்லாமல் நமக்குத் தெரிந்த மூலிகைகளை வைத்து வீட்டிலேயே குணப்படுத்தி விடலாம். தீராத வியாதிகளையும் குணப்படுத்தும் சக்தி மூலிகைக்கு இருக்கிறது. ஆகையால் மூலிகைகளை பயன்படுத்தி அதன் பலன்களை அடையலாமே!

...அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள் ...அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை : இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

Thanks to -மன்னை வை.ரகுநாதன் -

பகவான் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:20 | Best Blogger Tips
பக என்றால் நிகரற்றவன் என்று பெருளாகும். எனவேதான் இறைவனை பகவான் என்று கூறுவார்கள். பிரம்மங்கள் எத்தனை என்று எண்ணிக்கையில் கூற முடியாது என்பார்கள். எனினும் சிவனுக்கு பஞ்சபிரம்மன் என்ற சதாசிவ நாமம் உண்டு. அந்த சதாசிவத்திலும் 25 முகங்கள் கொண்ட மஹாசதாசிவரூபம் உண்டு. சிவம் என்றால் பலரும் பலவிதமான பொருள் கூறுவார்கள். ஆனால் உண்மையான பொருள் நல்லோர்களின் உறைவிடமானவர் என்பதே. சங்கரன் என்றால் மங்களம் தருபவர் என்று பொருளாகும். மூன்று கண்களில் மற்ற இரு கண்களுக்கும் பொருந்தாமல் மேல் நோக்கிய மூன்றாவது கண்ணை உடையவராதலால் விரூபாக்ஷர் என்றும் அழைக்கப்படுவார். சிவ மூர்த்தங்கள் 64 யும் தாண்டி அனேக மூர்த்தங்கள் உள்ளன. அவற்றை அதோமுக மூர்த்தங்கள் என்று குறிப்பிடுவார்கள். பெரும்பாலான மூர்த்தங்கள் ஆலயங்களில் சிற்பங்களாய் வடிக்கப்படாமலும், மக்களால் அறியப்படாமலும் உள்ளன.

சிவபெருமான் அல்லது சிவனடியார்கள் என்றால் நம் நினைவில் தோன்றும் பொருட்கள் என்ன ? என்று பார்த்தோமானால், உருத்திராட்ஷம்,கமண்டலம், காசாயம், சடைமுடி, வாசிக் கோல் எனப்படும் தண்டம், வில்வம், விபூதி போன்றவைகளாகும். தெய்வங்களால் வழங்கப்படும் வல்லமைகளுக்கு அருள் என்று பெயர். இந்த அருள் விபூதி, பூதி, ஐஸ்வரியம் என்ற மூன்றாகக் குறிப்பிடப் படுகின்றது. இந்த மூன்று வல்லமைகளும் எட்டு வகை சித்திகளில் அடக்கப்படுகின்றன. இச்சித்திகளே இறையருளாக வெளிப்படுகின்றன. விபூதி என்பது ஆனவம், கன்மம், மாயை என்கிற மும்மலங்களை எரித்து பஸ்பமாக்கி, உடலில் குறிப்பிட்ட இடங்களில் இருக்கின்ற இறைத் தத்துவங்களுக்கு அறிவிக்க வேண்டி தரிப்பதாகும். விபூதி என்றால் உணர்த்துதல் என்று பொருள்படும். சிரசில் சிவமும், நெற்றியில் மகேஸ்வரனும், மார்பில் ருத்ரனும், நாபியில் விஷ்ணுவும், முழந்தாள்களில் பிரம்மாவும், புஜங்களில் விநாயகரும், கந்தரும், முழங்கைகளில் தேவேந்திரனும், ஆதிசேஷனும், மணிக்கட்டுகளில் சரஸ்வதியும், மகாலட்சுமியும், விலா இரண்டிலும் வாமாதி சக்திகளும், முதுகில் பிரஜாபதிகளும், கண்டத்தில் ஏகதசருத்ரர்களும் வீற்றிருந்து விபூதி பூசுவதால் மனம் மகிழ்ந்து அருள்கின்றார்கள். எனவே விபூதி தரிக்கும் போது மும்மலங்களையும் எரித்து சாம்பலாக்கி பூசுகிறேன் என்கிற எண்ணமும், பாவமும் அவசியம்.

விபூதியானது, 11 வகையான ருத்ர மூலிகைகளை காராம்பசு என்கிற அக்னிஹோத்ரிக்கு உண்ணக் கொடுத்து, அதன் சாணம் தரையில் விழாமல் வஸ்த்திரத்தில் பிடித்தெடுத்து, அதை பஞ்சாட்சரம் சொல்லி கையளவு உருண்டைகளாகப் பிடித்து காயவைத்து, 1008 உருண்டைகள் சேர்ந்த பின்பு சிவ சகஸ்ர நாமமும் , திருநூற்றுப் பதிகமும் சொல்லி மண்பூசி, புடம் வைத்து, பின்பு ரம் என்கிற அக்னி மந்திரம் சொல்லி, நெருப்பை மூட்டி, அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது ருத்ர மந்திரங்களைக் கூறி, நெருப்பு அனைந்த பின்பு சாந்தி மந்திரங்களைச் சொல்லி வில்வக் குடுவை அல்லது மண்சட்டியில் சேகரித்து வைப்பதாகும். இதுவே விபூதியாகும். மேலே குறிப்பிட்டுள்ள சாஸ்த்திர முறைப்படி தயாரிக்கப்பட்ட விபூதியே காப்பு என்றும், ரட்ஷை என்றும், திருநீறு என்றும் சித்தர் பெருமக்களால் கூறப்பட்டுள்ளது. இதுவே மந்திரத் திருநீறு. இப்போது நாம் பூசிக் கொள்வது கடல் சிப்பிகளின் பவுடராகும். இது விபூதி அல்ல வெள்ளை அவ்வளவுதான். பழனி போனீர்களானால் அபிஷேகஜாமான், அபிஷேகஜாமான் வாங்குங்கள் என்று கடைக்காரர்கள் உங்கள் கையைப் பிடித்து இழுப்பார்கள். சரி வாங்கிக் கொள்வோம் என்றால், பெரிய லிஸ்ட் போட்டு காசைப் பிடுங்கி விடுவார்கள். அதில் பார்த்தீர்கள் என்றால் ஒரு பொருளை இரண்டு முறை எழுதுவார்கள். குங்குமம் என்று போட்டிருக்கும் வேறொரு இடத்தில் சிகப்பு என்று போடுவார்கள் விபூதி என்று போட்டிருக்கும் வேறொரு இடத்தில் வெள்ளை என்று போட்டிருக்கும். அவர்கள்தான் விபூதியை வெள்ளை என்று ஒப்புக் கொள்கிறார்கள். உண்மையில் அது விபூதி அல்ல. இரசாயனப் பொருள் கலந்த சிப்பிப் பவுடர். லிஸ்ட் கடைசிவரை உங்கள் கைக்கே வராது. மொட்டை அடிப்பது அர்ச்சனை செய்வது என்று எல்லாவற்றையும் அவர்களே முடித்து மொட்டை மண்டையில் இரண்டாவது மொட்டையும் போட்டு பட்டையை சாற்றி, சந்தனத்தை தடவி வழியனுப்பி வைப்பார்கள்.

அதைப்போல வில்வபத்ரத்தை மாதப் பிறப்பு, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி போன்ற நாட்களில் மரத்தில் இருந்து பறிக்கக் கூடாது. மற்ற தினங்களில் சூரிய உதய வேளையில் சிவ அனுஷ்டானத்துடன் பறித்து, ஆறு மாத காலம் வரை பத்திரப்படுத்தி உபயோகிக்கலாம்.
ஒரு நாளில் எல்லா நேரமும் இறைவனுக்குறியதே என்றாலும், அந்த பரம்பொருளின் அனுக்கிரகம் பெற்ற தேவர்கள், ரிஷிகள், பூத, பைசாசங்களுக்கென்று சில குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பிரம்ம முகூர்த்தத்திலிருந்து அதிகாலை வேளை வரை தேவர்களுக்கு உரியது.முன் பகல் வேளை ரிஷிகளுக்கு உரியது. நடுப்பகல் பிதுர்களுக்கு உரியது. எனவே இவ்வேளைகளில் தர்ப்பணம் செய்யலாம். பிரதோஷகாலம் பூத, பிரேத,பைசாசங்களுக்கு உரியது. எனவே தான் அவ்வேளைகளில் இறை நாட்டம் கொள்ளச் சொல்லி அறிவுரை சொல்லப்பட்டுள்ளது. இவ்வேளையில் மக்களைக் காத்தருளவே இறைவன் ஆனந்த தாண்டவம் ஆடுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. நடுநிசி ராட்க்ஷஸர்களுக்கு உரியது. இப்படி ஒரு நாளின் காலங்கள் பலவாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

அடுத்தபடியாக ஒவ்வொரு திதியிலும் நம் உடலின் உணர்வு என்கிற அமுத நிலை ஒவ்வொரு இடத்தில் மாறிமாறி தங்கும் என்று சொல்கிறார்கள். அந்த நாட்களில் அறுவை சிகிச்சை அந்த குறிப்பிட்ட பகுதியில் செய்தால் உடலுக்கும், உயிருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று வைத்திய நூல்கள் சொல்கின்றன. பெரும்பாலும் அமாவாசையை அடுத்த வளர்பிறை 15 நாட்கள்அமுத நிலைக் காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பிரதமை - பெருவிரல், துவிதியை - உள்ளங்கால், திரிதியை - முழங்கால், சதுர்த்தி - தொடை, பஞ்சமி - குதம், சஷ்டி - நாபி, சப்தமி - மார்பு, அஷ்டமி - கைகள், நவமி - கழுத்து, தசமி - உதடு, ஏகாதசி - நாக்கு, துவாதசி - நெற்றி, திரியோதசி - புருவம், சதுர்த்தசி - பிடரி, பௌர்ணமி - உச்சந்தலை.

இந்த குறிப்பிட்ட திதிகளில் இந்த உறுப்புகளுக்கு வைத்தியமோ, கடுமையான வேலையோ செய்வதை தவிர்க்க வேண்டும்

 
Thanks to FB Hindu Madurai

நீர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:16 | Best Blogger Tips
பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர் நமது உணவின் மிக முக்கியமான அம்சம். இத்தகைய தண்ணீரின் பங்களிப்பு நமது முன்னோர்களின் வாழ்வில் எத்தகைய இடத்தினை கொண்டிருந்தது என்பதை இன்று பார்ப்போம். நமது உடலின் 65 விழுக்காடு நீர் மற்றும் நீர்மங்களினால் ஆனது என்கிறது நவீன அறிவியல். நாம் சாதாரணமாய் நினைக்கும் தண்ணீர் இல்லாத வாழ்க்கையை ஒரு நொடிகூட கற்பனை கூட செய்யமுடியாது. அந்த அளவிற்கு நீர் நமது வாழ்வின் இன்றியமையாத பொருள்.

நம் உடலில் பித்த நீர், கணைய நீர், இரைப்பை நீர், உமிழ் நீர், வியர்வை நீர், இரத்தத்தின் ஊடகமான நீர், சிறு நீர், கண்ணீர், காதுத் திரவம் எனப் பலவகையான நீர்மங்கள் உள்ளன. நாம் அருந்தும் குடிநீர்தான் இத்தகைய நீர்மங்களாய் மாறி உடலை இயக்குகிறது. தண்ணீர் இல்லாமல் சமைக்கப்படும் உணவினை குடல் ஏற்பதில்லை.

தண்ணீரானது எதனுடனும் சேர்ந்து வினையாற்றும் தன்மையுடையது. பஞ்ச பூதஙக்ளின் மற்ற நான்கு கூறுகளுடன் தண்ணீர் சேரும்போது தன் ஆற்றலை வெளியிடுகிறது. ஒரு உதாரணம் சொல்வதானால், கறையானின் உமிழ்நீர் மண்கலவையோடு சேர்ந்த நிலையில் அசைக்கவும் இலகுவில் கரைக்கவும் முடியாத பெரிய புற்றுகளாக உருவெடுக்கின்றது.

இந்தப் புற்று மண், நீரும் நிலமும் ஆகிய இரண்டு பூதங்களின் சக்தி வாய்ந்த கலவை. இந்தப் புற்று மண்ணைக் கொண்டு வந்து நீரில் கரைத்து உடம்பில் வீக்கமுள்ள இடங்களில் பூச வீக்கம் நீங்கும், இரத்தக் கட்டு விலகும். உடம்பில், முகத்தில் தடவிக் குளிக்க உடம்பில் உள்ள தேமல், படை நீங்கும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

நம் உணவிலேயே சத்து மிகுந்தது நீராகாரம். நாம் கடைகளில் வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களை விடப் பல மடங்கு சத்துடையது இந்தப் பழஞ்சோற்றுநீர். அதனோடு நாம் துணையாகக் கொள்ளும் வெங்காயமும் ஒரு நீர் செறிந்த பொருளே. வயது ஏற ஏறத் திடப்பொருளைக் குறைத்துத் திரவப் பொருளை அருந்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள் சித்தர்கள்.

தண்ணீரின் மருந்துப் பயனைக் கூட்ட வேண்டுமானால் அதனைத் தாமிரப் பாத்திரத்தில் சேகரித்து வைத்திருந்து அருந்த வேண்டும். இப்படி தண்ணீரின் மகத்துவத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.

நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும் தண்ணீர், நிலத்தின் கீழே கிடைக்கும் தண்ணீர் என இரண்டு வகையாகவே நாம் நீரின் வகையைஅறிந்திருக்கிறோம். ஆனால் நமது முன்னோர்கள் தண்ணீரை அதன் குண இயல்புகளின் அடிப்படையில் பதினெட்டு வகையாக பிரித்துக் கூறியிருக்கின்றனர்.

அவை முறையே....

1 - மழைநீர்
2 - ஆலங்கட்டி நீர்
3 - பனிநீர்
4 - ஆற்றுநீர்
5 - குளத்துநீர்
6 - ஏரிநீர்
7 - சுனைநீர்
8 - ஓடைநீர்
9 - கிணற்று நீர்
10 - ஊற்றுநீர்
11 - பாறைநீர்
12 - அருவிநீர்
13 - அடவிநீர்
14 - வயல்நீர்
15 - நண்டுக்குழி நீர்
16 - உப்புநீர்
17 - சமுத்திரநீர்
18 - இளநீர்

என்பனவாகும். இவற்றின் குண இயல்புகள், பலன்கள் பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே விளக்கியிருக்கின்றனர்.
பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர் நமது உணவின் மிக முக்கியமான அம்சம். இத்தகைய தண்ணீரின் பங்களிப்பு நமது முன்னோர்களின் வாழ்வில் எத்தகைய இடத்தினை கொண்டிருந்தது என்பதை இன்று பார்ப்போம். நமது உடலின் 65 விழுக்காடு நீர் மற்றும் நீர்மங்களினால் ஆனது என்கிறது நவீன அறிவியல். நாம் சாதாரணமாய் நினைக்கும் தண்ணீர் இல்லாத வாழ்க்கையை ஒரு நொடிகூட கற்பனை கூட செய்யமுடியாது. அந்த அளவிற்கு நீர் நமது வாழ்வின் இன்றியமையாத பொருள்.

நம் உடலில் பித்த நீர், கணைய நீர், இரைப்பை நீர், உமிழ் நீர், வியர்வை நீர், இரத்தத்தின் ஊடகமான நீர், சிறு நீர், கண்ணீர், காதுத் திரவம் எனப் பலவகையான நீர்மங்கள் உள்ளன. நாம் அருந்தும் குடிநீர்தான் இத்தகைய நீர்மங்களாய் மாறி உடலை இயக்குகிறது. தண்ணீர் இல்லாமல் சமைக்கப்படும் உணவினை குடல் ஏற்பதில்லை. 

தண்ணீரானது எதனுடனும் சேர்ந்து வினையாற்றும் தன்மையுடையது. பஞ்ச பூதஙக்ளின் மற்ற நான்கு கூறுகளுடன் தண்ணீர் சேரும்போது தன் ஆற்றலை வெளியிடுகிறது. ஒரு உதாரணம் சொல்வதானால், கறையானின் உமிழ்நீர் மண்கலவையோடு சேர்ந்த நிலையில் அசைக்கவும் இலகுவில் கரைக்கவும் முடியாத பெரிய புற்றுகளாக உருவெடுக்கின்றது. 

இந்தப் புற்று மண், நீரும் நிலமும் ஆகிய இரண்டு பூதங்களின் சக்தி வாய்ந்த கலவை. இந்தப் புற்று மண்ணைக் கொண்டு வந்து நீரில் கரைத்து உடம்பில் வீக்கமுள்ள இடங்களில் பூச வீக்கம் நீங்கும், இரத்தக் கட்டு விலகும். உடம்பில், முகத்தில் தடவிக் குளிக்க உடம்பில் உள்ள தேமல், படை நீங்கும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். 

நம் உணவிலேயே சத்து மிகுந்தது நீராகாரம். நாம் கடைகளில் வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களை விடப் பல மடங்கு சத்துடையது இந்தப் பழஞ்சோற்றுநீர். அதனோடு நாம் துணையாகக் கொள்ளும் வெங்காயமும் ஒரு நீர் செறிந்த பொருளே. வயது ஏற ஏறத் திடப்பொருளைக் குறைத்துத் திரவப் பொருளை அருந்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள் சித்தர்கள்.

தண்ணீரின் மருந்துப் பயனைக் கூட்ட வேண்டுமானால் அதனைத் தாமிரப் பாத்திரத்தில் சேகரித்து வைத்திருந்து அருந்த வேண்டும். இப்படி தண்ணீரின் மகத்துவத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.

நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும் தண்ணீர், நிலத்தின் கீழே கிடைக்கும் தண்ணீர் என இரண்டு வகையாகவே நாம் நீரின் வகையைஅறிந்திருக்கிறோம். ஆனால் நமது முன்னோர்கள் தண்ணீரை அதன் குண இயல்புகளின் அடிப்படையில் பதினெட்டு வகையாக பிரித்துக் கூறியிருக்கின்றனர்.

அவை முறையே....

1 - மழைநீர்
2 - ஆலங்கட்டி நீர்
3 - பனிநீர்
4 - ஆற்றுநீர்
5 - குளத்துநீர்
6 - ஏரிநீர்
7 - சுனைநீர்
8 - ஓடைநீர்
9 - கிணற்று நீர்
10 - ஊற்றுநீர்
11 - பாறைநீர்
12 - அருவிநீர்
13 - அடவிநீர்
14 - வயல்நீர்
15 - நண்டுக்குழி நீர்
16 - உப்புநீர்
17 - சமுத்திரநீர்
18 - இளநீர்

என்பனவாகும். இவற்றின் குண இயல்புகள், பலன்கள் பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே விளக்கியிருக்கின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Thanks to FB பசுமைப் புரட்சி Green Revolution

துயர வரலாறு - வெண்மணி கிராமம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:36 | Best Blogger Tips
அன்று,
இந்த தமிழ்நாட்டில்,
தஞ்சை மாவட்ட, கீழ்வெண்மணி கிராமத்தில்,
கூலியை உயர்த்தி கேட்டதற்காக,
பெரும் மிராசுதார் கோபால கிருஷ்ண நாயுடு,தலைமையில் அடியாட்கள் புகுந்து,
கூலி உயர்த்தி கேட்ட தொழிலார்களை உயிரோடு எரித்து கொன்றனர்..

அதை விட,
அந்த கொடும் செயலை,
செய்தவர்களுக்கு,
விடுதலை தீர்ப்பு வழங்கி,
நேர்மையான மக்களுக்கு,
அதிர்ச்சி கொடுத்தது நீதி மன்றம்..

1968, டிசம்பர் 25 ஆம் தேதியை யாரும் எளிதில் மறந்துவிடமுடியாது. கீழ்வெண்மணியில் கூடுதலாக கூலி கேட்ட குற்றத்திற்காக தலித் மக்களுக்குக் கிடைத்த தண்டனை மிகக் கொடுமையானது..

திருவாரூரிலிருந்து அரை மணி நேரப் பயணத்தில் வந்துவிடுகிறது கீழ் வெண்மணி கிராமம். சம்பா அறுவடை முடிந்த வயல்களில் பசுமையான பயறுச் செடிகள் காலை வெயிலில் மின்னுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெருந்துயரின் சாட்சியாக அக்கிராமத்தின் நடுவில் நினைவு ஸ்தூபி உள்ளது. கூலி உயர்வுக்காகப் போராடிய தலித் விவசாயத் தொழி லாளர்களை அடக்கி ஒடுக்குவதற்காக தஞ்சாவூர் மிராசுதார்கள் கையாண்ட கொடுமைகளின் உச்சமாக கீழ்வெண்மணி சம்பவம் இருக்கிறது. இது அம்மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ந்த காலகட்டத்தின் பதிவாகவும் இருக்கிறது.

இங்குள்ள நினைவு ஸ்தூபியில் இறந்த 44 பேரின் பெயர்கள் வயதுடன் பொறிக்கப்பட்டுள்ளன. 5,3 வயதுகளையுடைய குழந்தைகளின் பெயர்களும் அப்பட்டியலில் இருக்கின்றன. அவர்கள் எரித்துக் கொல்லப்பட்ட இடத்திலிருந்து அஸ்தியை சேகரித்து வைத்திருந்து கொடுத்திருக்கிறார் விடுதலை வீரர் ஐ.மாயாண்டி பாரதி. அந்த அஸ்தியும் அங்கே வைக்கப்பட்டுள்ளது. நினைவகத்தின் உள்ளே வாழைப்பூவின் வடிவத்தில் ஒரு சிற்பம் இருக்கிறது. அங்கு தானமாக கொண்டுவந்து மக்கள் கொட்டிய நெல்மணிகள் குவிந்துகிடக்கின்றன. இந்த நெல்மணிகளுக்காகத்தானே போராடினார்கள்?

இச்சம்பவத்தை நேரில் பார்த்தபோது பெரியவர் ராமலிங்கத்துக்கு வயது 22. இப்போது 62 வயதாகும் அவர்: “நாங்கள் ஒரு மூட்டை நெல் அறுப்பதற்கு கூடுதலாக அரைப்படி நெல் கூலி கேட்டுக்கொண்டிருந்தோம். கொடுக்கமுடியாது என்று சொல்லி விட்டார்கள். இந்தப் பின்னணியில் தான் டிசம்பர் 25 ஆம் தேதியன்று ஊரில் குடிசைகளுக்கு வரிசையாக தீவைத்தார்கள். எங்கே போவது என்று தெரியாத நிலையில் பயந்து கொண்டுபோய் எல்லோரும் ராமய்யாவின் குடிசைக்குள் புகுந்துகொண்டார்கள். நாயுடு ஆட்கள் அந்தக் குடிசைக்குத் தீவைத்து விட்டார்கள்” என்கிறார்.
 

Thanks to FB Aravind Ramaswamy

இயற்கையின் அழகு சாதனப்பொருட்கள்--மருத்துவ டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:27 | Best Blogger Tips


தினசரி புதுப்புது அழகு சாதனங்களின் விளம்பரத்தை நாம் பார்க்கிறோம். எது உங்கள் சருமத்துக்கு தீங்கு விளைவிக்காதது, எதை வாங்கினால் நீங்கள் விரும்பும் பயன் கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு பதில், நீங்கள் அந்தப் பொருட்களை வாங்கி பயன் படுத்திய பிறகுதான் கிடைக்கும்!. ஆனால் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் நம் அழகுக்கு அழகு சேர்க்க, இயற்கை பல அழகு சாதனங்களை நமக்கு வழங்கியுள்ளது. இவற்றை தேடி நாம் வெகு தூரம் செல்ல வேண்டாம். உங்கள் சமையல் அறையிலேயே கிடைக்கும் பொருட்கள்தான் இவை.

1. வெள்ளரிப் பிஞ்சு:

இதன் சாற்றை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சற்று சூடான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும்.

2. எலுமிச்சம் பழம் :

எலுமிச்சம் பழச் சாற்றை தேனுடன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தை வெண்மையாக்கும். ப்ளீச் செய்து கொள்வதற்கு பதிலாக இதை உபயோகித்துப் பாருங்கள்.

எலுமிச்சம் பழச் சாற்றுடன் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தடவினால், முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து உபயோகிக்கவும்.

3. மோர் :

இது குடிப்பதற்கு மட்டுமல்ல, குளிப்பதற்கு முன்பு முகத்திலும் உடம்பிலும் தடவி பிறகு குளித்தால், உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

4.வெந்தயம் :

சீயக்காய் அரைக்கும்போது வெந்தயம் போட்டு அரைப்பது வழக்கம். ஷாம்பு உபயோகிக்கும் இந்த காலத்தில், இதைத் தண்ணீரில் ஊர வைத்து குளிப்பதற்கு முன் முடியில் தடவினால் முடி பளபளப்பாக இருக்கும்.

5.விளக்கெண்ணெய் :

கை, கால்களில் விளக்கெண்ணெய் தடவினால் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

இதை புருவத்திலும், கண் இமையில் உள்ள முடியிலும் தினமும் படுப்பதற்கு முன் தடவி வந்தால் அது அடர்த்தியாகும்.

6. பருப்பு :

கடலை மாவையும் பயத்தம் பருப்பு மாவையும் கலந்து சோப்புக்கு பதிலாக உபயோகித்து வந்தால், உங்கள் சருமம் உலர்வதை தவிர்க்கலாம்.

7. தேங்காய் எண்ணெய் :

இதை முடியில் தடவுவது பல்லாண்டு காலமாக தொடர்ந்து வரும் பழக்கம். இதை வாரம் ஒருமுறை உடலில் நன்றாகத் தேய்த்து, அதன் பின் குளித்தால் பட்டுப் போன்ற மென்மை தரும்.

8. பூசு மஞ்சள் தூள் :

இதை, தொடர்ந்து முகத்தில் பூசி குளித்தால் முகத்தில் முடி வளர்வதை தடுக்கலாம். ஆனால் மஞ்சள் தேய்த்து குளித்தவுடன் வெய்யிலில் செல்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் இதனால் சருமம் கருமை அடையும்.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Thanks to FB இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்