சிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான "டிப்ஸ்"

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:12 | Best Blogger Tips

சிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான "டிப்ஸ்"

மாற்றம் செய்த நேரம்:9/27/2011 3:06:10 PM
Tri color eye makeup
MORE VIDEOS
திருமணம் என்பதை "ஆயிரம் காலத்து பயிர்" என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள்  சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற  பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.
ஆனால் சில திருமணங்கள், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய  திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால்  நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.
பிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றன. (ஆண்களை மட்டும் குறை சொல்லவில்லை). கணவனது  குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் பாலியல் பிரச்சனைகள் போன்றவை  அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது. மேலும் திருமணத்திற்கு முன்பு கணவர்வீட்டார் கூறும் பொய்கள்தான் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கின்றன.
இதே‌போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண்,  ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம்  ‌முக்கிய காரணியாக இருக்கின்றன.
பிரச்சினைகளை சாவல்களாக்குங்கள்
பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டபடாமலும் இருந்து இருவரும் ஒன்றே நின்று சமாளிக்க  வேண்டும். இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக உங்களுக்குள்ளே (கணவன்-மனைவி) மோதிகொண்டால் பிரச்சினை  இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி  தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.
விட்டு கொடுங்கள்
இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல ஜோடிகள் விவாகரத்து  கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம்  வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது  வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும். நிதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை,  நிதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. ஆனால் சிலர்  விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது.
ஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதையும் தெரிவித்து  கொள்கிறேன்.
அன்பு / அரவணைப்பு
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது "I LOVE YOU" சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள்,  அதற்க்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில  ரொமான்ஸ்களை செய்யுங்கள்.
இல்லற சந்தோஷம் பொங்க
அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.

பொங்கல் வைப்பது எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:22 | Best Blogger Tips
பொங்கல் வைப்பது எப்படி?

பொங்கல் அன்று கிழக்காக கதிரவனை பார்த்தவாறு வாசலில் பொங்கலிடுவதே சிறந்தது. இதற்காக, செங்கல்களில் மண் அடுப்பு அல்லது இரும்பு அடுப்பு வைத்து, அதன் மீது மண்பானை அல்லது புதிய வெண்கல பாத்திரம் வைத்து பொங்கலிட வேண்டும்.

மங்கலம் தரும் மஞ்சள் : பொங்கலிடும் இடத்தில் தரையில் கோலம் இட்டிருக்க வேண்டும். கோலத்திற்கு வடக்கு பக்கம் சூரியனையும், தெற்கு பக்கம் சந்திரனையும் வரைந்திருக்க வேண்டும். அதற்கு மேல், பூசணிப்பூவை பசுஞ்சாணத்தில் அருகம்புல்லுடன் வைத்து பூஜை செய்வார்கள். சூரியனுக்கு பூசணி, அருகம்புல் உகந்தவை என்பதால் அப்படிச் செய்கிறார்கள்.

பொங்கல் பானையின் விளிம்பில் மங்கலம் பொங்குவதற்காக இலையுடன் கூடிய மஞ்சள் கொத்தினை கட்டி வைக்க வேண்டும். மஞ்சளின் திருமகளான மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

மேலும், தோகையுடன் கூடிய கரும்பு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றையும் அங்கே ஓரிடத்தில் வைக்க வேண்டும்.

நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களில் ஆதவனுக்கும், அக்னிக்கும் முக்கியத்தவம் கொடுக்கும் விதத்தில் வீட்டு வாசலில் பொங்கலிடுவது தான் சிறப்பானது. நகர்புறங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களால், அவர்களது

வீட்டு அறைக்குள் பொங்கலிட்டாலும், கிழக்கு நோக்கி வைத்து, ஜன்னல் வழியாக கதிரவனைப் பார்த்து வணங்குவதன் மூலம் கனிவான வாழ்க்கையை பெறலாம்.

பொங்கல் பொங்கி வரும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்க வேண்டும். பெண்கள் குலவை இடுவதும் சிறப்பானதுதான். பானையில் இருந்து பொங்கல் பொங்கி முதலில் வடியும் திசை கிழக்காக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் எல்லாம் நல்லதாகவே நடக்கும். வாழ்க்கை வசந்தமாகும் என்பது நம்பிக்கை.

ஆங்கில புத்தாண்டின் கதை!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:51 | Best Blogger Tips
புத்தாண்டின் கதை!
===============

வெவ்வேறு நாடுகள், மதம், இனம், மொழியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென்று தனித்தனியாக புத்தாண்டை வைத்துக் கொண்டுள்ள போதிலும், ஜனவரி 1-ம் தேதி பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் புத்தாண்டு மிக நீண்ட நெடிய வரலாறைக் கொண்டது. கி.மு. 46-ல் ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசர் ஜனவரி 1-ம் தேதியை முதன்முறையாக புத்தாண்டாக அறிவித்தார். ஜனுஸ் என்ற ரோமானியர்களின் நுழைவு வாயில் கடவுள் (கேட் ஆஃப் காட்) பெயரை அடிப்படையாகக் கொண்டே ஜனவரி என்று முதல் மாதத்துக்கு பெயர் சூட்டினார் சீசர். புதுயுகத்துக்குள் பிரவேசிக்க உதவுபவராக அக்கடவுளை ரோமானியர்கள் வழிபட்டு வந்தனர்.

எனினும் கிறிஸ்தவ மதம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியபோது, அந்நாடுகளில் அறிவிப்பு நாள் (அனவுன்ஷியேசன் டே) என்று கூறப்படும் மார்ச் 25-ம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க பாரம்பரியத்தின்படி "கடவுளின் அருளால் ஏசு கிறிஸ்து உனது கருவில் உருவாவார்' என்று மேரி மாதாவுக்கு தேவதூதர் கேபிரியல் மார்ச் 25-ல் அறிவித்தார் என்று நம்பப்படுகிறது.


எனினும் 1066-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக இருந்த வில்லியம், சீசரைப் பின்பற்றி ஜனவரி 1-ல் புத்தாண்டைக் கொண்டாட உத்தரவிட்டார். எனினும் அவரது மறைவுக்குப் பின் புத்தாண்டு மீண்டும் மார்ச் 25-க்குத் திரும்பியது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் 1582-ல் போப் பதிமூன்றாம் கிரிகோரி, ஜனவரி ஒன்றை புத்தாண்டாக பிரகடனப்படுத்தினார். இது படிப்படியாக உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அன்று முதல் இன்று வரை ஜனவரி 1-ல் புத்தாண்டுக் கொண்டாடங்கள் தொடர்கின்றன.

பண்டைய ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. கிரிகோரி அறிமுகம் செய்த காலண்டரில் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. இத்தாலிய டாக்டர் அலோயிசியஸ் லிலியஸ் என்பவர் இந்தக் காலண்டரை வடிமைத்தார். எனினும் போப் கிரிகோரியால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதால் அவரது பெயரிலேயே "கிரிகோரியன் காலண்டர்' என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. படிப்படியாக ஒவ்வொரு நாடாக இந்தப் புதிய காலண்டரை ஏற்றுக் கொண்டன. இன்று நாம் வீடுகளில் அலங்கரிப்பது கிரிகோரியன் காலண்டர்தான்.

புத்தாண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் யூதர்களுக்கு மட்டும் அது சோகமான நாளாகவே கருதப்படுகிறது. ஏனெனில் ஜூலியஸ் சீசர் அறிவித்த முதல் புத்தாண்டு அன்றே புரட்சியில் ஈடுபட்ட யூதர்களைக் கொன்று குவித்தார்.

போப்பாண்டவர் காலத்திலும் புத்தாண்டு தினத்தன்று ரோமில் உள்ள யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவ மத வழிபாட்டில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். அதனை எதிர்த்தவர்களோ கொல்லப்பட்டனர். யூதர்களின் புனித நூலை அழிப்பது, யூதர்கள் மீது சிறப்பு வரி விதிப்பது என அனைத்தையுமே ஜனவரி 1-ல்தான் போப் கிரிகோரி அரங்கேற்றினார். அதனால்தான் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றினாலும் இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ புத்தாண்டுக் கொண்டாட்டம் ஏதும் கிடையாது.

- சு.வெங்கடேஸ்வரன்
புத்தாண்டின் கதை!
===============

வெவ்வேறு நாடுகள், மதம், இனம், மொழியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென்று தனித்தனியாக புத்தாண்டை வைத்துக் கொண்டுள்ள போதிலும், ஜனவரி 1-ம் தேதி பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் புத்தாண்டு மிக நீண்ட நெடிய வரலாறைக் கொண்டது. கி.மு. 46-ல் ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசர் ஜனவரி 1-ம் தேதியை முதன்முறையாக புத்தாண்டாக அறிவித்தார்.  ஜனுஸ் என்ற ரோமானியர்களின் நுழைவு வாயில் கடவுள் (கேட் ஆஃப் காட்) பெயரை அடிப்படையாகக் கொண்டே ஜனவரி என்று முதல் மாதத்துக்கு பெயர் சூட்டினார் சீசர். புதுயுகத்துக்குள் பிரவேசிக்க உதவுபவராக அக்கடவுளை ரோமானியர்கள் வழிபட்டு வந்தனர்.

எனினும் கிறிஸ்தவ மதம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியபோது, அந்நாடுகளில் அறிவிப்பு நாள் (அனவுன்ஷியேசன் டே) என்று கூறப்படும் மார்ச் 25-ம் தேதி புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது. கத்தோலிக்க பாரம்பரியத்தின்படி "கடவுளின் அருளால் ஏசு கிறிஸ்து உனது கருவில் உருவாவார்' என்று மேரி மாதாவுக்கு தேவதூதர் கேபிரியல் மார்ச் 25-ல் அறிவித்தார் என்று நம்பப்படுகிறது.


 எனினும் 1066-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக இருந்த வில்லியம், சீசரைப் பின்பற்றி ஜனவரி 1-ல் புத்தாண்டைக் கொண்டாட உத்தரவிட்டார். எனினும் அவரது மறைவுக்குப் பின் புத்தாண்டு மீண்டும் மார்ச் 25-க்குத் திரும்பியது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின் 1582-ல் போப் பதிமூன்றாம் கிரிகோரி, ஜனவரி ஒன்றை புத்தாண்டாக பிரகடனப்படுத்தினார். இது படிப்படியாக உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அன்று முதல் இன்று வரை ஜனவரி 1-ல் புத்தாண்டுக் கொண்டாடங்கள் தொடர்கின்றன.

  பண்டைய ரோமானிய காலண்டரில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தன. கிரிகோரி அறிமுகம் செய்த காலண்டரில் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. இத்தாலிய டாக்டர் அலோயிசியஸ் லிலியஸ் என்பவர் இந்தக் காலண்டரை வடிமைத்தார். எனினும் போப் கிரிகோரியால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதால் அவரது பெயரிலேயே "கிரிகோரியன் காலண்டர்' என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. படிப்படியாக ஒவ்வொரு நாடாக இந்தப் புதிய காலண்டரை ஏற்றுக் கொண்டன. இன்று நாம் வீடுகளில் அலங்கரிப்பது கிரிகோரியன் காலண்டர்தான்.

 புத்தாண்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் யூதர்களுக்கு மட்டும் அது சோகமான நாளாகவே கருதப்படுகிறது. ஏனெனில் ஜூலியஸ் சீசர் அறிவித்த முதல் புத்தாண்டு அன்றே புரட்சியில் ஈடுபட்ட யூதர்களைக் கொன்று குவித்தார்.

 போப்பாண்டவர் காலத்திலும் புத்தாண்டு தினத்தன்று ரோமில் உள்ள யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவ மத வழிபாட்டில் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். அதனை எதிர்த்தவர்களோ கொல்லப்பட்டனர். யூதர்களின் புனித நூலை அழிப்பது, யூதர்கள் மீது சிறப்பு வரி விதிப்பது என அனைத்தையுமே ஜனவரி 1-ல்தான் போப் கிரிகோரி அரங்கேற்றினார். அதனால்தான் கிரிகோரியன் காலண்டரை பின்பற்றினாலும் இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ புத்தாண்டுக் கொண்டாட்டம் ஏதும் கிடையாது.

- சு.வெங்கடேஸ்வரன்