உருத்திராட்சம் - அளவும், வகைகளும்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:50 | Best Blogger Tips
உருத்திராட்சம் - அளவும், வகைகளும்!

உருத்திராட்ச மரத்தின் பழத்தில் இருந்து இந்த கொட்டைகளை பிரித்தெடுத்து கழுவி உலரவைத்து அவற்றின் அளவைப் பொறுத்து தனித் தனி பயன்பாட்டுக்கென பிரித்தெடுக்கின்றனர். இந்த கொட்டைகளின் அளவு தட்பவெப்ப நிலை, மரத்தின்வகை, வயது மற்றும் பழத்தின் முதிர்ச்சியைப் பொறுத்து மாறு படுகிறது. பொதுவில் பார்ப்பதற்கு மங்கலாய் கருமை அல்லது செம்மையேறிய பழுப்பு நிறத்தில் உருத்திராட்ச மணிகள் காணப் படுகின்றன.

உருத்திராட்ச மணியின் வெளிப்புற பரப்பானது ஒழுங்கற்ற ஆனால் உறுதியான மேடு பள்ளங்களுடனும், பிளவுகளுடனும் காணப் படுகிறது. இந்த கொட்டைகளை உற்று கவனித்தால் மேலிருந்து கீழாக அழுத்தமான கோடு போன்ற பிளவுகள் இருக்கும். இந்த பிளவுகளையே முகங்கள் என்கின்றனர். இந்த உருத்திராட்ச மணிகளின் வளர்ச்சி மற்றும் திரட்சியைப் பொறுத்து இவற்றில் பிளவுகள் அல்லது முகங்கள் அமைகின்றன. ஒரு முகத்தில் இருந்து 21 முகம் வரையிலான உருத்திராட்ச மணிகள் கிடைக்கின்றன. பொதுவில் 95 விழுக்காடு காய்கள் ஐந்து அல்லது ஆறு முகம் கொண்டவைகளாகவே இருக்கின்றன.
...

இந்த காய்களில் உள்ள முகங்களின் அழுத்தம் மற்றும்.....

http://www.siththarkal.com/2011/04/blog-post_19.html


.
See More

• காளான் மருத்துவ பயன்கள் பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:46 | Best Blogger Tips
  • காளான் மருத்துவ பயன்கள் பற்றிய தகவல்.

    காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

    ...
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100
கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
See More
Description: https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-snc7/s480x480/576494_476837975683942_2007395250_n.jpg

டைட்டா ப்ரா போடாதீங்க, தலைவலி அதிகமாயிரு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:36 | Best Blogger Tips
டைட்டா ப்ரா போடாதீங்க, தலைவலி அதிகமாயிரும்!

உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் ப்ராவை போடுவதில்லை என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தவறான அளவில் போடப்படும் உள்ளாடையினால் தலைவலி, மார்பகவலி, முதுகுவலி போன்றவை ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள்.

மூச்சுவிடுவதில் சிரமம்
...

அதிக அளவில் டைட்டாக போடப்படும் ப்ராவினால் மூச்சுவிட சிரமம் ஏற்படும். மார்பு எலும்புக்கூடு வலிக்க ஆரம்பித்துவிடும். மேலும் அதிக அளவில் டைட்டாக போடுவதால் உணவு ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். எனவே சரியான சைஸ் தேர்ந்தெடுத்து போடுவது அவசியம்.

முதுகுவலி அதிகமாகும்

சரியான அளவை தேர்ந்தெடுக்காமல் விட்டால் ப்ரா பட்டைகள் தோளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சிலநேரங்களில் முதுகுவலி அதிகமாக்கிவிடும். இது டென்சனை அதிகமாக்கிவிடும். இதனால் ஏற்படும் மன உளைச்சல் வேலையில் கவனக்குறைவை ஏற்படுத்திவிடும்.

மார்பகப் புற்றுநோய் அபாயம்

அதிக அளவில் டைட்டாக போடப்படும் பிராவினால் மார்பு, முதுகுப்பகுதிகளில் தழும்புகள் ஏற்படும்.

உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவது தடைபடும். உடல் செல்களுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது. இதனால் தலைபகுதிக்கு ஆக்ஸிஜன் சரியாக செல்லாமல் தலைவலி ஏற்படும். மார்புபகுதியில் அழுத்தம் அதிகமாவதால் மார்பக வலி அதிகமாகிவிடும். மேலும் அதிக அளவில் கழிவுகள் சேர்ந்து அதுவே மார்பகப் புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்கள் ப்ரா போடும்போது அதிக அளவில் லூசாக போட்டாலும் ஆபத்து, அதிகம் டைட்டாக போட்டாலும் ஆபத்துதான் எனவே சரியான அளவில் தேர்ந்தெடுந்து போட்டால் மட்டுமே உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.
See More

காஜலை பயன்படுத்துறீங்களா? இதை கொஞ்சம் படிச்சு பாருங்களேன்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:34 | Best Blogger Tips
காஜலை பயன்படுத்துறீங்களா? இதை கொஞ்சம் படிச்சு பாருங்களேன்...

முகத்திற்கு மேக்-கப் செய்யப் பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் பல நிறைய வழிகளில் பயன்படுகிறது. அதிலும் கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஜல் நிறைய வழியில் பயன்படுகிறது. ஆனால் அதனைப் பற்றி பலருக்கு தெரியாது. ஆகவே அதனை என்னவென்று தெரிந்து கொண்டு, தினமும் அவற்றை ஏதேனும் அவசரத்திற்குப் பயன்படுத்தலாம். இப்போது அது எப்படியெல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!!

காஜலை பயன்படுத்தும் முறை:
...

* கண்களுக்கு அடியில் போடும் கண்மையாக காஜலைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அவ்வாறு போட்டால் கண்கள் நன்கு பளிச்சென்று வெளிப்படும். இதனால் முகத்திற்கு ஒருவித அழகு ஏற்படும். மேலும் அவ்வாறு போடும் போது முகத்திற்கு ஏற்றவாறு அந்த காஜலைப் போட வேண்டும்.

* நெற்றியில் வைக்கும் பொட்டாகப் பயன்படுத்தலாம். அதிலும் இந்திய பெண்கள் பொட்டு வைக்காமல் இருந்தால், ஏதோ ஒரு குறை போன்று காணப்படும். மேலும் இந்த காஜலை வைத்து, இரு புருவத்திற்கு இடையிலும் ஒரு புள்ளி அல்லது வேண்டிய டிசைனை வரைந்துக் கொள்ளலாம்.

* காஜலை கண்களுக்கு ஒரு ஐஷேடோ போன்றும் பயன்படுத்தலாம். அதற்கு சிறிது காஜலை விரல்களால் எடுத்து, அதனை கண்களுக்கு மேல் லேசாக தடவி, ஒரு ஷேடோ போன்றும் உபயோகிக்கலாம். இதனால் கண்கள் சற்று அழகாக காணப்படும்.

* வெள்ளை முடிகள் இருந்தால், அவற்றை மறைக்கவும் காஜலைப் பயன்படுத்தலாம். இதனால் சிறிது நேரத்தில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம்.

* புருவங்களை அழகான வடிவத்தோடு காண்பிக்க காஜல் மிகவும் சிறந்த பொருள். ஆகவே இந்த காஜலைக் கொண்டு புருவங்களை அழகாக முகத்திற்கு எடுப்பாக வடிவமைத்தால், முகமும் அழகாகத் தோன்றும்.

* தலையில் ஆங்காங்கு வலுக்கைப் போன்று காணப்பட்டால், அப்போது அவற்றை மறைக்க சிறிது காஜலை எடுத்து, அந்த இடத்தில் பயன்படுத்தி மறைக்கலாம். அதற்காக வலுக்கை பெரிதாக இருப்பதற்கு பயன்படுத்தக்கூடாது. சிறிய வலுக்கைக்கு மட்டும் பயன்படுத்தினால் தான் நன்றாக காணப்படும்.

ஆகவே இவ்வாறெல்லாம் பயன்படுத்தினால், நேரத்தையும் பணத்தையும் நன்றாக சேமிக்கலாம். மேலும் இது ஒரு சிறந்த மேக்-கப் டிப்ஸ் ஆக இருக்கும். மேலும் வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், அதையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
See More

மெனோபாஸ் காலத்தை எளிதாக எதிர்கொள்ளலாம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:20 | Best Blogger Tips

 

பெண்கள் தங்களின் பருவம் எய்தும் காலத்தை எவ்வாறு ஒருவித அச்சத்துடன் எதிர்கொள்கின்றனரோ அதேபோல மெனோபாஸ் பருவத்தையும் ஒருவித கலவரத்துடனே எதிர்கொள்கின்றனர். அசதி, மனச்சோர்வு, இனிமேல் நமக்கு ஒன்றுமே இல்லையோ என்ற ஒருவித விரக்தியான நிலைக்கு சென்றுகின்றனர். இந்த கால கட்டத்தில் உடல்ரீதியாக ஏற்படும் சிக்கல்களை சமாளித்தாலே மனரீதியாக ஏற்படும் சிக்கல்களை எளிதாக சமாளித்துவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். மெனோபாஸ் காலத்தில் என்ன உணவுகளை உட்கொள்ளவேண்டும் என்றும் உணவியல் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

நார்ச்சத்துள்ள உணவுகள்


வயதாக வயதாக உடல் தளர்வடைந்து விடும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடல் தளர்ச்சியை போக்க முடியும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மெனொபாஸ் காலத்தை சமாளிக்க உதவும்.

கால்சியம் உணவுகள்

வயதான காலத்தில் எலும்புகள் வலிமை குன்றிவிடும். எனவே கால்சியம் சரியான அளவில் இருந்தால் மட்டுமே எலும்பு உடைதல் நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும். எனவே பால் சார்ந்த பொருட்களில் உயர்தர கால்சியம் சத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
சோயாபீன்ஸ்சில் உயர்தர நார்ச்சத்து அடங்கியுள்ளது. இதில் உள்ள டோஃபு தேவையான அளவு கால்சியம் உள்ளது. இதில் உள்ள தாவர ஈஸ்ட்ரோஜன், ஐசோஃப்ளோவின் பெண்களுக்கு ஏற்றது.

இரும்புச்சத்து

ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால் ரத்தசோகை நோய் தாக்குதல் ஏற்படும். இதற்கு இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம். மீன், கோழி, கறி, பச்சைக் காய்கறிகள், கீரைகள் ஆகியவைகளில் உயர்தர இரும்புச்சத்து அடங்கியுள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

வைட்டமின், புரதம்

வைட்டமின் பி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் மெனோபாஸ் காலத்திய சோர்வினை போக்க முடியும். உயர்தர புரதச்சத்துள்ள உணவுகள், பயறு மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கலர் கலராக உள்ள பழங்கள், காய்கறிகளில் எண்ணற்ற வைட்டமின்கள், தாது உப்புகள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அடங்கியுள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பீன்ஸ்சில் உயர்தர நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. தாது உப்புக்கள், கால்சியம், போலிக் அமிலம், வைட்டமின் பி-6 அடங்கியுள்ளன. எனவே மெனோபாஸ் பருவத்தை எட்டும் பெண்கள் அதிக அளவில் பீன்ஸ் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

கழிவுகளை வெளியேற்றும் தண்ணீர்

மெனோபாஸ் பருவத்தை எட்டியவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை போக்குகிறது. சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்.
மேலே கூறியுள்ள உணவுகளை சரியாக உட்கொண்டால் இதுவும் கடந்து போகும் என்று மெனோபாஸ் பருவத்தை ஈசியாக கடந்து விடலாம் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

வெந்தயத்தில் மருத்துவம்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:09 | Best Blogger Tips


வெந்தயத்தில் மருத்துவம்.



உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.


எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.


இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.


காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.


வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது. தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம்.


ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.


வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.


மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.


வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம்பெருங்காயப்பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.


மூட்டுவலிக்கு வெந்தயத்தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.


எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.


இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.


மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.


வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.


ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.


1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டில் பத்துப்போட வீக்கம் தீப்புண் குணமாகும்.

2. வெந்தயத்தை நன்றாக காயவைத்து, பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.

3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட இரத்தம் ஊறும்.

4. கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

5. வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து, ஊறவைத்து நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்க முடி உதிராமல் நன்றாக வளரும்.

6. 5 கிராம் வெந்தயத்தை நன்றாக வேகவைத்து கடைந்து கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட தாய்ப்பால் பெருகும்.

7. வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.


8. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமாக எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி, பொருமல், ஈரல் வீக்கம் குறையும்.

9. வெந்தயம், வாதுமைப் பருப்பு, கசகசா, உடைத்த கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாகவும், வலுவாகவும் இருக்கும். இடுப்பு வலி தீரும்.

10. வெந்தயத்தை சீமை அத்திப்பழம் சேர்த்து அரைத்து கட்டிகளுக்குப் பத்துபோட்டால் கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.

11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும்.

வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.


வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும்.


இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரிழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம் குறையும்.


தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.


முடி உதிர்வதை தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.


முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.



வெந்தயக்கீரை.

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.


வெந்தயக்கீரையை கொண்டு அல்வா தயாரித்து காலை மாலை கொட்டைப்பாக்களவு சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.


வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.


வெந்தயக்கீரையில் வைட்டமின் சத்தும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.



செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்க..

வெந்தயம், ஆண் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது . வத்தக்குழம்பில் ஆரம்பித்து ஊறுகாய், மிளகாய் பொடி, மசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் பயன்படுவது வெந்தயம்.

சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கும் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கும் மருந்தாக வெந்தய பவுடர் பயன்படுத்தப்படுகிறது.

உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்கும் என்கிறது ஆய்வு.