பக்கங்கள்

இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை

 May be an illustration

ஒரு கிராமத்தில் யார் அறிவாளி என்று ஒரு போட்டி!
 
இளைய தலைமுறை தான் அறிவாளிகள் என்று இளைஞர்கள் சொல்ல!
 
வயதில் பெரியவர்கள் தான் என்று பெரியவர்கள் சொல்ல!
 
சரி யார் அறிவாளிகள் என்று பார்க்க இருவருக்கும் ஒரு செடியை கொடுத்து ஒரு மாதம் டைம் கொடுத்து யார் இந்த செடியை நன்றாக வளர்க்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்கள்!
 
இளைஞன் செடியை நல்ல இடமாக தோண்டி நட்டு வைத்து தினமும் நீரும் உரமும் தெளித்து நன்றாக வளர்த்தான்!
 
ஆனால் பெரியவர் நட்டு வைத்ததோடு சரி! தண்ணீரும் ஊற்ற வில்லை உரமும் போட வில்லை!
 
ஒரு மாதம் ஓடியது இளைஞன் வைத்த செடி நன்றாக வளர்ந்து இருந்தது.
 
பெரியவர் வைத்த செடி சிறியதாக வளர்ந்து இருந்தது.
 
அன்று இரவு திடீர் என்று பெரிய காற்றுடன் மழை !
 
இளைஞன் வைத்த செடி காற்றில் ஒடிந்து மழையில்
அடித்து செல்லப்பட்டது!
 
ஆனால் பெரியவர் வைத்த செடி அப்படியே மழை
புயல் தாங்கி நின்றது!
 
மறு நாள் காலை இளைஞன் பெரியவர் கிட்ட இது எப்படி சாத்தியம்! நான் தினம் நீர் ஊற்றி உரம் போற்று
 
நன்றாக வளர்ந்து இருந்த செடி ஒடிந்து மழையில்
அடித்து செல்லப்பட்டது! நீங்கள் தண்ணீர் கூட ஊற்ற வில்லை ஆனால் செடி எப்படி புயல் மழையை
 
தாங்கி நிற்கிறது என்று கேட்க ! அதற்கு அவர் சொன்னார் ! நீ எல்லாம் அதற்கு கொடுத்தால் அது சுகமாக வேர் விடாமல் அப்படியே இருந்து விட்டது.
 
 
நான் வைத்த செடி நான் நீர் ஊற்றாததால் உயிர் வாழ நிலத்தில் வேர் ஊன்றி நன்கு வளர்ந்து விட்டது!
 
இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்றார்.💚

 🙏🌹 நன்றி இணையம்            🌹🙏 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, lake and grass 🌷 🌷🌷 🌷