பக்கங்கள்

இந்திப் படம் சர்தார் உதம்

 



இந்த படம் தற்போது இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரண்டாகி வருகிறது. இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலா பாக்கில் அமைதியான வழியில் போராடிய மக்களை ஜெனரல் டயர் என்ற ஆங்கில தளபதி கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றான். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள், பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தார்கள்.

இறுதிவரை வருத்தம் தெரிவிக்காத கவர்னர் ஓ.ட்வையர் ஒட்டுமொத்த பிரிட்டிஷின் உருவகமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். 100 ஆண்டுகள் கடந்தும் ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து பிரிட்டிஷ் அரசு இதுவரை அதிகாரபூர்வமாக மன்னிப்பைக் கேட்வில்லை. ஓ.ட்வையரும் அப்படியே

இந்த படுபாதக செயலை செய்த ஜெனரல் டயர் பணி ஒய்வு பெற்று லண்டனில் வசித்து வந்தார். அவனை தேடிச் சென்று 21 வருடம் கழித்து சுட்டுக் கொன்ற உதம் சிங் என்ற இளைஞனின் கதைதான் இந்த படம்.
இந்த படத்தின் கதை மட்டுமல்லாத அதை உருவாக்கிய விதம், பயன்படுத்தப்பட்ட வசனங்கள், நடித்தவர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என எல்லா விதங்களிலும் படத்திற்கு பாராட்டுதலுக்குறரியது

ஓர் உண்மையான சுதந்திரப் போராளியின் கதையை மிகையின்றி காட்டிய 'சர்தார் உத்தம்' நாம் கொண்டாட வேண்டிய ஓர் உன்னத சினிமா.

தமிழநாட்டில் ஜாதி பற்றிய படங்கள் தயரிப்பதை விட்டு விட்டு அல்லது குறைத்துக் கொண்டு , இது போன்ற தேச பக்தர்கள் பற்றி படம் தயாரிக்க யாராவது முன் வரவேண்டும்.



நன்றி இணையம்