பக்கங்கள்

*நிதானம்*

 






ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,

அவரை தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.

குரு சொன்னார்,

"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.

உணவை, நீரை அருகில் வையுங்கள்

ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம்.

பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.

அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,

நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்," என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார்.

ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.

சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர்.

அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.

நாட்கள் நகர்ந்தன,


ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், "எனக்கும் தியானம் சொல்லி தருவீர்களா..?" என்று கேட்டான்.

இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.

"எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகிவிடுகிறார்",

என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.

"மற்றவர் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்து கொண்டே போகாது"!!!

தர்க்கம் பண்ணாதீர்கள் ..

நம்முடைய பேச்சே

தர்க்கத்திற்கு தீனி...

நம் அமைதியே அதற்கு பட்டினி ..!!

அமைதியாக இருங்கள் ..

எல்லாம் சரியாகும்

ஒரு வேளை சரியாக வில்லை என்றாலும் பரவாயில்லை ..!!

நீங்கள் சரியாக இருப்பீர்கள் ..

நிதானம்

நீளமானது ..!!


 நன்றி இணையம்