பக்கங்கள்

காமராஜர் மறைவுக்கு கண்ணீரில் கவிதை படித்த கண்ணதாசன்..!

 


காமராஜர் மறைவுக்கு கண்ணீரில் கவிதை படித்த கண்ணதாசன்..!

1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவரது மறைவைக் கண்டு தமிழகமே அழுது புலம்பியது. பெருந்தலைவர் காமராஜரை மட்டுமே தன் தலைவனாக வாழ்நாள் முழுவதும் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன், பேனாவில் கண்ணீர் ஊற்றி ஒரு கவிதை எழுதினார்...

"தனியே எனக்கோர் இடம் வேண்டும் -- தலை

சாயும் வரை நான் அழ வேண்டும்.

வானகம் போய்வர வழி வேண்டும்எங்கள்

மன்னனை நான் பார்த்து வரவேண்டும்

தாயே எனக்கொரு வரம் வேண்டும்-

என்

தலைவனை மீண்டும் தர வேண்டும்.

தமிழே எனக்கொரு மொழி வேண்டும்அவன்

தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.

இருப்பேன் பலநாள் என்றானே

எம்மை

ஏய்த்தது போல் இன்று சென்றானே

அவன் சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கேஅந்தத்

தேவன் அருகினில் அழைத்தானோ?

பறக்கும் பறவைக் கூட்டங்களே

எங்கள்

பாரத வீரனைக் காண்பீரோ?

இங்கு துடிக்குங் கோடி உள்ளங்களைஅந்தத்

தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ?"

- கவியரசர் கண்ணதாசன்.

எப்போது படித்தாலும் கண்கலங்க வைக்கும் கண்ணதாசனின் வரிகள் இவை தான்...!

 

நன்றி இணையம்