சொர்க்க லோகத்தை அடைய கொக்கரையான் கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 4:17 | | Best Blogger Tips

செய்த பாவங்கள் அனைத்தும் விலகி சொர்க்க லோகத்தை அடைய தகுதி பெற்றவன் ஆக்கும் கொக்கரையான் கோயில்:
இப்படி ஒரு திருகோயிலா? தலமா ?
எமதர்மராஜன் தன உதவியாளர்கள் அன்று எடுத்துவந்த ஆத்மாக்களை பார்த்து வினவுகிறான் , உங்களில் யார் கொக்கரையான் கோவில் கோபுரதரிசனம் செய்துள்ளீர்கள்??
இதற்கு என்ன காரணம்?
எத்தனை தவறுகளை செய்திருந்தாலும் , எந்த ஒரு நற் செயல்களையும் செய்யாவிடினும் ....
ஒருவன் கொக்கரையான் கோயில் கோபுரத்தை தரிசித்திருப்பான் எனில் , அவன் செய்த பாவங்கள் அனைத்தும் அந்த நொடியில் விலகி சொர்க்க லோகத்தை அடைய அவன் தகுதி பெற்றவன் ஆகிறான் என்பதே காரணம்.
இந்த கோவில்எங்கு உள்ளது ?
நம் கொங்கு நாட்டில் தான் .....திருச்செங்கோடு அருகில் ...16 கிலோமீட்டரில் ..
திருச்செங்கோட்டிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் பள்ளிபாளையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான் காண் என வாகீச பெருமானால் பாடப் பெற்றதும் , செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான கொக்கராயன் பேட்டையில் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருகோயில் பெருமை அளவிடற்கரியது ....
திருத்தல இறைவன் சுயம்புலிங்கம், வரப்பிரசாதி, சான்னித்யம் மிக்கவர், கருவறையில் அதிர்வலைகளை உணரலாம்.
சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருத்தில்லையில் உள்ளது போல் பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி ஆஞ்சநேயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவர் நாய் வாகனமின்றி விளங்குகிறார் . இந்த அமைப்பு வேறு எங்கும் கிடையாது.
சத்ரு தோஷ பரிகார மூர்த்தியாக விளங்குகிறார். பூரட்டாதி நட்ச்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர்.
இத்திருத்தல இறைவி மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நிவர்த்தி செய்வதில் வரப்பிரசாதி.
இறைவன் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி 3 சுவர்களிலும் கற்கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் சாவி பொருத்துவதற்கான துளைகளும் உள்ளன. இது போன்ற அமைப்பு வேறெங்கும் கிடையாது.
"கல் கோழி கூவும், கல் கதவு திறக்கும், அப்போது கலியுகம் அழியும்" என்பது ஐதீகம்.
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ளது.
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான், 
ஸ்ரீ தட்க்ஷணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவ கிரஹங்கள், சூரிய பகவான், சப்த கன்னிமாதாக்கள், ஆகிய மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்ற சிவஸ்தலம்.
சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜய நகரப்பேரரசை ஆண்டுவந்தகிருஷ்ணதேவராயர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டதற்கான அவர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.
🙏🙏🏻
🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏

 நன்றி இணையம்

*உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :-*

மணக்கால் அய்யம்பேட்டை | AM 4:16 | Best Blogger Tips

🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐
Image result for உலகின் முக்கிய தினங்கள்
*ஜனவரி*
🛏🛏🛏🛏

12-
தேசிய இளைஞர் தினம் 
15-
இராணுவ தினம்
26-
இந்திய குடியரசு தினம்
26-
உலக சுங்க தினம்
30-
உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -
தியாகிகள் தினம்
*பிப்ரவரி*
🛏🛏🛏🛏

14 -
உலக காதலர் தினம்
25-
உலக காசநோய் தினம்
24
தேசிய காலால் வரி தினம் 
28-
தேசிய அறிவியல் தினம்
*மார்ச்*
🛏🛏🛏

08 -
உலக பெண்கள் தினம்
15 -
உலக நுகர்வோர் தினம்
20 -
உலக ஊனமுற்றோர் தினம்
21 -
உலக வன தினம்
22 -
உலக நீர் தினம்
23 -
உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 -
உலக காசநோய் தினம்
28 -
உலக கால்நடை மருத்துவ தினம்
*ஏப்ரல்*
🛏🛏🛏

05 -
உலக கடல் தினம்
05 -
தேசிய கடற்படை தினம் 
07 -
உலக சுகாதார தினம்
12 -
உலக வான் பயண தினம் 14 அம்பேத்கர் பிறந்தநாள்
18 -
உலக பரம்பரை தினம்
22 -
உலக பூமி தினம்
30 -
உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
*மே*
🛏🛏

01 -
உலக தொழிலாளர் தினம்
03 -
உலக சக்தி தினம்
08 -
உலக செஞ்சிலுவை தினம்
11
தேசிய தொழில் நுட்ப தினம் 
12 -
உலக செவிலியர் தினம்
14 -
உலக அன்னையர் தினம்
15 -
உலக குடும்ப தினம்
16 -
உலக தொலைக்காட்சி தினம்
24 -
உலக காமன்வெல்த் தினம்
29 -
உலக தம்பதியர் தினம்
31 -
உலக புகையிலை மறுப்பு தினம்
*ஜீன்*
🛏🛏🛏

04 -
உலக இளம் குழந்தைகள் தினம்
05 -
உலக சுற்றுப்புற தினம்
18 -
உலக தந்தையர் தினம்
23 -
உலக இறை வணக்க தினம்
26 -
உலக போதை ஒழிப்பு தினம்
27 -
உலக நீரழிவாளர் தினம்
28 -
உலக ஏழைகள் தினம்
*ஜீலை*
🛏🛏🛏

01 -
உலக மருத்துவர்கள் தினம்
11 -
உலக மக்கள் தொகை தினம்
*ஆகஸ்ட்*
🛏🛏🛏

01 -
உலக தாய்ப்பால் தினம்
03 -
உலக நண்பர்கள் தினம்
06 -
உலக ஹிரோஷிமா தினம்
09 -
வெள்ளையனே வெளியேறு தினம் 
09 -
உலக நாகசாகி தினம்
18 -
உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 -
தேசிய விளையாட்டு தினம்
*செப்டம்பர்*
🛏🛏🛏🛏

05-
ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம் 
08 -
உலக எழுத்தறிவு தினம்
16 -
உலக ஓசோன் தினம்
18 -
உலக அறிவாளர் தினம்
21 -
உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
26 -
உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 -
உலக சுற்றுலா தினம்
*அக்டோபர்*
🛏🛏🛏🛏

01 -
உலக மூத்தோர் தினம்
02 -
உலக சைவ உணவாளர் தினம்
04 -
உலக விலங்குகள் தினம்
05 -
உலக இயற்கைச் சூழல் தினம்
08 -
உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08
இந்திய விமானப்படை தினம் 
09 -
உலக தபால் தினம்
16 -
உலக உணவு தினம்
17 -
உலக வறுமை ஒழிப்பு தினம்
24 -
உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 -
உலக சிந்தனை தினம்
*நவம்பர்*
🛏🛏🛏🛏

14-
குழந்தைகள் தினம் 
18 -
உலக மனநோயாளிகள் தினம்
19 -
உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 -
உலக சட்ட தினம்
*டிசம்பர்*
🛏🛏🛏

01 -
உலக எய்ட்ஸ் தினம்
02 -
உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 -
உலக மனித உரிமைகள் தினம்
14 -
உலக ஆற்றல் தினம்
23-
விவசாயிகள் தினம்

 நன்றி இணையம்

இறைவனுக்கு பூஜைகள் செய்து இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 4:15 | Best Blogger Tips
Image result
கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவனின் சிலையை, படத்தை துடைத்து, அபிஷேகம் பண்ணி, பூவாலும், சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் செய்து இறைவன் பவனி வரும் பல்லக்கு தேர் போன்றவற்றையும் நாம் ஏன் அலங்காரம் செய்கிறோம்?
இறைவன் நம்மை கேட்டானா ? என்னை அலங்காரம் செய் என்று... இறைவன் நம்மிடம் கோரிக்கை வைத்தானா இல்லையே...! பின் எதற்கு இந்த அலங்காரம்?
மனித மனம் அலைபாயக் கூடியது.
ஒரு இடத்தில் நிலைத்து நில்லாதது. அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் மனக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு எளிதில் வருவது இல்லை. முதலில் மனது ஒன்றின் மேல் படிய பதிய வைக்க வேண்டும். மனம் அதில் லயிக்க வேண்டும். அதிலேயே மனம் கலக்க வேண்டும். அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம். அதனால் தான் கோவிலை நமது அனைத்து புலன்களுக்கும் இன்பம் தரும்படி அமைத்தார்கள்.

Image result
காதுக்கு இனிமையாக பாடல்கள், நாதஸ்வரம், சொற்பொழிவுகள் என்றும், மூக்குக்கு இனிமையாக கற்பூரம், ஊதுபத்தி, மலர்கள் என்றும், நாவுக்கு இனிமையாக பிரசாதம் என்றும், உடலுக்கு இனிமையாக நந்தவனக் காற்றும், கண்ணுக்கு இனிமை தர கோவில் சிற்பங்கள், பெரிய கோபுரங்கள், அழாகன மூர்த்தி வடிவங்கள் என்று அந்த சிலைகளுக்கு அலங்காரம் என்று வைத்தார்கள்.
இறைவனை எவ்வளவுக்கெவ்வளவு அலங்காரம் பண்ணுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் கண்ணுக்கு இனிமை. உதாரணமாக 
நம் குழந்தைகளுக்கு நாம் புதிது புதியதாய் ஆடை அணிகலன்கள் அணிவித்து பார்த்து மகிழ்கிறோம் அல்லவா.? அது போல... அலங்காரம் பண்ணுவது நாம் கண்டு மகிழ. மனைவிக்கு பட்டுச் சேலை வாங்கித் தந்து அழகு பார்ப்பது போல அவளுக்கு நகை அணிவித்து அழகு பார்க்கிறோம்.
இப்படி அழகை இரசிக்கும் போது 
மனம் லயிக்கிறது. மனம் ஒன்று படுகிறது. மனதில் ஆவல் எழுகிறது.
ஒன்றை ரசிக்கும் போது ரசிப்பின் உச்சத்தில் கண்ணை மூடி அமர்ந்து கொள்கிறோம். கண்ணை மூடி ரசிக்கிறோம்... அது சிறந்த உணவாக இருக்கட்டும், சிறந்த இசையாக இருக்கட்டும், நல்ல நறுமணமாக இருக்கட்டும், ரசனையின் உச்சம் கண் மூடி உள்ளுக்குள் அதை அனுபவிக்கிறோம்..
அதைப்போல இறைவனை, அவன் உருவத்தை சிங்காரம் பண்ணி பார்க்கும் போது அதில் லயித்து அதை அப்படியே மனதில் காண்போம்.
அது தான் தியானம். உருவத்தில் இருந்து உருவம் இல்லா அந்த சக்தியை அறிவதுதான் தியானம்.
இதை தான் தாயுமானவர்
உன்னைச் சிங்காரித்து 
உன்னழகைப் பாராமல்....
என்னைச் சிங்காரித்து 
இருந்தேன் பராபரமே.....! என்கிறார்.
தாயுமானவர் மிக பெரியவர். 
உண்மை உணர்ந்த ஞானி. அவர் தான்
இறைவா உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் என்னை சிங்காரித்து கொண்டு இருந்து விட்டேனே என்கிறார்.
ஓம் நமசிவாய.

 நன்றி இணையம்

🎹இசைஞானி புதுமைகள் 28 !🎺

மணக்கால் அய்யம்பேட்டை | AM 4:14 | Best Blogger Tips
Image result for இசைஞானிImage result for இசைஞானி
🎻Raja kaiya vachaa 🎷
🎹இசைஞானி புதுமைகள் 28 !🎺
1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத் 
தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.
2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"
3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது
4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.
5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் "தூங்காத விழிகள் 
ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி
6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் 
காட்டுகிறது
7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன 
கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.
8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.
9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.
10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.
Image result for இசைஞானி
11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, 
பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )
12. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல் 
திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம், 
வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.
13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி, சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது 
ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".
15. படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".
16. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய் 
சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.
17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு முடிக்கும்போது படம் கரெக்டா முடியும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.
18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் பிள்ளை நிலா
19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி
20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )
21. இசைஞானி முதன் முதலாக 'ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்த படம் பிரியா.
22. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி"
23. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் "வைதேகி காத்திருந்தால்", "அரண்மனைக்கிளி".
24. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி ( புன்னகை மன்னன் )
25. “பஞ்சமுகிஎன்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..
26. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாள் பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( சிறைச்சாலை )
27. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை 
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.
28. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

 நன்றி இணையம்