பச்சை மரத்தை வெட்டுபவருக்கு வந்து சேரும் பாவங்கள்...😣😣😣

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:56 | Best Blogger Tips

அரச மரம் = அற்ப ஆயுள்,விபத்தில் மரணம்,😭
ஆல மரம்= வம்சம் அழியும்.😭
இலந்தை மரம்=செல்வம் கொள்ளை போகும்.😭
ஈச்ச மரம்= மாரடைப்பு,நாவரட்ச்சியால் மரணம்.😭
உதிய மரம்= தலையில் அடிபட்டு மரணம். 😭
ஊஞ்ச மரம்= மருத்துவம் பலன் தராமல் மரணம்(தவறான மருத்துவம்).😭
எலுமிச்சை மரம்=இடி விழுந்து மரணம்.😭
புளிய மரம்= ரத்த கொதிப்பு,மாரடைப்பால் மரணம்.😭
வேப்ப மரம்=காமாலை,உடம்பில் புண் ஏற்பட்டு மரணம்.😭
பனைமரம்= வம்சம் அழியும்.😭
தென்னை மரம்= வளர்ந்த குழந்தைகள் கண்முன்னே இறக்கும்.😭
புங்க மரம் = தீராத நோய் வரும்.😭
புண்னியம் வேண்டுமா... 🙏😀
வம்சம் நலமாக வாழ வேண்டுமா
குறைவில்லா செல்லமும் 
சந்தோசமும் வேண்டுமா
மனநிம்மதி வேண்டும்
நோயற்ற வாழ்வு வேண்டுமா
முடிந்த அளவு மரம் நடுங்கள்
மரம்தான் மரம்தான் 
மனிதர்களை வாழ வைப்பதும் இந்த மரங்கள் தான்.....

ed;wp ,izak;

ஈகோவை விடுங்க... இனிமையாக வாழுங்க....!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:54 | Best Blogger Tips


ஒரு திருமணம்.
பெரியவர் ஒருவர் மணமக்களை வாழ்த்த ஆயிரம் ரூபாய் நோட்டோட மேடைக்கு சென்றார்.
மணமக்களை பார்த்து ஆயிரம் ரூபாய் தாளை எடுக்க..உடனே உள்ளே வச்சிட்டு பாக்கெட்டில் இருந்து ஒரு நூலை எடுத்து ஒரு முனையை அவர் பிடித்துக்கொண்டு மறுமுனையை மணமக்களை பிடித்து அதை இழுத்து அறுக்கச் சொன்னார்.
அவர்களும் இழுத்தார்கள் ஆனால் பெரியவர் இழுத்து பிடிக்காமல் அவர்கள் பக்கம் சாய்ந்து நூல் அறுந்து போகாமல் பார்த்துக்கொண்டார்
இப்படியே பலமுறை செய்தும் மணமக்களே சோர்ந்து போயினர்.
பிறகு அந்த பெரியவர் சொன்னார் இப்படித்தான்
வாழ்க்கையும் ஒரு முனை கணவரும் மறுமுனை மனைவியும் ஆளாளுக்கு இழுத்தா வாழ்க்கையெனும் அறுந்துவிடும்.
அதனால கணவனும், மனைவியும் ஈகோ பார்க்காமல் விட்டுக்கொடுத்தால் வாழ்க்கை எனும் நூல் அறுந்து போகாமல் இருக்கும் என சொல்ல அங்க அமர்ந்திருந்தவங்க எழுந்து நின்னு கைதட்டி மகிழ்ச்சிய தெரிவித்தாங்க.
ஈகோவை விடுங்க இனிமையாய் வாழுங்க...!!.
ed;wp ,izak;

மனைவி போன பின் கணவன் படும் துயர் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:49 | Best Blogger Tips

கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர இருக்கிறதே,கொடுமை😴😴
*தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன்,*
*தண்ணீரைக் கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன்*
*மனைவியின் மறைவுக்குப் பின் ஏனென்று கேட்க ஆளில்லால் போகிறான்.*
*ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் தன்னிச்சையாக நுழைய முடியாது.*
*வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ கூசுகிறார்கள்.*
*என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ*
*
கொடுத்ததை கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.*
*ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.*
*தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்ட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப் பேசக் கூட ஆளிருக்காது.*
*இதெல்லாம் என் உறவுக்குள்ளே,*
*
நட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.*
*
துளியும் அதிகப்படியில்லை.*
*என் கணவர் காலை எட்டரை மணிப் போல*
*
சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.*
*காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.*
*இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காலேயே ரெண்டாவது காபி கொடுத்துடுவேன்.*
*எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?*
*இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.*
*மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!*
*
சகோதரிகளே!!*
*யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!*
*உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!*
*முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!
ஒரு தடவ தான வாழப்போறீங்க...
கணவனை கடவுளாக பாக்க வேண்டாம்...
மனுசனா பாருங்க...
நன்றி :- வாட்ஸ் அப்


*21 வகை இலைகள்... வழிபாடுகள்... பலன்கள்!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:48 | Best Blogger Tips

விநாயகர் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது என்பார்கள். அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதால் டையக்கூடிய பலன்களைப் பார்ப்போமா?
1. முல்லை இலை கொண்டு வழிபட்டால், அறம் வளர்க்கும்.
2.கரிசலாங்கண்ணி இலையால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்துக்குத் தேவையான பொருட்சேர்க்கை நிகழும்!
3. வில்வம் இலையால் அர்ச்சித்து விநாயகரை வழிபட்டால், விரும்பிய அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல்லால் அர்ச்சித்து வணங்கினால் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்!
5. இலந்தை இலையால் அர்ச்சனை செய்து ஆனைமுகத்தானை வழிபட்டால், கல்வியில் மேன்மை பெறலாம்.
6. ஊமத்தை இலையைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், பெருந்தன்மையான மனம் பெறலாம்!
7. வன்னி இலை கொண்டு வழிபட்டால், பூவுலகிலும் சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.
8. நாயுருவி இலையால் வழிபட்டால், முகப் பொலிவும் அழகும் கூடும். தேஜஸூடன் வாழலாம்!
9. கண்டங்கத்திரி இலையால் கணபதியை வழிபட்டால், வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறலாம்.
10. அரளி இலையால் ஆனைமுகனை வழிபட்டால், எல்லா முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
11. எருக்கம் இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால், கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குழந்தை ஞானத்துடனும் யோகத்துடனும் வளரும்.
12. மருதம் இலையால் வழிபட்டால், மகப்பேறு கிடைக்கும்.
13. விஷ்ணுகிராந்தி இலையால் விநாயகப் பெருமானை வழிபட்டால், தேர்ந்த அறிவுடன் திகழலாம். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
14. மாதுளை இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
16. மருக்கொழுந்து இலைய��

 நன்றி இணையம்