‪#‎யார்_இந்த_சமயபுரத்ததாள்‬ ?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:40 | Best Blogger Tips


கம்சனால் சிறை படுத்தப்பட்டிருந்த தேவகி மணி வயிற்றில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவதரித்தார். அசரீரி சொல்படி வாசுதேவர் தேவகிக்குப் பிறந்தகண்ணனை கொட்டும் மழையில், ஆதிசேஷன் குடைபிடிக்க, பிருந்தாவனத்தில் உறங்கிக் கொண்டிருந்த யசோதை அருகில் விட்டு, யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கொண்டுவந்து, தேவகிக்கு அருகில் வைத்து விடுகிறார்.
மறுநாள் காலை அந்தப் பெண் குழந்தையை, தன்னை சம்ஹாரம் செய்ய தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தை என்று எண்ணி, கம்சன் கொல்ல முற்படும்போது, அவன் கையிலிருந்து அக்குழந்தை விடுபட்டு "உன்னைக் கொல்லப் பிறந்தவன், பிருந்தாவனத்தில் நந்தகோபருக்கும், யசோதைக்கும் மகனாக வளர்கிறான்" என்று சொல்லி மறைந்தது. இந்தக் குழந்தையே வைணவி என்ற மாரியம்மன்.
வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். (அது தற்போதுள்ள சமயபுரம்). பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்). அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்குகண்ணனூர் மாரியம்மன்என்று பெயரிட்டு வழிபட்டனர். அவளே தாயாக இருந்தது பக்தர்களை ரக்ஷித்துக்கொண்டிருகக்கும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்
அதனால்தான் அவள் "ரங்கநாதன் தங்கை" என்று அழைக்கப் படுகிறாள். வருடாவருடம், ஸ்ரீரங்கநாதர், தன் தங்கையான சமயயபுரத்தாளுக்கு சீர் அனுப்பும் வைபவமும் நடைபெறுகின்றது.
சமயபுரம் கோவில் இன்றும் ஸ்ரீரங்கம் தேவஸ்தானத்துக்கு உட்பட்டதே.
அம்மா..வல்லமை தாராயோ, தாயே....
மாரியம்மன் வாசலிலே மண்ணெல்லாம் திருநீறு
அம்மா, சமயபுரத்தாளே....சரணம் தாயே

 நன்றி இணையம்

தேரையார் சித்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:38 | Best Blogger Tips


18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.
மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் :
.. பால் உணவு உட்கொள்ளுங்கள். 
..
எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள். 
..
படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள். 
..
புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள். 
..
பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள். 
..
ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். 
..
இரவில் நன்றாக தூங்குங்கள். 
..
பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும். 
..
வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும்போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது. 
..
உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும். 
.. 6
மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும். 
.. 4
மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள். 
.. 1 1/2
மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 
..
வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் ) 
.. 4
நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். 
.. 3
நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்) 
..
விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.
இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன் அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்.
எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு தேரையாரின் அறிவுரை :
.. பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்த்து விடுங்கள். 
..
கரும்பு போன்ற இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடனும் இனிய வாசம் தரும் தலைமுடியைக் கொண்ட விலைமாதர்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள். 
..
காலை இளம் வெயிலில் அலையாதீகள். 
..
மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைத்திருக்காதீர்கள். 
..
முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ணவேண்டாம். 
..
உலகமே பரிசாக கிடைக்கிறது என்ற போதும், பசிக்காத போது உணவு உட்கொள்ளாதீர்கள். 
..
உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும், இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது. 
..
மயக்கும் மனம் வீசும் கந்தம், மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக்கூடாது . 
..
மாத விலக்கான பெண்கள், ஆடு, கழுதை போன்றவை வரும் பாதையில் எழும் புழுதி உடல்மேல் படும்படி நெருங்கி நடந்து செல்லாதீர்கள். 
..
இரவில், விளக்கு வெளிச்சத்தில் நிற்பவர் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதை தவிர்த்திடுங்கள். 
..
பசியின் போது உணவு உட்கொண்ட உடனேயும் உடலுறவு வைத்துக்கொள்ளாதீர்கள். 
..
மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல், அளவுக்கு மீறிய காமச் செயல்களில் ஈடுபடுதல், அழுக்கான ஆடை அணிந்திருத்தல், தலையை வாரி முடி உதிரச்செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். 
..
மற்றவர்கள் கை உதறும்போது அவர்களது நகத்திலிருந்து விழும் தண்ணீரும், குளித்து தலை துவட்டும் போது உதிரும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்காதீர்கள்.
தேரையார் சித்தர் கூறிய அனைத்தையும் ஒரே நாளில் பின்பற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை அப்படி. அதனால், படிப்படியாக முயற்சிப்போம். நோய், நொடியின்றி நாளும் நலத்தோடு வாழ்வோம்.

 நன்றி இணையம்