‪#‎யார்_இந்த_சமயபுரத்ததாள் ?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:54 | Best Blogger Tips


கம்சனால் சிறை படுத்தப்பட்டிருந்த தேவகி மணி வயிற்றில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவதரித்தார். அசரீரி சொல்படி வாசுதேவர் தேவகிக்குப் பிறந்தகண்ணனை கொட்டும் மழையில், ஆதிசேஷன் குடைபிடிக்க, பிருந்தாவனத்தில் உறங்கிக் கொண்டிருந்த யசோதை அருகில் விட்டு, யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கொண்டுவந்து, தேவகிக்கு அருகில் வைத்து விடுகிறார்.
மறுநாள் காலை அந்தப் பெண் குழந்தையை, தன்னை சம்ஹாரம் செய்ய தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தை என்று எண்ணி, கம்சன் கொல்ல முற்படும்போது, அவன் கையிலிருந்து அக்குழந்தை விடுபட்டு "உன்னைக் கொல்லப் பிறந்தவன், பிருந்தாவனத்தில் நந்தகோபருக்கும், யசோதைக்கும் மகனாக வளர்கிறான்" என்று சொல்லி மறைந்தது. இந்தக் குழந்தையே வைணவி என்ற மாரியம்மன்.
வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். (அது தற்போதுள்ள சமயபுரம்). பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்). அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்குகண்ணனூர் மாரியம்மன்என்று பெயரிட்டு வழிபட்டனர். அவளே தாயாக இருந்தது பக்தர்களை ரக்ஷித்துக்கொண்டிருகக்கும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்
அதனால்தான் அவள் "ரங்கநாதன் தங்கை" என்று அழைக்கப் படுகிறாள். வருடாவருடம், ஸ்ரீரங்கநாதர், தன் தங்கையான சமயயபுரத்தாளுக்கு சீர் அனுப்பும் வைபவமும் நடைபெறுகின்றது.
சமயபுரம் கோவில் இன்றும் ஸ்ரீரங்கம் தேவஸ்தானத்துக்கு உட்பட்டதே.
அம்மா..வல்லமை தாராயோ, தாயே....
மாரியம்மன் வாசலிலே மண்ணெல்லாம் திருநீறு
அம்மா, சமயபுரத்தாளே....சரணம் தாயே
நன்றி இணையம்


‪#‎வழிபாடு! ‪#‎ஒரு ‪#‎எச்சரிக்கை!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:40 | Best Blogger Tips
இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன்,
சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம்
நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா
என்று, நம் மனதுக்கும் உற்சாகம்
தொற்றிக்கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால்,
என்னடா இது? நமக்கு முன்னே இங்கே
நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே
இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே
காணோமே!
வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய்
மறைந்துபோனார்களா?
அட....
இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து
தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில்
எள்விழ இடமில்லை!
ஆகா…..நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை
கூட்டம்! கடலைமாலைகளா! எள்ளெண்ணெய்
தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா!
நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு
அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள்
எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்!
ஆனால், இங்கே , இறைவன் திருமுன்னோ….?அம்பாள் முன்போ......??
சுத்தம்! ஒரு , காக்கா கூட இல்லை!
என்னதான்யா நடக்கிறது இங்கெல்லாம்?
நீங்கள் வழிபடும் சிவ சக்தியை விட சக்தி
வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக
இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை!
நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க
தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி,
தோசபரிகாரம் செய்யணும், அது செய்யணும்
இது செய்யணும் என்று வற்புறுத்தி,
உங்களையெல்லாம் தவறாக வழிநடத்தும் சில
சோதிடர்கள், சில சிவாச்சாரியார்கள், பிரபல
ஆன்மீக வியாபர பத்திரிகைகள், ஆன்மீக
வியாபார பேச்சாளர்களைச் சொல்லவேண்டும்!
சோதிடம் ஒரு அருங்கலை!
மறுக்கவில்லை!
உண்மை உண்மைஜோதிடர்களுக்கு புரியும்.
உதாரணமாக சனி, திருநள்ளாறில்
சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதனால்
அந்த மூர்த்தியை மட்டும் விசேடமாக
பிரதிஷ்டை பண்ணி இருந்தனர் .
ஆனால் ,
திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை!
அது சனி பகவான் கோயில்,
திங்களூர்
சிவன்கோயில் இல்லை, அது சந்திரன்
கோயில்! 
வைத்தீசுவரன் கோவில்
சிவன்கோயில் இல்லை, அது செவ்வாய்
கோயில்! 
இப்படித்தான் இன்று அவை பிரபலம்
பெற்று விளங்குகின்றன.
நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக்
கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற
வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரி
யவை! அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து
இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை!
உண்மைதான்!
ஆனால் அவர்களே விதியின் வசத்தில் சிக்குண்ட போது ...
அவர்களை அவர்கள் மீட்டு கொள்ள இறைவன் தாழ் பனிந்தார்கள்..
தான் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டது போல் இங்கு நாடி வரும் அனைத்து மக்களையும் மீட்க வேண்டும் என இறைவனிடம் வரம் வாங்கியதாக புராணம் ..
அந்தந்த நவக்கிரக ஸ்தலங்களில் 
இறைவனை வழிபட்டு நமது குறைகளை கூறிய பிறகு .....
மறியாதை நிமித்தமாகவோ...
நன்றி கூறுவதற்காகவோ .... நவக்கிரங்களை வழிபடலாம்.
அதை விடுத்து,
கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது,
நமக்கு அருள்வதற்குக் காத்திருக்கும்
இறைவனை அவமதிப்பதே ஆகும் அல்லவா??
மூலமூர்த்தியை வழிபட்ட பின்
நவகிரகங்களை வழிபடுவது ஏற்புடையது.
மூலமூர்த்தியாகிய சிவபெருமானை
வழிபடாமல் செய்யும் நவக்கிரக வழிபாட்டால்
யாதொரு பலனும் இல்லை.
சிவ சிவ ....!!!!

 நன்றி இணையம்