செக்ஸ் வாழ்வும்,கிரகங்களின் பங்கும் - (1)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:57 | Best Blogger Tips



: கிரகங்கள் படுத்தும் பாடு-( 67 )
ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
இந்த லொளகீக உலகில் வன்முறைகளும்,யுத்தங்களும் இரண்டே காரணங்களினால்தான் இருக்கும்.இதில் ஒன்று 
அதிகாரம் செய்யும் ஆசை இதனுள் பொன்,பொருள் மற்றும் சொத்து சேர்த்தல் அடங்கும்.
மற்றொன்று காமத்தால் வரும் ஆசை.(பெண்ணாசை)
"வேதம் எல்லாம் காதலை மறுப்பதில்லையே-அவை வேதம் செய்யும் முனிவரையும் விடுவதில்லையே"
சொல்லி தோன்றுமோ மன்மதக்கலை அள்ளிப்பருக வேண்டும்.எனவே ஒருவருக்கு காம எண்ணத்தை தூண்டி வேடிக்கை பார்ப்பதில் மங்களகாரகன் செவ்வாய் பகவானுக்கும்,களஸ்திரகாரகன் சுக்கிரபகவானுக்கும் அதிக பங்கு உண்டு.
இந்த சுக்கிரனும்,செவ்வாய்யும் முப்பது பாகைக்குள் ஒரு ராசி கூடியிருந்தாலும் அல்லது இருவரும் 180 பாகைக்குள் சம சப்தமாக பார்த்துக்கொண்டாலோ ஒரு ஆடவரோ /பெண்டீரோ காம எண்ணம் மிகுந்து பல மலரில் தேன் சுவைக்கும் வண்டாவர்.சுபர் பார்க்க பலன் மாறுபடலாம்.
சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை ஏழாம் பாவகத்தில் இருப்பின் கிழவனுக்கு மாலையிட்டு மதனத்தால் பல பேரை கூடி தனது ஸ்தானம் குலுங்க நடந்து வருவாள்.யாருக்கோ பிள்ளையை பெற்று தொட்டில் இட்டு தாலாட்டுவாள் என புலிப்பாணி சித்தர் தனது புலிப்பாணி சோதிடத்தில் குறிப்பிட்டிருப்பார்.
இதேபோல சனியும்,செவ்வாயும் சேர்ந்திருந்து சுபர் பார்வையற்று மனதுக்காரகன் சந்திரனுடன் ராகு,கேது தொடர்போ அல்லது நீசம்,மறைவு பெற்றிருந்தாலும் காம எண்ணம் மிகுந்து காணப்படுவர்.
பொதுவாக மங்களக்காரகன் செவ்வாய்,களஸ்திரகாரகன் சுக்கிரனுடன் சனி அல்லது ராகு அல்லது சனி,ராகு சேர்க்கையோ அல்லது சமசப்தம பார்வையோ காம எண்ணத்தை உருவாக்கும்.
இதுபோன்ற பல காரணங்களை படித்திருந்தாலும் இவை எந்த அளவுக்கு உண்மையாக உள்ளன என்பதை என்னிடம் சாதக ஆய்வுக்கு வந்த சாதகத்தை பார்த்து அதை ஊர்ஜிதப்படுத்தியபோது எந்த அளவுக்கு நமது சித்தர்களின் தனது ஞானத்தால் அனைத்து ஆசையும் துறந்த அவர்களால் எவ்வாறு காம எண்ணத்தை உருவாக்கும் கிரகநிலைகளை கண்டறிய முடிந்தது என வியந்ததுண்டு.
இப்பொழுது காம மிகுதியால் தவறு செய்த ஒரு நபரின் சாதகத்தை இங்கே பகிர்கிறேன்.
மீன லக்கனம்
துலாம் ராசி
2-
ல் மாந்தி
4-
ல் குரு(வக்கிரம்)
5-
ல் கேது
10-
ல் செவ்,சனி
11-
ல் புதன்,சுக்,ராகு
12-
ல் சூரியன்
இந்த நபரின் சாதகத்தில் ஆய்வுக்குரிய விஷயங்கள்
1) மனதுக்காரகன் சந்திரன் எட்டாமிடத்தில் மறைவு.தேவையில்லாத மனகுழப்பங்கள்
2)களஸ்திரகாரகன் சுக்கிரனுடனும் ,கற்புஸ்தானம் எனப்படும் நான்காமிட அதிபதி புதனுடனும் ராகு,கேது தொடர்பு.
3)மங்களகாரகன் செவ்வாயுடன் சனி சேர்க்கை பெற்று அந்த ஸ்தான அதிபதி கற்பு ஸ்தானத்தில் வக்கிரம் பெற்று வக்கிர பார்வை.
4)நபரின் சாதகத்தின் காம கற்பனை உருவாக்கும் இடமான ஐந்தாம் இடமும் கெட்டிருக்கிறது.ஐந்தில் கேது ஐந்துக்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிட அதிபதி செவ்வாய் ஜென்ம விரோதியான சனியுடன் சேர்க்கை பெற்று தவறான எண்ணத்தை தூண்டும்.மேலும் புத்திரதோஷத்தையும் உருவாக்கியுள்ளது.புத்திரகாரகன் குருவும் வக்கிரம் பெற்று உள்ளது.எனவே புத்திரபாக்கியம் அமையாது.அப்படியே பிறந்தாலும் தனது கணவனுக்கு பிறந்த பிள்ளையாக அமையாது.
5)இவரது சாதகத்தில் திருமணத்திற்கு உகந்த இரண்டு,ஏழு மற்றும் எட்டாமிடமும்களஸ்திரகாரகன் சுக்கிரனும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே மணவாழ்வு சிறக்காது.
6) குடும்பாதியான செவ்வாய் உடன் விரோதியான சனி சேர்க்கை,ஏழாம் அதிபதியான புதன் மற்றும் களஸ்திரகாரகன் சுக்கிரன் இவர்களோடு ராகு,கேது தொடர்பு.இவருக்கு திருமணவாழ்வு சிறக்காது.இவரது சாதகமே தனது துணைவரையும் பாதிக்கவைக்கும்.
7)நான்காமிடம் எனப்படும் கற்புஸ்தானத்தில் வக்கிரம் பெற்ற குரு,நான்காமாதி சந்திரன் எட்டில் மறைவு.தாய் உடனான உறவும் ,கற்புநிலையும் பாதிக்கப்படும்.
8) தந்தைகாரகன் சூரியன் பணிரெண்டில் மறைவு மற்றும் தந்தை ஸ்தானதிபதி செவ்வாய் அதன் எதிரி சனியோட சேர்க்கை.இவரது தந்தையும் இறந்துவிட்டார்.
மேற்கண்ட நபரின் வாழ்வில் விதி எவ்வாறு விளையாடி உள்ளது.இவருக்கு சாதக கிரக பலனால் தாய்,தந்தை மற்றும் வாழ்க்கை துணைவர் மேற்கண்ட இம்மூவராலும் எவ்வித உதவியின்றி செய்து இவளை விபச்சார நிலைக்கு தள்ளியது.
மேற்கண்ட அமைப்பால் அந்த நபரின் வாழ்வானது மாறிப்போனது.
எல்லாம் விதிப்பயன் .
"ஆட்டுபவர் ஆட்டுவித்தால்
ஆடாதாரோ கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே
ஆடாதார் யார் கண்ணா ?"
---------தொடரும்
(தங்களது சாதகங்களில் உள்ள பலனை தெளிவாக ஆராய்ந்து போன் வழியாக எங்கு இருந்தாலும் இருந்த இடத்திலிருந்தே பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.மேலும் விபரத்திற்கு எனது வாட்ஸ்அப் எண் 97 151 89 647 என்ற எண்ணிற்கு மெஸேஸ் செய்யவும்)
நன்றி

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd.
சோதிட ஆய்வாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆலோசகர்.
ஓம் சக்தி ஆன்லைன் அஸ்ட்ரோ சென்டர்
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் :97 151 89 647
செல்: 740 257 89 647.
Email;
masterastroravi@gmail.com
My website address.Click hear
**********************************
Online Astro consult,conduct my cell and whatsup or Email or messenger


ராஷ் பிஹாரி போஸ் பிறந்த தினம் இன்று...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:56 | Best Blogger Tips



சிம்மசொப்பனம், வீரம், புரட்சி என்று படித்தால், உடனே பளீரிட வேண்டிய பெயர் ராஷ் பிஹாரி போஸ்.
இந்திய தேசிய ராணுவம் என்ற உடனேயே, நம் நினைவுக்கு வருவது நேதாஜிதான். ஆனால், அவர் ஐ.என்.ஏ.வை உருவாக்கவில்லை. அதன் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் ராஷ் பிகாரி போஸ்...
தேடப்படும் முக்கிய அரசியல் குற்றவாளிகள் பட்டியலை பிரிட்டிஷ் அரசு வைத்திருந்தது. அதில் உள்ள எவரைப்பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ நூறு ஏக்கர் நிலம் பரிசு தருவதாகவும் அறிவித்து இருந்தது.அந்தப் பட்டியலில் முதல்பெயர் ராஷ் பிகாரி போஸ்...
1938ல் ஹிந்து மகா சபை கிளையை ஜப்பானில் தொடங்கியவர் ராஷ் பிகாரி போஸ்..
நினைத்த நேரம் நினைத்த உருவம் எடுத்துக் கொள்ளும் மாயாவியைப் போல அவர் இருந்தார் என்று போலீஸ் குறிப்புகள் கூறுகின்றன. ஓடும் ரயிலில் போலீஸ் சுற்றி வளைத்த போது, துறவி போல மாறுவேடம் அணிந்து தப்பி இருக்கிறார். ஒரு முறை போலீஸ் உயர் அதிகாரியின் குதிரை வண்டி ஓட்டுபவனாக உருமாறிக்கொண்டு, கூடவே பயணம் செய்து தப்பிச் சென்று இருக்கிறார்.இன்னொரு முறை, காவல்துறை அதிகாரிகள் தேடிவந்த போது செத்துப்போய் ஆவியாக அலையும் கிழவனைப் போல வேடம் போட்டு காவலர்களைப் பயமுறுத்தி தப்பியிருக்கிறார்.
மற்றொரு முறை, தன்னைப் பிடிக்க அலைந்து கொண்டிருந்த காவல்துறை அதிகாரியிடம், கைரேகை ஜோசியம் பார்ப்பவனைப் போலச் சென்று நாளை நிச்சயம் ராஷ் பிகாரி போஸை கைது செய்ய முடியும் என்று நம்பிக்கை ஊட்டி அவரது வாகனத்திலேயே தப்பிச் சென்று இருக்கிறார். இப்படி, ராஷ் பிகாரி போஸின் நிஜவாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் இன்றுவரை கதை கதையாகப் பேசப்பட்டு வருகின்றன...
புத்த மதத்துறவி, வணிகர், தேநீர் கடை நடத்துபவர், கூலித் தொழிலாளி, நாடக நடிகர் எனப் பல வேடங்கள் போட்டு மூன்று வருடங்களுக்கு ஜப்பானிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார் போஸ். பத்து நாட்களுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியாது. போலீஸ் சுற்றி வளைத்துவிடும். தப்பிப் போக வேண்டும். பிரிட்டிஷ் உளவாளிகள் பின்தொடர்ந்து கொண்டே இருந்தார்கள்..
ஜனவரி 21, 1945-ல் ராஷ் பிகாரி போஸும் மரணம் அடைந்தார்.பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ராஷ் பிகாரி போஸின் சுதந்திரக்கனவு அவர் வாழ்நாளில் நிறைவேறவில்லை. ஆனால், அவர் உருவாக்கிய உத்வேகம் அயல் நாடுகளில் வாழும் இந்தியர்களை ஒன்றிணைத்தது. மலேசியா, பர்மா, சிங்கப்பூரில் இருந்த இந்தியர்களை ஒரே அணியில் திரளச் செய்தது. வலிமைமிக்க அந்த இணைப்புக்கு காரணமாக ராஷ் பிகாரி இருந்தார் என்பதே அவரது தனிச்சிறப்பு...
ராஷ் பிகாரி போஸின் வரலாறும் இளம்தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.வரலாற்று நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போய் விடும் வெறும் தகவலாக மாற்றி வைத்திருப்பதுதான் ஒருவன் தன்னை இந்தியனாக உணரமுடியாத நிலைக்கு முக்கிய காரணம்...
Thanks: Satheesh T


மனித உறவுகள் சீராக இருக்க..... A to Z !!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:52 | Best Blogger Tips


A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
B - Behaviour
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதிர்கள்; நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
E - Ego
மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.
F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
G - Genuineness
எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விடயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம் அது கொண்டவனையே அழிக்கும்.
K - Kindness 
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
N - Neutral
எப்போதும் எந்த விடயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.
O - Over Expectation
அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
P - Patience
சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாததைப் பேசுவது தான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திரமால் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். பின்பு, அதற்கு பதில் கொடுங்கள்.
W - Wound
எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
X - Xero
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
Z - Zero
இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்.
Happy Friday Morning my Dear Guru, GOD, 
brothers,sisters and Friends!! 
Have a great and wonderful day ahead!!! God Bless!! 
இறைவன் நினைவே இனிய காலை வணக்கம்.இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! 
நன்றி!! நன்றி!! நன்றி!! ஓம் சிவ சத்தி ஓம்
-
என்றும் அன்புடன் Mu DhanaLakshmi Chandaran


பெற்றோர் அனைவருக்கும் ஓர் இனிய செய்தி .....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:51 | Best Blogger Tips



தமிழக அரசு இந்து திருமண பதிவு சட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது!
அதில் காதல் திருமணம் செய்யும்
தம்பதிகள் கண்டிப்பாக அவர்களின் பெற்றோர் சம்மதம் இல்லமால் இனி செய்ய முடியாது!
ரிஜிஸ்டர் மேரேஜ் என்று நம்மை ஏமாற்றும் முறைக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது...
ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர் வந்து கையொப்பம் இட வேண்டும்!
குறைந்தபட்சம் பெண்ணின் தாய்
கையொப்பம் அவசியம்!
எந்த தாயும் தனது மகளை கிணற்றில் தள்ள சம்மதம் தெரிவிக்க மாட்டர்கள் என்பதை அறிந்து அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது...
30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல் அவசியம்!
நாடக காதல் பெரும்பாலும் ரிஜிஸ்டர் மேரேஜ் என்னும் திருமண பதிவே நமது
சமுதாயத்திற்கு எதிரியாய் இருந்தது!.
அதற்கு கடிவாளம் இப்போது வேறு வடிவில் இருக்கிது!.
இனிமேல் நம்மை ஏமாற்றும் நாடக காதல் போராளிகளை நசுக்க இந்த ஆயுதத்தை பயன் படுத்தவும்...
நாடக காதலால் எத்தனை பெற்றோர் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்வது யாருக்கு தெரியும்??
ஒருவன் கொலை செய்ய பட்டால் ஆவேசப்படும் ஊடகங்கள், இது போன்ற தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்களுக்கு ஒரு இரங்கல் செய்தியாவது சொல்லியிருக்குமா??
திருத்தப்பட்ட இச்சட்டம் இந்த மாதம் முதல் தேதியிருந்து அமுலுக்கு வந்துள்ளது!
பெற்றோர்,பிள்ளைகளை இணைத்த அரசுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

இதுதான் காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் உள்ள வித்தியாசம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:45 | Best Blogger Tips


காங்கிரஸ் - 
பாகிஸ்தானில் போய் பேசினார்கள். " நீங்க எங்களுக்கு உதவுங்கள். அப்பதான் மோடியை தோற்கடிக்கலாம்."
மோடி - 
"
மிஸ்டர் நவாஸ் ஷெரீப்! நான் இப்பொழுது லாகூரில் வந்து இறங்கப் போகிறேன். உடனே வந்து என்னைப் பார்க்கவும்."
நவாஸ் ஷெரீப் - 
"
இதோ கிளம்பிட்டேன்."
நவாஸ் ஷெரீப் கார்கள் லாகூர் விமான நிலையம் விரைகின்றன......நரேந்திர மோடி கொடுத்த அதிர்ச்சியால் " RAW " உளவு அமைப்பே அதிர்ந்து போய் உள்ளது.
இதுவரை எந்த வித பாதுகாப்பும், முன்னேற்பாடு்களும் இன்றி பாகிஸ்தான் சென்ற ஒரே தலைவர் மோடிஜி தான்.
வீரம் என்பது பிறப்பில் இருந்து வருவது... 
அதெல்லாம் சந்தர்ப்பத்திற்க்காக வாழ்பவர்களிடம் வர வைக்க முடியவே முடியாது!
இரண்டு மணி நேரத்தில் பாகிஸ்தான் ஊடகங்களின் விமரிசனங்களை புரட்டிப் போட்ட தலைவர் மோடி...!
காலையில் ஆஃப்கானிஸ்தானில் பார்லிமெண்ட் கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய போது பாகிஸ்தானிற்கு எதிராக கொம்பு சீவும் நடவடிக்கை என்று கூவிய ஊடக வாய்கள்...
மதியம் லாகூரில் நவாஸுடன் பிறந்த நாள் விருந்து என்றவுடன் மோடியை ஒரு ராஜதந்திர நிபுணர் என்று புகழாரம்...!.........
குண்டு துளைக்காத கூண்டிற்குள் நின்றுகொண்டு வீரவசனத்தையும் மென்று முழுங்கி் பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ்காரனுக்கு, அப்படியெல்லாம் இல்லாமல் தைரியமாய் என் நாட்டிற்குள் வந்து எவனடா என்னை என்ன செய்து விடுவான் என தைரியமாய் திறந்த மேடையில் நின்று தேசியக் கொடியை ஏற்றும் நரேந்திர மோடியைக் கண்டால் பொறாமை வருவதும்...
அமெரிக்கா சென்று சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டு விட்டு, கொடுத்த சாப்பாட்டை தின்றுவிட்டு அமெரிக்க அதிபரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி நாட்டை கேவலப் படுத்திய காங்கிரஸ்காரனுக்கு நீங்க சொல்ற இடத்திலெல்லாம் கையெழுத்து போட முடியாது, நாங்க சொல்ற மாதிரி மாத்துங்க என ஆன்மையுடன் சொல்லும் நரேந்திர மோதியைக் கண்டால் பொறாமை ஊறுவதும்...
10 ஆண்டுகளாக பாக்கிஸ்தானை எதிர்த்து அறிக்கை விடுவது கூட சிறுபான்மையின முஸ்லிம்களின் ஓட்டு வங்கியை பாதிக்குமோ என நம் நாட்டின் ராணுவ வீரர்களை சாகடிக்க விட்டு வேடிக்கை பார்த்த காங்கிரஸுக்கு, ஒரு குண்டு நம் எல்லையில் வீழ்ந்தால் 30 குண்டுகளை பாக்கிஸ்தானை நோக்க உத்தரவிடும் நரேந்திரமோதியைக் கண்டால் பொறாமை வருவதும்..
ராஜதந்திரம் என்றால் கட்சித் தலைவியின் முந்தனையை பிடித்துக்கொண்டு அந்தம்மாள் சொலும் உளரல்களைக்கேட்டு நடந்து கொள்வதுதான் என இருக்கும் காங்கிரஸ்காரனுக்கு, உண்மையான ராஜரீக நடவடிக்கைகள் நாட்டில் நடப்பதைக் கண்டால் பொறாமை வருவதும் இயற்கையே..
உன் நாட்டிற்குள் நட்புடன் வருகிறேன் எனச் சொல்லி விட்டு எதிரி நாட்டுக்குள் காலை வைக்கும் தைரியம் வேண்டும்.
அதையெல்லாம் மோடியை அகற்ற உதவி செய்யுங்கள் எனக்கேட்கும் மூளையற்ற, பதவி வெறி பிடித்த காங்கிரஸ்காரன் மூளைக்கு எட்டாத விஷயங்கள்..
எனவே அவர்களின் கட்சித்தலைவி சொல்வதைக் கேட்டுக் கொண்டு மீடியாவில் உளரிக் கொட்டுவதே அவர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டிய முக்கியமான பணி.
அதைச் செய்யுங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகளே....!
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப்பின் தாயாரை சந்தித்த மோடி அவர் காலைத் தொட்டு வணங்கினார்.இதுவே தாய்மையை வணங்கும் நம் பாரதப் பண்பாடு.

நன்றி இணையம் 

கோவை பரளிக்காடு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:41 | Best Blogger Tips

கோவை பரளிக்காடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது காரமடை வனத்துறை. சனி, ஞாயிறுகளில் அனுமதி. 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எந்த நாளிலும் அனுமதிப்பார்கள். பரிசல் பயணம், மதிய உணவு, ஆற்று குளியலுக்கு பெரியவர்களுக்கு ரூ.300, 15 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம். கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணத்தில் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.
வனத்துறையினர், அப்பகுதி மலைவாழ்மக்கள் வரவேற்பார்கள். சுக்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள். பரிசல் கரையில் இயற்கை எழிலோடு பெரிய மரங்களும், நிழலும் ஆசுவாசப்படுத்தும். அங்கிருந்தவாறு பரிசல் நடக்கும் பில்லூர் ஆற்றின் அழகை, இருபுறமும் மலைகள் பசுஞ்சுவராய் காட்சியளிப்பதை ரசிக்கலாம். 30&க்கும் அதிகமான பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் பயணிக்கலாம். மலையடிவாரங்களில் தற்காலிகமாக இறங்கி ஓய்வெடுக்கலாம். வனப்பகுதியில் காலாற நடக்கலாம். அங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளை பார்வையிடலாம். சலிக்க, சலிக்க மேற்கொண்ட பரிசல் பயணம் முடிந்து பரிசல் கரையில் இறங்கினால் மலைவாழ் மக்கள் சமைத்த உணவு தயாராக இருக்கும்.
அதில் களி உருண்டை, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் மினரல் வாட்டர் வழங்குவார்கள். உணவின் ருசி நம்மை கிறங்கடிக்கும். பரிசல் கரையில் உள்ள மர கயிறு ஊஞ்சலில் விளையாடி மகிழலாம்.அங்கிருந்து மாலை 3 மணியளவில் வனத்துறையினர் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து செல்வார்கள். கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றின் நீர் குளிர்ச்சியானது. மூழ்கி எழுந்தால் மொத்த களைப்பும் பறந்துபோய் புத்துணர்ச்சி வந்துவிடும்.
ஆற்றில் 5 மணி வரை ஆட்டம் போடலாம். பின்னர் வனத்துறையினர் வழியனுப்பி வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால் தைரியமாக செல்லலாம். பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு குதூகலிக்கலாம். வன அதிகாரியை 90470 51011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு 3 நாள் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

 Thanks to 
நம்ம கோயம்புத்தூர்