50. நீ நீயாக இரு...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:17 | Best Blogger Tips

🍃🖋🍂
50. நீ நீயாக இரு...
°=°=°=°=°=°=°=°=°=°=
ராதேக்ருஷ்ணா...

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் மனம் கொண்டு
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவரின் ஆசையில்
நீ சுகப்படாதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவர் கண் கொண்டு
உலகைப் பார்க்காதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவர் கனவை
நீ காணாதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவர் ஆசையை
உனதாக்கிக்கொள்ளாதே...
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவர் வாழ்வை
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவர் சிந்தனை கொண்டு
நீ சிந்திக்காதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவர் வழியை
உனதாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவர் நிழலை
உன் நிழலாக ஆக்காதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு !

அடுத்தவர் பாணியை
உன் பாணியாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாக இரு . . .

உனக்கென்று தனித்தன்மை உண்டு . . .
அதை இழந்துவிடாதே . . .
நீ . . .நீயாக இரு !

அடுத்தவராய் நீ மாறினால்,
உன்னால் ஆனந்தப்படமுடியாது . . .
நீ . . .நீயாக இரு !

நீ நீயாக இருப்பதில்
நேர்த்தியைக் கொண்டு வா . . .
நீ . . .நீயாக இரு !

அப்பொழுதுதான் நீ
உலகில் அபூர்வமாகத் தெரிவாய் . . .
நீ . . .நீயாக இரு !

சூரியன் சந்திரனாவதில்லை . . .
சந்திரன் நட்சத்திரமாவதில்லை . . .
நீ . . .நீயாக இரு !

தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
எனவே நீ . . .நீயாக இரு !

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
நீ . . .நீயாக இரு !

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
நீ . . .நீயாக இரு !

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
நீ . . .நீயாக இரு !

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
நீ . . .நீயாக இரு !

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
நீ . . .நீயாக இரு !

நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

எனவே நீ . . .நீயாக இரு !

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாபம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !

உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
நீ . . .நீயாக இரு !
உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
நீ . . .நீயாக இரு !
நீ . . .நீயாகவே இரு !
நீ . . .நீயாக மட்டுமே இரு
°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=

Thanks to ✍🍃ஆனந்தவேதம்🖋  


🍂ரமேஷ் ராமலிங்கம்
whatsapp-9597114924🍃🖋🍂


பூண்நூலுக்கும், உச்சிக் குடுமிக்கும் விஞ்ஞானக் காரணம் உண்டா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:07 | Best Blogger Tips

பூண்நூலுக்கும், உச்சிக் குடுமிக்கும் விஞ்ஞானக் காரணம் உண்டா
ஆம் என்கிறார் திருமூலர்:
---------------------------------------------------------------------------------
காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் எந்த நியதியையும் வகுப்பதில்லை. அவர்கள் வகுத்த நியதியை சரிவர புரிந்து கொண்டு அதன்படி நடப்போமேயானால் வாழ்வில் நிகழப் போகும் அனைத்தும் சுகமாகவே அமையும்:
நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம், நுண்சிகை ஞானமாம்
பால் ஒன்றும் அந்தணர் பார்பார் பரம் உயிர்
ஓரொன்று இரண்டினில் ஓங்காரம் ஓதலே” (தி.ம: 1665)
பொருள்:
-------------
பூண்நூல், சிகை ஆகியவற்றை அணிந்திருந்தும் அதன் உண்மை இயல்பை மூடர்கள் அறிவதில்லை. பூணூல் என்பது வேதாந்தத்தின் தத்துவத்தை உணர்த்துவது. அதாவது இடகலை பிங்கலை சுழுமுனை மூன்றும் ஒரு சேர செயல்படுத்தி சகசரதளத்தை அடைந்து ஞானத்தை பெற்றவர் என்று பொருள். அதனால்தான் பூணூலை மூன்று பிரியாக போடுகின்றனர். உச்சிக் குடுமியானது வேதத்தின்பால தனக்கு உள்ள ஞானத்தை புலப்படுத்துவது. அதாவது வேதங்களின் வழி செல்வதை மறவாமல் இறைவன் பால் என்றென்றும் பற்றுடன் இருப்பது.சிவபெருமானிடன் ஒன்றி இருப்பவர்களை சீவனும் சிவனும் ஒன்றென்பார்கள். அப்படி ஒன்றாகாது நின்றவர் ஓகாரம் உச்சரித்தால் ஒன்றாவர்.
அறிவியல்:
-----------------
மனிதன் உயிர்வாழ, செயல்பட உடலில் உள்ள முன்று உறுப்புகள் மிகவும் அவசியமானது அவை:
1. Spinal cord -
சுழுமுனை
2. Breath -
பிங்கலை
3. Force -
இடைகலை
இவை மூன்றும் ஒன்றினைந்தால்தால் உடலில் உள்ள அனைத்து உருப்புகளுக்கும் மூளையின் வாயிலாக உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். அது மட்டுமல்லால். மூளைக்கு பிராணனனையும், இரத்த ஓட்டத்தையும் அளித்து உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.
----------------------------------------------------------------------------------
இன்றைய அலோப்பதி மருத்துவர்களின் சின்னமும் இதுதான். ஒரே செய்யுளில் ஆன்மீகம் மற்றும் அறிவியல் கற்றுக் கொடுக்கும் வித்தை திருமூலருக்கு கைவந்த கலை.


அரிய பெண்களும் அரிதாரப் பெண்களும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:03 | Best Blogger Tips

இந்து சமயம் பெற்ற அரிய பெண்மணிகள் வாழ்ந்த நாடு இது.இன்று அரசியல் அரிதாரம் பூசிக் கொண்ட பெண்மணிகளைப் பார்த்து கண்ணீர் விடுகிறது.சிவ புராணத்தில் சாவித்திரி என்ற பெண்மணியின் கணவன் சத்தியவான் உயிரை அவள் கண்முன் எமன் பிடித்துச் செல்கின்றான்.
உத்தமியான அவள் எமனை எதிர்த்து வேதங்களின் ஆதரத்துடன் வாதாடி கணவன் உயிரை மீட்கின்றாள்.அது போல மன்னனால் அநியாயமாகக் கொள்ளப் பட்ட கணவனுக்காக கண்ணகி மன்னனை எதிர்த்து வாதம் செய்து நீதி கேட்கின்றாள்.
நளாயினி என்ற பெண்மணி சாபமிட்ட முனிவனுக்கு எதிராக போராடி சூரியனையே எதிர்த்து நின்று வெற்றி பெருகின்றாள்.அதுபோன்ற பட்டியல் மிகவும் நீளமானது.எமனை எதிர்த்து போராட, சூரியனையே தடுமாற வைக்க ,மிகப் பெரிய மன்னனை நிலைகுலைந்து உயிரை விட வைக்க உத்தமப் பெண்களால் அன்று முடிந்தது.
உலக வரலாற்றில் இந்து மதம் அல்லாமல் வேறு எந்த மத்ததிலும் பார்க்க முடியாது.அப்படிப் பட்ட மண்ணில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அடிமைத் தனத்தால் பெண் கல்வி மறைந்து இன்று பெண் என்றால் அஞ்சும் நிலை அரசியலில் ஏற்பட்டுள்ளது.
உ.பியில் ஒரு பெண் மாயாவதி ஆணவ நிலையில் அவர் சிலையை அவரே வைத்துக் கொள்கிறார்.மேற்கு வ்ங்கத்தில் மம்தா பானர்ஜி என்ற பெண்ணின் நிலை சாதா ஊழலைத் தாண்டி சாரதா ஊழலில் நிற்கிறது.
கர்ணன் முன்பு குந்தி தேவி அம்மா என்று தெரிந்தும் அம்மா என்று சொல்ல முடியவில்லை.ஆனால் பிள்ளை ஏதும் இல்லாத ஒரு பெண்மணியை அம்மா என்று சொல்லாவிட்டால் ஆபத்து.நடராஜனின் தாரமான சசிகலாவும்,பொருளாதாரமும் இவருக்கு முக்கியம்.
இடதுசாரி தலிபான்கள் தோழர்களுக்காக உள்ள கட்சி என்றால் இது தோழிக்காக உள்ள கட்சி.ஆக இந்த மூன்று பிரம்மச்சாரியப் பெண்கள் இந்தியாவிற்கு மட்டும் அல்ல உலகத்திற்கு ஆணவத்தின் அடையாளமாகத்தான் தென்படுகிறார்கள்.
இந்த மண்ணில் அவசியப்படும் போது மட்டும் அறிவுடன் கூடிய வீரம் பழைய பொண்களிடம் இருந்தது.அதனால்தான் எமனைக் கூட் எதிர்த்து நிற்க முடிந்தது.ஆனால் நேர்மை இல்லாத காரணத்தல் இந்தப் பெண்களால் நீதிமன்றத்தில் கூட போய் நேர்மையுடன் நிர்க முடிய வில்லை.

 நன்றி இணையம்

இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:55 | Best Blogger Tips


1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள்.
2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.
3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.
4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.
5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.
6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
7. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி..
8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி.
9. ஹாட் மெய்ல்"ஐ (HOT MAIL) உருவாக்கியவரும் ஸ்தாபித்தவருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர்.
10. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.
11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.
14. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987"ல் அறிவித்தது.
15. நுண் கணிதம் (CALCULUS) உருவாக்கியது இந்தியா.
16. திரிகோணமிதி (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா.
17. கூகுள்"ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.
18. ஹெச்.பி"யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாலர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்.
19. இன்று உலகில் உள்ள கணிணியில் பயன்படுத்தக்கூடிய பென்டியம் சிப் (PENTIUM CHIP) உருவாக்கிய வினோத் தாம் ஒரு இந்தியர்.
20. பை (PI) 3.14 "க்கான கணக்கீட்டை உருவாக்கிய புத்யானா (BHUTHYANA) ஒரு இந்தியர். ஐரோப்பிய கணக்கியல் உருபவாக்கத்திற்கு முன்பு 6"ஆம் நூற்றாண்டுகளிலேயே இதற்கான விளக்கத்தை உருவாக்கியவர்.
21. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 5600 செய்தித்தாள்களும் 3500 வார மற்றும் மாத இதழ்களும் 1 கொடியே 20 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.
22. 2600 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உடலுருப்பு, எலும்பு முறிவு, சிறிநீரக கற்கள் மற்றும் தலையின் மண்டை ஒட்டை பிளந்து மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதா (SUSRUDHA) ஒரு இந்தியர்.
23. உலகிலேயே விலை உயர்ந்த 700 கோடி (70 MILLION POUNDS) ரூபாய் மதிப்புள்ள வீட்டை இங்கிலாந்தில் வைத்திருக்கும் இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ஒரு இந்தியர்.
24. உலகின் 4 ஆவது பலமான ராணுவத்தை கொண்டது இந்தியா.
25. மிக அதிகமான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தின் வரிசையில் 2 ஆம் இடம் இந்தியாவுக்கு.
26. இன்று உலகமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் அஞ்சலை (E Mail) உருவாக்கியபவர் சிவா ஐயாத்துரை என்ற இந்தியர்
நன்றி இணையம்