நன்னாரி பால் மற்றும் நன்னாரி கீர் (நாட்டு வைத்தியம்)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:48 | Best Blogger Tips
நன்னாரி பால் மற்றும் நன்னாரி கீர்
(நாட்டு வைத்தியம்)

நன்னாரி கீர்

பால் - 1 லிட்டர், 
ஜவ்வரிசி - கால் கப், 
சர்க்கரை - சுவைக்கேற்ப, 
நன்னாரி வேர் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) - 50 கிராம், 
தண்ணீர் - 3 கப்

நன்னாரி வேரை நன்கு கழுவி சுத்தம் செய்து 3 கப் தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் இதை அப்படியே கொதிக்க விடவும். இது சுண்டி ஒரு கப் ஆகும்வரை விட்டு இத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து தேன் மாதிரி வரும்போது இறக்கி வடித்து வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.

பாலை சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி அத்துடன் ஜவ்வரிசியையும் சேர்த்து நல்ல கீர் பதம் (பாயசம் மாதிரி) வந்ததும் இறக்கி இந்த நன்னாரி ஜூஸை நல்ல வெள்ளைத் துணியில் வடித்து இந்த கீருடன் சேர்த்து குளிர வைத்துப் பரிமாறுங்கள். நன்னாரி வேர் வாசனையோடும், மிகவும் சுவையாகவும் இருக்கும்.

குறிப்பு: இது ஒரு புதுவிதமான நன்னாரி கீர். கோடைக்காலத்திற்கு ஏற்றது. உடம்பையும், மனதையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். 

நன்னாரி பால்:

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் அளவு எடுத்து மையா அரைச்சு, 200 மில்லி பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா... 
மூலச்சூடு, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் எல்லாமே இருந்த இடம் தெரியாம ஓடிப்போகும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... நரைச்ச முடிகூட கருகருனு மாறிடும்.

மருத்துவ குணங்கள்:

பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.

குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.
 
 கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.

நன்னாரி கீர்

பால் - 1 லிட்டர்,
ஜவ்வரிசி - கால் கப்,
சர்க்கரை - சுவைக்கேற்ப,
நன்னாரி வேர் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) - 50 கிராம்,
தண்ணீர் - 3 கப்

நன்னாரி வேரை நன்கு கழுவி சுத்தம் செய்து 3 கப் தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் இதை அப்படியே கொதிக்க விடவும். இது சுண்டி ஒரு கப் ஆகும்வரை விட்டு இத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து தேன் மாதிரி வரும்போது இறக்கி வடித்து வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.

பாலை சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி அத்துடன் ஜவ்வரிசியையும் சேர்த்து நல்ல கீர் பதம் (பாயசம் மாதிரி) வந்ததும் இறக்கி இந்த நன்னாரி ஜூஸை நல்ல வெள்ளைத் துணியில் வடித்து இந்த கீருடன் சேர்த்து குளிர வைத்துப் பரிமாறுங்கள். நன்னாரி வேர் வாசனையோடும், மிகவும் சுவையாகவும் இருக்கும்.

குறிப்பு: இது ஒரு புதுவிதமான நன்னாரி கீர். கோடைக்காலத்திற்கு ஏற்றது. உடம்பையும், மனதையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.

நன்னாரி பால்:

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் அளவு எடுத்து மையா அரைச்சு, 200 மில்லி பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா...
மூலச்சூடு, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் எல்லாமே இருந்த இடம் தெரியாம ஓடிப்போகும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... நரைச்ச முடிகூட கருகருனு மாறிடும்.

மருத்துவ குணங்கள்:

பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.

குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு
 

இஞ்சி லேகியம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:42 | Best Blogger Tips

தேவையான பொருள்கள்:

இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
மிளகு, திப்பிலி, சீரகம், தனியா, ஓமம், ஒவ்வொன்றிலும் - 10 கிராம்
நெய் - தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடித்து வைக்கவும். சிறிது நேரம் கழித்து தெளிந்து இருக்கும். அந்த தெளிந்ததை மட்டும் எடுத்து, வெல்லத்தை மண் போக வடிகட்டி சுத்தம் செய்து இஞ்சி சாறை கலந்து கெட்டி பாகு வரும் வரை காய்ச்சவும். மற்ற பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து பாகில் போட்டு நெய் ஊற்றி கிளறவும். தீபாவளி அன்று மட்டும் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வயிறு பொருமலாக இருக்கும்போதும் சாப்பிடலாம்.

[2]

இஞ்சி சாறு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
பாதாம், கசகசா, ஓமம் - தலா - 20 கிராம்
நெய் - தேவையானது

செய்முறை:

வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கல், மண் போக சுத்தம் வடித்து, கசகசா, ஓமத்தை வறுத்து பாதாம் பருப்புடன் இஞ்சி சாறை சேர்த்து அரைக்கவும். எல்லாவற்றையும் கலந்து அடுப்பில் வைத்து கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறவும். பதம் வந்தவுடன் இறக்கவும்.

தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகை இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து ..

ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும்.

இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம்,

எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல்..

விண்டுவி டாமல் முருகன் பதமேவு
விஞ்சையர் போல அனைவரும்

இஞ்சியினால் நலம் பல பெற்லாம்..

பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததுதான். எனினும், சளி, இருமல், அஜீரணம் ஆகியவற்றை இஞ்சி சரி செய்யும் என்பது பொதுவான மருத்துவ பயன்கள்.

இஞ்சியின் செயல்பாடு பற்றி பல்கலைக்கழக உணவியல் பிரிவு விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி இஞ்சியின் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரூபிக்கப்பட்டவை. உடல் எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்றும் ஆற்றலும் இஞ்சிக்கு உள்ளதை சமீபத்தில் எலிகளிடம் நடத்திய சோதனையில் அறிவித்தனர்.

உணவில் சேர்த்து கொதிக்க வைக்கப்படும் இஞ்சியால் உடல் வலிகளைக் குறைக்க முடியும் என தெரிய வந்துள்ளது.

இஞ்சியை பச்சையாக உணவில் சேர்த்து சிலருக்கு 11 நாட்கள் அளித்தும். இன்னொரு குழுவினருக்கு கொதிக்க வைத்த இஞ்சியை அதே 11 நாட்கள் கொடுத்தும். அதன் பிறகு நடத்திய சோதனையில் சூடுபடுத்தப்பட்ட இஞ்சியை உணவில் சேர்த்தவர்களது உடல் வலிகளுக்கு நிவாரணம் கிடைத்தது தெரிய வந்ததாம்..

குறிப்பாக கடினமான வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்படும் தசை வலிகளை இஞ்சி குறைப்பது ஆய்வில் உறுதியானது. தினமும் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வோருக்கு உடல் வலிகளை 25 சதவீதம் குறைக்க முடியும் என்கிறது ஆய்வு..

இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது.

இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.

இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.

முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.

200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.

இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு