பிள்ளையார் நான்மி (விநாயகர் சதுர்த்தி )

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:24 | Best Blogger Tips


பிள்ளையார் நான்மி (விநாயகர் சதுர்த்தி ) கொண்டாடும் தமிழர்கள் கவனத்திற்கு! இயற்கையை பாதுகாப்பது உங்கள் கையில் !

விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் தமிழர்கள் பிள்ளையாரை முதன்மை படுத்தி வழிபாடு செய்து வருகிறார்கள். பிள்ளையார் வழிபாடு பல ஆயிரம் காலங்களாக தமிழகத்தில் இருந்து வருகிறது. திருமூலர் 'ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை' என்று பாடி பிள்ளையாரை சிறப்பிக்கிறார்.

பிற்கால ஔவையாரும், ' தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சேர்வார் தமக்கு' என்று பாடியுள்ளார். பல தமிழ் மெய்யியல் அறிஞர்கள் பிள்ளையாருக்கு காப்பு எழுதி வைத்து பாடி உள்ளனர். பிள்ளையாரை குறித்த தத்துவ விளக்கங்கள் பக்தி இலக்கியங்களில் நிரம்பி இருந்தாலும், அதனை சுற்றி பல புராண இட்டுக் கதைகளும் இருந்தே வருகிறது. இந்தியாவில் முதல் பிள்ளையார் கோவிலும் தமிழகத்தில் தான் தோன்றியது. தமிழ் ஆசிவக கடவுளாக பிள்ளையார் சித்தரிக்கப்பட்டாலும், வடநாட்டில் பிள்ளையாரை சுற்றி பல கதைகள் பின்னப்பட்டு பிள்ளையாருக்கு பெரு விழா எடுத்து வருகிறார்கள். இது ஒரு மதத்தின் அடையாளமாக இப்போது மாறி விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பிள்ளையாருக்கு இவ்வளவு பெரிய பேரணியோ, விழாவோ எடுக்கப்பட்டது இல்லை. ஆரிய இந்துத்வா நெறியை தீவிரமாக பரப்பும் நபர்கள் திட்டமிட்டே விநாயகர் சதுர்த்தி என்னும் நிகழ்வை தமிழகத்தில் பெரு விமர்சையாக கொண்டாட தீர்மானித்தனர். வீடுகளில் எளிமையாக கொண்டாடப்பட்டு வந்த இந்த நிகழ்வை , வீதிகளில் பெரும் சத்தத்துடன் கொண்டாடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். வீட்டுக் கிணற்றில் பிள்ளையார் சிலையை மூழ்கடித்த தமிழர்கள், இப்போது கடலில், ஏரியில் கொண்டு போய் கரைக்கும் நிலைக்கும் ஆளாக்கப்பட்டனர். பிற்காலத்தில், பெரும் பெரும் பிரமாண்ட பிள்ளையார்கள் தோற்றுவிக்கப்பட்டது. பல வர்ணங்கள் , வடிவமைப்புகள் பிள்ளையாருக்கு கொடுக்கப்பட்டது. இது ஒரு வியாபாரமாக உருவாகி, இன்று பல ஆயிரம் , லட்சம் பிரமாண்ட பிள்ளையார்கள் இந்த தினத்தன்று உருவாக்கப்படுகிறது. இந்த சிலைகள் அனைத்தும் கொண்டு போய் கரைக்கும் இடமாக கடல் விளங்குகிறது.

ஏற்கனவே , பல ஆயிரம் டன்கள் எடை கொண்ட குப்பைகள் கடலில் கலந்து கடல் மாசடைந்து உள்ளது. ரசாயனம் கலப்பதாலும், குப்பைகள் சேர்வதாலும் , கடல் வாழ் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இந்த நிலையில் பிள்ளையாருக்கு பல லட்சம் சிலைகள் உருவாக்கி அவற்றை கடலில் கரைப்பதால் கடல் வளங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த சிலைகளில் ரசாயன பூச்சு இல்லை என்று அரசும் உறுதி செய்வதில்லை . உறுதி செய்ய அரசுக்கு போதிய வசதியும் இல்லை. அதனால் பிள்ளையார் சிலை வியாபரம் செய்யும் வியாபாரிகள் பல வண்ணங்களில் ரசாயனத்தை பிள்ளையாருக்கு பூசுகின்றனர். பாதரசத்தை பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்னும் ரசாயன கலவையை கொண்டு பல பிரமாண்டசிலைகள் வேறு உருவாக்கப்படுகிறது . அதன் மேல் பல வர்ணங்கள். அதில் பல்வேறு அலங்கார உலோக இணைப்புகள் வேறு இணைக்கின்றனர்.

இவை அனைத்தும் கடலில் கரைப்பதால் , கடல் தான் மாசுபடுகிறது . இயற்கை வளங்கள் தன்னுடைய இயல் தன்மையை இழக்கிறது. இந்த சிலைகள் முற்றிலும் கடலில் கரைய சில மாதங்கள், ஆண்டுகள் கூட தேவைப்படுகிறது. நமக்கு எப்படி வீடு என்பது நாம் வாழும் இருப்பிடமாக இருக்கிறதோ , அப்படித் தான் கடல்வாழ் உயிர்களுக்கு கடல் தான் வீடு இருப்பிடம் எல்லாமே. நம்வீட்டில் குப்பையை கொட்டினால் நமக்கு கோபம் வருகிறது அல்லவா? அப்படி இருக்கும் போது கடல்வாழ் உயிர்களுக்கு அதன் வீடாகிய கடலில் குப்பையை கொட்டினால் கோபம் வராதா ?

இதை நாம் பொறுப்புடன் சிந்திக்க வேண்டும். பிள்ளையார் நான்மியை யாரும் கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை அக்காலத்தில் நம் வீட்டில் எளிமையாக கொண்டாடியதை போல் கொண்டாடினால் எந்த சிக்கலும் இல்லை . சிறிய அளவிலான களிமண் பிள்ளையாரை மட்டுமே உருவாக்கி அதை நீரில் கரைத்தாலும் எந்த பாதிப்பும் இல்லை . ஆனால் பிரமாண்ட பிள்ளையார் சிலையை உருவாக்கி அதை கடலில் குப்பையாக சென்று சேர்ப்பது இயற்கைக்கு விரோதமானது. கரையாத தன்மையுடை எந்த அலங்கார இணைப்புகள், உலோகங்கள், கலவைகள் பிள்ளையாருக்கு நாம் சூட்டக் கூடாது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்னும் ரசாயன கலவையை வைத்து பிள்ளையாரை உருவாக்கக் கூடாது. இவற்றையெல்லாம் நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். பல்லின மக்களை முகம் சுளிக்க வைக்கும் பெரும் சத்தம், பெரும் பேரணி, நெரிசல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இத்தைகைய பண்பாடு தமிழர்கள் முன்பு கடைபிடிக்கவும் இல்லை. தற்காலத்தில் வந்த பழக்கம் தான் இந்த பிரமாண்ட பிள்ளையார் பேரணி , திருவிழா, கடலில் கரைப்பது போன்றதெல்லாம்.

ஆகவே தமிழர்களே, பிள்ளையாரை முன் காலத்தில் வழிபட்டது போல் எளிமையாக இல்லத்தில் சிறு களிமண் பிள்ளையார் சிலை வைத்து வழிபடுங்கள் . அருகாமையில் உள்ள கிணறு , குளங்களில் அதை கரைத்து விடுங்கள். தற்காலத்தில் உள்ள பிரமாண்ட பிள்ளையார் சிலை , ஊர்வலம், கடலில் கரைப்பு போன்ற ஆடம்பரத்தை தவிர்த்து இயற்கைக்கு உதவுங்கள்.

பிள்ளையார் நான்மி கொண்டாடும் தமிழர்களுக்கு நம் வாழ்த்துகள்!

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:23 | Best Blogger Tips
அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.

ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.

சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும்.

இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள்.அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின்
காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர். 

அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள். 
மருந்து - 1
நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.

மருந்து - 2
ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.

உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,

மருந்து - 3
சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்
அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.

ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.

சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும்.

இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள்.அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின்
காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர்.

அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.
 
மருந்து - 1

நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.

மருந்து - 2

ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.

உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,

மருந்து - 3

சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்