பேஸ்புக்கில் - Photo Tag

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:25 | Best Blogger Tips


பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும். Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய்என்னை Tag பண்ணாதேஎன்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்.

இவற்றிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, Photo Tag OFF செய்துவிடுவதுதான். பேஸ்புக்கில் Photo Tag செட்டிங்கை மாற்றுவதன்மூலம் நீங்கள் அனுமதியளித்த பின்னரே ஒருவர் உங்களை Tag பண்ணும்படி செய்யலாம்.

இதை எப்படி செய்வது

உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள். அதில் Privacy Settings செல்லுங்கள்

அங்கு Timeline and Tagging என்பதற்கு அருகில் உள்ள Edit Setting என்பதை கிளிக் பண்ணுங்கள்

கிளிக் பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ ஒன்று வரும். அதில் Review posts friends tag you in before they appear on your timeline என்பதை On செய்யுங்கள்.

On
பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ தோன்றும். அதில் Review Control Enable செய்துவிட்டால் சரி,

இப்போது செட்டிங்ஸ் முழுமையடைந்துள்ளது. இதன் பின்னர் உங்களை யாராவது Tag பண்ணினால் அவை உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும். நீங்கள் அனுமதி அளித்த பின்னரே உங்களை Tag செய்யும். அனுமதிக்காக காத்திருக்கும் Tags உங்கள் ப்ரோபைலில் Activity Log என்ற பகுதியில் காணலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிரயோசனமாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Thanks from FB தமிழ் -கருத்துக்களம்-




ரத்த ஓட்டம் தடைபட்டால்...?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:42 | Best Blogger Tips
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

என் வயது 64. ஆறுமாதம் முன்பு பைபாஸ் சர்ஜரி செய்தார்கள். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கிறேன். கடந்த ஒரு மாதமாக இடது வலது உள்ளங்கால் மற்றும் குதிகால் பகுதிகளில் கடுமையான எரிச்சல், வலி ஏற்படுகிறது. கால்களில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதை ஆயுர்வேத சிசிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா?

ஜி.ஆர்.வெற்றிவேல், அவினாசி.

கால் பகுதிகளுக்குத் தேவையான பிராண வாயுவை ஏந்திச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர் தடித்துப் போனாலோ, உட்புற விட்டம் சுருங்கினாலோ, ரத்தத்தின் வேக அழுத்தம் குறைந்து போகும் தறுவாயில், கடுமையான வலி, எரிச்சல், ரத்த ஓட்டத் தடை போன்ற உபாதைகள் தோன்றக் கூடும். புகை, மதுபானம், அதிகம் நேரம் கால்களைத் தொங்க விட்டு வேலை செய்தல், அதிகம் நடந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம், சைக்கிள் சவாரி, நீச்சல், வண்டி ஓட்டுதல் போன்ற செயல்களால், கால் பகுதிகளிலுள்ள ரத்தக் குழாய்கள் வலுவிழக்கக் கூடும். சர்க்கரை உபாதையில், ரத்த நாளங்கள், தசைநார்கள் போன்றவை விரைவில் செயலிழக்கும் ஆபத்திருப்பதால், அவற்றை வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தமும், சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய அவசியமுமிருக்கிறது.

இரவில் நன்றாக உறங்கி காலையில் எழுந்ததும், ரத்தக் குழாய்களுக்குத் தேவையான அளவு ஓய்வு கிட்டியிருப்பதால், ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய பிண்டதைலம் மற்றும் நிசோசீராதி தைலத்தை வெதுவெதுப்பாகச் சூடு செய்து பஞ்சில் முக்கி எடுத்து எரிச்சல் வலி உள்ள பகுதிகளில் சுற்றி அதன் மேல் ஒரு துணியை இறுக்கமாக அல்லாமல், மிருதுவாகக் கட்டி சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்த பிறகு, பஞ்சை எடுத்து விட்டு, வேறு ஒரு துணியால் எண்ணெய் ஊறிய பகுதியைத் துடைத்துவிடும் எளிய சிகிச்சை முறையால், ரத்தக் குழாய்களை நம்மால் மிருதுவாகச் செய்ய இயலும். அதன் ரப்பர் போன்ற தன்மையை இந்தத் தைல முறையில் ஏற்படுத்தினால், ரத்த ஓட்டம் சீராக வாய்ப்பிருக்கிறது. சுருங்கிய உட்புற விட்டம் விரியத் தொடங்கும்.

மூலிகைத் தைலங்களைக் கால்களில் தாரையாக தொடர்ந்து விழும்படி சுமார் 12 அங்குலம் மேலிருந்து பிடித்து ஊற்றும் சிகிச்சை முறையாலும், கால் எரிச்சல் வலி ரத்த ஓட்டத் தடையைக் குறைக்க உதவிடக் கூடும். தசமூலம் எனும் பத்து மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத் தண்ணீரை, எண்ணெய் ஊறிய பகுதிகளில் தாரையாக விடும் சிகிச்சை முறையும் சிறந்ததே.

அஸ்வகந்தா எனப்படும் அமுக்கரா சூரணத்தைச் சுமார் 5 கிராம் அளவில் சிறிது சூடான பாலுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட கால் ரத்தக் குழாய்களை வலுப்படுத்த முடியும். தற்சமயம் இந்தச் சூரண மருந்து தரமாக மூலிகை மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.

சர்க்கரை உபாதைக்குப் பயந்து உணவில் அதிக அளவில் கசப்பும் துவர்ப்பும் நிறைந்த உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய்கள் விரைவில் வலுவிழக்கக் கூடும். அதனால் அவற்றை மிதமாகச் சாப்பிடுவதுடன், நெய்ப்புடன் கூடிய கோதுமை, உளுந்து, எள்ளு போன்ற உணவுகளையும் மிதமாகச் சாப்பிடுதல் நலம். குடலில் வறட்சி ஏற்படாமலிருக்க 10 மி.லி தான்வந்திரம் அல்லது விதார்யாதி எனும் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்துகளில் ஒன்றை லேசாக உருக்கி, காலை, இரவு உணவுக்கு அரைமணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடுதல் நல்லது. குடலில் ஏற்படும் நெய்ப்பை, ரத்தக் குழாய்களின் உட்புறம் வரை கொண்டு செல்லும் வேலையை வாயு எனும் தோஷம் பெற்றிருப்பதால், அதன் வேலைத்திறன் மங்காத வகையில் இந்த மூலிகை நெய் மருந்துகள் உதவிடக் கூடும்.

இப்படி உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஏற்படும் எண்ணெய்ப் பசையால் ரத்த நாளங்களில் உண்டாகும் கடினமான தன்மையையும், அவை சுருண்டு கொள்ளும் நிலையையும் நம்மால் தவிர்க்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771 via தினமணி &
ஆரோக்கியமான வாழ்வு

ஒரே நட்சத்திரம்,ராசியில் இருப்பவர்கள் திருமணம் செய்யலாமா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:37 | Best Blogger Tips
ஒரே நட்சத்திரம்,ராசியில் இருப்பவர்கள் திருமணம் செய்யலாமா?
--------------------------------------------------------------------------------------
திருமணப் பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் நட்சத்திர பொருத்தம் ஆகும். நட்சத்திர பொருத்தம் மொத்தம் 10-க்கும் மேற்ப்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும்,தற்பொழுது 
 பெரும்பாலும் 10  பொருத்தங்களையே பார்க்கின்றனர்.ஆண்,பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாகஇருந்தால்,முக்கியமான பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம்(மாங்கல்ய பொருத்தம்)இருக்காது.
  
இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால்,தவிர்க்க முடியாத பட்சத்தில் சில பரிகாரங்கள் மூலம் இணைக்கலாம்.இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் வரும் திசா,புக்திக்கள் ஒரே நேரத்தில் வரும்.
 ஒரே நட்சத்திரமாக இருந்து வெவ்வேறு லக்கினமாக இருந்தாலும் பராவாயில்லை.
 
 தம்பதிகள் வெவ்வேறு ராசியாக இருப்பது நல்லது. ஏனென்றால் இருவருமே ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் கிரக நிலைகள் சரியில்லாத போது (ஏழரைச் சனி, அஷ்டமச் சனி) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.மேலும் ஜென்ம குரு வந்தாலும் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புண்டு.

ஒரே ராசியாக இருக்கும் சமயத்தில் பெண்ணுக்கு பிந்தைய நட்சத்திரமாக ஆணுக்கு இருந்தால் நன்மை.
ஆனால் ஒரே ராசியாக இருந்தால் தம்பதிகளின் ரசனை ஒத்துப்போகும். எனினும் மோசமான கிரக நிலையின் போது இருவருக்கும் இடையே மாதத்தில் ஒருமுறையாவது கருத்து மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

நட்சத்திரப் பொருத்தம் என்று ஒரு பிரிவு உண்டு, அது எப்படி என்றால் ரோகினி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம் இவை ஆறும் ஸ்திரீ ,புருஷர்களுக்கு ஒரே நட்ச்சத்திரமானால் உத்தமம் என்றும்,அசுவனி, கிருத்திகை,மிருகசீரிடம்,புனர்பூசம், உத்திரம், சித்திரை,அனுஷம், உத்திராடம் இவை எட்டும் சுமார்.இந்த நட்சத்திரங்கள் உள்ளவர்களை பரிகாரங்கள் மூலம் இணைக்கலாம். மற்றவை பொருந்தாது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

திருமணப் பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் நட்சத்திர பொருத்தம் ஆகும். நட்சத்திர பொருத்தம் மொத்தம் 10-க்கும் மேற்ப்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும்,தற்பொழுது
பெரும்பாலும் 10 பொருத்தங்களையே பார்க்கின்றனர்.ஆண்,பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாகஇருந்தால்,முக்கியம
ான பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம்(மாங்கல்ய பொருத்தம்)இருக்காது.

இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால்,தவிர்க்க முடியாத பட்சத்தில் சில பரிகாரங்கள் மூலம் இணைக்கலாம்.இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் வரும் திசா,புக்திக்கள் ஒரே நேரத்தில் வரும்.
ஒரே நட்சத்திரமாக இருந்து வெவ்வேறு லக்கினமாக இருந்தாலும் பராவாயில்லை.

தம்பதிகள் வெவ்வேறு ராசியாக இருப்பது நல்லது. ஏனென்றால் இருவருமே ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் கிரக நிலைகள் சரியில்லாத போது (ஏழரைச் சனி, அஷ்டமச் சனி) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.மேலும் ஜென்ம குரு வந்தாலும் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புண்டு.

ஒரே ராசியாக இருக்கும் சமயத்தில் பெண்ணுக்கு பிந்தைய நட்சத்திரமாக ஆணுக்கு இருந்தால் நன்மை.
ஆனால் ஒரே ராசியாக இருந்தால் தம்பதிகளின் ரசனை ஒத்துப்போகும். எனினும் மோசமான கிரக நிலையின் போது இருவருக்கும் இடையே மாதத்தில் ஒருமுறையாவது கருத்து மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

நட்சத்திரப் பொருத்தம் என்று ஒரு பிரிவு உண்டு, அது எப்படி என்றால் ரோகினி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம் இவை ஆறும் ஸ்திரீ ,புருஷர்களுக்கு ஒரே நட்ச்சத்திரமானால் உத்தமம் என்றும்,அசுவனி, கிருத்திகை,மிருகசீரிடம்,புனர்பூசம், உத்திரம், சித்திரை,அனுஷம், உத்திராடம் இவை எட்டும் சுமார்.இந்த நட்சத்திரங்கள் உள்ளவர்களை பரிகாரங்கள் மூலம் இணைக்கலாம். மற்றவை பொருந்தாது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.