அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:21 | Best Blogger Tips

“மகாத்மா காந்தி துப்பாக்கியை ஏந்திப் போராடினால், அதை நசுக்கப் போதுமான பீரங்கிகள் நம் வசம் இருக்கிறது. அவர் கப்பல்களைக் கொண்டு போராடினால், அவற்றை அழிக்கப் போதுமான போர் விமானங்கள் நம்மிடம் உள்ளது. ஆனால், காந்தி மனிதனை மனிதன் அடிமைப்படுத்தக் கூடாது. 

மனிதனுக்கு மனிதன் அடிமையாவது தர்மம் இல்லை என்கிற உண்மையை எடுத்துக் கொண்டு நம்மோடு போராடுகிறார். அதை எதிர்க்கவும், அழிக்கவும் போதிய ஆயுதங்கள் நம் வசமில்லை” என்று விடுலை போராட்ட காலத்தில் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைப் போர் பற்றிய கேள்விக்கு இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் இப்படி கூறினார். 

நம் மகாத்மா காந்தி நினைத்தது போல் மனிதனை மனிதன் கட்டாயத்தால் அடிமையாவதை எதிர்ப்போம். ஜாதி மதம் பாராமல் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்கிற உணர்வோடு ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற மகாத்மாவின் எண்ணத்தை நாம் நிறைவேற்றுவோம். 

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். பல உயிர் இழப்பையும் அவமானத்தையும் காயங்களையும் சந்தித்த பிறகே கிடைத்த இந்த பொன்னான சுதந்திரத்தை நல்ல விதத்தில் பயன்படுத்துவோம். ஒற்றுமையோடு இருந்து நாட்டை காப்போம். ஜெய்ஹிந்த். 

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

நிரஞ்சனா
www.bhakthiplanet.com

http://www.manamakkalmalai.com/

Welcome To http://www.facebook.com/bhakthiplanet
“மகாத்மா காந்தி துப்பாக்கியை ஏந்திப் போராடினால், அதை நசுக்கப் போதுமான பீரங்கிகள் நம் வசம் இருக்கிறது. அவர் கப்பல்களைக் கொண்டு போராடினால், அவற்றை அழிக்கப் போதுமான போர் விமானங்கள் நம்மிடம் உள்ளது. ஆனால், காந்தி மனிதனை மனிதன் அடிமைப்படுத்தக் கூடாது.

மனிதனுக்கு மனிதன் அடிமையாவது தர்மம் இல்லை என்கிற உண்மையை எடுத்துக் கொண்டு நம்மோடு போராடுகிறார். அதை எதிர்க்கவும், அழிக்கவும் போதிய ஆயுதங்கள் நம் வசமில்லை” என்று விடுலை போராட்ட காலத்தில் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைப் போர் பற்றிய கேள்விக்கு இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் இப்படி கூறினார்.

நம் மகாத்மா காந்தி நினைத்தது போல் மனிதனை மனிதன் கட்டாயத்தால் அடிமையாவதை எதிர்ப்போம். ஜாதி மதம் பாராமல் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்கிற உணர்வோடு ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற மகாத்மாவின் எண்ணத்தை நாம் நிறைவேற்றுவோம்.


சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். பல உயிர் இழப்பையும் அவமானத்தையும் காயங்களையும் சந்தித்த பிறகே கிடைத்த இந்த பொன்னான சுதந்திரத்தை நல்ல விதத்தில் பயன்படுத்துவோம். ஒற்றுமையோடு இருந்து நாட்டை காப்போம். ஜெய்ஹிந்த்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.



விக்கலை நிறுத்துவது எப்படி...?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:30 | Best Blogger Tips
விக்கலை நிறுத்துவது எப்படி...?

“டயாஃப்ரம்” (Diaphragm) என்கிற தோல் போன்ற ஒரு தசை நம் மார்பில் உள்ளது. நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போது இந்த தோல் பகுதியானது சுருங்கி விரிகிறது! அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கும்போது சுருங்கி, பின் சுவாசத்தை வெளியே விடும்போது தளர்வடைகிறது/விரிகிறது. விக்கல் என்பது அடிப்படையில் “டயாஃப்ரம்” (Diaphragm) எனும் தோலின் “சுருங்குதலே” ஆகும்! “டயாஃப்ரம்” சுருங்குவதற்கான காரணம் “ஃப்ரெனிக் நெர்வ்ஸ்” (phrenic nerves) எனும் ஒரு வகை நரம்புகள். இந்த நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித “எரிச்சல்” (irritation) காரணமாக டயாஃப்ரமானது அளவுக்கு அதிகமாகவேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க, “எபிக்லாட்டிஸ்”என்னும் சுவாசக்குழாயின்மூடியானது டக்கென்று மூடிக்கொள்ளும்.அதனால் ஏற்படும் ஒரு வித “விக் விக்” எனும் சப்தத்தைதான் நாம் விக்கல் என்கிறோம்
விக்கல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவசர அவசரமாக உணவு சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, மிகச் சூடாகச் சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை முக்கியக் காரணங்கள். அடுத்து, புரதச் சத்துள்ள உணவுகளைக் குறைத்துச் சாப்பிடுதல், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் விக்கல் வரலாம்.

சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும்

நாட்டு மாதுளம் பழத்தை சாப்பிட்டால் விக்கல் நின்றுவிடும் என்கிறது ஒரு ஆய்வு

நன்றி - Doctor Vikatan


“டயாஃப்ரம்” (Diaphragm) என்கிற தோல் போன்ற ஒரு தசை நம் மார்பில் உள்ளது. நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போது இந்த தோல் பகுதியானது சுருங்கி விரிகிறது! அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கும்போது சுருங்கி, பின் சுவாசத்தை வெளியே விடும்போது தளர்வடைகிறது/விரிகிறது. விக்கல் என்பது அடிப்படையில் “டயாஃப்ரம்” (Diaphragm) எனும் தோலின் “சுருங்குதலே” ஆகும்! “டயாஃப்ரம்” சுருங்குவதற்கான காரணம் “ஃப்ரெனிக் நெர்வ்ஸ்” (phrenic nerves) எனும் ஒரு வகை நரம்புகள். இந்த நரம்புகளில் திடீரென்று ஏற்படும் ஒருவித “எரிச்சல்” (irritation) காரணமாக டயாஃப்ரமானது அளவுக்கு அதிகமாகவேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க, “எபிக்லாட்டிஸ்”என்னும் சுவாசக்குழாயின்மூடியானது டக்கென்று மூடிக்கொள்ளும்.அதனால் ஏற்படும் ஒரு வித “விக் விக்” எனும் சப்தத்தைதான் நாம் விக்கல் என்கிறோம்
விக்கல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவசர அவசரமாக உணவு சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, மிகச் சூடாகச் சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை முக்கியக் காரணங்கள். அடுத்து, புரதச் சத்துள்ள உணவுகளைக் குறைத்துச் சாப்பிடுதல், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் விக்கல் வரலாம்.

சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும்

நாட்டு மாதுளம் பழத்தை சாப்பிட்டால் விக்கல் நின்றுவிடும் என்கிறது ஒரு ஆய்வு

நன்றி - Doctor Vikatan

நந்தியாவட்டப் பூவின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:28 | Best Blogger Tips


நந்தியாவட்டப்பூ பெருஞ்செடி வகுப்பைச் சேர்ந்தது. பூக்கள் வெண்மையாய் ஒற்றை அல்லது இரட்டையாயிருக்கும். ஒற்றை அடுக்கு பூவே சிறந்தது. இது பாலுள்ள செடியாகும்.
இதன் பூ, வேர், பால் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
இதனை நந்திபத்திரி, நத்தியாவர்த்தம், பட்டிடை, வலம்புரி, சுயோதனன் மாலை என பல பெயர்களில் அழைக்கின்றனர்

நந்தியாவட்டப்பூ சித்தமருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் அதிகம் பயன் படுகிறது.

கண் நோய்கள் நீங்க

உடலின் முக்கிய உறுப்புகளில் கண்கள் முதலிடம் வகிக்கின்றது.

ஐம்புலன்களில் ஒன்றான கண்களை பேணிக் காப்பது மிகவும் அவசியம். கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. அனைத்து வேலைகளும் கணினி மூலம் செய்யப்படுவதால் கண்களுக்கு அதிக பளு உண்டாகிறது. மேலும் இரவை பகலாக்கும் மின்சார விளக்குகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல வகைகளில் கண்களை பாதிக்கும் மீடியாக்கள் தற்போது பரவி வருகின்றன. இதனாலும் இரவு உறக்கமின்றி வேலை செய்வதாலும் கண் நரம்புகள் சூடாகிவிடுகின்றன.

இதுபோல் ஈரல் பாதிப் படைந்தாலும் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இன்று பலருக்கு 40 வயதிலேயே வெள்ளெழுத்து என்கின்றனர். மேலும் சிறு குழந்தைகள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லாமல் கண்ணாடி அணிந்துள்ளனர். கண் லேசர் அறுவை சிகிச்சைகள் அதிகம் நடைபெறுகின்றன.

இந்த நிலை மாற நந்தியாவட்டப் பூ சிறந்த மருந்தாகும்.

நந்தியாவட்டப் பூவை சாறு எடுத்து அதனை கண்களில் சிறு துளி விட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறு, கண் படலம், கரும்பாவை முதலியன மாறும்.

நந்தியாவட்டப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண் நரம்புகள் பலப்படும்.

காச நோயின் பாதிப்பு குறைய

மனிதனை அழிக்கும் கொடிய நோய்களில் காச நோயும் ஒன்று. காச நோயால் இந்தியாவில் வருடத்திற்கு பல லட்சம் மக்கள் பலியாகின்றனர். இந்த நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபட நந்தியாவட்டப் பூ உதவுகிறது.

நந்தியாவட்டப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை மாலை என இருவேளையும் உண்டு வந்தால் காச நோயால் ஏற்பட்ட களைப்பு, இருமல் நீங்கும். தேகம் வலுப்பெறும். மேலும் உடலுக்கு வனப்பையும் கொடுக்கும்.

மண்டைக் குத்தல் நீங்க

தலை வலிக்காமல் தலையில் குத்துவது போல் சிலருக்கு தோன்றும். பித்த அதிகரிப்பு மற்றும் தலையில் நீர் கோர்த்துக்கொள்ளுதல் போன்றவையே இதற்குக் காரணம்.

இவர்கள் நந்தியாவட்டப் பூவை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் மண்டைக் குத்தல் நீங்கும்.

கண் எரிச்சல் நீங்க

நந்தியாவட்டப் பூவின் சாறுடன் நல்லெண்ணெய் கலந்து கண்களில் விட்டால் கண் எரிச்சல் நீங்குவதுடன் உடல் சூடு தணியும்.

வெட்டுக்காயம் ஆற

நந்தியாவட்டப் பூவை அரைத்து வெட்டுக் காயத்தின் மீது பற்று போட்டால் காயம் சீழ் பிடிக்காமல் விரைவில் ஆறும்
Via FB இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
 

கொழுப்பைக் கரைக்கும் பசலைக்கீரை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:14 | | Best Blogger Tips

கார்ட்டூன் நாயகன் பாப்பாய்க்கு மிகவும் பிடித்தது பசலைக்கீரை. 'என் புஜபல ரகசியம் இந்த கீரை தான்' என்று குழந்தைகளிடம் பிரபலப்படுத்தினான்.

உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.


குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலுக்கு எதிரி.


சரித்திரம்: பசலை ஆசியாவில் முதலில் பழக்கத்திற்கு வந்ததாக சொல்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. பிரபலமானது 1800-களில். பிரான்ஸ், இங்கிலாந்து வந்து பின் அமெரிக்காவுக்குப் போனது. மக்கள் அதிக நேரம் வேகவைத்ததால் சாம்பல் கலருக்கு மாறி வாசனையும் போய் சத்தெல்லாம் வீணானது. அப்புறம்தான் கீரையை எவ்வளவு ஃப்ரஷ்ஷாக சமைக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது; சத்து வீணாகாது என்று புரிந்தது.


கிடைக்கும் பருவம்: ஆண்டு முழுவதும் கிடைக்கும். குளிர்காலத்தில் இளசாக கிடைக்கும். மணமும் அலாதி. ஹிந்தியில் இதை பாலக் என்பார்கள்.


தேர்ந்தெடுத்தல்: பசுமையாக ஈரப்பசையுடன், கரும்பச்சை நிறமாக இருக்க வேண்டும். மஞ்சள் இலைகள் இருந்தால் கீரை பழசு. தண்டு மெலிதாக இருந்தால் இளசு. முகர்ந்து பார்த்தால் அதன் பச்சை வாசனையிலேயே தெரியும் புதியது என்று.


பாதுகாத்தல்: சாதாரணமாக கீரையை நறுக்கி விட்டு அலம்புவார்கள். அப்படிச் செய்தால் சத்துக்கள்
வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே முழுசாகபோட்டு அலசி எடுக்கவும். தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும். பின்பு நறுக்கி சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், இலைகள் நடுவில் தடித்துள்ள பாகங்களையும் கிள்ளி போட்டுவிட வேண்டும்.


மருத்துவக் குணங்கள்: இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.


அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது.

சமைப்பது: கட்டாக இருந்தால் பிரித்து கொஞ்சம் வாடிய மஞ்சள் இலை, தண்டை எடுத்துவிட்டு
காற்றோட்டமாக சிறிதுநேரம் வைத்தால் உள்ஈரம் போய்விடும். அலசும் போது இருக்கும் ஈரமே போதும். அதிக தண்ணீர் வைத்து வேகவைப்பது தவறு. தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடாமல் வேக விடலாம். நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம். கீரையில் இருக்கும் உப்பே போதுமானது; கூடுதலாக தேவையில்லை என்கிறார்கள். தேவைப்பட்டால் கடைசியில் கொஞ்சம் போடலாம். வெந்தால் கீரை சுருங்கி விடுமென்பதால் முதலில் சேர்த்தால் உப்பு கரிக்கும். குறைந்த நேரமே வேகவைக்கவும்.


உணவுச்சத்து: இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது.

ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து:
கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.


சில சமையல் வகைகள்: இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம் தக்காளி சேர்த்து கடைதல், தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கூட்டு செய்தல், புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர், தேங்காய் அரைத்து மோர்க்குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம்.


பசலைக்கீரை எலுமிச்சை பொரியல்


2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் சோயா சாஸ், இரண்டு பல் பூண்டு, லவங்கம் பட்டைத்தூள் கொஞ்சம் சேர்த்து எல்லாவற்றையும் அரை டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி அதில் வேகவைத்த கீரையை போட்டு நன்றாக புரட்டி எடுக்கவும்.


கீரை தக்காளி தயிர் சப்ஜி

சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

தேவையான பொருள்கள்: ஒரு கட்டு கீரை, ஒரு சின்ன கப் தயிர், தக்காளி 2, பெரிய வெங்காயம் 2, பச்சைமிளகாய் 2, 1 டீஸ்பூன் எண்ணெய்.


செய்முறை: கீரையை சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு மசித்துக் கொள்

ளவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இவற்றை எண்ணெயில் வதக்கி பிறகு மசித்த கீரையை சேர்க்கவும் கடைசியாக தயிர் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.


பசலை ரிஸோட்டா


தேவையான பொருட்கள்: எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் 1, நறுக்கிய கீரை 3 கப், பூண்டு 2 பல், அரிசி 1 கப், காய்கறி வெந்த தண்ணீர் அல்லது சாதாரண நீர் 3 கப், புதினா இலை 1/2 கப், சீஸ் துருவியது 1/2 கப், உப்பு, மிளகுப் பொடி தேவைக்கேற்ப.


செய்முறை: வெங்காயம், பூண்டை நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயை காய வைத்து அதை போட்டு வதக்கவும். அதில் அரிசியை களைந்து போட்டு சில நிமிடங்கள் புரட்டவும். காய்கறி நீர் அல்லது தண்ணீரைத் தனியாக கொதிக்க வைத்து அதிலிருந்து பாதி தண்ணீரை அரிசியில் ஊற்றவும். நீர் சுண்டியதும் இன்னும் கொஞ்சம் நீர் சேர்த்து வற்றியதும் நறுக்கிய கீரை, புதினா இலைகளைச் சேர்த்து இன்னும் கொஞ்சம் நீர் சேர்க்க வும். அரிசி, கீரை வெந்து நீர் வற்றியதும் உப்பு, மிளகுப்பொடி சீஸ் போட்டு இறக்கவும்.

 
Via FB ஆரோக்கியமான வாழ்வு