தக்காளியின் நன்மைகள்........

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | Best Blogger Tips


தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.
இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.
விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு


இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:47 | Best Blogger Tips

இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம். மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம். இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் ? பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது ? மனிதன், நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது. எண்ணெயை நாம் உட்கொள்ள, மிச்சமிருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு. ஆக, மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி பாலைக் கொடுக்கிறது. இப்படித் தன்னலம் கருதாமல் மனித வர்க்கத்துக்கு பாலைக் கொடுப்பதுடன், பசுவின் சாணம் வரட்டியாகவும் இன்றைய காலகட்டத்தில் கோபர் கேஸாகவும் அதாவது - எரிபொருளாக உதவுகிறது. பசுவின் சாணத்துக்கு (ஆண்டி - இன்பெக்ஷன்) குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது. பசுவின் மூத்திரத்தில் அது சாப்பிடும் புல் வகைகளிலிருந்து கிடைக்கும் மருந்துச் சத்து இருப்பதால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது.

அந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கும், காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்தார்கள் நம் முன்னோர். சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும். பசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான்.

பாம்பை நாகம் என்ற தெய்வ வடிவாகவே வழிபட்டார்கள் நம் முன்னோர், மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் அமைப்புண்டு. அது சரி, நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன் ? ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வமாகிறது. மறுபக்கம், அந்தப் பசுவின் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பையும் தெய்வமாக்கியது ஏன் ? இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள், அருமையான விடையைக் கூறியுள்ளார். மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ-புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை, புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை. இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன். உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல்தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ? நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி... கடவுள் ஒன்றுதான் ! இந்து மதம் ஒரு சனாதன தர்மம், சமதர்ம சமுதாயத்தையே அது சிருஷ்டித்தது என்பதற்கு இதுவும் ஒரு நிரூபணம்.

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...




Via FB மெய்ப்பொருள்

ஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 உணவுகள். !!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:46 | Best Blogger Tips
நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது.

தற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும். மேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள்.

இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்


தானியங்கள் மற்றும் நட்ஸ்
தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன

கடல் சிப்பி

நீங்கள் கடல் உணவு பிரியரா? அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது.

செர்ரி

செர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.

மீன்கள்

மீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.

தக்காளி

தக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.

முட்டைகள்

முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது.

மாட்டுக்கறி

கொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன.

தயிர்

தயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது

சாக்லெட்

அதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.

காபி

டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் காபி குறைக்கிறது. காபியில், காஃப்பைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் காபி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால், காபியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

மேற்கூறியவற்றுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அல்சைமர் நோய் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் அண்டாமல் தடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயை வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத 8 மருந்துகள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:44 | Best Blogger Tips



குழந்தைகளை நல்ல படியாக பராமரித்து வளர்ப்பது என்பது பெரிய காரியமாகும். அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு தாயும் அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க முற்படுகிறாள். அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் பல நோய்த்தொற்று ஏற்படுகிறது. அதன் விளைவாக காய்ச்சல், சளி, இருமல் என்று பல அவஸ்தைக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், அவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை கொடுக்கின்றோம்.

குறிப்பாக கை குழந்தைகளுக்கும், தவழும் குழந்தைகளுக்கும் மருந்துகள் கொடுக்கும் முன், கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும். ஏனெனில் குழந்தைகளுடைய நோய் தடுப்பாற்றல் சக்தியானது மிகவும் குறைவாக இருப்பதால், குழந்தைகளை கிருமிகள் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளன. அதன் விளைவாக வியாதிகள் வரக்கூடும். இதற்காக மருந்து கொடுக்கும் போது, பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் அத்தகைய மருந்துகள் இயற்கையான அல்லது மூலிகை மருந்தாக இருந்தாலும் கூட கவனம் வேண்டும்.

பொதுவாக தவழும் குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிடித்துக் கொள்ளும். ஆனால் 6 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் சாப்பிடும் சளி மற்றும் இருமல் மருந்தை கொடுப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனென்றால், மருந்துகளானது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு கொடுக்காமல், குழந்தைக்கு மருந்தானது திறம்பட செயல்படவில்லை என்று சிலர் அளவுக்கு மீறி மருந்தைக் கொடுத்துவிடுகின்றனர். ஆகவே இது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

இப்போது குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக்கூடாத 8 வகையான மருந்துகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, குழந்தைகளுக்கு அவற்றை கொடுப்பதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

ஆஸ்பிரின் (Aspirin)

மருத்துவர் பரிந்துரைக்காவிட்டால், ஆஸ்பிரின் அல்லது ஆஸ்பிரின் கலந்த மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆஸ்பிரினால், குழந்தைகளின் சிறுநீரகமும், மூளையும் பாதிப்படையும். எனவே மருந்து கடைகளில் வாங்கும் அனைத்து மருந்துகளிலும் ஆஸ்பிரின் இருக்காது என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். எப்போதும் மருந்து வாங்கும் முன், முதலில் அதன் லேபிளை நன்கு படித்து பின்னரே வாங்க வேண்டும். மேலும் சாலிசிலிக் அல்லது அசிடைல்சாலிசிலிக் அமிலம் என்ற பெயரைக் கண்டால், அதுவும் ஆஸ்பிரினையே குறிக்கும். காய்ச்சல் என்றால், 6 மாதங்களுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பாராசெட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபெனைக் (ibuprofen) கொடுக்கலாம்.

இருமல் மற்றும் சளி மருந்துகள்

குழந்தை மருத்துவத்தின் அமெரிக்க அகாடமியில் உறுப்பினர்களாக இருக்கும் குழந்தை மருத்துவர்கள், கண்டிப்பாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் மருந்துகளை பரிந்துரைக்கமாட்டார்கள். ஏனெனில் அவை சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதில்லை. சில நேரம் அதிக அளவில் கொடுப்பதால், அது ஆபத்தை கூட விளைவிக்கும். அதிலும் தூக்க கலக்கம், வயிற்று வலி, சொறி, அதிகமான இதயத் துடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வொரு வருடமும் வீட்டிலேயே சளி மற்றும் இருமல் மருந்து கொடுப்பதால் தான், ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

குமட்டலை தடுக்கும் மருந்துகள்

மருத்துவர்கள் பரிந்துரைக்காவிட்டால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு குமட்டலை தடுக்கும் மருந்துகளை கொடுக்கக்கூடாது. பொதுவாக குமட்டல் வந்தால், நீண்ட நேரம் இருக்காது. ஆகவே குமட்டல் ஏற்படும் போது, அதனை தடுக்க மருந்துகள் அவசியம் இல்லை. சாதாரணமாக இருந்தாலே, அவை குணமாகிவிடும். அதை விட்டு, மருந்துகளை கொடுத்தால், அது ஆபத்தை விளைவிக்கும். ஒருவேளை குழந்தை வாந்தி எடுத்தால், அவர்களுக்கு தேவையான அளவு நீராகாரம் கொடுத்தால், உடல் வறட்சியைத் தடுக்கலாம். கைமீறிப் போனால், மருத்துவரை அணுகுவது நல்லது.

பெரியவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள்

பெரியவர்கள் சாப்பிடும் மருந்துகளை சிறிதளவு கூட குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகளை விட, கைக்குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்துகள் சற்று அடர்ந்த நிலையில் இருப்பதால், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வேறொரு குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

மற்ற குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை, உங்கள் குழந்தைக்கு கொடுத்தாலும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் உங்கள் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே கொடுக்க வேண்டும்.

காலாவதியான மருந்துகள்

காலாவதியான மருந்துகளை உடனடியாக மருந்து பெட்டியில் இருந்து தூக்கி எறிந்து விட வேண்டும். மேலும் நிறம் மாறிய மருந்துகளையும் குப்பையில் போட வேண்டும். ஏனெனில் காலாவதியான மருந்துகளின் திறன் செயலிழந்திருக்கும். மேலும் அது உயிருக்கே பெரும் ஆபத்தையும் விளைவிக்கும்.

கூடுதலான அசிடமினோஃபென்

காய்ச்சல் மற்றும் உடம்பு வலியை குறைக்கும் மருந்துகள் பலவற்றிலும் அசிடமினோஃபென் (acetaminophen) கலக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை அதனை பற்றி சரியான அறிவு இல்லையென்றால், உடனே மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

மெல்லும் தன்மையுள்ள மருந்துகள்

மெல்லும் தன்மையுள்ள மருந்துகள் அல்லது மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அது அவர்களுடைய தொண்டை குழியை அடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை குழந்தை திடமான உணவை உண்ண ஆரம்பித்து விட்டால், அவர்களுக்கு மாத்திரைகள் கொடுக்க நினைப்போம். அப்படிப்பட்ட நேரத்தில் மாத்திரைகளை பொடியாக்கி, அவற்றை குழந்தைகளின் உணவில் கலந்து கொடுக்கலாமா என்று மருத்துவரிடம் கேட்டு பின்னரே கொடுக்க வேண்டும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

குழந்தையின் கண்பார்வையை மேம்படுத்துவதற்கான வழிகள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:43 | Best Blogger Tips

நம் உடலில் அனைத்து உறுப்புகளுமே முக்கியமானவை. அதிலும் மிக முக்கியமானதென்றால், கண்டிப்பாக கண்களாகத் தான் இருக்க முடியும். ஒருவரை வர்ணிக்கும் போதும், ஓவியம் வரையும் போதும் கூட கண்களிலிருந்து தான் ஆரம்பிப்போம். அப்படிப்பட்ட கண்களை பாதுகாக்க நாம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வது இயல்பு தான். ஆனால் குழந்தைகளுக்கு? பெற்றோர்கள் தானே பாதுகாக்க வேண்டும்.

குழந்தையின் கண்பார்வையை மேம்படுத்த கண்களில் அறுவை சிகிச்சை மட்டும் தான் செய்ய வேண்டும் என்று பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதற்கு பல இயற்கை வழிமுறைகளும் இருக்கிறது என்பது தான் உண்மை. இயற்கை வழிமுறைகள் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் மிகவும் பதுகாப்பானதாகவும், சிறந்ததாகவும் இருக்கும். மேலும் செயற்கை முறைகளை கையாளுவதை விட, இயற்கை முறை தான் பல நாட்களுக்கு நீடித்து நிலைக்கும். இப்போது குழந்தையின் கண் பார்வையை வளப்படுத்தும் சில வழிகளை பார்ப்போம்.

தரமுள்ள கருப்புக் கண்ணாடி

வெயிலில் இருந்து குழந்தையின் கண்களை பாதுகாக்க கருப்புக் கண்ணாடியை அணியச் செய்யுங்கள். அவை குழந்தையின் கண் பார்வையை மேம்படுத்த பயன்படும். குழந்தைகள் வெயிலில் அதிக நேரம் இருக்கும் போது, சூரியனில் இருந்து வெளிவரும் புற-ஊதாக் கதிர்வீச்சு கண் பார்வைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தரமுள்ள கருப்புக் கண்ணாடியை வெளியே செல்லும் போது குழந்தைகள் போட்டுக் கொள்கிறார்களா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காற்று அதிகமாக இருக்கும் காலத்திலும் கண்ணாடியை போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். இதனால் தூசியை போல் கண்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற பொருட்களிலிருந்து கண்களை பாதுகாக்கலாம்.

கண்களுக்கு பயிற்சி

குழந்தைகளுடன் சேர்ந்து சில கண் பயிற்சியில் ஈடுபட்டு அவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருங்கள். இந்த பயிற்சிகள் கண் பார்வையை மேம்படுத்தும்.

கண்களை கழுவவும்

குழந்தைகள் காலை எழுந்தவுடன், அவர்களின் வாயை கொப்பளிக்கச் செய்து கண்களை மூடச் சொல்லவும். பின் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அவர்களின் கண்களின் மேல் தண்ணீரை கொண்டு நன்றாக கழுவச் செய்யவும். முக்கியமாக கண்களை கழுவ பயன்படுத்தும் தண்ணீர் சூடாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

தூக்கம்

நீண்ட நேரம் இரவில் விழித்திருப்பது கண்களுக்கு நல்லதல்ல. ஒருவேளை குழந்தை நீண்ட நேரம் விழித்திருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு கப் தண்ணீர் குடிக்கும் படி செய்ய வேண்டும்.

மலங்கழித்தல்

மலச்சிக்கல் கண் பார்வையை குறைக்கும். அத்துடன் மன அழுத்தம், கவலை, கோபம், ஆர்வம் போன்றவைகளும் கண் பார்வையை பாதிக்கும். அதனால் தினமும் குழந்தையை 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வையுங்கள்.

உணவு முறை

தினமும் குழந்தைக்கு பச்சை வேர்க்கோசு மற்றும் காரட் சாறு கொடுங்கள். இதனுடன் சேர்த்து பாலில் ஊற வைத்த பாதாம், ஏலக்காய் பொடி கலந்த பால், பழங்கள், பச்சை காய்கறிகள், போன்றவைகளையும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். கண்களின் சத்துக்கும், திறனுக்கும் காரணமாக விளங்குவது வைட்டமின் ஏ. அதனால் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ உள்ள உணவுகளை சாப்பிட கொடு்க்கவும்.

விளையாட்டில் ஈடுபடுத்தவும்

குழந்தைகள் மணிக்கணக்கில் தொலைக்காட்சி/கணினி முன் அமர்ந்திருக்கிறார்களா? ஆம் என்றால் குழந்தைக்கு பிரச்சனை ஏற்பட போவது உறுதி. இந்த செயல்கள் யாவும் கண்களை ஓய்வெடுக்கச் செய்யாது. உடம்பில் உள்ள மற்றப் பகுதிகளை போல, ஒரே இலக்கில் 10-15 நொடி வரை கண் பார்வையை செலுத்தினால், கண்களுக்கு அயர்ச்சி ஏற்படும். இந்த அழுத்தம் சிறிது காலம் கழித்து கிட்டப்பார்வை, சிதறல் பார்வை போன்ற பிரச்சனையாக வளர்ந்து நிற்கும். அதனால் அதிக நேரம் கணினி அல்லது தொலைகாட்சி முன் அமர்வதை விட, வெளியில் சென்று விளையாட குழந்தையை அறிவுறுத்தவும்.

காய்கறி மற்றும் பழங்கள்

கல்லீரலில் அதிக அளவு நச்சுத்தன்மை இருந்தால், கண் பார்வை மங்கும். இன்றைய நவீன வாழ்க்கை முறை உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பாதிப்பை உண்டாக்குகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள் அதிகமாக ஜங்க் உணவை அதிகம் சாப்பிடுகிறார்கள். அதனை தவிர்த்து பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண செய்யவும்.

சிரிப்பு

வாய் விட்டு சிரிப்பதால் சந்தோஷத்திற்குரிய ஹார்மோன்கள் உற்பத்தியாகும். அதனால் உடம்பில் உள்ள தசைகள் அனைத்தும் அமைதி பெரும். இது கண்களின் தசைகளையும் சேர்த்ததே. அதனால் குழந்தை எந்நேரமும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

தினமும் தவறாமல் உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:35 | Best Blogger Tips

இன்றைய அவசர உலகில் உடலுக்கு நிறைய பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏனெனில் அனைவரும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளை தவிர, மற்ற உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் பழக்கவழக்கங்களும் ஆரோக்கியமற்றதாக உள்ளன. இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதனால் அந்த பிரச்சனைகளை தவிர்க்க பலரும் டயட்டை பின்பற்றுகின்றனர். மேலும் சிலர் உடல் எடை அதிகமாக உள்ளது என்று டயட்டை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு டயட்டை மேற்கொண்டால் மட்டும் போதாது, டயட்டில் என்ன உணவுகளை சேர்க்கிறோம் என்பது தான் முக்கியம். அவ்வாறு தினமும் மேற்கொள்ளும் டயட்டில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சேர்க்க வேண்டுமென்று ஒருசில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அத்தகைய உணவுகளில் ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவற்றை தினமும் உணவில் சேர்த்தால், அவை வயிற்றை நிறைத்து, உடலை சிக்கென்றும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

பசலைக் கீரை

கீரையில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால், தினமும் தவறாமல் சாப்பிடுவது நல்லது. அதிலும் பசலைக் கீரையில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகவே மதிய வேளையில் இநத் கீரையை வேக வைத்து, கடைந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

எலுமிச்சை

தினமும் குறைந்தது ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி விடுவதோடு, உடல் எடையும் குறையும்.

பூண்டு

பூண்டு இதய நோயாளிகளுக்கு மட்டும் நல்லதல்ல, இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான சல்பர், சருமத்திற்கும் மிகவும் நல்லது.

ஆலிவ் ஆயில்

சமையலில் மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த எண்ணெய் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் பழங்களில் சிட்ரஸ் பழங்கள் மிகவும் சிறப்பானவை. ஆகவே டயட்டில் இருக்கும் போது, சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பப்பளிமாஸ், எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நன்கு சிக்கென்றும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

தயிர்

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. ஆகவே டயட்டில் சேர்த்துக் கொண்டால், எலும்புகள் நன்கு வலுவோடும், உடல் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் பீட்டா-குளுக்கான் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. மேலும் ஓட்ஸ் சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும். மேலும் டயட்டில் இருப்பவர்கள், இதனை தினமும் சேர்த்து வந்தால், செரிமானப் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

பருப்புகள்

இந்த சூப்பர் உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் பொருளும், கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் உள்ளன. அதுமட்டுமல்லாமல், இதனை தினமும் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வும் கிடைக்கும்.

க்ரீன் டீ

இந்த டீயில் உடலை சுத்தப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. ஆகவே இதனை தினமும் சாப்பிட்டால், உடல் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உடல் எடையானது கட்டுப்பாட்டுடனும் வலுவோடும் இருக்கும்.
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

சுவாமி பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:06 | Best Blogger Tips
சுவாமி பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?

சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.

* கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.

* கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான்.

* துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கு
சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.

* கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.

* கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு. கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன். ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசி மாலை அணிந்து கொள்வான்.

* துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கு
ம்.
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism

சுகப்பிரசவம் ஆக இதை ஜெபிக்கவும் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:44 | Best Blogger Tips

மாங்கல்ய தோஷம் என்பது....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:14 | Best Blogger Tips

மாங்கல்ய தோஷம் என்பது..,
-------------------------------------
திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்பொழுது நட்சத்திர பொருத்தம் மட்டும் முக்கியம் கிடையாது.அதைவிட மிக முக்கியமானது ஜாதக கட்டத்தை இணைத்து பார்ப்பதுதான்.கட்டப்பொருத்தம் சரியாக இருந்தால்தான் இல்லறவாழ்வு இனிமையாக அமையும்.

ஜாதக கட்டத்தில் ஆணுக்கு 8-மிடத்தையும்,பெண்ணுக்கு 7,8-மிடங்களையும் பார்க்க வேண்டும்.லக்னத்துக்கு 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும் .இதில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லதாகும் ...சுப கிரகங்கள் இடம் பெற்றாலும் கூட குறைந்த அளவில் தோஷத்தை ஏற்படுத்தும்.ஆனால் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் .இதனால் திருமணம் தாமதமாகும் மற்றும் திருமணம் நடந்த பிறகு பாதிப்பு உண்டாக்கும்.

பெண் ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்கிரன்,சனி,சூரியன்,ராகு,கேது பொன்ற கிரகங்கள் இருந்தால் களத்திர தோசத்தையும்,8-மிடத்தில் ராகு,கேது,சனி,சூரியன்,சுக்கிரன் போன்ற கிரகங்கள் இருந்தால் மாங்கல்ய தோசத்தையும் கொடுக்கும்.7,8 மிடம் பலமாக இருந்தாலும்,சுப கிரகமான குரு பார்த்தாலும் தோச நிவத்தியாகும்.

வன்னி மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.

எந்த கிரகத்தால் மாங்கல்ய தோசமும்,களத்திர தோசமும் ஏற்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்தால் போதும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்பொழுது நட்சத்திர பொருத்தம் மட்டும் முக்கியம் கிடையாது.அதைவிட மிக முக்கியமானது ஜாதக கட்டத்தை இணைத்து பார்ப்பதுதான்.கட்டப்பொருத்தம் சரியாக இருந்தால்தான் இல்லறவாழ்வு இனிமையாக அமையும்.

ஜாதக கட்டத்தில் ஆணுக்கு 8-மிடத்தையும்,பெண்ணுக்கு 7,8-மிடங்களையும் பார்க்க வேண்டும்.லக்னத்துக்கு 8 மிடம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும் .இதில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லதாகும் ...சுப கிரகங்கள் இடம் பெற்றாலும் கூட குறைந்த அளவில் தோஷத்தை ஏற்படுத்தும்.ஆனால் பாவ கிரகங்கள் இடம் பெற்றால் மாங்கல்ய தோஷம் உண்டாகும் .இதனால் திருமணம் தாமதமாகும் மற்றும் திருமணம் நடந்த பிறகு பாதிப்பு உண்டாக்கும்.

பெண் ஜாதகத்தில் 7 மிடத்தில் சுக்கிரன்,சனி,சூரியன்,ராகு,கேத
ு பொன்ற கிரகங்கள் இருந்தால் களத்திர தோசத்தையும்,8-மிடத்தில் ராகு,கேது,சனி,சூரியன்,சுக்கிரன் போன்ற கிரகங்கள் இருந்தால் மாங்கல்ய தோசத்தையும் கொடுக்கும்.7,8 மிடம் பலமாக இருந்தாலும்,சுப கிரகமான குரு பார்த்தாலும் தோச நிவத்தியாகும்.

வன்னி மரத்தடியில் அமர்ந்துள்ள விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.

எந்த கிரகத்தால் மாங்கல்ய தோசமும்,களத்திர தோசமும் ஏற்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்தால் போதும்.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

மூலிகை மருந்துகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:10 | Best Blogger Tips
சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்

1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

மேலும் தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!


1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.


Via FB தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:10 | Best Blogger Tips
பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்:-

அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

வல்லாரை சாறு – நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும், நாபகசக்தியை
அதிகரிக்கும்

வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு
சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய் சாறு - அழகு தரும் மருந்து.

துளசி சாறு - சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது.
அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.

கடுக்காய் சாறு - முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு
நல்லது

கல்யாண முருங்கை சாறு - உடல் எடை குறைக்க உதவும். இதை
வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக
மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி
பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

தூதுவளை சாறு - சளி தொல்லை நீங்கும்

ஆடாதோடா சாறு - ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது

கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வைக்கு நல்லது,
முடி வளர்ச்சிக்கு நல்லது
அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்

இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

வல்லாரை சாறு – நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும், நாபகசக்தியை
அதிகரிக்கும்

வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு
சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய் சாறு - அழகு தரும் மருந்து.

துளசி சாறு - சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது.
அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.

கடுக்காய் சாறு - முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு
நல்லது

கல்யாண முருங்கை சாறு - உடல் எடை குறைக்க உதவும். இதை
வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக
மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி
பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

தூதுவளை சாறு - சளி தொல்லை நீங்கும்

ஆடாதோடா சாறு - ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது

கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வைக்கு நல்லது,
முடி வளர்ச்சிக்கு நல்லது
 
Via FB இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்