பழமொழிகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:12 | Best Blogger Tips


அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.

அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.

அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.

அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!

அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.

அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.

அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.

அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.

அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.

அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.

அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.

அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.

அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.

அதிக ஓய்வு அதிக வேதனை.

அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?

அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.

அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.

அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.

அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.

அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.

அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

அன்பாக பேசுபவருக்கு அந்நியர் இல்லை.

அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.

அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.

அரசனும் அன்னைக்கு மகனே.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.


 Via FB   Karthikeyan Mathan

இந்திய வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:11 | Best Blogger Tips
இந்திய வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி நிகழ்ந்த தினம் இன்று !
இந்திய வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி!
-----------------------------------------------------------------

17 -ஆண்டுகளாக ஆங்கிலேயரை குலை நடுங்க வைத்த திப்பு தன் 39-வது வயதிலேயே உயிர் தியாகியாகி வீரமரணம் அடைந்தது ஒரு வரலாற்று சோகமாகும். காவிரியே கண்ணீர் சிந்தும் கனத்த நினைவுகளோடு திப்பு சுல்தானின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் சுதந்திர எரிமலையின் தீ சுவாலைகள் மட்டும் அடங்கவில்லை.

ஹைதர் அலி, அவர் மகன் திப்பு சுல்தானை தொடர்ந்து திப்புவின் பிள்ளைகளும் குடும்ப வழியில் தாய்நாட்டிற்காக களம் புகுந்தனர்.

ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். திப்பு என்றால் புலி என்று அர்த்தம். ஆம்! சிங்கமும், புலியும் பிறந்த பரம்பரையில் வந்தவர்கள் சீறுவதும், பாய்ந்து தாக்குவதும் இயல்புதானே!

நாடு கடத்தல்!
---------------------
திப்பு கொல்லப்பட்ட பிறகு, அவரது பிள்ளைகள் மைசூரிலிருந்து வேலூருக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அங்கேயே இருந்தால் பரம்பரை போர் தொடரும் என்று ஆங்கிலேயர்கள் அஞ்சினர். அதனால் வேலூர் கோட்டையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இக்கோட்டை கி.பி 1295-ல் கட்டப்பட்டது. திப்புவின் பிள்ளைகளை சிறை வைப்பதாக இருந்தாலும் கூட கோட்டையில்தான் அவர்களை சிறையிட முடிந்தது! சிறை அவர்களுக்கு அரண்மனையாய் இருந்தது.

திப்புவின் ஆட்சிக்காலம் போரிலும், போருக்கு பிந்தைய நிவாரண பணிகளிலும், அடுத்த கட்ட போருக்கான ஆயத்தப் பணிகளிலுமே கழிந்தன. இடையிடையே தன் அருமை மனைவியோடு கழித்த பேரின்ப பொழுதுகளும் உண்டு. அதன் சாட்சியாக 12 ஆண் பிள்ளைகள், 8 பெண் பிள்ளைகள் அவரது வாரிசுகளாக வாழ்ந்தனர். இவர்களில் பலர் அரச வாழ்க்கையை துறந்து, அரசியல் கைதிகளாக வேலூரில் சிறையிடப்பட்டார்கள். திப்புவின் அமைச்சரவை சகாக்கள் 24 பேர், அவர்களை சார்ந்த அலுவலர்கள், உதவியாளர்கள், தளபதிகள், உறவினர்கள் என பெரும் கூட்டமே சிறைவைக்கப் பட்டது.

கனவுக் கோட்டை
---------------------------

திப்புவின் மூத்த மகன் பத்தே ஹைதரை மைசூரின் ஆட்சியாளராக நியமிக்க ஆங்கிலயர்களிடம் சிலர் பேசினார்கள். நெருப்பை தங்கள் தலையில் சுமக்க அவர்கள் தயாரில்லை. ஆயினும், அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்ட திப்புவின் பிள்ளைகளுக்கு ஆறுதல் தரும் பொருட்டு மாதந்தோறும் மான்யம் வழங்கப்பட்டது.

இதன் நோக்கம் புரட்சிகர சிந்தனைகள் வரக்கூடாது என்பதே. ஆனால் அமைதியாய் ஒரு புரட்சி உருவாகிக் கொண்டிருந்தது. திப்புவின் வாரிசுகள், அமைச்சர்கள், தளபதிகள், உதவியாளர்கள் உறவினர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கோட்டையில் சிறையிலிருந்த போது, மைசூரிலிருந்து வேலூருக்கு ஏராளமானோர் குடிபெயர்ந்தனர்.

இந்த மக்களின் இடம் பெயர்வு குறித்து ஆங்கிலேயர்கள் பெரிதாக கவலைப்படவில்லை! இவர்கள் வேலூரிலும் அதனை சுற்றியும் வாழத் தொடங்கினர். இதுதான் பின்னாளில் பெரும் புரட்சிக்கு உதவியாக இருந்தது.

ராணுவ குழப்பம்
-------------------------

திப்பு கொல்லப்பட்ட ஏழாண்டுகள் அமைதியாக நகர்ந்தது. தென்னிந்தியாவையும், கிழக்கிந்தி யாவையும் ஏறத்தாழ வசப்படுத்திவிட்ட ஆங்கிலேயர்கள், வட இந்தியாவையும், மேற்கிந்தியாவையும் தங்கள் முழுமையான ஆளுகைக்குள் கொண்டு வர கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் ராணுவம் இரு பிரிவுகளாக இருந்தது. ஒரு பிரிவில் ஆங்கிலேயர்கள் மட்டுமிருந்தனர். மற்றொரு பிரிவில் இந்தியர்கள் இருந்தனர். இதில் மலையாள முஸ்லிம்களும், தெலுங்கர்களும், குறைவான எண்ணிக்கையில் தமிழர்களும் இருந்தனர்.

ஆயிரம் பேர் கொண்ட இந்திய படைக்கு ஒரு ஆங்கிலேயரே தளபதியாக இருப்பார். இந்திய வீரர்கள் எவ்வளவு தான் தியாகம் செய்தாலும் பெரிய பதவிகளுக்கு வரமுடியாது. நல்ல சம்பளத்தை பெற முடியாது. இது படையினரிடையே அதிருப்தியை வளர்த்தது. இது தவிர ராணுவத்தில் புதிய விதிகளும், கட்டுப்பாடுகளும் புகுத்தப்பட்டன. இந்துக்கள் திருநீறு பூசக்கூடாது என்றும், கடுக்கண்கள் அணியக் கூடாது என்றும், முஸ்லிம்கள் தாடி வைக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டது.

மத உணர்வுகளில் ஆழமான நம்பிக்கைக் கொண்ட இந்திய வீரர்கள் கொந்தளித்தனர். மேலும் மார்பில் சிலுவை போன்ற ஒரு பொருளை அணிய வேண்டுமென்றும், ஐரோப்பியர் அணிவதைப் போன்ற தொப்பிகளை போட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த புதிய கட்டளைகளை இந்திய வீரர்கள் அநேகமானோர் ஏற்க மறுத்தனர். மீறினால், சிறையிலடைப்போம் என்று ஆங்கிலேயர்கள் மிரட்டினர். இதனால் கோபமுற்ற ஒரு இந்திய வீரர், மேஜர் போஸ் என்ற அதிகாரியை தனது துப்பாக்கியால் தாக்கும் அளவுக்கு நிலைமை விபரீதம் ஆனது.

வீர ஊர் வேலூர்
-----------------------
1806- ஏப்ரல், மே மாதங்களில் வேலூரி லிருந்த இந்திய வீரர்களுக்கு ஐரோப்பிய மாதிரி தொப்பிகள் வரவழைக்கப்பட்டு அனைவரும் அணியும் படி கட்டாயப்படுத்தப்பட் டனர். இவையனைத்தையும் சிறையிலிருந்த திப்புவின் வாரிசுகள் கவனித்துக் கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய சிப்பாய்கள், தொப்பிகளை அணிய மாட்டோம் என்று கூறி, தலையில் கைக்குட்டைகளை கட்டிக் கொண்டு கலகம் செய்தனர். பலர் கைது செய்யப் பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றவர்கள் அன்று மாலை ஆயுதங்களை எடுக்க மறுத்தனர். எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தாதீர்கள் என்று இந்து மற்றும் முஸ்லிம் வீரர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சென்னைக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கலகத்துக்கு காரணமான ஒரு இந்து வீரருக்கும், ஒரு முஸ்லிம் வீரருக்கும் தலா 900 கசையடிகள் வழங்கப்பட்டது. மேலும் 19 பேருக்கு தலா 500 கசையடிகள் வழங்கப்பட்டது. புரட்சியின் முதல் கட்டமாக நடைபெறும் சம்பவங்களை கவனித்துக் கொண்டிருந்த திப்புவின் வாரிசுகளும், அவர்களை சார்ந்த போர் நிபுணர்களும் இதை ஒருமுகப்படுத்தும் வேலைகளை தொடங்கினர்.

1806- ஜுன் 17 அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியை தொடங்குவது பற்றி யோசிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜுலை மாதம் ஒத்திவைப்பதாக முடிவு செய்து வேலைகள் தொடங்கப்பட்டன. திப்புவின் மகன்களில் மூன்றாவது மகன் மொகைதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் இப்புரட்சியில் நேரடியாக பங்கேற்றனர். மூத்தவர் பத்தே ஹைதர் தலைமை வகித்தார். வேலூரில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, சிறையிலிருந்து விடுதலையாவது அவர்களது முதல் திட்டமாக இருந்தது. அடுத்து வெளியிலிருந்து ராணுவ உதவிகளை பெற்று மீண்டும் மைசூரில் ஆட்சியை நிறுவுவது அவர்களது இலக்காக இருந்தது.

அதற்கேற்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டது. புரட்சியின் போது, கோட்டைக்கு வெளியே வாழும் மக்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அவர்களை தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டது. கோட்டைக்குள் எழுந்திருக்கும் பரபரப்புகளை மோப்பம் பிடித்து, ஆங்கிலேயர்கள் உஷாராகிவிடக் கூடாது என்பதற்காக மற்றொரு திட்டமும் வகுக்கப்பட்டது.

திப்பு சுல்தானின் பிள்ளைகளுக்கு ஆங்கிலேயர்கள் திருமணம் செய்யும் அனுமதியை வழங்கியிருந்தார்கள். அதன்படி பலர் திருமணம் செய்து கொண்டனர்.

இப்போது அந்த அனுமதி புரட்சிக்கும் பயன்பட்டது.திப்புவின் ஏழாவது மகள் நூருன்னிஸா பேகத்திற்கு 1806- ஜுலை 10 அன்று திருமணம் என திப்பு மகன்கள் அறிவித்தனர். அதையட்டி அரச முறைப்படி திருமணம் நடைபெற வேண்டுமென்பதால், இதை ஆங்கிலேயர்களிடம் முறைப்படி தெரிவித்து சில கெடுபிடிகளை தளர்த்திக் கொண்டனர். சீர் எடுப்பது, சடங்குகள் நடப்பது என்ற போர்வையில் தூதுச் செய்திகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. சோதனைச் சாவடிகளில் கெடுபிடிகள் குறைந்தன. மிக ராஜதந்திரமாக காய்கள் நகர்த்தப் பட்டன. ஆங்கிலேய அதிகாரிகள் சிறைக்குள் ரோந்து வருவதும் குறைந்ததால், எல்லாம் வசதியாய் அமைந்தது. இந்திய வீரர்கள் மட்டுமே வலம்வந்து, ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தென் தமிழகத்தின் பாளையக்காரர்களும், மராட்டியர்களும் தங்கள் தூதுவர்களை வேலூர் கோட்டைக்கு அனுப்பி புரட்சி குறித்தும், அடுத்து இணைந்து பணியாற்றுவது குறித்தும் தகவல் பரிமாறிக் கொண்டனர். புரட்சி குறித்து பிரெஞ்சுகாரர்களுக்கும் ரகசிய தகவல் அனுப்பி உதவி கோரப்பட்டது.

பக்கீர்களின் பெரும் பிரச்சாரம்
---------------------------------------------

வெளியே மக்களை திரட்டவும், புரட்சியின் நம்பிக்கைகளை ஊட்டவும் திட்டம் தீட்டப்பட்டது. ஏழ்மை நிலையிலிருந்த இஸ்லாமிய அறிவு கொண்ட பலர் திரட்டப்பட்டு, அவர்களுக்கு; அரசியல் வகுப்பு எடுக்கப்பட்டது. இவர்களுக்கு பிரச்சார நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு களத்துக்கு அனுப்பப்பட்டனர். பள்ளிவாசல்கள், திருமண இடங்கள், மக்கள் கூடுமிடங்களில் இவர்கள் பாடல்களை பாடியும், புரட்சிகர உரை நிகழ்த்தியும் மக்களை தயார் படுத்தினார்கள். இவர்கள் ஃபக்கீர்கள் என அழைக்கப்பட்டனர்.

வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பக்கீர்களின் பிரச்சார யுத்தம் அனல் கக்கியது. இது படையினரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

வெடித்தது புரட்சி
-------------------------

1806- ஜுலை 9 அன்று வேலூர் கோட்டை பரபரப்பாக இருந்தது. நாளை திப்புவின் மகளுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்ற நினைப்பில் ஆங்கிலேயர்கள் அலட்சியமாக இருந்தனர். முதல் நாள் திருமண சிறப்பு விருந்து நடைபெற்றது.

வேலூர் புரட்சியின் தளபதிகளில் ஒருவரான ஜமேதார் ஷேக்காஸீம் என்பவர் கோட்டையின் காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தனக்கு நம்பகமான படை வீரர்களை முக்கிய இடங்களில் அமர்த்தினார். வழக்கத்திற்கு மாறாக, திருமண ஏற்பாடுகளை காரணம் காட்டி கூடுதல் வீரர்கள் கோட்டையில் தங்கினர். கோட்டையில் இருக்கும் பள்ளிவாசலில் உறுதி மொழியை பலர் எடுத்தனர். அந்த பள்ளிவாசல் வேலூர் புரட்சிக்கு களமாக இருந்தது. இப்போது தொழுகை மறுக்கப்படும் அதே பள்ளிவாசல் தான் அப்போதும் இன்னொரு புரட்சிக்காக காத்திருக்கிறது. அடுத்த நாள் ஜுலை 10 விடிகாலையில் அனைவரும் புரட்சிக்கு தயாரானார்கள்.அனைவரும் வழக்கமான போர் பயிற்சியில் ஈடுபடுவது போல் நடித்தனர்.

அந்த நேரத்தில் புரட்சி குறித்து விபரம் அறியாதவர்களை தங்களுக்கு ஆதரவாக திரட்டும் நோக்கில், புரட்சியாளர்களில் ஒரு பகுதியினர் ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய வீரர்களை கொல்கிறார்கள் என செய்தி பரப்பினர். இது ஏற்கெனவே போடப்பட்ட தந்திரத் திட்டங்களில் ஒன்றாகும். அது நன்றாகவே வேலை செய்தது. கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்கள் தாக்கப்பட்டனர். புரட்சி வெடித்தது. இறைவன் மிகப்பெரியவன் என்ற முழக்கம் கோட்டையை அதிரச் செய்தது. உறங்கிக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளும், தளபதிகளும், வீரர்களும் நிலை குலைந்தனர். பலர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர்.

புரட்சியில் 14- ஆங்கிலேய அதிகாரிகள் உட்பட சுமார் 191- ஆங்கிலேயர்கள் கொல்லப் பட்டார்கள். இந்த எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல்களும் உண்டு. ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அதே நேரம் வேலூர் கோட்டைக்குள் இருந்த ஆங்கிலேய பெண்களும், குழந்தைகளும் பாதுகாக்கப் பட்டார்கள். புரட்சியாளர்கள் கண்ணியமாக நடந்து கொண்டனர்.

வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்புவின் புலி கொடி ஏற்றப்பட்டது. ஏழாண்டுகள் கழித்து வரலாறு திரும்பியது. ஆனால் நீடிக்கவில்லை!

திசை மாறிய புரட்சி
-----------------------------

வேலூர் கோட்டையை வசப்படுத்திய புரட்சி யாளர்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், உற் சாகத்திலும், கட்டுப்பாட்டை இழந்தனர். கோட்டைக் குள்ளிருந்த ஆங்கிலேயர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்தினர். கோட்டைக்கு வெளியேயிருந்த பொதுமக்களும் உள்ளே வந்தனர். புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல், கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்களை கட்டுப்படுத்த திப்புவின் பிள்ளைகள் தவறிவிட்டனர்.

அதற்குள் வேலூரிலிருந்து 16- கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஆற்காட்டிலிருந்து, புரட்சியை ஒடுக்க ஆங்கிலேயப் படை விரைந்து வந்தது. இலக்குகளை மறந்து செயல்பட்டுக் கொண்டிருந்த புரட்சியாளர்களை அடக்க மிக எளிதாக, இன்னொரு வாசல் வழியாக கோட்டைக்குள் புகுந்தனர்.
உள்ளே நுழைந்த ஆங்கிலேயப் படைகள் புரட்சி யாளர்களை தேடி, தேடி கொன்றது. எட்டு மணி நேரத்தில் வேலூர் கோட்டையை ஆங்கிலேயர்கள் மீட்டனர். ஒரே நாளில் வேலூர் புரட்சி ஒடுக்கப்பட்டது.

திப்புவின் வாரிசுகளுக்கு பாதுகாப்பாக இருந்த புரட்சியாளர்கள் கோட்டையின் மதில் சுவரில் நிற்கவைத்து, பீரங்கிகளால் தூள், தூளாக்கப் பட்டனர். கோட்டையில் ஏற்றப்பட்ட திப்புவின் கொடி இறக்கப் பட்டு, மீண்டும் ஆங்கிலேயர் கொடி ஏற்றப்பட்டது.

விசாரணை தொடங்கியது
--------------------------------------

வேலூர் புரட்சிக்கான காரணங்களை ஆராய, புரட்சி முடிந்த இரண்டு நாள் கழித்து, ஜுலை 12, 1806 அன்று விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை ஆகஸ்ட் 9, 1806-ல் சமர்பிக்கப்பட்டது. ஆங்கிலேயப் படையிலிருந்த இந்திய வீரர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப் பட்டதுதான், புரட்சிக்கான மூலக்காரணம் என்றும், அதை திப்புவின் வாரிசுகள் புரட்சியாக மாற்றினார்கள் என்றும் விசாரணை அறிக்கை கூறியது.

புரட்சியில் ஈடுபட்ட முன்னணி வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. புரட்சியை அடக்கிய வீரர்களுக்கு சலுகைகளும், ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

மீண்டும் நாடுகடத்தல்
---------------------------------

திப்புவின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளும், மானியமும் குறைக்கப்பட்டது. அவர் களை தென்னிந்தியாவில் எங்கு வைத்திருந்தாலும் அது ஆபத்து என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், திப்புவின் வாரிசுகளையும், குடும்பத்தினரையும் வங்காளத்துக்கு நாடு கடத்தினர். அவர்களை சார்ந்த படையினர் மற்றும் ஆதரவாளர்களை திருநெல்வேலி உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு அனுப்பி, அங்கேயே தங்கவைத்து, அவர்களின் தொடர்புகளை சிதறடித்தனர்.

ஜனவரி 20, 1807 அன்று வேலூரிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு திப்புவின் குடும்பத்தை சேர்ந்த சுமார் 500 பேர் கொல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டனர். திப்புவின் அரச குடும்பத்து பெண்களில் விருப்பமுள்ளவர்கள் மைசூரிலும் மற்றவர்கள் வேலூரிலும் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

கொல்கத்தாவில் தங்க வைக்கப்பட்டவர்கள் காலப் போக்கில் அங்கேயே உயிர்துறந்து அடக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் வாரிசுகள் இன்றும் வறுமையிலும் புறக்கணிப்பிலும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.
17 -ஆண்டுகளாக ஆங்கிலேயரை குலை நடுங்க வைத்த திப்பு தன் 39-வது வயதிலேயே உயிர் தியாகியாகி வீரமரணம் அடைந்தது ஒரு வரலாற்று சோகமாகும். காவிரியே கண்ணீர் சிந்தும் கனத்த நினைவுகளோடு திப்பு சுல்தானின் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் சுதந்திர எரிமலையின் தீ சுவாலைகள் மட்டும் அடங்கவில்லை.

ஹைதர் அலி, அவர் மகன் திப்பு சுல்தானை தொடர்ந்து திப்புவின் பிள்ளைகளும் குடும்ப வழியில் தாய்நாட்டிற்காக களம் புகுந்தனர்.

ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். திப்பு என்றால் புலி என்று அர்த்தம். ஆம்! சிங்கமும், புலியும் பிறந்த பரம்பரையில் வந்தவர்கள் சீறுவதும், பாய்ந்து தாக்குவதும் இயல்புதானே!

நாடு கடத்தல்!
---------------------
திப்பு கொல்லப்பட்ட பிறகு, அவரது பிள்ளைகள் மைசூரிலிருந்து வேலூருக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அங்கேயே இருந்தால் பரம்பரை போர் தொடரும் என்று ஆங்கிலேயர்கள் அஞ்சினர். அதனால் வேலூர் கோட்டையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இக்கோட்டை கி.பி 1295-ல் கட்டப்பட்டது. திப்புவின் பிள்ளைகளை சிறை வைப்பதாக இருந்தாலும் கூட கோட்டையில்தான் அவர்களை சிறையிட முடிந்தது! சிறை அவர்களுக்கு அரண்மனையாய் இருந்தது.

திப்புவின் ஆட்சிக்காலம் போரிலும், போருக்கு பிந்தைய நிவாரண பணிகளிலும், அடுத்த கட்ட போருக்கான ஆயத்தப் பணிகளிலுமே கழிந்தன. இடையிடையே தன் அருமை மனைவியோடு கழித்த பேரின்ப பொழுதுகளும் உண்டு. அதன் சாட்சியாக 12 ஆண் பிள்ளைகள், 8 பெண் பிள்ளைகள் அவரது வாரிசுகளாக வாழ்ந்தனர். இவர்களில் பலர் அரச வாழ்க்கையை துறந்து, அரசியல் கைதிகளாக வேலூரில் சிறையிடப்பட்டார்கள். திப்புவின் அமைச்சரவை சகாக்கள் 24 பேர், அவர்களை சார்ந்த அலுவலர்கள், உதவியாளர்கள், தளபதிகள், உறவினர்கள் என பெரும் கூட்டமே சிறைவைக்கப் பட்டது.

கனவுக் கோட்டை
---------------------------

திப்புவின் மூத்த மகன் பத்தே ஹைதரை மைசூரின் ஆட்சியாளராக நியமிக்க ஆங்கிலயர்களிடம் சிலர் பேசினார்கள். நெருப்பை தங்கள் தலையில் சுமக்க அவர்கள் தயாரில்லை. ஆயினும், அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்ட திப்புவின் பிள்ளைகளுக்கு ஆறுதல் தரும் பொருட்டு மாதந்தோறும் மான்யம் வழங்கப்பட்டது.

இதன் நோக்கம் புரட்சிகர சிந்தனைகள் வரக்கூடாது என்பதே. ஆனால் அமைதியாய் ஒரு புரட்சி உருவாகிக் கொண்டிருந்தது. திப்புவின் வாரிசுகள், அமைச்சர்கள், தளபதிகள், உதவியாளர்கள் உறவினர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கோட்டையில் சிறையிலிருந்த போது, மைசூரிலிருந்து வேலூருக்கு ஏராளமானோர் குடிபெயர்ந்தனர்.

இந்த மக்களின் இடம் பெயர்வு குறித்து ஆங்கிலேயர்கள் பெரிதாக கவலைப்படவில்லை! இவர்கள் வேலூரிலும் அதனை சுற்றியும் வாழத் தொடங்கினர். இதுதான் பின்னாளில் பெரும் புரட்சிக்கு உதவியாக இருந்தது.

ராணுவ குழப்பம்
-------------------------

திப்பு கொல்லப்பட்ட ஏழாண்டுகள் அமைதியாக நகர்ந்தது. தென்னிந்தியாவையும், கிழக்கிந்தி யாவையும் ஏறத்தாழ வசப்படுத்திவிட்ட ஆங்கிலேயர்கள், வட இந்தியாவையும், மேற்கிந்தியாவையும் தங்கள் முழுமையான ஆளுகைக்குள் கொண்டு வர கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர்களின் ராணுவம் இரு பிரிவுகளாக இருந்தது. ஒரு பிரிவில் ஆங்கிலேயர்கள் மட்டுமிருந்தனர். மற்றொரு பிரிவில் இந்தியர்கள் இருந்தனர். இதில் மலையாள முஸ்லிம்களும், தெலுங்கர்களும், குறைவான எண்ணிக்கையில் தமிழர்களும் இருந்தனர்.

ஆயிரம் பேர் கொண்ட இந்திய படைக்கு ஒரு ஆங்கிலேயரே தளபதியாக இருப்பார். இந்திய வீரர்கள் எவ்வளவு தான் தியாகம் செய்தாலும் பெரிய பதவிகளுக்கு வரமுடியாது. நல்ல சம்பளத்தை பெற முடியாது. இது படையினரிடையே அதிருப்தியை வளர்த்தது. இது தவிர ராணுவத்தில் புதிய விதிகளும், கட்டுப்பாடுகளும் புகுத்தப்பட்டன. இந்துக்கள் திருநீறு பூசக்கூடாது என்றும், கடுக்கண்கள் அணியக் கூடாது என்றும், முஸ்லிம்கள் தாடி வைக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டது.

மத உணர்வுகளில் ஆழமான நம்பிக்கைக் கொண்ட இந்திய வீரர்கள் கொந்தளித்தனர். மேலும் மார்பில் சிலுவை போன்ற ஒரு பொருளை அணிய வேண்டுமென்றும், ஐரோப்பியர் அணிவதைப் போன்ற தொப்பிகளை போட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த புதிய கட்டளைகளை இந்திய வீரர்கள் அநேகமானோர் ஏற்க மறுத்தனர். மீறினால், சிறையிலடைப்போம் என்று ஆங்கிலேயர்கள் மிரட்டினர். இதனால் கோபமுற்ற ஒரு இந்திய வீரர், மேஜர் போஸ் என்ற அதிகாரியை தனது துப்பாக்கியால் தாக்கும் அளவுக்கு நிலைமை விபரீதம் ஆனது.

வீர ஊர் வேலூர்
-----------------------
1806- ஏப்ரல், மே மாதங்களில் வேலூரி லிருந்த இந்திய வீரர்களுக்கு ஐரோப்பிய மாதிரி தொப்பிகள் வரவழைக்கப்பட்டு அனைவரும் அணியும் படி கட்டாயப்படுத்தப்பட் டனர். இவையனைத்தையும் சிறையிலிருந்த திப்புவின் வாரிசுகள் கவனித்துக் கொண்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய சிப்பாய்கள், தொப்பிகளை அணிய மாட்டோம் என்று கூறி, தலையில் கைக்குட்டைகளை கட்டிக் கொண்டு கலகம் செய்தனர். பலர் கைது செய்யப் பட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மற்றவர்கள் அன்று மாலை ஆயுதங்களை எடுக்க மறுத்தனர். எங்கள் மத உணர்வுகளை புண்படுத்தாதீர்கள் என்று இந்து மற்றும் முஸ்லிம் வீரர்கள் முழக்கமிட்டனர்.

இதனால் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சென்னைக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கலகத்துக்கு காரணமான ஒரு இந்து வீரருக்கும், ஒரு முஸ்லிம் வீரருக்கும் தலா 900 கசையடிகள் வழங்கப்பட்டது. மேலும் 19 பேருக்கு தலா 500 கசையடிகள் வழங்கப்பட்டது. புரட்சியின் முதல் கட்டமாக நடைபெறும் சம்பவங்களை கவனித்துக் கொண்டிருந்த திப்புவின் வாரிசுகளும், அவர்களை சார்ந்த போர் நிபுணர்களும் இதை ஒருமுகப்படுத்தும் வேலைகளை தொடங்கினர்.

1806- ஜுன் 17 அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியை தொடங்குவது பற்றி யோசிக்கப்பட்டது. பின்னர் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஜுலை மாதம் ஒத்திவைப்பதாக முடிவு செய்து வேலைகள் தொடங்கப்பட்டன. திப்புவின் மகன்களில் மூன்றாவது மகன் மொகைதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும் இப்புரட்சியில் நேரடியாக பங்கேற்றனர். மூத்தவர் பத்தே ஹைதர் தலைமை வகித்தார். வேலூரில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, சிறையிலிருந்து விடுதலையாவது அவர்களது முதல் திட்டமாக இருந்தது. அடுத்து வெளியிலிருந்து ராணுவ உதவிகளை பெற்று மீண்டும் மைசூரில் ஆட்சியை நிறுவுவது அவர்களது இலக்காக இருந்தது.

அதற்கேற்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டது. புரட்சியின் போது, கோட்டைக்கு வெளியே வாழும் மக்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அவர்களை தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடத்தப்பட்டது. கோட்டைக்குள் எழுந்திருக்கும் பரபரப்புகளை மோப்பம் பிடித்து, ஆங்கிலேயர்கள் உஷாராகிவிடக் கூடாது என்பதற்காக மற்றொரு திட்டமும் வகுக்கப்பட்டது.

திப்பு சுல்தானின் பிள்ளைகளுக்கு ஆங்கிலேயர்கள் திருமணம் செய்யும் அனுமதியை வழங்கியிருந்தார்கள். அதன்படி பலர் திருமணம் செய்து கொண்டனர்.

இப்போது அந்த அனுமதி புரட்சிக்கும் பயன்பட்டது.திப்புவின் ஏழாவது மகள் நூருன்னிஸா பேகத்திற்கு 1806- ஜுலை 10 அன்று திருமணம் என திப்பு மகன்கள் அறிவித்தனர். அதையட்டி அரச முறைப்படி திருமணம் நடைபெற வேண்டுமென்பதால், இதை ஆங்கிலேயர்களிடம் முறைப்படி தெரிவித்து சில கெடுபிடிகளை தளர்த்திக் கொண்டனர். சீர் எடுப்பது, சடங்குகள் நடப்பது என்ற போர்வையில் தூதுச் செய்திகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. சோதனைச் சாவடிகளில் கெடுபிடிகள் குறைந்தன. மிக ராஜதந்திரமாக காய்கள் நகர்த்தப் பட்டன. ஆங்கிலேய அதிகாரிகள் சிறைக்குள் ரோந்து வருவதும் குறைந்ததால், எல்லாம் வசதியாய் அமைந்தது. இந்திய வீரர்கள் மட்டுமே வலம்வந்து, ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தென் தமிழகத்தின் பாளையக்காரர்களும், மராட்டியர்களும் தங்கள் தூதுவர்களை வேலூர் கோட்டைக்கு அனுப்பி புரட்சி குறித்தும், அடுத்து இணைந்து பணியாற்றுவது குறித்தும் தகவல் பரிமாறிக் கொண்டனர். புரட்சி குறித்து பிரெஞ்சுகாரர்களுக்கும் ரகசிய தகவல் அனுப்பி உதவி கோரப்பட்டது.

பக்கீர்களின் பெரும் பிரச்சாரம்
---------------------------------------------

வெளியே மக்களை திரட்டவும், புரட்சியின் நம்பிக்கைகளை ஊட்டவும் திட்டம் தீட்டப்பட்டது. ஏழ்மை நிலையிலிருந்த இஸ்லாமிய அறிவு கொண்ட பலர் திரட்டப்பட்டு, அவர்களுக்கு; அரசியல் வகுப்பு எடுக்கப்பட்டது. இவர்களுக்கு பிரச்சார நுட்பங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு களத்துக்கு அனுப்பப்பட்டனர். பள்ளிவாசல்கள், திருமண இடங்கள், மக்கள் கூடுமிடங்களில் இவர்கள் பாடல்களை பாடியும், புரட்சிகர உரை நிகழ்த்தியும் மக்களை தயார் படுத்தினார்கள். இவர்கள் ஃபக்கீர்கள் என அழைக்கப்பட்டனர்.

வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பக்கீர்களின் பிரச்சார யுத்தம் அனல் கக்கியது. இது படையினரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

வெடித்தது புரட்சி
-------------------------

1806- ஜுலை 9 அன்று வேலூர் கோட்டை பரபரப்பாக இருந்தது. நாளை திப்புவின் மகளுக்கு திருமணம் நடக்கப் போகிறது என்ற நினைப்பில் ஆங்கிலேயர்கள் அலட்சியமாக இருந்தனர். முதல் நாள் திருமண சிறப்பு விருந்து நடைபெற்றது.

வேலூர் புரட்சியின் தளபதிகளில் ஒருவரான ஜமேதார் ஷேக்காஸீம் என்பவர் கோட்டையின் காவல் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தனக்கு நம்பகமான படை வீரர்களை முக்கிய இடங்களில் அமர்த்தினார். வழக்கத்திற்கு மாறாக, திருமண ஏற்பாடுகளை காரணம் காட்டி கூடுதல் வீரர்கள் கோட்டையில் தங்கினர். கோட்டையில் இருக்கும் பள்ளிவாசலில் உறுதி மொழியை பலர் எடுத்தனர். அந்த பள்ளிவாசல் வேலூர் புரட்சிக்கு களமாக இருந்தது. இப்போது தொழுகை மறுக்கப்படும் அதே பள்ளிவாசல் தான் அப்போதும் இன்னொரு புரட்சிக்காக காத்திருக்கிறது. அடுத்த நாள் ஜுலை 10 விடிகாலையில் அனைவரும் புரட்சிக்கு தயாரானார்கள்.அனைவரும் வழக்கமான போர் பயிற்சியில் ஈடுபடுவது போல் நடித்தனர்.

அந்த நேரத்தில் புரட்சி குறித்து விபரம் அறியாதவர்களை தங்களுக்கு ஆதரவாக திரட்டும் நோக்கில், புரட்சியாளர்களில் ஒரு பகுதியினர் ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய வீரர்களை கொல்கிறார்கள் என செய்தி பரப்பினர். இது ஏற்கெனவே போடப்பட்ட தந்திரத் திட்டங்களில் ஒன்றாகும். அது நன்றாகவே வேலை செய்தது. கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்கள் தாக்கப்பட்டனர். புரட்சி வெடித்தது. இறைவன் மிகப்பெரியவன் என்ற முழக்கம் கோட்டையை அதிரச் செய்தது. உறங்கிக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரிகளும், தளபதிகளும், வீரர்களும் நிலை குலைந்தனர். பலர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர்.

புரட்சியில் 14- ஆங்கிலேய அதிகாரிகள் உட்பட சுமார் 191- ஆங்கிலேயர்கள் கொல்லப் பட்டார்கள். இந்த எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல்களும் உண்டு. ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அதே நேரம் வேலூர் கோட்டைக்குள் இருந்த ஆங்கிலேய பெண்களும், குழந்தைகளும் பாதுகாக்கப் பட்டார்கள். புரட்சியாளர்கள் கண்ணியமாக நடந்து கொண்டனர்.

வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்புவின் புலி கொடி ஏற்றப்பட்டது. ஏழாண்டுகள் கழித்து வரலாறு திரும்பியது. ஆனால் நீடிக்கவில்லை!

திசை மாறிய புரட்சி
-----------------------------

வேலூர் கோட்டையை வசப்படுத்திய புரட்சி யாளர்கள், உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும், உற் சாகத்திலும், கட்டுப்பாட்டை இழந்தனர். கோட்டைக் குள்ளிருந்த ஆங்கிலேயர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதில் கவனம் செலுத்தினர். கோட்டைக்கு வெளியேயிருந்த பொதுமக்களும் உள்ளே வந்தனர். புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லாமல், கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்களை கட்டுப்படுத்த திப்புவின் பிள்ளைகள் தவறிவிட்டனர்.

அதற்குள் வேலூரிலிருந்து 16- கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஆற்காட்டிலிருந்து, புரட்சியை ஒடுக்க ஆங்கிலேயப் படை விரைந்து வந்தது. இலக்குகளை மறந்து செயல்பட்டுக் கொண்டிருந்த புரட்சியாளர்களை அடக்க மிக எளிதாக, இன்னொரு வாசல் வழியாக கோட்டைக்குள் புகுந்தனர்.
உள்ளே நுழைந்த ஆங்கிலேயப் படைகள் புரட்சி யாளர்களை தேடி, தேடி கொன்றது. எட்டு மணி நேரத்தில் வேலூர் கோட்டையை ஆங்கிலேயர்கள் மீட்டனர். ஒரே நாளில் வேலூர் புரட்சி ஒடுக்கப்பட்டது.

திப்புவின் வாரிசுகளுக்கு பாதுகாப்பாக இருந்த புரட்சியாளர்கள் கோட்டையின் மதில் சுவரில் நிற்கவைத்து, பீரங்கிகளால் தூள், தூளாக்கப் பட்டனர். கோட்டையில் ஏற்றப்பட்ட திப்புவின் கொடி இறக்கப் பட்டு, மீண்டும் ஆங்கிலேயர் கொடி ஏற்றப்பட்டது.

விசாரணை தொடங்கியது
--------------------------------------

வேலூர் புரட்சிக்கான காரணங்களை ஆராய, புரட்சி முடிந்த இரண்டு நாள் கழித்து, ஜுலை 12, 1806 அன்று விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை ஆகஸ்ட் 9, 1806-ல் சமர்பிக்கப்பட்டது. ஆங்கிலேயப் படையிலிருந்த இந்திய வீரர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப் பட்டதுதான், புரட்சிக்கான மூலக்காரணம் என்றும், அதை திப்புவின் வாரிசுகள் புரட்சியாக மாற்றினார்கள் என்றும் விசாரணை அறிக்கை கூறியது.

புரட்சியில் ஈடுபட்ட முன்னணி வீரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. புரட்சியை அடக்கிய வீரர்களுக்கு சலுகைகளும், ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

மீண்டும் நாடுகடத்தல்
---------------------------------

திப்புவின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட உதவிகளும், மானியமும் குறைக்கப்பட்டது. அவர் களை தென்னிந்தியாவில் எங்கு வைத்திருந்தாலும் அது ஆபத்து என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், திப்புவின் வாரிசுகளையும், குடும்பத்தினரையும் வங்காளத்துக்கு நாடு கடத்தினர். அவர்களை சார்ந்த படையினர் மற்றும் ஆதரவாளர்களை திருநெல்வேலி உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு அனுப்பி, அங்கேயே தங்கவைத்து, அவர்களின் தொடர்புகளை சிதறடித்தனர்.

ஜனவரி 20, 1807 அன்று வேலூரிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு திப்புவின் குடும்பத்தை சேர்ந்த சுமார் 500 பேர் கொல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டனர். திப்புவின் அரச குடும்பத்து பெண்களில் விருப்பமுள்ளவர்கள் மைசூரிலும் மற்றவர்கள் வேலூரிலும் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

கொல்கத்தாவில் தங்க வைக்கப்பட்டவர்கள் காலப் போக்கில் அங்கேயே உயிர்துறந்து அடக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் வாரிசுகள் இன்றும் வறுமையிலும் புறக்கணிப்பிலும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.
Via FB வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

இரத்தக் கொதிப்பு பற்றிய சில யோசனைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:11 | Best Blogger Tips
* இரத்தக் கொதிப்பு ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல. அது சுகவீனத்தின் அடிப்படையான ஒரு குறியே.

* சுவாசம் சீராக வேண்டும். தீர்க்கமாக மூச்சு இழுத்து விட்டுப் பழக வேண்டும். இரத்தக் கொதிப்பு இரத்தக் குழாய்களையும் இருதயத்தையுமே பொறுத்தது. ஆகவே அது உடலில் ஓடும் இரத்தத்தைப் பொறுத்திருக்கிறது.

* தினசரி கவனமாகப் பயிற்சி செய்யுங்கள். இது உடலை நன்றாக வைக்கும். இரத்த ஓட்டம் சரியாக நடைபெறுவதற்கு இது பெரிதும் துணை செய்யும்.

* அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் அதிர்ச்சியும் மனக் கிளர்ச்சியும் இரத்தக் கொதிப்பை அதிகம் ஆக்கும். மன வேலைகளில் ஈடுபடும் பொழுது இரண்டு மணிக்கு ஒரு தடவை ஐந்து நிமிஷமாவது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் அறையிலாவது சற்று நடமாடினால் போதும். உடலுழைப்பின் பொழுது, உணவு வேளைக்குப் பிறகு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

* மலம் தினசரி கழிய வேண்டும். மலச்சிக்கல் அதிகம் ஆகிவிட்டால், இரத்த ஓட்டம் மெதுவாகி, கொதிப்பு ஏற்படக் காரணமாகிறது. இரண்டு தடவையாவது தினசரி மலம் கழிய வேண்டும். ஆறு தடவை ஜலபாதை செய்ய வேண்டும். நன்றாக வேர்வையும் வர வேண்டும்.

* உடலில் ஆல்கலைன் சத்து அதிகம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இது இழையங்களைத் தூய்மைப் படுத்துவதோடு, இளஞ் செல்லுகளை வளர்த்துப் புத்துயிர் கொடுக்கிறது. பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் இவை எல்லாம் நல்ல காரச் சத்துள்ள உணவுகள்.

* இறைச்சி சாப்பிடக் கூடாது. இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணம், கொலஸ்ட்ரால் என்ற வழவழப்பான ஒரு பொருள் இரத்த நாடிகளைத் தடிக்கச் செய்வதே. இந்தக் கொலஸ்ட்ரால் இறைச்சியில் அதிகம் உண்டு. ஆகவே, இறைச்சிக்குப் பதிலாக பால், பாலாடை, அவரை, பட்டாணி, பீன்ஸ், கொட்டைகள், முழுத் தானியங்கள் உபயோகிக்க வேண்டும்.

* இரத்தக் கொதிப்பை வெள்ளைப் பூண்டினால் குறையுங்கள். இதனால் இரத்தக் கொதிப்பு விரைவில் தணிகிறது. பதார்த்தங்களுக்கு ருசி கொடுக்கவும், சூப் வகைகளுக்கும் வெள்ளைப்பூண்டு உபயோகமாகிறது. அரைப் பூண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு கோப்பைப் பாலில் காய்ச்சி, இரவில் சாப்பிட்டால் நல்ல டானிக் போல் அமையும்.

* மனக்கிளர்ச்சி கூடாது. கோபம், பொறாமை, பகை, கவலை இவை எல்லாம் மூளைக் கோளங்களைப் பாதிப்பதோடல்லாமல், இரத்தக் கொதிப்பையும் அதிகமாக்குகிறது. எப்பொழுதும் மன அமைதி பெற்று, சந்தோஷமாயிருங்கள்.

 Via FB   Karthikeyan Mathan

உணவைக் குறைத்து உடலை அழகாக்க..!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:10 | Best Blogger Tips
உணவைக் குறைத்து உடலை அழகாக்க..!

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

பழங்கள் சாப்பிடும் முறை:

* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்:

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.

* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.

* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.

* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.

* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.

* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.

* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

பழங்கள் சாப்பிடும் முறை:

* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.

* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 

பால தண்டாயுதபாணி ...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:03 | Best Blogger Tips
பால தண்டாயுதபாணி ... 

தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம்.  கிடைப்பது மிக புண்ணியம். தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.
இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது.  விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும்.  முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர்.  பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும்.  ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள்  போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும்.  இது போகரின் கை வண்ணம்.

அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார்.  இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது.  அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது.  ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல்.  இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம். தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.
இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.
 
Via FB சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்
 

தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:03 | Best Blogger Tips
தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட் ..

ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது - முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை 
தேங்காய் எண்ணையே கலப்படம் தானா ?

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?

தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..

பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .. 

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் 

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..
சாம்பிளுக்கு சில படங்கள்.

பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?

தோல் வறண்டு போகும் 
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும் 
முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும் 
அரிப்பு வரும் ..
ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது ..
சாம்பிளுக்க்கு மினரல் ஆயில் எப்படி வறட்சியை உண்டாக்க்கும் 

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள் 

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.ஆமாம் கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் வழுக்கை ஆவது - முடி கொட்டுவது மட்டும் இல்லாமல் முடி நரைக்கவும் செய்யும் எனபது உண்மை
தேங்காய் எண்ணையே கலப்படம் தானா ?

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?

தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ..

பின் எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?

தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது

மினரல் ஆயில் என்றால் என்ன ?

பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும் .கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் ..

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான்

தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..
சாம்பிளுக்கு சில படங்கள்.

பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது ...

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?

தோல் வறண்டு போகும்
முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்
முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளையாகும்
அரிப்பு வரும் ..
ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது ..
சாம்பிளுக்க்கு மினரல் ஆயில் எப்படி வறட்சியை உண்டாக்க்கும்

தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள் ..டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை வாங்காதீர்கள்

குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை.
 
Via Fb ஆரோக்கியமான வாழ்வு

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்:

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:02 | Best Blogger Tips
பயனுள்ள மருத்துவ குறிப்புகள்:

* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 

ஆண்மையை வலுவூட்டும் செவ்வாழைப்பழம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:58 | Best Blogger Tips
ஆண்மையை வலுவூட்டும் செவ்வாழைப்பழம்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.நரம்பு தளர்ச்சி குணமடையும்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.

குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 

தங்கமா அல்லது ஈக்விட்டியா- எது சிறந்தது?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:55 | Best Blogger Tips
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் ஈக்விட்டிக்களுக்கு பதிலாக தங்கத்தில் அதிக பணத்தை முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். தங்கம் பல வருட காலமாக ஒரு நிகரற்ற முதலீடாக விளங்கி வந்துள்ளது என்று சுட்டிக்காடும் சிலர், அதன் நீண்ட கால நல்வாய்ப்பை ஒப்பிடுகையில் தற்போதைய சரிவை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் சிலரோ, தங்கத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறுகின்றனர்.

பென் பெர்னான்கே, அவருடைய பத்திரிக்கையாளர் கூட்டத்தின் போது, ஒரு மாதத்தில் சுமார் 85 பில்லியன் டாலர் டிரெஷரி அசிஸ்டன்ஸ் அளிக்கும் குவான்டிட்டேட்டிவ் ஈஸிங் ப்ரொக்ராம் 2013 ஆம் வருட இறுதியில் நிறுத்தப்படக்கூடும் என்று அறிவித்துள்ளதைத் தொடர்ந்து சந்தைகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. தங்கம் மற்றும் ஈக்விட்டி மாற்றகங்களைப் பொறுத்தவரையில், பயம் கலந்த விற்பனை தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் இவற்றுள் எது சிறந்தது என்று தீர்மானிப்பது மிகவும் சிக்கலானதாகும். இவற்றுள் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில தகவல்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

தங்கத்தின் உன்மை நிலை

உண்மையில் முதலீடுகளைப் பொறுத்த வரையில், கடந்த 12 ஆண்டுகளாக, முன்னணியில் இருந்து வந்த தங்கம் 2013 ஆம் ஆண்டு வரையில் முதலீட்டாளர்களின் கண்ணின் மணியாய் இருந்துள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடியின் அறைகூவல்களுக்குப் பின் முதலீட்டாளர்கள் தங்கத்தில் பிராஃபிட்களை புக் செய்துள்ளனர். உலகின் மிகப்பெரும் இடிஎஃப் ஃபண்ட் நிறுவனமான எஸ்பிடிஆர் கூட 1000 டன்கள் வரையிலான வரலாறு காணா சரிவைச் சந்தித்துள்ளது

பிராஃபிட் புக்கிங்கில்

சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் தங்க இறக்குமதி வேரூன்ற ஆரம்பித்துள்ளது. எனினும், அதிகரிக்கும் விலைகள் மற்றும் ரூபாய் மதிப்பின் சரிவு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியவர்களான, தங்கத்தை வாங்கும் நுகர்வோர்கள் தான் எவ்வாறாயினும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், சர்வதேச விலைகள் பலத்த அடி வாங்கியிருப்பதனால், முதலீட்டாளர்கள் இப்போதும் பிராஃபிட் புக்கிங்கில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தங்க இருப்பின் அனுகூலங்களைக் குறைக்கக்கூடியதாய் உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாய் இது வரை காணாத அளவில் சுமார் 61.15 வரை குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி தங்க இறக்குமதி சமநிலையை பாதித்து, விலையேற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்நிலையில், இந்திய கரன்ட் அக்கவுன்ட் குறைபாடுகள் அரசின் நிலையை கவலைக்கிடமாக்கியுள்ளது. மேலும், தங்க இறக்குமதிகளின் மீதான அதீத அடக்குமுறைகளும் தவிர்க்க இயலாதவையாய் உள்ளன

ஈக்விட்டிகளின் நன்மை

இந்திய ஈக்விட்டிகள் கடினமானதொரு துறையாகக் கருதப்படுகின்றன. மேக்ரோ மட்டத்தில் காணப்படும் இந்த தொய்வு இத்தகைய மந்தமான செயலாக்கத்தின் காரணியாகும். யு.எஸ். டோவ் ஜோன்ஸுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கையில், வர்த்தக வட்டியானது யு.எஸ். இன்டெக்ஸ் மற்றும் டாலருக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதையும், இந்தியா போன்றதொரு வளரும் நாட்டின் சந்தை, அதனுடைய சொந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருவதையும் காணலாம்.

இந்திய முதலீட்டு

உற்பத்தித்திறன், முதலீடுகள், அதீத பணவீக்கம் மற்றும் கிரீன் ஃபீல்டு செயல்திட்டங்கள் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள், இந்திய முதலீட்டு சுழற்சியை குறைவாக்கி உள்ளன. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குப் பின் ஃபாரீன் இன்ஸ்ட்டிட்யூஷனல் இன்வெஸ்டர்ஸ் (எஃப்ஐஐ'ஸ்) கூட போட்ட பணத்தை பறித்துக் கொண்டு விட்டது.

இறுதி அறைகூவல்

இந்த சந்தர்ப்பத்தில், ஈக்விட்டி சந்தைகளே பெரும் அபிமானத்துக்கு உரியவையாய் தோன்றுகின்றன. இனி வரும் மாதங்களில், நல்ல பங்குகளின் மதிப்பு, இந்த சந்தர்ப்பத்தில், ஈக்விட்டி சந்தைகளே பெரும் அபிமானத்துக்கு உரியவையாய் தோன்றுகின்றன. இனி வரும் மாதங்களில், நல்ல பங்குகளின் மதிப்பு, கட்டாயமாக பன்மடங்கு பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை. குறைந்த கால வாய்ப்புகள் ஏதேனும் இருப்பின், நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம்;

ரூபாயின் விளைவுகள்

சீன சந்தைகளின் மந்தநிலை மற்றும் அவர்களின் தங்க உபயோகம் ஆகியவை புல்லியன்களுக்கான தேவையையும் கீழிறங்கச் செய்துள்ளன. இவ்வருடத்தில் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்குப் பின்னும் தங்க விலையில் பயங்கர இறக்கத்தைச் சந்தித்துள்ள இந்தியா, ரூபாயின் மதிப்பு உயரும் தறுவாயில், தங்கத்தின் விலையில் மேலும் பல சிக்கல்களைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

பங்கு சந்தையில் நம்பிக்கையூட்டும் விஷயம்

1. யு.எஸ். ஈக்விட்டிகளின் உயர்வு ஏனைய சந்தைகளிலும் அத்தகைய ஒரு நம்பிக்கை உணர்வைப் பரவச் செய்யும்.
2. மிக அதிகமான பங்குகளை வைத்திருப்பதனால், சீனா தற்சமயம் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.
3. இந்திய சந்தைகள் பல மாத விலைக்குறைப்புகளைக் கொண்டிருக்கும் இச்சமயம், சிறப்பான தள்ளுபடி விலைகளில் பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஈக்விட்டி

ஈக்விட்டிகளைப் பொறுத்தவரை, ஸ்டாக் பிக்கிங்கில் கவனமாகத் தேர்ந்தெடுத்தல் அவசியம், ஆனால் செர்ரி பிக்கிங் தான் நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டியது. பெர்னான்கே, தான் க்யூஇ (QE) அஜெண்டாவை சுத்தமாக ஒழிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்
 
Via Fb ஆரோக்கியமான வாழ்வு

ஹோம மந்திரங்களும், அவற்றின் பலன்களும் ...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:50 | Best Blogger Tips

1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.

2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.

3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.

4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.

5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.

6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.

7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.

8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.

9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.

10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.

11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.

12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.

13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.

14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.

15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.

16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.

17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.

18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.

19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.

20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.

21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.

22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.

23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.

24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.

25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.

26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.

27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.

28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.

29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.

30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.

31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.

32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.

33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.

34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.

35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.

36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.

37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.

38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.

39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.

40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.

41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.

42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.

43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.

44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.

45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.

46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.

47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.
 
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா? சூரியகாந்தி எண்ணை சாப்பிடலாமா

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | | Best Blogger Tips


முன்பு எல்லாம் என்ன சொன்னார்கள்? தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிட கூடாது. சூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி ஆயிலில் சமை, சோயா ஆயிலில் சமை என்றார்கள்.


தேங்காய் முழுக்க இருப்பது சாச்சுரேட்ட பேட் (உறைந்த கொழுப்பு). கெமிக்கல் மூலம் எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்ணெயில் இருப்பது பாலி அன் சேச்சுரேட்டட் பேட் என்ற உறையாத வகை கொழுப்பு. உறைந்த கொழுப்பு கொலாஸ்டிராலை அதிகரிக்கும் என்றார்கள். உறையாத கொழுப்பு கொல்ச்டிராலை குறைக்கும் என்ரார்கள். அதை நம்பி பலரும் பாரம்பரியமா உன்டு வந்த தேங்காய் எண்னெய் ச்மையலை நிறுத்திவிட்டு சூரியகாந்தி, எண்னெய்வித்துக்களுக்கு மாறினார்கள்.



ஆனால் இந்த அறிவாளிகள் சொல்லாமல் விட்ட விஷயம் தேங்காய் எண்ணெய் அதிகரிப்பது நல்ல கொல்ஸ்டிராலை என்பதை. நல்ல கொல்ஸ்டிரால் உங்கள் ரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட கொலஸ்டிராலை மீண்டும் லிவருக்கு கொன்டுபோய் ஜீரணம் செய்வித்துவிடும். அந்த நல்ல பணியை செய்யும் எச்டிஎல் கொலஸ்டிஆரலை தேங்காய் எண்னெய் அதிகரிக்கும். அந்த நல்ல கொலச்டிராலை எண்னெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்னெய்கள் குறைக்கும்.



மேலும் தேங்காயில் இருக்கும் கொழுப்பு லாரிக் அமிலம் என்ற வகை கொழுப்பு. இது தேங்காய்பாலுக்கு அடுத்து மனிதனுக்கு கிடைக்கும் ஒரே சோர்ஸ் தாய்ப்பால் தான்!!!!!!!



தாய்ப்பால் மூலம் ஒரு குழந்தைக்கு தினம் 1 கிராம் லாரிக் அமிலம் கிடைக்கும். மூன்று ஸ்பூன் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய்யை உன்டால் அல்லது ஏழெட்டு தேங்காய் துன்டுகளை இது மனிதனுக்கு கிடைக்கும். இத்தனை அற்புதமான ஒரு பொருளை சாப்பிடவிடாமல் தடுத்து பாக்டரியில் இருந்து எடுக்கும் ஹைட்ரஜனேட்டட் எண்னெய்களை உண்ண வைத்ததன் பலன் அவற்றில் ட்ரான்ஸ்ஃபேட் எனும் வகை ஆபத்தான கொழுப்பு சேர்ந்து இதய அடைப்புகளுக்கும், மரணங்களுக்கும் காரணம் ஆகிவிட்டது.



இது குறித்து நிகழ்த்தபாட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது



http://jn.nutrition.org/content/131/2/242.full



இரு குழுக்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டன. ஒரு குழு சோயா எண்ணெய்யை சமையலுக்கு உட்கொண்டது. இன்னொரு குழு லாரிக் அமிலம் நிரம்பிய தேங்காய் எண்னெயால் ச்மைக்கபட்ட உனவுகலை உன்டது.



ஆய்வு முடிவில் தேங்காய் எண்னெயில் செய்தவற்றை உன்ட குழுவினருக்கு நல்ல கொலஸ்டிரால் கணிசமாக அதிகரித்தது. ட்ரைகிளிசரைட்ஸும் குறைந்தது. அவர்கள் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் குறைந்தது. மோசமான எல்டிஎல் கொலஸ்டிரால் எண்ணிக்கையில் எந்த வித்தியாசமும் இல்லை (ஆனால் எல்டிஎல்/ எச்டிஎல் ரேஷியோ அதிகரித்தால் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் கணிசமாக குறையும்).



அதை விட முக்கியமாக "வெஜிட்டபிள் ஆயிலில் இருந்து எடுத்த எண்னெயில் சமைத்தவர்களின் எச்டிஎல் கொலஸ்டிரால் குறைந்தது" என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.



அப்புறம் ஏன் நாட்டில் ஹார்ட் அட்டாக்குகள் பெருகாது என கேட்கிறேன்?





கொழுப்பை குறைக்கும் தேங்காய் . . .



தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.



தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.



அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.



தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.



சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென் னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.



தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.



தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.



தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல்.



ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?



புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.



தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?



தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.



மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.



மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.



தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.



தைலங்கள் . . .



தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.



எளிதில் ஜீரணமாகும் . . .



தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.



பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.



வயிற்றுப்புண்கள். . .



தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.



தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?



மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.


வைரஸ் எதிர்ப்பு . . .

தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது


ஆண்மைப் பெருக்கி . . .


முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.


குழந்தை சிவப்பு நிறமாக . . .


குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.


இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?


மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.


இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.


இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.


ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.


இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.


இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.


இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.


இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.



தேங்காய் எண்ணெய் . . .

இன்றைய நவீன உலகில் பலரு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தலை‌யி‌ல் தே‌ய்‌ப்பதே இ‌ல்லை. தலை முடி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டு முக‌ம் அழுது வ‌ழியு‌ம் எ‌ன்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும்.

ஆனா‌ல், தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ப் போ‌ன்று உடலு‌க்கு ந‌ன்மை செ‌ய்யு‌ம் ஒரு பொரு‌ள் வேறு எதுவுமே இ‌ல்லை எ‌ன்று கூறலா‌ம். தலை‌க்கு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது. தலை‌யி‌ன் தோ‌ல் பகு‌தியை வற‌ண்டு ‌விடாம‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் பாதுகா‌க்கு‌ம்.

மேலு‌ம், கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை உட‌ல் முழுவது‌ம் பூ‌சி‌க் கொ‌ண்டு ஊற‌வி‌ட்டு‌க் கு‌ளி‌க்கலா‌ம். இது தோலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம். இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம்.

பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.

வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.

வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.

புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.

தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.

உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.

தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். நல்ல பலனை அளிக்கும்.

தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.

சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

சாளக்கிராமம் என்பது என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:48 | Best Blogger Tips


சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.

சிறப்பு: சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம். நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம், இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம். இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம். வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம். விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம். மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம். விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம். பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம். சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.

ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம். மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம். சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம். விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம். இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை - பலம், வலிமையைத் தரும்
கருப்பு - புகழ், பெருமை சேரும்
புகைநிறம் - துக்கம், தரித்திரம்.
 
Via FB  இந்து மத வரலாறு - Religious history of hinduism

ஆண்மை பெருக்கும், அதிக அமில சுரப்பை குறைக்கும் ரோஜா “குல்கந்து”

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:47 | Best Blogger Tips

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. வீட்டிலேயே கலப்படமில்லாமல் நாம் தயாரிக்கலாம்.

குல்கந்து செய்முறை

நல்ல, தரமான, சிவந்த நிறமுடைய நன்கு பூத்த பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும். இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும். ரோஜா இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும். ஜாம் போல வரும் வரை இடிக்கவும். இதனை ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போடவும்.

இந்த ஜாம் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும். இத்துடன் வெள்ளரி விதை, கசகசா சேர்க்கவும். குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.

ஜீரணக் கோளாறு நீங்கும்

குல்கந்து வயிறு கோளாறுகளை நீக்கும். உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

ஆண்மை பெருக்கி

குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கின்றனர் என்று கூறப்படுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

இதயத்திற்கு ஏற்றது

ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது.

இது மன அழுத்தத்தை போக்குகிறது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் காய்ச்சி ஆறவைத்த பாலில் அரை ஸ்பூன் குல்கந்து சேர்த்து சாப்பிடலாம் நன்றாக உறக்கம் வரும். இது முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

குல்கந்தை சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம். ஆரோக்கியத்திற்கு ஏற்றது.


குல்கந்தின் பயன்கள்
‌சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.
வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).
தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து.

முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.


ஆப்பிள் குல்கந்து மில்ஷேக்

தேவையான பொருட்கள்....

ஆப்பிள் - 1
குல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்
குளிர்ந்த பால் - 3 1/2 கப்
சுகர் லைட் - 2 டேபிள்
ஸ்பூன் தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டைத்தூள் - 2 சிட்டிகை

செய்முறை....

• ஆப்பிளை துறுவி சிறிது சர்க்கரை சேர்த்த தண்ணீரில் போடவும். (நிறம் மாறாமல் இருக்கும்)

• பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதோடு மீதி உள்ள சர்க்கரை, குல்கந்து,தேன், பட்டைத்தூள் சேர்த்து அடித்தபின் குளிர்ந்த பால், ஐஸ் துண்டுகள் கலந்து மிக்ஸியில் ஓட விடவும்.

• விருப்பப்ட்டால் சிறிது கடைந்த பாலேடும் சேர்க்கலாம்

• உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.


ட்ரைஃப்ரூட் குல்கந்து!

தேவையானவை:

ஆப்பிள் விழுது, கிர்ணிபழ விழுது, முலாம்பழ விழுது - தலா ஒரு கப் (ஆப்பிள், கிர்ணி பழம், முலாம்பழம் ஆகியவற்றைக் கழுவி, தோல் சீவி துண்டுகளாக்கி தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்), சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 1 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ரோஜாப்பூ - 3 பூக்கள், பாதாம் (தோல் நீக்கி சீவவும்), முந்திரி - தலா 2 டீஸ்பூன், நெய் - சிறிதளவு.

செய்முறை:

அடி கனமான தவா வில் ஆப்பிள் விழுது, கிர்ணி பழ விழுது, முலாம் பழ விழுது, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து அல்வா பதத்தில் கொதித்து வரும்போது சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். பிறகு குங்குமப்பூ சேர்த்துக் கிளறி, கெட்டியான பதத்தில் வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், சுத்தம் செய்து, உதிர்த்த ரோஜா இதழ்கள் சேர்த்து ஒருமுறை கிளறி மூடவும். ஆறியதும் சாப்பிட... சூப்பர் சுவையில் இருக்கும்!

குல்கந்து ரோஸ் குக்கி

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம்
ரோஜா குல்கந்து - 4 தேக்கரண்டி
சீரகப் பொடி - அரை தேக்கரண்டி
பால் - 50 மி.லி.,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

மைதா, உப்பு, சீரகம், பால், ரோஜா குல்கந்து ஆகியவற்றை சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

கடாயில், எண்ணெயை ஊற்றி, காய வைக்கவும்.

காய்ந்த எண்ணெயில், குக்கி அச்சை நனைத்து, திரும்பவும் எண்ணெயில் முக்கவும். வெந்தவுடன் அச்சு தனியாக வந்து விடும்.

குல்கந்து ரோஸ் குக்கி, எண்ணெயில் தங்கி விடும்.

நன்றாக வெந்தவுடன், எடுத்து விடவும்.

குல்கந்து ரோஸ் குக்கி ரெடி.

குல்கந்து ரோஸ் குக்கியை, தேன், பனை வெல்லம் அல்லது கருப்பட்டி கொண்டும், தயார் செய்யலாம்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு