கோரக்கர் சித்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:14 | Best Blogger Tips
Photo: வடக்குப் பொய்கைநல்லூரில் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதிக்குப் போயிருந்த போது ஶ்ரீ கோரக்கச் சித்தரின் பெருமை என்ற நூல் ஒன்றை வாங்கினேன். ஆசிரியர் அருண்குமார். நாகை குமாரிப் பதிப்பகத்தார் வெளியீடு. சிறிய நூலாக இருந்தாலும் பல நல்ல விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தார். கடைசி பக்கத்தில்தான் அந்த அரிய தகவல் காணப் பெற்றேன். சித்தர்கள் இல்லறத்தாரா ? துறவரத்தாரா ? என்ற கேள்வியாகவே தலைப்பிட்டு, இல்லறத்தார்தான் என்று பதிலையும் தந்து, அதற்கு ஆதாரமாக கோரக்கச் சித்தர் தனது முத்தாரம் 91 என்ற நூலில் தரும் ஆதாரத்தையும் முன் வைக்கிறார்கள்.

1 . நந்தீசர் - இல்லத்தரசியர் 8, ஆண்வாரிசு 16, பெண்வாரிசு 1. 

2 . மச்சமுனிவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 100.

3. சட்டமுனிவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 100.

4. அகப்பேய் சித்தர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 120.

5. பாம்பாட்டி சித்தர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு 
144.

6. இடைக்காடார் - இல்லத்தரசியர் 11, ஆண்வாரிசு 96.

7. அழுகண்ணிச் சித்தர் - இல்லத்தரசியர் 12, ஆண்வாரிசு 96.

8. குதம்பைச் சித்தர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு 160.
9. தன்வந்த்ரி முனிவர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு 160.

10. வான்மீக முனிவர் - இல்லத்தரசியர் 5, ஆண்வாரிசு 100.

11. இராம தேவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 200.

12. கொங்கண முனிவர் - இல்லத்தரசியர் 6, ஆண்வாரிசு 60.

13. கருவூர்சித்தர் - இல்லத்தரசியர் 12, ஆண்வாரிசு 120.

14. சுந்தரானந்தர் - இல்லத்தரசியர் 7, ஆண்வாரிசு 84.

15. திருமூலர் - இல்லத்தரசியர் 9, ஆண்வாரிசு 93.

16. அகத்தியர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 160.

17. போக முனிவர் - கணக்கற்ற மனைவிகள், கணக்கற்ற பிள்ளைகள்.

18. கோரக்கர் - இல்லத்தரசியர் 5, ஆண்வாரிசு 60.

இந்தத்தகவல் இல்லறத்தை சித்தர்கள் மறுக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்காக மட்டுமே தரப்பட்டது. 
இல்லறமல்லது நல்லறமன்று - ஔவை.
அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை - திருவள்ளுவர்.
நமது புராணங்கள் அனைத்தும் தெய்வங்களும், வானவர்களும் குடும்பம், பிள்ளைகளோடு இருப்பதாகவே சொல்கிறது. சிவனோ உமையவளை தன்னில் ஒரு பாதியாகக் கொண்டார், மகாவிஷ்ணுவோ இலக்குமியை இதயத்தில் வைத்துக் கொண்டாடினார். பிரம்ம தேவனோ சரஸ்வதியை தன் நாவில் வைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதாவது மனைவி பேச்சைத் தட்டாதவர்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது இல்லறம் இறைவனை அடையத் தடையாக நின்றதில்லை என்பதே. சப்தரிஷிகளும் இல்லறம் கண்டவர்களே. சுகப்பிரம்ம ரிஷிக்கு உபதேசம் அருளிய ஜனகர்(சீதையின் தந்தை) இல்லற வாசியே. அவரை மிகச் சிறந்த தவசீலராகச் சொல்வார்கள்.
நமது சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இரு மனைவிகள். இப்படி நாயன்மார்கள் பல பேரைச் சொல்லலாம். எனவே இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு வாழ்ந்தாலும் இறைநிலை அடையலாம் என்பதே உண்மை.வடக்குப் பொய்கைநல்லூரில் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதிக்குப் போயிருந்த போது ஶ்ரீ கோரக்கச் சித்தரின் பெருமை என்ற நூல் ஒன்றை வாங்கினேன். ஆசிரியர் அருண்குமார். நாகை குமாரிப் பதிப்பகத்தார் வெளியீடு. சிறிய நூலாக இருந்தாலும் பல நல்ல விஷயங்களைத் தெளிவாகச் சொல்லியிருந்தார். கடைசி பக்கத்தில்தான் அந்த அரிய தகவல் காணப் பெற்றேன். சித்தர்கள் இல்லறத்தாரா ? துறவரத்தாரா ? என்ற கேள்வியாகவே தலைப்பிட்டு, இல்லறத்தார்தான் என்று பதிலையும் தந்து, அதற்கு ஆதாரமாக கோரக்கச் சித்தர் தனது முத்தாரம் 91 என்ற நூலில் தரும் ஆதாரத்தையும் முன் வைக்கிறார்கள்.

1 . நந்தீசர் - இல்லத்தரசியர் 8, ஆண்வாரிசு 16, பெண்வாரிசு 1.

2 . மச்சமுனிவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 100.

3. சட்டமுனிவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 100.

4. அகப்பேய் சித்தர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 120.

5. பாம்பாட்டி சித்தர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு
144.

6. இடைக்காடார் - இல்லத்தரசியர் 11, ஆண்வாரிசு 96.

7. அழுகண்ணிச் சித்தர் - இல்லத்தரசியர் 12, ஆண்வாரிசு 96.

8. குதம்பைச் சித்தர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு 160.
9. தன்வந்த்ரி முனிவர் - இல்லத்தரசியர் 16, ஆண்வாரிசு 160.

10. வான்மீக முனிவர் - இல்லத்தரசியர் 5, ஆண்வாரிசு 100.

11. இராம தேவர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 200.

12. கொங்கண முனிவர் - இல்லத்தரசியர் 6, ஆண்வாரிசு 60.

13. கருவூர்சித்தர் - இல்லத்தரசியர் 12, ஆண்வாரிசு 120.

14. சுந்தரானந்தர் - இல்லத்தரசியர் 7, ஆண்வாரிசு 84.

15. திருமூலர் - இல்லத்தரசியர் 9, ஆண்வாரிசு 93.

16. அகத்தியர் - இல்லத்தரசியர் 10, ஆண்வாரிசு 160.

17. போக முனிவர் - கணக்கற்ற மனைவிகள், கணக்கற்ற பிள்ளைகள்.

18. கோரக்கர் - இல்லத்தரசியர் 5, ஆண்வாரிசு 60.

இந்தத்தகவல் இல்லறத்தை சித்தர்கள் மறுக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்காக மட்டுமே தரப்பட்டது.
இல்லறமல்லது நல்லறமன்று - ஔவை.
அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை - திருவள்ளுவர்.
நமது புராணங்கள் அனைத்தும் தெய்வங்களும், வானவர்களும் குடும்பம், பிள்ளைகளோடு இருப்பதாகவே சொல்கிறது. சிவனோ உமையவளை தன்னில் ஒரு பாதியாகக் கொண்டார், மகாவிஷ்ணுவோ இலக்குமியை இதயத்தில் வைத்துக் கொண்டாடினார். பிரம்ம தேவனோ சரஸ்வதியை தன் நாவில் வைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதாவது மனைவி பேச்சைத் தட்டாதவர்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது இல்லறம் இறைவனை அடையத் தடையாக நின்றதில்லை என்பதே. சப்தரிஷிகளும் இல்லறம் கண்டவர்களே. சுகப்பிரம்ம ரிஷிக்கு உபதேசம் அருளிய ஜனகர்(சீதையின் தந்தை) இல்லற வாசியே. அவரை மிகச் சிறந்த தவசீலராகச் சொல்வார்கள்.
நமது சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இரு மனைவிகள். இப்படி நாயன்மார்கள் பல பேரைச் சொல்லலாம். எனவே இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு வாழ்ந்தாலும் இறைநிலை அடையலாம் என்பதே உண்மை.
 
 Via FB மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்.

தெரிந்து கொள்ளுவோம்..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:35 | Best Blogger Tips

தெரிந்து கொள்ளுவோம்..
...........................................

இவர்களின் முழுப்பெயர் என்ன....?
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . .

சி.என்.அண்ணாதுரை : காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை

மு.கருணாநிதி : முத்துவேல் கருணாநிதி

வி.சி.கணேசன்(சிவாஜி) :விழுப்புரம் சின்னையா பிள்ளை
கணேசன்

எம்.ஜி.ஆர். : மருதூர் கோபாலமேன ராமசந்திரன்

எம்.எஸ்.சுப்புலட்சுமி : மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

ஏ.ஆர்.ரஹ்மான் : அல்லாஹ் ரக்கா ரஹ்மான்

பி.வி.நரசிம்மராவ் : பமல மூர்த்தி வேங்கட நரசிம்மன்

வி.பி.சிங் : விஸ்வநாத் பிரதாப் சிங்

ஐ.கே.குஜ்ரால் : இந்தர் குமார் குஜ்ரால்

டி.என் சேஷன் : திருநெல்வேலி நாராயண சேஷன்

ஆர்.கே.நாராயணன் : ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன்

கி.வா.ஜ : கிருஷ்ணசாமி வாகீச ஜகன்னாதன்

எம்.எஸ்.சுவாமிநாதன் : மான்கொம்பு சாம்பசிவ சுவாமிநாதன்

உ.வே.சா : உத்தமதானபுரம் வேங்கட
சாமிநாதய்யர்

எம்.எஸ்.சுவாமிநாதன் : மான்கொம்பு சாம்பசிவ சுவாமிநாதன்

ஏ.பி.ஜே.அப்துல்கலாம் : அவுல் பக்கிர் ஜெயினுலாபு தீன்
அப்துல்கலாம்

எம்.ஆர்.ராதா : மெட்ராஸ் ராஜகோபால்
ராதாகிருஷ்ணன்

வி.வி.லஷ்சுமண் : வாங்கிபரப்பு வேங்கட சாய்
லஷ்மண்

சி.வி.ராமன் : சந்திரசேகர வேங்கட்ராமன்


கே.ஆர்.நாராயணன் : கோச்செரில் ராமன் நாராயணன்

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
இன்று ஒரு தகவல்..
...................................
இவர்களின் முழுப்பெயர் என்ன....?
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . .

சி.என்.அண்ணாதுரை : காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை

மு.கருணாநிதி : முத்துவேல் கருணாநிதி

வி.சி.கணேசன்(சிவாஜி) :விழுப்புரம் சின்னையா பிள்ளை
கணேசன்

எம்.ஜி.ஆர். : மருதூர் கோபாலமேன ராமசந்திரன்

எம்.எஸ்.சுப்புலட்சுமி : மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

ஏ.ஆர்.ரஹ்மான் : அல்லாஹ் ரக்கா ரஹ்மான்

பி.வி.நரசிம்மராவ் : பமல மூர்த்தி வேங்கட நரசிம்மன்

வி.பி.சிங் : விஸ்வநாத் பிரதாப் சிங்

ஐ.கே.குஜ்ரால் : இந்தர் குமார் குஜ்ரால்

டி.என் சேஷன் : திருநெல்வேலி நாராயண சேஷன்

ஆர்.கே.நாராயணன் : ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன்

கி.வா.ஜ : கிருஷ்ணசாமி வாகீச ஜகன்னாதன்

எம்.எஸ்.சுவாமிநாதன் : மான்கொம்பு சாம்பசிவ சுவாமிநாதன்

உ.வே.சா : உத்தமதானபுரம் வேங்கட
சாமிநாதய்யர்

எம்.எஸ்.சுவாமிநாதன் : மான்கொம்பு சாம்பசிவ சுவாமிநாதன்

ஏ.பி.ஜே.அப்துல்கலாம் : அவுல் பக்கிர் ஜெயினுலாபு தீன்
அப்துல்கலாம்

எம்.ஆர்.ராதா : மெட்ராஸ் ராஜகோபால்
ராதாகிருஷ்ணன்

வி.வி.லஷ்சுமண் : வாங்கிபரப்பு வேங்கட சாய்
லஷ்மண்

சி.வி.ராமன் : சந்திரசேகர வேங்கட்ராமன்


கே.ஆர்.நாராயணன் : கோச்செரில் ராமன் நாராயணன்


உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
இன்று ஒரு தகவல்..
...................................

முடக்கறுத்தான்/

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:23 | Best Blogger Tips
Cardiospermum halicacabum
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம் ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும். 

இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம். இது மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம். 

"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக: 

முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக: 

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை: 

ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.


பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு :

ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

நன்றி: மூலிகைவளம்Cardiospermum halicacabum
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம் ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும்.

இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம். இது மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம். இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம்.

"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக:

முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக:

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை:

ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு :

ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.


நன்றி: மூலிகைவளம்

பழைய வாகனத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:20 | Best Blogger Tips
நாம் ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி, பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் டீலர் நமக்குக் கொடுத்து விடுகிறார். நாம் நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம். ஆனால், பழைய வாகனத்தை வாங்கும் போது எப்படி உரிமையை மாற்றிக்கொள்வது? ஆர்.சி. புத்தகம் இல்லாமல் அதை வாங்கலாமா?

ஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்-களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை ஆகிறது.

ஒருவர் தனது காரை பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருப்பவருக்கு விற்பனை செய்திருந்தால், 14 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29&ல் பூர்த்தி செய்து, மோட்டார் வாகனப் பதிவு அலுவலகங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அதன் நகலை நம்மிடமிருந்து வாகனத்தை வாங்கியவருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்பனை செய்பவரின் கடமை.

ஒரு வேளை நாம் வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வாகனத்தை விற்பனை செய்து இருந்தால், விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு நாம் தகவல் தரவேண்டும். அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No objection Certificate) அல்லது தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வைத்து அனுப்ப வேண்டும்.

வாகனத்தை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ அந்த மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷ¨ரன்ஸ் அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வெளி மாநிலமாக இருப்பின், தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்க-வில்லை என்பதற்கான ஆதாரங்-களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு 30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்படி வாங்குபவரோ, விற்பவரோ தங்கள் கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவராவர். வாகனத்தை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வாகனத்தை ஓட்டி ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷ¨ரன்ஸ் இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது.

புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில் மாற்றப்பட்டதும் அதன் நகலை இன்ஷ¨ரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷ¨ரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது! ஒருமுறை பதிவு செய்த வாகனத்தை மறுபதிவு செய்யமுடியுமா?

ஒருமுறை வாகனத்தைப் பதிவுசெய்துவிட்டால், மீண்டும் பதிவுசெய்து புதிய எண் பெற முடியாது. அந்த வாகனத்தின் பதிவுக் காலம் காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும். எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான். உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான். ஆனால், நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். நாம் சென்னையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தும்போது கர்நாடகப் பதிவு " ரீ&ரெஜிஸ்ட்ரேஷன் " கட்டாயம் செய்ய வேண்டும்!

பதிவை மறுக்க முடியுமா?
ஒரு வாகனம் திருடப்பட்டது என்று சந்தேகிக்கக் காரணம் இருந்தாலும், வாகனம் சாலையில் ஓடும்போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்குள் அந்த வாகனத்தின் தன்மை, அமைப்பு போன்றவை இல்லை என்றாலும், பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரவில்லை என்றாலும், தவறான தகவல்களை மனுதாரர் கொடுத்திருந்தாலும், வேறு மாநில வாகனம் என்றால் அதன் முந்தைய பதிவு எண் விவரங்கள், சான்றுகள் ஆகியவற்றை தரவில்லை என்றாலும் பதிவு செய்யும் அதிகாரி எழுத்துப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய மறுக்கலாம். இதன் ஒரு நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்!

வாகன உரிமையாளர் இறந்துவிட்டால்...
ஒரு வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்படுத்தப்போகும் வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30 நாட்களுக்குள் உரிமையாளர் இறந்துபோனது பற்றியும், அதை தான் பயன்படுத்தப் போவதையும் தகவல் கொடுத்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். இந்தக் காலகட்டத்துக்குள் ஆர்.சி.புத்தகம், இன்ஷ¨ரன்ஸ், உரிமையாளரின் இறப்புச் சான்று மற்றும் அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31&ல் இறந்துபோனவரைப் பற்றிய முழு விவரங்களையும், தற்போது பயன்படுத்துபவர் பெயர், விலாசம், உறவுமுறை ஆகியவற்றையும் குறிப்பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகளுடன் மனு செய்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
 
Via FB சுபா ஆனந்தி

வேப்பம்பூ பொடி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | Best Blogger Tips


என்னென்ன தேவை?

காய்ந்த வேப்பம்பூ அல்லது சுத்தம் செய்து நெய்யில் வறுத்த வேப்பம்பூ - அரை கப்,
உளுத்தம்பருப்பு - 1 கப்,
மிளகு - 20,
உப்பு, நெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுக்க வேண்டும். பின் சிறிது நெய்விட்டு வேப்பம்பூவை வறுத்துக்கொள்ளவும். இத்துடன் மிளகு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியுடன் சிறிது நெய் சேர்த்து ஒரு பிடி சாதத்துடன் கலந்து பரிமாறலாம்.

குறிப்பு:

வேப்பம்பூ காதி கடைகளிலும் மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு
 

எனர்ஜி கஞ்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | Best Blogger Tips
என்னென்ன தேவை?

முளை கட்டிய கறுப்பு கொண்டைக் கடலை, வெள்ளை கோதுமை, ராகி - தலா 2 டேபிள்ஸ்பூன்,
பாதாம் பருப்பு - 4,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
சுத்தமான பனங்கற்கண்டு தூள் - 2 டீஸ்பூன்,
பால் - 1 கப்.

எப்படிச் செய்வது?

முளை கட்டிய கடலை, கோதுமை, ராகி (கேழ்வரகு), பாதாம் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக மிக்சியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், பால் கொதிக்கவிட்டு அரைத்த விழுதை சேர்த்து கஞ்சியாக காய்ச்சவும். இத்துடன் சுத்தமான பனங்கற்கண்டு தூள் சேர்க்கவும். அது நன்றாக கரைந்து கஞ்சி பதத்துக்கு வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறவும் அல்லது எனர்ஜி மில்க்காகவும் சாப்பிடலாம்.

குறிப்பு:

கஞ்சியாக சாப்பிடப் பிடிக்காதவர்கள் அரைத்த விழுதை வடித்து (ஒரு மெல்லிய துணியில்) பாலுடன் கற்கண்டு சேர்த்து எனர்ஜி மில்க்காக கொடுக்கலாம். இது, பள்ளிக்குப் போகும் குழந்தைகளுக்கு புரதச்சத்து தரும்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு

தினை உப்புமா

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:47 | Best Blogger Tips

தினை உப்புமா

நாலு பேருக்கான அளவு:

தினை நொய்: (Foxtail Millet, Varagu) - பம்பாய் ரவை மாதிரி கிடைக்கும் - கால் கிலோ - கப்பால் அளந்தால் இரண்டரை கப் வரவேண்டும்
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது 
(optional) காரட் - நடுவாந்திர அளவில் ஒன்று - தோல் சீவி க்யூப்களாக நறுக்கியது
(optional) பீன்ஸ் - எண்ணிக்கையில் 2 - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் 
நீள வர மிளகாய் - 4 (பச்சை மிளகாய் பத்திய சமையலில் சேர்க்கக் கூடாது)
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன் 
ஒரு ஆர்க்கு கருவேப்பிலை /கொத்தமல்லி

உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்

செய்முறை: 

அடிகனமான வாணலியில் வெறுமனே (எண்ணெய் விடாமல்) தினையை சிவக்க வறுத்துக்கொண்டு தனியே ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்துக் கொள்ளவும்.

ஒரு தனி பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு-உளுத்தம் பருப்பு- வர மிளகாய் தாளித்து, கருவேப்பிலை சேர்த்து, வெங்காயத்தை வதக்கி கொண்டு கறிகாய்களை ஒவ்வொன்றாக சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
கொதித்த நீரை இதில் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து (இல்லாவிட்டால் கையில் தெளிக்கும்), பின்பு வறுத்த தினையை சேர்த்து, கட்டி தட்டி கொள்ளாமல் கிளறி விட்டு, சரியாக ஐந்து நிமிஷம் மூடி வைக்கவும். உதிர் உதிராக வெந்திருக்கும். சாப்பிடும் முன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
நாலு பேருக்கான அளவு:

தினை நொய்: (Foxtail Millet, Varagu) - பம்பாய் ரவை மாதிரி கிடைக்கும் - கால் கிலோ - கப்பால் அளந்தால் இரண்டரை கப் வரவேண்டும்
பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது
(optional) காரட் - நடுவாந்திர அளவில் ஒன்று - தோல் சீவி க்யூப்களாக நறுக்கியது
(optional) பீன்ஸ் - எண்ணிக்கையில் 2 - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நீள வர மிளகாய் - 4 (பச்சை மிளகாய் பத்திய சமையலில் சேர்க்கக் கூடாது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
ஒரு ஆர்க்கு கருவேப்பிலை /கொத்தமல்லி

உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்

செய்முறை:

அடிகனமான வாணலியில் வெறுமனே (எண்ணெய் விடாமல்) தினையை சிவக்க வறுத்துக்கொண்டு தனியே ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்துக் கொள்ளவும்.

ஒரு தனி பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு-உளுத்தம் பருப்பு- வர மிளகாய் தாளித்து, கருவேப்பிலை சேர்த்து, வெங்காயத்தை வதக்கி கொண்டு கறிகாய்களை ஒவ்வொன்றாக சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும்.
கொதித்த நீரை இதில் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து (இல்லாவிட்டால் கையில் தெளிக்கும்), பின்பு வறுத்த தினையை சேர்த்து, கட்டி தட்டி கொள்ளாமல் கிளறி விட்டு, சரியாக ஐந்து நிமிஷம் மூடி வைக்கவும். உதிர் உதிராக வெந்திருக்கும். சாப்பிடும் முன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு

ஹோமம் செய்வதால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:47 | Best Blogger Tips
ஹோமம் செய்வதால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள்!

நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தை வரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம். அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர். ரிஷிகள் காடு களில் ஹோமம் நடத்தியுள்ளனர். ஒரு தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமும் ஒளிந்து இருக்கிறது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னையின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டு இருந்தது தான். இந்த தகவல் அப்போது பல பத்திரிகைகளில் வெளி வந்தது. ஹோமத்தின் போது. வெளிப்படும் புகை காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும்.  யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளை போக்கும் சக்தி கொண்டது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.  அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப்பேணினர்.
நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தை வரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம். அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர். ரிஷிகள் காடு களில் ஹோமம் நடத்தியுள்ளனர். ஒரு தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமும் ஒளிந்து இருக்கிறது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னையின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டு இருந்தது தான். இந்த தகவல் அப்போது பல பத்திரிகைகளில் வெளி வந்தது. ஹோமத்தின் போது. வெளிப்படும் புகை காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும். யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளை போக்கும் சக்தி கொண்டது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப்பேணினர்.
 
Via FB சர்வம் சிவமயம்
 

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:44 | Best Blogger Tips
வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்!

‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீ.....ளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம். அட...எங்கே பைய எடுத்து கிளம்பிட்டீங்க... வெண்டைக்காய் வாங்கவா... ம்...ம்...!..‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீ.....ளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம். அட...எங்கே பைய எடுத்து கிளம்பிட்டீங்க... வெண்டைக்காய் வாங்கவா... ம்...ம்...!..
 
Via FB Aatika Ashreen
 

இந்து தர்மம் எடுத்துரைப்பது என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:14 | Best Blogger Tips


எந்த மதமும் தனிநபர் சொத்தல்ல. வானளாவப் புகழ்வதும் வசை பாடுதலும்; நம்பிக்கையும் தூற்றலும் மனம் சார்ந்த தனி சுதந்திரம். ஆனால் ஒழுக்கம் என்பது யாவருக்கும் பொதுவானது.

“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்’

என்கிறார் வள்ளுவர்.

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பாகும்; அதன் தன்மையாகும். ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும். எனவே எங்கும் எதிலும் ஒழுக்கம் முன்னிலை வகிக்க வேண்டும்.

எந்த சமய வித்தகரையும் வைத்து தொடங்கப்படவில்லை. நியூட்டன் புவியீர்ப்பு சக்தியைப் பற்றிய விதியினை எப்படி படைக்கவில்லையோ, அப்படித் தான் வேதத்தையும் எவரும் படைக்கவில்லை. வேத உண்மைகள் யாவும் கண்டு கொள்ளப்பட்டவையே தவிர உண்டாக்கப்பட்டவை அல்ல; வெளிப்படுத்தப்பட்ட வையே தவிர படைக்கப்பட்டவை அல்ல. எனவே அவை தனிநபர் தொடர்பற்றவை. (அபௌருஷேயம்). காலத்திற்குட்பட்டு கடந்து போகும் விதிகளைப் போலில்லாமல், வேத உண்மைகள் யாவும் ஆன்மிகத்துறையைச் சார்ந்தவை. அவற்றுக்கு என்றுமுள்ள தன்மையும் (நித்யம்) மதிப்பும் உண்டு.

“வேதம்’ என்ற சொல்லுக்கு “அறிவு’ அல்லது “ஞானம்’ என்பது பொருள். வேதங்கள் நான்கு. இவற்றுள் முதலாவது வேதமான ரிக் வேதம் முக்கியமானது. ஏனென்றால் அதன் மந்திரப் பாடல்கள் பலவற்றை மற்றைய வேதங்களுக்கு அது தந்துள்ளது. அதுதான் தொன்மையான தொகுப்பு.

ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளைக் கொண்டது. மந்திரங்கள், பிரம்மாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என்பவையே அவை. மந்திரங்கள் என்பது தெய்வங்களுக் கென்று அமைக்கப்பட்ட துதிப் பாடல்கள். இம்மையிலும், மறுமையிலும் சுபிட்சம் பெறுவதற்கென்று தெய்வங்களிடம் செய்யப் படும் பிரார்த்தனைகள் அவை. பிரம்மாணங்கள் என்பவை யாகங்கள் செய்வதற்கு அனுஷ்டிக்கப் பட வேண்டிய சடங்குகள் பற்றிக் கூறுவது. வேதத்தின் இறுதிப் பகுதிகளான உபநிடதங்கள் (வேதாந்தம்) தத்துவ ஆராய்ச்சிகள் ஆகும்.

மந்திரங்கள், பிராம்மணங்கள், ஆரண்யங் கள், உபநிடதங்கள் என்று பிரிக்கப் பெற்ற வேத மானது- பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் எனும் மனித வாழ்க்கையின் நான்கு நிலைகளுக்கும் பொருந்துமாறு உள்ளது.

வேதத்தில் அடங்கியுள்ளவற்றை வேறு ஒரு வகையாகவும் பிரிக்கலாம்.

கர்ம காண்டங்கள் அல்லது மத ஆச்சாரங் கள் பற்றியவை.

உபாசனைக் காண்டம் அல்லது தியானத் திற்குரியவை.

ஞான காண்டம் அல்லது அறிவு தரும் பகுதி.

மந்திரங்களும் பிரம்மாணங்களும் கர்ம காண்டத்தைச் சேர்ந்தவை. ஆரண்யங்கள் உபாசனை காண்டத்தைச் சேர்ந்தவை. உபநிடதங்கள் ஞான காண்டத்தைச் சேர்ந்தவை. சமயக் கொள்கைகள், வழிபாட்டு முறைகள் பற்றிக் கூறும் நூல்கள் ஆகமங்கள் ஆகும். இந்து மதத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், சாக்தம், வைணவம் ஆகியவை ஆகமங் களை அடிப்படையாக அமைத்துக் கொண்டவை.

வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள், தரிசன இலக்கியம், பாமர இலக்கியம், சடங்கின் வகைகள், வேதகால வேள்விகள், ஆகம வினைமுறைகள், மதச் சடங்குகளோடு கூடிய இறை வழிபாடு, திருவிழாக்கள், மதச் சின்னங்கள், பண்பும் நடத்தையும், கருமம் என்னும் கொள்கைகள், மறுபிறவி பற்றிய கோட்பாடுகள், அறப் பண்புகள், தன்னலமற்ற சேவை மார்க்கம், பக்தி யோகம், ஞான யோகம், நியாயம், வைசேடிகம், சாங்கியம், வேதாந்தம், அத்வைதம், விசிட்டாத் வைதம், துவைதம், வைணவத்தின் கோட்பாடு கள், சைவக் கோட்பாடுகள், தத்துவ சிந்தனையின் சிறப்பு, தந்திரங்கள், காணாபத்திய நெறி, கௌமார நெறி, சௌர நெறி, குண்டலி எனும் அனுபூதி நெறி, இன்னும் இவை சார்ந்த உட்பிரிவுகள் என நீண்டதொரு செய்திகளை உள்ளடக்கியதுதான் இந்து மதம்.

ஈச, கேன, கட, பிரசன்ன, முண்டக, மாண்டூக்ய, ஸ்வேதாஸ்வர, மைத்ரீய, சுபால, ஜாபால, பைங்கல, கைவல்ய, வஜ்ரசூசிக, கௌஷீதக, தைத்ரீய, ஐதரேய, சாந்தோக்ய, பிரஹத் என பதினெட்டு உபநிடதங்கள் உள்ளன. இதிலுள்ள தத்துவங்களைக் கற்றாலே மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.

கடல் போன்றது இந்து மதம். அதிலிருந்து சில எளிய விதிகளைக் காண்போம்.

● விபூதியை நீரில் குழைத்துப் பூசிக் கொள்ளல் கூடாது. கருமம் சார்ந்தவை செய்யும்போது மட்டும் நீரில் குழைத்துப் பூசிக்கொள்ள வேண்டும்.

● புண்ணிய தீர்த்தங்களில் சென்று நின்றவுடன் காலை நனைப்பது கூடாது. முதலில் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டபின் காலைக் கழுவலாம்.

● மயானம் சார்ந்த சடங்குகளுக்குச் சென்று வந்தபின் வெந்நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். சோப்பு, ஷாம்பு போன்ற வாசனைப் பொருட்களை உபயோகிக்க கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால், தலையில் சிறிது தண்ணீரைத் தெளித்தபின் போகலாம்.

ஆண்கள் தான் பிறந்த நட்சத்திர நாளில் மருந்து உட்கொள்ளல், தாம்பத்தியம், திருமணம், பயணம் புறப்படுதல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புதுத் துணி உடுத்துதல், பெரியவர் களுக்கு திதி கொடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. தலைக்கு எண்ணெய் தேய்த் துக் குளித்தபின் வெளியூர் பயணம் செய்வது கூடாது.

● பெண்கள் தலையில் எண்ணெயை வைத்துக் கொண்டு யாரையும் வழியனுப்பக் கூடாது. கணவன் வெளியூர் சென்றபின் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

● தெய்வ காரியங்களுக்கு கணவன் முதலில் செல்ல வேண்டும். இறப்பு, தீட்டு சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு மனைவி முதலில் செல்வது நல்லது.

● உரல், அம்மி, உலக்கை, வாயிற்படி, முறம் ஆகியவற்றின்மீது உட்காரக்கூடாது.

● சாப்பாடு, உப்பு, நெய் ஆகியவற்றை கண்டிப்பாக கையால் பரிமாறக்கூடாது. கரண் டியை உபயோகப்படுத்த வேண்டும். சாப்பிடும் போது தவிர மற்ற நேரங்களில் இடது கையால் தண்ணீர் அருந்துதல் கூடாது.

● கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி தான- தர்மம், விரதம் கடைப்பிடித்தால், கணவனின் ஆயுளில் ஒருநாள் குறையும்.

● குரு, ஜோதிடர், நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி ஆகியோருக்கு ஆபத்து காலத்தில் உதவ வேண்டும்; புண்ணியம் பெருகும்.

காணாதிபத்திய நெறி

யானை முகக் கணபதியே இந்துக் கடவுளர் களுள் பொதுமக்களால் மிகவும் விரும்பப் படுபவர். அவருடைய திருவுருவச் சிலைகளை கோவில்கள் மட்டுமின்றி ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும், புனிதமான மரங்களுக் கடியிலும், சந்திகளிலும், வீடுகளிலும், சந்து பொந்துகளிலும், ஆட்கள் உட்புக முடியாத சின்னஞ்சிறு இடங்களிலும்கூட காணலாம்.

தடைகளை அமைப்பவரும் அவரே;

அவற்றை நீக்குபவரும் அவரே. அவர் விக்னேஸ்வரர்; விக்கினராஜர்; விநாயகர்! அவர்அருளைத் தேடி நிற்பவர்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுப்பவர்.

கணேசர் ஒரே உட்பொருளாகவும், இறைத் தன்மையின் மிக உயர்ந்த தத்துவமாகவும் கொள்ளப்பட்டார். “சாரதா திலகம்’ எனும் நூலில் கணேச வழிபாட்டின் நோக்கமும் உட்பொருளும் கீழுள்ளவாறு எடுத்துக் கூறப் பட்டுள்ளது.

“பதம் ஸ்துதீநாம் அபதம்
ஸ்ருதீநாம் லீலாவதராம்
பரம் அஷ்ட மூர்த்தேஹ்
நாகாத்மகோ வா
புருஷாத்மகோ வெத்யபெத்யம்
ஆத்யம் பஜ விக்னராஜம்.’

“எல்லாவற்றிலும் உயர்வானவனான விக்னராஜனை வேண்டுதல் செய்யுங்கள். ஆனால்அவனை வேதங்களாற்கூட அடைய இயலாது. அவன் எட்டு வடிவங்களோடு (நிலம், நீர், நெருப்பு, காற்று, விண், சூரியன், சந்திரன், எஜமானன்) கூடிய சிவனுடைய விளையாட்டு அவதாரம். அவன் வடிவத்தைப் பற்றி அது யானை வடிவமென்றோ மனித வடிவமென்றோ கூற இயலாது. அவன் ஆதியானவன்.

யானைமுகக் கடவுளை நான் பிரார்த்திக் கிறேன். அவன் வேதாந்தங்களில் புகழப்படும் புருஷன்; இதயத்தில் வீற்றிருக்கும் ஆனந்த மயமான பொருளான ஆன்மா. மக்களை சூழ்ந்துள்ள பேரிருளான அறியாமை அவன் மகத்துவத்தால் விலகியோடும்’ என்கிறது அந்த துதி.

இந்து தர்மம் எடுத்துரைப்பவை எல்லாம் நல்ல வழிகாட்டல்களே. அதனோடு இணைந்து ஆனந்த வாழ்வைப் பெறுவோம்.
Via Fb இந்து மத வரலாறு - Religious history of hinduism

சாப்பிட்டவுடனே செய்யக்கூடாதவை!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:12 | Best Blogger Tips
சாப்பிட்டவுடனே செய்யக்கூடாதவை!


1.சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

3. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன். ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.

8. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

9. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.
1.சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

3. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன். ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.

8. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

9. மதிய உணவு, இரவு உணவுக்ப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.
 
Via FB World Wide Tamil People

குண்டலினி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:09 | Best Blogger Tips

Photo: ஐயா உங்களுக்கு குண்டலினி சக்தி எழும்பி விட்டதா ? நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் ? குண்டலினி எழும்பி விட்டது என்பதை உணர்ந்து கொள்வது எவ்வாறு ? அதற்கான அறிகுறிகள் என்ன ? எனக்கு குண்டலினி புருவ மத்தி வரை வந்து விட்டது. நான் அமிர்தத்தை ருஷித்து விட்டேன். நீங்கள் அமிர்தத்தை ருஷித்திருக்கிறீர்களா ? இதெல்லாம் என்ன என்று பார்க்கிறீர்களா ? இதெல்லாமே என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள். இது கொஞ்சம்தான். உதாரணத்துக்காக சில கேள்விகளை சொல்லியிருக்கிறேன். நமது கடமை யோகத்தில் திளைத்திருப்பது மட்டுமே. அதை விடுத்து நம் நிலை என்ன ? நாம் எந்த ஆதாரத்தில் நிற்கிறோம் ? இப்படியெல்லாம் பல கேள்விகள் மனதில் தோன்றுமாயின் அது நம் முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக அமையும். மனம் முழுமையாக ஒரு நிலைப்பட்டு, ஆழ்ந்த நிலைக்குப் போகப் போக எல்லாம் தெரிய வரும். தெய்வீகக் காட்சிகள், வாசனைகள், ருஷி, ஸ்பர்சம், அனாஹத ஒலிகள், போன்ற பல அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆனால் அதிலே லயித்து விடாமல் மேலும் மேலும் தீவிரமாக சாதனையைத் தொடர வேண்டும். இது தான் இவ்வளவு தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

குண்டலினி எழும்பியதற்கு அறிகுறியாக பல தியான நூல்கள் பலவிதமாகச் சொல்லியுள்ளன. அதில் எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேலே குறிப்பிட்டுள்ள அனுபவங்கள் எல்லாமே குண்டலினி எழும்பியதைக் குறிப்பவையே. மூலாதாரத்தில் துடிப்பு இருக்கும் போது, மயிர் கூச்செறியும் போது, உட்டியாணா, ஜலந்தரம், மூலபந்தம் போன்றவை தானே வருகையில் குண்டலினி எழுந்து விட்டது என்று உணருங்கள். எந்த முயற்சியும் இன்றி சுவாசம் தானே நின்றாலோ, எந்த சிரமமும் இன்றி கேவல கும்பகம் தானே வந்தாலோ குண்டலினி சக்தி செயல்படுகிறது என்று உணருங்கள். மனதில் உலக எண்ணங்கள் எப்போது இல்லாமல் போகிறதோ, எப்போது நீங்கள் தானாகவே ஓம் என்ற மந்திரத்தை ஜெபிக்கிறீர்களோ, எப்போது பேரானந்தத்தை அனுபவிக்கிறீர்களோ அப்போது குண்டலினி சக்தியானது விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தியானத்தின் போது இரு புருவங்களுக்கும் இடையில் உள்ள திரிபுடியில் கண்கள் நிலை பெற்று, சாம்பவி முத்திரை செயல்படும் போது குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் சரீரத்தில் பல பாகங்களில் மின் அதிர்வுகள் ஏற்படுகையில், பிராண அலைகள் உள்ளுக்குள்ளே அதிகரிப்பதை உணர்கையில் குண்டலினி கிளம்பி விட்டதை உணருங்கள். தியானத்தின் போது உடலே இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும் போது, உங்கள் கண் இமைகளைத் திறக்க முயற்சித்து முடியாத போது, நரம்புகள் வழியாக மின்சார அலைகள் மேலும் கீழும் பாய்வதை உணரும் போதும் குண்டலினி மேலேழும்பி விட்டதை உணருங்கள்.

நீங்கள் தியானம் செய்கையில் உத்வேகமும், உள்ளுணர்வும் பெறுகையில், இயற்கையின் இரகசியங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்குத் தானாகவே புலப்படுகையில், உங்கள் ஐயங்கள் எல்லாம் நீங்கித் தெளிவடைகையில், வேத இரகசியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தெளிவாகப் புரிய வருகையில் குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் உடல் காற்றை விட லேசாகத் தோன்றும் போது, குழப்பமான சூழலிலும் மனம் சமநிலையில் நிற்கும் போதும், அபரிதமான சக்தி உடலில் பெருகியிருப்பதை உணரும் போதும் குண்டலினி விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பல்வேறு ஆசனங்கள், மற்றும் யோக நிலைகளை நீங்கள் எந்தவித சோர்வும் சிரமும் இன்றி செய்யும் போதும், உங்கள் அறிவின் சக்தி பெருகி இருப்பதை உணரும் போதும், உயர்ந்த கவிதைகளை உங்களால் இயற்ற முடிகின்ற போதும் குண்டலினி விழித்து விட்டதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து, ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் பெற்று புருவ மத்தியில் ஆக்ஞாவில் நுழையும் போது பிரம்மானந்தத்தை அனுபவிப்பீர்கள். உங்களுக்கும் ப்ரம்மத்திற்கும் இடையே உள்ள வேற்பாட்டைப் பற்றிய லேசான அனுபவமே எஞ்சி நிற்கும். அதையும் கடந்து சகஸ்ராரத்தை அடைந்து விட்டால் யோகி நிர்விகல்ப ஸமாதியை அடைந்து விடுவார். இரண்டற்ற நிலை ஏற்படும். அனைத்து பேதங்களும் சம்ஸ்காரங்களும் மறையும். பரிசுத்த நிலை உண்டாகும். கர்ம வினைகள் அழியும். இதுவே மிகமிக உயர்வான, மேலான அஸம்ப்ரக்ஞாத ஸமாதியாகும். குண்டலினி சிவனுடன் ஐக்கியமாகிவிடுகிறது.

அதன் பிறகு யோகி விரும்பினால் தொண்டை மத்தியில் உள்ள சக்கரத்திற்கு இறங்கி வந்து சீடர்ர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, லோக ஷேமத்தில் ஈடுபடலாம். இந்தப் பூரண யோகியானவர் எட்டு வகை சித்திகளையும் பெற்றவராவார். மேலும் இதனால் யோகியானவர் 26 வகையான சக்திகளைப் பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.
1. பசிதாகத்தில் இருந்து விடுதலை.
2. சீத உஷ்ணத்தில் இருந்து விடுதலை.
3. ராக துவேஷத்திலிருந்து விடுதலை.
4. தூரதர்ஷன், தூரதிருஷ்டி.
5. தூர சிரவணம், தொலைவில் உள்ளதைக் கேட்டல், தூர சுருதி, தூரப்ரவசனம்.
6. மனோ ஜயம், மன அடக்கம்.
7. காமரூபம், யோகி தான் விரும்பிய வடிவத்தை எடுக்க முடியும்.
8. பரகாயப் பிரவேசம். அவர் பிறரது உடலில் புக முடியும். இறந்தவனை உயிர்ப்பிக்க முடியும்.
9. தேவர்களைத் தரிசித்து அவர்களோடு விளையாடி மகிழ முடியும்.
10. விரும்பும் போது மரணமடைய முடியும்.
11. விரும்புவதைப் பெற முடியும்.
12. இறந்த, நிகழ், எதிர் கால அறிவு.(த்ரிகால ஞானம்)
13. இரட்டை உணர்வுகளைக் கடத்தல்.
14. வாக்கு சித்தி.
15. ரஸவாதம்.
16. ஒரே பிறவியில் தன் எல்லா கர்மங்களையும் போக்க, தான் விரும்பும் பல வடிவங்களை எடுக்க முடியும்.
17. தவளை போலத் தத்திச் செல்ல முடியும்.
18. நோய்களை குணப்படுத்துதல்.
19. முந்தைய பிறவியைப் பற்றிய அறிவு.
20. நட்சத்திர மண்டலம், கிரகங்கள் பற்றிய ஞானம்.
21. சித்தர்களை தரிசிக்கும் ஆற்றல்.
22. இயற்கையை வெல்லுதல்.
23. தாம் விரும்பும் இடத்துக்கு நொடியில் செல்லுதல்.
24. அனைத்தையும் பகுத்தறியும் திறன்.
25. வாயு சித்தி.
26. புதையல்களை அறியும் ஆற்றல்.

குண்டலினி கிளம்பி ஐக்கியம் நிகழ்ந்த பிறகு இது போலப் பல அற்புத சக்திகள் யோகிக்கு கை கூடுகின்றன என்று சொல்லப்பட்டுள்ளது.
ஐயா உங்களுக்கு குண்டலினி சக்தி எழும்பி விட்டதா ? நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் ? குண்டலினி எழும்பி விட்டது என்பதை உணர்ந்து கொள்வது எவ்வாறு ? அதற்கான அறிகுறிகள் என்ன ? எனக்கு குண்டலினி புருவ மத்தி வரை வந்து விட்டது. நான் அமிர்தத்தை ருஷித்து விட்டேன். நீங்கள் அமிர்தத்தை ருஷித்திருக்கிறீர்களா ? இதெல்லாம் என்ன என்று பார்க்கிறீர்களா ? இதெல்லாமே என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள். இது கொஞ்சம்தான். உதாரணத்துக்காக சில கேள்விகளை சொல்லியிருக்கிறேன். நமது கடமை யோகத்தில் திளைத்திருப்பது மட்டுமே. அதை விடுத்து நம் நிலை என்ன ? நாம் எந்த ஆதாரத்தில் நிற்கிறோம் ? இப்படியெல்லாம் பல கேள்விகள் மனதில் தோன்றுமாயின் அது நம் முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக அமையும். மனம் முழுமையாக ஒரு நிலைப்பட்டு, ஆழ்ந்த நிலைக்குப் போகப் போக எல்லாம் தெரிய வரும். தெய்வீகக் காட்சிகள், வாசனைகள், ருஷி, ஸ்பர்சம், அனாஹத ஒலிகள், போன்ற பல அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆனால் அதிலே லயித்து விடாமல் மேலும் மேலும் தீவிரமாக சாதனையைத் தொடர வேண்டும். இது தான் இவ்வளவு தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

குண்டலினி எழும்பியதற்கு அறிகுறியாக பல தியான நூல்கள் பலவிதமாகச் சொல்லியுள்ளன. அதில் எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேலே குறிப்பிட்டுள்ள அனுபவங்கள் எல்லாமே குண்டலினி எழும்பியதைக் குறிப்பவையே. மூலாதாரத்தில் துடிப்பு இருக்கும் போது, மயிர் கூச்செறியும் போது, உட்டியாணா, ஜலந்தரம், மூலபந்தம் போன்றவை தானே வருகையில் குண்டலினி எழுந்து விட்டது என்று உணருங்கள். எந்த முயற்சியும் இன்றி சுவாசம் தானே நின்றாலோ, எந்த சிரமமும் இன்றி கேவல கும்பகம் தானே வந்தாலோ குண்டலினி சக்தி செயல்படுகிறது என்று உணருங்கள். மனதில் உலக எண்ணங்கள் எப்போது இல்லாமல் போகிறதோ, எப்போது நீங்கள் தானாகவே ஓம் என்ற மந்திரத்தை ஜெபிக்கிறீர்களோ, எப்போது பேரானந்தத்தை அனுபவிக்கிறீர்களோ அப்போது குண்டலினி சக்தியானது விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தியானத்தின் போது இரு புருவங்களுக்கும் இடையில் உள்ள திரிபுடியில் கண்கள் நிலை பெற்று, சாம்பவி முத்திரை செயல்படும் போது குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் சரீரத்தில் பல பாகங்களில் மின் அதிர்வுகள் ஏற்படுகையில், பிராண அலைகள் உள்ளுக்குள்ளே அதிகரிப்பதை உணர்கையில் குண்டலினி கிளம்பி விட்டதை உணருங்கள். தியானத்தின் போது உடலே இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும் போது, உங்கள் கண் இமைகளைத் திறக்க முயற்சித்து முடியாத போது, நரம்புகள் வழியாக மின்சார அலைகள் மேலும் கீழும் பாய்வதை உணரும் போதும் குண்டலினி மேலேழும்பி விட்டதை உணருங்கள்.

நீங்கள் தியானம் செய்கையில் உத்வேகமும், உள்ளுணர்வும் பெறுகையில், இயற்கையின் இரகசியங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்குத் தானாகவே புலப்படுகையில், உங்கள் ஐயங்கள் எல்லாம் நீங்கித் தெளிவடைகையில், வேத இரகசியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தெளிவாகப் புரிய வருகையில் குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் உடல் காற்றை விட லேசாகத் தோன்றும் போது, குழப்பமான சூழலிலும் மனம் சமநிலையில் நிற்கும் போதும், அபரிதமான சக்தி உடலில் பெருகியிருப்பதை உணரும் போதும் குண்டலினி விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பல்வேறு ஆசனங்கள், மற்றும் யோக நிலைகளை நீங்கள் எந்தவித சோர்வும் சிரமும் இன்றி செய்யும் போதும், உங்கள் அறிவின் சக்தி பெருகி இருப்பதை உணரும் போதும், உயர்ந்த கவிதைகளை உங்களால் இயற்ற முடிகின்ற போதும் குண்டலினி விழித்து விட்டதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து, ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் பெற்று புருவ மத்தியில் ஆக்ஞாவில் நுழையும் போது பிரம்மானந்தத்தை அனுபவிப்பீர்கள். உங்களுக்கும் ப்ரம்மத்திற்கும் இடையே உள்ள வேற்பாட்டைப் பற்றிய லேசான அனுபவமே எஞ்சி நிற்கும். அதையும் கடந்து சகஸ்ராரத்தை அடைந்து விட்டால் யோகி நிர்விகல்ப ஸமாதியை அடைந்து விடுவார். இரண்டற்ற நிலை ஏற்படும். அனைத்து பேதங்களும் சம்ஸ்காரங்களும் மறையும். பரிசுத்த நிலை உண்டாகும். கர்ம வினைகள் அழியும். இதுவே மிகமிக உயர்வான, மேலான அஸம்ப்ரக்ஞாத ஸமாதியாகும். குண்டலினி சிவனுடன் ஐக்கியமாகிவிடுகிறது.

அதன் பிறகு யோகி விரும்பினால் தொண்டை மத்தியில் உள்ள சக்கரத்திற்கு இறங்கி வந்து சீடர்ர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, லோக ஷேமத்தில் ஈடுபடலாம். இந்தப் பூரண யோகியானவர் எட்டு வகை சித்திகளையும் பெற்றவராவார். மேலும் இதனால் யோகியானவர் 26 வகையான சக்திகளைப் பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.
1. பசிதாகத்தில் இருந்து விடுதலை.
2. சீத உஷ்ணத்தில் இருந்து விடுதலை.
3. ராக துவேஷத்திலிருந்து விடுதலை.
4. தூரதர்ஷன், தூரதிருஷ்டி.
5. தூர சிரவணம், தொலைவில் உள்ளதைக் கேட்டல், தூர சுருதி, தூரப்ரவசனம்.
6. மனோ ஜயம், மன அடக்கம்.
7. காமரூபம், யோகி தான் விரும்பிய வடிவத்தை எடுக்க முடியும்.
8. பரகாயப் பிரவேசம். அவர் பிறரது உடலில் புக முடியும். இறந்தவனை உயிர்ப்பிக்க முடியும்.
9. தேவர்களைத் தரிசித்து அவர்களோடு விளையாடி மகிழ முடியும்.
10. விரும்பும் போது மரணமடைய முடியும்.
11. விரும்புவதைப் பெற முடியும்.
12. இறந்த, நிகழ், எதிர் கால அறிவு.(த்ரிகால ஞானம்)
13. இரட்டை உணர்வுகளைக் கடத்தல்.
14. வாக்கு சித்தி.
15. ரஸவாதம்.
16. ஒரே பிறவியில் தன் எல்லா கர்மங்களையும் போக்க, தான் விரும்பும் பல வடிவங்களை எடுக்க முடியும்.
17. தவளை போலத் தத்திச் செல்ல முடியும்.
18. நோய்களை குணப்படுத்துதல்.
19. முந்தைய பிறவியைப் பற்றிய அறிவு.
20. நட்சத்திர மண்டலம், கிரகங்கள் பற்றிய ஞானம்.
21. சித்தர்களை தரிசிக்கும் ஆற்றல்.
22. இயற்கையை வெல்லுதல்.
23. தாம் விரும்பும் இடத்துக்கு நொடியில் செல்லுதல்.
24. அனைத்தையும் பகுத்தறியும் திறன்.
25. வாயு சித்தி.
26. புதையல்களை அறியும் ஆற்றல்.

குண்டலினி கிளம்பி ஐக்கியம் நிகழ்ந்த பிறகு இது போலப் பல அற்புத சக்திகள் யோகிக்கு கை கூடுகின்றன என்று சொல்லப்பட்டுள்ளது.
Via FB மௌனத்தின் அலைகள்.இராம் மனோகர்.

கருவுற்றிருக்கும் தாயா நீங்கள்? கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:07 | | Best Blogger Tips
Photo: கருவுற்றிருக்கும் தாயா நீங்கள்?
கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?...

கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் 
இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள்.

மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்...

1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.

எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும்
இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள்.

மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்...

1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.

எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

ஸ்டீவியா என்னும் சீனித்துளசி.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:06 | Best Blogger Tips
ஸ்டீவியா என்னும் சீனித்துளசி.

தென்அமெரிக்காவை தாயகமாக் கொண்ட இனிப்புச் சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை காய வைத்து பொடியாக்கி டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்கு பதிலாக இதனை உபயோகிக்கலாம். பூஜ்யம் கலோரி (Zero Calorie) மதிப்புடையது. எனவே இனிப்புடன் அருந்த வேண்டுமெனில் தாராளமாக இதனை உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் தாவரம். தமிழகத்தில் நன்கு வளர்கிறது.


இதனை தவிர்த்து காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாரு அருந்துதல், வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய சர்க்கரை நோயை குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.
தென்அமெரிக்காவை தாயகமாக் கொண்ட இனிப்புச் சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை காய வைத்து பொடியாக்கி டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்கு பதிலாக இதனை உபயோகிக்கலாம். பூஜ்யம் கலோரி (Zero Calorie) மதிப்புடையது. எனவே இனிப்புடன் அருந்த வேண்டுமெனில் தாராளமாக இதனை உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் தாவரம். தமிழகத்தில் நன்கு வளர்கிறது.


இதனை தவிர்த்து காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாரு அருந்துதல், வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய சர்க்கரை நோயை குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:06 | Best Blogger Tips
பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சமாளிக்கிறீர்களே ? இந்தக் கேள்விக்கு சரியான பதில் தர முடியுமா ? நான் சொன்னேன் ஐயா சாக்கு போக்கெல்லாம் நான் சொல்வதில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். உங்களுக்குக் கற்றுத்தரப்படாததாலோ அல்லது உங்களால் இயாலதது என்பதாலோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். சரி கேள்வி என்ன ? 
ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ?
என்று கேட்டு விட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு வேறு சிரித்துக் கொண்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு. 

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும். 

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும். 

அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சமாளிக்கிறீர்களே ? இந்தக் கேள்விக்கு சரியான பதில் தர முடியுமா ? நான் சொன்னேன் ஐயா சாக்கு போக்கெல்லாம் நான் சொல்வதில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். உங்களுக்குக் கற்றுத்தரப்படாததாலோ அல்லது உங்களால் இயாலதது என்பதாலோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். சரி கேள்வி என்ன ?
ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ?
என்று கேட்டு விட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு வேறு சிரித்துக் கொண்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.

அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
Via FB மௌனத்தின் குரல்

இன்று சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு தினம்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:55 | Best Blogger Tips
சுவாமி விவேகானந்தர்  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

இளமைப்பருவம்
=============

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

ஆன்மீகத்தில் ஆர்வமும் எழுச்சியும்
===========================

கருவிலேயே திருவுறுதல் என்பார்களே அந்த மாதிரி ஆன்மீக உணர்வு நரேந்திரருடைய இரத்தத்திலேயே கலந்திருந்தது போலும். நினைத்த நேரத்தில் மனத்தை ஒருமுகப்படத்தும் பேராற்றல் இளமையிலேயே அவரிடம் அமைந்திருந்தது. எவ்வளவு திரளான கூட்டமாக இருந்தாலும் திடீரென அவர் தன்னை மறந்த லயம் தன்னில் ஆழ்ந்து விடுவார். பெயர் சொல்லி அழைத்தாலும் அவர் செவியில் விழுவதில்லை. அவரைப் பிடித்து உலுக்கினால்கூட அசைவற்று அமர்ந்திருப்பார். தியானம் செய்வது அவருடைய உணர்வோடு ஒட்டிய ஒன்றாக இருந்தது. யார் உந்துதலும் இல்லாமல் அதிகாலையிலேயே விழித்தேழந்து நீராடி, உதயசூரியனை நோக்கி அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கிவிடுவார். சில சமயம் தியானம் மணிக்கணக்கில கூட நீடிப்பதுண்டு.

முதலில் இது ஒரு குழந்தை விளையாட்டு என எண்ணிய பெற்றோர் நரேந்திரன் நினைத்த நேரமெல்லாம் தியானத்தில் அமர்ந்துவிடுவது கண்டு குழப்பமும், திகைப்பும் அடைந்தனர். நாளடைவில் நிலைமை சரியாகி விடும் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.

வீட்டிற்கு அருகாமையில் பழங்காலக் கோயில் ஒன்று இருந்தது. கவனிப்பின்றி கிடந்த அந்த கோயில் சிறுவர்கள் விளையாடும் இடமாக ஆகியிருந்தது. நரேந்திரரும் அவரது நண்பர்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்று விளையாடுவது வழக்கம்.

சிறுவர் நரேந்திரர் ஒரு நாள் விளையாடும் நோக்கத்தில் கோயில் பக்கம் வந்தார். நண்பர்கள் கூட்டம் இன்னும் வந்த சேரவில்லை. நரேந்திரர் கோயிலுக்குள் நுழைந்து கதவை மூடித் தாளிட்டுக் கொண்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர்கள் கூட்டம் வந்து சேர்ந்தது. நண்பர்கள் நரேந்திரரைத் தேடினர். அவரைக் காண முடியவில்லை. நரேந்திரரின் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் விசாரித்தனர். நரேந்திரர் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார் என்று எண்ணியிருந்த பெற்றோர் நண்பர்களே வந்து மகனை விசாரித்தது கவலையை அளித்தது. நண்பர்களுடன் சேர்ந்து நரேந்திரரைக் தேடினார்கள். நரேந்திரர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறுவர்களில் ஒருவன் ஒடிவந்து கோயிலின் கதவு உட்புறம் தாளிடப்பட்டிருக்கும் செய்தியைச் சொன்னான். எல்லோரும் கோயிலை முற்றுகையிட்டுக் கதவைத் தட்டினர் கதவு திறக்கப்படவில்லை. கோயிலுக்குள்ளிருந்து பதிலும் கிடைக்கவில்லை.

கோயிலின் கதவை உடைத்து எல்லோரும் உள்ளே சென்றனர். அங்கே நரேந்திரர் ஆழ்ந்த தியானத்தில் மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார். தியானத்தைக் கலைத்து அவரை எழுப்புவதற்கு பெரும்பாடு படவேண்டியிருந்தது.

இனம்புரியாத பரவசநிலைக்கு நரேந்திரர் அடிக்கடி ஆளாகிவிடுவது வழக்கமாக இருந்தது. இத்தகைய தெய்வீக பரவச நிலைக்கு உள்ளாவதை பல தடவை அவரே உணர்ந்திருந்தார்.

கடவுளுடன் பேசுவது முடியுமா ?
========================

ஓரு நாள் மின்னல் வெட்டியது போல அவன் மனத்தில் திடீரென ஐய வினாவென்று எழுந்தது. சூறாவளி போல சுழன்றடித்தது. கடவுள் இருக்கிறார் என்பது உணமையானால் கடவுளைச் சந்தித்து உரையாடியவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பது உண்மையானால் கடவுளை நேரடியாகத் தரிசனம் செய்த மகான்கள் யாராவது இருக்கிறார்களா ? அவருடன் நேருக்கு நேர் உரையாடியவர் உண்டா ? அல்லது கடவுளைச் சந்தித்து உரையாடவது சாத்தியமாகக் கூடியதா ?

இந்த வினாக்களுக்கு விடை காண சுவாமி விவேகானந்தர் அக்காலத்தில் வாழ்ந்த மகான்கள், மகரிஷிகள் போன்று மக்களின் மத்திலே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த ஆன்மீகப் பெரியோர்  அணுகித் தமது சிந்தைக்குள் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த ஐய வினாக்களை அவர்களிடம் எழுப்பி ஐயந்தீர்க்குமாறு கேட்டுக் கொண்டார்,  ஆனால் விவேகானந்தரின் ஐய வினாவுக்கு யாராலும் விடையளிக்க முடியவில்லை..

அந்தச் சமயத்தில் பகவான் இராமகிருஷ்ணரின் ஆன்மீகச் கருத்துக்களும், சாதனைகளும் வங்காள மெங்கும் பரவிக்கொண்டிருந்தன. திரளான மக்கள் அவருடைய தரிசனத்துக்காக அன்றாடம் சென்று வந்தனர்.

பகவான் இராமகிருஷ்ணரைச் சந்தித்தால் தமது ஐயத்திற்கு ஒரு வேளை விடை கிடைக்கக் கூடும் என்று நரேந்திரருக்குத் தோன்றியது. பகவான் இராமகிருஷ்ணருடன் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பு நரேந்திரருக்கு வலிய வந்து அமைந்தது.

 சுரேந்திர நாத மித்ரா என்ற ஒரு பக்தரின் இல்லத்தில் ஆன்மீக விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பகவான் இராமகிருஷ்ணர் பங்கு ஆற்றுகிறார் என்பது சிறப்பான அம்சமாக இருந்தது. விழாவில் கலந்து கொள்ள வருமாறு நரேந்திரருக்கும் அழைப்பு வந்திருந்தது.

நரேந்திரர் இனிமையாகப் பாடக் கூடியவர். அதிலும் ஆன்மீகம் தொடர்புடைய பாடல்களை அற்புதமாகப் பாடுவார். அதனால் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடும் பொறுப்பு நரேந்திரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மெய்யுருக இறைவணக்கப் பாடல்களை இனிமையாக பாடிய நரேந்திரரை பகவான் இராமகிருஷ்ணர் கூர்ந்து கவனித்தார். அவர் பாடி முடித்ததும் ஸ்ரீ இராமகிருஷ்ணர் நரேந்திரரைத் தம்மருகே அழைத்து அமரச் செய்து அவருடைய விழிகளைக் கூர்ந்து நோக்கினார். அவருடைய சிரசை வருடிக் கொடுத்தவாறு, குழந்தாய் நீ இறைவனுக்கு மிகவும் அருகாமையிலிருக்கிறாய் ஒரு தடவை தட்சிணேசுவரம் வந்து செல்லேன் என அன்பழைப்பு விடுத்தார்.

நரேந்திரர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக 1881-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அது நிகழந்தது. சுரேந்திரநாத மித்ரா, நரேந்திரரை தம்முடன் அழைத்துக் கொண்டு தட்சிணேசுவரம் சென்றிருந்தார். பகவான் இராமகிருஷ்ணர் தரையில் ஒரு பாயில் அமர்ந்து கண்களை மூடியவாறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

சுரேந்திரநாத மித்ரா, நரேந்திரரை ஸ்ரீஇராமகிருஷ்ணரின் முன்னிலையில் விட்டு விட்டு ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டார்.

கண்விழித்துப் பார்த்த ஸ்ரீ இராமகிருஷ்ணர் வியப்பு தோன்ற பார்த்தார். தம்மருகே அமருமாறு கண்ஜாடையால் பணித்தார். நரேந்திரர் அமர்ந்ததும் மெல்லிய குரலில் ஏதாவது பாடு என்றார். நரேந்திரர் சில பக்திப் பாடல்களைப் பாடினார். அவர் பாடுவதை மெய்மறந்து கண்களை மூடியவாறு ரசித்துக் கொண்டிருந்த பரமஹம்சர் திடீரென எழுந்து, என் பின்னால் வா என்று கூறிவட்டு நடந்தார் பரமஹம்சர். வராந்தாவில் உள்ள ஒர் அறைக்குள் பரமஹம்சர் பிரேவசித்தார். நரேந்திரர் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றார்.

பகவான் இராமகிருஷ்ணர் அறைக்கதவை மூடிக் தாளிட்டார்.

அறைக்குள் என்ன நடந்தது ?

நரேந்திரர் கூறுவதை அவருடைய வாய்மொழியாகவே கேட்போமா.....!

குருதேவர் என் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்து வந்தார். பிறகு கதவை மூடிவிட்டார். அவர் எனக்கு ஏதோ உபதேசம் செய்யப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் சொன்னதும், செய்ததும் கற்பனைக்கு எட்டாதது. நான் சற்றும் எதிர்பாரவகையில் அவர் என் கைகளை பிடித்துக் கொண்டு அளவற்ற மகிழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் அளவற்ற பரிவுடன் முன்பே என்னை நன்றாக அறிந்தவர் போல பேசினார். இவ்வளவு காலம் கழித்து வந்திருக்கிறாயே, இது நியாயமா ? நான் உனக்காக் காத்திருக்கிறேன் என்பதை ஒரு முறையாவது நினைத்துப் பார்த்தாயா ? உலக ஆசை பிடித்த மக்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காதுகள் எரிந்து போய்விட்டன. என் மனத்தில் பொங்கும் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவரிடம் சொல்ல நான் எவ்வளவு துடித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படியே தேம்பித் தேம்பி அழுதபடி அவர் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த நிமிடம் இரண்டு கைகளையும் கூப்பி தெய்வத்தை வணங்குவது போல வணங்கியபடி என்னைப் பாரத்து, பிரபோ, நாராயணனின் அவதாரமாகிய நர முனிவரே தாங்கள் என்பதை நான் அறிவேன். மனித குலத்தின் துயர் நீக்கவே இப்பொழுது அவதாரமெடுத்து உள்ளீர் என்பதையும் நான் அறிவேன் என்றார்.

அவருடைய பேச்சுக்களையும், நடத்தையையும் கண்டு ஆச்சரியம் அடைந்த நான் அவரைப் பைத்தியம் என்று தான் எண்ணினேன். அப்படியில்லாவிடில் விசுவநாத தத்தரின் மகனாகிய என்னைப் பார்த்து இப்படியெல்லாம் பேசுவாரா என்றும் எண்ணினேன். இருப்பினும் நான் பேசாமல் மௌனமாக இருந்தேன். அந்த அதிசயமான பைத்தியக்கார மனிதர் விருப்பம் போல பேசிக் கொண்டேயிருந்தார். அடுத்த நிமிடம் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு வேறு அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்து வெண்ணெய், கற்கண்டு, இனிப்பு முதலியன கொண்டு வந்த தன் கையால் என் வாயில் ஊட்டத் தொடங்கினார். பிறகு என் கைகளை பிடித்துக் கொண்டு, கூடிய விரைவில் நீ மட்டும் தனியாக என்னிடம் வருவதாக சத்தியம் செய் என்று கூறினார். அவருடைய உண்மை வேண்டுகோளை மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறினேன். பின்பு இருவரும் அறைக்கு திரும்பினோம். நான் அவரை விட்டுச் சற்று விலகி என் நண்பர்களுடன் அமர்ந்து கொண்டேன்.

அவர் மற்றவர்களிடம் பேசும் பேச்சையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கலானேன். பைத்தியத்தின் சிறிய சாயல் கூட அவரிடம் தென்படவில்லை. அவருடைய ஆன்மீக பேச்சிலிருந்தும் ஆனந்தப் பரவச நிலையிலிருந்தும் அவர் உண்மையான துறவி என்பதையும், இறைவனுக்காக  உலக இன்பங்கள் அனைத்தையும் துறந்தவர் என்பதையும் அவருடைய பேச்சுக்கும், நடத்தைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதையும் புரிந்து கொண்டான். கடவுளைக் காண முடியும், கடவுளுடன் பேசவும் முடியும் நான் உன்னைப் பார்த்து உன்னோடு பேசுவது போல அவரைப் பார்க்கவும், அவரோடு பேசவும் முடியும், ஆனால் யார் கடவுளைப் பாரக்கவும், பேசவும் விரும்பிகிறார்கள் ? மனிதர்கள் தங்கள் மனைவி அல்லது குழந்தைகள் இறந்து விட்டால் குடம் குடமாகக் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். பணத்திற்காகவும், மனைவி, மக்களுக்காகவும் அழுது புலம்புகின்றனர். ஆனால் யாராவது இறையனுபூதி பெற முடியவில்லையே என்று கண்ணீர் சிந்துகிறார்களா ? ஒருவன் இறைவனைக் காண வேண்டும் என்று உண்மையாக ஏங்கி இறைவனை அழைத்தால் அவர் தன்னை அவருக்குக் காட்டிக் கொள்கிறார் என ஸ்ரீ இராமகிருஷ்ணர் கூறினார்.

அவருடைய இந்தப் பேச்சுகளை கேட்டதும் என்னால் அவரை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அது சாதாரணமான சமயச் சொற்பொழிவாளரின் கற்பனையாகவோ அன்றிக் கவிதையாகவோ அல்லது சொல் அலங்காரமாகவோ இருக்கவில்லை. அவருடைய சொற்கள் அவருடைய ஆழத்தில் இருந்து பாய்ந்து வந்தன. இறைவனை அடைவதற்காக அனைத்தையும் துறந்து இறைவனை முழு மனத்துடன் அழைத்தால் அந்த இறையனுபவம் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

அவருடைய இந்தப் பேச்சுடன் என்னிடம் சிறது நேரத்துக்கு முன் நடந்து கொண்ட நடத்தையை இணைத்துப் பார்க்கும் பொழுது அபக் ரோம்பி போன்ற ஆங்கில தத்துவவாதிகள் கூறியுள்ள ஒன்றையே நினைத்துக் கொண்டிருக்கம் பித்தர்களின் ஞாபகந்தான் வந்தது. ஸ்ரீ இராமகிருஷ்ணர் இவ்வகையைச் சார்ந்தவர் என்ற திடமான முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுக்கு நான் வந்தாலும் அவருடைய அதிசயிக்கத் தக்க துறவு மனப்பான்மையை என்னால் மறக்க முடியவில்லை, அவர் பைத்தியமாக இருக்கலாம். ஆனால் அபூர்வமானவர்களே அவரைப் போல இறைவனுக்காக உலகத்தை துறக்க முடியும், அவர் பைத்தியந்தான். ஆனால் எவ்வளவு தூய்மை வாய்ந்தவர் எப்படிப்பட்ட துறவு. அதற்காக மட்டுமே மனித சமுதாயம் முழுவதும் அவரை மதித்துப் போற்றி வணங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் இவ்வாறு நினைத்துக் கொண்டே அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கல்கத்தா திரும்பினேன்.

துறவியான பெருந்தகை
==================

நரேந்திரர் அது நாள் வரை பகவான் இராமகிருஷ்ணரின் சீடர் என்ற அளவுக்குத்தான் தம்மைத் தயார் செய்து வைத்திருந்தார். இராமகிருஷ்ணரை முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டிருந்தாரா என்பது கூட ஐயப்பாடே. இராமகிருஷ்ணரின் சில நோக்கங்களில் நரேந்திரருக்கு பிடிப்பு ஏற்படவில்லை. பகவான் இராமகிருஷ்ணர் தமது வழிபாட்டு முறைகளில் விக்கிரக ஆராதனைக்கும் இடமளித்திருந்தார். விக்கிரகங்களைக் கடவுள் என நம்ப நரேந்திரரின் பகுத்தறிவு மனப்பான்மை இடந்தரவில்லை. விக்கிரகங்கள் எல்லாம் கடவுள்களே என்பது இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்தும் அல்ல. இறைவனைப் பற்றிய எண்ணத்தை ஒருமுகப்படுத்துவதற்கான ஒரு சாதனமாகவே விக்கிரகம் திகழ்கிறது என்று பரமஹம்சர் கூறவதை நரேந்திரரால் சற்றும் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. கடவுளை யாரும் கண்டுணராதபோது - கடவுளின் தோற்றம் எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் ஏதோ ஒரு உருவத்தை கட்டிக் காண்பித்து, இதைக் கடவுளாக நினைத்து வழிபடு என்று எதற்காக் கூறவேண்டும் என்பது நரேந்திரரின் வாதம்.

வெகு விரைவிலேயே புரட்சிகரமான மனமாற்றம் பெற்று பகவான் இராமகிருஷ்ணரின் எண்ணங்களோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை நரேந்திரருக்கு ஏற்பட்டது.

நரேந்திரரின் வாழக்கையில் 1884-ஆம் ஆண்டில் பலவிதமான சோதனைகள் ஏற்பட்டன. அவருடைய தந்தையார் விசுவநாத தத்தர் திடீரென மரணமடைந்தார். அப்போது தான் நரேந்திரர் பி.ஏ.தேர்வு எழுதியிருந்தார்.

விசுவநாத தத்தர் நன்றாகச் சம்பாதித்தார். ஆனால் அவருக்கே உரித்தான கருணை உள்ளம் - தாராள மனப்பான்மை காரணமாக ஏழை எளிய மக்களுக்கு பணத்தை வாரி வழங்கினார். அதனால் அவர் மறைவெய்திய போது பொருளாதரார நிலையில் குடும்பம் மிகத் தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டது. கடன் சுமை அதிகமாக இருந்தது. வீட்டுக்குத் தலைமகனான நரேந்திரருக்கு தாங்க இயலாத குடும்பச் சுமையைத் தாங்கியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

குடும்பத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே. ஐந்து அல்லது ஆறு பேர் அடங்கிய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலை தேடி அலைந்தார். ஆனால் வேலை கிடைப்பதாக இல்லை.

நரேந்திரரின் குடும்பம் வளமாக இருந்த காலத்தில் அவருடன் கூட்டுறவு வைத்திருந்த நண்பர்கள் பலர் ஒதுங்கி சென்றுவிட்டனர். குடும்பத்தில் ஏற்பட்ட துயரநிகழச்சிகள் காரணமாக மனங் குழம்பிக் கிடந்த நரேந்திரர் குருதேவரைச் சந்திப்பதையே தவிர்த்திருந்தார்.

ஸ்ரீ இராமகிருஷ்ணரைத் தரிசிக்க செல்லும் சிலர் நரேந்திரர் தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தி குருதேவரிடம் கூறினார். அந்த வதந்திகளுக்கு குருதேவர் எந்த முக்கியத்துவமும் தரவில்லை.

நரேந்திரன் எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியும். அவன் சேற்றில் இறங்கமாட்டன். சூழ்நிலை காரணமாக சேறு அவன் மீது தெறித்திருந்தால் அது அவன் குற்றமாக இருக்காது. அந்தக் குறையை எளிதாகக் கழுவித் துடைத்தெறிந்துவிட முடியும் என்று பதிலளித்து புகார் கூறுவோர் வாயை அடைத்து விடுவார்.

நரேந்திரர் உலகப்பற்றை அறுத்துவிட்டு துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுவது என்ற தீர்மானத்துக்கு வந்தார்.

குருதேவரைச் சந்தித்து தம்முடைய துறவு நோக்கத்தைச் சொன்னபோது குருதேவர் கொஞ்சங்கூட ஆச்சரியப்பட்டதாகத் தெரியவில்லை.

அம்பிகையின் பணியை நிறைவேற்றுவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்திருக்கிறாய் என்பதைத் தெரிந்து கொள் உன்னால் சாமானியர்களைப் போல லௌகீக வாழ்க்கை வாழ முடியாது என்று குருதேவர் நரேந்திரின் கைகளை அன்போடு பற்றியவாறு சொன்னார் பிறகு நான் சொல்வதை மனத்தில் வைத்துக் கொள் நான் உயிருடன் இருக்கம் வரை உன் குடும்பத்துடனேயே இரு என்றார்.

நரேந்திரரின் குடும்பப் பிச்சினையில் தொடர்ந்து சிக்கல் நிடித்துக் கொண்டோயிருந்தது. நிரந்தரமான வருமானத்துக்கு எந்த வழி வகைகளும் ஏற்படவில்லை. குடும்பக் கஷ்டத்தைச் சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதும் குருதேவரின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

கஷ்டங்கள் அகலவேண்டும் என்று தம்மை நாடி வருபவர்களுக்காக குருதேவர் தாம் வழிபடும் தெய்வம்மான அகிலாண்டநாயகியான காளிமாதவிடம் பிரார்த்தனை செய்வது வழக்கம். குருதேவரின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து அகிலாண்டேஸ்வரி அருள்புரிந்து மக்களின் குறைகளை களைவதாகவும் மக்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதை நரேந்திரர் அறிவார். தமது கஷ்டங்கள் தீர தமக்காக அகிலாண்ட நாயகியிடம் பிரார்த்தனை செய்யுமாறு நரேந்திரர் குருதேவரை வேண்டினார்.

அவருடைய கோரிக்கையை குருதேவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சாமானியா மக்களுக்காக அகிலாண்டநாயகியிடம் நான் பிரார்த்தனை செய்து தேவியின் அருளைப் பெற்றுத் தருவது வேறு விஷயம் நீ தெய்வ அருளைப் பெற்ற ஒரு துறவி நீ நேரடியாக அகிலாண்டநாயகியிடம் பிரார்த்தனை செய்தால் தான் தேவியின் அருள் தடையின்றி உனக்கு கிடைக்கும் என்று குருதேவர் ஒதுங்கி கொண்டார்.

வழக்கமான வைராக்கியம் நரேந்திரரின் மனதைக் குழப்பியது விக்கிர ஆராதனை செய்தாக வேண்டிய கட்டாயநிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

நரேந்திரரின் தயக்கத்துக்கான காரணம் குருதேவருக்கு தெளிவாகவே விளங்கியது சற்று கண்டிபான குரலில் அவர் நரேந்திரரை நோக்கி இன்று செவ்வாய்கிழமை அன்னைக்கு விருப்பமான நாள் இன்று இரவு காளி மாதாவின் கோயிலுக்குச் சென்று அன்னையின் முன் வீழ்ந்து பணிந்து உனக்கு விருப்பமானவற்றைக் கேள் நீ கேட்கும் வரத்தை அவள் நிச்சயம் தருவாள் என்னுடைய அன்பு தாய் பிரம்ம சக்தி மேருணர்வே வடிவெடுத்தவள். அவளால் முடியாத காரியம் ஒன்று உண்டா ? என்று கூறினார்.

இரவு ஒன்பது மணிக்கு குருதேவரின் கட்டளையைத் தட்டமுடியாமல் காளிகோயிலை நோக்கி நடந்தார் மனம் தடுமாறியது கால்கள் தயக்கம் காட்டின.

இனி நரேந்திரர் கூறுவதைக் காது கொடுத்து கேட்போமா .. .. ..

கோயிலுக்குள் நுழைந்தேன் அங்கே அன்னை காளி உண்மையின் சின்னமாக அழகும், அன்பும் வற்றாது பெருக்கெடுத்தோடும் தெய்வீகத்துடன் இருப்பதைக் கண்டேன் பொங்கிப் பாய்ந்த பக்தியில் சிக்கி பேரானந்தத்தை அனுபவித்தேன் அன்னையின் திருவடிவில் மறுபடியும் மறுபடியும் வணங்கி அவளிடம் தாயே எனக்கு விவேகத்தைக் கொடு, ஞானத்தையும், வைராக்கியத்தையும் கொடு, உன்னை எப்பொழுதும் இடைவிடாது பார்த்துக் கொண்டே இருக்கும் வரத்தைக் கொடு என்று பிரார்த்தனை செய்தேன். விவரிக்க இயலாத அமைதி என் மனத்தில் நிலைத்தது .. .. ..

என் நோக்கத்துக்காக காளி தேவியைப் பிரார்த்தனை செய்ய நரேந்திர் சென்றாரோ, அதை அடியோடு மறந்துவிட்டார், தமது சொந்தக் கஷ்டங்கள் அகன்று வாழ்வில் சுபிட்சம் நிலவ வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்யவில்லை.

திரும்பி வந்த நரேந்திரரை நோக்கிக் குருதேவர், உன் கஷ்டங்கள் நீங்க தேவியிடம் வரம் கேட்டாயா ? என வினவினார்.

நரேந்திரர் நடந்ததைச் சொன்னார்.

மறுபடியும் காளிமாதவைச் சந்தித்து, உன் சொந்த கஷ்டங்களும், நஷ்டங்களும் அகல வேண்டும் எனப் பிரார்த்தனை செய் எனக் கூறி குருதேவர் மீண்டும் காளி கோயிலுக்கே அனுப்பினார். நரேந்திரரோ இந்தத் தடவையும் தன் உலகாயத வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாமலே திரும்பிவிட்டார். மூன்றாவது முறையும் குருதேவர் நரேந்திரரை காளி கோயிலுக்கு அனுப்பினார். பழைய கதைதான்.

நரேந்திரர் உலகில் சுகபோக வாழ்கையில் ஆழ்ந்து வீண் காலம் கழிப்பதற்காகப் பிறக்கவில்லை என்ற உண்மையை அவர் மனத்தில் படிய வைப்பதுதான் குருதேவரின் நோக்கம். குருதேவர் வெற்றி பெற்று விட்டார்.

நரேந்திரர் விவேகானந்தர் ஆனார்
=========================

1889-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் நாள் இராமகிருஷ்ணர் மண்ணுலகை நீத்து அமரத்துவம் எய்தினார்.

குருதேவர் மறைவுக்குப் பிறகு அவரைச் சூழ்ந்திருந்த சீடர்களில் பெரும் பகுதியினர் சிதறிச் சென்றுவிட்டனர். குருதேவரின் புனித அஸ்தியை வைத்து வழிபாடு நடத்த ஒரு ஆலயம் போன்ற அமைப்பினை உருவாக்க நரேந்திரர் விரும்பினார். இதற்கென கங்கை நதிக்கரையில் ஒரு சிறிய இடத்தை வாங்கவும் திட்டமிட்டார். ஆனால் அவருடைய முயற்சிகளுக்குத் துணை நிற்க சீடர்களைத் தேட வேண்டியிருந்தது. நரேந்திரர் பெரிதும் ஏமாற்ற அடைந்தார். தற்காலிகமாக தம்முடைய முயற்சியை நிறுத்திவிட்டு பகவான் குருதேவரின் ஆன்மீகச் சிந்தனைகளை உலகமெல்லாம் பரவச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் மேலை நாடுகளுக்குப் பயணமானார்.

தம்முடைய அந்த இலட்சிய நோக்கத்தில் வெற்றி கொடி நாட்டிவிட்டுத் திரும்பிய நரேந்திரர் குருநாதருக்காக ஒரு வழிபாட்டுத் தலம் அமைக்கும் முயற்சியினைத் தொடங்கினார்.

பாரா நகரில் இருந்த ஒரு பாழடைந்த வீடு அவரின் முயற்சியின் தொடக்க இடமாக அமைந்தது. குருநாதரின் சீடர்களில் பழைய ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருந்த சில இளைஞர்களைத் தேடிப் பிடித்து ஒன்று சேர்த்தார்.

அப்போது நரேந்திரர் மேற்கொண்ட அந்த முயற்சியின் தொடக்கந்தான் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாக பாரதத்திலும் உலக நாடுகளிலும் செழித்துப் பரவியிருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண மடமாகும்.

பகவான் இராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு காவி உடைகளை வழங்கி துறவிகளுக்கான தீட்சையை அளித்திருந்தார். நரேந்திரர் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு சாஸ்த்திரப்படி விரஜா ஹோமம் புரிந்து முறைப்படி சந்நியாச தீட்சை பெறச் செய்து துறவு வாழ்க்கையில் புதிய தகுதியை அளித்தார்.

நரேந்திரர் முழுமையான சந்தியாச வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு தமக்கு பெற்றோர் வைத்த பெயரைக் களைந்துவிட்டு சந்நியாச தர்மப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டியது அவசியம் என உணர்ந்தார்.

நரேந்திரர் விவிதி சானந்தரஞ் என்ற பெயரை ஏற்றுக் கொள்வது என்று முதலில் எண்ணினார். தம்மை எந்த வகையிலும் வெளிக் காண்பித்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் தம்மைப் பல்வேற பெயர்களால் அழைத்துக் கொண்டார். எனினும் அமெரிக்காவுக்குப் புறப்படுவது என்று தீர்மானித்த பிறகு விவேகானந்தர் என்ற பெயரைத் தமக்காக நிரந்தரமாகச் சூட்டிக் கொண்டார்.

அமெரிக்க நாட்டில் ஆன்மீக முழக்கம்

==========================================

அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் சர்வ சமய மகா சபையொன்று நடக்க இருக்கும் செய்தி சுவாமி விவேகானந்தரின் செவிக்கு எட்டியது. சர்வ சமய மகா சபையில் எப்படியாவது பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு தேவையான பண  உதவி அவருக்கு எளிதாகக் கிட்டவில்லை. உதவி செய்வதற்காக முன்வந்த சிலரும் பின்வாங்கி விட்டனர்.

சுவாமி விவேகானந்தர் எதோ சிந்தனையுடன் பாரத நாட்டின் புனித தலங்களில் ஒன்றான இராமேசுவரத்துக்குச் சென்றார். அங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்ற சுவாமி விவேகானந்தர் அங்கே கடல் நடுவே இருந்த ஒர் பாறையின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார்.

கன்னியாகுமரிலிருந்து சென்னை சென்ற சுவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பற்றுடைய அன்பர்கள் பெருவாரியாகத் திரண்டு அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அமெரிக்காவுக்குச் செல்ல பணம் திரட்டி அளித்தனர்.

இலங்கை, சீனா, ஜப்பான் வழியாகப் பயணம் செய்து 1893-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30-ஆம் தேதி அமெரிக்காவை அடைந்தபோது அங்கே பல கடுமையான சோதனைகளுக்கு அவர் இலக்காக நேர்ந்தது. அங்கே சர்வ சமய மகா சபை நடக்கும் காலத்தை மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போட்டு விட்டார்கள். மகா சபையில் கலந்து கொள்வதற்கு ஏதாவதொரு ஆன்மீக சங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஏறத்தாழ மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்குவதற்கான பொருளாதார வசதி சுவாமியிடம் இல்லை. தவிர அவரை மகாசபைக்கு பரிந்துரை செய்ய யாரை அணுக முடியும் ?

சோதனைகளையெல்லாம் கடந்து இறைவன் அருளால் விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்றார்.

சர்வ சமய மகாசபை என்று கூறப்பட்டாலும் அது கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்கத்துடனேயே இயங்கியதை விவேகாந்தர் புரிந்துக் கொண்டார்.

மகாசபைக் கூட்டம் தொடங்கப் பெற்றது. மகா சபையில் உரையாற்றியவர்களில் பெரும்பாலோர் உலகத்திலேயே தலைசிறந்த மதம் கிறிஸ்தவ மதந்தான் என்றும் மற்ற உலக மதங்கள் அத்தனையுமே போலிகள் என்பது போன்றும் பேசினார்கள்.

பேச வாய்ப்பளிக்கப்பட்டபோது சுவாமி விவேகானந்தர் சிங்கம் போலக் கம்பீரமாக எழுந்தார்.

மேலை நாடுகளில் எந்த சபையில் உரையாற்றுவதாக இருந்தாலும் சீமான்களே-சீமாட்டிகளே (லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்) என சொல்லித்துத்தான் பேச்சைத் துவக்குவது வழக்கம்.

ஆனால் சுவாமி விவேகானந்தர் தமது குரலை உயர்த்திக் கம்பீரமாக அமெரிக்க சகோதரிகளே சகோதர்களே .. .. .. எனத் தமது பேச்சைத் துவக்கினார்.

சபையிலே குழுமியிருந்த ஆறாயிரம் அமெரிக்க மக்கள் தங்களைச் சகோதரிகளாக, சகோதர்களாக சகோதர பாசத்துடன் சுவாமிகள், விளிப்பது அவர்களின் உணர்வுகளைத் தொட்டு அசைத்தது. அவர்கள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சுவாமி விவேகானந்தர் தமது சொற்பொழிவைத் தொடர்ந்தார்.
=============================================

உலகத்திலேயே மிகவும் தொன்மை வாய்ந்த சந்தியாசிகளின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொன்மை வாய்ந்த மதத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன். இவ்வாறு அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் தமது பேச்சைத் தொடர்ந்து அனைத்தையும் உள்ளடக்கிய பரந்து விரிந்த இந்து தர்மத்தைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, சமீப காலத்தில் அறிந்து கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வேதாந்த தத்துவத்தின் எதிரொலி போன்று தோன்றுகிறது. இவ்வளவு உயர்ந்த வேதாந்த தத்துவம் முதல் மிகவும் கீழ்நிலையில் உள்ள பலதரப்பட்ட புராணங்களை உடைய உருவ வழிபாடு வரை, பௌத்தர்களின் உலகாயதக் கொள்கைகளுக்கும் இந்து சமயத்தில் இடமுண்டு .. .. ..

சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தில் போதிந்திருக்கும் கருத்துக்கள் இன்றைய விஞ்ஞான யுகத்துக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதைக் தர்க்க ரீதியாக விளக்கினார். இந்து தர்மம் இந்திய எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கமே வழி காண்பிக்கும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்தினார்.

அமெரிக்காவில் தமது பணிகளை முடித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் பல மேலை நாடுகளின் அழைப்பை ஏற்று அங்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்றி உலகப் புகழை அள்ளியவாறு 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தாயகத்தின் மண்ணை வந்து மிதித்தார். இங்கே நாம் பெருமைப்படக் கூடியது என்னவென்றால் அவர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்து சேர்ந்த இடம் நமது தமிழகந்தான்.

பாம்பனிலிருந்து இராமேசுவரம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை நகர் வந்தடையும் வரை மக்களின் வரவேற்பினை ஏற்றுச் சொற்பொழிவுகளாற்றினார்.

சென்னை நகரத்தில் தான் சுவாமிஜிக்கு நண்பர்களும், பக்தர்களும் அதிகம். இங்கே சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.

இதற்கு மேல் சுவாமி விவேகானந்திரின் வாழ்க்கையைப் பற்றி நாம் தனியாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ? சுவாமிஜி தேசத்தோடு ஒன்றிப் போய்விட்டார். மக்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிட்டார். அவர் அமரத்துவம் அடையும் வரை ஆன்மீக ரீதியாக, சமுதாய நோக்குடன் மனித நேயம் தவழ, தேசபக்தி மிளிர சுவாமிஜி ஆற்றிய தொண்டுதானே அவருடைய வாழ்க்கை வரலாறு.

தூய்மையான கொழுந்து விட்டு எரிகின்ற தேசப் பற்றும், பாரத மக்களிடம் அன்பும், சுவாமிஜியின் சேவையின் முக்கிய அம்சமாக இருந்தன. மதங்கள் பெயரால் மோதல்கள், ஜாதிப் பிரிவினைகள், சமூகப் பிரிவனைகள் போன்றவை நிறைந்த பாரத தேசத்தில் ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழந்தவர் சுவாமி மிரட்டிச் சமுதாய வாழ்க்கையைச் சீரழிக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதாகத் தீர்வு  காண அவர் நமக்கென விட்டுச் சென்றிருக்கும் அறிவுரைகளும், போதனைகளும் மட்டுமே உதவி செய்ய முடியும்.
சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

இளமைப்பருவம்
=============

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

ஆன்மீகத்தில் ஆர்வமும் எழுச்சியும்
===========================

கருவிலேயே திருவுறுதல் என்பார்களே அந்த மாதிரி ஆன்மீக உணர்வு நரேந்திரருடைய இரத்தத்திலேயே கலந்திருந்தது போலும். நினைத்த நேரத்தில் மனத்தை ஒருமுகப்படத்தும் பேராற்றல் இளமையிலேயே அவரிடம் அமைந்திருந்தது. எவ்வளவு திரளான கூட்டமாக இருந்தாலும் திடீரென அவர் தன்னை மறந்த லயம் தன்னில் ஆழ்ந்து விடுவார். பெயர் சொல்லி அழைத்தாலும் அவர் செவியில் விழுவதில்லை. அவரைப் பிடித்து உலுக்கினால்கூட அசைவற்று அமர்ந்திருப்பார். தியானம் செய்வது அவருடைய உணர்வோடு ஒட்டிய ஒன்றாக இருந்தது. யார் உந்துதலும் இல்லாமல் அதிகாலையிலேயே விழித்தேழந்து நீராடி, உதயசூரியனை நோக்கி அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கிவிடுவார். சில சமயம் தியானம் மணிக்கணக்கில கூட நீடிப்பதுண்டு.

முதலில் இது ஒரு குழந்தை விளையாட்டு என எண்ணிய பெற்றோர் நரேந்திரன் நினைத்த நேரமெல்லாம் தியானத்தில் அமர்ந்துவிடுவது கண்டு குழப்பமும், திகைப்பும் அடைந்தனர். நாளடைவில் நிலைமை சரியாகி விடும் என்று மனதைத் தேற்றிக் கொண்டனர்.

வீட்டிற்கு அருகாமையில் பழங்காலக் கோயில் ஒன்று இருந்தது. கவனிப்பின்றி கிடந்த அந்த கோயில் சிறுவர்கள் விளையாடும் இடமாக ஆகியிருந்தது. நரேந்திரரும் அவரது நண்பர்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அங்கே சென்று விளையாடுவது வழக்கம்.

சிறுவர் நரேந்திரர் ஒரு நாள் விளையாடும் நோக்கத்தில் கோயில் பக்கம் வந்தார். நண்பர்கள் கூட்டம் இன்னும் வந்த சேரவில்லை. நரேந்திரர் கோயிலுக்குள் நுழைந்து கதவை மூடித் தாளிட்டுக் கொண்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர்கள் கூட்டம் வந்து சேர்ந்தது. நண்பர்கள் நரேந்திரரைத் தேடினர். அவரைக் காண முடியவில்லை. நரேந்திரரின் வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் விசாரித்தனர். நரேந்திரர் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார் என்று எண்ணியிருந்த பெற்றோர் நண்பர்களே வந்து மகனை விசாரித்தது கவலையை அளித்தது. நண்பர்களுடன் சேர்ந்து நரேந்திரரைக் தேடினார்கள். நரேந்திரர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறுவர்களில் ஒருவன் ஒடிவந்து கோயிலின் கதவு உட்புறம் தாளிடப்பட்டிருக்கும் செய்தியைச் சொன்னான். எல்லோரும் கோயிலை முற்றுகையிட்டுக் கதவைத் தட்டினர் கதவு திறக்கப்படவில்லை. கோயிலுக்குள்ளிருந்து பதிலும் கிடைக்கவில்லை.

கோயிலின் கதவை உடைத்து எல்லோரும் உள்ளே சென்றனர். அங்கே நரேந்திரர் ஆழ்ந்த தியானத்தில் மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்தார். தியானத்தைக் கலைத்து அவரை எழுப்புவதற்கு பெரும்பாடு படவேண்டியிருந்தது.

இனம்புரியாத பரவசநிலைக்கு நரேந்திரர் அடிக்கடி ஆளாகிவிடுவது வழக்கமாக இருந்தது. இத்தகைய தெய்வீக பரவச நிலைக்கு உள்ளாவதை பல தடவை அவரே உணர்ந்திருந்தார்.

கடவுளுடன் பேசுவது முடியுமா ?
========================

ஓரு நாள் மின்னல் வெட்டியது போல அவன் மனத்தில் திடீரென ஐய வினாவென்று எழுந்தது. சூறாவளி போல சுழன்றடித்தது. கடவுள் இருக்கிறார் என்பது உணமையானால் கடவுளைச் சந்தித்து உரையாடியவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பது உண்மையானால் கடவுளை நேரடியாகத் தரிசனம் செய்த மகான்கள் யாராவது இருக்கிறார்களா ? அவருடன் நேருக்கு நேர் உரையாடியவர் உண்டா ? அல்லது கடவுளைச் சந்தித்து உரையாடவது சாத்தியமாகக் கூடியதா ?

இந்த வினாக்களுக்கு விடை காண சுவாமி விவேகானந்தர் அக்காலத்தில் வாழ்ந்த மகான்கள், மகரிஷிகள் போன்று மக்களின் மத்திலே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த ஆன்மீகப் பெரியோர் அணுகித் தமது சிந்தைக்குள் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த ஐய வினாக்களை அவர்களிடம் எழுப்பி ஐயந்தீர்க்குமாறு கேட்டுக் கொண்டார், ஆனால் விவேகானந்தரின் ஐய வினாவுக்கு யாராலும் விடையளிக்க முடியவில்லை..

அந்தச் சமயத்தில் பகவான் இராமகிருஷ்ணரின் ஆன்மீகச் கருத்துக்களும், சாதனைகளும் வங்காள மெங்கும் பரவிக்கொண்டிருந்தன. திரளான மக்கள் அவருடைய தரிசனத்துக்காக அன்றாடம் சென்று வந்தனர்.

பகவான் இராமகிருஷ்ணரைச் சந்தித்தால் தமது ஐயத்திற்கு ஒரு வேளை விடை கிடைக்கக் கூடும் என்று நரேந்திரருக்குத் தோன்றியது. பகவான் இராமகிருஷ்ணருடன் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரு வாய்ப்பு நரேந்திரருக்கு வலிய வந்து அமைந்தது.

சுரேந்திர நாத மித்ரா என்ற ஒரு பக்தரின் இல்லத்தில் ஆன்மீக விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பகவான் இராமகிருஷ்ணர் பங்கு ஆற்றுகிறார் என்பது சிறப்பான அம்சமாக இருந்தது. விழாவில் கலந்து கொள்ள வருமாறு நரேந்திரருக்கும் அழைப்பு வந்திருந்தது.

நரேந்திரர் இனிமையாகப் பாடக் கூடியவர். அதிலும் ஆன்மீகம் தொடர்புடைய பாடல்களை அற்புதமாகப் பாடுவார். அதனால் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடும் பொறுப்பு நரேந்திரரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மெய்யுருக இறைவணக்கப் பாடல்களை இனிமையாக பாடிய நரேந்திரரை பகவான் இராமகிருஷ்ணர் கூர்ந்து கவனித்தார். அவர் பாடி முடித்ததும் ஸ்ரீ இராமகிருஷ்ணர் நரேந்திரரைத் தம்மருகே அழைத்து அமரச் செய்து அவருடைய விழிகளைக் கூர்ந்து நோக்கினார். அவருடைய சிரசை வருடிக் கொடுத்தவாறு, குழந்தாய் நீ இறைவனுக்கு மிகவும் அருகாமையிலிருக்கிறாய் ஒரு தடவை தட்சிணேசுவரம் வந்து செல்லேன் என அன்பழைப்பு விடுத்தார்.

நரேந்திரர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக 1881-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அது நிகழந்தது. சுரேந்திரநாத மித்ரா, நரேந்திரரை தம்முடன் அழைத்துக் கொண்டு தட்சிணேசுவரம் சென்றிருந்தார். பகவான் இராமகிருஷ்ணர் தரையில் ஒரு பாயில் அமர்ந்து கண்களை மூடியவாறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

சுரேந்திரநாத மித்ரா, நரேந்திரரை ஸ்ரீஇராமகிருஷ்ணரின் முன்னிலையில் விட்டு விட்டு ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டார்.

கண்விழித்துப் பார்த்த ஸ்ரீ இராமகிருஷ்ணர் வியப்பு தோன்ற பார்த்தார். தம்மருகே அமருமாறு கண்ஜாடையால் பணித்தார். நரேந்திரர் அமர்ந்ததும் மெல்லிய குரலில் ஏதாவது பாடு என்றார். நரேந்திரர் சில பக்திப் பாடல்களைப் பாடினார். அவர் பாடுவதை மெய்மறந்து கண்களை மூடியவாறு ரசித்துக் கொண்டிருந்த பரமஹம்சர் திடீரென எழுந்து, என் பின்னால் வா என்று கூறிவட்டு நடந்தார் பரமஹம்சர். வராந்தாவில் உள்ள ஒர் அறைக்குள் பரமஹம்சர் பிரேவசித்தார். நரேந்திரர் அவரைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றார்.

பகவான் இராமகிருஷ்ணர் அறைக்கதவை மூடிக் தாளிட்டார்.

அறைக்குள் என்ன நடந்தது ?

நரேந்திரர் கூறுவதை அவருடைய வாய்மொழியாகவே கேட்போமா.....!

குருதேவர் என் கையைப் பிடித்து அறைக்குள் அழைத்து வந்தார். பிறகு கதவை மூடிவிட்டார். அவர் எனக்கு ஏதோ உபதேசம் செய்யப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் சொன்னதும், செய்ததும் கற்பனைக்கு எட்டாதது. நான் சற்றும் எதிர்பாரவகையில் அவர் என் கைகளை பிடித்துக் கொண்டு அளவற்ற மகிழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் அளவற்ற பரிவுடன் முன்பே என்னை நன்றாக அறிந்தவர் போல பேசினார். இவ்வளவு காலம் கழித்து வந்திருக்கிறாயே, இது நியாயமா ? நான் உனக்காக் காத்திருக்கிறேன் என்பதை ஒரு முறையாவது நினைத்துப் பார்த்தாயா ? உலக ஆசை பிடித்த மக்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு என் காதுகள் எரிந்து போய்விட்டன. என் மனத்தில் பொங்கும் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய ஒருவரிடம் சொல்ல நான் எவ்வளவு துடித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படியே தேம்பித் தேம்பி அழுதபடி அவர் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த நிமிடம் இரண்டு கைகளையும் கூப்பி தெய்வத்தை வணங்குவது போல வணங்கியபடி என்னைப் பாரத்து, பிரபோ, நாராயணனின் அவதாரமாகிய நர முனிவரே தாங்கள் என்பதை நான் அறிவேன். மனித குலத்தின் துயர் நீக்கவே இப்பொழுது அவதாரமெடுத்து உள்ளீர் என்பதையும் நான் அறிவேன் என்றார்.

அவருடைய பேச்சுக்களையும், நடத்தையையும் கண்டு ஆச்சரியம் அடைந்த நான் அவரைப் பைத்தியம் என்று தான் எண்ணினேன். அப்படியில்லாவிடில் விசுவநாத தத்தரின் மகனாகிய என்னைப் பார்த்து இப்படியெல்லாம் பேசுவாரா என்றும் எண்ணினேன். இருப்பினும் நான் பேசாமல் மௌனமாக இருந்தேன். அந்த அதிசயமான பைத்தியக்கார மனிதர் விருப்பம் போல பேசிக் கொண்டேயிருந்தார். அடுத்த நிமிடம் என்னை காத்திருக்க சொல்லிவிட்டு வேறு அறைக்குள் நுழைந்தார். அங்கிருந்து வெண்ணெய், கற்கண்டு, இனிப்பு முதலியன கொண்டு வந்த தன் கையால் என் வாயில் ஊட்டத் தொடங்கினார். பிறகு என் கைகளை பிடித்துக் கொண்டு, கூடிய விரைவில் நீ மட்டும் தனியாக என்னிடம் வருவதாக சத்தியம் செய் என்று கூறினார். அவருடைய உண்மை வேண்டுகோளை மறுக்க முடியாமல் சரி வருகிறேன் என்று கூறினேன். பின்பு இருவரும் அறைக்கு திரும்பினோம். நான் அவரை விட்டுச் சற்று விலகி என் நண்பர்களுடன் அமர்ந்து கொண்டேன்.

அவர் மற்றவர்களிடம் பேசும் பேச்சையும், நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கலானேன். பைத்தியத்தின் சிறிய சாயல் கூட அவரிடம் தென்படவில்லை. அவருடைய ஆன்மீக பேச்சிலிருந்தும் ஆனந்தப் பரவச நிலையிலிருந்தும் அவர் உண்மையான துறவி என்பதையும், இறைவனுக்காக உலக இன்பங்கள் அனைத்தையும் துறந்தவர் என்பதையும் அவருடைய பேச்சுக்கும், நடத்தைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதையும் புரிந்து கொண்டான். கடவுளைக் காண முடியும், கடவுளுடன் பேசவும் முடியும் நான் உன்னைப் பார்த்து உன்னோடு பேசுவது போல அவரைப் பார்க்கவும், அவரோடு பேசவும் முடியும், ஆனால் யார் கடவுளைப் பாரக்கவும், பேசவும் விரும்பிகிறார்கள் ? மனிதர்கள் தங்கள் மனைவி அல்லது குழந்தைகள் இறந்து விட்டால் குடம் குடமாகக் கண்ணீர் விட்டு அழுகிறார்கள். பணத்திற்காகவும், மனைவி, மக்களுக்காகவும் அழுது புலம்புகின்றனர். ஆனால் யாராவது இறையனுபூதி பெற முடியவில்லையே என்று கண்ணீர் சிந்துகிறார்களா ? ஒருவன் இறைவனைக் காண வேண்டும் என்று உண்மையாக ஏங்கி இறைவனை அழைத்தால் அவர் தன்னை அவருக்குக் காட்டிக் கொள்கிறார் என ஸ்ரீ இராமகிருஷ்ணர் கூறினார்.

அவருடைய இந்தப் பேச்சுகளை கேட்டதும் என்னால் அவரை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அது சாதாரணமான சமயச் சொற்பொழிவாளரின் கற்பனையாகவோ அன்றிக் கவிதையாகவோ அல்லது சொல் அலங்காரமாகவோ இருக்கவில்லை. அவருடைய சொற்கள் அவருடைய ஆழத்தில் இருந்து பாய்ந்து வந்தன. இறைவனை அடைவதற்காக அனைத்தையும் துறந்து இறைவனை முழு மனத்துடன் அழைத்தால் அந்த இறையனுபவம் அவருக்குக் கிடைத்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

அவருடைய இந்தப் பேச்சுடன் என்னிடம் சிறது நேரத்துக்கு முன் நடந்து கொண்ட நடத்தையை இணைத்துப் பார்க்கும் பொழுது அபக் ரோம்பி போன்ற ஆங்கில தத்துவவாதிகள் கூறியுள்ள ஒன்றையே நினைத்துக் கொண்டிருக்கம் பித்தர்களின் ஞாபகந்தான் வந்தது. ஸ்ரீ இராமகிருஷ்ணர் இவ்வகையைச் சார்ந்தவர் என்ற திடமான முடிவுக்கு வந்தேன். அந்த முடிவுக்கு நான் வந்தாலும் அவருடைய அதிசயிக்கத் தக்க துறவு மனப்பான்மையை என்னால் மறக்க முடியவில்லை, அவர் பைத்தியமாக இருக்கலாம். ஆனால் அபூர்வமானவர்களே அவரைப் போல இறைவனுக்காக உலகத்தை துறக்க முடியும், அவர் பைத்தியந்தான். ஆனால் எவ்வளவு தூய்மை வாய்ந்தவர் எப்படிப்பட்ட துறவு. அதற்காக மட்டுமே மனித சமுதாயம் முழுவதும் அவரை மதித்துப் போற்றி வணங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் இவ்வாறு நினைத்துக் கொண்டே அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கல்கத்தா திரும்பினேன்.

துறவியான பெருந்தகை
==================

நரேந்திரர் அது நாள் வரை பகவான் இராமகிருஷ்ணரின் சீடர் என்ற அளவுக்குத்தான் தம்மைத் தயார் செய்து வைத்திருந்தார். இராமகிருஷ்ணரை முழுமையாக அவர் ஏற்றுக் கொண்டிருந்தாரா என்பது கூட ஐயப்பாடே. இராமகிருஷ்ணரின் சில நோக்கங்களில் நரேந்திரருக்கு பிடிப்பு ஏற்படவில்லை. பகவான் இராமகிருஷ்ணர் தமது வழிபாட்டு முறைகளில் விக்கிரக ஆராதனைக்கும் இடமளித்திருந்தார். விக்கிரகங்களைக் கடவுள் என நம்ப நரேந்திரரின் பகுத்தறிவு மனப்பான்மை இடந்தரவில்லை. விக்கிரகங்கள் எல்லாம் கடவுள்களே என்பது இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்தும் அல்ல. இறைவனைப் பற்றிய எண்ணத்தை ஒருமுகப்படுத்துவதற்கான ஒரு சாதனமாகவே விக்கிரகம் திகழ்கிறது என்று பரமஹம்சர் கூறவதை நரேந்திரரால் சற்றும் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. கடவுளை யாரும் கண்டுணராதபோது - கடவுளின் தோற்றம் எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் ஏதோ ஒரு உருவத்தை கட்டிக் காண்பித்து, இதைக் கடவுளாக நினைத்து வழிபடு என்று எதற்காக் கூறவேண்டும் என்பது நரேந்திரரின் வாதம்.

வெகு விரைவிலேயே புரட்சிகரமான மனமாற்றம் பெற்று பகவான் இராமகிருஷ்ணரின் எண்ணங்களோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலை நரேந்திரருக்கு ஏற்பட்டது.

நரேந்திரரின் வாழக்கையில் 1884-ஆம் ஆண்டில் பலவிதமான சோதனைகள் ஏற்பட்டன. அவருடைய தந்தையார் விசுவநாத தத்தர் திடீரென மரணமடைந்தார். அப்போது தான் நரேந்திரர் பி.ஏ.தேர்வு எழுதியிருந்தார்.

விசுவநாத தத்தர் நன்றாகச் சம்பாதித்தார். ஆனால் அவருக்கே உரித்தான கருணை உள்ளம் - தாராள மனப்பான்மை காரணமாக ஏழை எளிய மக்களுக்கு பணத்தை வாரி வழங்கினார். அதனால் அவர் மறைவெய்திய போது பொருளாதரார நிலையில் குடும்பம் மிகத் தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டது. கடன் சுமை அதிகமாக இருந்தது. வீட்டுக்குத் தலைமகனான நரேந்திரருக்கு தாங்க இயலாத குடும்பச் சுமையைத் தாங்கியாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

குடும்பத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே. ஐந்து அல்லது ஆறு பேர் அடங்கிய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலை தேடி அலைந்தார். ஆனால் வேலை கிடைப்பதாக இல்லை.

நரேந்திரரின் குடும்பம் வளமாக இருந்த காலத்தில் அவருடன் கூட்டுறவு வைத்திருந்த நண்பர்கள் பலர் ஒதுங்கி சென்றுவிட்டனர். குடும்பத்தில் ஏற்பட்ட துயரநிகழச்சிகள் காரணமாக மனங் குழம்பிக் கிடந்த நரேந்திரர் குருதேவரைச் சந்திப்பதையே தவிர்த்திருந்தார்.

ஸ்ரீ இராமகிருஷ்ணரைத் தரிசிக்க செல்லும் சிலர் நரேந்திரர் தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தி குருதேவரிடம் கூறினார். அந்த வதந்திகளுக்கு குருதேவர் எந்த முக்கியத்துவமும் தரவில்லை.

நரேந்திரன் எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியும். அவன் சேற்றில் இறங்கமாட்டன். சூழ்நிலை காரணமாக சேறு அவன் மீது தெறித்திருந்தால் அது அவன் குற்றமாக இருக்காது. அந்தக் குறையை எளிதாகக் கழுவித் துடைத்தெறிந்துவிட முடியும் என்று பதிலளித்து புகார் கூறுவோர் வாயை அடைத்து விடுவார்.

நரேந்திரர் உலகப்பற்றை அறுத்துவிட்டு துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுவது என்ற தீர்மானத்துக்கு வந்தார்.

குருதேவரைச் சந்தித்து தம்முடைய துறவு நோக்கத்தைச் சொன்னபோது குருதேவர் கொஞ்சங்கூட ஆச்சரியப்பட்டதாகத் தெரியவில்லை.

அம்பிகையின் பணியை நிறைவேற்றுவதற்காகவே இவ்வுலகத்திற்கு வந்திருக்கிறாய் என்பதைத் தெரிந்து கொள் உன்னால் சாமானியர்களைப் போல லௌகீக வாழ்க்கை வாழ முடியாது என்று குருதேவர் நரேந்திரின் கைகளை அன்போடு பற்றியவாறு சொன்னார் பிறகு நான் சொல்வதை மனத்தில் வைத்துக் கொள் நான் உயிருடன் இருக்கம் வரை உன் குடும்பத்துடனேயே இரு என்றார்.

நரேந்திரரின் குடும்பப் பிச்சினையில் தொடர்ந்து சிக்கல் நிடித்துக் கொண்டோயிருந்தது. நிரந்தரமான வருமானத்துக்கு எந்த வழி வகைகளும் ஏற்படவில்லை. குடும்பக் கஷ்டத்தைச் சமாளிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டதும் குருதேவரின் உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

கஷ்டங்கள் அகலவேண்டும் என்று தம்மை நாடி வருபவர்களுக்காக குருதேவர் தாம் வழிபடும் தெய்வம்மான அகிலாண்டநாயகியான காளிமாதவிடம் பிரார்த்தனை செய்வது வழக்கம். குருதேவரின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து அகிலாண்டேஸ்வரி அருள்புரிந்து மக்களின் குறைகளை களைவதாகவும் மக்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை இருப்பதை நரேந்திரர் அறிவார். தமது கஷ்டங்கள் தீர தமக்காக அகிலாண்ட நாயகியிடம் பிரார்த்தனை செய்யுமாறு நரேந்திரர் குருதேவரை வேண்டினார்.

அவருடைய கோரிக்கையை குருதேவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். சாமானியா மக்களுக்காக அகிலாண்டநாயகியிடம் நான் பிரார்த்தனை செய்து தேவியின் அருளைப் பெற்றுத் தருவது வேறு விஷயம் நீ தெய்வ அருளைப் பெற்ற ஒரு துறவி நீ நேரடியாக அகிலாண்டநாயகியிடம் பிரார்த்தனை செய்தால் தான் தேவியின் அருள் தடையின்றி உனக்கு கிடைக்கும் என்று குருதேவர் ஒதுங்கி கொண்டார்.

வழக்கமான வைராக்கியம் நரேந்திரரின் மனதைக் குழப்பியது விக்கிர ஆராதனை செய்தாக வேண்டிய கட்டாயநிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

நரேந்திரரின் தயக்கத்துக்கான காரணம் குருதேவருக்கு தெளிவாகவே விளங்கியது சற்று கண்டிபான குரலில் அவர் நரேந்திரரை நோக்கி இன்று செவ்வாய்கிழமை அன்னைக்கு விருப்பமான நாள் இன்று இரவு காளி மாதாவின் கோயிலுக்குச் சென்று அன்னையின் முன் வீழ்ந்து பணிந்து உனக்கு விருப்பமானவற்றைக் கேள் நீ கேட்கும் வரத்தை அவள் நிச்சயம் தருவாள் என்னுடைய அன்பு தாய் பிரம்ம சக்தி மேருணர்வே வடிவெடுத்தவள். அவளால் முடியாத காரியம் ஒன்று உண்டா ? என்று கூறினார்.

இரவு ஒன்பது மணிக்கு குருதேவரின் கட்டளையைத் தட்டமுடியாமல் காளிகோயிலை நோக்கி நடந்தார் மனம் தடுமாறியது கால்கள் தயக்கம் காட்டின.

இனி நரேந்திரர் கூறுவதைக் காது கொடுத்து கேட்போமா .. .. ..

கோயிலுக்குள் நுழைந்தேன் அங்கே அன்னை காளி உண்மையின் சின்னமாக அழகும், அன்பும் வற்றாது பெருக்கெடுத்தோடும் தெய்வீகத்துடன் இருப்பதைக் கண்டேன் பொங்கிப் பாய்ந்த பக்தியில் சிக்கி பேரானந்தத்தை அனுபவித்தேன் அன்னையின் திருவடிவில் மறுபடியும் மறுபடியும் வணங்கி அவளிடம் தாயே எனக்கு விவேகத்தைக் கொடு, ஞானத்தையும், வைராக்கியத்தையும் கொடு, உன்னை எப்பொழுதும் இடைவிடாது பார்த்துக் கொண்டே இருக்கும் வரத்தைக் கொடு என்று பிரார்த்தனை செய்தேன். விவரிக்க இயலாத அமைதி என் மனத்தில் நிலைத்தது .. .. ..

என் நோக்கத்துக்காக காளி தேவியைப் பிரார்த்தனை செய்ய நரேந்திர் சென்றாரோ, அதை அடியோடு மறந்துவிட்டார், தமது சொந்தக் கஷ்டங்கள் அகன்று வாழ்வில் சுபிட்சம் நிலவ வேண்டும் என்று அவர் பிரார்த்தனை செய்யவில்லை.

திரும்பி வந்த நரேந்திரரை நோக்கிக் குருதேவர், உன் கஷ்டங்கள் நீங்க தேவியிடம் வரம் கேட்டாயா ? என வினவினார்.

நரேந்திரர் நடந்ததைச் சொன்னார்.

மறுபடியும் காளிமாதவைச் சந்தித்து, உன் சொந்த கஷ்டங்களும், நஷ்டங்களும் அகல வேண்டும் எனப் பிரார்த்தனை செய் எனக் கூறி குருதேவர் மீண்டும் காளி கோயிலுக்கே அனுப்பினார். நரேந்திரரோ இந்தத் தடவையும் தன் உலகாயத வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாமலே திரும்பிவிட்டார். மூன்றாவது முறையும் குருதேவர் நரேந்திரரை காளி கோயிலுக்கு அனுப்பினார். பழைய கதைதான்.

நரேந்திரர் உலகில் சுகபோக வாழ்கையில் ஆழ்ந்து வீண் காலம் கழிப்பதற்காகப் பிறக்கவில்லை என்ற உண்மையை அவர் மனத்தில் படிய வைப்பதுதான் குருதேவரின் நோக்கம். குருதேவர் வெற்றி பெற்று விட்டார்.

நரேந்திரர் விவேகானந்தர் ஆனார்
=========================

1889-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் நாள் இராமகிருஷ்ணர் மண்ணுலகை நீத்து அமரத்துவம் எய்தினார்.

குருதேவர் மறைவுக்குப் பிறகு அவரைச் சூழ்ந்திருந்த சீடர்களில் பெரும் பகுதியினர் சிதறிச் சென்றுவிட்டனர். குருதேவரின் புனித அஸ்தியை வைத்து வழிபாடு நடத்த ஒரு ஆலயம் போன்ற அமைப்பினை உருவாக்க நரேந்திரர் விரும்பினார். இதற்கென கங்கை நதிக்கரையில் ஒரு சிறிய இடத்தை வாங்கவும் திட்டமிட்டார். ஆனால் அவருடைய முயற்சிகளுக்குத் துணை நிற்க சீடர்களைத் தேட வேண்டியிருந்தது. நரேந்திரர் பெரிதும் ஏமாற்ற அடைந்தார். தற்காலிகமாக தம்முடைய முயற்சியை நிறுத்திவிட்டு பகவான் குருதேவரின் ஆன்மீகச் சிந்தனைகளை உலகமெல்லாம் பரவச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் மேலை நாடுகளுக்குப் பயணமானார்.

தம்முடைய அந்த இலட்சிய நோக்கத்தில் வெற்றி கொடி நாட்டிவிட்டுத் திரும்பிய நரேந்திரர் குருநாதருக்காக ஒரு வழிபாட்டுத் தலம் அமைக்கும் முயற்சியினைத் தொடங்கினார்.

பாரா நகரில் இருந்த ஒரு பாழடைந்த வீடு அவரின் முயற்சியின் தொடக்க இடமாக அமைந்தது. குருநாதரின் சீடர்களில் பழைய ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருந்த சில இளைஞர்களைத் தேடிப் பிடித்து ஒன்று சேர்த்தார்.

அப்போது நரேந்திரர் மேற்கொண்ட அந்த முயற்சியின் தொடக்கந்தான் இன்று பிரம்மாண்டமான ஆலமரமாக பாரதத்திலும் உலக நாடுகளிலும் செழித்துப் பரவியிருக்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண மடமாகும்.

பகவான் இராமகிருஷ்ணர் தமது வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு காவி உடைகளை வழங்கி துறவிகளுக்கான தீட்சையை அளித்திருந்தார். நரேந்திரர் தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு சாஸ்த்திரப்படி விரஜா ஹோமம் புரிந்து முறைப்படி சந்நியாச தீட்சை பெறச் செய்து துறவு வாழ்க்கையில் புதிய தகுதியை அளித்தார்.

நரேந்திரர் முழுமையான சந்தியாச வாழ்க்கையை மேற்கொண்ட பிறகு தமக்கு பெற்றோர் வைத்த பெயரைக் களைந்துவிட்டு சந்நியாச தர்மப்படி ஒரு பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டியது அவசியம் என உணர்ந்தார்.

நரேந்திரர் விவிதி சானந்தரஞ் என்ற பெயரை ஏற்றுக் கொள்வது என்று முதலில் எண்ணினார். தம்மை எந்த வகையிலும் வெளிக் காண்பித்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் தம்மைப் பல்வேற பெயர்களால் அழைத்துக் கொண்டார். எனினும் அமெரிக்காவுக்குப் புறப்படுவது என்று தீர்மானித்த பிறகு விவேகானந்தர் என்ற பெயரைத் தமக்காக நிரந்தரமாகச் சூட்டிக் கொண்டார்.

அமெரிக்க நாட்டில் ஆன்மீக முழக்கம்

==========================================

அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் சர்வ சமய மகா சபையொன்று நடக்க இருக்கும் செய்தி சுவாமி விவேகானந்தரின் செவிக்கு எட்டியது. சர்வ சமய மகா சபையில் எப்படியாவது பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு தேவையான பண உதவி அவருக்கு எளிதாகக் கிட்டவில்லை. உதவி செய்வதற்காக முன்வந்த சிலரும் பின்வாங்கி விட்டனர்.

சுவாமி விவேகானந்தர் எதோ சிந்தனையுடன் பாரத நாட்டின் புனித தலங்களில் ஒன்றான இராமேசுவரத்துக்குச் சென்றார். அங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்ற சுவாமி விவேகானந்தர் அங்கே கடல் நடுவே இருந்த ஒர் பாறையின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார்.

கன்னியாகுமரிலிருந்து சென்னை சென்ற சுவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பற்றுடைய அன்பர்கள் பெருவாரியாகத் திரண்டு அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அமெரிக்காவுக்குச் செல்ல பணம் திரட்டி அளித்தனர்.

இலங்கை, சீனா, ஜப்பான் வழியாகப் பயணம் செய்து 1893-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30-ஆம் தேதி அமெரிக்காவை அடைந்தபோது அங்கே பல கடுமையான சோதனைகளுக்கு அவர் இலக்காக நேர்ந்தது. அங்கே சர்வ சமய மகா சபை நடக்கும் காலத்தை மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போட்டு விட்டார்கள். மகா சபையில் கலந்து கொள்வதற்கு ஏதாவதொரு ஆன்மீக சங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.

ஏறத்தாழ மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்குவதற்கான பொருளாதார வசதி சுவாமியிடம் இல்லை. தவிர அவரை மகாசபைக்கு பரிந்துரை செய்ய யாரை அணுக முடியும் ?

சோதனைகளையெல்லாம் கடந்து இறைவன் அருளால் விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்றார்.

சர்வ சமய மகாசபை என்று கூறப்பட்டாலும் அது கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்கத்துடனேயே இயங்கியதை விவேகாந்தர் புரிந்துக் கொண்டார்.

மகாசபைக் கூட்டம் தொடங்கப் பெற்றது. மகா சபையில் உரையாற்றியவர்களில் பெரும்பாலோர் உலகத்திலேயே தலைசிறந்த மதம் கிறிஸ்தவ மதந்தான் என்றும் மற்ற உலக மதங்கள் அத்தனையுமே போலிகள் என்பது போன்றும் பேசினார்கள்.

பேச வாய்ப்பளிக்கப்பட்டபோது சுவாமி விவேகானந்தர் சிங்கம் போலக் கம்பீரமாக எழுந்தார்.

மேலை நாடுகளில் எந்த சபையில் உரையாற்றுவதாக இருந்தாலும் சீமான்களே-சீமாட்டிகளே (லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்) என சொல்லித்துத்தான் பேச்சைத் துவக்குவது வழக்கம்.

ஆனால் சுவாமி விவேகானந்தர் தமது குரலை உயர்த்திக் கம்பீரமாக அமெரிக்க சகோதரிகளே சகோதர்களே .. .. .. எனத் தமது பேச்சைத் துவக்கினார்.

சபையிலே குழுமியிருந்த ஆறாயிரம் அமெரிக்க மக்கள் தங்களைச் சகோதரிகளாக, சகோதர்களாக சகோதர பாசத்துடன் சுவாமிகள், விளிப்பது அவர்களின் உணர்வுகளைத் தொட்டு அசைத்தது. அவர்கள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

சுவாமி விவேகானந்தர் தமது சொற்பொழிவைத் தொடர்ந்தார்.
=============================================

உலகத்திலேயே மிகவும் தொன்மை வாய்ந்த சந்தியாசிகளின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொன்மை வாய்ந்த மதத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன். இவ்வாறு அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் தமது பேச்சைத் தொடர்ந்து அனைத்தையும் உள்ளடக்கிய பரந்து விரிந்த இந்து தர்மத்தைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, சமீப காலத்தில் அறிந்து கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வேதாந்த தத்துவத்தின் எதிரொலி போன்று தோன்றுகிறது. இவ்வளவு உயர்ந்த வேதாந்த தத்துவம் முதல் மிகவும் கீழ்நிலையில் உள்ள பலதரப்பட்ட புராணங்களை உடைய உருவ வழிபாடு வரை, பௌத்தர்களின் உலகாயதக் கொள்கைகளுக்கும் இந்து சமயத்தில் இடமுண்டு .. .. ..

சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தில் போதிந்திருக்கும் கருத்துக்கள் இன்றைய விஞ்ஞான யுகத்துக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதைக் தர்க்க ரீதியாக விளக்கினார். இந்து தர்மம் இந்திய எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கமே வழி காண்பிக்கும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்தினார்.

அமெரிக்காவில் தமது பணிகளை முடித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் பல மேலை நாடுகளின் அழைப்பை ஏற்று அங்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்றி உலகப் புகழை அள்ளியவாறு 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தாயகத்தின் மண்ணை வந்து மிதித்தார். இங்கே நாம் பெருமைப்படக் கூடியது என்னவென்றால் அவர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்து சேர்ந்த இடம் நமது தமிழகந்தான்.

பாம்பனிலிருந்து இராமேசுவரம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை நகர் வந்தடையும் வரை மக்களின் வரவேற்பினை ஏற்றுச் சொற்பொழிவுகளாற்றினார்.

சென்னை நகரத்தில் தான் சுவாமிஜிக்கு நண்பர்களும், பக்தர்களும் அதிகம். இங்கே சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.

இதற்கு மேல் சுவாமி விவேகானந்திரின் வாழ்க்கையைப் பற்றி நாம் தனியாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ? சுவாமிஜி தேசத்தோடு ஒன்றிப் போய்விட்டார். மக்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிட்டார். அவர் அமரத்துவம் அடையும் வரை ஆன்மீக ரீதியாக, சமுதாய நோக்குடன் மனித நேயம் தவழ, தேசபக்தி மிளிர சுவாமிஜி ஆற்றிய தொண்டுதானே அவருடைய வாழ்க்கை வரலாறு.

தூய்மையான கொழுந்து விட்டு எரிகின்ற தேசப் பற்றும், பாரத மக்களிடம் அன்பும், சுவாமிஜியின் சேவையின் முக்கிய அம்சமாக இருந்தன. மதங்கள் பெயரால் மோதல்கள், ஜாதிப் பிரிவினைகள், சமூகப் பிரிவனைகள் போன்றவை நிறைந்த பாரத தேசத்தில் ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழந்தவர் சுவாமி மிரட்டிச் சமுதாய வாழ்க்கையைச் சீரழிக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதாகத் தீர்வு காண அவர் நமக்கென விட்டுச் சென்றிருக்கும் அறிவுரைகளும், போதனைகளும் மட்டுமே உதவி செய்ய முடியும்.
Via FB வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை