தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:07 | Best Blogger Tips


*கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது

*குரு,நோயாளி,கர்ப்பிணி,மரு
த்துவர்,சந்நியாசி முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்
கண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும்.

*சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்
அவர்களுக்கு உதவ வேண்டும்.

*அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்

*குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன(உடையுடன்) உணவு உட்கொள்ள கூடாது.

*துணியில்லாமல் குளிக்கக்கூடாது.

*சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.

*தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.

*நெருப்பை வாயால் ஊதக்கூடாது

*பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ,
தவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டால் எக்காரணம்கொண்டும் மற்றவரிடம் பகிராமல் பாவத்திற்கு பிராயசித்தமாக தெய்வ சன்னதியில் குளித்து தெய்வத்தை வணங்கவேண்டும்.

*சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும்.

*சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.

*கோவணமின்றி(உள்ளாடையின்றி)
, வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது.

*இருட்டில் சாப்பிடக்கூடாது.

*சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால்,
சூரியனை தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் .

*குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

*ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது

*தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது.

*மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு ,
உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

*பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.

*ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.

*வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது

*.நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது.

*ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது

*சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது

*பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் ,
கெட்டவன் , பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது.

*பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்த மேயில்லாமல்
அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.

*அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் , முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிக் பேசக்கூடாது.

*ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் ,
மகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை
இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ,
அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

*பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ,ஆசனம்
இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.

*பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது.

*பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும்.

*பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி
சகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு அம்மாட்டுக்கு
புல்,தவிடு,தண்ணீர் , பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும்.

*தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது.பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது.

*தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது.

*நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

*வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

*கையால் மோரைக் குழப்பக்கூடாது.

*நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

வழுக்கைத் தலையில் முடி முளைக்க

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:51 | Best Blogger Tips
வழுக்கை விழுதல் என்பது தற்போது ஆண்களுக்கு பெரும் பிரச்சனையாக முளைத்துள்ளது.

ஒரு காலத்தில் வழுக்கை பற்றி கவலையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். தற்போது உலக அழகுக்கலை பற்றியும் அழகு சாதனப் பொருட்கள் பற்றியும், உடல் அழகை, முக அழகை, சிகை அலங்காரத்தை அருமையாக பேணிக் காப்பது எப்படி போன்ற சொல்லாடல்கள் பெருத்துவிட்டதால் வழுக்கை விழுதல் என்பது ஒரு கேலிக்குரியதாக மாறிவிட்டது.

ஆண்களின் புறத்தோற்றத்தை கெடுப்பதில், வழுக்கை முக்கிய கெடுபங்கை வகிக்கிறது.எத்தனையோ நல்ல விசயங்கள் நிறைந்த மனிதராக இருந்தாலும்,அவர்களின் வழுக்கை அவர்களை நட்பு வட்டம், மற்றும் அலுவலக வட்டத்திலிருந்து, விலக்கி வைக்கிறது, அவர்களும் நாளடைவில் தன்னம்பிக்கை இழந்து, தாழ்வு மனப்பான்மையுடன்தனிமைப்பட்டுபோய், மன இறுக்கத்தினால், தளர்வடைந்து விடுகிறார்கள், இதனால் சில ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவது கூட கடினமான விஷயமாகிவிடுகிறது.

மனித வாழ்வில் காலப் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல்தான் வழுக்கை விழுவதும். முடி இருந்தால் அழகு, வழுக்கை விழுந்தால் அழகற்றது என்பதற்கு சாராம்சமான பின்னணி ஏதுமில்லை. இது பார்ப்பவர்களின் மனத்தளவில் ஏற்படும் ஒரு தேவையற்ற உணர்வே.

வழுக்கை ஏன் விழுகிறது?

ஆண்களுக்கு வழுக்கையை ஏற்படுத்தும் காரணிகள்

தலையை சரிவர பராமரிக்காமல், உண்டாகும் அழுக்கு ,அதனால் ஏற்படும் பொடுகினாலும் குடும்ப பொறுப்பு அல்லது பணிச்சுமை காரணமாக ஏற்படும் மனஉளைச்சலாலும் , மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற உடல் உள் நோய்கள் , வீரியமுள்ள சுரங்கள் வந்தாலும்,

புகை பிடிப்பதும், கை கால் வலிப்பு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் நோய் எதிர்ப்புக்காக அலோபதி மாத்திரைகளை சாப்பிடுவதும் தலைமுடி உதிர்வை அதிகம் உண்டாக்கும்.

எப்போதும் வெந்நீரில் குளிப்பதும், தலைமுடியை கருப்பாக்க டை அடிப்பதாலும் கூட முடிகள் கொட்டும், தலை விரைவில் முடியை இழந்து , வழுக்கையாகும். மேலும், இயற்கையிலேயே சிலரது உடலில், இரத்தத்தில், முடி வளரத்தேவையான் ஹார்மோன் மற்றும் புரதத்தின் அளவு குறைவதாலும், தலை வழுக்கை உண்டாகும்.

ஆண்களின் நிலை இவ்வாறென்றால், பெண்களுக்கோ, வெளியிலேயே நடமாட முடியாதபடி வீட்டு தனிமைச்சிறையில் இருப்பதற்கு ஒப்பான வாழ்க்கை.

பெண்களுக்கு வழுக்கை ஏற்படுத்தும் காரணிகள்

இயல்பாக பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் காலங்களான 12 வயது முதல் 15 வயது வரை தலைமுடி அதிகம் இழக்க நேரிடும். பெண்களுக்கு மாதாந்திர மென்செஸ் காலங்களில் ஏற்படும் அதிக வெள்ளைபடுதலாலும், பெண்களின் பிரசவ காலங்களிலும் மற்றும் பெண்களின் 45 வயது அல்லது அவர்களின் மேனோபாஸ் காலங்களிலும் அதிக தலைமுடி இழப்பு காணப்படும்.

மற்றும் சிலருக்கு தைராய்டு கோளாறுகளாலும், கருப்பை சம்பந்தமான உடலியல் பாதிப்பின் போதும், இவற்றினால் ஏற்படும் ஹார்மோன் அதீதசுரப்பு அல்லது குறைசுரப்பினாலும், தலைமுடி உதிரும்.

அலோபதி கர்ப்பத் தடை மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதும், அவசர நகர்ப்புற வாழ்வியல் சூழலில் ஃபாஸ்ட் ஃபுட் எனும் உடல் நலத்துக்கு சிறிதும் நன்மை பயக்காத , மாறாக உடலுக்கு கேடு விளைவிக்கும், நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு சிறிதும் பொருந்தாத சில உணவு வகைகளை திரும்பத்திரும்ப சாப்பிடுவதனால், உடலில் சில அரிய வகை சத்துக்கள் குறைந்து அதுவே தலைமுடி உதிர்வதற்கும் வழுக்கைக்கும் காரணமாகிவிடுகின்றது. உடல் இரத்தத்தில் ஹீமோகுளோபின் எனும் இரும்புச்சத்து குறைவாலும் முடி உதிரும்.

இதைவிட ஒரு கொடிய காரணம், நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள், உடலில் நோய் உருவாக்கும் பாக்டீரியாக்கள் நுழையும்போது, அவற்றை அழிக்கும் வேளையில் தவறாக நோய் காரணிகள் என எண்ணி தலைமுடிகளையும் அழித்து விடுகின்றன, இதனால் மிக இளம் வயதிலேயே சிலருக்கு தலை வழுக்கையாவதை நாம் கண்டிருப்போம், இது மிக அரிதான ஒன்றுதான், அனைவருக்கும் ஏற்படுவதில்லை.

இதைவிட ஒரு படு மோசமான காரணம்,

எங்கும் கடைகளில் இன்று பரவலாக, பெரு நகரம்,சிறு கிராமம் எனப்பாகுபாடு இன்றி பாக்கெட்களில்,பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனைக்கு வரும் தேங்காய் எண்ணைகளை தலைக்கு தடவுவதால், தலையின் மேல் தோல் வறண்டு போய்விடும்,முடியும் வறண்டு முடிக்காலுடன் உள்ள உயிர்த்தன்மையை இழந்துவிடும், மேலும், முடி வெள்ளையாகி , தலைஎங்கும் அரிப்பு எடுக்கும்.

ஏன் அப்படி ஆகிறது?

கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணையில் மினரல் ஆயில் எனப்படும் , லிக்யூட் பேரப்ஃபின், தேங்காய் எண்ணை எசன்ஸுடன் கலக்கப்படுகிறது. இந்த லிக்யூட் பேரப்ஃபின் எது தெரியுமா?

எண்ணை எரிவாயு நிலையங்களில் , கச்சா எண்ணையை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தா, வாசலின் மெழுகு உள்ளிட்ட 24க்கும் அதிகமான பெட்ரோலியப்பொருட்கள் எடுக்கப்படுகின்றன். இவற்றில் ஆகக்கடைசியில் கிடைப்பது தான் லிக்யூட் பேரஃபின் எனப்படும். மினரல் ஆயில். மிக அடர்த்தியான இந்த ஆயிலுக்கு மணமோ, நிறமோ கிடையாது. எந்த ஆயிலுடனும் சுலபமாக கலப்படம் செய்யலாம், இப்போது புரிகிறதா? பாக்கெட்களில் விற்கப்படும் தேங்காய் எண்ணை தடவினால் ஏன் வழுக்கை விழும் என்று.

இருப்பினும் இன்னும் சில ஊர்களில் எந்த அன்னிய வணிகப் படையெடுப்பிலும் அழியாமல் தாக்குப்பிடித்து ஓடிக்கொண்டிருக்கும், நம்ம ஊர் செக்கு எண்ணையை , நாட்டு செக்கு தேங்காய் எண்ணையை , தேடிப்பிடித்து , வாங்கி தலையில் தடவினால் , நிச்சயம் முடி உதிராது.

வழுக்கை தலையில் முடிவளர டிப்ஸ்

சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்

வழுக்கையை சரிப்படுத்த சில வழிமுறைகள்:

கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிருவது நிற்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இருந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் மிருதுவாகவும் ஆகும்.

தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிட்டு தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 10-15 செம்பருத்தி இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி சீய்க்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும்.

இளநரை வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம், கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.

கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறு துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வர வழுக்கை மறையும்

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:


1. வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2. வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3. சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4. சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5. கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

என்ன செலவானாலும் வழுக்கை தற்போது ஒரு மிகப் பெரிய பிரச்சனையல்ல, எனினும் உணவு முறை, கவலைப்படாமல் இருத்தல், நல்ல தூக்கம் இதோடு உங்கள் முடி ஆரோக்யத்தை அவ்வவ்போது பரிசோதனை செய்ய சரும நோய் நிபுணரை அணுகுதல் போன்றவற்றால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.

எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர ...

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு
 

தீராத வியாதிகளையும் தீர்க்கலாம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:35 | Best Blogger Tips
நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த அறுபது கிராம் கொத்து மல்லிக் கீரையைக் காலையில் சாறாக மாற்றி வெறும் வயிற்றில் அருந்தி வரவும். முப்பது நாட்கள் இதைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இந்தச் சாறை அருந்தியதும் அடுத்த அரைமணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. இரத்த அழுத்த நோயாளிகள் எனில் இந்தச் சாறில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வரவும். இதனால் இவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.


சோரியாசிஸ் குணமாகும்!

சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்.

நெஞ்சு வலியா?

அடிக்கடி நெஞ்சு வலியா? ஆனால் பரிசோதனையில் இதயம் நன்றாக இருக்கிறதா? இந்த நிலையில் மாதுளம்பழம், திராட்சைப்பழம் முதலியவற்றை வீட்டிலேயே சாறாக்கி அருந்தி வரவும். கொலாஸ்ட்ராலை மாதுளம் பழமும், நெஞ்சு வலியை திராட்சை சாறும் நீக்கிவிடும். 35 வயதுக்கு மேல் ஃபாஸ்ட் புட் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் இதயநோய் அதிகரித்து வருவதற்கு துரித உணவு வகைகளும் காரணமாக இருக்கினறனவாம்.

பெண்களுக்கு வாழைப் பூ!

மாதவிலக்குக் கோளாறுகள் உள்ளவர்கள் அவிக்கப்பட்ட வாழைப் பூவுடன் தயிர் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தப் போக்குக் கட்டுப்படும். ஒழுங்கற்ற மாதவிலக்கை அறுபது கிராம் பீட்ரூட் குணமாக்கும். அறுபது கிராம் பீட்ரூட்டைச் சாறாக்கித் தினமும் அருந்தவும். மாதவிலக்கு நேரத்தில் இதைப் போல் மூன்று முறை தினமும் அருந்தவும். இல்லையெனில் சுக்குக்காபி அருந்திவரவும். இரவு படுக்கைக்குச் செல்லும்போது ஒரு கப் பசும்பால் அருந்துவதும் நல்லது.

எலுமிச்சம் பழச்சாறும் அதில் சேர்க்கப்படும் ஒரு தேக்கரண்டித் தேனும் உடல் பருமனை மிக வேகமாகக் குறைக்கவல்லவை. இதனால் உடலுக்கும் சக்தி கிடைக்கும். ஆனால், இதனுடன் பசிக்கிறதே என்ற கண்டதையும் தின்றால் பலன் ஏதும் இராது.

தயிரைக் குறைக்கலாமா?
உடலில் விஷத்தன்மை ஏறாமல் இருக்க தயிர் உதவுகிறது. தினமும் தயிர் சேர்த்து வந்தால் குடல் பாதை ஆரோக்கியமாக இருக்கும். இது மற்ற உணவு வகைகளிலிருந்து உடலில் சேரும் தாது உப்புக்களை உடல் நன்று உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. மேலும் எல்லா உறுப்புகளும் தயிர் மூலம் விஷத்தன்மை சேராமல் தடுக்கப்படுவதால் இளமையும் தொடர்கிறது. இதனால் வயோதிகத்தையும் தள்ளிப்போடலாம். இந்த உண்மைகளை நோபல் பரிசு பெற்ற ரஷ்ய விஞ்ஞானி மெச்சினி கோஃப் என்பவர்தான் கண்டுபிடித்தார்.

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேகவேகமாக எப்போதும் நடக்கப் பழகி கொண்டால் மூட்டுவலி, தசைவலி குறையும். எலும்பு மெலியும் ஆஸ்டியோ போரோசிஸ் நோயும் முன் கூட்டியே இதனால் தடுக்கப்படும்.

வள்ளிக்கிழங்கு நல்லதா?

தினமும் நமக்குத் தேவையான அதிமுக்கியமான வைட்டமின், அஸ்கார்பிக் அமிலம் எனற் வைட்டமின்தான். இதை எல்லோரும் ஆரஞ்சு, நெல்லிக்காய் மூலம் பெறலாம். ஆனால் இவ்விரண்டையும் எப்போதாவது சாப்பிடுகிறவர்கள் என்ன செய்வது? சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறிதளவு பச்சை மிளகாயும் சேர்த்துக் கொள்வதுதான் நல்லது. இரண்டிலிருந்தும் ஒரு நாளுக்குத் தேவையான அளவான வைட்டமின் சி கிடைத்துவிடுகிறது. வள்ளிக்கிழங்கில், ஒரு நாள் தேவைக்கான வைட்டமின் உள்ளது. வள்ளிக்கிழங்கு சாப்பிடாத நாளில் உருளைக்கிழங்கு சாப்பிடவும். வெளியில் சுற்றுபவர்களுக்கு சிகரெட் புகை, பெட்ரோல் கார்களின் புகை, கதிர்வீச்சுகள் முதலியவற்றால் புற்றுநோய் முதல் கண்நோய் வரை வர வாய்ப்புள்ளது. எனவே, வைட்டமின் சி-யை எல்லா வயதுக்காரர்களும் பெற இந்த இரு கிழங்குகளையும் அடிக்கடி சாப்பிடவும்.

மூளை வளர்ச்சிக்கு அரிய கீரை!

நினைவாற்றலுக்கு மட்டுமல்ல, மூளை வளர்ச்சி, சொறிசிரங்கு, வயிற்றுப்புண், வறட்டு இருமல் முதலியவற்றை வல்லாரைக்கீரை விரைந்து குணமாக்கும். வாரம் ஒரே ஒரு நாள் மட்டும் பருப்புடன் சேர்த்த இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். அடிக்கடி இக்கீரையைச் சாப்பிட்டால் மூளை பாதிக்கப்படலாம். உடலில் வலி வரும். பள்ளிக்குழந்தைகள், இரத்த சோகை நோயாளிகள், மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள், ஆஸ்டியே, போரொசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோயால் அவதிப்படும் பெண்கள், கொலாஸ்டிரல் பிரச்சனை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை வல்லாரைக்கீரையைச் சாப்பிட்டால் (கொஞ்சம் கசக்கும்) வளமுடன் வாழ நல்ல உடல் நலம் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.
Via FB Aatika Ashreen

எண்ணெய் தேய்த்துக் குளிங்க!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:30 | Best Blogger Tips
இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். இன்று நம்ம ஊரைப்பொறுத்த வரை எண்ணெய்க் குளியல் அதிகம் நடக்கும் இடம் குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் அங்கு சென்றால் மட்டுமே நமக்கு எண்ணெய் குளியல் ஞாபகம் வருகிறது. ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.

‘‘எண்ணெய் குளியல் உடலுக்கு மட்டுமின்றி, உள்ளத்துக்கும் பல நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. இந்த தீபாவளி முதல் எண்ணெய் குளியலை மறுபடி உங்கள் வாழ்க்கையில் வாடிக்கையாக்கிக் கொள்ளுங்கள்’’ என்கிறார் கவின்கேர் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையைச் சேர்ந்த முதன்மை விஞ்ஞானி லட்சுமி. எண்ணெய் குளியலின் அவசியத்தையும், அது தரும் பலன்களையும் பற்றிப் பேசுகிறார் அவர்.

‘‘நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு எண்ணெய் சத்தானது அவசியம். இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம். பிறந்த குழந்தைக்கு காலையில் எழுந்ததும், அதன் தாய் செய்கிற விஷயம், உச்சந்தலையில் எண்ணெய் வைப்பது. குழந்தை வளர வளர இந்தப் பழக்கம் மெல்ல மறைகிறது.

இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், தலையில் எண்ணெய் வைத்துக் கொள்வதை நாகரிகக் குறைவாக நினைக்க ஆரம்பிக்கிறார்கள் பிள்ளைகள். எண்ணெய் குளியலையும் தவிர்க்கிறார்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முகமெல்லாம் எண்ணெய் வழியும் என்பது பரவலான குற்றச்சாட்டு. சரியான முறையில் எண்ணெயைத் தேய்ப்பதும், பிறகு சரியான முறையில் குளிப்பதும் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும். உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ, ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள்.

எப்படிக் குளிப்பது


எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும். சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணை நீராடுவது உசிதம் என்கின்றன. காரணம் சனி அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும். விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணை குளியலை சனியன்று செய்வது நல்லது.

பெண்களுக்கு சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை. செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள். எனவே இந்தக் கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.
எண்ணை குளியல் சர்ம பாதுகாப்பில் சிறந்த சிகிச்சை – தோலுக்கு எண்ணை பதமிடுவது. குளிப்பதாலும், எண்ணை குளியலாலும் ஏற்படும் நன்மைகள்
உடல் சூடு, காங்கை குறைகிறது.

எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய சூரிய வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடியே, எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது. சூடு எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள, அழுக்குகள் நெகிழும் ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, வெயில் காயணும்; தண்ணீர் காயணும்; சீயக்காய் சுடுதண்ணியில கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்..

சுடுதண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைந்து, மலம், சிறுநீர், வியர்வை மூலமா, வெளியேறத் தொடங்கும்.இரும்புக் கரண்டியில் நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அந்த மிளகு, சீரகத்தை, அப்படியே வாயில் போட்டு மென்று, எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்க்கணும்.

இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். அதிகபட்சம், 45 நிமடங்கள் வரை, எண்ணெய் ஊறலாம்.எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சில பேருக்கு வயிற்றில், வாயுத் தொல்லை இருக்கும். அவர்கள் வலது பகுதியில் இருந்து, இடது பகுதிக்கு உருட்டி உருட்டி, தேய்க்க சரியாகும்.

இடுப்பு வலி இருந்தால், விளக்கெண்ணெய் சூடு பண்ணி, அந்த பகுதியில் தேய்த்துக் குளிக்கலாம். மலச் சிக்கலும் போகும்.தலையில் நல்லெண்ணெயை அரக்கித் தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலுப் பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி கிளாண்ட் சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சீராய் இயங்க, உடம்பில் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.

லேசாக உங்களுக்கு நீங்களே மசாஜ் செய்து விடுங்கள். சிறிது நேரம் ஊற விடுங்கள். சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளிக்கக் கூடாது. நமது சருமத்திலும் கூந்தலிலும் இயற்கையான அமிலத்தன்மை இருக்கும். சோப்போ, ஷாம்புவோ தேய்த்துக் குளித்தால், அவற்றிலுள்ள காரத்தன்மை, சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கும்.

எனவே, இயல்பிலேயே அமிலத்தன்மை கொண்ட மூலிகைக்கலவைப்பொடி கொண்டுதான் குளிக்க வேண்டும். மூலிகைப்பொடி உபயோகித்துக் குளிப்பதால், சருமத்திலும் கூந்தலிலும் உள்ள எண்ணெய் பசையானது முற்றிலும் நீங்காமல் காக்கப்படும். வெறும் மேலோட்டமான அழுக்கு மட்டும் நீங்காமல், சருமத்தின் ஆழத்தில் படிந்த அழுக்கும், இறந்த செல்களும் அகற்றப்படும். இந்த மூலிகைப்பொடியும் பச்சைப்பயறு, சோயா, வெந்தயம் என புரதம் நிறைந்த பொருள்களால் தயாரிக்கப்பட்டதாக இருப்பது முக்கியம்.

அப்போதுதான் அது சருமம் மற்றும் கூந்தல் வறட்சியைப் போக்கி, உடல் சூட்டைக் குறைத்து, சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஒருவித பளபளப்பையும் பலத்தையும் கொடுக்கும். வருடம் ஒரு முறை தீபாவளிக்கு மட்டும் எண்ணெய் குளியலை ஏதோ சம்பிரதாயமாக நினைத்துச் செய்யாமல், இனி வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கண் எரிச்சல் நீங்கும். மனதும் உடலும் புத்துணர்வு பெறும். நல்ல தூக்கம் வரும். மன அழுத்தம் நீங்குவதை உணர்வீர்கள். இளமை நீடிக்கும். சருமம் மென்மையாக, பளபளப்பாக மாறும். அழகும் ஆரோக்கியமும் அதிகமாகும்!’’
ஆனால், முடி கொட்டுறவர்கள் தலையை அரக்கித் தேய்க்க கூடாது. அது முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி உச்சந்தலையில் வைக்க, எண்ணெயோட வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவர்களுக்கு போதுமானது.

மாதவிடய் காலங்களில், உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன்ஸ் மாற்றங்கள் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவக் கூடாது. அப்படி தடவினால், கை, கால் வலி வர வாய்ப்புண்டு.

உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு உறுதியையும், தோலுக்கு மழமழப்பையும் அளிக்கிறது. வாத தோஷத்தினால் தோன்றுகின்ற வேதனைகளைத் தணியச் செய்து, துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையையும், உடற்பயிற்சிக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது.

தொடு உணர்ச்சியில் வாயு அதிகமாக இருக்கிறது. தொடு உணர்ச்சிக்குத் தோல் இருப்பிடமாகும். எண்ணெய் வாத தோஷத்தை நீக்குவதில் சிறந்தது. உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தோலுக்கு நன்மையை அளிக்கிறது.

குழந்தைகளுக்கு

ஒரு வயது‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளாக இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கான எ‌ண்ணெயை (பே‌பி ஆ‌யி‌ல்) வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது உட‌ல் முழு‌க்க‌த் தட‌வி‌வி‌ட்டு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்.

ஒரு வயது‌க்கு மே‌லிரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை வா‌ங்‌கி வ‌‌ந்து, ச‌னி‌க் ‌கிழமைக‌ளி‌ல் உட‌ல் முழுவது‌ம் தே‌ய்‌த்து ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் கு‌ளி‌க்க வை‌க்கலா‌ம்.

முத‌‌ல் இர‌ண்டு மூ‌ன்று வார‌ங்களு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை தே‌ய்‌த்தது‌ம் கு‌ளி‌க்க வை‌த்து ‌விடு‌ங்க‌ள். பு‌திது எ‌ன்பதா‌ல் உடலு‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள ‌சில நா‌‌‌ள் ‌பிடி‌க்கு‌ம்.

ந‌ல்லெ‌ண்ணைய புரு‌வ‌த்‌தி‌ல் தடவ ம‌ற‌க்க வே‌ண்டா‌ம். 4வது வார‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌நி‌மிட‌ம் முத‌ல் ஊற ‌வி‌ட்டு‌க்‌ கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்
கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.

நன்மைகள் :

உடல் சூட்டைத் தணிக்கும்
உடல் புத்துணர்ச்சி பெறும்
உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்
கடுமையான வேலை, டென்ஷனுக்குப் பின், நம்ம உடம்பை ரிலாக்ஸ் பண்றதுக்கு ஒரு சிறந்த தீர்வு.

மதுரை டிஎஸ்பி நகரில் உள்ள அவருடைய மோகன் மருத்துவமனையில் அவரிடம் பேசினோம். எம்பிபிஎஸ் படித்த அவர், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் உள்ள நன்மைகளைப் பற்றிப் பேசுவதைப் பார்த்ததுமே நமக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதா? அதற்கெல்லாம் இப்போது நேரம் இருக்கிறதா? என்று கேட்பவரா நீங்கள்?

""கொஞ்சம் நில்லுங்கள். உங்களுடைய அவசரம் புரிகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் நன்மைகளை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் இப்படிப் பேச மாட்டீர்கள்'' என்கிறார் டாக்டர் வி.மோகன்.
.
* எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலுக்கு என்ன பயன்?

நமது உடலில் சூடு அதிகரிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நமது நாடு வெப்பமான நாடு. எனவே வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை வெயில் காலத்தில் ஏற்படுவது இயல்பு.

வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உடலில் எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்ப்பதன் மூலம் அது தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடுகிறது. தோலின் கழிவான வியர்வை தடையில்லாமல் வெளியேறுகிறது. இதனால் உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படுகிறது.

வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை ஏற்படாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தடுக்கிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலில் பளபளப்புக் கூடுகிறது. வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம்.

* எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் ரொம்பக் குளிர்ச்சியாகிவிடுமே, அதனால் பாதிப்பு ஏற்படாதா?

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. உடலில் சூடு குறைவதால் மனம் ரிலாக்ஸ் ஆகிறது. உடல் ரிலாக்ஸ் ஆகிறது. நல்ல இயற்கையான தூக்கம் வருகிறது. தூங்கி எழுந்ததும் உடல், மனம் புத்துணர்ச்சி அடைகிறது. இயற்கையான அலுப்பு மருந்தாக எண்ணெய்க் குளியல் இருக்கிறது.

வெப்பத்தாலோ, தூக்கமில்லாததாலோ கண்களில் ஏற்படும் எரிச்சல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இல்லாமற் போகிறது. கண்கள் பொங்குவது நின்றுவிடுகிறது. தலையும், கண்களும் குளிர்ச்சியடைகின்றன.

* நன்கு படித்த பல டாக்டர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வீண் என்று சொல்கிறார்களே?

சில மருத்துவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எந்த நன்மையும் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால் எண்ணெய்க்கும் கேடு; நேரமும் வீணாகிறது என்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை.

குறிப்பாக பிரிட்டன் போன்ற வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். வெளிநாட்டு மருத்துவர்களின் பேச்சை அப்படியே நம் நாட்டில் உள்ள சில மருத்துவர்கள் நம்பிவிடுகிறார்கள்.

உண்மையில் எண்ணெய்க் குளியல் என்பது உடலின் சூட்டைத் தணிப்பதற்காக நமது நாட்டில் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறந்தமுறை. அதுவும் அதிக வெப்பமுள்ள நமது நாட்டில் ஏற்பட்டுள்ள முறை. நமது நாட்டில் போல பிரிட்டனில் வேனல் கட்டிகள் வருமா? இல்லை வியர்க்கத்தான் செய்யுமா? எனவே பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள் எண்ணெய்க் குளியலின் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமற் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு

* நல்லெண்ணெய்யைத் தவிர பிற எண்ணெய்களைப் பயன்படுத்தலாமே?

எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் சிறந்தது என்று சொல்லவே வேண்டியதில்லை.

மசாஜ் நிலையங்களில் பயன்படுத்தும் எண்ணெய்களில் ஆகட்டும், தலையைக் குளிர்ச்சியடையச் செய்யும் தைலங்களில் ஆகட்டும், அவற்றின் மூலப் பொருளாக இருப்பது நல்லெண்ணெய்தான். குற்றால அருவியில் குளிக்கச் சென்றீர்கள் என்றால் அங்கே மசாஜ் செய்பவர்கள் கையில் வைத்திருக்கும் எண்ணெய் நல்லெண்ணெய்தான். அல்லது நல்லெண்ணெயை மூலப் பொருளாகக் கொண்டு செய்யப்பட்ட எண்ணெய்கள்தான்.

பித்த, கப, வாதத்தை சமப்படுத்தும் தன்மை நல்லெண்ணெய்க்கு அதிகம் இருப்பதாக நமது சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். பிற எண்ணெய்களுக்கு இந்தத் தன்மை மிகவும் குறைவு. இதிலுள்ள வைட்டமின் "இ' தோலில் இழுத்துக் கொள்ளப்படுகிறது.

* யாரெல்லாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது?

மிகச் சிறிய குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. ஏனென்றால் மூக்கு வழியாகவும், காது வழியாகவும் எண்ணெய் உள்ளே போய்விடும். சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே குளித்தாலும் மிதமான சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது பச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது.

சிலருக்கு சீயக்காய் அலர்ஜியாக இருக்கும். அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. அவர்களுக்குச் சீயக்காயின் வாசனையை முகர்ந்த உடனேயே தும்மல் வந்துவிடும். மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள்.
எண்ணை குளியலின் சில நியமங்கள்

எண்ணைக் குளியலுக்கு உகந்தது நல்லெண்ணை.
எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்ள வேண்டும்.
காய்ச்சும் போது மிளகு, ஒமம், வெந்தயம், இஞ்சி போட்டு காய்ச்சினால் உடலுக்கு வலிமை ஏற்படும். சளி பிடிக்காது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், கொம்பரக்கும் சேர்த்துக் கொள்ளலாம். இது உடற் காங்கையை குறைக்கும்.
எண்ணைக் குளியலை வெந்நீரில் தான் செய்ய வேண்டும்.
எண்ணை தேய்த்து குளித்த அன்று, உடலுறவு கூடாது.

நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம் என்பதே என் கருத்து.

வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால், வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண்ணெயை, தலையில் நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின், தலைக்கு குளிக்கவும்.

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டி வேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா, 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.


Gentlegiant Karthikeyan

பணத்தின் மதிப்பினை கட்டாயம் உணர வையுங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு !!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:25 | | | Best Blogger Tips


பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?
சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப
்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.அவனுடைய அப்பா அந்த பணத்தை கசக்கி எறிந்தார் விட்டு போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை மறுபடியும் கசக்கி எறிந்தார் மூன்றாவது நாள் பணத்தை கசக்கி எரிய போகும் போது மகன் தாவி அதை வாங்கினான் . அப்போ அப்பா என்ன செய்கிறீர்கள் என்று கோபபட்டான் அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் கசக்கி எறியும் போது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.

ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.

படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?

இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :

பணத்தை மதியுங்கள்.

100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.

கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.

பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள்.
பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.
பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.
உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.

காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.
ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.
சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).

இதனால் என்ன என்ன பயன்?
தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்

டீன் பட்ஜெட்
இதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது? என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும்
. ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது.

உங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?
நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.

பணம் சம்பாதிப்பது சுலபமா? கஷ்டமா? என விளக்கு? உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன? பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள்? தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?
அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன?
தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா?
ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன்.
விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்க
உங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.உத
ாரணங்கள் மூன்று.
ஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.
புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது.


via Vikatan

உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:02 | Best Blogger Tips



உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான். இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகிவிட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங் களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் கும், கொழுப்பு சத்து குறையும், உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சிறுதானியங்கள்

கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடு பவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல்பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை.

கம்பு, சோளம்
கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

வரகு, ராகி
வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ள து. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

ஆண்மைக்கு சாமை
சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இது மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

சம்பா அரிசி
நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி என பலவகை உள்ளது.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

கோதுமை, பார்லி
அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
 
Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

குழந்தை வரமருளும் மல்லீஸ்வரர்..!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:38 | Best Blogger Tips
குழந்தை வரமருளும் மல்லீஸ்வரர்..!

மயிலாப்பூரில் உள்ள 7 சிவாலயங்களில் ஒன்று பஜார் சாலையில் அமைந்துள்ள மல்லீஸ்வரர் கோயில். கபாலீஸ்வரர் கோயிலை விட பழமைவாய்ந்த இந்த  ஆலயம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 3 நிலை ராஜகோபுரத்தை கடந்து சன்னிதானத்துக்குள் சென்றவுடன் கிழக்கு  நோக்கி அருள் பாலிக்கிறார் மல்லீஸ்வரர். மூலவர் சன்னதிக்கு வலதுபுறத்தில் மரகதாம்பிகை தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். அயோத்தி மாநகரை  சேர்ந்த பிரார்த்தன் என்ற பக்தன் சிவ பெருமானுக்கு வேள்வி செய்வதற்காக இடம் தேடி திரிந்துள்ளான்.

அப்போது மயிலையில் மல்லிகை வனத்தில் சிவலிங்க திருமேனி ஒன்று இருப்பதை கண்டு இறங்கினான். பின்னர் இந்த இடத்தில் சிவ பெருமானை வேண்டி  அதிருத்ர ஹோமத்தை செய்தான். வேள்வியின் முடிவில் ஈசன் பிரார்த்தனின் கண்முன் தோன்றி வரம் அருளினார். மேலும் மல்லிகை நிறைந்த இந்த  தோட்டத்தில் சிவ தலத்தை அமைக்க ஆணையிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த இடத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு மல்லீஸ்வரர் என பெயர் வந்ததாக  புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஆகமவிதிப்படி, கோயிலின் இடதுபுறத்தில் விநாயகர் அருள் பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் பின்புறம் சுவாமி ஐயப்பன், வள்ளி தெய்வானையுடன் முருகன்,  நடராஜர் மற்றும் பள்ளியறை அம்மன் தனி சன்னதிகளில் அமர்ந்துள்ளனர். கோயிலின் ஈசான பாகத்தில் நவக்கிரக சன்னதியும் உள்ளது. இக்கோயிலில்  பிரதோஷ வழிபாடு மாதம் 2 தடவை நடக்கிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம் 9 நாட்களும், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.  மேலும் கார்த்திகை மாதம் சோமவார சங்கு அபிஷேகம், சந்திரசேகர் உட்புறப்பாடு, ஆருத்ரா தரிசனம் நடைபெறும். மார்கழி மாதத்தில் நடராஜர் திருவீதி உலா,  மாசி மக கடலாடு தீர்த்தவாரி, மகா சிவராத்திரியன்று இரவு 4 கால பூஜைகள் நடந்து வருகிறது.

மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தன்று மாலை திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா உற்சவங்கள் இக்கோயிலில் கோலாகலமாக நடைபெறுகிறது.  காலை 6.30 மணி முதல் 11.30 வரைக்கும், மாலை 5 முதல் இரவு 8.30 வரை கோயில் திறந்திருக்கும். இந்த ஆலயத்தில் உள்ள கல்யாண சுந்தரரை 6  திங்கள்கிழமை மல்லிகை மலர் சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினால் திருமணத் தடை நீங்கும். கோயிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையில்  கலந்து கொண்டு 6 வாரம் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எப்படி போகணும்: மயிலாப்பூர் மசூதி பஸ்  நிறுத்தத்தில் இருந்து 15 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.   

அபூர்வ தரிசனம்

மாசி மாதம் சிவராத்திரி தினத்துக்கு பின் வளர்பிறை நாட்களில் சூரியனின் ஒளிக் கதிர்கள் இக்கோயிலில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் மீது  படும்.சென்னையில் உள்ள  சிவாலயங்களில் மல்லீஸ்வரர் ஆலயத்தை தவிர வேறு எந்த கோயில்களிலும் இந்த தரிசனம் கிட்டாது. ஒவ்வொரு ஆண்டும்  நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியன்று இந்த கோயிலில் தென் சிவாலய லிங்கங்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது.
மயிலாப்பூரில் உள்ள 7 சிவாலயங்களில் ஒன்று பஜார் சாலையில் அமைந்துள்ள மல்லீஸ்வரர் கோயில். கபாலீஸ்வரர் கோயிலை விட பழமைவாய்ந்த இந்த ஆலயம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 3 நிலை ராஜகோபுரத்தை கடந்து சன்னிதானத்துக்குள் சென்றவுடன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார் மல்லீஸ்வரர். மூலவர் சன்னதிக்கு வலதுபுறத்தில் மரகதாம்பிகை தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். அயோத்தி மாநகரை சேர்ந்த பிரார்த்தன் என்ற பக்தன் சிவ பெருமானுக்கு வேள்வி செய்வதற்காக இடம் தேடி திரிந்துள்ளான்.

அப்போது மயிலையில் மல்லிகை வனத்தில் சிவலிங்க திருமேனி ஒன்று இருப்பதை கண்டு இறங்கினான். பின்னர் இந்த இடத்தில் சிவ பெருமானை வேண்டி அதிருத்ர ஹோமத்தை செய்தான். வேள்வியின் முடிவில் ஈசன் பிரார்த்தனின் கண்முன் தோன்றி வரம் அருளினார். மேலும் மல்லிகை நிறைந்த இந்த தோட்டத்தில் சிவ தலத்தை அமைக்க ஆணையிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த இடத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு மல்லீஸ்வரர் என பெயர் வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஆகமவிதிப்படி, கோயிலின் இடதுபுறத்தில் விநாயகர் அருள் பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் பின்புறம் சுவாமி ஐயப்பன், வள்ளி தெய்வானையுடன் முருகன், நடராஜர் மற்றும் பள்ளியறை அம்மன் தனி சன்னதிகளில் அமர்ந்துள்ளனர். கோயிலின் ஈசான பாகத்தில் நவக்கிரக சன்னதியும் உள்ளது. இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு மாதம் 2 தடவை நடக்கிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம் 9 நாட்களும், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. மேலும் கார்த்திகை மாதம் சோமவார சங்கு அபிஷேகம், சந்திரசேகர் உட்புறப்பாடு, ஆருத்ரா தரிசனம் நடைபெறும். மார்கழி மாதத்தில் நடராஜர் திருவீதி உலா, மாசி மக கடலாடு தீர்த்தவாரி, மகா சிவராத்திரியன்று இரவு 4 கால பூஜைகள் நடந்து வருகிறது.

மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தன்று மாலை திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா உற்சவங்கள் இக்கோயிலில் கோலாகலமாக நடைபெறுகிறது. காலை 6.30 மணி முதல் 11.30 வரைக்கும், மாலை 5 முதல் இரவு 8.30 வரை கோயில் திறந்திருக்கும். இந்த ஆலயத்தில் உள்ள கல்யாண சுந்தரரை 6 திங்கள்கிழமை மல்லிகை மலர் சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினால் திருமணத் தடை நீங்கும். கோயிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு 6 வாரம் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எப்படி போகணும்: மயிலாப்பூர் மசூதி பஸ் நிறுத்தத்தில் இருந்து 15 நிமிட நடைதூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

அபூர்வ தரிசனம்

மாசி மாதம் சிவராத்திரி தினத்துக்கு பின் வளர்பிறை நாட்களில் சூரியனின் ஒளிக் கதிர்கள் இக்கோயிலில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் மீது படும்.சென்னையில் உள்ள சிவாலயங்களில் மல்லீஸ்வரர் ஆலயத்தை தவிர வேறு எந்த கோயில்களிலும் இந்த தரிசனம் கிட்டாது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சியன்று இந்த கோயிலில் தென் சிவாலய லிங்கங்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது.
 
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism
 

தாயின் குரலை காது கொடுத்து கேட்கிறது சிசு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:36 | Best Blogger Tips
தாயின் குரலை காது கொடுத்து கேட்கிறது சிசு

தாயின் குரலை கருவிலேயே குழந்தை அறிந்து கொள்ளும் என்பதாலும், கருவிலேயே, வெளிப்புற சத்தங்களை உட்கிரகிக்கும் தன்மை சிசுவுக்கு இருக்கும் என்பதாலேயும் தான் நம் ஊர்களில் வளைகாப்புகள் நடத்தப்படுகின்றன.

வளைகாப்பு என்பது, கர்பமுற்று இருக்கும் பெண்ணுக்காக மட்டும் அல்ல, கருவில் இருக்கும் குழந்தை, உற்றார் உறவினர்களின் குரல்களைக் கேட்கவும், அதன் வரவுக்காக குடும்பமே மகிழ்ச்சியாக காத்திருப்பதை அறியச் செய்யவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.

இதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள் ஜோன்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

36 வாரம் நிரம்பிய 74 கர்ப்பிணிகளை ஆய்வகத்துக்கு கொண்டு வந்து, அவர்களிடம் ஒரு கதையைக் கொடுத்து படிக்க வைத்தனர். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் அசைவுகளை ஆராய்ந்ததில், தாய் சத்தமாக படிக்க ஆரம்பித்ததும், குழந்தை தனது அசைவுகளை நிறுத்திவிட்டு தாய் படிப்பதை கூர்ந்து கவனிக்கிறது. அதன் இதய துடிப்புக் கூட அந்த சமயத்தில் மெதுவாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

முன்பெல்லாம் கர்ப்பிணிகளிடம் வீட்டில் உள்ள மூத்தவர்கள் புராணக் கதைகளையும், வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவார்கள். அது மறைமுகமாக குழந்தையும் கேட்கும் என்பதால் தான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

என் பிள்ளை என் பேச்சைக் கேட்க மறுக்கிறது என்று பல தாய்மார்கள் அலுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாம் பேசுவதைக் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்பும் தாய்மார்கள், பிள்ளை சிசுவாக கருவில் இருக்கும் போதே பேச வேண்டும். நாம் சொல்வதை சிசு பொருமையாக காது கொடுத்து கேட்கும் நேரம் அது ஒன்றே.

via பெண்கள் Womenதாயின் குரலை கருவிலேயே குழந்தை அறிந்து கொள்ளும் என்பதாலும், கருவிலேயே, வெளிப்புற சத்தங்களை உட்கிரகிக்கும் தன்மை சிசுவுக்கு இருக்கும் என்பதாலேயும் தான் நம் ஊர்களில் வளைகாப்புகள் நடத்தப்படுகின்றன.

வளைகாப்பு என்பது, கர்பமுற்று இருக்கும் பெண்ணுக்காக மட்டும் அல்ல, கருவில் இருக்கும் குழந்தை, உற்றார் உறவினர்களின் குரல்களைக் கேட்கவும், அதன் வரவுக்காக குடும்பமே மகிழ்ச்சியாக காத்திருப்பதை அறியச் செய்யவும் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.

இதனை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள் ஜோன்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

36 வாரம் நிரம்பிய 74 கர்ப்பிணிகளை ஆய்வகத்துக்கு கொண்டு வந்து, அவர்களிடம் ஒரு கதையைக் கொடுத்து படிக்க வைத்தனர். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் அசைவுகளை ஆராய்ந்ததில், தாய் சத்தமாக படிக்க ஆரம்பித்ததும், குழந்தை தனது அசைவுகளை நிறுத்திவிட்டு தாய் படிப்பதை கூர்ந்து கவனிக்கிறது. அதன் இதய துடிப்புக் கூட அந்த சமயத்தில் மெதுவாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

முன்பெல்லாம் கர்ப்பிணிகளிடம் வீட்டில் உள்ள மூத்தவர்கள் புராணக் கதைகளையும், வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் கூறுவார்கள். அது மறைமுகமாக குழந்தையும் கேட்கும் என்பதால் தான் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

என் பிள்ளை என் பேச்சைக் கேட்க மறுக்கிறது என்று பல தாய்மார்கள் அலுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் நாம் பேசுவதைக் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்பும் தாய்மார்கள், பிள்ளை சிசுவாக கருவில் இருக்கும் போதே பேச வேண்டும். நாம் சொல்வதை சிசு பொருமையாக காது கொடுத்து கேட்கும் நேரம் அது ஒன்றே.


via பெண்கள் Women

ஈஸியான... காளான் டோஸ்ட் ரெசிபி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:33 | Best Blogger Tips


காளான் டோஸ்ட் மிகவும் எளிமையான ஒரு ரெசிபி. அதிலும் காலையில் அலுவலகத்தில் செல்லும் பேச்சுலர்களுக்கு, காலை வேளையில் எளிதில் செய்து சாப்பிடக்கூடிய ரெசிபியும் கூட. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் நல்ல ஆரோக்கியமான ஒரு காலை உணவை செய்து தர நினைத்தால், இந்த காளான் டோஸ்ட் சரியானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:


கோதுமை பிரட் - 4 துண்டுகள்
சீஸ் - 2 கட்டிகள் (துருவியது)
காளான் - 8 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் பிரட் துண்டுகளைப் போட்டு, இரண்டு பக்கங்களையும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், காளான் சேர்த்து 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

பின்பு அந்த கலவையை டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளின் மீது வைத்து, அதன் மேல் துருவிய சீஸை தூவி, மைக்ரோவேவ் ஓவனில் வைத்து, 2-3 நிமிடம் சீஸ் உருகும் வரை வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது ஈஸியான காளான் டோஸ்ட் ரெடி!!! இதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? ஈஸியா சரிசெய்யலாம்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:31 | Best Blogger Tips

பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே நரை முடி பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரையின் காரணமாக நரை முடி வந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால் சிலருக்கு மயிர்கால்களில் உள்ள முடிக்கு நிறமளிக்கும் மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருக்கும். இவ்வாறு மெலனின் அளவு குறைந்தால், கூந்தலும் நரைக்க ஆரம்பிக்கும். பொதுவாக இத்தகைய நரைமுடியானது 30 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது.

இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. உடனே எந்த கடையில் கிடைக்கும் என்று யோசிக்க வேண்டாம். அவை அனைத்துமே வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடியவை தான். மேலும் இந்த வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், முடிக்கு எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருப்பதோடு, முடி நன்கு அடர்த்தியாக, நீளமாக மற்றும் ஆரோக்கியமாக வளரும். இப்போது நரைமுடியை தடுக்கக்கூடிய இயற்கை சிகிச்சை முறைகள் என்னவென்று கொடுத்துள்ளோம். குறிப்பாக இத்தகைய சிகிச்சைகள் ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவானவையே.

ஹென்னா ஹேர் பேக்

ஹென்னா மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்கை முடிக்கு போட்டால், நரைமுடி பிரச்சனையை நிச்சயம் தவிர்க்க முடியும். அதற்கு ஹென்னா பொடியில், 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, கூந்தல் முழுவதும் தடவி ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால் முடியின் நிறம் மாறுதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ப்ளாக் டீ

நரைமுடியைப் போக்குவதற்கு ப்ளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, முடியில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்காமல், முடியை நீரில் அலச வேண்டும்.

கறிவேப்பிலை

அனைவருக்குமே கறிவேப்பிலை நரைமுடியைப் போக்கவல்லது என்பது நன்கு தெரியும். இருப்பினும் சிலர் நம்பிக்கையின்றி, அதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். எனவே நரைமுடி போகவேண்டுமெனில், கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடியானது கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

முளைக்கீரை சாறு (Amaranth Juice)

கருமையை இழந்த முடிக்கு, மீண்டும் கருமையை கொடுப்பதற்கு முளைக்கீரை சாற்றினை முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். இதனால் முடி நன்கு வளர்வதோடு, கருமையோடும், பட்டுப் போன்றும், மென்மையாகவும் வளரும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் முடியை கருமையாக்குவதில் மிகவும் சிறந்த ஒரு பொருள். எனவே நெல்லிக்காய் சாற்றில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து முடிக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தலானது இழந்த கருமையை மீண்டும் பெறும்.

 

Via FB ஆரோக்கியமான வாழ்வு
 

அடர்த்தியான தலை முடியை பெற சில டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:29 | Best Blogger Tips

தலைமுடி என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை. முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். சிலருக்கு இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இருக்கும். சிலருக்கு அப்படி இல்லாததால் பல அழகுப் பொருட்களை வைத்து முடியை பேணுவார்கள். இப்படி பார்த்து பார்த்து பாதுகாக்கும் தலைமுடி சந்திக்கும் முக்கிய பிரச்சனை முடி கொட்டுதல் மற்றும் பொடுகு.

அதுமட்டுமல்லாமல், சிகை அலங்காரத்தில் ஈடுபாடு உள்ளவர்கள், அதிலும் ஈரப்பதத்துடன் கூடிய முடியுடன் காட்சி அளிக்க விரும்புபவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. இகை பார்ப்பதற்கு அழகை மெருகேற்றினாலும், ஈர முடி பல முடிப் பிரச்சனைகளுக்கு ஆளாக்கும். அதுவும் பருவக்காலத்தில் பல விதமான முடிப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். அமிழ மழை, அழுக்கு மழை நீர் மற்றும் அதிக ஈரப்பதம் நிறைந்த வானிலையால் தலை முடி மற்றும் தலை சருமமும் பாதிப்புக்குள்ளாகும்.

உலகத்தில் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் சரி, கீழ்க்கூறிய டிப்ஸ் தலைமுடி மற்றும் தலை சருமத்தை பருவக்காலத்தில் பாதுகாப்பாக வைக்க உதவும்.

அலங்கார பொருட்கள்

இயற்கையிலேயே ஆரோக்கியமான தலைமுடி இல்லையா? அப்படியானால் அழகு சாதனங்களை பயன்படுத்துவதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஆனால் பருவக்காலத்தின் போது இவ்வகை பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது. வானிலை அதிக ஈரப்பதத்துடன் இருப்பதால், ரசாயனம் கலந்த அழகு பொருட்கள் தலைமுடியை அதிக எண்ணெய் பதத்துடன் வைத்திருக்கும். இது தலைமுடியையும், தலை சருமத்தையும் பாதிக்கும். மேலும் இது பொடுகையும் உருவாக்கிவிடும்.

ஈரப்பதம்


தலை முடியை முடிந்தவரை காய்ந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். பொதுவாக தினசரி 50-60 முடிகளை இழக்கின்ற நாம் பருவக்காலத்தில் நம்மை அறியாமலேயே 200 முடிகளுக்கு மேல் இழக்கிறோம். அதனால் முடியை காய்ந்த நிலையில் வைத்திருந்தால், அதிகமான முடி கொட்டுதல் மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடி மற்றும் தலை சருமத்தை பாதுகாக்கலாம்.

ஷாம்பு

பொடுகு மற்றும் முடி கொட்டுதல் தவிர எண்ணெய் பதமான தலை சருமமும் ஒரு பிரச்சனையே. இதனை போக்க மிதமான ஷாம்புவை பயன்படுத்தி சீரான முறையில் தலைமுடியை அலச வேண்டும். மேலும் தினசரி ஷாம்புவைக் கொண்டு முடியை அலச மற்றொரு காரணம் என்னவென்றால் பருவக்காலத்தில் தளர்ச்சி அடையும் தலைமுடியை சரி செய்யவே. மழை நீரில் முடி நனைந்தால், ஷாம்புவால் முடியை கழுவ வேண்டும்.

உணவு முறை

முடியின் ஆரோக்கியத்துக்கு உதவியாக துணை புரிவது புரதச்சத்து. ஆகவே முடி ஆரோக்கியமாக இருக்க அதிக புரதச்சத்து அடங்கியுள்ள முட்டை, கேரட், தானியங்கள், பச்சை காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், குறைவான கொழுப்புச் சத்து அடங்கியுள்ள பால் பொருள்களை சாப்பிட வேண்டும்.

பதப்படுத்துதல்

காற்றில் கலந்துள்ள ஈரத்தன்மை முடியில் அதிகம் பட்டால், முடி வறண்ட நிலைக்கு உள்ளாகும். நாளடைவில் பார்க்கவும் கலையிழந்து போகும். அதனால் சீரான முறையில் தலைமுடியை பதப்படுத்தினால், இந்த வறண்ட நிலை மாறும்.

டிப்ஸ்

* அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்.
* வாரம் ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்க்கவும்.
* அகண்ட பற்கள் உள்ள சீப்பினை பயன்படுத்த வேண்டும். * ஈரத்துடன் இருக்கும் போது கூந்தலை கட்டக் கூடாது.
* ஹேர் ட்ரையர் பயன்படுத்தும் முன் முடியை உலர்த்தவும்.
* சீப்பினை அடுத்தவர்களுக்கு பகிர கூடாது.

ஆலோசனை

இந்த டிப்ஸ்களை பின்பற்றியும் தலை முடியிலும், சருமத்திலும் பிரச்சனை நீடித்தால், ஒரு மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் சீரான முறையில் முடியை பராமரித்தால், இந்த பிரச்சனைகளில் இருந்து விலகியே நிற்கலாம்.


 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 03

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:58 | Best Blogger Tips

 

புவியீர்ப்பு விசை,மற்றும் பூமியின் அமைப்பு,பூமி சூரியனை சுற்றும் காலம்,சூரிய சந்திர கிரகணம் என்பவற்றை வெளிப்படுத்திய சனாதன தர்மம் மற்றும் பாரத தேச முன்னோர்களின் பெருமை பற்றி கடந்த பதிவுகளில் மீட்டுப்பார்த்தோம்.அதே வழியில் இன்றைய பதிவில் பூமி சூரியனை சுற்றும் என்பதையும் அதைவிட அவற்றின் இயக்கம் பற்றி பூரணமான விளக்கத்தை கொடுத்த ரிக் மற்றும் சதுர் வேதங்கள் பற்றிய சிறு தகவலை பதிவாக்குகின்றோம்.

நமது கல்வியறிவின் படி நமது சூரிய மண்டலத்தில் சூரியனை மையமாக வைத்தே பூமி உட்பட கோள்கள் சுற்றுவதாக சொல்லியது கொப்பநிக்கல்ஸ் மற்றும் கலிலியோ.1453இல் இது தொடர்பான விசயங்கள் பரவலாக பேசப்பட்டது.ஆனால் அவைகள் கிருஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கருதியதால் கொப்பநிக்கல்ஸின் கருத்து முதலில் உதாசீனப்படுத்தப்பட்டு பின்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.,,ஆனா
ல் இதெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எமது வேதங்களிலும் புராணங்களிலும் தெட்டத்தெளிவாக கூறப்பட்டுள்ளது என்பது ஆச்சரியத்தின் உச்சம்..

நமது தொகுதியின் மையமாக சூரியனே இருப்பதாக எமது வேதங்கள் தெளிவாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொலி விட்டது என்பது வியப்பின் உச்சம்..

இதை குறித்து கூறும் வேத சுலோகங்களை பார்க்கலாம்

01.மித்ரோ ததாரா ப்ரதவி முட்டாத்யம் மித்ர க்ரிஷ்டிஸ் (ரிக் வேதம் 3:55:91)

இதன் பொருள்: தனது ஈர்ப்பு சக்தியால் சூரியன் பூமியையும் வேறு கோள்களையும் தாங்கிப்பிடித்த வண்ணம் உள்ளது.


02.த்ரின பிகா க்ரமஜார்மனர்வம் யெனிமா விஸ்வ பூவா னானி டஸ்தூ(ரிக்வேதம் 1:16:41)

இதன் பொருள் எல்லா கிரகங்களும் விடுவதை கொண்ட ஓர் சுற்றுவட்டத்தில் சுற்றுகின்றன

03.அயம் கவ் பிர்ஸ்னிரக்ராமிட் அசடன்மட்டராம் புரா பிடரம் க பிரயந்ஸ்வா (ரிக்வேதம் 10:16:91)

இதன் பொருள் சந்திரன் பூமிக்கு துணைக்கோள்.பூமியானது தாய்க்கிரகமான சந்திரனையும் தந்தைகிரகமான சூரியனையும் சுற்றி வருகின்றது.
சூரியன் தந்தை கிரகமாகவும் சந்திரன் தாய்க்கிரகமாகவும் இந்து மதத்தின் பாவிக்கப்படுவதுண்டு.அதாவது
மென்மையான ஒளிவீசும் சந்திரன் பெண் தாயாகவும் கடுமையான ஒளி வீசும் சூரியன் தந்தைக்கு உவமிக்கப்படுவது வழக்கம்.

இதை விட ரிக் வேதத்தின் 10.22.14 பின்வருமாரு கூறுகின்றது
கரங்களும், கால்களும் அற்ற இந்த புவி, நகர்ந்து கொண்டே இருக்கிறது, புவியில் உள்ள பொருள்களும் அவ்வாறே நகர்ந்து கொண்டே இருக்கிறது (கப்பல் செல்லும் போது அதில் உள்ள பயணிகளும் அதனுடன் செல்வது போல்). இவை அனைத்தும் ஒருசேர ஆதவனை சுற்றி வருகிறது

இதைப்போலவே மேலும் பல வசனங்கல் சூரியன் மற்றும் பூமியின் இயக்கம் பற்றி கூறுகின்றது

ரிக் வேதம் 10.149.1
சூரிய இயக்கத்தையும் கோள் இயக்கத்தையும் ஒரு குதிரையின் செயலுடன் ஒப்பிட்டு அற்புதமான விளக்கத்தை தருகின்றது.
அதாவது
எப்படி ஒரு குதிரை பயிற்றுவன் தன் பயிற்றுவிக்கும் குதிரையை கயிற்றில் கட்டி தன்னை சுற்றி வர பயிற்றுவிக்கிரானோ அப்படியே சூரியனானவன் தன் ஈர்ப்பு விசையால் மற்ற கிரகங்களை தான்னை சுற்றி வர செய்கிறது.

இதெபோல ரிக் வேதம் 1.164.13 இல் சூரிய இயக்கம் பற்றி அழகாக கூறப்பட்டு உள்ளது.

சூரியன் தனது சுற்றுப் பாதையில் தனக்குத் தானே சுற்றி வருகிறது. புவியீர்ப்பு விசை காரணமாகவும் மற்ற கோள்களைவிட சூரியனின் எடை அதிகமாக இருப்பதால், பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

இதே போல சூரியன் மறைவதும் இல்லை உதிப்பதும் இல்லை என் அளப்பெரிய அறிவியலை நம் வேதங்கள் அன்றே கூறிவிட்டன.அதாவது சூரியன் மறைவதோ உதிப்பதோ இல்லை..அவைகள் பூமி சுற்றிவருவதால் மறைதல் உதித்தல் போன்ற தோற்றம் தெரிகிறது.ஆனால் உண்மையில் அவைகள் மறைவதோ உதிப்பதோ இல்லை.

சூரியன் மறைவதோ உதிப்பதோ இல்லை(ரிக்வேதம் அய்ரேய பிரமம்)

இந்த நிகழ்வை "லகு குருநியாய" என்னும் அறிவு பூர்வமான கோட்பாட்டின் மூலம் ஆரியப்பட்டர் தெளிவாக விளக்கி உள்ளார்.லகு என்றால் சிறிய அல்லது கனமற்ற பொருள் என்று அர்த்தம்.குரு என்றால் பெரிய அல்லது கனமான பொருள் என்பது அர்த்தம்.சிறிய பொருள் பெரிய பொருளை சுற்றி வருவதாக இந்த கோர்பாட்டின் மூலம் அவர் கூறியுள்ளார்.சூரியனிடமிருந
்தே சந்திரன் ஒளியை பெற்று பிரகாசிக்கின்றது என்ரும் அவர் தெரிவித்துள்ளார் என்பதேஉச்ச கட்ட வியப்பு.காரணம் இவைகள் 20 நூற்றாண்டின் விஞ்ஞான மகத்துவமான கண்டு பிடிப்புக்கள்..எந்த வித வசதியுமற்ற அக்காலத்தில் ஒரு சாதாரண மனிதனால் இதை வெளிக்கொண்ர முடியாது என்பது வெளிப்படை.ஆக தெய்வாதீன சக்தியே இவர்களின் இந்த கண்டு பிடிப்புக்கு உறுதுணை என்பதில் ஐயமே இல்லை.

அது போக சூரியனை பூமி சுற்ற எடுக்கும் காலத்தை மிகத்திருத்தமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணித்தவரும் பூமி தன்னைத்தனே சுற்றும் காலத்தை துணிந்தவரும் இவரேதான்.(ஆர்யப்பட்டா)

அது போக கிரகங்கள் என்பதன் சமஸ்கிருத அர்த்தமே கவரப்படக்கூடியது என்பதுதான்..எல்லா கிரகங்களுக்கும் பொதுவாக அகவரும் ஆற்றல் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்.

அடுத்து சூரியனின் ஒளியைத்தான் சந்திரன் பெறுகின்றது என்றும் சந்திரனுக்கு சுயமாக ஒளி இல்லை எனவும் பல வேத சுலோகங்கள் வெளிப்படையாக கூருகின்றது

ரிக் வேதம் 1.84.15

சூரியனிடமிருந்தே சந்திரன் தனக்கு தேவையான ஒளியை பெற்றுக்கொள்கின்றான்

ரிக் வேதம் 10.85.9 இல் சூரியன் தனது பிள்ளையான சூரிய கதிர்களை தனது மனைவி சந்திரனுக்கு வழங்குகின்றான் என உவமையாக சூரியனிடமிருந்தே சந்திரனுக்கு ஒளி கிடைப்பதாக கூறுகின்றது

இத்தகைய விஞ்ஞான பெரும்பொக்கிஷத்தை இந்துக்களாக இருந்தும் இதுவரை எங்களால் படித்து உணர்ந்து நம் பெருமைகளை மார்தட்டி வெளியே சொல்ல முடிவதில்லை.அதற்கு சமஸ்கிருத அறிவின்மை,அந்நிய படையெடுப்பு ,பகுத்தறிவு என்ற போர்வை என்பனவும் ஒரு காரணமே..உண்மை இந்து இந்தியன் தமிழன் என்ரு பல பல பல பெருமையான கோபுரங்களின் மீது நிற்க பெருமைப்படவேண்டியவர்கள் நாங்கள்.இந்த பெருமைகளையும் உண்மைகளையும் அரியமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்லோம் என்பது வருந்தவேண்டிய விடயம்.


நன்றி
ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்


Via FB தர்மத்தின் பாதையில்

வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 02

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:57 | Best Blogger Tips

புவியீர்ப்பு விதி என்றவுடன் நம் எல்லோரின் நினைவுக்கு வருவது சேர்.ஐசக் நியூட்டனும் ஆப்பிள் பழமும் மட்டுமே.காரணம் ஈர்ப்பு விதியை ஐசக் நியூட்டன் கண்டறிந்து உலகறியச்செய்தார் என்பதே வரலாறு..ஆனால் மறைக்கப்பட்ட அல்லது மறைந்து போன இந்திய அறிவியலாளர்களும் இந்திய அறிவியலும் ஏராளம்.காரணம் எம்மீது திணிக்கப்பட்ட அந்திய ஆக்கிரமிப்புக்களும் பகுத்தறிவு என்றபெயரில் மழுங்கடிக்கப்பட்ட எங்களின் வேத,புராணங்களுமேயாகும்.காலம் கடந்து இப்படியான சமூக வலைத்தளங்களின் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய சூழ் நிலையில் நாம் உள்ளோம் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.

சரி இனி விடயத்திற்கு வருவோம்.புவியீர்ப்பு விசை பற்றி முதலில் கூறியது.ஐசக் நியூற்றன் அல்ல.இந்திய புராணங்களிலும் வேதங்களிலும் ,பண்டைய காலத்திலும் இது பற்றி தெட்டத்தெளிவாக கூறிவிட்டனர்.

இனி வேதம் மற்றும் நம் முன்னோர்களின் அறிவியல் சார் செய்யுள்களை பார்க்கலாம்...*தர்மத்தின் பாதையில்(page)


பாஸ்கர ஆச்சார்ய என்னும் கணிதமேதை சித்தாந்த சிரோன்மனி என்னும் தனது நூலில்

"அக்ரஸ்டா சக்திஸ்கா தய ஸ்வாஸ்தம்
குரு ஸ்வபிமுகம் ஸ்வஸ்தியா
அக்ரசியாதே தத்பததிவ பதிசமே
சமன்தாத் க்வ பதத்வியாம் சே"

இதன் பொருள் நவீன விஞ்ஞானங்கள் கூறுவதை அப்படியே கூறி எல்லோரையும் வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்லும்.
இதன் பொருள் இதுதான் *தர்மத்தின் பாதையில்(page)
இயற்கையாகவே வானில் உள்ல பொருட்களை தன்னை நோக்கி கவரும் தன்மை கொண்டது பூமி.இத்தகைய ஈர்ப்பு சக்தியினால் எல்லா பொருட்களும் பூமியில் விழுகின்றன.கிரகங்களுக்கு இடையில் சமனான ஈர்ப்பு சக்தி இருக்கும் போது எப்படி விழும் என்று கூறுகின்றனர்.
சூரிய் சித்தாந்தம் புவியீர்ப்பு பற்றி இப்படி கூறுகின்றது

"மத்யே சமந்தாந்தஸ்ய பூகோள வியாமினி திஸ்தாதி
பிப்ஹாரனா பரமம் சஹ்தீம் பிரம்மனோதரனாத்மிகம்"(சூர்ய
சித்தாந்தம் அத்தியாயம் 12 சுலோகம் 32)

அதாவது பூமியில் தரனாத்மிகா என்னும் சக்தி உண்டு என்பதாக கூறியுள்ளனர்.அதுவே ஈர்ப்பு சக்தி தர்மத்தின் பாதையில்(page)

அத்துடன் 11ம் நூற்றாண்டில் பாஸ்கராச்சாரியர் என்பவர் தனது லீலாவத் என்னும் புத்தகத்தில் பூமியானது குருத்கவர்சனா சக்தி(புவியீர்ப்பு சக்தி)
கொண்டது.கிரகங்களுக்கு இடையில் ஈர்ப்பு சக்தி உண்டு எனவும் அதனாலேயே அவைகள் கவரப்பட்டு அண்டத்தில் உறுதியாக உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. என்று கூறியுள்ளார்.

இத்துடன் 7ம் நூற்றாண்டை சேர்ந்த சந்திரகுப்தா என்ற புகழ் பெற்ற கணிதவியல் அறிஞர் தனது "பிரம்ம புட்டா சித்தாந்தம்" என்ற கணிதவியல் நூலில் பின்வருமாறு கூறி வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறார்.

தண்ணீர் இயற்கையாகவே கீழ் நோக்கி செல்லும் தன்மை கொண்டது..ஏனெனின் பூமிக்கு அவ்வாறான கவரும் ஈர்ப்பு சக்தி சக்தி கொண்டது.அதனாலே பூமியில் எல்லா பொருட்களும் கீழே விழுகின்றன" என்று கூறி தற்கால விஞ்ஞானங்களை அப்போதே தெட்டத்தெளிவாக கூரியுள்ளார்.#தர்மத்தின் பாதையில்(page)

இது போக பிரசன்ன உபநிடதத்திற்கு விளக்கவுரை எழுதிய அதிசங்கரன் பின்வருமாறு கூறுகின்றார்.
“ததா பிரிதிவியமாபிமனினி யா தேவதா
பிரசித்தா சைசா
பிருசாஸ்ய அபனா பிர்த்திமவஸ்தபியா
க்ர்ஸ்யா வசிக்ரித்யாய ஈவா
அபகர்சேனா அனுகிரகம் குர்வதி
வர்த்தாத்த இத்யார்தா
எனியாதா ஹி சரிரம் குருத்துவபரித்
சவகசி வோட்கசித்"
இதன் பொருள் என்னவெனின் " மேலே எறியப்படும் பொருட்கள் பூமியால் கவர்ந்திழுக்கப்படுவது போலே உடம்பிலே இருக்கும் உயர்ந்த பிராண சக்தியை அவனா சக்தி இழுக்கின்றது என்று உவமையில் ஈர்ப்பு சக்தியை சாதாரணமாக கூருகிறார்.

பொதுவாக உவமை என்பது ஒரு தெரிந்த விஷயத்தை வைத்து தெரியாத விடயத்தை விளக்குவது ஆகும்..ஆக பூமியின் ஈர்ப்பு விதி அக்காலத்தில் அவ்வளவு தெளிவாக எல்லோரின் தெளிவுடன் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை பார்க்கும் போது பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடிவதில்லை




ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்


Via FB தர்மத்தின் பாதையில்

வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 01

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:55 | Best Blogger Tips

சனாதன தர்மம் என்பது தத்துவங்களாலுல் மனோவியலாலும் அறிவியலாலும் உருவாகிய கோட்டை..வேதங்கள் புராணங்கள் செய்யுள்கள் இலக்கியங்கள நீதிநூல்கள். மற்றும் சாஸ்திரங்கள் என இந்துமதத்தின் சொத்துக்கள் ஏராளம்...காதல்,நட்பு,காமம் என இந்து தர்மம் என இந்து தர்மம் கை வைக்காத துறையோ விடயமோ இல்லை..அத்தனையும் வாழ்க்கைக்கு ஏதுவான அஸ்திவார திரட்டுக்கள்..அந்த வகையில் வேதம் கண்ட விஞ்ஞானம் என்னும் இத்தொடரை தர்மத்தின் பாதையில் உங்களுக்கு தொகுத்து வழங்க கடமை பட்டு உள்ளது..அந்த வழியில் இத்தொடரின் முதலாவது பதிவை வானியல் என்னும் தலைப்பில் தருகின்றோம்

பூமியின் வடிவம் பற்றி ப்ல காலமாக பலதரப்பட்ட இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் சச்சரவுகளும் பிழையான கருத்து பரிமாறல்களுமிருந்து வந்துள்ளன...முடிவில் 18 மற்றும் 19 நூற்றாண்டளவுகளிலேயே இதற்கான விடையை விஞ்ஞானம் கண்டு பிடித்தது..அதாவது பூமியானது கோளம் என்றும் அது தன் பாதையில் உறுதியாக உள்ளது என்றும்...இது விஞ்ஞானம் .ஆனால் இதே கருத்தை நம் இந்து முன்னோரான பாஸ்கர ஆச்சார்யா ஏற்கனவே தனது நூலில் தெட்டத்தெளிவக கூறிவிட்டார் என்பது ஆச்சரியமே

11ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கர ஆச்சார்யா லீலாமத் என்னும் புத்தகத்தில் லீலாவதி என்ற சிறுமி கேட்ட கேள்விக்கு பின்வருமாறு பதில் கொடுக்கிறார்.

“உனது கண்கள் எதை பார்க்கின்றதோ அவை யாவும் உண்மை அல்ல..நீ பார்ப்பது போல பூமி தட்டையானது அல்ல.அது கோளவடிவமானது.ஒரு பெரிய வட்டத்தை வரைந்துவிட்டு அதன் சுற்றளவில் நான்கில் ஒரு பங்கில் தூரத்தில் நின்று பர்த்தால் அது நேர்கோடகவே தெரியும்.அது போலவே பூமியும் தட்டையானது அல்ல.அது கோளமானது"

இதே போல 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த் ஆர்யப்பட்டர் எழுதிய ஆர்யப்பட்டம் என்ற நூல் லத்தின் மொழியில் மொழி #தர்மத்தின் பாதையில்(page)# பெயர்க்கப்பட்டது.மேலை நாட்டு வனியலாளர்களை தூக்கிப்போட்ட நூல் இது.கிரகணத்துக்கான காரணத்தை ஆர்யப்பட்டர் தனது நூலில் தெளிவின் மேல் தெளிவாக விளக்கி இருந்தார்.

"சடயாட்டி சசி சூர்யம் சகினாம் மகதிக பூசார்ய...................
........"
நூல் ஆர்யப்பட்டம் கோல் பாதம் சுலோகம் 39

இதன் பொருள்:சூரியன் சந்திரனை மறைக்கும் போது சூரிய கிரகணம் தோன்றுகின்றது..பூமி சந்திரனை மறைக்கும் போது சந்திரகிரகணம் தோன்றுகின்றது..தர்மத்தின் பாதையில்(page)
மேலும் அவர் கிரகணங்கள் எப்போதெல்லாம் தோன்றும் என்றும் பூமி சூரியனை சுற்ற 365 நாட்கள் 12 மணித்தியாலங்கல் 30 வினாடிகள் செல்லும் என்றும் பூமி தன்னத்தானே சுற்ற 23 மணித்தியாலங்கள் 56 நிமிடம் 4.1 வினாடி செல்லும் எனவும் அப்போதே துள்ளியமாக கூறிவிட்டார்.என்பது ஆச்சரியமான தகவல்தான்.தர்மத்தின் பாதையில்(page)

அத்துடன் இந்திய மொழியில் ஜாக்ரபி என்பது பூகோளசாஸ்திரம் என்பது பொருள்.பூகோளம் என்பதிலிருந்தே பூமி கோளவடிவம் என்பதை நம் முன்னோர்கள் கூறிவிட்டனர்.


இவற்றை பார்க்கும் போது நமக்கும் இந்து அல்லது இந்தியன் என்ற இறுமாப்பும் கர்வமும் ஏற்படுகின்றதல்லவா??????????????

ஜெய் ஸ்ரீராம்
 

Via FB தர்மத்தின் பாதையில்
 


உங்களுக்கு ஏன் வைட்டமின் பி 12 பற்றாக்குறை ஏற்படுகிறது ? அதனை எப்படி நிவர்த்தி செய்வது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:52 | Best Blogger Tips


தற்சமயம் வைட்டமின் பி 12 இன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிற்கும் வைட்டமின் பி 12 பயன்படுகிறது. வைட்டமின் பி 12 குறைபாடு முன்பு கருதப்பட்டதை விட மிகவும் அதிகமாக காணப்படுகிறது, மற்றும் குறைந்த வைட்டமின் பி 12 அளவுகள் மற்ற பல நோய்களின் அறிகுறிகள் பிரதிபலிக்கும்.
பெரும்பாலான தொழில் முறை சுகாதார நிபுணர்கள் தங்கள் நோயாளிகளுக்கு குறைந்த வைட்டமின் பி 12 யால் நேரிடக்கூடிய நோயிக்கான அறிகுறிகளுக்கு ஒரு காரணம் கருதவில்லை. மேலும், பொதுவான குருதிநீர்ப் பாயம் சோதனை போதுமான உயர் குறியீட்டை காட்டலாம், ஆனால் நேரிடக்கூடிய அது அநேகமாக மனித-செயலற்று பி 12, இது உங்கள் செல்கள் அல்லது எதுவும் பாதிப்பு இல்லை. என்று குறிப்பிடப்படுகிறது.
முழு சைவ மற்றும் சைவ உணவு உண்பவர்கள் பி 12 குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும், அது இறைச்சி உண்கின்றவர்களிடமும் ஏற்படுகிறது. கொலோரெலா தவிர, மனித-செயலில் பி 12 வைட்டமின் தாவர உணவுகளில் மிக குறைவாக உள்ளது.
சிறிய குடல்களில் உள்ள இயற்கையான காரணி கிடைக்கவில்லை என்றால் இறைச்சி, முட்டை, மற்றும் பால் போன்ற அனைத்து வழக்கமான பி 12 வைட்டமின்கள் நிறைந்த உணவுகளும் பயனற்றதாகிவிடும். சிறிய குடல்களில் உள்ள இயற்கையான காரணி உணவுகளில் இருந்து பி 12 பிரித்தெடுக்கும் சிறப்பு புரதம் உள்ளது மற்றும் இரத்த அதை ஜீரணித்து கொள்ளும்.
இறைச்சி மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவோருக்கும் வைட்டமின் பி 12 குறைபாடு இருந்து விலக்கு இல்லை. அதனால் தான், சோர்வு, மனச்சோர்வு, மனக்கலக்கம், மற்றும் இரத்த சோகை வழக்கமான அறிகுறிகளாகும். இன்னும் அதிக உடல் மற்றும் நரம்பியல் வெளிப்பாடுகள் பொதுவாக வழக்கமான அறிகுறிகள் விட அறியப்படுகிறது.
எந்த வகை உணவுகள் சாப்பிட்டாலும், மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கு வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அகபக்கத்தில் (http://www.vega-licious.com/

) பட்டியலிடப்பட்டுள்ள எந்த அறிகுறிகள் தனக்கு இருப்பதாக கண்டறிப்பட்டாலும், அவர்கள் சரியான சோதனை மற்றும் சத்துணவில் கவனம் செலுத்த வேண்டும்.

சிறந்த பி 12 சோதனை மற்றும் சத்துணவு பெறுதல்
குருதிநீர்ப்பாயம் சோதனை பொதுவாக இரண்டு வகையான பி 12, மனித-செயலற்ற மற்றும் மனித-செயலில் எண்ணிக்கையை கண்டறிய பயன்படுத்தப்படும். ஒரே மனித-செயலில் பி 12 கணக்கிடப்படும். உங்கள் இரத்த நீர்ப்பாயம் சோதனை சாதாரண அல்லது 150 க்கு 200 அல்லது மேல் இருப்பது நல்லது, மற்றும் நீங்கள் இன்னும் குறைந்த ஆற்றல் மற்றும் மோசமான ஆரோக்கிய பாதிப்புகான அறிகுறிகள் இருந்தால் மறைமுக சோதனை மேற் கொள்ள வேண்டும்.

சிறுநீர் சோதனையில் மெத்தில்மலோனிக் அமிலத்தின் (MMA) அதிக அளவில் மிகவும் துல்லியமாக இருக்கும். மெத்தில்மலோனிக் அமிலத்தின் (MMA) அளவில் அதிக இருந்தால் பி 12 வளர்சிதை குறைவாக இருக்கும்.

உயர் ஹோமோசைஸ்டீன் அளவுகள் இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மறைமுக அறிகுறிகளாக, MMA மற்றும் ஹோமோசைஸ்டீன் இரண்டும் பி 12 அளவுகளில் தொடர்புக் கொண்டுள்ளது.

பி 12 மூன்று வகைகள் உள்ளன: சயனோகோபாலமின், ஹட்ரோக்சி கோபாலமின், மற்றும் மெத்தில்கோபாலமின். இந்த மூன்றிலும், நிபுணர்கள் மெத்தில்கோபாலமின் மிகவும் நன்மை பயக்கும் என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்.

எனினும், மிகவும் பொதுவாக சத்துணவாகவும், மருத்துவர்கள் ஊசி வழி பயன்படுத்தப்படும் பி 12 சயனோகோபாலமின் மோசமாகவும் உள்ளது. இது பி 12 உட்கிரகித்து தன்மயமாக்க அவசியமாகும் உடலின் மீத்தைல் குழுக்கள் எதிர்விளைவுண்டாக்கி குறைப்பதாக காணப்பட்டுள்ளது.

மெத்தில்கோபாலமின் வைட்டமின் பி 12 தேவைப்பட்டால், இரத்த நேரடியாக உறிஞ்சு ஒரு உடல் இணைப்பு அல்லது நாவின் கீழ் அமைந்துள்ள மாத்திரையை எடுத்து கொள்ளலாம். இது பெரும்பாலும் பி 12 ஜீரணம் தாமதப்படுத்துவதற்கு என்று செரிமான சிக்கல்களை தவிர்க்க உதவும்.

பிரிட்டன் டாக்டர் பி 12 சிகிச்சை உண்மையான வாழ்க்கை முடிவுகளை ஏற்க மருத்துவ அதிகாரிகளை வலியுறுத்துகிறது
பிரிட்டன் முதன்மை நல மருத்துவர் டாக்டர் ஜோசப் சாண்டி பி 12 ஊசி மூலம் பல நூறு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளார். அவரது நோயாளிகள் இருவர் பிபிசி அறிக்கையில் இடம்பெற்றுள்ளனர். ஒரு செலரோஸில் (எம்எஸ்) இருப்பதாக தவறாக கண்டறியபட்டுள்ளது மற்றவருக்கு சிகிச்சையளிக்கப்படாத நரம்பு கோளாறு காரணமாக முழு வழுக்கை எற்பட்டுள்ளது.

டாக்டர் ஜோசப் சாண்டி இரத்த சீரம் பி 12 அளவு 150 (சாதாரண?) மற்றும் 300 க்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு மலிவான பி 12 ஊசி மூலம் கொடுத்தது, மருத்துவ அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த குறிப்பு பி 12 சீரம் சோதனையில் ஏற்படும் பற்றாக் குறைகளாலுக்கு நல்ல உதாரணம் ஆகும்.

அவரது எளிய சிகிச்சைகள் நம்பிக்கையற்ற நோயாளிகளின் 'வாழ்வை வளப்படுத்த உதவியுள்ளது. ஆனால் பிரிட்டன் மருத்துவ அதிகாரத்துவம் இரட்டை குருட்டு போலி மருந்து சோதனை செய்து முடிவு தெரியும் வரை அவரது பயன்பாடுகளை நிறுத்த வலியுறுத்தினார்.

டாக்டர் சாண்டி அவரது ஆதாரம் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்ட முடிவுகள் என்று வாதிட்டார். அவர் இரட்டை குருட்டு போலி மருந்து சோதனை செய்து முடிவு வரை அவரது நோயாளிகளுக்கு உதவி செய்வதை நிறுத்த விரும்பவில்லை, அல்லது அவர் குருட்டு போலி மருந்து குழு பி 12 மறுக்கவில்லை.

பி 12 வைட்டமின் அதன் முக்கியத்துவம் மற்றும் சத்துணவாக கொள்ள சுற்றியுள்ள அறியாமை கருத்தினை களைய, நாமே பொறுப்பு ஏற்க வேண்டும்.

Via FB  Aatika Ashreen