வாரியார் சுவாமி பொன் மொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:34 | Best Blogger Tips

வாரியார் சுவாமி பொன் மொழிகள்
*************
1. எல்லா உயிரும் ஈசன் கோயில்
2. மாசிலா மனமே ஈசன் கோயில்
3. பயிருக்கு முள்வேலி பணத்திற்கு தருமம்வேலி
4. நல்ல குணமுடைய மனைவியுடன் வாழ்தல் விமானத்தில் போவது போன்றது
5. ஏழைகளுக்காக உழை
6. நல்ல சிந்தனை
7. அன்னம், நெய், உப்பு போன்றவற்றை கையால் படையாதே
8. ஏழையின் உள்ளத்தில் இறைவனைப் பார்
9. யானையைப் போல் குளி
10. தேனீயைப் போல உழை
11. 
உண்டு கெட்டது வயிறு
உண்ணாமல் கெட்டது உறவு
பார்த்துக் கெட்டது பிள்ளை
பாராமல் கெட்டது பயிறு
கேட்டுக் கெட்டது குடும்பம்
கேளாமல் கெட்டது கடன்.

தமிழ்மறைவாரியார் சுவாமி பொன் மொழிகள்
*************
1. எல்லா உயிரும் ஈசன் கோயில்
2. மாசிலா மனமே ஈசன் கோயில்
3. பயிருக்கு முள்வேலி பணத்திற்கு தருமம்வேலி
4. நல்ல குணமுடைய மனைவியுடன் வாழ்தல் விமானத்தில் போவது போன்றது
5. ஏழைகளுக்காக உழை
6. நல்ல சிந்தனை
7. அன்னம், நெய், உப்பு போன்றவற்றை கையால் படையாதே
8. ஏழையின் உள்ளத்தில் இறைவனைப் பார்
9. யானையைப் போல் குளி
10. தேனீயைப் போல உழை
11.
உண்டு கெட்டது வயிறு
உண்ணாமல் கெட்டது உறவு
பார்த்துக் கெட்டது பிள்ளை
பாராமல் கெட்டது பயிறு
கேட்டுக் கெட்டது குடும்பம்
கேளாமல் கெட்டது கடன்.


தமிழ்மறை

நெல்லிக்காய் ஊறுகாய்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:33 | Best Blogger Tips
நெல்லிக்காய் ஊறுகாய்  

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் ( பெரியது ) - 6
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை
பெரிய நெல்லிக்காயை மிக பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடுகு 1 1/2 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் எண்ணெய் விட்டு 1/2 தேக்கரண்டி கடுகு பெருங்காயம் போட்டு பொரிந்ததும் வறுத்த பொடி, நெல்லிக்காய் உப்பு, எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் போட்டு 1/2 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும். எலுமிச்சை சாறு இல்லாமலும் இதனை செய்யலாம்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் ( பெரியது ) - 6
மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை
பெரிய நெல்லிக்காயை மிக பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடுகு 1 1/2 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் எண்ணெய் விட்டு 1/2 தேக்கரண்டி கடுகு பெருங்காயம் போட்டு பொரிந்ததும் வறுத்த பொடி, நெல்லிக்காய் உப்பு, எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் போட்டு 1/2 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும். எலுமிச்சை சாறு இல்லாமலும் இதனை செய்யலாம்.

 
Via -நலம், நலம் அறிய ஆவல்.

சிறுபயறு கஞ்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:33 | Best Blogger Tips
 
தேவையானவை:

பச்சரிசி குருணை/அரிசி...1 ஆழாக்கு
பச்சைப் பயறு/சிறுபயறு ... 1 /2 ஆழாக்கு
சீரகம்......................................1 ` தேக்கரண்டி
கீரை.. எந்தக்கீரையாக இருந்தாலும்...ஒரு கைப்பிடி
தேங்காய்...............................1 /2 மூடி
உப்பு தேவையான அளவு..
நீர்: அரிசி .............................4 :1

செய்முறை:


அரிசியைக் களைந்து கொஞ்ச நேரம் ஊறவிடவும். பச்சைப்பையறை வாணலியில் சிவந்துவிடாமல் லேசாக வறுக்கவும்; கழுவவும். கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். சிறுகீரை/முருங்கைக் கீரை அசத்தலாக இருக்கும். தேங் காயை துருவி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து அரிசியை விட 4 பங்கு நீர் ஊற்றவும். நீர் கொதிக்கும் பொது அதில் அரிசி, பயறு, சீரகம் ,கீரை + உப்பு போட்டு மூடிவிடவும்.
குக்கர் 5 -6 விசில் விடும் வரை காத்திருந்து இறக்கவும். குக்கரில் கேஸ் போனபின் திறந்து துருவிய தேங்காயைப் போட்டு பரிமாறவும். இதற்குத் துணையாக தேங்காய்/ எள் துவையல் சூப்பராய் இருக்கும்.

எளிய சத்தான காலை உணவு. இரவிலும் உண்ணலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அவசரமாக காலையில் டிபன் தயாரிக்கும் சகோதரிகள் ஒரு மாற்றாக இதனை தயாரிக்கலாம். நேரமும் குறைவு.

 

 Via-நலம், நலம் அறிய ஆவல்.

நாம் வெட்கம் அல்லது நாணம் அடையும்போது நிகழ்வதென்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:29 | Best Blogger Tips

நாம் நாணமுறும்போது நம் முகம் சிவக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் கன்னங்களும் கழுத்தும் சிவக்கின்றன. மானக்கேட்டுணர்ச்சி, தடுமாற்றம் அல்லது மகிழ்ச்சி போன்ற திடீரென ஏற்படும் மனக்கிளர்ச்சியே சிவத்தலுக்குக் காரணமாகும். அப்போது மேல் தோல் ஒட்டிய உட்பகுதியிலுள்ள மிகச் சிறிய குருதி நாளங்கள் பெரிதுபடுகின்றன. நுண் தமனி நாளங்கள் (Capillaries) என அழைக்கப்படும் மயிரிழை போன்ற இந்தக் குருதி நாளங்கள் பெரிதாகும்போது குருதி அவற்றில் நிறைவதால் தோல் சிவந்த தோற்றமுடையதாகிறது.

மக்கள் காணும்போது வழக்கமாக வெப்பத்தன்மையும் மகிழ்ச்சியின்மையும் உடையவர்களாக உணர்கின்றனர். தம் சிவந்த முகங்கள் ஊன்றிக் கவனிக்கப்படுவதாக கற்பிதம் செய்து கொள்கின்றனர். இது எப்போது நிகழும் எனக் கூறுவதற்கில்லை. ஏனெனில் சில மக்கள் நாணமடைவதைக் காட்டிக் கொள்வதில்லை. இந்த நிறமாற்றம் தோல் நிறத்தைப் பொருத்தே தெரியக் கூடியது ஆகும். சீரான முடியுடைய ஒளி மங்கலான தோலுடைய ஆளிடமே முகஞ்சிவத்தல் தெளிவாகத் தெரியும். இளையோர் குறிப்பாகப் பன்னிரண்டுக்கும் இருபதுக்கும் இடைப்பட்டட மங்கையர், பெரியோரை விட, எளிமையாக நாணப்படுவதாக கருதப்படுகிறது. வயது வளர வளர அவ்வளவு எளிமையாக நாணப்படுவதில்லை. ஏனெனில் திடீரென ஏற்படும் மனக்கிளர்ச்சியை அடக்கி ஆள அறிந்துகொள்வதுடன் தடுமாற்றம் அடைவதை அடிக்கடி நிகழாமல் குன்றச் செய்து விடுகின்றனர்.
 

(உடலும் மருந்தும் நூலிலிருந்து…)
 

-நலம், நலம் அறிய ஆவல்.

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:26 | Best Blogger Tips
  ஹீமோபிலியா (Hemophilia) என்பது இரத்தம் தொடர்பான ஒரு பரம்பரை நோய். இது ஆண்களிடமிருந்து ஆண்களுக்கு மட்டுமே வரும். இதில் பெண்கள் ஹீமோபிலியா நோயின் சுமப்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஏதாவது ஒரு காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறத் தொடங்கினால், இரத்தம் நிற்காது; இரத்தம் உறையாது. தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பொதுவாக நம் உடலில் ஒரு காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிப்பட்டால், இரத்தம் வெளிக் காற்றைச் சந்தித்த நொடியிலேயே, அதனுடன் தொடர்பு கொண்டு, இரத்தம் உறைந்துவிட ஆரம்பிக்கும். இதுதான் இயல்பு. அப்படி இன்றி தொடர்ந்து இரத்தம் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டே இருந்தால், இரத்த இழப்பு ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும்.

இரத்தம் உறைதலின் காரணிகள்

பொதுவாக இரத்தம் உறைவதற்காக, மரபணுவில் உள்ள ஒரு காரணி (clotting factor VIII) இரத்தத் தில் இருக்கும். இது இரத்தம், இரத்தக் குழாய்க்குள் இருக்கும்போது செயல்படாது; இரத்தம் குழாயை விட்டு வெளியேறினால் தான் இரத்தம் உறையும். உயிர் காப்பதற்கான இயற்கையின் ஓர் ஏற்பாடு இது. சிலரது உடலில் இந்த காரணி ஏதோ ஒரு காரணத்தினால் இல்லாமல் இருக்கலாம்/குறைபாடு இருக்கலாம். அவர்களுக்கு இரத்தம் உறையாது. மேலும் இரத்தம் உறைவதற்கான காரணி, "X" குரோமோசோமில்தான் உள்ளது. நம் உடலில் ஆண் பெண் பாலினத்தை நிர்ணயிக்க, ஆண் உடலில் "XY" குரோமோசோமும், பெண்ணிடம் "XX" குரோமோசோமும் உள்ளன.

மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும், 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இதில் 22 ஜோடி குரோமோ சோம்கள், உடல் நிலைக்கும் ஒரே ஒரு ஜோடி குரோமோ சோம் மட்டும் பாலினத்தை நிர்ணயிக்கிறது. உடலின் ஒவ்வொரு செல்லிலும், இந்த பாலின குரோமோசோம்கள் உள்ளன. கரு உருவாகும்போது, பாலினம் நிர்ணயிக் கப்படுவது, ஆணின் விந்து சுமந்து வரும் X மற்றும் Y உள்ள விந்தணுக்களால்தான்.! X குரோமோசோம் இரு பாலினத் திலும் உண்டு. இதில் X குரோமோசோமில்தான் இரத்தம் உறையும் காரணி உள்ளது. இதில் ஏதாவது குறைபாடு இருந்தால், இரத்தம் உறையாது. ஆனால் ஆணுக்கு ஒரே ஒரு X குரோமோசோம் உள்ளதால், அதில் உள்ள குறைபாடு படக்கென வெளிப்படும். பெண்ணுக்கு இரண்டு X குரோமோ சோம்கள் உள்ளதால், ஏதாவது ஒரு குரோமோசோமில் குறைபாடு இருந்தாலும், மற்றது சமாளித்துக் கொள்ளும், பிரச்சினை வெளியில் தெரியாது. ஆண்களின் X குரோமோசோமில் குறைபாடு/பாதிப்பு இருந்தால் அது உடனே வெளியில் தெரியும். அதனால்தான் வியாதி வருகிறது. அப்படி ஒரு நோய் தான் ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையாமை நோய். இது பரம்பரை பரம்பரையாக ஆண்களிடம் மட்டுமே வரும். பெண்கள் இந்த நோய்க்கான காரணியைச் சுமந்து, தன் குழந்தைகளிடம் இறக்கி விடுவார்கள்.

இரத்தம் உறையாமை நோய் இங்கிலாந்தில் உள்ள அரச பரம்பரையில் காணப்பட்டது. இந்த நோயின் மரபணு விக்டோரியா மகாராணியிடம் இருந்தது. அவர்தான் தாராளமாக தன் இளவரசர்களுக்கெல்லாம் தந்தார். அவர்களுக்கு இரத்தம் உறையாமை நோய் வந்து கஷ்டப்பட்டார்கள்; இறந்தும் போனார்கள். இது அரச பரம்பரையில் வந்ததால் இதனை பெருமையுடன் அரச வியாதி (Royal Disease) என அழைத்தனர். முதன் முதலில் இதனைப் பற்றிய பதிவு இரண்டாம் நூற்றாண்டில் பாபிலோனியாவில் உள்ளது. அவர்கள் குழந்தைகளுக்கு சுன்னத் செய்யும்போது, தொடர்ந்து குழந்தைகளின் இறப்பு நேரிட்டதால் இந்த நோயைப் பற்றி கண்டுபிடித்தனர். இன்று உலகில் இந்த வியாதியுடன் இருந்தாலும் சிலருக்கு அதன் தன்மை தெரியாது. வியாதி பற்றியும் தெரியாது.

இரத்த உறவில் திருமணம் செய்வதால்தான், இந்த பரம்பரை நோய் அதிகரிக்கிறது. இது பரம்பரை நோய், மரபணு மூலம் வரும் என்பதால், இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. ஆனால், கவனத்துடன் இருந்தால், இதனைக் கட்டுப்படுத்தலாம். முக்கியமாக இரத்த உறவுக்குள் திருமணம் நடக்காமல் இருந்தால், இப்படிப்பட்ட இறப்பு நிகழும் நோய்களை தவிர்க்கலாம். இதன் முக்கிய காரணம் மரபணுவில் உள்ள சிக்கல்தான். இது இரத்த உறவு திருமணம் மூலம் அதிகரிக்கிறது.

உலகில் 75 % இரத்தம் உறையாமை நோய் உள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை கிடையாது. இவர்களைப் பற்றிய சரியான கணக்கெடுப்பும் கிடையாது. இரத்தம் உறையாமை நோயில் மூன்று வகை உண்டு. உலக ஹீமோபிலியா அமைப்பு, 1963ல், கனடாவிலுள்ள மாண்ட்ரியலில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக நல நிறுவனத்தால் அங்கீகரிப்பட்ட அமைப்பாகும். இதில் 113 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இரத்தம் உறையாத நோயாளிகளுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக, 1998லிருந்து, ஏப்ரல் 17ம் நாள் உலக இரத்தம் உறையாமை தினம் கடைப்பிடிப்பது என தீர்மானிக்கப்பட்டு, அது நடைமுறையிலும் இருந்து வருகிறது. இரத்தம் உறையாமை அமைப்பின் நிறுவனரான பிரான்க் ச்சானபெல் (Frank Schnabel)லின் பிறந்த நாளான ஏப்ரல் 17ம் நாளையே, அந்த நோயுற்ற மக்களுக்காக கடைப்பிடிக்கின்றனர்.

இரத்தம் உறையாமை நோய்க்கு மரபணு சிகிச்சை இரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு. அதிகமாக 11 வயது வரை தான் இருப்பார்கள். வியாதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், கொஞ்ச காலம் வாழலாம்.

 

 Via-நலம், நலம் அறிய ஆவல்.

காலிபிளவர் மஞ்சூரியன்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:25 | Best Blogger Tips
  • காலிபிளவர் மஞ்சூரியன்  

தேவையானவை:

1. காலிபிளவர்........................1  
2. மிளகாய் பொடி...................1 தேக்கரண்டி 
3. சீரகம்.....................................1 /2 தேக்கரண்டி 
4. சோம்பு...................................1 /4 தேக்கரண்டி 
5. வெங்காயம்.......................... 6 
6. இஞ்சி ................................. 1 /2 இன்ச் அளவு 
7. பூண்டு பல்.............................6
8. சோள மாவு...........................3 தேக்கரண்டி 
9. இட்லி மாவு/மைதா ......2 தேக்கரண்டி
10. உப்பு ...................................... தேவையான அளவு

செய்முறை:

காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கவும். அதனை கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். அதில் உள்ள புழுக்கள் செத்து நீரின் அடியில் தங்கி விடும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவை அதிக புரத சத்து உள்ளவை. உடலுக்கு நல்லதே. சீரகம், சோம்பு வறுத்து அத்துடன் வெங்காயத்தை உரித்து வதக்கி அரைக்கவும். இஞ்சி பூண்டை அரைக்கவும். பின் அவற்றின் மேல், மிளகாய்ப் பொடி, அரைத்த வெங்காயம், சீரகம், இஞ்சி, பூண்டு, சோளமாவு, இட்லி மாவு/மைதா + உப்பு போட்டு பிசைந்து வைக்கவும். வெந்நீரில் போட்டு எடுத்ததால், இதில் மீண்டும் நீர் ஊற்ற வேண்டாம்.இதனை குளிர்பதனப் பெட்டியிலும் அரை மணி நேரம் வைக்கலாம்.

அடுப்பில் வாணலி/கடாயை வைத்து எண்ணெய் விட்டு அதில் மசாலா தடவிய காலி பிளவரை அதில் போட்டு தீயை மிதமாக வைக்கவும். 5 நிமிடம் கழித்து, காலிபிளவரைத் திருப்பி போடவும். பிறகும் 5 நிமிடம் கழித்து அவற்றை திருப்பி விடவும். நன்கு சிவந்ததும் எடுக்கவும்.

காலிபிளவர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். இந்த காலி பிளவர் மஞ்சூரியன் வறுவலை வெறுமனேயே சாப்பிடலாம். அவ்வளவு கலக்கல் சுவையுடன் இருக்கும்..!
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
    தேவையானவை:

    1. காலிபிளவர்....................
    ....1 2. மிளகாய் பொடி...................1 தேக்கரண்டி
    3. சீரகம்........................
    .............1 /2 தேக்கரண்டி
    4. சோம்பு........................
    ...........1 /4 தேக்கரண்டி
    5. வெங்காயம்.....................
    ..... 6
    6. இஞ்சி ..............................
    ... 1 /2 இன்ச் அளவு
    7. பூண்டு பல்...........................
    ..6
    8. சோள மாவு..........................
    .3 தேக்கரண்டி
    9. இட்லி மாவு/மைதா ......2 தேக்கரண்டி
    10. உப்பு ..............................
    ........ தேவையான அளவு

    செய்முறை:

    காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கவும். அதனை கொதிக்கும் நீரில் போட்டு எடுக்கவும். அதில் உள்ள புழுக்கள் செத்து நீரின் அடியில் தங்கி விடும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவை அதிக புரத சத்து உள்ளவை. உடலுக்கு நல்லதே. சீரகம், சோம்பு வறுத்து அத்துடன் வெங்காயத்தை உரித்து வதக்கி அரைக்கவும். இஞ்சி பூண்டை அரைக்கவும். பின் அவற்றின் மேல், மிளகாய்ப் பொடி, அரைத்த வெங்காயம், சீரகம், இஞ்சி, பூண்டு, சோளமாவு, இட்லி மாவு/மைதா + உப்பு போட்டு பிசைந்து வைக்கவும். வெந்நீரில் போட்டு எடுத்ததால், இதில் மீண்டும் நீர் ஊற்ற வேண்டாம்.இதனை குளிர்பதனப் பெட்டியிலும் அரை மணி நேரம் வைக்கலாம்.

    அடுப்பில் வாணலி/கடாயை வைத்து எண்ணெய் விட்டு அதில் மசாலா தடவிய காலி பிளவரை அதில் போட்டு தீயை மிதமாக வைக்கவும். 5 நிமிடம் கழித்து, காலிபிளவரைத் திருப்பி போடவும். பிறகும் 5 நிமிடம் கழித்து அவற்றை திருப்பி விடவும். நன்கு சிவந்ததும் எடுக்கவும்.

    காலிபிளவர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். இந்த காலி பிளவர் மஞ்சூரியன் வறுவலை வெறுமனேயே சாப்பிடலாம். அவ்வளவு கலக்கல் சுவையுடன் இருக்கும்..!

     
    Via-நலம், நலம் அறிய ஆவல்.

96 வகை சிவலிங்கங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:28 | Best Blogger Tips
96 வகை சிவலிங்கங்கள்!

ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:

சுயம்பு லிங்கம் - தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.

தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.

அர்ஷ லிங்கம் - ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.

மனுஷ்ய லிங்கம் - சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.

இந்த 96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.

க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது. இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.

வர்த்தமானக லிங்கம் : வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.

ஆத்ய லிங்கம் : இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம். ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது. பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.

களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது. இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன. சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.

1. கந்த லிங்கம் : சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.

2. புஷ்ப லிங்கம் : பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.

3. கோசாக்ரு லிங்கம் : பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.

4. வாலுக லிங்கம் : சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.

5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் : இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.

6. சீதாகண்ட லிங்கம் : இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.

7. லவண லிங்கம் : உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.

8. திலாப்சிஷ்த லிங்கம் : எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.

9. பாம்ச லிங்கம் : சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.

10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் : வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.

11. வன்சங்குர லிங்கம் : மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.

12. பிஷ்டா லிங்கம் : அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.

13. ததிதுக்த லிங்கம் : பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.

14. தான்ய லிங்கம் : நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.

15. பழ லிங்கம் : பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

16. தாத்ரி லிங்கம் : நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.

17. நவநீத லிங்கம் : வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.

18. கரிக லிங்கம் : விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.

19. கற்பூர லிங்கம் : கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.

20. ஆயஸ்காந்த லிங்கம் : காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.

21. மவுகித்க லிங்கம் : முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.

22. ஸ்வர்ண லிங்கம் : தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.

23. ரஜத லிங்கம் : வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

24. பித்தாலா லிங்கம் : பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.

25. திராபு லிங்கம் : தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.

26. ஆயச லிங்கம் : கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.

27. சீசா லிங்கம் : வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.

28. அஷ்டதாது லிங்கம் : எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.

29. அஷ்ட லோக லிங்கம் : எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.

30. வைடூர்ய லிங்கம் : நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.

31. ஸ்படிக லிங்கம் : ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.

32. பாதரச லிங்கம் : பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.

மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்!

நான் கடவுள்
ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:

சுயம்பு லிங்கம் - தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.

தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.

அர்ஷ லிங்கம் - ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.

மனுஷ்ய லிங்கம் - சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.

இந்த 96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.

க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது. இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.

வர்த்தமானக லிங்கம் : வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.

ஆத்ய லிங்கம் : இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம். ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது. பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.

களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது. இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன. சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.

1. கந்த லிங்கம் : சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.

2. புஷ்ப லிங்கம் : பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.

3. கோசாக்ரு லிங்கம் : பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.

4. வாலுக லிங்கம் : சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.

5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் : இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.

6. சீதாகண்ட லிங்கம் : இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.

7. லவண லிங்கம் : உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.

8. திலாப்சிஷ்த லிங்கம் : எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.

9. பாம்ச லிங்கம் : சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.

10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் : வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.

11. வன்சங்குர லிங்கம் : மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.

12. பிஷ்டா லிங்கம் : அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.

13. ததிதுக்த லிங்கம் : பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.

14. தான்ய லிங்கம் : நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.

15. பழ லிங்கம் : பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

16. தாத்ரி லிங்கம் : நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.

17. நவநீத லிங்கம் : வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.

18. கரிக லிங்கம் : விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.

19. கற்பூர லிங்கம் : கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.

20. ஆயஸ்காந்த லிங்கம் : காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.

21. மவுகித்க லிங்கம் : முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.

22. ஸ்வர்ண லிங்கம் : தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.

23. ரஜத லிங்கம் : வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

24. பித்தாலா லிங்கம் : பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.

25. திராபு லிங்கம் : தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.

26. ஆயச லிங்கம் : கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.

27. சீசா லிங்கம் : வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.

28. அஷ்டதாது லிங்கம் : எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.

29. அஷ்ட லோக லிங்கம் : எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.

30. வைடூர்ய லிங்கம் : நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.

31. ஸ்படிக லிங்கம் : ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.

32. பாதரச லிங்கம் : பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.

மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்!

நான் கடவுள்

பிரம்மத்தை பற்றிய விவாதம் ...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:17 | Best Blogger Tips
பிரம்மத்தை பற்றிய விவாதம் ...

ஜனகரின் அரசபையில் பல்வேறு ரிஷிகள் மத்தியில் பிரம்மத்தை பற்றிய விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யாக்ஞவல்கியரிடம் பலரும் கேள்விகள் கேட்டு அவரை சோதிக்கிறார்கள்.அவர்களுள் கார்க்கி என்ற பெண் ரிஷியும் ஒருத்தி
--------------
யஜுர்வேதம்----பிருஹதாரணியகோபநிஷத்
------------------
விதேகதேசத்து மன்னர் ஜனகர் ஒரு யாகத்தை செய்தார்.அதற்கு குருதேசம்,பாஞ்சால தேசம் போன்ற தேசங்களிலிருந்து பிராமணர்கள் (ரிஷிகள்)கூடினார்கள்.இவர்களுள் யார் பிரம்மஞானத்தில் சிறந்தவர் என அறியவேண்டும் என ஜனகருக்கு விருப்பம் உண்டாயிற்று.அவர் ஆயிரம் பசுக்களை கூட்டினார்.ஒவ்வொரு பசுவின் கொம்புகளிலும் பத்துபாதம் தங்கம் வைத்து கட்டப்பட்டது.பிரம்மஞானத்தில் சிறந்தவர் இந்த பசுக்களையும் தங்கதைதையும் எடுத்துசெல்லாம் என ஆணையிட்டார்
அப்போது யாக்யவல்கியர் என்ற ரிஷி தன் சிஷ்யனை அழைத்து இந்த பசுக்களை ஓட்டிச்செல்லும் படி ஆணையிட்டார்.
அப்போது மற்ற பிராமணர்கள்(ரிஷிகள்) உம்மைசோதிக்க வேண்டும் என்று கூறி அவரிடம் பல கேள்விகளை கேட்கிறார்கள்…….
பலரின் கேள்விகளுக்கு பதிலளித்தபின் ஒருபெண் ரிஷி எழுந்து கேள்விகேட்கிறாள்……

8.1. வாசக்னுவின் புத்திரியான கார்க்கி எழுந்து..”பிராமணர்களே!(ரிஷிகளே!) நான் இவரை(யாக்ஞவல்கியரை) இரண்டு கேள்விகள் கேட்க அனுமதியுங்கள்.இவர் இக்கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் உங்களில் ஒருவரும் இந்த பிரம்மவாதியை(யாஞ்யவல்கியரை) ஜயிக்க முடியாது. என்றாள்(பிராமணர்கள் அவளிடம்) கார்க்கி கேள் என்றார்கள்

8.2. யாஜ்ஞவல்கியரே! எது வானத்திற்கு மேலும்,
பூமிக்கு கீழும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ளதெனவும்,எது இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளதெனவும் கூறப்படுகிறதோ எதில் குறுக்கும் நெடுக்குமாகக் கோர்க்கப்பட்டுள்ளது? என்று கேட்டாள்.

8.7.ஆகாயத்தில் எது குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது.எதனிடம் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது?
யாஜ்ஞவல்கியர் பதில் சொன்னார்

8.8.கார்க்கி, பிரம்மஞானிகள் அதை அளிவற்றது(அக்ஷரம்) என்று கூறுகிறார்கள்.அதை கண்களால் காணமுடியாது(ஸ்துலம்அல்ல) அது சூட்சுமஉடல் உடையதும் அல்ல,அது குடைடையமல்ல நெட்டையுமல்ல,அது நெருப்புபோல் சிவந்த்தல்ல,தண்ணீர்போல் ஈரமுள்ளதல்ல,அதற்கு உள்ளுமில்லை புறமுமில்லை,அது ஒன்றையும் உண்வதும் இல்லை ஒன்றால் உண்ணப்படுவதும் இல்லை.

8.9.இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே சூரியனும் சந்திரனும் த்த்தம் இடங்களில் சுற்றுகின்றன.இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே வானமும் பூமியும் செயல்படுகின்றன.இந்த அக்ஷரத்தை அறியாமல் பல்லாயிரம் வருஷங்கள் யாகம் செய்தாலும்,ஹோம்ம் செய்தாலும் கிடைக்கும் பலன் முடிவுடைய பலன்.இந்த அக்ஷரத்தை அறியாமல் இந்த உலகைவிட்டு செல்பவன் கிருபணன் எனப்படுவான்.இந்த அக்ஷரத்தை அறிந்துகொண்டு ஒருவன் இவ்வுலகை விட்டு சென்றால் அவன் பிராமணன் எனப்படுவான்.

8.11கார்க்கி இந்த அக்ஷர வஸ்துவினால் தான் ஆகாயம் இவ்வாறு குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது.

8.12.பெருமை வாய்ந்த பிராமணர்களே! இந்த பிரம்மஞானியை நமஸ்கரியுங்கள்.இவரை ஜெயிக்க்கூடியவர் உங்களில் ஒருவரும் இல்லை என்று கூறி கார்க்கி அமர்ந்தாள்.
ஜனகரின் அரசபையில் பல்வேறு ரிஷிகள் மத்தியில் பிரம்மத்தை பற்றிய விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. யாக்ஞவல்கியரிடம் பலரும் கேள்விகள் கேட்டு அவரை சோதிக்கிறார்கள்.அவர்களுள் கார்க்கி என்ற பெண் ரிஷியும் ஒருத்தி
--------------
யஜுர்வேதம்----பிருஹதாரணியகோபநிஷத்
------------------
விதேகதேசத்து மன்னர் ஜனகர் ஒரு யாகத்தை செய்தார்.அதற்கு குருதேசம்,பாஞ்சால தேசம் போன்ற தேசங்களிலிருந்து பிராமணர்கள் (ரிஷிகள்)கூடினார்கள்.இவர்களுள் யார் பிரம்மஞானத்தில் சிறந்தவர் என அறியவேண்டும் என ஜனகருக்கு விருப்பம் உண்டாயிற்று.அவர் ஆயிரம் பசுக்களை கூட்டினார்.ஒவ்வொரு பசுவின் கொம்புகளிலும் பத்துபாதம் தங்கம் வைத்து கட்டப்பட்டது.பிரம்மஞானத்தில் சிறந்தவர் இந்த பசுக்களையும் தங்கதைதையும் எடுத்துசெல்லாம் என ஆணையிட்டார்
அப்போது யாக்யவல்கியர் என்ற ரிஷி தன் சிஷ்யனை அழைத்து இந்த பசுக்களை ஓட்டிச்செல்லும் படி ஆணையிட்டார்.
அப்போது மற்ற பிராமணர்கள்(ரிஷிகள்) உம்மைசோதிக்க வேண்டும் என்று கூறி அவரிடம் பல கேள்விகளை கேட்கிறார்கள்…….
பலரின் கேள்விகளுக்கு பதிலளித்தபின் ஒருபெண் ரிஷி எழுந்து கேள்விகேட்கிறாள்……

8.1. வாசக்னுவின் புத்திரியான கார்க்கி எழுந்து..”பிராமணர்களே!(ரிஷிகளே!) நான் இவரை(யாக்ஞவல்கியரை) இரண்டு கேள்விகள் கேட்க அனுமதியுங்கள்.இவர் இக்கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் உங்களில் ஒருவரும் இந்த பிரம்மவாதியை(யாஞ்யவல்கியரை) ஜயிக்க முடியாது. என்றாள்(பிராமணர்கள் அவளிடம்) கார்க்கி கேள் என்றார்கள்

8.2. யாஜ்ஞவல்கியரே! எது வானத்திற்கு மேலும்,
பூமிக்கு கீழும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ளதெனவும்,எது இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளதெனவும் கூறப்படுகிறதோ எதில் குறுக்கும் நெடுக்குமாகக் கோர்க்கப்பட்டுள்ளது? என்று கேட்டாள்.

8.7.ஆகாயத்தில் எது குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது.எதனிடம் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது?
யாஜ்ஞவல்கியர் பதில் சொன்னார்

8.8.கார்க்கி, பிரம்மஞானிகள் அதை அளிவற்றது(அக்ஷரம்) என்று கூறுகிறார்கள்.அதை கண்களால் காணமுடியாது(ஸ்துலம்அல்ல) அது சூட்சுமஉடல் உடையதும் அல்ல,அது குடைடையமல்ல நெட்டையுமல்ல,அது நெருப்புபோல் சிவந்த்தல்ல,தண்ணீர்போல் ஈரமுள்ளதல்ல,அதற்கு உள்ளுமில்லை புறமுமில்லை,அது ஒன்றையும் உண்வதும் இல்லை ஒன்றால் உண்ணப்படுவதும் இல்லை.

8.9.இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே சூரியனும் சந்திரனும் த்த்தம் இடங்களில் சுற்றுகின்றன.இந்த அக்ஷரத்தின் கட்டளையாலே வானமும் பூமியும் செயல்படுகின்றன.இந்த அக்ஷரத்தை அறியாமல் பல்லாயிரம் வருஷங்கள் யாகம் செய்தாலும்,ஹோம்ம் செய்தாலும் கிடைக்கும் பலன் முடிவுடைய பலன்.இந்த அக்ஷரத்தை அறியாமல் இந்த உலகைவிட்டு செல்பவன் கிருபணன் எனப்படுவான்.இந்த அக்ஷரத்தை அறிந்துகொண்டு ஒருவன் இவ்வுலகை விட்டு சென்றால் அவன் பிராமணன் எனப்படுவான்.

8.11கார்க்கி இந்த அக்ஷர வஸ்துவினால் தான் ஆகாயம் இவ்வாறு குறுக்கும் நெடுக்குமாக கோர்க்கப்பட்டுள்ளது.

8.12.பெருமை வாய்ந்த பிராமணர்களே! இந்த பிரம்மஞானியை நமஸ்கரியுங்கள்.இவரை ஜெயிக்க்கூடியவர் உங்களில் ஒருவரும் இல்லை என்று கூறி கார்க்கி அமர்ந்தாள்.

பத்மாசனம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:15 | Best Blogger Tips
பத்மாசனம் 


நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து  உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்.






















நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் : இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்.
Via சுபா ஆனந்தி

நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:13 | Best Blogger Tips


சப்மெரைன் என்று சொல்லப்படும் நீர்மூழ்கிக் கப்பல் தண்ணீரின் மேல் மிதந்து செல்லவும், அதேசமயம் தண்ணீரின் அடியிலும் கடலின் ஆழமானப் பகுதிகளிலும் பயணம் செய்யும் தன்மையுடைய கப்பலாகும்.

நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிக அளவில் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தவிர சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் கடல் ஆராய்ச்சி மற்றும் கடலினுள் போடப்பட்டுள்ள எண்ணெய் குழாய்கள் பராமரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு முன்னோடியாக 1776 - ஆம் ஆண்டு டேவிட் புஷ்நெல் (David Bush nell)என்பவர் டர்டில் (turtle) எனும் நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கினார். இது நீர் உட்புகாதவாறு மரத்தால் செய்யப்பட்டிருந்தது. இந்த கப்பலின் வடிவம் ஆமைத் தோட்டின் வடிவத்தை ஒத்திருந்தது. இந்த கப்பல் இயங்குவதற்கு தேவையான ஆற்றல் காலால் உந்தப்பட்டு பெறப்பட்டது. மேலும், இதில் ஒரு துடுப்பும் பயன்படுத்தப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பால்டன் என்பவர் தண்ணீரின் மேலும்,கீழுமாக பயணம் செய்யும் சப்மெரினைக் கண்டுபிடித்தார். 1798 - ஆம் ஆண்டு அவர் NAUTILUS என்ற சப்மெரைனை உருவாக்கினார்.

அதன் பின்னர் 1864 - ஆம் ஆண்டில் ஹன்லி (Hunley) எனும் பெயருடைய இரும்பினால் ஆன நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. இதுவும் மனித ஆற்றலாலே இயங்க கூடியதாக அமைக்கப்பட்டது.

1880 - ஆம் ஆண்டு வில்லியம் ஹார்ட் நீராவி இயந்திரத்தால் செயல்படும் சப்மெரைனைக் கண்டறிந்தார். இதில் ஆவிவெளியேற ஒரு குழாய் இருந்தது. அதை மேலே தூக்கவும், தாழ்த்தவும் வசதி இருந்தது.

1890 ல் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் சப்மெரைன் தயாரிப்பில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தன. 1904 - ல் டீசல் எஞ்சினை பயன்படுத்தி முதன் முதலாக பிரான்ஸ் AIGETTE என்ற சப்மெரைனை உருவாக்கியது.

பின்னர் 1901 - ஆம் ஆண்டு ஹோலேண்ட் (Holland - VI) எனும் நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. இது பெட்ரோல் மற்றும் மின்னாற்றல் மூலம் இயங்கியது. அதன் பிறகு 53 ஆண்டுகள் கழித்து முதல் முதலாக அணுஆற்றல் மூலம் இயங்கக் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட அந்த கப்பலின் பெயர் US Nautilus ஆகும்.

அணுசக்தியைப் பயன்படுத்தி இயங்கும் சப்மெரைனை இன்று அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகள் இயக்குகின்றன. முதன் முதலில் இந்தியா அணுசக்தியால் இயங்கும் சப்மெரைன் INS Chakra வை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது. பிறகு INS Salk என்ற சப்மெரைனை இந்தியா உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொண்டது.

1986 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட (US Alvin)ஆல்வின் எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் சென்று உடைந்த டைட்டானிக் கப்பலை புகைப்படம் எடுத்தது.

நீர்மூழ்கிக் கப்பல் நீரினுள் மூழ்குவதற்கும் நீரின் மேல் மட்டத்திற்கு வருவதற்கும் பிரத்தியேகமான அமைப்புகள் உள்ளன. கப்பலினைச் சுற்றியுள்ள அறையில் நீர் இல்லாதபோது நீர்மூழ்கிக் கப்பலானது நீரின் மேல் மட்டத்தில் இருக்கும்.

நீர்மூழ்கிக் கப்பலானது நீரினுள் மூழ்கவேண்டுமெனில் வால்வுகள்A,B,C,D யானது திறக்கப்படுகின்றன. வால்வு A,B ன் வழியே நீரானது உள்ளே செல்கிறது. C,D வழியே அறையிலுள்ள காற்று வெளியேற்றப்பட்டு நீர்மூழ்கிக் கப்பலானது நீரினுள் மூழ்குகிறது. மீண்டும் கப்பலானது நீரின் மேல்மட்டத்திற்கு வர வேண்டுமெனில் A,B வால்வுகள் திறக்கப்பட்டு C,Dவால்வுகள் வழியே அதிக அழுத்தத்தில் காற்றானது செலுத்தப்படுகிறது. எனவே, நீரானது வெளியேற்றப்பட்டு கப்பலானது நீரின் மேல் மட்டத்திற்கு வருகின்றது.


Via Karthikeyan Mathan

மதுவின் பக்க விளைவுகளும் அதற்கான நிவாரணமும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:07 | Best Blogger Tips
1. சில்லிடும் கால்கள்
காரணம் - மதுக் கிண்ணத்தைத் தலைகீழாக பிடித்திருக்கிறீர்கள்....நீங்கள் ஊற்றும் மது உங்கள் காலில் விழுவதால் இது நேரிடுகிறது
நிவாரணம் - கிண்ணத்தின் திறந்த பகுதி மேல் நோக்கி வரும்வரை திருப்பி பிடிக்கவும்

2. உங்கள் எதிரே இருக்கும் சுவர் முழுக்க கண்ணைப் பறிக்கும் விளக்குகள்

காரணம் - ஏன்னா நீங்க தரையில மல்லாந்து கிடக்கிறீங்க

நிவாரணம் - உங்கள் உடலை தரையிலிருந்து 90 டிகிரி கோணத்திற்கு திருப்பி நேராக நிற்கவும்

3. தரை மங்கலாகத் தெரிகிறது

காரணம் - காலியான கிளாஸ் வழியாக பார்க்கிறீர்கள்

நிவாரணம் - உடனடியாக உங்கள் அபிமான திரவத்தால் கோப்பையை நிரப்புங்கள்

4. தரை நகர்கிறது

காரணம் - உங்களை இழுத்துக் கொண்டு போகிறார்கள்

நிவாரணம் - குறைந்தபட்சம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்றாவது கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

5. உங்கள் குடும்பம் பார்க்க விசித்திரமாக இருக்கிறது அல்லது உங்கள் குடும்பம் உங்களை விசித்திரமாக பார்க்கிறது

காரணம் - தப்பான வீட்டில் இருக்கிறீர்கள்

நிவாரணம் - உங்கள் வீடு எங்கே என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

6. அறை ரொம்ப ஆட்டம் காண்கிறது, கூட இருக்கும் எல்லோரும் வெள்ளை நிற உடையில், ஒரே இசை திரும்பத் திரும்ப ஒலிக்கிறது

காரணம் - நீங்கள் ஆம்புலன்ஸில் இருக்கிறீர்கள்

நிவாரணம் - அசையாதீங்க பாஸ்.....அவிங்க பார்த்துப்பாங்க

இஞ்சி எலுமிச்சை ரசம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:06 | Best Blogger Tips
இஞ்சி எலுமிச்சை ரசம்  

தேவையானவை:

துவரம் பருப்பு.............கைப்பிடி
எலுமிச்சை...................1
தக்காளி.........................3 
பச்சை மிளகாய்...........2
இஞ்சி.............................1 இன்ச் நீளம்
சீரகம்.............................1 /2 தேக்கரண்டி
கடுகு..............................1 /2 தேக்கரண்டி
வெந்தயம்....................1 /4 தேக்கரண்டி
எண்ணெய்...................1 தேக்கரண்டி
மல்லி தழை.................2 கொத்து
கறிவேப்பிலை.............1 கொத்து 
உப்பு................................தேவையான அளவு
சீனி.................................1 தேக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைக்கவும். சீரகம்,இஞ்சியை நன்கு தட்டிக்கொள்ளவும். தக்காளியை நான்காக நறுக்கவும்.  பச்சை மிளகாயை இரண்டாக கீறவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடுகு வெந்தயம் போடவும். கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் + தக்காளி போட்டு வதக்கவும். அதிலேயே தட்டிய சீரகம், இஞ்சியைப் போட்டு. ஒரு பிரட்டு பிரட்டிய பின் வேகவைத்தை துவரம் பருப்பை போட்டு 4 டம்ளர் நீர்/அரிசி கழுவிய நீர்   ஊற்றி, .உப்பு+சீனி போடவும். நீர் நன்கு கொதித்து, தக்காளி வெந்தபின்,எலுமிச்சையைப் பிழிந்து, கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு இறக்கி விடவும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.தேவையானவை:

துவரம் பருப்பு.............கைப்பிடி
எலுமிச்சை...................1
தக்காளி.......................
..3
பச்சை மிளகாய்...........2
இஞ்சி.........................
....1 இன்ச் நீளம்
சீரகம்........................
.....1 /2 தேக்கரண்டி
கடுகு.........................
.....1 /2 தேக்கரண்டி
வெந்தயம்....................1 /4 தேக்கரண்டி
எண்ணெய்...................1 தேக்கரண்டி
மல்லி தழை.................2 கொத்து
கறிவேப்பிலை.............1 கொத்து
உப்பு.........................
.......தேவையான அளவு
சீனி..........................
.......1 தேக்கரண்டி

செய்முறை:

துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைக்கவும். சீரகம்,இஞ்சியை நன்கு தட்டிக்கொள்ளவும். தக்காளியை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடுகு வெந்தயம் போடவும். கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் + தக்காளி போட்டு வதக்கவும். அதிலேயே தட்டிய சீரகம், இஞ்சியைப் போட்டு. ஒரு பிரட்டு பிரட்டிய பின் வேகவைத்தை துவரம் பருப்பை போட்டு 4 டம்ளர் நீர்/அரிசி கழுவிய நீர் ஊற்றி, .உப்பு+சீனி போடவும். நீர் நன்கு கொதித்து, தக்காளி வெந்தபின்,எலுமிச்சையைப் பிழிந்து, கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு இறக்கி விடவும்.

 
VIA-நலம், நலம் அறிய ஆவல்.

அழகுசாதன பொருட்களால் ஆபத்து !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:35 | | Best Blogger Tips

அழகுசாதன பொருட்களால் ஆபத்து  

கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு:

இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

 எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் முகப்பூச்சுகளும், வாசனை பொருட்களும் பயன்படுத்துகின்றனர். ஊடகங் களும் தேவையற்ற பொருட்களை தாயின் அத்தியாவசியத் தேவை எனக் கூறி விற்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

 குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால், பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

 எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

 டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்கு பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் என்பவர்.

 இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார். (மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.கருவுற்றிற்கும் பெண்கள் கவனத்திற்கு:

இன்றைய வணிக உலகம் எல்லோரையும் அமிலக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. புற்றிலுள்ள ஈசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எனும் அதிர்ச்சிகரமான ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் முகப்பூச்சுகளும், வாசனை பொருட்களும் பயன்படுத்துகின்றனர். ஊடகங் களும் தேவையற்ற பொருட்களை தாயின் அத்தியாவசியத் தேவை எனக் கூறி விற்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு.

குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால், பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்கு பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் என்பவர்.

இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.
 
 (மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)
 
Via -நலம், நலம் அறிய ஆவல்.

சில மருந்துகள் எப்படித் தூங்க வைக்கின்றன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:10 | Best Blogger Tips
சில மருந்துகள் எப்படித் தூங்க வைக்கின்றன?  

சில மருந்துகள் நம்முடைய நடுவண் நரம்பு மண்டலத்தின் மீது சோர்வைச் செலுத்தி அதனைக் குறைந்த ஆற்றலுக்குள்ளாக்குகின்றன. விழிப்பு-உறக்கச் சுழல் முறையை நடத்திச் செல்லும் மூளைப்பரப்பில் துயிலூட்டும் மருந்துகள் செயல்பட்டு மாற்றுகின்றன. இதனால் நமக்கு தூக்கம் ஏற்படுகிறது. மருந்துகள் மிக வேறுபாடுகள் கொண்டுள்ளன. தேவையான மருந்தளவு, அவை செயல்படுத்தும் கால அளவு, உதவியளவு, அபாய அளவுகளை அறிந்து, அவை பாதுகாப்புத் தரும் எல்லை ஆகியவற்றிற்கேற்ப அம்மருந்துகள் வேறுபாடு உடையன.

பினோபார்ப்பிடோன் (Phenobarnitone) அல்லது லூமினால் (Luminal) போன்ற நீண்ட நேரச் செயல்பாடு விளைவிக்கும் வெள்ளை உருப்பளிங்குப் பொடிகள் (Barbiturates) ஆறுமுதல் பத்து மணி நேரத்திறன் கொண்டுள்ளன. தொடர்ந்து பயன்படுத்துபவர்க்கு அடுத்தநாளில் மந்தமான மன நிலையையும், உறங்கி வழிகிற நிலையையும் அவை உண்டாக்கலாம். இடை நிலையில் செயல்படும் மருந்துச் சரக்குகள், பூட்டோபர்பிடோன் (Butobarbitone), சொனாரில் (Soneryl), அமிலோபார்பிடோஸ் (Amylobarbitone) அல்லது அமிடால் (Amytal) போன்றவை ஐந்து முதல் ஆறுமணியே செய்கை புரியும்.

பென்டோபார்பிடோன் (Pentonarbitone) அல்லது நெம்பூடல்(Nembutal) போன்ற குறுகிய காலத்தில் செயல்படுத்தும் மருந்துகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரமே பயன்படும். கடுந்தீவிரமான குறை காலமுடையவை (Ultra-Short drugs) தியோபென்டோன் (Thiopentone) அல்லது பென்டோதால் (Pentothal) போன்றவை மயக்கமூட்டுவதற்கு முன்பாகக் கொடுக்கப்படுகின்றன. தூக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடிகள் கடுந்தீங்குகளை விளைவிக்குமாதலால் கட்டாயமாக மருத்துவர் மேற்பார்வையில் மட்டுமே இது உட்கொள்ளத்தக்கது. (உடலும் மருந்தும் நூலிலிருந்து)
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
சில மருந்துகள் நம்முடைய நடுவண் நரம்பு மண்டலத்தின் மீது சோர்வைச் செலுத்தி அதனைக் குறைந்த ஆற்றலுக்குள்ளாக்குகின்றன. விழிப்பு-உறக்கச் சுழல் முறையை நடத்திச் செல்லும் மூளைப்பரப்பில் துயிலூட்டும் மருந்துகள் செயல்பட்டு மாற்றுகின்றன. இதனால் நமக்கு தூக்கம் ஏற்படுகிறது. மருந்துகள் மிக வேறுபாடுகள் கொண்டுள்ளன. தேவையான மருந்தளவு, அவை செயல்படுத்தும் கால அளவு, உதவியளவு, அபாய அளவுகளை அறிந்து, அவை பாதுகாப்புத் தரும் எல்லை ஆகியவற்றிற்கேற்ப அம்மருந்துகள் வேறுபாடு உடையன.

பினோபார்ப்பிடோன் (Phenobarnitone) அல்லது லூமினால் (Luminal) போன்ற நீண்ட நேரச் செயல்பாடு விளைவிக்கும் வெள்ளை உருப்பளிங்குப் பொடிகள் (Barbiturates) ஆறுமுதல் பத்து மணி நேரத்திறன் கொண்டுள்ளன. தொடர்ந்து பயன்படுத்துபவர்க்கு அடுத்தநாளில் மந்தமான மன நிலையையும், உறங்கி வழிகிற நிலையையும் அவை உண்டாக்கலாம். இடை நிலையில் செயல்படும் மருந்துச் சரக்குகள், பூட்டோபர்பிடோன் (Butobarbitone), சொனாரில் (Soneryl), அமிலோபார்பிடோஸ் (Amylobarbitone) அல்லது அமிடால் (Amytal) போன்றவை ஐந்து முதல் ஆறுமணியே செய்கை புரியும்.

பென்டோபார்பிடோன் (Pentonarbitone) அல்லது நெம்பூடல்(Nembutal) போன்ற குறுகிய காலத்தில் செயல்படுத்தும் மருந்துகள் இரண்டு அல்லது மூன்று மணி நேரமே பயன்படும். கடுந்தீவிரமான குறை காலமுடையவை (Ultra-Short drugs) தியோபென்டோன் (Thiopentone) அல்லது பென்டோதால் (Pentothal) போன்றவை மயக்கமூட்டுவதற்கு முன்பாகக் கொடுக்கப்படுகின்றன. தூக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடிகள் கடுந்தீங்குகளை விளைவிக்குமாதலால் கட்டாயமாக மருத்துவர் மேற்பார்வையில் மட்டுமே இது உட்கொள்ளத்தக்கது.
 
 (உடலும் மருந்தும் நூலிலிருந்து)
 
 Via -நலம், நலம் அறிய ஆவல். 

சோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சரித்திரம், தயவு செய்து இதை படியுங்கள் பின் பகிருங்கள்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:05 | Best Blogger Tips


கி.பி. 1001ல் முஹம்மது கஜ்னி என்ற கொள்ளையன் செழிப்பாக இருந்த பாரத தேசத்தை நோக்கி தன் கவனத்தை திருப்பியதுதான் நம் நாட்டின் கொடூர சரித்திரத்திற்கு தொடக்கம். அச்சமயத்தில் பெரும் சக்ரவர்திகள் இல்லாமல் இருந்ததும் ஒரு பெரும் பின்னடைவு. சிற்றரசர்களால் ஆளப்பட்டிருந்த இன்றைய ஆப்கான் பகுதிகள், துருக்கிய கொள்ளைக்காரனுக்கு எளிதான விருந்தாகப் பட்டது. பல தடவை படையெடுத்து அவன் ஜெயபாலா என்ற அரசர் ஆண்டுவந்த இன்றைய பெஷாவர் என்ற பகுதியை பிடித்தான். பின்னர் அருமையான விளைநிலங்களை கொண்ட பஞ்சாப் பகுதிகளை அவன் பிடித்தான்.

அவன் பெரும்பாலும் ஹிந்துக்களின் கோவில்களை குறி வைத்தான். அக்காலங்களில் ஹிந்துக்கள் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை அதிகமாய் வைத்திருப்பதில்லை. மாறாக கோவில்களுக்கு அவற்றை வழங்கி விடுவார்கள். கோவில்களில் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள் போர் வந்தாலும் கோவில்களை யாரும் தாக்கும் வழக்கம் இல்லை. ஆனால் முஹம்மது கஜ்னியோ கொள்ளைக்காரன் ஆயிற்றே, அவனுக்கு ஏது தர்ம நெறிகள் ?

வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளை அவன் ஊடுறுவி, அழித்து பின் திரும்ப சென்று விடுவான். அவ்வாறு திரும்ப திரும்ப செய்து அவன் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பயத்தை உண்டாக்கி இருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர் மற்றும் சோமநாதபுரியில் அவன் இவ்வாறாக ஊடுறுவி, பேரழிவை உண்டாக்கி விட்டு திரும்பி சென்று விடுவான். செல்லும் போது பலரை அடிமைகளாக பிடித்துக் கொண்டு போய் மதமாற்றி விடுவான். இவ்வாறு முஹம்மதின் ஊடுறுவலால "சிந்தி ஸ்வாரங்கர் சபையை" சேர்ந்த மக்களும் பிற ஹிந்துக்களும் அவனின் மதமாற்றலில் இருந்து தப்பிக்க சிந்து பகுதிகளில் இருந்து வெளியேறினர்.

முஹம்மது கஜ்னி, ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயங்களை அழித்தான். அதில் குஜராத்தில், சௌராஷ்ட்ரா பகுதியில் இருந்த‌ சோமநாதர் ஆலயமும் அடக்க‌ம். அந்த கோவில் மிக அற்புதமாய் இருந்த‌து. அதில் 300 இசைக் கலைஞர்கள், 500 நடன மங்கைகள், 300 பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியாளர்கள் என பலர் பணி புரிந்தார்கள். அருமையான 56 தேக்கு தூண்களால் அந்த கோவில் நிறுவப்பட்டிருந்தது என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கி பி 1025ம் ஆண்டு கஜ்னி அதை காத்து நின்ற 50000 மக்களை கொன்றழித்து அதனை அழித்தான். அதை காத்து நின்றவர்களில் 90 வயதான கோக்னா ரானாவும் அடக்கம். முஹம்மது சோமநாதர் ஆலயத்தில் இருந்த லிங்கத்தை உடைத்து அதன் துண்டுகளை மெக்காவிலும் மெதினாவிலும், தன் தர்பாரிலும், க‌ஜ்னி என்ற மசூதி ஆகியவற்றின் வாயில் படிக்கட்டுகளில் பதித்தான். அந்த பேரழிவை நடத்திவிட்டு 61/2 டன் தங்கத்தோடு அவன் நாடு திரும்பினான். இன்றைய வாங்கும் சக்தியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 13 லட்சம் கோடி என்கிறார்கள் பொருளாதார் நிபுண‌ர்கள். அதாவது பத்மநாபர் கோவிலில் கிடைத்த கருவூலத்தை போல் 13 மடங்கு.

ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.

"சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது. அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும். அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அழிக்கும் பொருட்டு பல ஹிந்துக்களை முஹம்மதியர்களாய் மாற்றக் கூடும் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே உடைத்தெறிந்து பின் அதனை எடுத்து வர உத்தரவிட்டான்"

பின்னர் புனரமைக்கப்பட்ட அக்கோவிலை கி.பி. 1296 ஆம் ஆண்டு, சுல்தான் அல்லாவுதின் கில்ஜி அழித்தான். ஆயுதம் இல்லாமல் அதை தடுக்க வந்த 50000 பேர்கள் வாளுக்கு இறையானார்கள். 20 ஆயிரம் பேர் அடிமைகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

மீண்டும் அக்கோவிலை மஹிபாலா தேவா என்கிற சுதாசம அரசர் கி.பி. 1308ம் ஆண்டு கட்டினார். அதை 1375ம் ஆண்டு மீண்டும் முதலாம் முஜாஃபர் ஷா என்பவன் அழித்தான்.

மிண்டும் அது புனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம் ஆண்டு மஹ்முத் பெக்தா என்பவனால் மீண்டும் அழிக்கப்பட்டது.

பின்னரும் உயிர்பெற்ற அக்கோவிலை, கடைசியாக கி.பி. 1701 ஆம் ஆண்டு ஔரங்கசீப் என்ற கொடுங்கோலனால் மீண்டும் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் அக்கோவிலின் தூண்களை உபயோகப்படுத்தி, ஒரு மசூதி எழுப்பப்பட்டது.

சுதந்திரத்திற்கு பிறகு ஹிந்துக்களின் பெரு முயற்சியால் அக்கோவில் மீண்டும் எழுந்து நிற்கிறது. ஆனால் அது நமக்கு ஆயிரம் பாடங்களை சொல்லித் தரும் ஒரு பொக்கிஷமாய் உள்ளது. இன்றைக்கு அதன் கோபுரங்கள் உயர்ந்து இருந்தாலும், "எல்லா மதமும் ஒன்றுதான்" என்று கூறும் மூடர்களை கண்டு அது வெட்கத்தால் தலை குனிந்து நின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின் மிக மோசமான தன்மையே அது மீண்டும் மீண்டும் திரும்புகிறது என்பதுதான் என்று அது நமக்கு ஞாபக படுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தை தட்டி கேட்கும் தன்மையும் நம்மில் அழிந்துவிட்டதை அது உலகிற்கு பரைசாற்றுகிறது.




Via மக்கள் சேவையே மகேசன் சேவை

கர்ப்பிணிகளுக்கு வலியின்றி சுக பிரசவம் ஏற்பட உதவும் துளசி!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:05 | Best Blogger Tips
          கர்ப்பிணிகளுக்கு வலியின்றி சுக பிரசவம் ஏற்பட உதவும் துளசி!

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது.

கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும்.

பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகளை உணவில் அதிகரிக்க வேண்டும். கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.













கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுதான் கருவின் வளர்ச்சி, பிரசவத்துக்கு பிறகு தாயின் உடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது வலியின்றி பிரசவம் ஏற்படும் என்று ஆயுர்வேதம் கூறியுள்ளது.

கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள், 7வது மாதத்தில் இருந்து கடைசி 3 மாதங்களில் கர்ப்பிணி தனது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். இந்த காலங்களில் அதிக திரவ உணவுகள், பழங்கள் நல்லது. கரு வளர இவை அதிக பயனளிக்கும்.

பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகளை உணவில் அதிகரிக்க வேண்டும். கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்தலாம். அது பிரசவ காலத்தை எளிதாக்கும். அதேபோல் கர்ப்பிணிகள் அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வர, வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.


Via தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி

நம்ம முன்னோர் இவ்வளவு விவரமானவங்களா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:04 | Best Blogger Tips











(ஆனால் நடைமுறையில் இவற்றை அறிந்துகொண்டுதான் செய்கிறார்களா என்பது கேள்விக்குரியதே]

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வல
ுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.
உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.


-ராமானாந்தா குரு

இட்லி பொடி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:17 | Best Blogger Tips

இட்லி பொடி;

தே.பொருட்கள்:
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுகட்டி
காய்ந்த மிளகாய் - 6
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*பெருங்காயத்தை தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும்.பெருங்காயத்தை மட்டும் எண்ணெயில் பொரித்து மீதமுள்ள பொருட்களை கலந்து ஆறவிடவும்.
*உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.கடைசியில் சிறு துண்டு வெல்லம் சேர்த்து அரைத்தெடுத்தால் நன்றாகயிருக்கும். பொடி வகைகளை மட்டும் கொஞ்சமாக அரைப்பது சுவையாக நன்றாகயிருக்கும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.


தே.பொருட்கள்:

தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுகட்டி
காய்ந்த மிளகாய் - 6
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:

*பெருங்காயத்தை தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும்.பெருங்காயத்தை மட்டும் எண்ணெயில் பொரித்து மீதமுள்ள பொருட்களை கலந்து ஆறவிடவும்.
*உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.கடைசியில் சிறு துண்டு வெல்லம் சேர்த்து அரைத்தெடுத்தால் நன்றாகயிருக்கும். பொடி வகைகளை மட்டும் கொஞ்சமாக அரைப்பது சுவையாக நன்றாகயிருக்கும்.

VIA -நலம், நலம் அறிய ஆவல்.

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

மணக்கால் அய்யம்பேட்டை | AM 2:12 | Best Blogger Tips
அயோத்தி ராமஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு, தன் அறிக்கையை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை ராமஜென்ம பூமியைப் பற்றி மட்டுமல்ல, இந்திய வரலாற்றுக்கே சிறந்த செய்திகளை அளித்துள்ளது.

இங்கு பூமியை அகழ்வதற்கு முன்பாக நவீன ரேடர் கருவிகளைக் கொண்டு பூமிக்கடியில் ஏதாவது கட்டடங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்று ஆய்ந்து பார்த்துள்ளனர். இந்த ஆய்வில் சில தூண்களின் பகுதிகளும், கட்டடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரேடார் கருவியினால் காணப்பட்டவை உண்மையானவை தானா என்றும் மேலும் ஏதாவது உள்ளதா எனவும் பார்க்கத்தான் அகழாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கைதான் இப்பொழுது சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வறிக்கையின் சுருக்கம் வருமாறு.

மூவாயிரம் ஆண்டுகள்

பாபர் மசூதிப் பகுதியில் மிகவும் ஆழமான பகுதியில் எவ்வளவு காலம் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என அறிய இயற்கையான பகுதி உள்ள வரையில் ஆழ்ந்து பார்த்துள்ளனர். அதன்படி இங்கு 3,000 ஆண்டுகளாக மனிதன் தொடர்ந்து வாழ்ந்துள்ளான் எனக் குறிக்கும் தடயங்கள் கிடைத்துள்ளன.

‘கார்பன் 12’ எனப்படும் விஞ்ஞான முறையில், கிடைத்த பொருட்களின் காலம் கணக்கிடப் பட்டுள்ளது. அக்கால மனிதன் பயன்படுத்திய பானை ஓடுகள், சுடுமண் பாவைகள், மணிகள் முதலியன கிடைத்துள்ளன. சுடுமண் பாவைகளில் தாய் முலை தழுவிய சேய்களின் உருவங்கள் உள்ளன.

இவற்றில் முக்கியமாக குறிப்பிடத்தகுந்தது ஒரு மோதிரமாகும். இதில் அசோகன் காலத்து பிராம்மி எழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு மக்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றனர் என்னும் உண்மை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து சுங்கர் என்னும் அரச வமிசத்தவர்கள் ஆண்ட காலத் தடயங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் வழங்கிய சுடுமண் பாவைகள், விலங்குகளின் உருவங்கள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன. சுமார் இருநூறு ஆண்டுகள் சுங்கர் காலச் சான்றுகள் கிடைக்கின்றன.

சுங்கர் காலத்துக்குப்பின் இங்கு குஷானர் காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. 300 ஆண்டுகள் இப்பண்பாடு நிலவிய சான்றுகள் இங்கு உள்ளன. அதாவது கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கி, முதல் மூன்று நூற்றாண்டுகள் இங்கு இந்தப் பண்பாடு நிலவியது. இதை மூன்றாவது காலகட்டம் என்று கூறலாம்.

இதில் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவரின் அடிப்பகுதி ஒன்றும் கிடைத்துள்ளது. ஏழு அடுக்குகள் வரை இச்சுவரின் செங்கல் வரிசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டடப் பகுதியாகும்.

குப்தர் காலம்

இதையடுத்து குப்தர் காலச் சின்னங்கள் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றன. இவை சுமார் 300 ஆண்டுகள் அதாவது கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய பொருட்கள் ஆகும். இங்கு கிடைத்தவற்றில் சந்திரகுப்த அரசன் வெளியிட்ட செப்புக்காசு ஒன்று உள்ளது. இதில் ‘ஸ்ரீ சந்திர’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

குப்தர்களுக்குப் பின் ஆண்ட ராஜபுத்திரர்கள் காலம் வரை அடுத்த கட்டம் எனலாம். சுமார் 400 ஆண்டுகள் வரை நிலவிய, அதாவது கி.பி. 600 முதல் கி.பி. 1000 வரையில் மக்கள் வாழ்ந்த பகுதிகளும் கிடைத்துள்ளன.

இக்காலத்தைச் சார்ந்த வட்ட வடிவமான ஒரு கட்டடம் இங்கு கிடைத்துள்ளது. இது ஒரு கோயிலின் வடிவமாகவே காணப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. செங்கற்களால் கட்டப்பட்ட சுவரில் வடபுறத்தில் அபிஷேக நீர் வழிந்தோட கோயில்களில் அமைக்கப் படும் பிரனாளம் என்னும் பகுதியும் தெளிவாக அடையாளம் காணப் பட்டுள்ளது.

இது ஒரு மாபெரும் கட்டடமாக மண்டபம் போல் காணப்படுகிறது. இரு அங்கணமாக எழுப்பப்பட்டுள்ளது. முன்பிருந்த கட்டடத்தின் மேலேயே இந்தக் கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டடம் வெகு காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது 150 அடி நீளமும் 100 அடி அகலமுமாக கட்டப்பட்டுள்ளது.

இப்பெரும் கட்டடத்தின் மேல் தான் பிற்காலத்தில் பாபர் மசூதி எழுப்பப் பட்டிருக்கிறது. பாபர் மசூதியின் நேர் கீழே தான் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் இப்பெரும் கட்டடச் சுவர்கள் காணப்படுகின்றன. இம்மண்டபப் பகுதியில் சீராக அமைக்கப்பட்ட ஐம்பது தூண்களின் அடிப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள

இவை செங்கல் தூண்களைப் பாவி திமிசு அடித்தும் அதன் மேல் மணற்கற்களை அடுக்கியும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் எந்த அமைப்பில் இக்கட்டடம் இருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இக்கட்டடச் சுவர்களின் பகுதிகள் 150 அடி நீளத்திற்கு இன்னமும் எஞ்சியுள்ளன.

இக்கட்டடத்தின் நேர்மையத்தின் மேல்தான் பாபர் மசூதியை எழுப்பியுள்ளனர். இதன் கிழக்கில் செங்கல் பாவிய தரையில் வட்ட வடிவில் குடையப்பட்டுள்ளது. இங்கு ஏதோ முக்கியமான பொருள் பொருத்தி வைத்திருந்தனர் என ஊகிக்கமுடிகிறது. இங்கு பல மண் விளக்குகளும் கிடைத்துள்ளன. இவ்விளக்குகள் இக்கட்டடம் புழக்கத்தில் இருந்த காலத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இதன் மேல்தான் பாபர் மசூதியைக் கட்டியுள்ளார்.

பாபர் மசூதி கட்டிய காலத்தில் இருந்து செலிடான் என்ற வகை பீங்கான் பானை ஓடுகளும், மேல் புறத்தே பீங்கான் போன்ற வழவழப்பான மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. இந்த நிலையில் மனித உடல்களைப் புதைத்ததால் எஞ்சியிருக்கும் மனித எலும்புகளும் கிடைக்கின்றன.

பாபர் மசூதி கட்டியபிறகு இங்கு ஜனநடமாட்டம் குறைந்து போன தடயங்கள் உள்ளன. இந்த அகழாய்வில் பல நிலைகளிலும் கிடைத்த கரித்துண்டுகளைக் கொண்டு கார்பன் 14 என்னும் விஞ்ஞான முறையில் காலத்தைக் கணித்துள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து, அதாவது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது இதனால் நிரூபணமாகிறது.

பிற்கால கரித்துண்டுகள் அங்கு தொடர்ந்து வரலாற்றுக் காலங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாகக் காட்டியுள்ளன. தொடக்க காலத்தைச் சேர்ந்த கட்டடங்கள் எதற்காக பயன்பட்டன எனக்கூற இயலாது.

பத்தாம் நூற்றாண்டில்

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்கான கட்டிடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும், வாயில் நிலைகளும், சிற்பங்களும், அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும், மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன. இவை பாபர் மசூதியின் நேர் கீழே காணப்படுகின்றன. இக்கட்டத்தின் மேல் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை. இதுதான் மத்திய தொல்லியல் துறை அளித்துள்ள அறிக்கையாகும்.

இந்த அகழாய்வு முற்றிலும் உயர்நீதிமன்ற அதிகாரியின் நேர்முகப் பார்வையில் நடைபெற்ற ஒன்றாகும். மேலும் இருதரப்பு பிரதிநிதிகளும் அகழாய்வின்போது உடன் இருந்துள்ளனர். இங்கு கிடைத்த பொருள்களைப் பற்றியோ, அன்றி பாபர் மசூதியின் கீழே கட்டடம் இருந்துள்ளது என்பதைப் பற்றியோ இனி ஐயம் எதுவும் இருக்க முடியாது.

டாக்டர் ஆர்.நாகசாமி (1930-)

இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களில் ஒருவர். தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர். தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், கரூர், கொற்கை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் நடத்தியவர். தமிழகத்தின் முக்கியமான அருங்காட்சியகங்களை உருவாக்கி, வடிவமைத்தவர். பிரபல லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசு சார்பாக வாதாடி பத்தூர் நடராஜர் திருவுருவத்தை மீட்டு வந்தவர். வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி, கலை, இலக்கியம், சமயம், கோயில் ஆகமங்கள் ஆகிய பல துறைகளிலும் புலமை கொண்டவர். இவற்றின் அணுகுமுறைகளை இணைத்து ஆய்வுகள் செய்தவர்.




Via மெய்ப்பொருள்