கறிவேப்பிலை பொடி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:27 | Best Blogger Tips

Photo: கறிவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள்:

· கறிவேப்பிலை - 2 கப் 
· உளுத்தம் பருப்பு - 50 மில்லி 
· மிளகு - 10 எண்ணம் 
· சீரகம் - ஒரு சிறிய மேசைகரண்டி 
· வரமிளகாய் - 10 எண்ணம் 
· பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி 
· புளி - நெல்லிகாய் அளவு 
· இஞ்சி - ஒரு துண்டு 
· உப்பு தேவையான அளவு 
· கடலெண்ணெய் - நான்கு சிறிய மேசைகரண்டி. 

செய்முறை:

1. முதலில் பச்சை கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும்.
2. பின்னர் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு வதக்கவும்.
3. பருப்பு, வரமிளகாய், மிளகு, சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
4. பின்னர் ஆறியதும் முதலில் இஞ்சி,புளி,பருப்புகளை மிக்ஸ்யில் போட்டு, அதன்பின்னர் மிளகு, சீரகம், மிளகாயை அரைக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு நைசாக அரைக்கவும். கறிவேப்பில்லை பொடி தயார். 

மருத்துவ குணங்கள்

சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தெளிவு. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.
தேவையான பொருட்கள்:
· கறிவேப்பிலை - 2 கப்
· உளுத்தம் பருப்பு - 50 மில்லி
· மிளகு - 10 எண்ணம்
· சீரகம் - ஒரு சிறிய மேசைகரண்டி
· வரமிளகாய் - 10 எண்ணம்
· பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
· புளி - நெல்லிகாய் அளவு
· இஞ்சி - ஒரு துண்டு
· உப்பு தேவையான அளவு
· கடலெண்ணெய் - நான்கு சிறிய மேசைகரண்டி.

செய்முறை:


1. முதலில் பச்சை கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாக வறுக்கவும்.
2. பின்னர் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு வதக்கவும்.
3. பருப்பு, வரமிளகாய், மிளகு, சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
4. பின்னர் ஆறியதும் முதலில் இஞ்சி,புளி,பருப்புகளை மிக்ஸ்யில் போட்டு, அதன்பின்னர் மிளகு, சீரகம், மிளகாயை அரைக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை போட்டு நைசாக அரைக்கவும். கறிவேப்பில்லை பொடி தயார்.

மருத்துவ குணங்கள்

சுவையின்மை, நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிட நரை மாறுதல், கண்பார்வை தெளிவு. பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை பயன்தரும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரைமுடி போயே போச்சு.
Via ஆரோக்கியமான வாழ்வு

வர்மம் - ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:23 | Best Blogger Tips


ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிஇல் பரவி இருந்தது, இக்கலை சிதமருதுவதை துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்கு சாட்சி.


அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்
"அகஸ்தியர் வர்ம திறவுகோல்"
"அகஸ்தியர் வர்ம கண்டி"
"அகஸ்தியர் ஊசி முறை வர்மம்"
"அகஸ்தியர் வசி வர்மம்"
"அகஸ்தியர் வர்ம கண்ணாடி"
"அகஸ்தியர் வர்ம வரிசை"
"அகஸ்தியர் மெய் தீண்டா கலை"
ஆகியவை குறிப்பிடத்தக்கவை
" ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

தொடு வர்மம்:

இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

தட்டு வர்மம்:

இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

நோக்கு வர்மம்:

பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

படு வர்மம் :

நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்
நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்
முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்
கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்
கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்
கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்
கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்
இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்...

வர்மத்தின் அதிசயங்கள் !!

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்

ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.

மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.


Via Nature is God - இயற்கையே கடவுள்

போதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:17 | Best Blogger Tips

இன்றைய கட்டத்தில் போதிதர்மரைப்பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது என்பது கருதி இந்த பதிவு பதியப்படுகிறது. இதில் தமிழ் நாட்டில் வர்மம் சாஸ்திரம் எனப்படும் மருத்துவ போர்க்கலையின் சீன வடிவம், அதாவது போதிதர்மர் சீன தேசத்தில் கற்பித்த வர்ம சாஸ்திரம் பற்றிப்பார்க்கப்போகிறோம்.

"DIM MAK - டிம் மாக்" என்பதுவே சீன மொழியில் வர்ம சாஸ்திரத்தின் பெயராகும், இதன் அர்த்தம் "மரண அடி" என்பதாகும். புருஸ் லீயின் மரணம் கூட இளக்காமல் விட்ட வர்மத்தினால் ஏற்பட்ட மரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு.

வர்மத்தின் தத்துவம் என்ன அல்லது எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது?
சீன தத்துவத்தின் படி வர்மத்தின் அடிப்படை சீ (chi or ki) எனப்படும் பிராண சக்தி. இந்த பிராண சக்தி மனிதனது உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நரம்பு மண்டலங்களினூடாக உடல் முழுவதும் பரவி உடலை வலுவூட்டுகின்றன. இவை மெரிடியங்கள் என அழைக்கப்படும். சீன மருத்துவ கொள்கையின் படி (எமது சித்த வைத்திய, தாந்திர யோக கொள்கையின் படியும்தான்) நோய் என்பது இந்த பிராண ஓட்டத்தில் ஏற்படும் தடையாகும். இதனை சீர்செய்வதற்கு பாவிக்கப்படும் உத்திகளே அக்யுபிரசர், அக்யுபங்க்சர் போன்றவை. இவை இந்த அடிப்படையின் நல்ல முகங்கள்! டிம் மாக் அல்லது மரண அடி இதன் கெட்ட உபயோகம்!

நவீன விஞ்ஞான புரிதலின் படி இந்தப்புள்ளிகள் நரம்புகளில் மிகவும் தொய்யலான பகுதியாகும், அத்துடன் நரம்பியல் ரீதியாக அவை உடலின் உள்ளங்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை சேதமுறும் போது அவற்றின் விளைவுகள் நேரடியாக உள்ளங்கங்களை பாதிக்க செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது.

பாதிப்பை ஏற்படுத்துவதற்கு குறித்த இடத்தில் ஏற்படும் அடியின் வேகத்தின் அளவு முக்கியமானதாகும், இதனை தமிழ் வர்மசாஸ்திரத்தில் மாத்திரை அளவு என்பார்கள், மாத்திரை அளவு அதிகமானால் ஒரு நிலையில் வர்மத்தினை இளக்கமுடியாது.

இந்த முறை சீன போர்க்கலையில் இறுதி நிலையில் கற்றுக்கொடுக்கப்படும் ஒரு போர்முறையாகும். இனி இவற்றின் பிரிவுகளைப்பார்ப்போம்.

இந்த பகுப்பு தாக்குதலினையும், பாதிப்பு ஏற்படும் விதத்தினையும் கொண்டு பகுக்கப்பட்டுள்ள ஒருமுறையாகும். இதன் படி சீன வர்மம் மூன்று வகையான தாக்குதல் முறையினைக் கொண்டுள்ளது.

1. Tien Ching - நரம்பு முனைகளை தாக்குதல்
2. Tien Hsueh - இரத்த நாளங்களைத் தாக்குதல்
3. Tien Hsing Chi - Chi எனப்படும் பிராண சக்தி மையங்களைத் தாக்குதல்.

Tien Ching: நரம்பு முனைகளை தாக்குதல்
இது நரம்பு முனைகளை தாக்கி ஒருவரை பக்கவாதம் அல்லது முடமாக்கும் முறையாகும். இவை குறித்த புள்ளிகளை இலக்கு வைத்துதாக்காமல் தனது வலிமையினை கொண்டு எதிராளியின் உடலில் நரம்புகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.

Tien Hsueh - இரத்த நாளங்களைத் தாக்குதல்
நாடிகளையும் நாளங்களையும் தாக்கி இரத்த அடைப்பை ஏற்படுத்தும் முறையால பாதிப்பை ஏற்படுத்துவதாகும். இந்த தாக்குதல் எதிராளிக்கு பின்வரும் காரணங்களால் மரணத்தை ஏற்படுத்தகூடும்.

1. மூளை, இதயம் போன்ற அங்கங்களுக்கு இரத்தம் செல்வது தடைபட்டு மரணம் சம்பவிக்கலாம்.
2. அடிபடும் போது ஏற்படும் இரத்த உறைதல் இரத்த நாளங்களினூடு சென்று மாரடைப்பு, மற்றும் மூளையில் அடைப்பினை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்ப்படுத்தலாம்.
3. சில உறுப்புகள் உடனடியாக சேதமடைவதால் இரத்த உறைதல் ஏற்பட்டு சம்பவிக்கும் மரணம்.

Tien Hsing Chi - பிராண சக்தி மையங்களைத் தாக்குதல்.
இது Chi எனப்படும் பிராண சக்தி மையங்களைத் தாக்குதல். இதன் விளைவு மரணம் உடனடியாகவும் சம்பவிக்கலாம், அல்லது நீண்டகாலத்திற்கு பின் சம்பவிக்கலாம். இது மனித உடலில் பிராணனின் ஒட்டத்தினை தடை செய்யும் முறையாகும். இதற்கு தாக்குபவரிற்கு பிராணன் வசப்பட்டிருக்க வேண்டும்.

சீன வர்மக்கலையின் படி உடலில் மரணத்தினை ஏற்படுத்தக்கூடிய புள்ளிகள் 36 ஆகும். தமிழ் வர்மசாஸ்திரத்தின் படி அவை 108 ஆகும்.

கடைசியாக இந்த கட்டுரையின் நோக்கம் தமிழர் கலைகள் எவ்வளவு பிந்தங்கியுள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டுவதுமாகும். ஏனெனில் சீன மருத்துவம், சீன போர்க்கலை என்பன அவர்கள் அனைவருக்கும் அறிந்து கொள்ளும் படி கொடுத்ததால் இன்று உலகளாவிய அந்தஸ்து பெற்று பலராலும் பயிலப்படுகிறது.


Via Nature is God - இயற்கையே கடவுள்

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண் சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:11 | Best Blogger Tips

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண் சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?

1. திருமூலர், 
2. இராமதேவர், 
3. கும்பமுனி, 
4. இடைக்காடர், 
5. தன்வந்திரி, 
6. வான்மீகி, 
7. கமலமுனி, 
8. போகநாதர்,
9. குதம்பைச் சித்தர், 
10. மச்சமுனி, 
11. கொங்கணர், 
12, பதஞ்சலி, 
13. நந்திதேவர், 
14. போதகுரு, 
15. பாம்பாட்டிச் சித்தர். 
16. சட்டைமுனி, 
17. சுந்தரானந்த தேவர், 
18. கோரக்கர்.

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர், 
2. அழுகணிச் சித்தர், 
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், 
4. சதோகநாதர், 
5. இடைக்காட்டுச் சித்தர், 
6. குதம்பைச் சித்தர், 
7. புண்ணாக்குச் சித்தர். 
8. ஞானச்சித்தர்,
9. மௌனச் சித்தர், 
10. பாம்பாட்டிச் சித்தர், 
11. கல்லுளி சித்தர்,
12, கஞ்சமலைச் சித்தர். 
13. நொண்டிச் சித்தர், 
14. விளையாட்டுச் சித்தர், 
15. பிரமானந்த சித்தர், 
16. கடுவெளிச் சித்தர், 
17.சங்கிலிச் சித்தர், 
18. திரிகோணச்சித்தர்.

இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர், 
2. பதஞ்சலியார், 
3. துர்வாசர், 
4. ஊர்வசி, 
5. சூதமுனி,
6. வரரிஷி, 
7. வேதமுனி, 
8. கஞ்சமுனி, 
9. வியாசர், 
10. கௌதமர் 

இது இன்னொரு பட்டியல். பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணானந்தர், 6. போகர், 7. சட்டைநாதர், 8. பதஞ்சலியார், 9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி, 12, அழுகணி, 13. பாம்பாட்டி, 14. இடைக்காட்டுச் சித்தர், 15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர், 22. நந்தீசர், 23, அகப்பேய், 24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31. காகபுசுண்டர், 32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.

இப்படி சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. ஆயினும் பதினெட்டுப் புராணங்கள், பதினெட்டுப் படிகள், பதினெண் குடிமை, பதினெண் பாஷை என்று வரையறை செய்தது போல் சித்தர்களையும் பதினெண் சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப் புலவர்கள் செய்த நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் சித்தர் பாடல்களும் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.

JOIN US :::══► http://www.facebook.com/NatureIsGodIyarkaiyeKatavul1. திருமூலர்,
2. இராமதேவர்,
3. கும்பமுனி,
4. இடைக்காடர்,
5. தன்வந்திரி,
6. வான்மீகி,
7. கமலமுனி,
8. போகநாதர்,
9. குதம்பைச் சித்தர்,
10. மச்சமுனி,
11. கொங்கணர்,
12, பதஞ்சலி,
13. நந்திதேவர்,
14. போதகுரு,
15. பாம்பாட்டிச் சித்தர்.
16. சட்டைமுனி,
17. சுந்தரானந்த தேவர்,
18. கோரக்கர்.

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்,
2. அழுகணிச் சித்தர்,
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்,
4. சதோகநாதர்,
5. இடைக்காட்டுச் சித்தர்,
6. குதம்பைச் சித்தர்,
7. புண்ணாக்குச் சித்தர்.
8. ஞானச்சித்தர்,
9. மௌனச் சித்தர்,
10. பாம்பாட்டிச் சித்தர்,
11. கல்லுளி சித்தர்,
12, கஞ்சமலைச் சித்தர்.
13. நொண்டிச் சித்தர்,
14. விளையாட்டுச் சித்தர்,
15. பிரமானந்த சித்தர்,
16. கடுவெளிச் சித்தர்,
17.சங்கிலிச் சித்தர்,
18. திரிகோணச்சித்தர்.

இது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்,
2. பதஞ்சலியார்,
3. துர்வாசர்,
4. ஊர்வசி,
5. சூதமுனி,
6. வரரிஷி,
7. வேதமுனி,
8. கஞ்சமுனி,
9. வியாசர்,
10. கௌதமர்

இது இன்னொரு பட்டியல். பெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணானந்தர், 6. போகர், 7. சட்டைநாதர், 8. பதஞ்சலியார், 9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி, 12, அழுகணி, 13. பாம்பாட்டி, 14. இடைக்காட்டுச் சித்தர், 15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர், 22. நந்தீசர், 23, அகப்பேய், 24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31. காகபுசுண்டர், 32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.

இப்படி சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. ஆயினும் பதினெட்டுப் புராணங்கள், பதினெட்டுப் படிகள், பதினெண் குடிமை, பதினெண் பாஷை என்று வரையறை செய்தது போல் சித்தர்களையும் பதினெண் சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப் புலவர்கள் செய்த நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் சித்தர் பாடல்களும் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.

Via NatureIsGodI

ஆதித்தமிழன் எந்த ஒரு செயலையும் ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று செய்ததில்லை...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:09 | Best Blogger Tips

செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான். ஆனால், அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின்னால் ‘கடவுள்’ பெயரை சொல்லிவிட்டு சென்றது தான், ஒருவேளை அவன் கடவுள் பெயரை கூறினால

ாவது பயந்து கொண்டு அந்த விடயங்களை கடைபிடிப்பார்கள் என்ற தொலை நோக்கு பார்வையாக கூட இருந்திருக்கலாம். ஆனால், பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக்கெல்லாம் கோயில் எழுப்பி, தான் பெரிதாக நினைத்த கடவுளையே கூட இழிவு படுத்துவர் என்று.இன்றைக்கு பகுத்தறிவு என்ற பெயரில், நம் முன்னோர்களின் பல அறிய கண்டுபிடுப்புகளை நாளுக்கு நாள் நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும்,கோவிலுக்கு செல்ல கூடாது,சாமியும் இல்லை, பூதமும் இல்லை, என்ற வாதம் தான் இன்றைய பகுத்தறிவின் வெளிப்பாடாக இருக்கின்றது. அது உண்மையா, பொய்யா என்பது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது.ஆனால் நாளடைவில் அந்த விடயம் பலரால்,பலவிதமாக திரித்து இன்று நம் அடையாளங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்பதே உண்மை.
கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு? உதாரணத்திற்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் நல்லது, என்பதற்கு பின்னால் கடவுளின் பெயரை கூறியதால் இன்று நாத்திகர்கள் அதை செய்வது இல்லை, ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல், முழு நிலவு அன்று நிலாவிலிருந்து வரும் ஒளிக்கதிரில் உள்ள ஒருவித ” பாசிடிவ் எனர்ஜி ” நாம் சுற்றிவரும் மலையின் மீது பட்டு,நம் உடலில் இறங்கினால் நல்லது என அதையே தான் இன்று விஞ்ஜானம் கூறுகின்றது.

இன்றைக்கு இருப்பதை போன்று கேளிக்கைகளுக்கு திரை அரங்குகளோ, கல்வி கற்பதற்கு ‘ஏரிகளின்’ மேல் கல்லூரிகளோ, மருத்துவமனைகளோ அவர்கள் கட்டிவைக்க வில்லை, இவை அனைத்தும் நடந்தது ஓரே இடத்தில், ஒரு இடத்திற்கு சென்றால் அனைத்தையும் கற்க முடியும் என்றால் ( களவி உட்பட ) அது அன்று கோவில்களாக மட்டுமே இருந்துள்ளது, அது ஒரு பல்கலைக்கழமாகவே இருந்துள்ளது. அதனால் தான் கோவில் சிற்பங்களில் களவி சம்மந்தப்பட்ட சிற்ப்பங்கள் கூட காண நேர்கின்றது. கோவில்களில் கேளிக்கைகளுக்கு நாட்டியங்கள் அரங்கேறியுள்ளது, கல்வி கற்க பாட சாலைகள் அமைக்கப்பட்டது.

சில கோவில்கள் மருத்துவமனைகளாகவும் செயல்பட்டுள்ளது, உதாரணத்திற்கு திருச்சி, திருவைகுண்டத்தை கூட கூறலாம். அங்கே ஆயிரம் வருடங்களுக்கு முன்னே, வெறும் மூலிகைகளை வைத்து “…….” சர்ஜரி வரை நடைபெற்றுள்ளது. இன்றைக்கு இருப்பதை போன்று அன்று அனைவரும் மாடி வீடுகளில் தங்கி இருக்க வாய்ப்பில்லை. ஆக பெரு வெள்ளம் வரும் போது, பெரும் பாறைகளால், பெரும் உழைப்பிற்கு மத்தியில் உருவான இந்த கோயில்களில் மட்டுமே மக்கள் தஞ்சம் அடைந்திருக்க கூடும், கோவில் தூண்களில் தான் நம் கலைகளை வளர்த்துள்ளோம், அங்கே ஒவ்வொரு சிற்பமும் சொல்லும் கதை தான், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள். ஆயிரம் வருடங்களுக்கு மேல் நம்முடம் பயணிக்கும் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் சாதாரமாக தேர்வு செய்து கட்டி இருக்க வாய்புகள் இருக்காது.அந்த இடமானது பூமத்திய ரேகை கோட்பாடுகளின் படி அறிவியல் அமைப்புகளுடன் மட்டுமே கட்டப்பட்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் நிலப் பதிவு அலுவலகம் அன்று கிடையாது,கோவில் கல்வெட்டுகள் முழுவதும் தான் அது பதியப்பட்டுள்ளது,அந்த கல்வெட்டுகளில் தான் தமிழனின் வரலாறு புதைந்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில் கட்டியது ‘ராஜ ராஜன்’ என்று ஹார்ட் டிஸ்கிலோ, பென்ட்ரைவிலோ பதியப்படவில்லை. அனைத்தும் கோயில் கல்வெட்டுகள் மூலமே நமக்கு தெரிய வருகின்றது. அப்படி இருக்க பகுத்தறிவின் பெயரில் இப்பேற்பட்ட நம் வரலாற்று சின்னங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிப்பது எந்த விதத்தில் நியாயம்?! என்று யோசித்து பாருங்கள்! வரலாற்று அடையாளங்கள் வேண்டாம், மொழி மட்டும் போதும் என்பவர்கள், மரங்கள் வேண்டாம் ஆக்சிஜன் மட்டும் போதும் என்று முரண்பாடான கருத்தை கூறுவதைப் போன்றது என்பதை உணரவேண்டும்.

ஐயாயிரம் வருடத்திற்கு முன்பே தமிழன் சித்த வைத்தியத்தில் கூறிய மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான்,வீட்டு முற்றத்தில் தமிழன் வளர்த்த வேப்பமரத்திற்கு வெளிநாட்டுக்காரன் உரிமை வாங்கி வைத்துள்ளான், இன்னும் எதை எல்லாம் தொலைக்கைப் போகிறோம்? மொழி கலப்படமாகிவிட்டது, உடை மேற்கத்திய உடை, கலப்படம் இல்லாமல் பழமையுடன் காட்சியளிப்பதும், நாம் பழமையானவர்கள் என்று ஆதாரத்துடன் நிரூபிப்பதும், இந்த கோயில்களை வைத்து மட்டுமே என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்? அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்லவிருக்கிறோம்?

தொலைத்தது வரை போதும், மீதம் உள்ளவயேனும் காப்பாற்றுவோம். வரலாற்று சின்னங்களான நம் கோவில்களை காப்போம்.அந்த சிலைகளில் கூறப்பட்டுள்ள செய்திகளை உலகறிய செய்வோம்! தமிழை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வோம்.



Via Nature is God - இயற்கையே கடவுள்

அக்கு பஞ்சர் அறிவோமா

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:07 | Best Blogger Tips

பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.

நான் ஒரு முறை ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறு கைக்குழந்தையை தூக்கி வந்திருந்தார்கள்.அப்போது அங்கு கிராமத்து மருத்துவச்சி அங்கே வந்திருந்தார்.

அந்தக் குழந்தைக்கு குடல் ஏறியிருக்கிறது என்று குழந்தையின் தாய் கூறினாள்.அந்த மருத்துவச்சியும் குழந்தையின் முழங்கையின் மேல் பகுதியில் கையின் பின் பக்கத்தை பிடித்தவுடன் குழந்தை வீரிட்டு அழுதது.

ஆமாம் குடல் ஏறியிருக்கிறது. இனிமேல் குழந்தையைப் யாரையும் பார்த்து தூக்கச் சொல்லுங்கள்.சிறு குழந்தைகளைவிட்டுத் தூக்கச் சொல்லாதீர்கள் என்றார் மருத்துவச்சி.

நான் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.அந்த மருத்துவச்சியைப் பார்த்துக் கேட்டேன்.குடல் ஏறி இருந்தால் வயிற்றையல்லவா பார்க்க வேண்டும், நீங்கள் மேற்கையின் புறத்தை அழுத்தி பார்த்துவிட்டு குடல் ஏறி இருக்கிறது என்று கூறுகிறீர்களே! என்று கேட்டேன்.

அதற்கு அந்த பெண்மணி கூறினார்கள்,இது போன்றே நாங்கள் பல தலைமுறையாக வைத்தியம் பார்த்து வருகிறோம்.நாங்கள் சொன்ன சொல் தப்பினது இல்லை,மிகச் சரியாக இருக்கும் என்றார்கள்.அதன் பிறகு அந்தக் குழந்தைக்கு வயிற்றின் மேலிருந்து கீழ்ப்புறமாக மட்டும் விளக்கெண்ணெய் தடவி மேலிருந்து கீழ்ப்புறமாக மட்டும் சீவினாற் போல அழுத்தி தேய்த்து தடவி விட்டவுடன் குழந்தை குணமானது.பிறகு அதே இடத்தை தொட்டால் அழவில்லை. குழந்தை குணமானதைப் புரிந்து கொண்டோம்.

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின் அக்கு பஞ்சர் கற்றுக் கொண்ட பின் இதற்கான விளக்கம் கிடைத்தது.


பெருங் குடல் சக்தி நாளம்

சிறு குடல் சக்தி நாளம்

படத்தைப் பாருங்கள்.சிறு குடல் மற்றும் பெருங்குடல் சக்தி நாளங்கள் கையின் மேல் புறம் மற்றும் கீழ்ப் புறம் ஓடுவதைக் கவனியுங்கள்.

அக்கு பஞ்சரில் அஹ் - ஷி புள்ளி (AH - SHI POINT) எனக் கூறுவார்கள்.அதாவது அந்தப் புள்ளியைத் தொட்டாலோ அழுத்தினாலோ அஹ் வலிக்கிறதே என்ற வேதனையொலி வாயிலிருந்து கிளம்பும்.இதே சிறு குழந்தையாக இருந்தால் வீரிட்டு அழும்.

சிறுகுடல் மற்றும் பெருங்குடலுக்கான அஹ் - ஷி புள்ளிகள் (AH - SHI POINT) இந்த இடத்தில் நிலை கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

மேலும் பெருவிரலுக்கும் மற்ற நான்கு விரல்களுக்கும் இடைப்பட்ட வர்மப் பகுதியை கவளி வர்மம் என்று கூறுவார்கள்.வெற்றிலைக் கவளி என்று கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.கைக்கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரல்களுக்குமிடையே வைத்திருக்க முடியும் அளவு வெற்றிலையே ஒரு கவளி வெற்றிலை என்பார்கள்.

இந்த கவளி வர்மம் எல்லா வர்மங்களை இளக்கும் பகுதியாகும்.இது அக்குபஞ்சரில் பெருங்குடல் சக்தி நாளத்தின் நாலாவது புள்ளியாகும்(HOKU).அதை LI 4 என்பார்கள்.அதற்கு உடம்பில் உள்ள கெட்டதை நீக்கும் பெரிய புள்ளி(GREAT ELIMINATOR) என்றழைக்கிறார்கள்.


பெருங்குடல் சக்தி நாளத்தின் நாலாவது புள்ளி(HOKU)
LI 4 (LARGE INTESTINE 4)
மேற்கண்ட புள்ளியில் சிகிச்சை அளிப்பதன் மூலம் கீழ்க்கண்ட வியாதிகளைக் குணப்படுத்தலாம்.இது உடலிலுள்ள முக்கியமான 6 தொலைவுப் புள்ளிகளில் ஒன்று.
(1)HEADACHE தலைவலி(2)TOOTHACHE பல்வலி 3)MIGRAINEஒற்றைத் தலைவலி(4)TRIGEMINAL NEURALGIA கடும் நரம்பு வலியால் ஏற்படுவது (5)PAIN AND PARALYSIS OF THE UPPER EXTREMITY இடுப்பின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகள் மற்றும் வாதம். (6)RHINITIS(7)PHARYNGITIS(8)FACIAL PARALYSIS முகவாதம்(9)GOUTமுன் கழுத்து கழலை(10)PAINFUL CONDITIONS OF EYE கண்வலி (11)HYPERHYDROSIS (12) MANDIPULAR ARTHRITIS(13)LARYNGITIS(14)BRONCHITIS சுவாச காசம்(இரைப்பிருமல்)

IF YOU WANT TO USE SINGLE POINT IN THE BODY FOR PAIN LI 4 IS THE POINT.IT IS USEFUL IN ALL TYPES OF ARTHRITIS.IT TONES UP THE ENTIRE LARGE INTESTINE FUNCTION.IT ACTS AS AN ELIMINATOR OF PHYSICAL AND MENTAL TOXINS OR TENSIONS. IT IS USED FOR PAIN AND PARALYSIS OF UPPER LIMB.
IT IS ALSO USEFUL IN
(1)ALL KIND OF HEADACHE ARISING OUT OF FAULTY ELIMINATION
(2) INFLAMMATION OF MOUTH, EYES, NOSE, SINUSES, AND TEETH.
(3) FEVER WITH THIRST AND FEVER WITH SHIVERING.
(4) IN SKIN CONDITIONS LIKE BOILS AND ACNE.
(5) PAIN RELIEF POINT IN SURGICAL ANESTHESIA.
(6) IT IS USED AS A MAJOR ANALGESIC POINT IN PAINLESS CHILDBIRTH.

சித்த வைத்தியத்தில் எந்த வியாதிக்கும் முதலில் நாடி பார்க்கும் போது கால் பங்கு வியாதி குணமாகும் .அந்த வியாதியும் வைத்தியன் உடம்பில் சேராமல் இருக்க வேண்டுமானால்,நாடி பார்க்கும் கையில் பட்டுத் துணி போர்த்தே பார்க்க வேண்டும்.பார்த்த பின் நாடி பார்த்த கையை தரையில் மூன்று முறை தட்ட வேண்டும்.அப்போதுதான் அந்த வியாதி வன்மை (NEGATIVENESS OF THE PATIENTS BODY) வைத்தியரைத் தாக்காது பூமிக்குப் போய்விடும் (GROUNDED) என்று அகத்தியர் நாடி சாஸ்திரம் கூறுகிறது.

மலக் குடலான பெருங்குடலைச் சுத்தப்படுத்த பெரு மலம் போக்கிகளைக் (PURGATIVES) கொடுத்து மீதி வியாதியில் அரைப் பங்கை குணம் ஆக்குகிறார்கள் சித்த வைத்தியர்கள்.பின் மீதி உள்ள கால் பங்கு வியாதியைத்தான் சித்த வைத்தியர் மருந்தைக் கொடுத்து குணம் அளிக்கிறார்கள்.


Via  Nature is God - இயற்கையே கடவுள்

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:03 | Best Blogger Tips

தேங்காய் என்பது முக்கண் முதல்வன் எனக் கருதப்படும் சிவனாகவே கருதப்படுகிறது.எல்லா பூஜைகளிலும் இது முதன்மைப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இந்த தேங்காயை தெங்கம்பழம் எனவே பழந்தமிழர் அழைக்கிறார்கள்.''இதையே பழமொழி நானூறில் நாய் பெற்ற தெங்கம் பழம்'' என்ற பழமொழியோடு அழைக்கிறார்கள்.

இந்தத் தேங்காய் வளர்ந்து பலன் கொடுக்க ஐந்தாண்டுகள் ஆகிறது.அது போல குழந்தையும் பள்ளிக்கு அனுப்ப ஐந்தாண்டுகள் ஆகிறது.தென்னையையும் பிள்ளை என்று அழைக்கிறார்கள்.பிள்ளையும் தென்னையும் ஒன்று என்பதற்காகவே தென்னம் பிள்ளை என்றழைக்கிறார்கள்!

தேங்காயையும்,வாழைப் பழமும்தான் நாம் கடவுளுக்கு பிரசாதமாய்ப் படைக்கிறார்கள்.இந்தத் தேங்காயும் மிகவும் உயர்வான இடத்தில் காய்க்கிறது.தரைக்குக் கீழ் விளையும் உணவுப் பொருட்கள் அகந்த மூலம் எனப்படும். தரைக்கு மேல் விளையும் உணவுப் பொருட்கள் கந்த மூலம் எனப்படும்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் பன்றிக்கானது.பன்றியே அகங்கார வடிவே.அதையே லிங்கோற்பவர் வடிவத்தில் உள்ள சிவனின் ஒளியுருவத்தின் கீழ் அடியைத் தொட்டதினால் சிவனே அவரது அகங்காரம் நீக்கி பன்றியுருவான விஷ்ணுவைத் தூக்கி எடுக்கிறார்.

தரைக்குக் கீழ் விளையும் பொருட்கள் அகங்காரத்தை உண்டாக்கும் என்பதால் அகந்த மூலம் என்றும்,தரைக்கு மேல் விளையும் பொருட்களில் உயரமான தென்னையில் விளையும் தேங்காய்,மற்றும் வாழையின் பழம் இரண்டும் கந்த மூலத்தில் சிறந்தது.

திரு மூ.ஆ.அப்பன் அவரது 30 தாவது வயதில் கர்ம வியாதியான குஷ்டத்தில் அவதிப்பட்டு தன் அண்ணனான திரு மு.ராமகிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்க அவர் இயற்கை உணவினை உண்டால் குணம் பெறலாம் என்று கூறினார்.முன்பெல்லாம் பெரு வியாதியஸ்தர் உள்ளே வரக் கூடாது என்று உணவு விடுதிகளிலும் பொது இடங்களிலும் எழுதி வைத்திருப்பார்கள்(பெரு வியாதி என்பது குஷ்டம்,ஷயரோகம்,புற்று நோய்,பெண்வியாதி(V.D.R.L)).அவ்வளவு கொடுமையானது இவ்வியாதி.

திரு மு.ஆ.அப்பன் அவர்கள் எல்லா இயற்கை உணவையும் பரீட்சித்து பார்த்துவிட்டார்.ஆனாலும் வியாதியின் வேகம் குறைந்தது,ஆனால் அதிகம் குறையவில்லை.கைகளில் நகம் காணாமல் போய்விட்டது.விரலும் காணாமல் போக ஆரம்பித்தது.பின் அவர் சிந்தித்தார்.இறைவனுக்கு படைப்பது எது தேங்காயும்,வாழைப் பழமும்,அதையே நாமும் உண்டாலென்று எண்ணி அதையே உண்ண ஆரம்பித்தார்.தற்போது அவர் குணமானது போல் பல பெரு வியாதியஸ்தர்களை பலரை குணமாக்கி வருகிறார்.பல குஷ்ட ரோகிகளையும்,எய்ட்ஸ் நோயாளிகளையும்,ஷயரோகம்(T.,புற்று நோய்(CANCER),பெண்ணால் வரும் வியாதியான மேகக் கிரந்தி(V.D.R.L),செம்மேகக் கிரந்தி(A.I.D.S) நோயாளர்களையும் சாப்பிடும் உணவாலேயே குணப்படுத்தி வருகிறார்.

திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.இவ்வரிய நோய் நீக்கும் உணவுக் கலையையும், நோய் வருமுன் காக்கும் நோயணுகா விதியைத் தெரிந்து கற்க ஓர் அரிய வாய்ப்பு இதோ கீழே காத்திருக்கிறது.வரும் ஜனவரி மாதம் 21-01-2011,22-01-2011,23-01-2011 ஆகிய தேதிகளில் இயற்கை நல வாழ்வு முகாம் குலசேகரபட்டணத்தில் நடக்க இருக்கிறது.பங்கு பெறுங்கள் பயனடையுங்கள்.


மேலும் ஒரு முக்கிய விடயம்.காயகல்பத்திற்கு ஒரு போதுண்பதினால் மீதி இரு வேளைகளிலும் தேங்காயும் பழமும் உண்டால் அதன் மகிமைதான் என்ன.

இதோ எனது நீரோட்ட குருநாதரான திரு பால் வாசனின் பிரதம சீடரான திரு ஆசீர் ஜோசப் அவர்கள் நீரோட்டம் பற்றிய சில விடயங்களை உணர்த்தினார்.அதில் ஒன்று தேங்காயை வைத்து நீரோட்டம் பார்ப்பது.கையில் தேங்காயை வைத்துக் கொண்டு நீரோட்டம் ஓடும் இடத்தில் கால் வைக்க
தேங்காய் எழுந்து நிற்கிறது.கீழுள்ள படங்களைப் பாருங்கள்.

கையில் படுத்திருக்கும் தேங்காய்

நீரோட்டமுள்ள இடத்தை கால் பெரு விரலால் தொட்டவுடன் எழுந்து நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள்.

மேலும் நீரோட்டமுள்ள இடத்தில் தேங்காயை படுக்கை வசமாக வைத்து அதன் மேல் தரையில் கால் படாமல் ஏறி உட்கார தேங்காய் நம்மையும் சேர்த்து சுற்றுகிறது.தேங்காயின் மகத்துவம்தான் என்னென்று சொல்வது.அவ்வளவு உயிரோட்டம் உள்ள தேங்காயை உண்டால் நம் உயிரின் ஓட்டம் எவ்வளவு முன்னேறும் யோசியுங்கள்.

கற்றிடுவோம் சாகாத கல்வி!!!


Via  Nature is God - இயற்கையே கடவுள்

தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார்....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:58 | Best Blogger Tips

தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார்....

தமிழ் இலக்கியங்களில் நான் அதிகம் படித்தது பக்தி இலக்கியங்கள் தான். அதிலும் அதிகமாக படித்தது சித்தர் பாடல்கள். அவற்றுள் நான் விரும்பி படித்தது பட்டினத்தார் பாடல்கள் தான். கடவுள் இருப்பு மறுப்பு என்பதை கடந்து தமிழர்கள் யாவரும் படிக்க வேண்டிய படைப்பு பட்டினத்தார் பாடல்கள். தமிழின் அருஞ்சுவை, தமிழர் பண்பாட்டின் சாரம், மனதின் மாய விளையாட்டுகள், மெய்யறிவின் திறனாய்வு என பன்முக கோணங்களில் பாடப்பெற்ற பாடல்கள் தான் பட்டினத்தாரின் ஒப்பற்ற படைப்புகள். எல்லாவற்றிக்கும் மேலாக தாயை நேசிக்கும் எவரும் படிக்க வேண்டியது, தாயை குறித்த பட்டினத்தாரின் உணர்வுகள் மற்றும் நெஞ்சை உள்ளிருந்து உருக்கும் அவரது பாடல்கள். 

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி. 

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

போன்ற பாடல்கள் நெகிழ்ச்சியின் உச்சகட்டம். மனிதன் கருவில் உருவாதல் முதல் பாடையில் சென்று முடிவில் சாம்பல் ஆகும் வரை வாழ்க்கையை அங்குல அங்குலமாக அளந்து பாடிய பாடல் வரிகள் நிச்சயம் படிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். சிந்திக்கத் தூண்டும். 

ஒரு கணப் பொழுதில் தனக்கு அறிவை ஊட்டி மறைந்த தனது புதல்வனின் இதயத்தை தைக்கும் வார்த்தைகள். 

'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்னும் வரிகள் தமிழர்களின் ஈடு இணையில்லா மெய்யியல் வாசகம். 

பகட்டான ஆரியப் பண்பாட்டினை, சடங்குகளை, நூல்களை சாடாமல் இல்லை பட்டினத்தார். தமிழர்களுக்கே உரிய அரிய சித்தர் ரகசியங்களை இவர் பாடல்கள் உள்ளடக்கி உள்ளது. 

சாதி மதம் கடந்து தமிழர் மெய்யியல் விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் பட்டினத்தார் பாடல்கள். இன்றும் தமிழர்கள் இறந்தால், சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்பவர் பாடும் பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் தான். ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பியல்புகளை விளக்கும் பாடல்கள். உடுக்க ஒரு உடைக் கோவணத்தோடு தமிழர் நிலப்பரப்பு முற்றிலும் தன் காலால் நடந்தே அளந்து முடித்து ஓய்ந்து முடிவில் திருவொற்றியூருக்கு வந்து நிலை கொண்டார் பட்டினத்து அடிகள். அவர் இறுதியில் அடக்கமான இடம் இன்றும் அங்கு இருக்கிறது. பல முறை அங்கு சென்று பட்டினத்தாரை நினைவு கூர்ந்துள்ளேன். அவரது பாடல்கள் என்றும் நினைவில் விட்டு நீங்காதவை. தமிழும், தமிழர் பண்பாடும் இவ்வுலகில் வாழும் வரை பட்டினத்தாரும் இணைந்தே வாழ்வார். தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மாமனிதர் பட்டினத்தார். 

யாருக்கும் அடங்காத வீரம், மண்டியிடாத மானம், சமரசம் இல்லா அறிவு போன்ற பண்புகளை தன்னகத்தே கொண்ட கருணையின் ஊற்றாக விளங்கிய பட்டினத்தாரை பற்றி ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

- இராஜ்குமார் பழனிசாமி 

JOIN US :::══► http://www.facebook.com/NatureIsGodIyarkaiyeKatavul
தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார்....

தமிழ் இலக்கியங்களில் நான் அதிகம் படித்தது பக்தி இலக்கியங்கள் தான். அதிலும் அதிகமாக படித்தது சித்தர் பாடல்கள். அவற்றுள் நான் விரும்பி படித்தது பட்டினத்தார் பாடல்கள் தான். கடவுள் இருப்பு மறுப்பு என்பதை கடந்து தமிழர்கள் யாவரும் படிக்க வேண்டிய படைப்பு பட்டினத்தார் பாடல்கள். தமிழின் அருஞ்சுவை, தமிழர் பண்பாட்டின் சாரம், மனதின் மாய விளையாட்டுகள், மெய்யறிவின் திறனாய்வு என பன்முக கோணங்களில் பாடப்பெற்ற பாடல்கள் தான் பட்டினத்தாரின் ஒப்பற்ற படைப்புகள். எல்லாவற்றிக்கும் மேலாக தாயை நேசிக்கும் எவரும் படிக்க வேண்டியது, தாயை குறித்த பட்டினத்தாரின் உணர்வுகள் மற்றும் நெஞ்சை உள்ளிருந்து உருக்கும் அவரது பாடல்கள்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்

போன்ற பாடல்கள் நெகிழ்ச்சியின் உச்சகட்டம். மனிதன் கருவில் உருவாதல் முதல் பாடையில் சென்று முடிவில் சாம்பல் ஆகும் வரை வாழ்க்கையை அங்குல அங்குலமாக அளந்து பாடிய பாடல் வரிகள் நிச்சயம் படிப்பவரை மெய்சிலிர்க்க வைக்கும். சிந்திக்கத் தூண்டும்.

ஒரு கணப் பொழுதில் தனக்கு அறிவை ஊட்டி மறைந்த தனது புதல்வனின் இதயத்தை தைக்கும் வார்த்தைகள்.

'காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே' என்னும் வரிகள் தமிழர்களின் ஈடு இணையில்லா மெய்யியல் வாசகம்.

பகட்டான ஆரியப் பண்பாட்டினை, சடங்குகளை, நூல்களை சாடாமல் இல்லை பட்டினத்தார். தமிழர்களுக்கே உரிய அரிய சித்தர் ரகசியங்களை இவர் பாடல்கள் உள்ளடக்கி உள்ளது.

சாதி மதம் கடந்து தமிழர் மெய்யியல் விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல் பட்டினத்தார் பாடல்கள். இன்றும் தமிழர்கள் இறந்தால், சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்பவர் பாடும் பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள் தான். ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பியல்புகளை விளக்கும் பாடல்கள். உடுக்க ஒரு உடைக் கோவணத்தோடு தமிழர் நிலப்பரப்பு முற்றிலும் தன் காலால் நடந்தே அளந்து முடித்து ஓய்ந்து முடிவில் திருவொற்றியூருக்கு வந்து நிலை கொண்டார் பட்டினத்து அடிகள். அவர் இறுதியில் அடக்கமான இடம் இன்றும் அங்கு இருக்கிறது. பல முறை அங்கு சென்று பட்டினத்தாரை நினைவு கூர்ந்துள்ளேன். அவரது பாடல்கள் என்றும் நினைவில் விட்டு நீங்காதவை. தமிழும், தமிழர் பண்பாடும் இவ்வுலகில் வாழும் வரை பட்டினத்தாரும் இணைந்தே வாழ்வார். தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத ஒரு மாமனிதர் பட்டினத்தார்.

யாருக்கும் அடங்காத வீரம், மண்டியிடாத மானம், சமரசம் இல்லா அறிவு போன்ற பண்புகளை தன்னகத்தே கொண்ட கருணையின் ஊற்றாக விளங்கிய பட்டினத்தாரை பற்றி ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.


- இராஜ்குமார் பழனிசாமி


Via Nature is God - இயற்கையே கடவுள்

Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:55 | Best Blogger Tips
Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு! ! ! !

சில நாட்களுக்கு முன் பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது.அவர் வைத்திருக்கும் மொபைல்க்குதேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில்சொன்னால ் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறுஎண் மாற்றி விட்டார் .

ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே என்னில் இருந்து பிரச்னை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால் ,SMS வருகிறது என குழம்பி போனார். தனது நண்பரிடம் என்ன செய்யலாம் என கேட்டார் . அவருக்காக அவருடையநண்பர்கள ் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

இவர் வழக்கமாக ரீ- சார்ஜ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை கொடுத்துவிட்டு E.C பண்ண சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான் இது.

இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள்

*முடிந்த வரை ரீ-சார்ஜ் கார்ட் வாங்கி ரீ –சார்ஜ் செய்யுங்கள்

*E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும் இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும்

*பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள்

*தெரியாத நபர்களிடம் நம்பர் தராதீர்கள்.உங்க ள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் கொடுக்ககூடாது என சொல்லுங்கள்

*தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் , அப்படி அனுப்பினால் அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள ்

*WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள், அடிகடி வந்தால் வீட்டில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையானஆண்களை பேச சொல்லுங்கள்

*பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள், நீங்கள்அனுப்பும ் செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது

*மொபைலை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM கார்டு மற்றும் Memory Card இரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும், இல்லைஎனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள்

முக்கிய பின்குறிப்பு : இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.

சில நாட்களுக்கு முன் பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது.அவர் வைத்திருக்கும் மொபைல்க்குதேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில்சொன்னால ் நீ இனி மொபைல் பயன்படுத்தாதே என சொல்லி விடுவார்கள் என பயந்து இவர் வேறுஎண் மாற்றி விட்டார் .

ஆனால் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே என்னில் இருந்து பிரச்னை.நம்பர் மாற்றியும் எப்படி இதுபோல கால் ,SMS வருகிறது என குழம்பி போனார். தனது நண்பரிடம் என்ன செய்யலாம் என கேட்டார் . அவருக்காக அவருடையநண்பர்கள ் துணையுடன் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

இவர் வழக்கமாக ரீ- சார்ஜ் செய்யும் இடத்தில் இவர் நம்பரை கொடுத்துவிட்டு E.C பண்ண சொல்லிவிட்டு போய் விடுவார் . இந்த நம்பரை வைத்து அங்கு உள்ள சிலர் செய்த செயல்தான் இது.

இதுபோல ஆபத்தில் நீங்கள் மாட்டாமல் இருக்க சில வழிமுறைகள்

*முடிந்த வரை ரீ-சார்ஜ் கார்ட் வாங்கி ரீ –சார்ஜ் செய்யுங்கள்

*E.C செய்யவேண்டிய நிலை வந்தால் முடிந்த வரை நன்றாக தெரிந்த கடையில் மட்டும் செய்யவும் இல்லை என்றால் உங்கள் சகோதரர்களை அல்லது ஆண் நண்பர்களை விட்டு செய்ய சொல்லவும்

*பேருந்தில் அல்லது கூட்டமாக உள்ள இடத்தில் சத்தமாக உங்கள் நம்பரை சொல்லாதிர்கள்

*தெரியாத நபர்களிடம் நம்பர் தராதீர்கள்.உங்க ள் அனுமதி இல்லாமல் உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பரை யாரிடமும் கொடுக்ககூடாது என சொல்லுங்கள்

*தவறான SMS வந்தால் யார் என கேட்டு பதில் அனுப்பாதிர்கள் , அப்படி அனுப்பினால் அதுமுலமாக உங்களிடம் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள ்

*WRONG CALL வந்தால் உடனடியான துண்டித்து விடுங்கள், அடிகடி வந்தால் வீட்டில் உள்ளவர்களை அல்லது உங்களுக்கு நம்பிக்கையானஆண்களை பேச சொல்லுங்கள்

*பேருந்தில் அமர்ந்து SMS அனுப்பினால் சுற்றுபுறம் பார்த்து அனுப்புங்கள், நீங்கள்அனுப்பும ் செய்தியை அடுத்தவர்கள் படிக்க வாய்ப்புள்ளது

*மொபைலை பழுது பார்க்க கொடுத்தால் அதில் உள்ள SIM கார்டு மற்றும் Memory Card இரண்டையும் கழட்டிவிட்டு கொடுக்கவும், இல்லைஎனில் நீங்கள் அழித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் திருப்ப எடுத்துவிடுவார்கள்

முக்கிய பின்குறிப்பு : இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.
 
Via  முக்கிய செய்திகள்

பாரதத்தின் பெருமை பாகம்-1

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:53 | Best Blogger Tips

Photo: பாரதத்தின் பெருமை பாகம்-1
பாரதத்தின் கல்வி வளர்ச்சி:

உலகில் கல்விக்கு முதன்முதலில் முக்கியதுவம் கொடுத்த நாடு பாரதம் தான் உலகின் முதல் பல்கலைகழமான தட்சசீல பல்கலைகழகம் இது கிமு 700ல் நிறுவபட்டது ஆகும் இதன் பின்னர் நாளந்த பல்கலைகழகம் கிமு 400ல் நிறுவபட்டது

மருத்துவம்

முலிகை மருத்துவம்
இந்தியாவில் தோன்றிய மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.அதில் வட பாரதத்தில் ஆயுர்வேதமும் தென் பாரதத்தில் சித்த மருத்துவமும் சிறந்து விளங்கியது.இதில் கூறிய முலிகைகளை ஆராய்ச்சி செய்தால் இன்னும் 1000 வருடங்களுக்கு பிறகு வரகூடிய வியாதிகளுக்கு கூட மருந்து கிடைக்கும்
போதிதர்மர்மூலம் சித்த மருத்துவம்,ராமதேவர் மூலம் யுனானி மருத்துவம் வெளிநாடுகளுக்கு சென்றது
உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் சுஸ்ருதர் 

மருத்தில்ல மருத்துவம்
 யோக மற்றும் வர்மக்கலை மூலமாக மருந்தில்ல மருத்துவத்தையும்,நரம்பியல் தத்துவம் மூலமாக நோய்களை குணப்படுத்தினர்

பரிணாம வளர்ச்சி 
 பரிணாம வளர்ச்சியே தசாவதாரமாக நம் புராணங்கள் கூறுகின்றன
உடல் பரிணாம வளர்ச்சி

மச்ச அவதாரம் -நீர் வாழ்வன
கூர்ம அவதாரம் - நீரிலும் நிலத்திலும்-1
வராக அவதாரம் - நீரிலும் நிலத்திலும்-2
நரசிம்ம அவதாரம் -விலங்கும் மனிதனும் 
வாமன அவதாரம் -குள்ள மனிதன்

மனத்தின் பரிணாம வளர்ச்சி(தற்போதைய மனிதனிலைக்கு பிறகு)

பரசுராம அவதாரம் -  கோபம் கொண்ட மனிதன்
ராம அவதாரம் - ஆளுமை கொண்ட மனிதன் 
கிருஸ்ண அவதாரம் -ஆளுமையும் ஆன்முகமும் கொண்ட மனிதன்
புத்த அவதாரம் -ஆன்மிகம் உச்சம் அடைந்த மனிதன்

முற்றுபெரும் பரிணாம வளர்ச்சி 

கல்கி அவதாரம் -முழுமையான வீரம்,ஆன்மிகம்,தெய்விகனிலை கொண்ட மனிதன்(சூப்பர்சோனிக் மேன்)
தொடரும் பாகம்-2
பாரதத்தின் கல்வி வளர்ச்சி:
உலகில் கல்விக்கு முதன்முதலில் முக்கியதுவம் கொடுத்த நாடு பாரதம் தான் உலகின் முதல் பல்கலைகழமான தட்சசீல பல்கலைகழகம் இது கிமு 700ல் நிறுவபட்டது ஆகும் இதன் பின்னர் நாளந்த பல்கலைகழகம் கிமு 400ல் நிறுவபட்டது

மருத்துவம்

முலிகை மருத்துவம்
இந்தியாவில் தோன்றிய மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.அதில் வட பாரதத்தில் ஆயுர்வேதமும் தென் பாரதத்தில் சித்த மருத்துவமும் சிறந்து விளங்கியது.இதில் கூறிய முலிகைகளை ஆராய்ச்சி செய்தால் இன்னும் 1000 வருடங்களுக்கு பிறகு வரகூடிய வியாதிகளுக்கு கூட மருந்து கிடைக்கும்
போதிதர்மர்மூலம் சித்த மருத்துவம்,ராமதேவர் மூலம் யுனானி மருத்துவம் வெளிநாடுகளுக்கு சென்றது
உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர் சுஸ்ருதர்

மருத்தில்ல மருத்துவம்
யோக மற்றும் வர்மக்கலை மூலமாக மருந்தில்ல மருத்துவத்தையும்,நரம்பியல் தத்துவம் மூலமாக நோய்களை குணப்படுத்தினர்

பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சியே தசாவதாரமாக நம் புராணங்கள் கூறுகின்றன
உடல் பரிணாம வளர்ச்சி

மச்ச அவதாரம் -நீர் வாழ்வன
கூர்ம அவதாரம் - நீரிலும் நிலத்திலும்-1
வராக அவதாரம் - நீரிலும் நிலத்திலும்-2
நரசிம்ம அவதாரம் -விலங்கும் மனிதனும்
வாமன அவதாரம் -குள்ள மனிதன்

மனத்தின் பரிணாம வளர்ச்சி(தற்போதைய மனிதனிலைக்கு பிறகு)

பரசுராம அவதாரம் - கோபம் கொண்ட மனிதன்
ராம அவதாரம் - ஆளுமை கொண்ட மனிதன்
கிருஸ்ண அவதாரம் -ஆளுமையும் ஆன்முகமும் கொண்ட மனிதன்
புத்த அவதாரம் -ஆன்மிகம் உச்சம் அடைந்த மனிதன்

முற்றுபெரும் பரிணாம வளர்ச்சி

கல்கி அவதாரம் -முழுமையான வீரம்,ஆன்மிகம்,தெய்விகனிலை கொண்ட மனிதன்(சூப்பர்சோனிக் மேன்)

தொடரும் பாகம்-2
 
Via நானே பிரம்மம்
 

மூளையைப்பற்றி ஒரு சில அற்புதமான தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:51 | Best Blogger Tips

Photo: மூளையைப்பற்றி ஒரு சில அற்புதமான தகவல்:

• நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..) 

• ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( …நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.)
 
• தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.

• இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.

• மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.

• குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம் (….அதான் எங்களுக்கு தெரியுமெ ….புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? )

• அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும்.(…யாருக்கு தெரியும் ! கனவு காண்பவர்களைத் தான் கேக்கோணும்…)

• உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.

• நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.

இன்னொமொறு முக்கியமானத்தகவல்:

• அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.

• நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..)

• ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( …நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.)

• தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.

• இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.

• மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.

• குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம் (….அதான் எங்களுக்கு தெரியுமெ ….புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? )

• அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும்.(…யாருக்கு தெரியும் ! கனவு காண்பவர்களைத் தான் கேக்கோணும்…)

• உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.

• நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.

இன்னொமொறு முக்கியமானத்தகவல்:

• அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.
 
Via உலக தமிழ் மக்கள் இயக்க


தாஜ்மஹால் சிவன் கோவிலா? மும்தாஜ் சமாதியா? சர்ச்சையை கிளப்பும் புதிய ஆதார திகில் உண்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:50 | Best Blogger Tips

Photo: தாஜ்மஹால் சிவன் கோவிலா? மும்தாஜ் சமாதியா? சர்ச்சையை கிளப்பும் புதிய ஆதார திகில் உண்மைகள்:
◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கி ன்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோ வில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
தாஜ்மஹால் விசயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.
ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டார் என்றும் ஷாஜகான் மன்ன ரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகை யை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள் ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.
இச்சிவன் கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசி ரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்ன ர்கள் மற்றும் இராணிகள் ஆகி யோரின் உடல்களை வழக்கமா க புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூ ன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்க ள் புகைக்கப்பட்ட இடங்கள் இதற்கு சான்று என்கிறார் பேராசிரி யர்.
தாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கா னிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்துமு ம் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்தி ரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத் தி இருக்க வேண்டும்? என்றுபேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.
தாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தி ல் புனையப்பட்ட பொய்தான் ஷாஜகான் –மும்தாஜ் காதல் கதை என்கின்றார். நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்ப ன் டேட்டிங் முறைப்படிதாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங் களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணி யான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி வியந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ் மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இருக்கவில் லை.
ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணி யான பீட்டர் மண்டி ஆக்ரா வந்தி ருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற் றி வியந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதா ரங்களாக முன்வைக்கி ன்றார் பேராசிரியர் ஓக்.
தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட் டால் பாதுகாப்பு என்று சொ ல்லப்படுகின்றது, தாஜ் மஹாலினுள் தலையில்லாத சிவ ன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார்.
பேராசிரியர் இவ்வளவு விபரங்களை யும் தாஜ் மஹால்–உண்மையான வர லாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலானஅரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசி ரியர் ஒக்...ஒருமுறை அறிந்ததும் அறியாததும் பக்கத்திற்கு வந்து பாருங்கள்.....
.I am sure u will [̲̅L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S̲̅] [̲̅P̲̅][̲̅A̲̅][̲̅G̲̅][̲̅E̲̅]

கலக்கலான தகவலுக்கு (அறிந்ததும் அறியாததும் பக்கம்) ....
https://www.facebook.com/Arinthathum.arijathathum
நான் உங்களிடமிருந்து ஒரு shareஐ மட்டுமே எதிர்பார்க்கிறேன் தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்.
காதல் மனைவி மும்தாஜ் நினைவாக மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாஜ் மஹால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கி ன்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோ வில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
தாஜ்மஹால் விசயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ளது, தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேஜோ மஹாலயா என்கிற பெயரால் தாஜ் மஹால் அழைக்கப் பெற்றது என்கிறார்.
ஜெய்ப்பூர் ராஜா ஜெய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக் கொண்டார் என்றும் ஷாஜகான் மன்ன ரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்ஷா நாமாவில் ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகை யை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடுத்தமை குறித்து குறிப்புக்கள் உள் ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.
இச்சிவன் கோவிலை கையளிக்க சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய் சிங் ராஜாவுக்கு அனுப்பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசி ரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்ன ர்கள் மற்றும் இராணிகள் ஆகி யோரின் உடல்களை வழக்கமா க புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், ஹுமாயூ ன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர் ஜங் ஆகியோரின் உடல்க ள் புகைக்கப்பட்ட இடங்கள் இதற்கு சான்று என்கிறார் பேராசிரி யர்.
தாஜ் மஹால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கா னிஸ்தான் முதல் அல்ஜீரியா வரையான எந்தவொரு இஸ்லாமிய நாட்டிலும் மஹால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பது. மும்தாஜ் நினைவாக ஷாஜகான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாஜ் என்கிற பெயரில் இருந்துமு ம் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாஜ் என்பதை மாத்தி ரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத் தி இருக்க வேண்டும்? என்றுபேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.
தாஜ் மஹாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தி ல் புனையப்பட்ட பொய்தான் ஷாஜகான் –மும்தாஜ் காதல் கதை என்கின்றார். நியூயார்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் மாதிரிகளை எடுத்து கார்ப ன் டேட்டிங் முறைப்படிதாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். மில்லரின் கருத்துப்படி தாஜ் மஹாலின் வயது 300 வருடங் களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணி யான அல்பேர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி வியந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாஜ் மஹால் கட்டப்படுகின்றமை சம்பந்தமாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இருக்கவில் லை.
ஆனால் மும்தாஜ் இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணி யான பீட்டர் மண்டி ஆக்ரா வந்தி ருந்தார். இவரது குறிப்புக்களில் தாஜ் மஹாலின் கலை நயம் பற் றி வியந்து எழுதப்பட்டு இருக்கின்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாஜ் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாஜ் மஹால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதா ரங்களாக முன்வைக்கி ன்றார் பேராசிரியர் ஓக்.
தாஜ் மஹாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட் டால் பாதுகாப்பு என்று சொ ல்லப்படுகின்றது, தாஜ் மஹாலினுள் தலையில்லாத சிவ ன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாஜ் மஹாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார்.
பேராசிரியர் இவ்வளவு விபரங்களை யும் தாஜ் மஹால்–உண்மையான வர லாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலானஅரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
உண்மை இனியாவது வெளி வர வேண்டுமானால் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாஜ் மஹாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசி ரியர் ஒக்...
 
Via  அறிந்ததும் அறியாததும்


உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:40 | Best Blogger Tips

உப்புக்காற்றை சுவாசித்தாலே ரத்தக் கொதிப்பு...  
ஜோத்பூரில் பாலைவன மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சார்பில் சமீபத்தில் உப்பளத் தொழிலாளர்களிடையே ரத்த அழுத்தம் குறித்த ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. உப்பளங்களில் உப்புத் துகள்களை மிகவும் நெருக்கமாக சுவாசிக்கும் தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்த நோய் மிகுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

உப்பளங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினர் உப்புத்துகள்களை நெருக்கமாக நுகரும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். மற்றொரு பிரிவினர் உப்புத் துகள்களை சற்றே தூரத்தில் கையாளும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். முதல் பிரிவினருக்கு சில நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் ரத்த அழுத்தம் மிகுந்து இருப்பது கண்டறியப்பட்டது.

இதுவரை மிகுந்த ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உப்பை உணவில் குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றது. ஆனால் சுவாச மண்டலத்தில் செல்லும் உப்புக்காற்று ரத்தத்துடன் கலந்து மிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும் என்பது நவீன விஷயமாகும். இது தவிர பாதிக்கப்பட்ட உப்பைத் தொழிலாளர்களுக்கு இருதயம் மற்றம் இரத்தக் குழாய் நோய்கள் (கார்டியோ வாஸ்குலார் நோய்கள்- cardio vascular) மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

எனவே உப்பளத் தொழிலாளர்கள் முகமூடிகள் அணிந்தோ, பிளாஸ்டிக்கினால் ஆன கண்ணாடிகளை பயன்படுத்தியோ உப்புத்துகள்கள் நிறைந்த காற்றை சுவாசிப்பதை குறைத்துக் கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது. உப்பளத் தொழிலாளர்களுக்கு முதல் கட்ட ரத்தக் கொதிப்பு நிலை தோன்றிய உடனேயே விரைவிலேயே இரண்டாம் கட்ட நிலை தோன்றுவதற்கான அறிகுறிகள் தோன்றிவிடுகின்றன. எனவே உப்பளத் தொழிலாளர்கள் முறையான ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.
ஜோத்பூரில் பாலைவன மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சார்பில் சமீபத்தில் உப்பளத் தொழிலாளர்களிடையே ரத்த அழுத்தம் குறித்த ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. உப்பளங்களில் உப்புத் துகள்களை மிகவும் நெருக்கமாக சுவாசிக்கும் தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்த நோய் மிகுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

உப்பளங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினர் உப்புத்துகள்களை நெருக்கமாக நுகரும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். மற்றொரு பிரிவினர் உப்புத் துகள்களை சற்றே தூரத்தில் கையாளும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். முதல் பிரிவினருக்கு சில நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் ரத்த அழுத்தம் மிகுந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இதுவரை மிகுந்த ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உப்பை உணவில் குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றது. ஆனால் சுவாச மண்டலத்தில் செல்லும் உப்புக்காற்று ரத்தத்துடன் கலந்து மிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும் என்பது நவீன விஷயமாகும். இது தவிர பாதிக்கப்பட்ட உப்பைத் தொழிலாளர்களுக்கு இருதயம் மற்றம் இரத்தக் குழாய் நோய்கள் (கார்டியோ வாஸ்குலார் நோய்கள்- cardio vascular) மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

எனவே உப்பளத் தொழிலாளர்கள் முகமூடிகள் அணிந்தோ, பிளாஸ்டிக்கினால் ஆன கண்ணாடிகளை பயன்படுத்தியோ உப்புத்துகள்கள் நிறைந்த காற்றை சுவாசிப்பதை குறைத்துக் கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது. உப்பளத் தொழிலாளர்களுக்கு முதல் கட்ட ரத்தக் கொதிப்பு நிலை தோன்றிய உடனேயே விரைவிலேயே இரண்டாம் கட்ட நிலை தோன்றுவதற்கான அறிகுறிகள் தோன்றிவிடுகின்றன. எனவே உப்பளத் தொழிலாளர்கள் முறையான ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 
 Via-நலம், நலம் அறிய ஆவல்.

பொது அறிவு வினா-- விடைகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:39 | Best Blogger Tips

பொது அறிவு வினா-- விடைகள் :-

 உலக அழகிப்போட்டி எந்த ஆண்டில் துவக்கப்பட்டது?
 -1951

 காமரூபம் என்று அழைக்கப்பட்ட நாடு எது?
 -அஸ்ஸாம்

 யசோதர காவியம் எந்த மத காப்பியமாகும்?
 -சமண மதம்

 மழைக்கடவுள் யார்?
 -இந்திரன்
 வர்ஜின் என்பவர் யார்?
 -ரோமானியப்பேரரசின் அரசவைக்கவிஞர்

 ஏதென்ஸில் மக்களாட்சியை நிறுவியவர் யார்?
 -பெரிக்ளி

 உலகின் மிகப்பெரிய ‘காமா’தொலைநோக்கி உள்ள
 இடம் எது?
 - மாஸ்கோ


 இந்தியாவில் மிக அதிக நீளமான நதி எது?
 - கங்கை


 இந்தியாவின் மிகப் பெரிய மசூதி உள்ள இடம் எது?
 -புதுடெல்லி (ஜிம்மா மஜூதி)


 மிகப்பெரிய கோள் எனப்படுவது எது?
 - ஜூபிடர்


 மிக விரைவாக பறக்ககூடிய பறவை எது?
 - சுவிப்ட்


 மிக அதிக அளவில் கல்வியறிவு பெற்ற பெண்கள்
 உள்ள மாநிலம் எது?
 - கேரளா

 மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவில் எங்குள்ளது?
 -கல்கத்தா


 இந்தியாவில் மிக நீளமான அணை எது?
 -ஹிராகுட்


 தமிழ் நாட்டிலுள்ள மிகப் பெரிய நீர்பாசன அணைக்கட்டு எது?
 -மேட்டூர் அணை


 ‘ஆர்யபட்டா’ விண்வெளியில் ஏவப்பட்டது எப்போது?

 -1975 .....B-)
உலக அழகிப்போட்டி எந்த ஆண்டில் துவக்கப்பட்டது?
-1951

காமரூபம் என்று அழைக்கப்பட்ட நாடு எது?
-அஸ்ஸாம்

யசோதர காவியம் எந்த மத காப்பியமாகும்?
-சமண மதம்

மழைக்கடவுள் யார்?
-இந்திரன்
வர்ஜின் என்பவர் யார்?
-ரோமானியப்பேரரசின் அரசவைக்கவிஞர்

ஏதென்ஸில் மக்களாட்சியை நிறுவியவர் யார்?
-பெரிக்ளி

உலகின் மிகப்பெரிய ‘காமா’தொலைநோக்கி உள்ள
இடம் எது?
- மாஸ்கோ


இந்தியாவில் மிக அதிக நீளமான நதி எது?
- கங்கை


இந்தியாவின் மிகப் பெரிய மசூதி உள்ள இடம் எது?
-புதுடெல்லி (ஜிம்மா மஜூதி)


மிகப்பெரிய கோள் எனப்படுவது எது?
- ஜூபிடர்


மிக விரைவாக பறக்ககூடிய பறவை எது?
- சுவிப்ட்


மிக அதிக அளவில் கல்வியறிவு பெற்ற பெண்கள்
உள்ள மாநிலம் எது?
- கேரளா

மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவில் எங்குள்ளது?
-கல்கத்தா


இந்தியாவில் மிக நீளமான அணை எது?
-ஹிராகுட்


தமிழ் நாட்டிலுள்ள மிகப் பெரிய நீர்பாசன அணைக்கட்டு எது?
-மேட்டூர் அணை


‘ஆர்யபட்டா’ விண்வெளியில் ஏவப்பட்டது எப்போது?

-1975 .....B-)
Via  சுபா ஆனந்தி

பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலிக்கு தீர்வு!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:36 | Best Blogger Tips
பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலிக்கு தீர்வு! ! ! !

பெரும்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர் வரும் முதுகு வலி பிரச்சனையால் அதிகமாகவே அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிசேரியன்
பிரசவம் நடந்தவர்களுக்கு உண்டாகும் முதுகு வலி மிகவும்கொடுமையாக இருக்கும். ஆனால் இத்தகைய முதுகு வலியைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்....

* சிசேரியன் பிரசவம் சிலருக்கு நடப்பதால், அவர்கள் குறைந்தது 3 மாதம் படுக்கையிலேயே இருக்க நேரிடும். அப்படி இருப்பதால், அதுஉடலில் பல்வேறு வலிகளை உண்டாக்கும். மேலும் முதுகிற்கு இந்த மாதிரியான சூழலில் அதிக வேலை இருக்காததால், திடீரென்று வேலை செய்ய ஆரம்பிக்கும் போது முதுகு வலியை உண்டாக்கும்.

* பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது சரியான நிலையில் உட்காரமாட்டார்கள். இதனாலேயே பிரசவத்திற்கு பின் முதுகு வலி ஏற்படுகிறது.

* கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தையின் முழு சுமையை முதுகு தான் தாங்கியுள்ளது. அதிலும் இறுதி மாதத்தில் அதிகப்படியான எடை இருப்பதால், நீண்ட நாட்கள் முகுது அந்த சுமையை சுமந்து, பிரசவத்திற்கு பின் கடுமையான முதுகு வலியை உண்டாக்குகிறது.

* கர்ப்பத்தின் போது அதிகமான உடல் எடை இருப்பதால், அதனை உடலின் கால் மற்றும் முதுகு பகுதி தான் அதிகம் சுமக்கிறது. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது 10 கிலோ உடல் எடை அதிகரிக்கும். இதனை சுமப்பதாலேயே பிரசவத்திற்கு பின் கடுமையான முதுகு வலியானது ஏற்படுகிறது.

முதுகு வலியைப் போக்குவதற்கான வழிகள்:

* பிரசவத்திற்கு பின் செய்யக்கூடிய உடல் மசாஜை மேற்கொண்டால், முதுகு வலியை குணமாக்கலாம். இதனை வாரத்திற்கு இரு முறை செய்து வருவது நல்லது.

* பிரசவம் முடிந்த பின்னர், பெண்கள் மீண்டும் பழைய நிலைக்கு,அதாவது சரியான எடையில் இருக்க வேண்டும். அதற்கு முறையான டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றவேண்டும். இதனால் உடல் எடை குறைந்து, முதுகிற்கு அதிகப்படியான சுமையை சுமக்க வேண்டியிருக்காத ு.

* பிரசவத்திற்கு பின், முதுகு மற்றும் தசைகளை வலுவாக்குவதற்கு சிறந்த வழி யோகா செய்வது தான். எனவே யோகா வகுப்பில் சேர்ந்து, உடலை சிக்கென்றும், முதுகு வலியிலிருந்தும் விடைபெறுங்கள்.
பெரும்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர் வரும் முதுகு வலி பிரச்சனையால் அதிகமாகவே அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிசேரியன்
பிரசவம் நடந்தவர்களுக்கு உண்டாகும் முதுகு வலி மிகவும்கொடுமையாக இருக்கும். ஆனால் இத்தகைய முதுகு வலியைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்....

* சிசேரியன் பிரசவம் சிலருக்கு நடப்பதால், அவர்கள் குறைந்தது 3 மாதம் படுக்கையிலேயே இருக்க நேரிடும். அப்படி இருப்பதால், அதுஉடலில் பல்வேறு வலிகளை உண்டாக்கும். மேலும் முதுகிற்கு இந்த மாதிரியான சூழலில் அதிக வேலை இருக்காததால், திடீரென்று வேலை செய்ய ஆரம்பிக்கும் போது முதுகு வலியை உண்டாக்கும்.

* பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது சரியான நிலையில் உட்காரமாட்டார்கள். இதனாலேயே பிரசவத்திற்கு பின் முதுகு வலி ஏற்படுகிறது.

* கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தையின் முழு சுமையை முதுகு தான் தாங்கியுள்ளது. அதிலும் இறுதி மாதத்தில் அதிகப்படியான எடை இருப்பதால், நீண்ட நாட்கள் முகுது அந்த சுமையை சுமந்து, பிரசவத்திற்கு பின் கடுமையான முதுகு வலியை உண்டாக்குகிறது.

* கர்ப்பத்தின் போது அதிகமான உடல் எடை இருப்பதால், அதனை உடலின் கால் மற்றும் முதுகு பகுதி தான் அதிகம் சுமக்கிறது. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது 10 கிலோ உடல் எடை அதிகரிக்கும். இதனை சுமப்பதாலேயே பிரசவத்திற்கு பின் கடுமையான முதுகு வலியானது ஏற்படுகிறது.

முதுகு வலியைப் போக்குவதற்கான வழிகள்:

* பிரசவத்திற்கு பின் செய்யக்கூடிய உடல் மசாஜை மேற்கொண்டால், முதுகு வலியை குணமாக்கலாம். இதனை வாரத்திற்கு இரு முறை செய்து வருவது நல்லது.

* பிரசவம் முடிந்த பின்னர், பெண்கள் மீண்டும் பழைய நிலைக்கு,அதாவது சரியான எடையில் இருக்க வேண்டும். அதற்கு முறையான டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றவேண்டும். இதனால் உடல் எடை குறைந்து, முதுகிற்கு அதிகப்படியான சுமையை சுமக்க வேண்டியிருக்காத ு.

* பிரசவத்திற்கு பின், முதுகு மற்றும் தசைகளை வலுவாக்குவதற்கு சிறந்த வழி யோகா செய்வது தான். எனவே யோகா வகுப்பில் சேர்ந்து, உடலை சிக்கென்றும், முதுகு வலியிலிருந்தும் விடைபெறுங்கள்.
 
Via  முக்கிய செய்திகள்.com

உங்களுக்குத் தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:36 | Best Blogger Tips
உங்களுக்குத் தெரியுமா?

இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது!

பொ.பி கக ஆம் (கி.பி 11ஆம்) நூற்றாண்டில், சோழப்பேரரசு காலத்தில், “சீயம்” என்ற பெயரிலிருந்த தாய்லாந்து, சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதன் எச்சமே இந்த பாவையும் தேவாரமும் பாடும் வழக்கம்!

மன்னரின் அரச குரு வாமதேவ முனிவர், தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறிய பிராமணர் பரம்பரையில் வந்தவர். முன்பு ஓரளவு கிரந்த வரிவடிவத்தை அறிந்திருந்த இவர்கள், இன்று தமிழையோ கிரந்தத்தையோ எழுத - படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், திருவெம்பாவைப் பாடல்களை தமது “தாய்” மொழியின் வரிவடிவத்தில் எழுதிவைத்து பாடுகிறார்கள்.

முடிசூட்டுவிழாவில் மாத்திரமன்றி, இன்றும் வருடாந்தம் டிசம்பரில் (நம் மார்கழி மாதம்) நிகழும் அரச ஊஞ்சல் விழாவிலும் தேவாரம் - பாவைப்பாடல்கள் அவர்களால் பாடப்படுவதுண்டு!

மேலதிக விளக்கங்களுக்கு பின்வரும் காணொளியைப் பாருங்கள்! :
https://www.youtube.com/watch?v=ExGjxXY49Gg 

(சோழர் போற்றியது சைவத்தையே! எனினும் வைணவத்தையும் பேதமின்றி வளர்த்தார்கள். ஆனால், காணொளியை உற்றுப்பாருங்கள்! 1:20 இற்குப் பின் காட்டப்படும் கற்பொறிப்பில் குறிப்பிட்ட இந்திய சமயத்தை "சைவம்" அல்லது "வைணவம்", ஏன், "இந்து" என்றுகூடக் காட்டாமல் “பிராம்மணியம்” (Brahmanism) என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பது நெருடலாக இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்து சீயத்திற்கு, சோழர் காலத்தில், “பிராம்மணியம்” என்று ஏதும் மதம் பரப்பப்பட்டிருக்கிறதா, என்ன? இது யாரையும் புண்படுத்த அல்ல; சற்று சிந்தித்துப் பாருங்கள்!)

இது தஞ்சை ஆய்வாளர் திரு. கோ. கண்ணன் அவர்களது காணொளி:
https://www.youtube.com/watch?v=5IYV_YoTrHk
https://www.youtube.com/watch?v=qAX_y-mFQho

முதற்காணொளியில் காட்டியபடி, கடந்தவருடம் ஈழத்து சைவத்தமிழ் அறிஞரான மறவன்புலவு சச்சிதாந்தன் அவர்கள், கிரந்தம், தமிழ், தாய், வரிவடிவங்களில் திருவெம்பாவையை அச்சிட்டு, ஆங்கில மொழிபெயர்ப்புடன் அவர்களுக்கு வழங்கியிருந்தார். போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரிய பணி!

இது, சச்சிதானந்தன் அவர்கள் தமிழகத்திற்கு வழங்கும் செய்தி!:

“தமிழ்நாட்டுத் தொடர்புகளைத் தேடுகிறார்கள். வேர்களைத் தேடுகிறார்கள். ஆகம அறிவைத் தேடுகிறார்கள். குறைகளைக் களைந்து முறைகளைப் பேண விழைகிறார்கள். தமிழ்நாட்டுக்கு ஆர்வம் உண்டா? அவர்களது உறவுகளைப் பேண விழைவு உண்டா? உடனே தொலைபேசியில் அழையுங்கள் . 0061 815526646 தவத்திரு புராணசிறீயுடன் பேசுங்கள். காலை வேளைகளில் அழைத்தால் பேசலாம். உங்கள் நண்பர்களையும் பேசச் சொல்க. உறவுகளை மீட்டெடுங்கள். நன்றி”

JOIN US :::══► http://www.facebook.com/NatureIsGodIyarkaiyeKatavul


இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது!

பொ.பி கக ஆம் (கி.பி
11ஆம்) நூற்றாண்டில், சோழப்பேரரசு காலத்தில், “சீயம்” என்ற பெயரிலிருந்த தாய்லாந்து, சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதன் எச்சமே இந்த பாவையும் தேவாரமும் பாடும் வழக்கம்!

மன்னரின் அரச குரு வாமதேவ முனிவர், தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறிய பிராமணர் பரம்பரையில் வந்தவர். முன்பு ஓரளவு கிரந்த வரிவடிவத்தை அறிந்திருந்த இவர்கள், இன்று தமிழையோ கிரந்தத்தையோ எழுத - படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், திருவெம்பாவைப் பாடல்களை தமது “தாய்” மொழியின் வரிவடிவத்தில் எழுதிவைத்து பாடுகிறார்கள்.

முடிசூட்டுவிழாவில் மாத்திரமன்றி, இன்றும் வருடாந்தம் டிசம்பரில் (நம் மார்கழி மாதம்) நிகழும் அரச ஊஞ்சல் விழாவிலும் தேவாரம் - பாவைப்பாடல்கள் அவர்களால் பாடப்படுவதுண்டு!

மேலதிக விளக்கங்களுக்கு பின்வரும் காணொளியைப் பாருங்கள்! :
https://www.youtube.com/watch?v=ExGjxXY49Gg

(சோழர் போற்றியது சைவத்தையே! எனினும் வைணவத்தையும் பேதமின்றி வளர்த்தார்கள். ஆனால், காணொளியை உற்றுப்பாருங்கள்! 1:20 இற்குப் பின் காட்டப்படும் கற்பொறிப்பில் குறிப்பிட்ட இந்திய சமயத்தை "சைவம்" அல்லது "வைணவம்", ஏன், "இந்து" என்றுகூடக் காட்டாமல் “பிராம்மணியம்” (Brahmanism) என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பது நெருடலாக இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்து சீயத்திற்கு, சோழர் காலத்தில், “பிராம்மணியம்” என்று ஏதும் மதம் பரப்பப்பட்டிருக்கிறதா, என்ன? இது யாரையும் புண்படுத்த அல்ல; சற்று சிந்தித்துப் பாருங்கள்!)

இது தஞ்சை ஆய்வாளர் திரு. கோ. கண்ணன் அவர்களது காணொளி:
https://www.youtube.com/watch?v=5IYV_YoTrHk
https://www.youtube.com/watch?v=qAX_y-mFQho

முதற்காணொளியில் காட்டியபடி, கடந்தவருடம் ஈழத்து சைவத்தமிழ் அறிஞரான மறவன்புலவு சச்சிதாந்தன் அவர்கள், கிரந்தம், தமிழ், தாய், வரிவடிவங்களில் திருவெம்பாவையை அச்சிட்டு, ஆங்கில மொழிபெயர்ப்புடன் அவர்களுக்கு வழங்கியிருந்தார். போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரிய பணி!

இது, சச்சிதானந்தன் அவர்கள் தமிழகத்திற்கு வழங்கும் செய்தி!:

“தமிழ்நாட்டுத் தொடர்புகளைத் தேடுகிறார்கள். வேர்களைத் தேடுகிறார்கள். ஆகம அறிவைத் தேடுகிறார்கள். குறைகளைக் களைந்து முறைகளைப் பேண விழைகிறார்கள். தமிழ்நாட்டுக்கு ஆர்வம் உண்டா? அவர்களது உறவுகளைப் பேண விழைவு உண்டா? உடனே தொலைபேசியில் அழையுங்கள் . 0061 815526646 தவத்திரு புராணசிறீயுடன் பேசுங்கள். காலை வேளைகளில் அழைத்தால் பேசலாம். உங்கள் நண்பர்களையும் பேசச் சொல்க. உறவுகளை மீட்டெடுங்கள். நன்றி”


Via இயற்கையே கடவுள்
 

நீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:28 | Best Blogger Tips
Photo: நீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள்:-

தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது. 

உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

பாகற்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.


வெந்தயக் கீரை

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.


வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.


லெட்யூஸ் (Lettuce)

இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.


காலிஃப்ளவர்

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.


பூசணிக்காய்

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.


பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்


தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

பாகற்காய்


நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.


வெந்தயக் கீரை

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.


வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.


லெட்யூஸ் (Lettuce)

இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.


காலிஃப்ளவர்

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.


பூசணிக்காய்


அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.


பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்
 
Via  இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்