முக்குத்தி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:32 | Best Blogger Tips
நாம் அறிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்
------------------------------------------------------------------

http://www.tamilcnn.org/wp-content/uploads/2012/09/mukkuththi1.gif பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

*மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு.

*ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.




 
நன்றி  FB பொதுஅறிவு  

பொது அறிவு ! 23

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:24 | Best Blogger Tips
http://i71.servimg.com/u/f71/17/93/42/39/610.jpg
*பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

*.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

*.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

*.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

*.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்


*.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.

*.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

*.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.

*.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

*. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

*.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.

*.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.


*.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

*.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

*.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).

*.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).

*.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.

*.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.


*.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.

*.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.

*.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.

*.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

*.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.

*.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.


*தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)

*முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.

*தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு

*பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.

*சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

*பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
 
 
 


 

நன்றி  FB பொதுஅறிவு  

பொது அறிவு ! 24 - குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:24 | Best Blogger Tips
http://www.thinakaran.lk/Vaaramanjari/2012/08/26/d-1-1.jpg
நாற்குணங்கள் எவை?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு

நாற்படைகள் எவை?
காலால்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை

ஐம்புலன்கள் எவை?
பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல்

ஐம்பொறிகள் எவை?
கண், காது, வாய், மூக்கு, மெய்

ஐம்பூதங்கள் எவை?
காற்று, மழை, அக்கினி, ப10மி, ஆகாயம்

ஐம்பெருங்காப்பியங்கள் எவை?
மணிமேகலை, குணடலகேசி, சிலப்பதிகாரம், வளையாபதி, சீவகசிந்தாமணி.

ஐந்திணைகள் எவை?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

ஐந்தொழில்கள் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்

ஐந்தெழுத்து(பஞ்சாட்சர) மந்திரம் என்ன?
நமசிவாய

 
நன்றி  FB பொதுஅறிவு  

கண்டுபிடித்தவர் யார்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:21 | Best Blogger Tips

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTK8wcx8ZtXU_QakiU2zug4MVRboxJY9sKKHmoNQHbVbPrLFPLnGvknRtdmavyBYpxS21KQjXDXwFrIvdaAZJwjhtpHm2VEnOyjpsN58BIKg1jLi6kEsE4-VKXN3iq3MqcFGi_sbUznY7o/s1600/%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2585%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg
குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.

அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.

கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.

ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.

பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.

ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898

பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.

நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.

யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.

அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.

நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.

ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.


விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903

திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.

டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)

கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)

மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)

சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)

லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.


செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.

மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.

கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.

ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.

மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.

அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.

அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.

புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)


  
 
நன்றி  FB பொதுஅறிவு  

வரலாற்றின் இணையற்ற நாயகன் ஆபிரகாம் லிங்கன்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:14 | Best Blogger Tips
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtYEwgiKpS2bPec3t5PecMmbigebC-ilHVygIf7v6IrBnIA7GPYcyFaFgkJFvTdWYyTlkZIfQac-qBESoZMFizHLGHXAv-Kpy7RzPguk-EdDlaRfVRat2BsK302_-sb5OWRFO-z1IHdoXP/s1600/318003_544094322281071_953977814_n.jpg வீட்டின் வறுமையால் படிக்க மிகவும் கடினப்பட்ட இவர், கடன் வாங்கி புத்தகங்களைப் படித்தார். அப்பாவிடம் இருந்து நேர்மையைக் கற்றிருந்தார். எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்.

வழக்கறிஞர் தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதை தன் கொள்கையாக அவர் எப்பொழுதும் கொள்ளவில்லை. ரொம்பவும் அமைதியான இவரின் மனைவியுடன் உறவில் கொஞ்சம் கசப்பிருந்தது; ஒரு நாள் ஹாயாக அவர் சுடு சூப்பை முகத்தில் ஊற்ற, துடைத்த விட்டு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

தொடர்ந்து பல தோல்விகளை வாழ்க்கையில் சந்தித்த இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது ஆட்சிக்கு வந்தால் அடிமை முறையை முற்றிலும் நீக்குவதாக உறுதி தந்தார்.

ஒரு சிறுமியின் கடிதத்தை படித்து, அதில் ஒல்லியான முகவாட்டம் கொண்ட அவர், தாடி வளர்த்துக் கொண்டால் பெண்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற கருத்தை, நன்றி சொல்லி அப்படியே செய்தார்.

ஜனாதிபதி ஆனதும் ஓர் உறுப்பினர், ‘‘லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!’’ என நக்கலாக சொல்ல, ‘‘அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும்’’ என்றார் அமைதியாக.

வென்றதற்கு பின் கறுப்பின மக்களை விலங்குகளை விட கேவலமாக நடத்திக் கொன்று குவித்து சுரண்டிக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தார். கொதித்து எழுந்த தெற்கு மாகாணங்கள் அமெரிக்காவை விட்டு விலகி போர் தொடுத்தன. போர்களங்களில் தன் பிள்ளைகளை இழந்தார்; நாடே தத்தளித்தது. அப்பொழுது எல்லா கறுப்பின மக்களும் இனி அடிமைகள் இல்லை என அறிவிப்பு வெளியிட தெற்கு மாகணங்களில் இருந்த கறுப்பின மக்களும் இவருக்கு ஆதரவாக போரில் குதிக்க நாடு ஒன்றுபட்டது.

கெட்டிஸ்பர்க் உரையில் தான் ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது என விளக்கம் தந்தார்; தேர்தல் வந்தது மீண்டும் வென்றார்.

ஆப்ரகாம் லிங்கனை ஜான் பூத் எனும் நாடக கலைஞன் நாடகம் பார்த்தபொழுது சுட்டுக்கொன்றான். அவரின் மரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்னமே அவருக்கு கனவாக வந்திருந்தது. மீளா தூக்கத்தில் ஆழ்ந்தார் அடிமைகளை ரட்சிக்க வந்த அந்தத் தலைவன்.

‘‘நான் வெல்வதைவிட உண்மையாக இருக்கவே வேண்டும்; நான் மாபெரும் வெற்றிகளை பெறுவதைவிட என் அக வெளிச்சதின்படியே வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால். அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன்’’ என்றவர் ஆபிரகாம் லிங்கன்.



 
நன்றி  FB பொதுஅறிவு  

பதினாறு செல்வங்கள் எவை எவை?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:13 | Best Blogger Tips

Temple images
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:-

பதினாறு செல்வங்கள்:

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் அறுதியிட்டு கூறினர். உண்மைதானே? என்ன நான் சொல்றது?




 
நன்றி  FB பொதுஅறிவு  

தெரிந்து கொள்ளுங்கள் - 3

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:10 | Best Blogger Tips
அதிக பணக்காரர்கள் கொண்ட முதல் 12 நாடுகள்:
======================================
1.அமெரிக்கா (422 பேர் )
2.சீனா (66)
3.ரஷ்யா (65)
4.ஜெர்மனி (57)
5.இந்தியா (55)
6.UK (30)
7.துருக்கி (28)
8.கனடா (24)
9.ஜப்பான் (22)
10.பிரேசில் (18)
11.இத்தாலி (13)
12.ஸ்பெயின் (13)


பணக்காரர்கள் முதல் 12 பேர்
(உலகஅளவில்)
==========================
வர்ரேன் பப்பெட் (United States)
கார்லோஸ் சலீம் ஹெலு (மெக்ஸிகோ)
பில் கேட்ஸ் (United States)
லக்ஷ்மி மிடல் (இந்தியா)
முகேஷ் அம்பானி (இந்தியா)
அனில் அம்பானி (இந்தியா)
இங்வர் கம்ப்ராத் (ஸ்வீடன்)
KP சிங் (இந்தியா)
ஒலேக் தேரிபச்க (ரஷ்யா)
கார்ல் அல்ப்றேச்ட் (ஜெர்மெனி)
லி கா-சிங் (Hong Kong)
ஷெல்டன் அடேல்சொன் (United States)


பரப்பளவில் முதல் 12 நாடுகள்:
==================================
1.ரஷ்யா
2.கனடா
3.அமெரிக்கா
4.சீனா
5.பிரேசில்
6.ஆஸ்திரேலியா
7.இந்தியா
8.அர்ஜென்டினா
9.கஜகஸ்தான்
10.சூடான்
11.அல்ஜீரியா
12.காங்கோ


மக்கள்தொகை முதல் 10 நாடுகள்:
===================================
01)சீனா
02)இந்தியா
03)அமெரிக்கா
04)இந்தோனேசியா
05)பிரேசில்
06)பாகிஸ்தான்
07)நைஜிரியா
08)பங்களாதேஷ்
09)ரஷ்யா
10)ஜப்பான்
11மெக்ஸிகோ
 
 




 
நன்றி  FB பொதுஅறிவு  
 

மாதங்களின் பெயர்க் காரணம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:08 | Best Blogger Tips
ஜனவரி: ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இந்த மாதம் அமைந்தது. இவருக்கு கடந்தகாலம், எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருந்தன.

பிப்ரவரி: ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச்: ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் மார்ஸ். ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும் இவரது பெயரால் தோன்றியது மார்ச்.

ஏப்ரல்:ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.

மே:உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவரது மகளே மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதம் மே.

ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப் பெயரால் வந்தது தான் ஜுன்.

ஜூலை:ஆரம்ப காலத்தில் இது ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 19ம் நூற்றாண்டு முதல் ஜுலை என்றானது.

ஆகஸ்ட்:ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இதை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என மாறியது.

செப்டம்பர்:மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர்.ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழையபெயரே நிலைத்து விட்டது.

அக்டோபர்:அக்ட்டோ என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.

நவம்பர்:நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் பெயர்மாற்றம் செய்யப்படவில்லை.

டிசம்பர்: டிசம் என்றால் பத்து பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப் பட்டது.
   
 
 
 
 நன்றி  FB பொதுஅறிவு  

பெயர் மாற்றப்பட்ட நாடுகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:08 | Best Blogger Tips

http://us.123rf.com/400wm/400/400/marketolya/marketolya1006/marketolya100600036/7144658-web-buttons-with-flags-isolated-on-white-name-of-the-country-as-the-name-of-the-layer-easy-to-change.jpg
1.டச்சு கயானா — சுரினாம்.
2.அப்பர் வோல்டா — புர்க்கினா பாஸோ
3.அபிசீனியா — எத்தியோப்பியா
4.கோல்டு கோஸ்ட் — கானா
5.பசுட்டோலாந்து — லெசதொ
6.தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா
7.வட ரொடீஷியா — ஜாம்பியா
8.தென் ரொடீஷியா — ஜிம்பாப்வே
9.டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா
10.கோட்டே டி ஐவோயர் — ஐவரி கோஸ்ட்
11.சாயிர் — காங்கோ
13.சோவியத்யூனியன் — ரஷ்யா
14.பர்மா — மியான்மர்
15.கிழக்கு பாக்கிஸ்தான் — பங்க்களாதேஷ்
16.சிலோன் — ஸ்ரீலங்கா
17.கம்பூச்சியா — கம்போடியா
18.பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்
19.மெஸமடோமியா — ஈராக்
20.சயாம் — தாய்லாந்து
21.பார்மோஸ — தைவான்
22.ஹாலந்து — நெதர்லாந்து
23.மலாவாய் — நியூசிலாந்து
24.மலகாஸி — மடகாஸ்கர்
25.பாலஸ்தீனம் — இஸ்ரேல்
26.டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா
27.சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய




 
நன்றி  FB பொதுஅறிவு  

யுகங்களின் பண்புகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:02 | Best Blogger Tips
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgrtlvs_my1tlC9PwEwZXsukBBE0U8GbfuTX-HuHDDsnmKBiqM9XoyPzLdFrGeUBimOBKL3lQftw1gyPdLazxJdlU6_wJXh4mA7pcdOIlo6WrK-SDx8ZyhIR2coazx8Imh_fKyfOmK3Hk/s1600/ganesha-vyasa-mahabharat.png
ஸநாதன தர்மப்படி யுகங்கள் (கால அளவு) நான்கு ஆகும். அவை கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் எனப்படும். இவைகள் வரிசைக்கிரமமாக ஒன்று முடிந்து ஒவ்வொன்றாக தோன்றும். இவை வேத கருத்துகள்.

யுகங்களின் பண்புகளை இங்கே பார்ப்போம்.

கிருதயுகம்
========

இறைவனை நேருக்குநேர் நிற்பது போல காணமுடியும். பேசமுடியும்.
புண்ணியம் செய்ய வாய்ப்பே இல்லை, ரொம்ப கஷ்டம். ஏனென்றால் எல்லாரும் நல்லவர்களாகவே இருப்பார்கள். தர்மம் செய்ய வேண்டும் எனில் அதைப்பெற்றுக் கொள்வோர்கள் கிடைப்பது மிகக்கடினம். சிறுபாவமும் பெரிய துன்பத்தைக் கொடுக்கும்.

திரேதாயுகம்
==========

இறைவனை கொஞ்சம் முயற்சி செய்தால் காணலாம். பேசலாம். மனிதர்களின் குணங்கள் 75 சதவிகிதம் நல்லவையாகவும் மீதி கெட்டவைகளாகவும் இருக்கும். தர்மம் பெற்றுக் கொள்வோர்களுக்கு அதை வாங்க உபதானங்கள் கொடுத்தால் தான் தர்மம் முழுமையடையும்.

துவாபரயுகம்
=========

இறைவனைக்காண கடும் முயற்சி செய்ய வேண்டும். காண்பது அரிது, கடும் முயற்சியால் உணர முடியும். மனிதர்களின் குணங்கள் பாதி நல்லவையாகவும் மீதி கெட்டவைகளாகவும் இருக்கும். பாவ புண்ணியங்கள் சரிசமமாக இருக்கும்.

கலியுகம்
=======

இறைவனை காண முடிவது சாத்தியமல்ல. ஆனால் புண்ணியம் செய்ய அதிக வாய்ப்பு. சிறு நல்ல செயலும் பெரிய புண்ணியத்தைக்கொடுக்கும். ஆனால் எல்லாச் செயலிலும் பாவம் புண்ணியம் சேர்ந்தே இருக்கும். இது தவிர்க்க இயலாதது. நல்லவர்களைக் காண்பது மிக அரிது. அவ்வாறுக் கண்டாலும் அவர்களிடம் ஒரு சில கெட்டவைகளும் இருக்கும்.
நாம் இப்போது கலியுகத்தில் வாழ்கிறோம்.



 
நன்றி  FB பொதுஅறிவு   

பொது அறிவு ! 21

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:02 | Best Blogger Tips

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.


*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.


*இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.

*. டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை இளவயதில் எடுத்தவர் டெண்டுல்கர்.

*. ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற கதாப்பாத்திரம் தோன்றி121 ஆண்டுகள்
ஆகின்றன.

*. 155 மில்லிமீட்டர் நீளமுள்ள அதி நவீன பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது.
இதன் பெயர் பீம் இடம் சென்னை ஆண்டு 1996.


* எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற பெயர் வந்தது.

*இந்தியாவில் 7092 இரயில் நிலையங்கள் உள்ளன.

*இந்தியாவிலேயே கல்கத்தாவில்மட்டும் சுரங்க ரயில் இயக்கப் படுகிறது.

*சென்னை நகரின் பரப்பளவு 231 ச.கி.மீ.

*ஆசியாக் கண்டத்தின் மிகப்பழமையான பத்திரிக்கை மும்பை சமாச்சார்.
 
 
 


 
நன்றி  FB பொதுஅறிவு