உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா? Use full for all must read it..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:38 | Best Blogger Tips
June 30 is the last date to replace your Debit/Credit card for FREE in India / உங்கள் டெபிட் கார்டை EMV சிப் கார்டாக மாற்றிவிட்டீர்களா?

டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் இல்லாத வாழ்கையை நினைச்சு பார்க்கவே முடியாத பல‌ தருணத்தில் டெபிட் கார்டில் நிறைய தில்லுமுல்லுக்கள் நடை பெறுகிறது. உதாரணத்திர்க்கு பெட்ரோல் பங்கில் கார்டு கொடுத்தால் அவன் உள்ளே போய் ஒரு தடவை நீங்கள் வாங்கின அமவுன்ட்டுக்கும் இன்னொரு தடவை கூடஒரு ஒரு 500 / 1000 ஸ்வைப் செய்தால் உங்களுக்கு சில நேரம் தெரியாமல் போகலாம். சிலர் அந்த நம்பரை வைத்து ஆன்லைன் பர்சேஸ் கூட செய்வதுண்டு. இதனை தடுக்க இப்போது ஒரு புது டெக்னாலையை ஆர் பி ஐ அறிமுகபடுத்தியிருக்கிறது அனைத்து வங்கிகளீலும். உங்கள் வங்கி உங்களுக்கு ஈ எம் வி "EMV-Europe Pay / Master / Visa " கார்டை அனுப்பியிருக்கிறதா என்று செக் செய்யுங்கள். அப்படி அனுப்பாவிடில் உடனே வங்கியை வழக்கம் போல நச்சரித்து வாங்கிவிடுங்கள் ஏன் என்றால் உங்கள் பழைய டெபிட் கார்டு 30 ஜூன் 2013 வரை தான் வேலை செய்யும். 1 ஜூலை முதல் இந்த ஈ எம் வி வகை டெபிட் கார்ட் இல்லையெனில் உங்கள் கார்ட் வேலிட் இல்லை. இதன் உபயோகம் என்ன?

வழக்கமான கார்டின் பின்புறம் மேக்னட்டிக் ஸ்டிரிப் இருக்கும் ஆனால் இந்த கார்டில் சிம் கார்டுக்கு இருப்பது போல ஒரு சிப் இடது புறத்தில் இருக்கும் இந்த் சிப் கார்டை நீங்கள் பெற்ற பிறகு ஸ்வைப் செய்தால் செல்லாது - கார்டை கீழே உள்ள ஒரு ஸ்லாட்டில் சொருக வேண்டும். அது பேங்கை கனெக்ட் செய்து உடனே பின் நம்பர் கேட்கும் அது ஏடி எம் பின் யாருக்கும் தெரியாமல் நீங்கள் சரியாக செலுத்திய பிறகு தான் அந்த டிரான்ஸாக்ஷன் வேலை செய்யும் இல்லையெனில் அந்த பர்சேஸ் முடியாது. அதனால் உங்கள் கார்டை வாங்கி உள்ளே செல்ல முடியாது உங்கள் காருக்கு வந்து இதை கொடுத்து பின்னை அமுக்க சொல்வார்கள் அது போல ரெஸ்டாரன்டில் கூட உங்கள் டேபிளுக்கு கொண்டு வந்து தான் டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும் அதனால் ஒரு ருபாயை கூட ஆட்டையை போட முடியாது. அதனால் பின் நம்பரை இனிமேல் மனப்பாடம் செய்வது அவசியம். அது போக பர்சேஸ் லிமிட் / பாஸ்போர்ட்டே இல்லாதவங்க இனிமேல் பாரின்ல உங்க கார்டை யூஸ் பண்ணீனாங்கன்னு ஷாக்காகற கவலை இனிமேல் இல்லவே இல்லை. இந்தியாக்கு ம்ட்டும் தான் டீஃபால்டாய் ஆனால் பேங்கை ரெக்வெஸ்ட் செய்யலாம் நான் ஃபாரின் போறேன் அதனால் ஆக்டிவேட் ப்ன்னுங்க என்று, இன்றே உங்கள் பாங்கை அனுகினால் தான் ஜூலை 1க்கு பிறகு உங்கள் கார்டை உபயோகிக்க முடியும் அதனால் உடனே உங்கள் கார்டை மாற்றூங்கள் - இது இலவச சேவை அதனால் பேங் சார்ஜ் செய்ய முடியாது சாமியோவ்.

RBI issued a notification to banks with a new set of security guidelines for credit and debit card transactions. Please replace your Debit/Credit cards to EMV - Europe Pay/Master.Visa compliant cards before June 2013. From July 1st this cards ONLY will be valid in India. This technology replaces the traditional swipe and you have to insert the card inside the reader and you have to authenticate the transaction every time by entering the pin number otherwise the transaction is not valid. So every transaction is with your concern. Besides this these are the facility added and replace NOW and it is FREE. 
All new cards issued to you will work only in India by default, unless you call your bank and ask them to enable international transactions on it
If your current card doesn’t have an EMV chip in it, then you will be issued a replacement cardby your bank with an EMV chip. This process will be faster if you’ve used your card internationally at least once till today
A limit will be imposed on your card for international transactions - the profiling for this will be done by your bank and will depend on things like how often you use your card and whether or not you pay your bills on time
You might have to enter a PIN to authorize transactions in offline stores even if you’re present there (this is already pretty common outside India)
Blocking of cards will be possible via SMS – in case of loss or theft

via Ravi Nag.
June 30 is the last date to replace your Debit/Credit card for FREE in India /

டெபிட் கார்ட், கிரடிட் கார்ட் இல்லாத வாழ்கையை நினைச்சு பார்க்கவே முடியாத பல‌ தருணத்தில் டெபிட் கார்டில் நிறைய தில்லுமுல்லுக்கள் நடை பெறுகிறது. உதாரணத்திர்க்கு பெட்ரோல் பங்கில் கார்டு கொடுத்தால் அவன் உள்ளே போய் ஒரு தடவை நீங்கள் வாங்கின அமவுன்ட்டுக்கும் இன்னொரு தடவை கூடஒரு ஒரு 500 / 1000 ஸ்வைப் செய்தால் உங்களுக்கு சில நேரம் தெரியாமல் போகலாம். சிலர் அந்த நம்பரை வைத்து ஆன்லைன் பர்சேஸ் கூட செய்வதுண்டு. இதனை தடுக்க இப்போது ஒரு புது டெக்னாலையை ஆர் பி ஐ அறிமுகபடுத்தியிருக்கிறது அனைத்து வங்கிகளீலும். உங்கள் வங்கி உங்களுக்கு ஈ எம் வி "EMV-Europe Pay / Master / Visa " கார்டை அனுப்பியிருக்கிறதா என்று செக் செய்யுங்கள். அப்படி அனுப்பாவிடில் உடனே வங்கியை வழக்கம் போல நச்சரித்து வாங்கிவிடுங்கள் ஏன் என்றால் உங்கள் பழைய டெபிட் கார்டு 30 ஜூன் 2013 வரை தான் வேலை செய்யும். 1 ஜூலை முதல் இந்த ஈ எம் வி வகை டெபிட் கார்ட் இல்லையெனில் உங்கள் கார்ட் வேலிட் இல்லை. இதன் உபயோகம் என்ன?

வழக்கமான கார்டின் பின்புறம் மேக்னட்டிக் ஸ்டிரிப் இருக்கும் ஆனால் இந்த கார்டில் சிம் கார்டுக்கு இருப்பது போல ஒரு சிப் இடது புறத்தில் இருக்கும் இந்த் சிப் கார்டை நீங்கள் பெற்ற பிறகு ஸ்வைப் செய்தால் செல்லாது - கார்டை கீழே உள்ள ஒரு ஸ்லாட்டில் சொருக வேண்டும். அது பேங்கை கனெக்ட் செய்து உடனே பின் நம்பர் கேட்கும் அது ஏடி எம் பின் யாருக்கும் தெரியாமல் நீங்கள் சரியாக செலுத்திய பிறகு தான் அந்த டிரான்ஸாக்ஷன் வேலை செய்யும் இல்லையெனில் அந்த பர்சேஸ் முடியாது. அதனால் உங்கள் கார்டை வாங்கி உள்ளே செல்ல முடியாது உங்கள் காருக்கு வந்து இதை கொடுத்து பின்னை அமுக்க சொல்வார்கள் அது போல ரெஸ்டாரன்டில் கூட உங்கள் டேபிளுக்கு கொண்டு வந்து தான் டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும் அதனால் ஒரு ருபாயை கூட ஆட்டையை போட முடியாது. அதனால் பின் நம்பரை இனிமேல் மனப்பாடம் செய்வது அவசியம். அது போக பர்சேஸ் லிமிட் / பாஸ்போர்ட்டே இல்லாதவங்க இனிமேல் பாரின்ல உங்க கார்டை யூஸ் பண்ணீனாங்கன்னு ஷாக்காகற கவலை இனிமேல் இல்லவே இல்லை. இந்தியாக்கு ம்ட்டும் தான் டீஃபால்டாய் ஆனால் பேங்கை ரெக்வெஸ்ட் செய்யலாம் நான் ஃபாரின் போறேன் அதனால் ஆக்டிவேட் ப்ன்னுங்க என்று, இன்றே உங்கள் பாங்கை அனுகினால் தான் ஜூலை 1க்கு பிறகு உங்கள் கார்டை உபயோகிக்க முடியும் அதனால் உடனே உங்கள் கார்டை மாற்றூங்கள் - இது இலவச சேவை அதனால் பேங் சார்ஜ் செய்ய முடியாது சாமியோவ்.

RBI issued a notification to banks with a new set of security guidelines for credit and debit card transactions. Please replace your Debit/Credit cards to EMV - Europe Pay/Master.Visa compliant cards before June 2013. From July 1st this cards ONLY will be valid in India. This technology replaces the traditional swipe and you have to insert the card inside the reader and you have to authenticate the transaction every time by entering the pin number otherwise the transaction is not valid. So every transaction is with your concern. Besides this these are the facility added and replace NOW and it is FREE.
All new cards issued to you will work only in India by default, unless you call your bank and ask them to enable international transactions on it
If your current card doesn’t have an EMV chip in it, then you will be issued a replacement cardby your bank with an EMV chip. This process will be faster if you’ve used your card internationally at least once till today
A limit will be imposed on your card for international transactions - the profiling for this will be done by your bank and will depend on things like how often you use your card and whether or not you pay your bills on time
You might have to enter a PIN to authorize transactions in offline stores even if you’re present there (this is already pretty common outside India)
Blocking of cards will be possible via SMS – in case of loss or theft

via Ravi Nag. &
  ரிலாக்ஸ் ப்ளீஸ்

மாமல்லபுரம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:04 | Best Blogger Tips

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. 

எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. 

இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும் 

- Sasi Dharan

LIKE-► @[211901605494764:274:தமிழால் இணைவோம்]
மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!.

எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்

Thanks to - Sasi Dharan 
& தமிழால் இணைவோம்

தேங்காய் பயன்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:58 | Best Blogger Tips
  
தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...
* தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.
* சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயை சாப்பிட்டு தண்ணீர் பருகினால், மாமிசம் உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும்.
* அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளது. 100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது.
* 'லாவுரிக் ஆசிட்' எனும் கொழுப்பு அமிலம் தேங்காயில் உள்ளது. இதுரத்தத்தில் உடலுக்கு அவசியமான எச்.டி.எல். வகை கொழுப்புகளை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கிறது. எச்.டி.எல். கொழுப்புகள் ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி தமனியில் தடை ஏற்படுவதை தடுக்கும் ஆற்றலுடையது.
* தேங்காய் தண்ணீர், கோடைக்கு உகந்த புத்துணர்ச்சி பானமாகும். இதில் ஒற்றைச் சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள், தாது உப்புக்கள் மற்றும் சைட்டோகைனைன் போன்ற பல உடல் செயற்காரணிகள் உள்ளன. பாஸ்படேஸ், கேட்டலேஸ், டீகைட்ரோஜனேஸ், பெராக்சைடேஸ், பாலிமரேஸ் போன்ற நொதிக் காரணிகளும் தேங்காய் நீரில் உள்ளன.இவை ஜீரணம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும் நொதிகளாகும்.
* தேங்காய் எண்ணை சமைப்பதிலும், கூந்தல் உறுதிக்கும், வேறுபல மருந்து தயாரிப்பிலும்பயன்படுத்தப்படுகிறது.
* தேங்காய் நீரில் உள்ளசைட்டோகைனைன், முது மையை தடுக்கும் ஆற்றல் கொண்டதாக  கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தக் கட்டிகள் மற்றும் புற்றுக் கட்டிகளுக்குஎதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது.
* தேங்காய் பருப்பில் தாமிரம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன. 
* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான போலேட், ரிபோ பிளேவின், நியாசின், தயாமின், பைரிடாக்சின் போன்ற வையும் சிறந்த அளவில் காணப்படுகிறது. இவை உடல் உள்ளுறுப்புகள் இயக்கத்திற்கும், உடல் புத்துணர்ச்சிக்கும் அவசியமானவையாகும்.
* தேங்காய் பருப்பை அப்படியே சாப்பிடலாம்.
* வாழை, பலா, தேன், சர்க்கரை ஆகியவற்றுடன்தேங்காயை பூவாகத் துருவி கலந்து புதுருசியில் சுவைக்கலாம்.

Thanks to Ram Krishnanposted to, இயற்கை உணவும் இனிய வாழ்வும்

சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:52 | Best Blogger Tips
  
பொதுவாக சமையல் என்பதை அனைவரும் ரசித்து செய்ய வேண்டும். அவ்வாறு ரசித்து செய்தால்தான் சமையல் ருசியாக இருக்கும். ஏனோ தானோவென்று சமைத்தால் அது சரியாக வராது.

அதுபோல, சமையல் செய்யும் போது சுத்தமாக செய்ய வேண்டியதும் அவசியம். அது ஆரோக்கியத்தைக் காக்கும்.

மற்ற எதையும் விட, சாதத்தை சுத்தமாக சமைக்கும் முறை என்று ஒன்று உள்ளது. அதாவது,

அடுப்பில், சுத்தமான பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். வேறொரு பாத்திரத்தில் அரிசியை அளந்து போட்டு அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு அரிசியில் இருக்கும் தண்ணீரை ஊற்றிவிட்டு, இரண்டாவது முறையாக தண்ணீர் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து கழுவி, அந்த நீரையும் வெளியேற்றி விட வேண்டும். பிறகு மீண்டும் தண்ணீர் ஊற்றி பிசைந்து கழுவி தண்ணீரை வெளியேற்றிவிட்டு, அதனை சூடாகியிருக்கும் உலையில் போட வேண்டும்.

அரிசியை கழுவி தண்ணீரை வடிக்கும் போதும் சரி, உலையில் அரிசியைப் போடும் போது ஒரு அரிசி கூட வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அரிசி தானே என்று நினைக்கக் கூடாது. காரணம், அந்த அரிசிக்காக, எத்தனையோ விவசாயிகளின் உழைப்பு, தண்ணீர், உரம், மண்ணின் உழைப்பு என எத்தனையோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு அரிசியை வீணாக்கும் போது இத்தனையும் உங்களால் வீணாக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், இந்த ஒரு அரிசி கூட கிடைக்காமல், பட்டினியால் சாகும் எத்தனையோ குழந்தைகள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அடுத்து, சாதம் வேகும் போது, மூன்று நான்கு முறை கிளறிவிட்டு, சாதம் வெந்ததும் வடித்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே, சாதத்தில் அதிகமாக தண்ணீர் ஊற்றி அதனை வடித்துவிட்டு சாப்பிடாமல், சரியான அளவில் தண்ணீர் ஊற்றி, சாப்பாடு வெந்தபிறகு தண்ணீரை வடிக்காமல் சாப்பிடும் முறையைப் பின்பற்றுவது உடலுக்கு நலத்தை அளிக்கும். சாதத்தை வடித்து சாப்பிடுவதால் வெறும் சக்கையை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

உணவை, வெளி இடங்களிலும், கடைகளிலும் வாங்கி சாப்பிடுவதை விட, சுயமாக நாமே தயாரித்து சாப்பிடுவதுதான் சிறந்ததாகவும் இருக்கும். அனைத்தையும் சுத்தமாக செய்து சாப்பிடுவதால் நோய் நொடி அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி
By Vanisri Sivakumar, இயற்கை உணவும் இனிய வாழ்வும்

திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:45 | Best Blogger Tips

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது. 

அவை- 

1. 
வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. 
மேன்மை
3. 
ஆற்றல்
4. 
தூய்மை
5. 
தெய்வீக நோக்கம்
6. 
உத்தம குணங்கள்
7. 
விவேகம்
8. 
தன்னடக்கம்
9. 
தொண்டு 

ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன. 

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு
. 
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான். 

(
இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். 
விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் மஞ்சள், கயிறு, கட்டுதல் ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]. புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.

 நன்றி சுபா ஆனந்தி