நான் மட்டும், ஏன் இப்படி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:50 | Best Blogger Tips
By நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன்

கிருஷ்ணா என்றொரு அற்புதமான மனிதர், எழுத்தாளர், இளைஞர், வித்தியாசமானவர். அண்மையில் "ஒய் மீ?' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய புத்தகம் ஆளுநர் கே. ரோசய்யாவால் வெளியிடப்பட்டது. "சரி.... இது என்ன புத்தக விமர்சனமா?' என்ற கேள்வி உங்கள் கண்களில் எழுவது தெரிகிறது. விமர்சனம் இல்லை. வித்தியாசம். கிருஷ்ணாவுக்கு "ஆட்டிசம்'.

"
ஆட்டிசம்' என்ற சொல்லுக்கு "மன இறுக்கம்' என்று தமிழாக்கியுள்ளார்கள். "மதியிறுக்கம்' என்றும் கூறுகிறார்கள்.

ஆட்டிசத்தின் பாதிப்பு ஒருவரைத் தன்னுள்ளே அமிழ்ந்து போகவைக்கும், வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளவிடாது, நம் சிரிப்புக்குப் பதில் சிரிப்பு வராது. நம் பார்வைக்கு எதிர்பார்வை இராது, நம் கேள்விக்கு விடை கூற விடாது, திரும்பத் திரும்ப சில செயலைச் செய்யத் தூண்டும், அதீதமான மன இறுக்கம் இருக்கும்.

நமக்கும் வெளி உலகத்துக்கும் இருக்கும் தொடர்பை ஒரு சுவர் தடுத்தால் எப்படி இருக்கும்? அதுபோல என்று சொல்லலாம். புரிதல், உள்வாங்கிக் கொள்ளுதல் நடைபெறும். ஆனால் புரிந்தது என்று வெளி உலகத்திற்குத் தெரியாது.

புரியாமலா இந்தப் புத்தகத்தை கிருஷ்ணா எழுதினார்? உபநிஷத்துகள், தத்துவ நூல்கள் எல்லாவற்றையும் படித்த பின்னர்தான் இந்தப் புத்தகம் வடிவு பெற்றுள்ளது. சுகம் என்பது என்ன, துக்கம் என்ன, மகிழ்ச்சிக்குப் பிறப்பிடம் எது, துயரத்துக்குக் காரணம் எது என்ற ஆழமான தத்துவங்களை எளிதாக விளக்குகிறது.

"
ஆட்டிசம்' என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடு என்கிறார்கள். குறை என்பது என்ன? யாருடைய பார்வைக் குறை என்று எடை போடுவது? நாமே ஓர் அழுத்தமான சதுரத்தை வரைகிறோம். அதில் அடைபடாதவர்களை, குறைபாடுடையவர்கள் என்று ஒதுக்குகிறோம்.

இதனால் "ஆட்டிசம்' உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குறைந்தவர்கள், மனநலிவுள்ளவர்கள், "டவுன்'ஸ் சின்ட்ரோம்' உள்ளவர்கள், "செரிப்ரல் பால்ஸி' உள்ளவர்கள் இப்படி எத்தனையோ பேர், செவ்வகங்கள், வட்டங்கள், முக்கோணங்கள் - நம்முடைய சதுரத்துக்குள் பொருந்துவதில்லை. இதனாலேயே வெளி உலகத்தின் பார்வைக்கு வெளியே வாழ்கிறார்கள்.

வட்டங்களின் பார்வையால் பார்த்தால், சதுரம் வித்தியாசமே. ""உருண்டையாக இல்லாமல் நாலு மூலைகள் கொண்ட குறைபாடு உடைய வடிவம்'' என்று வட்டம் சொல்லலாமே! அப்பொழுது சதுரங்கள் குறைபாடு உடையனவா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்தது. உயர் நீதிமன்றத்தின் நூலகத்தின் நூலகர் பதவிக்குப் பலர் விண்ணப்பித்திருந்தார்கள். அதில் ஒருவருக்கு ஒரு கால் சற்று வித்தியாசமாக இருக்கும், நடப்பது எளிதல்ல. அவரை "ஊனம்' என்று சொல்லி தேர்வுக்குழு தள்ளிவிட்டது.

அவர் "பேராண்மை மனு' தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் கூறியது என்னவென்றால், "அவருக்கு ஊனம் என்று ஒதுக்கிய நம் மனங்களில்தான் ஊனம்; அவர் முற்றிலும் தகுதியுள்ளவர்' என்பதுதான். அவர் வெற்றி பெற்றார். இது வட்டங்களின் பிழையன்று, முக்கோணங்களின் பிழையன்று, செவ்வகங்களின் பிழையன்று, இது நாமாகிய "சதுரங்களின்' பிழையே.

மனிதநேயத்தின் அடையாளமே அனைத்து வித்தியாசங்களையும் உள்ளடக்கி சமமாகப் பார்ப்பதுதான். இதுவே ஜனநாயகத்தின் அடையாளமும் ஆகும். ஜனநாயகத்தில் அனைவரும் சமம், அனைவருக்குமானது ஜனநாயகம்.

ஜாவேத் அபிதி என்பவர் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்காக உழைப்பவர். எங்கும் சக்கர நாற்காலியில்தான் செல்வார். அவர் கூறுவார் ""நம் நாடு முன்னேற வேண்டும் என்றால் நாட்டு மக்கள் அனைவரின் திறமையும், அறிவுத்திறனும் ஒன்றாகத் திரண்டு செயல்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளைச் செயலற்ற கற்களாக இருக்க விட்டோமானால் நம் நாடு அந்தப் பயனில்லாத பாரங்களையும் அல்லவா இழுக்க வேண்டும்?'' என்று.

மாறாக அவர்கள் ஒவ்வொருவரையும் சுதந்திரமாகப் பிறரைச் சாராது செயல்படும் மனிதர்களாக உருவாக்க நம் அரசமைப்புகளும் சமூகமும் ஒத்துழைக்க வேண்டும்.

அன்று அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், ஆட்டிசமுள்ள பல குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். விஷால் என்ற சிறுவன் "ஆடிஸ்டிக் சாவந்த்' என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் "ஆட்டிசமுடையவர் - அறிவாளியும்கூட'. அதாவது ஒரு குறிப்பிட்ட கலையோ, திறமையோ அவர்களுக்கு எல்லோரையும்விட மிகக்கூடுதலாக இருக்கும்.

விஷாலுடைய தாயார், தன் மகன் எழுதிய புத்தகத்தை என்னிடம் பெருமையுடன் காட்டினார். முத்துமுத்தான கையெழுத்து. படிக்காமலே விஷாலுக்கு எவ்வளவோ விஷயங்கள் தெரியுமாம். எட்டு வயதுக்கு அப்பாற்பட்ட விஞ்ஞான அறிவு, ஏன் எண்பது வயதுக்கும் அப்பாற்பட்ட விஞ்ஞான அறிவு, விஷாலைப் போன்றவர்களைக் குறைபாடு உடையவர்கள் என்று எப்படி அழைக்க முடியும்? ஆனால், அவர்கள் நிச்சயமாக வித்தியாசமானவர்கள்.

ஐஸ்வர்யாவை அங்கு சந்தித்தேன். ஐஸ்வர்யாவுக்கு "ஜிக்சா பசில்கள்' (குறுக்கெழுத்துப் புதிர்கள்) எவ்வளவு கடினமாக இருந்தாலும், அலட்சியமாக பூர்த்தி செய்ய முடியும். யோசிக்கக்கூட வேண்டாமாம், அவள் மூளையில் அந்த சிறுசிறு துண்டுகளை எப்படி இணைத்துப் படத்தை அமைக்க வேண்டும் என்று அப்படியே உதிக்குமாம். ஐஸ்வர்யாவின் பெற்றோர் சொல்கிறார்கள், ""ஐஸ்வர்யாவுக்குக் கடினமான புதிரெல்லாம்... பூ, ஆனால் ஐஸ்வர்யாவே ஒரு புதிர்'' என்று.

"
அய்ஷிஸ் பசில்ஸ்' என்ற இணையதளத்துக்குச் சென்று பாருங்கள். ஐஸ்வர்யாவின் திறமை நம்மை வியக்க வைக்கிறது. இந்தத் திறமைசாலியான, அதீத அறிவுள்ள, அன்பான, அழகான ஐஸ்வர்யாவைச் சுற்றியும் ஆட்டிச சுவர் உள்ளது.

அன்று தன்னுடைய புத்தகத்தின் வெளியீட்டு விழா என்று கிருஷ்ணாவுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் ஆட்டிசத்தின் மன இறுக்கத்தின் காரணமாக அமைதியாக உட்கார முடியவில்லை. இருபுறமும் கிருஷ்ணாவின் பெற்றோர் கிருஷ்ணாவைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

விஷாலுடைய தாயார் என்னிடம் சொன்னார் ""அவனைத் தடவிக் கொடுத்தால் மிக அழகாக எழுதுவான்'' என்று. அந்த அன்பான ஸ்பரிசம் ஆட்டிசத்தின் இறுக்கத்தைத் தளரச் செய்து அமைதிப்படுத்தும்போல் தெரிகிறது. பல பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியின்பொழுது தங்களுடைய குழந்தைகளைத் தடவிக் கொடுப்பதைப் பார்த்தேன்.

வந்தவர்கள் எல்லோரும் பளிச்சென்று உடையணிந்து அழகாக இருந்தார்கள். அவர்கள் சதுரங்களில்லை, உண்மைதான். ஆனால், அவர்களுக்கும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கும் ஆசை இருக்கும். அது அவர்கள் உரிமையும்கூட. வாழுவது என்பது வெறுமனே மூச்சுவிடுவது மட்டுமல்ல, அது "முழுமையாக வாழ்வது' என்று நமது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன.

நம் அரசியல் சாசனத்தின் "21-ஆவது பிரிவு - வாழும் உரிமை' என்பதை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உரிமையைப்பெற அரசு எல்லா உதவியும் செய்ய வேண்டும். அது சமூகத்தின் பொறுப்பும்கூட. ஆனால் இந்த உரிமை சதுரமல்லாதவர்களுக்குக் கிடைக்கப் பல தடைகள் உள்ளன. நம் கண்களில் அவர்கள் புலப்படுவதில்லை, மாறானவர்களை நம்முலகத்தில் இருப்பவர்களாகவே நாம் நினைப்பதில்லை.

அங்கு ஒரு தாயார் என்னிடம் சொன்னார் ""எங்களைப் பற்றியும் எழுதுங்கள்'' என்று. இதோ எழுதுகிறேன். இந்த வித்தியாசமான குழந்தைகளின் பெற்றோருடைய வாழ்க்கையும் வித்தியாசமானதுதான்; ""எல்லோரையும்போல'' என்ற சொற்கள் அவர்கள் அகராதியில் இல்லை.

ஆட்டிசம் உள்ள 15 வயது பிள்ளையின் தந்தை சொன்னார். ""ஒரு நாள் என் குழந்தை எனக்கு ஜுரம் என்றான். அன்று நாங்களிருவரும் அப்படி மகிழ்ந்தோம்'' என்று, நான் தடுமாறிப் போனேன். ஜுரம் என்று குழந்தை சொன்னால் சந்தோஷமா? இல்லை, அதற்கில்லை. வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள விடாத மன இறுக்கச் சுவரில் ஒரு சிறு விரிசல், ஒரு துளி வெளிச்சம். அந்த வெளிச்சம் தெரிந்ததால் கூத்தாடுகிறார்கள் தந்தையும் தாயும்.

ஆட்டிசத்தின் தாக்கம் 1-2 வயதில்தான் தெரியும் என்கிறார்கள். அதன் பின் அந்தப் பெற்றோர்களின் வாழ்க்கை வேறு தடத்தில், வேறு தளத்தில் செல்லும். அவர்களும் கிருஷ்ணா கேட்ட கேள்வியை இறைவனிடம் கேட்பார்கள். "ஒய் மீ' என்று. ""எனக்கு ஏன் இப்படி...?'' பிறகு நம்மால் ஒரு வித்தியாசமான குழந்தையை வளர்க்க முடியுமா? என்ற சந்தேகத்துடன் அந்தப் பயணம் தொடங்கும். எங்களால் முடியும் என்கிற மனத்துணிவுடன் எல்லாம் என் குழந்தைதான் என்ற பாதையில் உறுதியுடன் நடக்கிறார்கள்.

அயராது முயற்சி செய்த பின் கிருஷ்ணா ஒரு நாள், "ஆப்பிள்' என்று சொன்னது ஒரு சாதனை மைல்கல். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்தும் கிருஷ்ணாவுக்கு தாயார் படித்துக் காண்பித்தார்கள், கிருஷ்ணாவிடம் எதிரொலி எதிர்பார்க்காமல். பிரமிக்க வைக்கிறார்கள் அங்கு வந்த பெற்றோர்கள். அவர்களிடம் நான் கண்டது அசாத்திய உறுதி, உற்சாகம், மனோதிடம், ஆக்கப்பூர்வமான வீர்யம்.

கிருஷ்ணாவின் தாயார் "ஃப்ரம் எ மதர்ஸ் ஹார்ட்' என்ற புத்தகத்தில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தன்னைப் போன்ற பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்று.

இந்தத் தளராத முயற்சி எல்லோருக்கும் வருமா என்று எனக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தபோது மூச்சை அடைத்தது. ஆனால், அன்று நான் சந்தித்த பெற்றோர் எல்லோரும் அப்படித்தான் இருந்தார்கள்.

ஆண்ட்ரூ சாலமன் என்பவர் "ஃபார் ஃபிரம் த ட்ரீ' என்ற புத்தகத்தில் வித்தியாசமான குழந்தைகளைப் பற்றியும் பெற்றோரைப் பற்றியும் எழுதியுள்ளார். அவர் சொல்கிறார், இந்த வித்தியாசம் நிகழும் சில குடும்பங்களில் நெருக்கமான அன்பால் பிணைகின்றனர். சிலர் தம்மைப் போன்ற அனுபவமுடையவர்களுடன் சேர்ந்து ஒருவரையொருவர் தாங்குகிறார்கள். சிலர் தாங்களே "ஆர்வலர்கள்' ஆக மாறி தன்னார்வ அமைப்புகள் நடத்துகிறார்கள். உலகத்தோருக்கு தங்கள் நிலைமை, தங்கள் உரிமைகளை, எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ள உழைக்கிறார்கள், போரிடுகிறார்கள். புரிதல் என்பது முதல்படி, பிறகு மற்றதெல்லாம் வரும்.

குவாங்க் என்று ஒரு மலேசியப் படம். 14 நிமிடம்தான். இணையதளத்தில் பார்க்கலாம். குவாங்க் என்பவருக்கு ஆட்டிசம். அவருடைய சகோதரர்தான் படத்தின் இயக்குநர். அவர் இப்படத்தை தன் சகோதரருக்கும் உலகில் உள்ள எல்லா ஆட்டிசம் உள்ளவர்களுக்கும் அர்ப்பணம் செய்துள்ளார்.

அந்த இரு சகோதரர்களைப் பற்றிதான் படம். இருவரும் அவரவர்களாகவே நடிக்கிறார்கள். குவாங்கிற்கு ஒலியும் இசையும் உயிர். அவர் செவிகளில் நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களின் அலைவரிசையும் (நாம் ஆறு கட்டை ஐந்து கட்டை என்று சொல்கிறோம் இல்லையா, அது) துல்லியமாகக் கேட்கும். ஒரு கண்ணாடிக் கோப்பையில் தட்டினால் "பி' நோட்டு கேட்க வேண்டும். அந்தக் கோப்பையைத் தேடுகிறார் குவாங்க்.

அண்ணாவோ அரும்பாடுபட்டு ஒரு வேலைக்கு சிபாரிசு செய்து அவரை அங்கு அனுப்புகிறார். போகும் வழியில் ஒரு பெண்மணி ஒரு சாக்குமூட்டையை இழுத்துச்சென்று குப்பையில் போடுகிறார். அந்த மூட்டையில் ஒரு பொருள் அப்படி இழுக்கும்பொழுது "பி' நோட்டை ஒலிக்கிறது. அவ்வளவுதான் நேர்காணல் காற்றோடு போகும். அந்த மூட்டையைத் தோண்டி துழாவி அந்தக் கோப்பையை பொக்கிஷம்போல எடுப்பார். முகத்தில் அப்படி ஒரு பரவசம், 'பி' "பி' என்று கூவிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புவார்.

அண்ணாவுக்குக் கோபம் கனல் தெறிக்கும். "அறிவு கெட்டவனே', "தண்டச்சோறு' எல்லாம் பிரவாகமாக வரும். குவாங்கிற்கு ஒன்றுமே கேட்காது. ம் ஹும். தன்னறைக்குச் செல்வார். அப்புறம் வெளிவரும் ஒரு தெய்வீக நாதம். அண்ணாவின் முகம் இளகும். உதடுகள் துடிக்கும். நமக்கும்தான். நம் மனதில் வலியும் உவகையும் சேர்ந்து பொங்கும்.

சுற்றி என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையில்லாமல் தன் கருமமே கண்ணாக இருப்பவரை "ஏகாக்ர' சித்தன் என்கிறோம். அப்பொழுது "ஆட்டிசம்' உள்ளவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்களா? மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலையில் உள்ளவர்களா? அப்படியும் ஓர் ஆராய்ச்சிக்குழு கூறுகிறதாம்.

அவ்வளவு தொலைவுக்கு நாம் செல்வானேன்? எல்லா குழந்தைகளுக்கும் என்ன மனித உரிமைகளுண்டோ அது இவர்களுக்கும் வேண்டும். அது கிடைத்தால் போதும். ஐஸ்வர்யா, விஷால், கிருஷ்ணா போன்றோரைப் பார்த்தால் நமக்கு ஒன்று புரிகிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அது வெளிவர வேண்டும்.

ஆட்டிசம் உள்ளவர்களும் பள்ளிக்கூடம் செல்ல, வேலைக்குச் செல்ல, பொது இடங்களுக்குச் செல்ல மற்றும் வாழ்க்கை என்னவெல்லாம் நமக்குக் கொடுக்கிறதோ அவை அனைத்தையும் அவர்களும் பெற வேண்டும். பெற்றோருக்கு நமக்குப்பின் என்ற கேள்வி உலுக்கும். அந்தக் கேள்விக்கு சமூகம் விடைபகர வேண்டும்.

இவர்களுக்காக "தேசிய அறக்கட்டளைச் சட்டம்' என்ற சட்டம் உள்ளது. அது நன்றாகச் செயல்பட வேண்டும். அதைப்பற்றி நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். மேலைநாடுகளில் வித்தியாசமான குழந்தைகளுக்குப் பலவிதமான ஆதரவு அமைப்புகள் உள்ளன.

ஆட்டிசத்தின் தாக்கம் ஒரே மாதிரி இல்லை என்று இந்தத் துறையின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது வெவ்வேறு மாதிரி வெளிப்படுகிறது. அதன் தீவிரமும் ஒன்றேபோல இல்லை. சிலருக்கு லேசான தாக்கம் இருக்கும். சிலருக்குக் கூடுதலாக இருக்கும். அவரவர்கள் திறமைக்கேற்ப வசதிகள் மேலைநாடுகளில் உள்ளன.

சிலர் பஸ்ஸில் வேலைக்குச் சென்று வருகிறார்கள். வீட்டில்கூட நிறைய வேலைகள் செய்ய முடியும். அவர்களுக்கு ஒரே சீரான பணிநிரல் முக்கியம். ஒரே சீராக இருக்காவிட்டால் இறுக்கம் கூடும். மேலைநாடுகளிலிருக்கும் வசதிகளைப் பார்க்கும்பொழுது சிறிது சிறிதாகவேனும் நம் நாட்டிலும் அதுபோல வரவேண்டும் என்று தோன்றும்.

ஆட்டிசம் பற்றி எல்லோரும் அறிந்துகொள்ளுவதற்கு அரசும் மருத்துவமனைகளும் சமூக அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் பெற்றோர்கள் காலதாமதமில்லாமல், ஆட்டிசமுள்ள குழந்தைகளுக்கு என்னவெல்லாம் உதவி, உந்துதல் கொடுக்க முடியுமோ அது நடக்கும்.

மருத்துவரீதியாக நான் ஆட்டிசத்தைப் பற்றி எழுதவில்லை. மனிதநேயரீதியாகச் சொல்கிறேன். நம் பார்வைக்குள், "யாவரும் கேளிர்' என்று அனைவரையும் அடைக்க வேண்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் சிறு கற்களைச்  சேர்த்து பாலங்களை அமைக்கலாம். வித்தியாசங்களின் பூங்கொத்து தானே ஓர் ஆரோக்கியமான சமுதாயம். அதில் யாரும் ""நான் மட்டும்... ஏன்'' என்று ஏங்கக்கூடாது!

Thanks to FB  Thannambikkai

தொப்பை...... interesting, read this.....!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:49 | Best Blogger Tips
 தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும், பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்? 

மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்
என்றுதான் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது என்று தான் கூற வேண்டும். அதற்க்கு சில காரணங்கள் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இந்த தொப்பை எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்

நமது உடலை பற்றி சொல்வதனால் அது ஒரு எந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி எந்திரங்கள் இயங்க மின்சாரம் என்கின்ற ஆற்றல் தேவையோ அதுபோலவே நம் உடல் என்கின்ற எந்திரம் இயங்க கலோரி என்கிற ஆற்றல் தேவை, அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை வீணடிக்க விரும்பாத மூளை அவசர காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற நல்ல எண்ணத்தில் (?) எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது.

உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் நம்மை காட்டிலும் நமது மூளை மிகவும் எச்சரிக்கை உணர்வோடுதான் செயல்பட ஆரம்பிக்கிறது. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் அதை எங்கே எப்படி சேமிக்க வேண்டும் என்பதை மூளை நேரடியாக தலையிட்டு தீர்மானிக்கிறது. இருபத்திநான்கு மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவை இருக்கும் இடங்களை தவிர்த்து உடலின் எந்த பாகம் அதிக வேலையின்றி இருக்கிறதோ அங்கே கொழுப்பை சேமிக்கும்படி மூளை உத்தரவிடுகிறது. 

அப்படி மனித உடலில் அதிகவேலையின்றி இருக்கும் இடம் என்று மூளையின் கண்களுக்கு முதலில் தென்படும் இடம் அடிவயிறுதான். மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு மேடு தட்டும் போது நாம் உசாராக இல்லை என்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. இப்படித்தான் நண்பர்களே மனிதர்களுக்கு தொப்பை உருவாகிறது.

ஆனால் பெண்களுக்கு என்று பார்க்கும் போது ஆரம்பத்திலேயே அடிவயிற்றில் கொழுப்பை சேர்க்க மூளை உத்தரவிடுவதில்லை காரணம் பெண்களின் அடிவயிற்று பிரதேசத்தில் ஆண்களுக்கு இல்லாத கர்ப்பப்பை இருப்பதால்தான். கர்ப்பபை என்பது உயிர்களை உருவாக்கும் அதிமுக்கியமான இடம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கர்ப்பப்பையின் செயல்பாடுகள் குறைந்து விடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் மூளை ஆரம்பத்திலேயே பெண்களுக்கு கொழுப்பை அடிவயிற்றில் சேமிக்க உத்தரவிடுவதில்லை. கர்ப்பப்பை இருக்கும் ஏரியாவை தவிர்த்து கொழுப்பை எங்கு சேமிக்கலாம் என்று மூளை யோசித்துக்கொண்டிருக்கும் போது வயிற்று பகுதிக்கு அடுத்ததாக அதிக வேலையற்ற இடம் என்று மூளையின் கண்ணில் தென்படுவது தொடைப்பகுதியாகும். தொடைப்பகுதி கொழுப்பை சேமிக்க தகுந்த இடம் என்று மூளை கருதியதும் அங்கே கொழுப்பை சேமிக்கும் வேலை துவங்குகிறது. 

தொடைப்பகுதியில் ஓரளவுக்கு கொழுப்பு சேர்ந்த பின்னாலும் உடலில் கொழுப்பு சேர்ந்துகொண்டே இருந்தால் அடுத்ததாக கொழுப்பை சேர்த்துவைக்க தகுந்த இடம் என்று மூளையின் கண்ணில் தென்படும் இடம் பெண்களின் பின்பகுதியாகும். இதன் காரணமாகத்தான் ஒரு பெண் மெலிந்த (Slim) தோற்றம் உடையவராக இருந்தாலும் கூட அவர்களின் தொடைப்பகுதியும், பின்புறமும் பெரிதாகத் தெரிகிறது.

மெனோபாஸ் துவங்காத அதாவது பூப்பெய்தாத பெண்களுக்கும் மெனோபாஸ் நின்று போன பெண்களுக்கும் கர்ப்பபைகளின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் அந்த வயதில் இருக்கும் பெண்களின் அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை மூளை தடுக்க முயர்ச்சிப்பதில்லை இதன் காரணமாகத்தான் பெண்களில் சிலருக்கு ஆண்களுக்கு நிகராக தொப்பை உருவாகிவிடுகிறது.

தொப்பை, தொப்பையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை அது உடலில் பல நோய்கள் உண்டாவதற்க்கான வழியை ஏற்படுத்தி விடுவதால் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட உண்டாவதற்கு அடிப்படை காரணமாக இருப்பதால் நாம், நமது உடலில் தொப்பை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாததாகிறது. முறையான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றுவோர் இருக்கும் திசையையே தொப்பை எட்டிப்பார்க்காது என்று தான் சொல்ல வேண்டும். அதோடில்லாமல் தினந்தோறும் குறைந்தது நாற்பது நிமிடம் நடக்கும் பழக்கமும் (Walking) இருந்தால் அது நம் உடலில் ஏற்படும் பாதி நோய்களுக்கு தீர்வாக இருக்கும் என்று சொன்னால் மிகையில்லை.

நடக்க சிரமப்படுபவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே சில யோகாசனங்களை செய்யலாம். தொப்பையை குறைப்பதற்கு என்று பார்த்தோமானால் மிகச் சிறந்த பலன் தரும் யோகாசனங்களாக தனுராசனம், சலபாசனம், சர்பாசனம், மற்றும் நல்காசனம் ஆகிய யோகாசனங்களை குறிப்பிடலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த யோகாசனங்களை செய்ய முயற்சிக்கும் போது புத்தகங்களையோ அல்லது டி.வி.களையோ பார்த்து செய்யாமல் சிறந்த யோகா மாஸ்டர் மூலமாக செய்ய முயற்சிப்பது மிகுந்த பயனளிக்ககூடியதாக இருக்கும். தொப்பை விழுந்த பின் கடும் முயற்சி செய்து அவற்றை குறைப்பதைக் காட்டிலும் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றி வரும்முன் தடுப்பதே சிறந்ததாகும்.

நன்றி இயற்கை உணவும் இனிய வாழ்வும்

வாழ்வே ஒரு போராட்டம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:34 | Best Blogger Tips
துறவி ஒருவர் தன் சீடர்களுக்கு "வாழ்க்கை என்றால் என்ன?" என்பதை தெளிவாக சொல்லிக் கொடுக்க, சீடர்களை அழைத்தார்.

அப்போது அவர்களிடம் உதாரணத்திற்கு ஒரு பட்டாம்பூச்சி இந்த உலகை காண்பதற்கு முன் எவ்வாறு கஷ்டப்பட்டு வருகிறது என்ற ஒரு விஷயத்தை அவர்களுக்கு காண்பிக்க இருந்தார்.

அதனால் அவர்களிடம் பட்டாம்பூச்சியின் கூட்டினை காண்பித்து, இன்னும் சில நேரங்களில் இந்த பூச்சி நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியே வந்துவிடும் என்றும் அதற்கு யாரும் உதவக் கூடாது என்றும் கூறி மடாலயத்திற்குள் சென்று விட்டார்.
அதைப் பார்த்த ஒரு சீடன், அது ஓட்டை உடைக்க மிகவும் கஷ்டப்படுகிறது என்று நினைத்து, அந்த ஓட்டை லோசாக உடைத்துவிட்டான். ஆனால் அந்த பட்டாம் பூச்சி வெளியே வந்து இறந்துவிடுகிறது. இதனால் அவன் அந்த பட்டாம் பூச்சியின் இறப்பிற்கு காரணமாகிவிட்டான்.பின் துறவி வந்தார். ஊட்டை உடைத்த மாணவன் அழுதுக் கொண்டிருந்தான். எதற்கு அழுகிறாய் என்று பேட்ட போது, நடந்ததை சொன்னான்.

பின் குரு அவனிடம் பட்டாம்பூச்சி அத்தகைய போராட்டத்தை அனுபவிக்கக் காரணம், அதன் சிறகுகள் நன்கு வளர்வதற்கும், தன்னை வலுப்படுத்திக் கொள்ளவும் தான் காரணம் என்று சொன்னார்.

அதேப்போல் தான், நாமும் நமது வாழ்வில் இன்பமாக வாழ பல போராட்டங்களை சந்திக்க நேரிடும், அதற்காக மனமுடைந்துவிடக் கூடாது. போராட்டங்களை சந்திக்க சந்திக்கத் தான் நமது மனமும் வலுவடையும். பின் எதற்கும் துணிச்சலோடு போராடி, வாழ்வில் முன்னேறலாம் என்று கூறி, அவர்களுக்கு ஒரு நல்ல அறிவைப் புகுட்டினார்.

 


Thanks to FB  Thannambikkai
 

காலணிகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:29 | Best Blogger Tips

சிலருக்கு அடிக்கடி கால் வலி ஏற்படும். பெரிய பிரச்னை எதுவும் இருக்காது. அவர்கள் அணிந்திருக்கும் காலணிதான் மூலக் காரணம் என்பதை அறியாமல் இருப்பார்கள்.

காலணிகள் வாங்கும்போது மாலை நேரத்தில் வாங்குவதுதான் நல்லது. காலையில் இருந்து வேல, விளையாட்டு என்று ஓடிக் கொண்டே இருக்கும் நமக்கு, மாலையில் பாதத்தின் சுற்றளவு ஒரு இன்ச் வரைகூட கூடியிருக்கும். எனவேதான் இந்தப் பரிந்துரை.

ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா...கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா....ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதே சமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.

சாக்ஸ் வாங்குவதிலும் கவனம் தேவை. நம் நாட்டின் வெப்பநிலைக்கு காட்டன் சாக்ஸ் அணிவதுதான் நல்லது. லெதர், ரப்பர், பிளாஸ்டிக் சாக்ஸ்களுக்கு வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்காது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆடுசதை வரை அழுத்தும் 'சீம் சாக்ஸ்' ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், கணுக்காலுடன் முடியும் 'சீம்லெஸ் காட்டன் சாக்ஸ்' அணியலாம்.
 
காலணிகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

சிலருக்கு அடிக்கடி கால் வலி ஏற்படும். பெரிய பிரச்னை எதுவும் இருக்காது. அவர்கள் அணிந்திருக்கும் காலணிதான் மூலக் காரணம் என்பதை அறியாமல் இருப்பார்கள்.

காலணிகள் வாங்கும்போது மாலை நேரத்தில் வாங்குவதுதான் நல்லது. காலையில் இருந்து வேல, விளையாட்டு என்று ஓடிக் கொண்டே இருக்கும் நமக்கு, மாலையில் பாதத்தின் சுற்றளவு ஒரு இன்ச் வரைகூட கூடியிருக்கும். எனவேதான் இந்தப் பரிந்துரை.

ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா...கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா....ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதே சமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.

சாக்ஸ் வாங்குவதிலும் கவனம் தேவை. நம் நாட்டின் வெப்பநிலைக்கு காட்டன் சாக்ஸ் அணிவதுதான் நல்லது. லெதர், ரப்பர், பிளாஸ்டிக் சாக்ஸ்களுக்கு வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்காது. 

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆடுசதை வரை அழுத்தும் 'சீம் சாக்ஸ்' ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், கணுக்காலுடன் முடியும் 'சீம்லெஸ் காட்டன் சாக்ஸ்' அணியலாம். 
Thanks to FB  Doctor Vikatan

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள் 1 !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:25 | Best Blogger Tips

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.
 மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

 நன்றி உலக தமிழ் மக்கள் இயக்கம்

சீடனாக தகுதி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:19 | Best Blogger Tips
ஒரு ஜென் ஆசிரியர் தனது ஐந்து சீடர்கள் சைக்கிள்களில் சந்தை சென்று திரும்புவதை கண்டு "ஏன் நீங்கள் சைக்கிள்களில் சவாரி செய்கிறீர்கள்?" என்று விசாரித்தார். அதற்கு ஐந்து பேரும் வெவ்வேறு பதிலை குருவிடம் சொன்னார்கள்.

அதில் முதல் சீடன் "நான் வாங்கி வரும் உருளைக்கிழங்குகளை கையிலோ முதுகிலோ சுமப்பதை காட்டிலும், சைக்கிளில் அதன் கூடையில் வைத்து வருவது சுலபம் என நினைத்து, மேலும் நான் சைக்கிள் ஓட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று குருவிடம் சொன்னான். அதற்கு குரு அவனிடம் "நீ மிகவும் சுறுசுறுப்பானவன், நீ வயதானபின் என்னை போலவே கூன் போடா மாட்டாய்" என்றார்.

இரண்டாவது சீடன் குருவிடம் "நான் இயற்கையை ரசிக்க சைக்கிள் சவாரி செய்தேன்" என்றான். குருவும் அதற்கு "உன் கண்கள் திறந்துள்ளது, அதனால் நீ உலகத்தை காண்கிறாய்" என்றார்.

பின் மூன்றாவது சீடன் "நான் என் சைக்கிள் சவாரி செய்யும் போது மந்திரத்தை ஓதிக் கொண்டே சென்றேன்" என்றான். அதற்கு குரு மூன்றாவது சீடனை "உனது மனதில் எண்ணங்கள் எளிதாக, புதிய சக்கரங்கள் போல சூழலும்" என்று பாராட்டினார்.

பின்னர் நான்காவது சீடன் "நான் எல்லா உயிரினங்களின் நல்லிணக்கத்தில் வாழ ஆசை கொண்டு சைக்கிளில் சவாரி செய்தேன்" என்றான். குருவும் அதற்கு அவனிடம் "நீ தீங்கு இல்லாத ஒரு தங்கமான பயணத்தை மேற்கொள்கிறாய்" என்று மகிழ்ந்து கூறினார்.

பிறகு ஐந்தாவது சீடன் குருவிடம் "நான் சைக்கிள் சவாரி செய்வதற்காக, என் சைக்கிளில் நான் சவாரி செய்தேன்" என்றான். அதற்கு குரு, அந்த சீடனின் முன் வணங்கி 'நான் உங்கள் சீடனாவேன்' என்று கூறினார்.

ஏனெனில் இந்த நான்கு சீடர்களும், குருவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று எண்ணி, மனதில் இருக்கும் உண்மையை மறைத்து, வித்தியாசமாக பதிலை அளித்தார்கள்.

ஆனால் கடைசியில் சொன்ன சீடன் "சைக்கிளில் எதற்கு சென்றாய் என்று கேட்டதற்கு, அவன் சவாரி செய்வதற்காக சென்றேன்" என்று மனதில் இருக்கும் உண்மையை கூறியதால், குரு அவருடைய சீடனுக்கு சீடனாக ஆனார்.

 


Thanks to FB  Thannambikkai