ஆஸ்துமாவின் தீவிரம் குறைக்கும் ஊமத்தை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:21 | Best Blogger Tips


1) வேறுபெயர்கள் -: ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும்.இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை.

ஆஸ்துமாவின் தீவிரம் குறைக்கும் ஊமத்தை
-------------------------------------------------------------

1) வேறுபெயர்கள் -: ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும்.இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை.
 
2) தாவரப்பெயர் -: DATURA METEL.

 3) தாவரக்குடும்பம் -: SOLANACEAE.

 4) வகைகள் -: வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை,கருஊமத்தை எனும் வகைப்படும்.

5) வளரும் தன்மை -: எல்லா வகை நிலங்களும் ஏற்றது.வளர்ச்சியைத் தாங்கி வளரும்.பற்களுள்ள அகன்றஇலைகளையும், வாயகன்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மலர்களையும் முள்நிறைந்த காயையும்உடைய குறுஞ்செடிகள். மலர்கள் வெள்ளை, மஞ்சள்,கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். இவை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.நட்ட ஒரு மாதத்தில் பூக்கள் விட ஆரம்பிக்கும்.

6) பயன்தரும் பாகங்கள் -: செடியின் எல்லா பாகங்களும் மருத்துவ பயனுடையவை.

7) பயன்கள் -: பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.

இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும்இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம், சதைவளரும் புண்புரைகள், தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.

இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.

அனைத்து வகைப் புண்ணுக்கும். - ஊமத்தம் இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும் மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆறாத குழிப்புண், வளர் புண் குணமடையும்.
நன்றி: மூலிகை வளம் 2) தாவரப்பெயர் -: DATURA METEL.

3) தாவரக்குடும்பம் -: SOLANACEAE.

4) வகைகள் -: வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை,கருஊமத்தை எனும் வகைப்படும்.

5) வளரும் தன்மை -: எல்லா வகை நிலங்களும் ஏற்றது.வளர்ச்சியைத் தாங்கி வளரும்.பற்களுள்ள அகன்றஇலைகளையும், வாயகன்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மலர்களையும் முள்நிறைந்த காயையும்உடைய குறுஞ்செடிகள். மலர்கள் வெள்ளை, மஞ்சள்,கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். இவை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.நட்ட ஒரு மாதத்தில் பூக்கள் விட ஆரம்பிக்கும்.

6) பயன்தரும் பாகங்கள் -: செடியின் எல்லா பாகங்களும் மருத்துவ பயனுடையவை.

7) பயன்கள் -: பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.

இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும்இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம், சதைவளரும் புண்புரைகள், தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.

இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.

அனைத்து வகைப் புண்ணுக்கும். - ஊமத்தம் இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும் மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆறாத குழிப்புண், வளர் புண் குணமடையும்.
நன்றி: மூலிகை வளம்

பொள்ளாச்சி – சந்தைகளின் சொர்க்கம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:14 | Best Blogger Tips
பொள்ளாச்சி, தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும்.


பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன், மனம் விட்டு ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரம், சினிமாத்துறையினர் மிகவும் விரும்பும் ஒரு இடமாக உள்ளது. கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்
சுப்ரமண்யர் திருக்கோயில், பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். பொள்ளாச்சியின் வெல்லச் சந்தை தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும்.
இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.
இச்சந்தைகள் போக, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன.

நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.
இந்நகரில், ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில், திருமூர்த்தி கோயில், சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், ஈச்சநாரி விநாயகர் திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்களைக் காணலாம்.

இந்நகர், ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், வால்பாறை, மாசாணியம்மன் கோயில், அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
இந்நகரத்தின் வரலாறு
பொள்ளாச்சியின் புராதனப் பெயர், “இயற்கை வளமும், செல்வமும் கொழிக்கும் நாடு” என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வந்த “பொருள் ஆட்சி” என்ற பெயரே ஆகும். மூன்றாவது குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில், இவ்வூர், “முடி கொண்ட சோழநல்லூர்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, பழம்பெருமை வாய்ந்த சுப்ரமண்யர் கோயில், இப்பகுதியில் உள்ள மிகப் பிரபலமான கோயிலாகும். சரித்திரத்தின் ஏதோ ஒரு புள்ளியில், இக்கோயில் சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டது என்று நம்பப்பட்டது.

இவ்வூருக்கு, “வளமான அரசு ஆண்ட இடம்” என்று பொருள் தரும் வகையில் அமைந்த “பொருள் ஆட்சி” என்ற பெயரும் உண்டு. “பொள்ளாச்சி சந்தை” என்றழைக்கப்படும் இவ்வூர் சந்தை, வளமானது என்றும், சரித்திரப் பிரசித்தி பெற்றது என்றும் கூறப்படுகிறது.

பொள்ளாச்சிக்கு செல்வது எப்படி?
கோயம்புத்தூர் விமான நிலையம் பொள்ளாச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. முக்கியமான, அனைத்து இந்திய, தென்னாசிய, மற்றும் வளைகுடா நகரங்களுக்கும், இங்கிருந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உள்ளன.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து, அருகில் உள்ள ஊர்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் இரயில் நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும்.

பொள்ளாச்சியின் வானிலை
பொள்ளாச்சியில் வருடந்தோறும் மிதமான, ரம்மியமான வானிலையே நிலவுகிறது. சுற்றுலா செல்வதற்கு, வருடம் முழுவதும் ஏற்ற இடமாக இருப்பினும், மிகவும் இனிய வானிலை நிலவக்கூடிய மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில், இந்நகரம், மிகுந்த பொலிவுடன் காணப்படும்.

 
Thanks to Thannambikkai

சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:53 | Best Blogger Tips
சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்:-

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வெந்நீருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல் விலகிவிடும்.

தொடர்ச்சியான இருமல் - இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

சிற்றிருமல்
நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.

இரைப்பு இருமலுக்கு
இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

கோழை இருமல்
நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.

வறட்டு இருமல்
வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

உடல் சூட்டினால் இருமல்
உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

எந்த வகையான இருமலுக்கும்
பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு
கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

ஜலதோஷம் காரணமாக இருமல்
ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.

காய்ச்சல்
சாதாரண ஜூரத்திற்கு
இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.

காய்ச்சல் குணமாக
சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.

காய்ச்சல்
காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.

குளிர்காய்ச்சல்
நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குணமாகும்.

எந்த விதமான காய்ச்சலும் குணமாக
வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.

(குறிப்பு : குழந்தைகளுக்கு என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு செய்து கொடுக்கவும்கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வெந்நீருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல் விலகிவிடும்.

தொடர்ச்சியான இருமல் - இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

சிற்றிருமல்
நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.

இரைப்பு இருமலுக்கு
இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

கோழை இருமல்
நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.

வறட்டு இருமல்
வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

உடல் சூட்டினால் இருமல்
உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

எந்த வகையான இருமலுக்கும்
பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு
கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

ஜலதோஷம் காரணமாக இருமல்
ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.

காய்ச்சல்
சாதாரண ஜூரத்திற்கு
இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.

காய்ச்சல் குணமாக
சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.

காய்ச்சல்
காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.

குளிர்காய்ச்சல்
நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குணமாகும்.

எந்த விதமான காய்ச்சலும் குணமாக
வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.

(குறிப்பு : குழந்தைகளுக்கு என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு செய்து கொடுக்கவும்)
நன்றி FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்

இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:49 | Best Blogger Tips
இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு.

வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்து,ஆண்மை விருத்தி,பல் உறுதி போன்ற நன்மைகளையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை. பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்றால் வெற்றிலை பாக்கு படைக்கவேண்டும். வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும்.

வெற்றிலையும், பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?
--------------------------------------------------------------------
இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு.

வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்து,ஆண்மை விருத்தி,பல் உறுதி போன்ற நன்மைகளையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை. பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்றால் வெற்றிலை பாக்கு படைக்கவேண்டும். வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும்.

வெற்றிலையும், பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

பதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:24 | Best Blogger Tips
மனிதர்களைப் பொருத்தவரை தேவை அதிகரிக்க அதிகரிக்க அதற்கான தேடலும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆனால் இணையத்தைப் பொருத்தவரையோ தேடல் அதிகரிக்க அதிகரிக்க இணையத்தின் தேவையும் அதிகரித்துக் கொண்டு உள்ளது. காரணம் எந்த ஒரு சிறு விசயதிற்கான தேடலையும் இணையமே நிறைவு செய்து வைக்கிறது. 

இன்றைய தினத்தில் நாம் உபயோகித்துக் கொண்டிருக்கும் இணைய தொழில் நுட்பத்திற்கும், அன்றைய நுட்பத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருந்துள்ளது. இணைய உலகின் அசுர வளர்ச்சி 1990 களின் பிற்பகுதியில் தொடங்கி இன்றும் ஒரு முடிவில்லா நிலை நோக்கி வளர்ந்து கொண்டே செல்கிறது. இணைய வளர்ச்சியும் பதிவுலக வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று இணையான ஒரே நேர்கோட்டில் பயணிப்பதால், இணைய மற்றும் பதிவுலக வளர்சியை 1990-க்கு முன்-பின் என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.

இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் பிளாக்கர் இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலும் வோர்ட்பிரஸ் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொடங்கப்பட்ட தளங்கள். "அப்படியென்றால் அதற்கு முன் யாரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவில்லையா?" என்றொரு கேள்வி எழலாம்.

விடை தேட, 1990ம் ஆண்டிற்கு முன் இருந்து நமது பயணத்தை தொடங்குவோம்.

அமெரிக்க ராணுவ முகாம்களுக்குள் ரகசிய கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான தேடலில் இருந்து தொடங்குகிறது இணையத்தின் வரலாறு. பின் படிப்படியாக அமெரிக்க அரசு அலுவலகங்களும் சில முக்கியமான பல்கலைக் கழகங்களும் இணையம் மூலம் இணைக்கப்பட்டன. இணையத்தின் தேவை வளர வளர, கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் இணைய சேவை விரிவுபடுதுத்தப்பட்டது.

1990க்கு முன் யூஸ்நெட்(Usenet) என்னும் இணைய சேவை மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். யூஸ்நெட் என்பது பல சர்வர்கள் இணைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பப் பின்னல். ஒவ்வொரு சர்வரும் மற்றொன்றுடன் இணைக்கபட்டிருக்கும். விளையாட்டு, அரசியல், சினிமா, வர்த்தகம் என்று பல்வேறு வகையான கருத்துப் பரிமாற்றம் நிகழும் தளமாகவே விளங்கியது. ஒவ்வொரு தனிதனி கலந்துரையாடல் பிரிவுகளையும் "நியூஸ் குரூப்" என்றழைக்கிறார்கள். இக்கால சமூக வலைதளங்களின் முன்னோடியாக இந்த யூஸ்நெட்டைக் குறிப்பிடலாம்.

யூஸ்நெட்டில் உங்கள் கருத்தை பதிவு செய்ய அந்த நியூஸ் குரூப் பெயரையும் இணைத்து பதிவிட வேண்டும். உங்கள் சர்வரில் பதியப்படும் கருத்து சிறிது நேரத்தில் மற்ற சர்வர்களையும், உங்கள் நியூஸ் க்ருப்பை சேர்ந்தவர்களையும் சென்று சேரும். உங்கள் நியூஸ் குரூப்பில் இருப்பவருடன் மட்டுமே உங்களால் கலந்துரையாட முடியும். மேலும் உங்கள் பதிவுகள் முப்பது நாட்களுக்குப் பின் சர்வரில் இருந்து அழிக்கப்பட்டு விடும்.

Tim Berners-Lee
1990 இன் இறுதியில் டிம் பெர்னர்ஸ் லீ என்பவர் www என்றறியப்படும் வோர்ல்ட் வைட் வெப் (World Wide Web) என்னும் நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து தனது புதிய பயணத்தை தொடங்கிய இணைய வளர்ச்சி இன்றளவும் அதே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இவருடைய மற்ற கண்டுபிடிப்புகளான HTTP, HTML மற்றும் XML போன்றவை இணைய கட்டமைப்பின் மிக முக்கியமான தூண்கள்.

Justin Hall
ஜஸ்டின் ஹால் என்னும் அமெரிக்கர் தான் உலகின் முதல் பதிவர் மற்றும் பதிவுலக முன்னோடியாக அறியப்படுகிறார். 1994ம் ஆண்டும் தனது வலையுலக பயணத்தை ஆரம்பித்த ஜஸ்டின் ஹால் விடாது தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவரது கல்லூரி காலத்தில் இருந்து எழுத தொடங்கிய ஜஸ்டின் 2014வது ஆண்டில் நுழையும் பொழுது வலையுலகில் (links.net) தனது இருபதாவது வருடத்தை அடைந்திருப்பார்.

1994ம் வருடத்தில் பதிவுலகம் இணைய உலகினுள் முழுமையாக காலடி எடுத்து வைத்தது. இந்த வருடத்தில் பல அமெரிக்கர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவங்களை ஆன்லைன் டைரி மூலம் தொகுக்க ஆரம்பித்திருந்தனர். இந்த ஆன்லைன் டைரியே தற்போது பல வடிவங்களில் பதிவுலகத்தை ஆக்கிரமித்து வருகிறது.

1998ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓபன் டைரி ஆரம்பிக்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே ஆயிரம் பயனர்களையும் பல லட்சம் பக்கப் பார்வைகளையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Jorn Barger
நம்முடைய கருத்துகளை, அனுபவங்களை இணையத்தில் பதிவு செய்வதை web log என்கிறோம். ஜார்ன் பர்கர் என்னும் அமெரிக்கர் 1997இல் web log என்ற இரு வார்த்தைகளையும் இணைத்து weblog குறிப்பிடத் தொடங்கினார். பின் பீட்டர் மேர்ஹோல்ஸ் என்னும் அமெரிக்கர் 1999 வருடம் weblog என்பதை இரண்டாக உடைத்து we blog என்று தனது வலைப்பூவில் குறிப்பிட்டு இருந்தார். பீட்டர் மூலமே ப்ளாக் என்னும் வார்த்தை நமக்கும் ஆங்கிலத்திற்கும் கிடைத்தது. பின் அதே 99ம் வருடம் ஈவன் வில்லியம்ஸ் "பிளாக்கர்" என்னும் வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினார். நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிளாக்கரை உலகிற்கு அறிமுகப் படுத்தியது இவரும் இவரது சகாவான மேக் ஹரிகலுமே.

பிளாக்கர் வரலாறு:

ஈவன் வில்லியம்ஸ், மேக் ஹரிகல் இந்த இருவரும் சேர்ந்து ஆரம்பித்த நிறுவனமான பைரா லேப்ஸ் (PYRA LABS) மூலம் 1999ம் ஆண்டு பிளாக்கரை இணைய உலகினுள் உலவ விட்டனர். பிளாக்கர் தனது சேவையை இலவசமாகவே தன் பயனர்களுக்கு வழங்கியது. 2001ம் வருடம் நடைபெற்ற அமெரிக்க தேர்தலின் போதும், 2002ம் வருடம் நடைபெற்ற ஈராக் போரின் போதும் பலதரப்பட்ட மக்களால் பிளாக்கரும் மற்ற வலைசேவைகளும் அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டன. பதிவுலகின் சிறப்பான வளர்ச்சிக்கு இந்த இரு நிகழ்வுகளும் மிக முக்கிய காரணியாக கருதப்படுகின்றன. உடனுக்குடனான செய்திகளை ஊடங்களை விட பதிவுலகம் மிக வேகமாக வழங்கத் தொடங்கியதும், நடுநிலையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதுமே பதிவுலகம் பலராலும் கவனிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

இந்நேரத்தில் பிளாக்கர் தளத்தின் இலவசம் என்னும் வார்த்தை மிக அதிக பயனர்களை குறைந்த காலத்தில் பெற்றுத் தந்துவிட்டது. இலவசத்தையும் மீறி பிளாக்கர் தளம் உபயோகம் செய்வதற்கு மிக எளிமையாக இருந்தது என்பதே அதன் முதல் வெற்றிக்கு காரணம்.

அதிகமான பயனர்களை சமாளிக்க முடியாத பைரா லேப்ஸ் தடுமாறத் தொடங்கியது. "பிளாக்கர் தளத்தின் கட்டுமான செலவினை கருத்தில் கொண்டு அதற்கு நன்கொடை வழங்க தயாராக இருக்கும் பயனர்கள் நன்கொடை அளிக்கலாம்" என்று விளம்பரம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். இருந்தும் அவர்களால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பல மாதங்கள் சம்பளம் பெறாமல் உழைத்துக் கொண்டிருந்தனர் பைரா லாப்சின் ஊழியர்கள். இறுதியில் 2003ம் ஆண்டு பிளாக்கரை கூகிள் நிறுவனத்திடம் விற்றுவிட்டு ஈவன் வில்லியம்ஸ் அதன் பொறுப்புகளில் இருந்து மொத்தமாக விலகிக் கொண்டார்.

கூகிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப பலமும், பிளாக்கர் தளத்தின் எளிதான கட்டுமானமும் ஒன்றிணைய பிளாக்கர் இன்னும் வேகமாக உருமாற்றம் பெறத் தொடங்கியது.

மே 9 2004 - கூகிள் நிறுவனம், பிளாக்கர் தளத்தை பல்வேறு மாற்றங்களுடன் அறிமுகப்படுத்தினர். பதிவுலகின் தொடக்க காலத்தில், ஒரு பயனர் தான் விரும்பும் மாற்றங்களை செயல்படுத்த தானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ள வேண்டும். கூகிள் இதை மாற்றி அமைத்தது. கட்டுகோப்பான கோட்பாடுகள் அடங்கிய பல டெம்ப்ளட்களை இலவசமாக தன் பயனருக்கு வழங்கியது. பதிவுகளை சேமிக்கும் அமைப்பை இன்னும் சிறப்பாக மற்றும் எளிமையாக மாற்றி அமைத்தது. மின்னஞ்சல் மூலம் பதிவுகள் மற்றும் பின்னூட்டம் இடும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.

ஆகஸ்ட் 14 2006 -
பிளாக்கரின் முதல் பீட்டா வெர்சனை வெளியிட்டது. பீட்டா என்பதை சோதனை ஓட்டம் என்றும் குறிப்பிடலாம். இந்த பீட்டா ஓட்டத்திற்கு இன்வடார் என்று பெயரிட்டது கூகிள். மேலும் 2007ம் வருடம் முழுமையான பதிப்பை தனது பயனர்களுக்கு வழங்கியது கூகிள் நிறுவனம். அதில் ஆங்கிலம் தவிர்த்து மேலும் சில மொழிகளையும் பயன்பாட்டுக்கு அளித்தது.

பதிவுகளுக்கான லேபில்கள், டெம்ப்ளேட் டிசைன் செய்யும் பொழுது பயன்படுத்தும் DRAG & DROP, அனுமதி பெற்ற நபர்களை மட்டும் வலைப்பூவினுள் அனுமதிக்கும் வசதி( PRIVATE BLOG) என்று பல புதிய வசதிகளை 2007ம் ஆண்டு வெளியிட்ட தனது புதிய பதிப்பில் பிளாக்கர் அறிமுகப்படுத்தியது.

செப்டம்பர் 2009 - பிளாக்கரின் பத்தாவது ஆண்டு விழாவிற்கு தன்னை தயார்படுத்தியது கூகிள். இந்த விழாவின் பொழுது பிளாக்கரில் இன்னும் பல புதிய வசதிகளை அறிமுகம் செய்தது. இந்நேரத்தில் கூகிள் பிக்காசா என்னும் புகைப்பட கோப்புகளை கையாளும் சேவையை தன்னுடன் இணைத்திருந்தது. இதனால் பிளாக்கரில் புகைப்படங்களை கையாளும் வசதி மேம்படுத்தப்பட்டது. உங்களுக்குத் தெரியுமா, உங்கள் பதிவுகளில் இணைக்கப்படும் அனைத்து படங்களும் பிக்காசா மூலமே முன்பு சேமித்து வைக்கப்பட்டது என்று?

நீங்கள் இருக்கும் இடத்தை குறிக்க உதவும் கூகிள் மேப் (Google Map) வசதி இணைக்கப்பட்டது.

பதிவிடும் நேரம் பற்றி பிறர் அறிந்து கொள்ளும் வசதி எற்படுத்தப்பட்டது.

பதிவை பதிவிடுவதற்கு முன் முன்னோட்டம் (PREVIEW) பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ் உட்பட 52 மொழிகள் பிளாக்கர் உடன் இணைக்கப்பட்டது.

ஒரு வலைப்பூவில் ஒரே ஒருவர் தான் ஆசிரியராக இருக்க முடியும் என்ற நிலை மாறி, ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே வலைப்பூவில் ஆசிரியராக செயல்படலாம் என்ற மிக முக்கியமான வசதியையும் பிளாக்கர் ஏற்படுத்திக் கொடுத்தது.

பிளாக்கர் பயனர் கணக்கு பற்றி சில முக்கியமான தகவல்கள்

உங்களுடைய ஒவ்வொரு கூகிள் கணக்கைக் கொண்டும் உங்களால் 100 வலைப்பூக்கள் உருவாகிக் கொள்ள முடியும்.

முதலில் உங்களால் 2000 லேபிலுக்கு மேல் உபயோகப்படுத்த முடியாது, தற்போது அது 5000 ஆக அதிகரிக்கபட்டுள்ளது. ஒரு பதிவில் 20 லேபிலுக்கு மேல் உங்களால் உபயோகப்படுத்த முடியாது, மேலும் அந்த லேபில்கள் 150 எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

1GB ஆக இருந்த பிளாக்கரின் தகவல் கொள்ளளவு தற்போது 5GB வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு வலைப்பூவில் உங்களால் எத்தனை பதிவுகள் வேண்டுமானலும் பதிவு செய்யப்படலாம்.

உங்கள் பதிவு எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். பதிவின் நீளம் அதிகமானால் பக்கங்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஒரு பக்கம் 1MB வரை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் ஒரு பதிவிற்கு அதிகபட்சமாக உங்களால் இருபது பக்கங்கள் மட்டுமே எழுத முடியும்.

உங்கள் வலைப்பூவில் 100 ஆசிரியர்களுக்கு மேல் சேர்க்க முடியாது, மேலும் உங்களுடையது கட்டுபடுத்தப்பட்ட வலைபூ (பிரைவேட் ப்ளாக்) என்றால் 100 மெம்பர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும்.

பாகிஸ்தான், சீனா உட்பட 13 நாடுகளில் பிளாக்கர் பல சமயங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியப் பதிவுலகின் முன்னோடி அமிட் அகர்வால், இவர் இரண்டு முறை சிறந்த தொழில் நுட்பத்திற்கான இன்டிப்ளாக் விருதை பெற்றுள்ளார் (2006 & 08)

தமிழ் பதிவுலகின் முன்னோடி கிழக்குப் பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரி சேசாத்திரி என்று படித்ததாக நியாபகம்.

இம்மானுவேல் சேகரன் (1924: -1957)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:18 | Best Blogger Tips


தேவேந்திரர் மக்களை சாதிய அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேண்டும். அவர்களையும் மனிதர்களாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவர் சிந்தித்தார். சாதிய அடிமைத்தனத்தை அழித்தொழிக்கும் துணிவுமிக்கப் போராட்டத்தில் தனக்கு எந்தநேரமும் மரணம் நேரலாம்/ ஆதிக்க சாதிவெறியர்களால்தான் படுகொலை செய்யப்படலாம் என்ற நிலையிலும் துணிவுமிக்கப் போராட்டத்தை முன்னெடுத்த சாதியொழிப்பு போராளிகளில் முதன்மையானவர் இம்மானுவேல் சேகரன்.

இளமையும் கல்வியும் :

இராமநாதபுரம் மாவட்டம்/ முதுகுளத்தூர் தாலுகா செல்லூர் கிராமத்தில் (பரமக்குடியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ளது) 1924ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் நாள் சேது என்ற வேதநாயகம் - ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அக்காலத்திலேயே ஆங்கிலக் கல்வி கற்றவர். இவரது தந்தை வேதநாயகம் ஆசிரியராகவும்/ வழக்கறிஞராகவும் பணியாற்றினார். களையூர் முதற்கொண்டு பல கிராமங்களில் தனியாகப் பள்ளிகளை நடத்தி வந்தார். ஆங்கிலத்தையும்/ கணிதத்தையும் திறமையாகக் கற்பிப்பதில் புகழ் பெற்றிருந்தார். பரமக்குடியில் புகழ்பெற்ற நாட்டு வக்கீல்களில் (பர்ன்ற்)) ஒருவராக திகழ்ந்தார். இளமையிலேயே தனது தந்தையின் சமூகப்பணியால் ஈர்க்கப்பட்டார் இம்மானுவேல். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். ((இட்ன்ழ்ஸ்ரீட் ர்ச் நஜ்ங்க்ங்ய் ஙண்ள்ள்ண்ர்ய்)பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். அவர் படிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தைப்போலவே/ விளையாட்டிலும் திறமையாக இருந்தார். கால்பந்து விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார்1.


இராணுவத்தில் பணி

சுவார்ட்ஸ் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே அவர் இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இராணுவத்தில் அவில்தாராகப் பொறுப்பேற்றிருந்தார். இதன் மூலம் அவர் பலமொழிகளைத் தெரிந்தவராக விளங்கினார். ஆங்கிலம்/ உருது/ இந்தி/ ரோமன் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்2.இராணுவ வாழ்க்கையில் அவர் அனுபவித்த சமத்துவம்/ மரியாதை போன்றவற்றைத் தனது சமுதாய மக்கள் அனுபவிக்க முடியவில்லையே என வேதனைப்பட்டார். என் தாய் நாட்டையும்/ மக்களையும் அன்னியர்களிடமிருந்து/ இன்னுயிரைத் தந்து காக்க நான் தயாராக இருக்கும் போது/ என் சமூக மக்களை இந்த இழிநிலையிலிருந்து மீட்க ஒருவரும் இல்லையே என வேதனையடைந்தார். 'என் நாட்டைக் காக்க ஏராளமான இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள் ஆனால்/ என் சமூகத்தினரைக்காக்க எந்தத் தலைவன் இருக்கிறான்? இந்தக் கேள்வியினால் என் நாட்டைக் காப்பதை விட என் சமூக மக்களைக் காப்பதே என் முதல் கடமை' எனக் கூறி அவில்தார்ப் பணியை உதறித் தள்ளினார்.
 
திருமணமும் இல்வாழ்வும்:

1946ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் வீராம்பல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் கிரேஸ் என்ற ஆசிரியைய்த் தனது இலட்சிய வாழ்க்கையின் துணையாக ஏற்றார்.சமூக விடுதலைப் பணிக்குத் திருமண வாழ்க்கைத் தடையில்லைள என்பதையுணர்ந்த தியாக உள்ளத்தோடு குடும்பச் சுமையை/ தனது ஆசிரியப் பணியோடு சேர்த்து சுமந்தார் அமிர்தம் கிரேஸ்.அம்மையார் அவர்கள் வீராம்பல் எனும் கிராமத்தில் 1923ஆம் ஆண்டு சாமுவேல்/ மரியம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார். இராமநாதபுரம் ஆண்ட்ரூஸ் பள்ளியில் எட்டாம் வகுப்பை 1938 ஏப்ரல் மாதம் முடித்தவுடன் ஆசிரியப் பயிற்சி பெற்று ஆசிரியையானார்.இந்த இலட்சிய தம்பதிகளுக்கு மேரிவசந்த ராணி/ பாப்பின் விஜய ராணி/ சூரிய சுந்தரி பிரபா ராணி/ மாணிக்கவள்ளி ஜான்சி ராணி ஆகிய நான்கு பெண் மக்கள் பிறந்தனர்.தனது இலட்சிய வாழ்விற்கு உறுதுணையாக இருந்தார். தியாக உள்ளத்துடன் ஆசிரியப்பணியையும்/ குடும்பப் பொறுப்புகளையும் மனநிறைவுடன் கவனித்துக் கொண்டார்.திருமணத்திற்கு பிறகு கொஞ்சமும் தளர்வோ சோர்வோ இன்றி தீரமுடன் இம்மானுவேல் 'மக்கள் விடுதலைப்பணியில்' ஈடுபட்டதற்கு அமிர்தம் அம்மையாரின் தியாகமும்/ அற்ப்பணிப்புமே காரணம் எனலாம்..இளமையிலேயே கணவனை இழந்த போதிலும் அதே தியாக/ அற்பணிப்புடன் அம்மையார் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். இறுதிவரை கணவரின் இலட்சியத்திற்கு உறுதுணையாக இருந்த அம்மையார் 1985ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் காலமானார்.
 
காங்கிரஸில் இம்மானுவேல்

தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரை இராமநாதபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அக்காலத்தில் தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. இப்பணியில் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக்கொண்ட பார்ப்பனர் 'அரிசனத் தந்தை' என அழைக்கப்பட்ட திரு. வைத்தியநாத அய்யர். இவர் இந்தப் பணியை மதுரை மாவட்டத்தை மையமாக வைத்துச் செய்தார்.காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்த திரு. கக்கன் அவர்களோடு இம்மானுவேல் இணைந்து தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். திருநெல்வேலியைச் சார்ந்த திரு. வைகுண்டம் எம்.எல்.ஏ அவர்களோடும் இப்பணிக்காக பல கிராமங்களுக்குச் சென்று வந்தார். வீராம்பல்/ கருமல்/ பேரையூர்/ மருதகம்/ பெரியஇலை/ காக்கூர் சிக்கல் முதலிய கிராமங்களில் இம்மானுவேல் பல கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்த ஊர்களுக்கு இவர் சென்று விட்டாலே மக்கள் திரண்டு வருவார்கள். ஊரின் பொது இடத்திலோ/ மரத்தடியிலோ அல்லது வீட்டுத் திண்ணையிலோ கூட்டங்கள் நடத்தினர். அரிக்கேன் விளக்கு/ பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில்தான் கூட்டங்கள் நடந்தன.'இந்தநாடு சுதந்திரம் அடைந்து விட்டது. ஆங்கிலேயரின் ஆட்சியை காங்கிரஸ் பேரியக்கம் விரட்டிவிட்டது. இனியும் நாம் பிறருக்கு பயந்து கொண்டு அடிமைகள் போல வாழவேண்டியதில்லை. சட்டமும்/ அரசும் நமக்கு ஆதரவாக இருக்கின்றன; இனி நாம் ஆதிக்க சாதியினருக்கு தலை வணங்கும் ஈனப்பிறவிகளாக இருக்க வேண்டியதில்லை/ நம்மை இழிவுபடுத்தும் கொடுமைகள் அனைத்திற்கும் சாவுமணி அடிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது' என்ற எழுச்சிமிகு பேச்சுக்கள் இளைஞர்கள் மனதில் ஆவேசமான விடுதலை உணர்ச்சியைத் தூண்டிவிட்டு போராட்ட நெருப்பைப் பற்றி எரிய வைத்தது.காங்கிரஸ் கட்சியின் மூலம் காமராஜ்/ கக்கன் ஆகியோரோடும் இவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.இராமநாதபுரம் மாவட்டத்தின் காங்கிரஸ் கூட்டங்களை எல்லாம் 'தீண்டாமை எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களாக' மாற்றிய பெருமை இம்மானுவேலைச் சாரும். மாவீரன் இம்மானுவேல் மேடைகளில் பேசினால் அனல்பறக்கும். கேட்பவர் இரத்தம் கொதிக்கும்; அந்த அளவிற்கு மேடைப் பேச்சிலேயே வீரஉணர்வூட்டுவார்.'நாய்கள் கூட குளத்தில் சுதந்திரமாக தண்ணீர் குடிக்கிறது. ஆனால்/ தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் குடிக்க முடிவதில்லை. இந்த இழிநிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது' என்று வீரமுழக்கமிட்டார்.அவர் காலத்தில் இருந்த அரசியல்வாதிகளைப் போல வார்த்தைஜாலங்களாலும் வெற்று ஆரவாரத்தாலும் பாமர மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேடவில்லை. எதையும் நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுகின்ற நெஞ்சுறுதி அவரிடம் இருந்தது. அதே நேரத்தில் பிறரை அநாகரீகமாகவோ/ தரக்குறைவாகவோ பேசியதுமில்லை.இவருடன் எப்போதும் இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்; கிராமங்களில் கூட்டம் நடத்தும் போது அவருடன் பல கிராமங்களுக்குச் சென்று வருவார்கள். குறிப்பாக அவருடன் பல ஊர்களில் மக்கள் பணி செய்தவர்கள்.கமுதி : திரு. முத்துமாணிக்கம்கருமல் : திரு. ஜெயராஜ்கன்னிச்சேரி திரு. சந்தானம்கூரியூர் : திரு. எஸ்.கே. வேலுபரமக்குடி : திரு. பாலச்சந்திரன்சித்தூர் : திரு. காளியப்பன்.காங்கிரஸில் உறுப்பினராய்ச் சேர்ந்த நாளில் இருந்து சாகும்வரை தூய வெள்ளை கதராடையே உடுத்தி வாழ்ந்து வந்தார்
 
வெங்கட்டான் குறிச்சி கொலை முயற்சி:

இம்மானுவேல் காண்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வசீகரத் தோற்றமுடையவர். எளிமையான வாழ்க்கையும்/ இனிய சுபாவமும் அவரை மக்களுடன் நெருக்கமாக பிணைத்தது. கணீரென்று சத்தமாகத்தான் எப்போதும் பேசுவார். எதற்கும் அஞ்சாதவர்/ பிரச்சனைகளை துணிச்சலுடன் அணுகும் மனோதிடம் அவரிடம் இயல்பிலேயே இருந்தது. குற்றமிழைத்தவர்கள் யாரானாலும் நேருக்கு நேர் சந்தித்து தவறை சுட்டிக் காட்டும் அஞ்சாநெஞ்சமுள்ளவர்.அதே நேரத்தில் கட்சித்தலைவர்களிடமும் பெரியோரிடமும் மரியாதையுடன் பழகுவார். தனது குடும்பத்தையும் சொந்த நலனையும் விட சமுதாயத்தையே பெரிதாக நேசித்தார். இசையில் ஈடுபாடு உள்ளவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்/ நாமக்கல் கவிஞர் ஆகியோரது பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. ஏ. எம். ராஜா பாடல்களை விரும்பிப்பாடுவார். சிலம்பாட்டத்தில் முழுமையான தேர்ச்சி பெறாவிட்டாலும் கூட அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்தார்.பிறப்பினால் கிறித்தவராக இருந்தாலும் இம்மானுவேல் தாழ்த்தப்பட்ட இந்துக்களிடையே எள்ளளவும் பாரபட்சமின்றி பழகி வந்தார். இம்மானுவேல் ஒரு கிறித்தவன்/ அவனை எப்படித் தலைவனாக ஏற்றுக் கொண்டீர்கள்? என்ற சாதி -இந்துத் தலைவர்களின் பிரச்சாரத்தை முறியடிக்க எண்ணிய திரு.கக்கன் இம்மானுவேலின் பெயரை 'இம்மானுவேல் சேகரன்' என மாற்றினார்.செல்லூர் - வீட்டை காலிசெய்து வெங்கட்டான் குறிச்சிக்கு தட்டு/ முட்டு/ சாமான்களை வண்டியில் ஏற்றி வந்த அலுப்பில் இம்மானுவேல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால்/ சாதி வெறியர்கள் இமைப்பொழுதும் தூங்காது அவரைக் கொல்லத் தருணம் தேடி அலைந்தனர். அன்றிரவு வீட்டின் கூரைமீதேறி ஓட்டைப் பிரித்து எடுத்தனர். திருடர்கள் போல அனைவரும் தூங்கிவிட்டனரா இல்லையா? என்பதை அறிய/ ஒரு கல்லை வீட்டிற்குள் போட்டனர். அக்கல் மூத்த குழந்தை தலையருகில் விழவே விழித்துக் கொண்டது. குழந்தை இம்மானுவேலை எழுப்ப கட்டிலில் படுத்திருந்தவர் விழித்துப் பார்த்ததும் திடுக்கிட்டார். வரிசையாக கூரையில் ஓடுகளே இல்லை.'யார்ரா அது எவன் ஓட்டைப் பிறிச்சவன்?' என்று சத்தம் போட்டுக்கொண்டே கதவைத் திறந்து வெளியே வந்தார். கூரையிலிருந்து குதித்து பத்துக்கும் குறையாத கும்பல் தலைதெரிக்க ஓடிக் கொண்டிருந்தது. மனைவி சொல்லியும் கேளாது கூட்டத்தினரைத் தான் ஒருவராகவே துரத்தியடித்தார். இம்மானுவேல் குரலை கேட்டதும்/ குலைநடுங்கி வயற் காட்டிற்குள் கூட்டம் ஓடி ஒளிந்தது.
 
தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள் துண்டு கிளாஸ் போராட்டம்:

அந்நாளில் தமிழகத்தின் பல கிராமங்களில் பின்பற்றப்பட்டு வந்த தீண்டாமைக் கொடுமைகளில் இதுமொன்று. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்ப்பொதுவிடங்களில் சமமாக நடத்தப்படுவதில்லை. குறிப்பாக உணவகங்கள்/ டீ கடைகளில் இம்மக்களுக்கென்று தனிக்குவளை (சிரட்டை அல்லது கொட்டாங்குச்சி) வைக்கப்பட்டிருக்கும். இக்குவளையில்தான் அம்மக்களுக்குக் காப்பி அல்லது டீ தரப்படும். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் டீ குடிப்பதற்கு முன்பு அக்குவளையைத் தானே கழுவிக் கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பதற்கென்று கடைக்கு வெளியே தகரக் குவளை அல்லது சிரட்டை கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். அவைகளைத்தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும்.இக்கொடுமைக்கெதிராக இம்மானுவேல் மக்களைப் போராடத் தூண்டினார். 'துண்டுகிளாஸ்' வைத்துள்ள கடைகள் மீது போலீசில் புகார் செய்து தண்டணை பெற்றுத்தந்தார். சில கடைகளில் துண்டுகிளாஸ்களைக் கடைக்கு முன்னாலேயே உடைத்தெறிந்தார். சிலர் இப்போராட்டத்தால் டீ கடைகளை மூடிவிட்டனர். இம்மானுவேல் இப்போராட்டத்தை முது குளத்தூர் பரமக்குடியைச் சுற்றியிருந்த பல கிராமங்களில் மிகத் தீவிரமாகக் செயல்படுத்தினர்.
 
குடிதண்ணீர்ப் போராட்டம்:

தெருநாய்கூட ஊர்க்குளத்தில் தண்ணீர் குடிக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களால் தண்ணீர் எடுக்க முடியவில்லை' இவ்வாசகத்தை இம்மானுவேல் தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் குறிப்பிட தவறுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் ஊர்ப் பொதுக் கிணற்றிலோ அல்லது குளங்களிலோ குடி தண்ணீர் எடுக்க முடியாது. சாதி இந்துப் பெண்கள் தங்கள் பாத்திரங்களில் பிடித்து ஊற்றுவதையே கொண்டுவர வேண்டும். இப்படி ஒரு அவல நிலை இன்றைக்கும் இந்தியாவின் பல கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இம்மானுவேல் இப்பிரச்சனைக்கும் சட்டத்தின் துணையோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சம உரிமை கிடைக்கப் போராடினார்
 
கொண்டுலாவிப் போராட்டம் :

இக்கிராமம் முதுகுளத்தூரிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் அரசு வெட்டித்தந்த கிணறு ஒன்றிருந்தது. இக்கிணற்றில் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்கக் கூடாதென்பதற்காகச் சாதி இந்துக்கு மலத்தையும்/ சாணத்தையும் கிணற்றில் அள்ளிப் போட்டனர்.தாழ்த்தப்பட்டவர்கள் அரும்பாடுபட்டுக் கிணற்றைச் சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் எடுத்தனர். பின்னரும் சாதி இந்துக்கள் மலத்தையும்/ சாணத்தையும் போட்டதால் மக்கள் இம்மானுவேலிடம் முறையிட்டனர்.இப்பிரச்சனைக்கும் சட்டத்தின் துணையோடு தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சம உரிமை கிடைக்கப் போராடினார்
இம்மானுவேல் படுகொலை -முதுகுளத்தூர் கலவரமும்

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.



இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.
"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.
அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.
அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தேவேந்திர மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தேவேந்திரர்கள் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தேவேந்திர பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.
இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். தேவேந்திரர்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் தேவேந்திரர் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தேவேந்திரர்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தேவேந்திரர்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தேவேந்திரர்கள் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)
இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு தேவேந்திர இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.
கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."
கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."
"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."
முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு:
"On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".
கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.
"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."
திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத தேவேந்திரர்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.
திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.
முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு தேவேந்திரன். தேவேந்திரர்கள் வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.
முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.இம்மானுவேல் கொலை செய்யப்பட்டதும், இரு தரப்பிலும் மோதல்கள் பூத்து நின்ற வேளையில் பெரியார் ஒருவர் மட்டுமே 'தேவர், காலித்தனம் செய்கிறார்.அந்த ஜாதி வெறியனை பிடித்து உள்ளே போட்டுக் கலவரத்தை நிறுத்துங்கள்' என்று காமராஜருக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைத்தார்.
சாதியின் பேரால், அடக்குமுறையை ஏவி 'குட்டி சர்வாதிகாரி'யாகத் திகழ்ந்த தேவர், தனது கட்டளைக்குக் கீழ்ப்படிய அடியாள் படை ஒன்றை தேவேந்திரர்கள்/தேவர்கள் மூலம் கட்டி இருந்தார். முன்னாள் ராணுவ வீரரான மவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் தேவேந்திரர்களிடையே விழிப்புணர்வு ஊட்டி, அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தது, தேவரக்கு எரிச்சலை உண்டுபண்ணி, அது பரமக்குடியில்கொலையாக முடிந்ததென்பது வரலாறு.
http://2.bp.blogspot.com/-fGlfvHC6JG0/Tm3IX5pKeBI/AAAAAAAANF8/Te7e4kUetU0/s1600/IMG_0187.JPG 
நன்றி தெரிந்ததை சொல்கிறேன்