இந்து

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:58 | Best Blogger Tips
இந்து என்ற ஆன்மாவிற்கு என்றும் அழிவுகிடையாது. ஆனால், அதைத் தாங்கி நிற்கும் பாரதம் என்ற பூதஉடல் அழியக் கூடியது. இதை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். எனவே, கும்பகர்ண தூக்கத்திலிருந்து இந்து தலைவர்களும் குருமார்களும் விடுபட்டு, ஊக்கத்துடன் செயல்படவேண்டும்.

அமெரிக்காவில் மொத்தம் 1.7 மில்லியன் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இதில் 95 சதவிகிதம் இந்துக்கள். மேலும் சில புள்ளி விபரங்கள் –

1. அமெரிக்க இந்தியர்களின் வாங்கும் சக்தி – 20 பில்லியன் டாலர்கள்
2. 30% ஹோட்டல்களுக்கும், மோட்டல்களுக்கும் இந்தியர்களே உரிமையாளர்கள்
3. 50% இந்தியர்கள் வீடுகளுக்கு உரிமையாளர்கள்
4. 65% மேலாளர், தொழில்நிபுணர், பொறியியல் துறைகளில் உள்ளவர்கள் இந்தியர்கள்
5. 80% இந்தியர்கள் கல்லூரிப் பட்டம் பெற்றவர்கள்
6. 90% பேர் நகரங்களில் வாழ்பவர்கள்
7. 100% பேர் தங்களது இந்தியப் பரம்பரை பற்றிப் பெருமிதம் உடையவர்கள்
8. ஒரு அமெரிக்க இந்தியரின் சராசரி வருமானம் 88,000 டாலர்கள்; சராசரி அமெரிக்கரின் வருமானம் 55,000 டாலர்கள்
9. 38% அமெரிக்க மருத்துவர்கள் இந்தியர்கள்
10. 36% நாஸா விஞ்ஞானிகள் இந்தியர்கள்
11. 34% மைக்ரோஸாஃப்ட் கம்பனியில் வேலைபார்ப்பவர்கள் இந்தியர்கள்
12. 28% ஐபிஎம் கம்பனியில் வேலைபார்ப்பவர்கள் இந்தியர்கள்
13. 17% இண்டெல் கம்பனியில் வேலைபார்ப்பவர்கள் இந்தியர்கள்
14. ஸிலிக்கான் வேலியில் உள்ள ஸான் ஹோஸே நகரில் ஒரு சிறு இந்தியாவையே காணலாம்

இந்த புதுயுக இந்துக்கள் இந்துமதத்தின் பெருமையை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்கின்றனர். இப்படியான சாத்தியக்கூறுகள் இதற்குமுன் இல்லை.

இந்த வருடம் ஷாங்காயில் விஜய் சௌத்ரி என்ற இந்து தொழில்அதிபருடன் உலகச் சந்தையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஸ்வாமிநாராயண் ஸ்தாபனம் பல உலகநாடுகளுக்கு இந்துமத தர்மத்தை எடுத்துச் செல்கிறது. இதில் மஸ்கட் என்ற இஸ்லாமிய நாடும் அடக்கம்.

போர் நடந்து முடிந்த இராக்கில் அமைதி சூழலை ஏற்ப்படுத்த சொற்பொழிவுகள் ஆற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அழைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் டைம் பத்திரிக்கை ஒரு பெரிய கட்டுரையை முக்கிய கட்டுரையாக வெளியிட்டது. அதன் தலைப்பு “On the healing powers of yoga and chanting of OM”.

காயத்திரி மந்திரத்தின் எதிர் ஒலி ரோம், ந்யூ யார்க், பீஜிங் போன்ற இடங்களில் இன்று ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த சாதனைகள் எல்லாம் சாத்வீக இந்துவால் வெற்றிகரமாக நடத்திகாட்ட முடிகிறது.

தாங்கள் குடிபெயர்ந்த நாட்டில் இவர்கள் தவறியும் குண்டு வீசமாட்டார்கள். அதே நேரத்தில் தங்களது சொந்தநாட்டின் கலாச்சார பெருமையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பரமாரிபோ என்ற இடத்தில் சுரிநாம் நகரத்தில் ஓடும் நதியை இந்துக்கள் கங்காநதிபோல் போற்றி வணங்குகின்றனர். மொரிஷீயஸின் போர்ட் லூயிஸில் உள்ள ஒரு சிறிய நதிக்கு கங்கா டலப் என்று பெயர் சூட்டியுள்ளனர். பங்களாதேசத்தில் 1971ஆம் ஆண்டு இடிக்கப்பட்ட காளிகோவிலை புதுப்பிக்க இந்துக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்.

இந்த புதுயுக இந்து வித்தியாசமானவன். மிகுந்த தைரியத்துடன் துணிகரமாக புதிய புதிய யுக்திகளை மேற்கொண்டு பல சாதனைகளை செய்ய துடிக்கிறான். அவனது அரசியல் எண்ணங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், யாரும் இந்தியன் இந்து என்ற முத்திரையை எல்லா இடத்திலும் பதிவுசெய்ய தவறவில்லை. ஆன்மீக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மாதா அமிர்தானந்த மயி போன்றவர்கள் உலக அரங்கில் புகழ் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

சமீபத்தில் ஸஞ்ஜீவ் மெஹ்தா என்ற மும்பையை சேர்ந்த தொழிலதிபர் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிறுவனம் ஒரு காலத்தில் உலகில் பல இடங்களில் காலனி ஆதிக்கம் செலுத்தியது. அதில் இந்தியாவும் ஒன்று.

ஸ்வாமி ராம் தேவ் மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக யோகாவை தன் பதஞ்சலி பீடம் மூலம் புயல்போல் பரப்பிக்கொண்டிருக்கிறார். இதை தவிர பல இந்திய குருமார்கள் உலகில் பல இடங்களில் இந்து ஆசிரமங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்கான், ஸ்வாமி நாரயண், ஸன்ஸ்தா, ஆர்ட் ஆஃப் லிவிங் போன்ற அமைப்புக்கள் வெளிநாடுகளில் உள்ள சர்ச்சுகளை விலைக்கு வாங்கி அதைக் கோவில்களாகவும் ஆசிரமங்களாகவும் மாற்றி வருகிறார்கள்.

இவர்கள் ஆன்மீகத்தை தவிர பல சமூகசேவைகளையும் அங்கே செய்து கொண்டிருக்கிறார்கள். 2005ஆம் ஆண்டு ரீடா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க டெக்ஸாஸில் உள்ள இந்து கோவிலில் அடைக்கலம் அளிக்கப்பட்டது.

மாதா அமிர்தானந்த மயி கத்ரினா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தார்.

நியூஸ் வீக் என்ற பிரபல பத்திரிகையில் லிசாமில்லர் என்பவர் 2009இல் ஒர் ஆய்வு கட்டுரையை வெளியிட்டார். அதன் தலைப்பு “நாங்கள் எல்லோரும் இந்துக்கள்”.

24 சதவிகித அமெரிக்கர்கள் இன்று மறுபிறவியில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். 6 சதவிகித அமெரிக்கர்கள் இறந்தபின் எரிப்பதுதான் சிறந்தது என்று ஒத்துக்கொண்டுள்ளார்கள். கிறுத்துவம் இன்று உலகெங்கும் தேய்ந்துகொண்டிருக்கிறது. பல சர்சுகள் விலைக்கு விற்கப்படுகின்றன. (பாதரிமார்களின் பாலியல் குற்றத்திற்கான நஷ்டஈட்டு பணம் தருவதற்காக). சர்ச்சுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மங்கிக்கொண்டுவருகிறது.

proud_hindu3பல கிறுத்துவர்கள் ஏசுவிற்கும் பையிளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். பைபிள் ஏசுவிற்குப் பின் 200 ஆண்டுகள் கழித்து ஒரு மாபியா கும்பலால் எழுதப்பட்டது. இன்றும் இந்தியாவில் பைபிள் திரும்ப திரும்ப பல்வேறு மாற்றம் பெற்று வருகிறது. அதைப்போல் இஸ்லாமிலும் சொல்லிக் கொள்கிற மாதிரியான ஆன்மீகம் கிடையாது. இன்று உலகில் மக்கள் ஆன்மீகத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்துமத ஆன்மீகம் ஒரு மருந்துபோல் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

எனவே, இந்து என்ற ஆன்மாவிற்கு என்றும் அழிவுகிடையாது. ஆனால், அதைத் தாங்கி நிற்கும் பாரதம் என்ற பூதஉடல் அழியக் கூடியது. இதை அழியாமல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் கடமையாகும். எனவே, கும்பகர்ண தூக்கத்திலிருந்து இந்து தலைவர்களும் குருமார்களும் விடுபட்டு, ஊக்கத்துடன் செயல்படவேண்டும்.

கோடையில் எது சூடு எது குளிர்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:54 | Best Blogger Tips

தயிர் சூடுஆனா, மோர் குளிர்ச்சி, மாம்பழம் சூடுஆனா மாம்பழ மில்க் சேக் குளிர்ச்சி, பப்பாளியும் பாலாவும் வெயில் நேரத்தில் வேண்டவே வேண்டாம். எக்கச்சக்க சூடு….’

உணவு விஷயத்தில் தமக்குத் தெரிந்ததையும், தெரியாததையும் சேர்த்துக் குழப்பி, இப்படி சில தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் எப்போதும் உலவுவதுண்டு. யாரோ ஒருவருக்கு ஏற்றுக்கொள்ளாமல் போனதால், குறிப்பிட்ட அந்த உணவு, எல்லாருக்கும் பிரச்னை தருவதில்லை.

வெயிலின் உக்கிரத்தால் உடலிலுள்ள நீர்ச்சத்து வறண்டு கொண்டே இருக்கும். அதை சரிசெய்ய, இழந்த நீர்ச்சத்தை உடலுக்குத் திருப்பித் தர வேண்டும். நீர்ச்சத்து என்றதும், ஜூஸ்தான் குடிக்க வேண்டும் என்பது பலரது அபிப்ராயம். ஜூஸ் என்றில்லாமல், எல்லா திரவ உணவுகளும் .கே.
நிறைய நிறைய தண்ணீர் குடியுங்கள். தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் முடிந்த போதெல்லாம், ஞாபகம் வரும்போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்.

உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிற போது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

பழங்களை அப்படியே சாப்பிடுவது பெஸ்ட்! ஜூஸாக எடுக்கும்போது, அவற்றிலுள்ள நார்ச்சத்து பறிபோவதுடன், சுவைக்கு சர்க்கரை வேறு சேர்த்துக் கொள்கிறோம். ‘சான்ஸே இல்லைஜூஸாக தான் குடிப்பேன்என அடம் பிடிக்கிறவர்கள், பழத்தின் கசப்பான தோல் பகுதியையும், விதைகளையும் நீக்கிவிட்டு, சர்க்கரை சேர்க்காமல், அப்படியே மிக்சியில் அடித்து கெட்டியாகக் குடிக்கலாம்.

நீர்மோர் தாகத்துக்கு மிக நல்லது. கூடுதல் சுவைக்கு அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்துச் சேர்த்துக் குடிக்கலாம்.
பால் குடிக்க அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு, அதே பாலை லேசாகக் குளிர வைத்து, அதை ரோஸ் மில்க்காகவோ, பாதாம் மில்க்காகவோ மாற்றிக் கொடுக்கலாம்.

அப்படிக் குளிர்ச்சியாகக் கொடுக்கும் போது, அதை ஒரே மடக்கில், தொண்டைக்குள் விழுங்காமல், சிறிது நேரம் நாக்கிலேயே வைத்திருந்து, மெல்ல விழுங்கினால், தொண்டை மக்கர் பண்ணாது. வயதானவர்கள், வெயில் காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
Thanks to தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! ஆஸ்துமா

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:52 | Best Blogger Tips
ஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது.
 ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்:
ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.
அறிகுறிகள்:
சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.
சித்த மருத்துவத்தில்     எளிய தீர்வுகள்:
முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு  கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம்.
 உத்தாமணி இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.
 முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம்.
 நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து அதில் 500 மிகி அளவு மூன்று வேளைகள் தேனில் குழைத்து அருந்தலாம்.
 திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
 செடி, திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.
 கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து இருவேளை உண்ணலாம்.
 சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம்.
 லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம்.
 இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம்.
 இம்பூறல் இலைப் பொடியுடன் இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து அடையாகச் செய்து சிற்றுண்டி போலச் சாப்பிடலாம்.
 ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து அருந்தலாம்.
 மூங்கிலுப்பை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் கொடுக்கலாம்.
 மூக்கிரட்டை வேரை அரைக் கைப்பிடி எடுத்து ஒன்றிரண்டாகச் சிதைத்து, 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து இருவேளை அருந்தலாம்.
 மிளகரணை இலையை உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.
 சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம்.
 துளசி, தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.
தவிர்க்க வேண்டியவை:
   கிரீம் பிஸ்கட், குளிர்பானங்கள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், எண்ணெய், கொழுப்பு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, வாசனைத் திரவிங்கள், ஜஸ்கிரீம், கத்திரிக்காய், அதிகக் குளிர், பனி, குளிரூட்டப்பட்ட அறை.
 Thanks to டாக்டர் விகடன்