வாஸ்து - பொதுவான குறிப்புகள் ( Vaasthu General Hints )

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:38 | Best Blogger Tips
நாம் வாழும் வீடு , வாஸ்து முறைப்படி சரியாக அமைந்துவிட்டால் உங்கள் வாழ்வில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் வெற்றி பெறும்.

வாஸ்து - பொதுவான குறிப்புகள் ( Vaasthu General Hints )
கிழக்கு - குடிநீர் ஆதாரம்
தென் கிழக்கு .. சமையலறை
தெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை
மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை
வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை
வடக்கு ... குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்துக் கொள்ளும் படியாக அமைக்கவும்.
வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.

மேற்குறிப்பிட்ட விளக்கங்களுடன், மனையில் உள்ள அறைகள் கீழ்க்கண்டவாறு உள்கூடு அளவுகள் அமைத்து (நீள அகலங்கள்) சிறப்பாக செயல்பட வேண்யுள்ளது. கடவுள் அருள் கிடைக்கும் வீட்டில் சுபிட்சம் பொங்கும். செல்வமும், போகமும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும், நிறைந்திருக்கும்
8 அடி பலன்
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். உயர்ந்த பதவிகள் கிட்டும். பொருளாதார நிலை மிக வேகமாக உயர்ந்துவிடும். தெய்வ அருள் உண்டு.
10 அடி. பலன் பொருளாதார நிலையில் சரிவு என்பதே ஏற்படாது. செல்வநிலை மேலும், மேலும் உயர்ந்து கொண்டே போகும். எதிர்பாராத வகையில் பொருள் வரவு ஏற்படும். திடீர் யோகம் உண்டு.
11 அடி பலன்எந்த காரியத்திலும் தோல்வி என்பதே ஏற்படாது. வெற்றிக்கு மேல் வெற்றியாகக் குவியும். குடம்பத்தில் குதூகலம் நிலவும் செல்வ நிலை உயரும்.
16 அடி பலன்
சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். பொருளாதார நிலை மிக வேகமாக உயரும் பலவகையான பொருள்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
17 அடி பலன்
தொழில் அல்லது வியாபாரத்தில் நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும். எந்த காரியத்திலும் வெற்றி காணலாம்.
20 அடி பலன்
பண்ணைத் தொழிலில் சிறப்பான லாபம் ிகடைக்கும். பல கைகளிலும் வருமானம் பெருகும். உ்லாசமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
21 அடி பலன்
வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. எல்லா முயற்சிகளிலும் வெற்றியே கிடைக்கும். பொரளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பொன்னும பொருளும் சேரும்.
22 அடி பலன்
மனதில் தைரிய உணர்வு மேலோங்கி யிருக்கும். எதிரிகளின் சதித் திட்டங்களை எளிதாக முறியடிக்க முடியும், வீண் பழிகள் வேகமாக அகலும்.
26 அடி பலன்
உற்சாகமும், உல்லாசமும் நிறைந்த வாழ்க்கை அமையும். போகமும் யோகமும் தேடிவரும். பொருளாதர நிலை செழித்தோங்க, பொன்னும் பொருளும் சேரும்.
27 அடி பலன்
பொது வாழ்க்கையில் புகழும் செல்வாக்கும கிட்டும். பலரும் வலிய வந்து, உதவி செய்வார்கள். அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் தேடிவரும்.
28 அடி பலன்
கடவுள் அருள் உண்டு. வேதனைகளும், துன்பங்களும். விலகி ஓடும். இன்பமாக வாழக்கை அமைக்க எல்லா முயற்சிகளிலும எளிதாக வெற்றி கிட்டும்.
29 அடி பலன்
பண்ணைத் தொழிலில் பால் வியாபாரம் ஆகியவற்றில் நிறைந்த லாபம் கிட்டும். வாழ்க்கயைில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
30 அடி பலன்
புத்திர பாக்கியம் தாராளமாக இரக்கும். எதிர்பாராத சொத்துக்கள் கிட்டும். திடீர் யோகம் உண்டு. பொருளாதார நிலை மகவும சிறப்பாக இருக்கும்.
31 அடி பலன்
நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வார்கள். தீயவர்கள் விலகியோடுவார்கள். பொன்னும் புகழும் கிட்டும். வாழ்க்கையில் உயர்வான நிலை உண்டாகும் காரியசித்தி உண்டு.

பொதுவாக வீடு கட்டும் தாய், தந்தை மூத்த சகோதரர், ஆசிரியர், மூத்த உறவினர்கள் வாழும் பகுதிக்கு வடக்கு திசையிலும், கிழக்குத் திசையிலும், தான் மனை வாங்க வேண்டும்.. என்பது சாஸ்திரங்கள் கூறும் கருத்தாகும்.

வீட்டின் பகுதிகள்

அலுவலக அறை வடமேற்கு திசை
புத்தக அறை தென்மேற்குத் திசை
சமையல் அறை தென் கிழக்குத் திசை
உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை
படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
குளியல் அறை கிழக்கு திசை
சேமிப்பு அறை வடக்கு திசை.
கழிவறை வட மேற்கு திசை.

 
 மேலே கூறியவை அனைத்தும், வாஸ்து சம்பந்தப்பட்ட பொதுவான குறிப்புகளாகும்.

மெய்ப்பொருள்

thanks toஉலக தமிழ் மக்கள் இயக்கம்

முகத்தில் எண்ணெய் வலிகிறதா இதை படிங்க உபயோகமான தகவல் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:36 | Best Blogger Tips
யாராவது உங்கள் முகத்தைப் பார்த்து ஆஹா,.. என்ன மினுமினுப்புஉங்கள் முகத்தில்? என்று ஆச்சரியப்பட்டால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். முதல் காரணம் உங்கள் முகம் நிஜமான ஆரோக்கிய மினுமினுப்பில் இருப்பது. இரண்டாவது காரணம் எண்ணெய் வழிவது. பிரச்சினை என்னவென்றால் நம் ஊரில் பெரும்பாலான முகத்தின் மினுமினுப்புக்கு எண்ணெய் வழிவதே காரணமாக இருக்கிறது. இது அழகுக்கும் கேடு. முகத்தின் ஆரோக்கியத்திற்கும் கேடு.

முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று எப்படி உறுதி செய்வது?

ரொம்பவும் எளிமையான வழி ஒன்று இருக்கிறது. காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடையுங்கள். அதில் பசை இருந்தால் உங்கள் முகம் ஆயில் ஃபேஸ்! அவ்வளவுதான்.

ஏன் என் முகத்தில் மட்டும் ஆயில் வழிகிறது?

நீங்கள் இதற்கு உங்கள் பாட்டி, முப்பாட்டி என்றுதான் குறை சொல்ல வேண்டும். ஆம் இது மரபு வழியாகத்தான் வருகிறது என்கிறார்கள். இதனை மருத்துவர்கள் `செபோரியா' என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள். நாம் ஆயில்முகம் என்கிறோம். இந்த நிலை பருவம் அடையும் வயதில் அதிகபட்சமாக இருக்கும். பின் 30 வயதுவரை படுத்தும்.

இதற்கு வேறு என்ன காரணம்?

இருக்கிறது. ஹார்மோன்கள். அதிகப்படியான ஆன்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் உற்பத்தி ஆகும்போது முகத்தில் இருக்கிற தோலின் செம்பஷியஸ் சுரப்பிகள் அதிகப்படியான ஆயிலை உற்பத்தி செய்துவிடுகின்றன. இதுதவிர, மோசமாக முகத்தைப் பராமரிப்பதும் ஒரு காரணம். இந்திய முகங்களை இது அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள். நம் குறைபட்ட உணவுப்பழக்கம் கூட ஒரு காரணம். கூடவே நம்மின் தப்புத்தப்பான முகப்பராமரிப்புப் பொருட்கள். தோலை அடைத்து மூச்சை முட்டும் அழகு சாதனங்கள்.

என்ன செய்வது? எப்படி ஆயில் முகத்தைத் தடுப்பது?

1. நிறைய தண்ணீர் குடியுங்கள்.

நிறைய தண்ணீர் நம் உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி ப்ளஸ் நான்கு மிளகு ப்ளஸ் ஒரு டீஸ்பூன் தேன் அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும்.

2. சரியான உணவு சாப்பிடுங்கள்

நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், காரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். முகத்தில் பருக்களே வராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்திற்கு பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

3. ஆயில் அதிகரிப்பதை தடை செய்யும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துங்கள்

முகத்திற்கான அழகு சாதனப் பொருட்களை வாங்கும்பொழுது அதில் கிளைகாலிக் அமிலம், ரெட்டினாயிக் அமிலம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இவை ஆயில் அதிகமாக உருவாவதை தடுக்கக் கூடியவை.
உங்கள் கிளன்ஸர்களை வாங்கும்பொழுது அதனுள் ஹைட்ராக்ஸி அமிலம், சாலிசிலிக் அமிலம், பென்ஸைல் பெராக்ஸைட் போன்றவை இருக்கிறதா என்று கவனியுங்கள். இவை புடைத்து எழுகிற முகக் கட்டிகளை வேகமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை.
டோனர்கள் வாங்கும்போது அதில் ஆல்கஹால் இருப்பதைத் தவிருங்கள். இவை முகத்தில் இருக்கிற மொத்த ஆயிலையும் நீக்கி சருமத்தை வறளவிட்டு சுருக்கம் ஏற்பட வழி ஏற்படுத்தும்.

4. சிகிச்சைகள்

அ. மூன்று முறை முகம் கழுவுங்கள்
வெதுவெதுப்பான தண்ணீரால் தினமும் மூன்று முறையாவது முகம் கழுவுங்கள். இதனால் அதிகப்படியான ஆயில் நீக்கப்படும். அதே நேரத்தில் சருமப் பாதுகாப்பிற்கான லைப்பிடுகள் வெளியேறாது. முகம் கழுவும்போது தேய்க்காதீர்கள்.

ஆ. சோப் இல்லாத சோப் வாஷ் பயன்படுத்துங்கள்
இந்த வகையில் நிறைய மென்மையான முகம் கழுவிகள் கிடைக்கின்றன. ஜான்சன் அண்ட் ஜான்சன் க்ளீன் அண்ட் க்ளியர் டீப் ஆக்ஷன் கிளன்ஸர், லோ ஓரல் போன்றவை பயன் தரும்.

இ. ஆன்டிபாக்டீரியல் க்ளன்சர்களைப் பயன்படுத்துங்கள்.
ஆயில் அதிகம் இருப்பதால் பாக்டீரிய தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்கவே இந்த வழி. செட்டாபில் அல்லது விச்சி கிளன்ஸர்களை பயன்படுத்திப் பாருங்கள்.

ஈ. ஃபேஸ்மாஸ்க் போடுங்கள்
களிமண் அடிப்படையில் செயல்படும் மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். இவை தோல் துவாரங்களை இறுக்கி ஆழமாக சுத்தம் செய்யும். ஹிமாலயா பியூரிபையிங் மட் பேக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

உ. மாச்சுரைசரை கவனியுங்கள்
ஆயில் அதிகம் சுரப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆயில் அற்ற தோல் கிரீம்களைப் பயன்படுத்துவது நல்லது. லா ஓரல் பாரிஸ் பியூர் ஸோன் அன்டி ரிக்ரஸிங் மாச்சுரைசரைப் பயன்படுத்திப் பாருங்கள். பகல் நேரங்களில் ஜெல் போன்ற சன் ஸ்கிரீன்கள் உதவும். ஆலுவேரா கூட உதவும்.

5. சரியான மேக்-அப் போடுங்கள்
இதற்கு ஒருமுறை நீங்கள் நல்ல அழகு சிகிச்சை நிபுணரை அணுகி, உங்கள் முகத்தை பரிசோதித்து, பின் அவர் தரும் ஆலோசனைப்படி முகத்திற்கான மேக்கப் முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

6. தோல் நோய் மருத்துவ நிபுணரைச் சந்தியுங்கள்
தீர்க்கமுடியாத, அதிகப்படியான ஆயில் முகம் முழுக்க தொந்தரவுகளை ஏற்படுத்தும்போதும் உங்கள் சந்திப்பு ஒரு நல்ல தோல் நோய் மருத்துவரை நோக்கி இருக்கவேண்டும். ஓடிசி வகை மருந்துகள், க்ளைகாலிக் பீலிங் போன்ற சில சிகிச்சைகளை அவர் உங்கள் தேவைக்கு ஏற்ப பரிந்துரைக்கலாம்.

ரத்தத்தில் குளித்த சுதந்திர தாகம் : ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:19 | Best Blogger Tips


இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக, ரத்தத்தில் குளித்த ஒரு நிகழ்வு தான், 1919 ஏப்., 13ல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில், "ஜாலியன்வாலா பாக்' எனும் திடலில், வெள்ளையர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு.

என்ன காரணம்: நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. இது பேராபத்து எனக் கருதி, மக்களிடையே வளர்ந்து வந்த விடுதலை வேட்கையை அகற்ற, மக்களின் கருத்துரிமையை பறிக்கும் வகையில், 1919 மார்ச் 21ல் "ரவுலட் சட்டம்' என்ற கொடிய சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. "எது குற்றம்' என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. "சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமான விசாரணை நடைபெறும். மேல்முறையீடுக்கு வழி இல்லை' போன்ற அதிகாரங்கள் இச்சட்டத்தில் இருந்தன. இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது:

இச்சட்டத்தை எதிர்த்து, ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய காந்தியடிகள், 1919 ஏப்.,10ல் கைது செய்யப்பட்டார். சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாலியன்வாலா பாக் திடலில், கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இத்திடல், நான்கு பக்கம் மதில்களால் சூழப்பட்டு இருந்தது. வெளியே வர, ஒரே ஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது. இக்கூட்டத்தைக் கண்டு கொதிப்படைந்த ஆங்கிலேய அரசு, ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பியது. நாடு முழுவதும் மக்களிடம் பயத்தை ஏற்படுத்த எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார் டயர். வெளியே செல்ல ஒரு வழி மட்டுமே இருந்ததால், மக்களால் தப்பிக்க முடியவில்லை. நெரிசலில் மிதிபட்டும், குண்டு பாய்ந்தும் மக்கள் பலியாகினர். பத்து நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என சொல்லப்படுகிறது. ஆங்கிலேய அரசோ, 379 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரம் பேர் காயமடைந்தனர் என தெரிவித்தது.

மன்னிப்பு :

இச்சம்பவம் நடந்த 94 ஆண்டுகள் கழித்து, சமீபத்தில் இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஜாலியன்வாலா பாக் நினைவிடத்திற்கு சென்றார். அப்போது பேசிய அவர், "இச்சம்பவம், பிரிட்டன் வரலாற்றில் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என, குறிப்பிட்டார். இந்த இடத்திற்கு வந்த முதல் பிரிட்டன் பிரதமர் இவரே. இதற்கு முன், இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், 1997ல் வந்திருந்தார்.

https://www.facebook.com/tamilseythikal
-தமிழ் செய்திகள்
ரத்தத்தில் குளித்த சுதந்திர தாகம் : ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவு தினம்

இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு பகுதியாக, ரத்தத்தில் குளித்த ஒரு நிகழ்வு தான், 1919 ஏப்., 13ல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில், "ஜாலியன்வாலா பாக்' எனும் திடலில், வெள்ளையர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு. 

என்ன காரணம்: நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. இது பேராபத்து எனக் கருதி, மக்களிடையே வளர்ந்து வந்த விடுதலை வேட்கையை அகற்ற, மக்களின் கருத்துரிமையை பறிக்கும் வகையில், 1919 மார்ச் 21ல் "ரவுலட் சட்டம்' என்ற கொடிய சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது. "எது குற்றம்' என்பதை இச்சட்டம் வரையறுக்கவில்லை. "சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சுருக்கமான விசாரணை நடைபெறும். மேல்முறையீடுக்கு வழி இல்லை' போன்ற அதிகாரங்கள் இச்சட்டத்தில் இருந்தன. இது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. 

என்ன நடந்தது:

இச்சட்டத்தை எதிர்த்து, ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய காந்தியடிகள், 1919 ஏப்.,10ல் கைது செய்யப்பட்டார். சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாலியன்வாலா பாக் திடலில், கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இத்திடல், நான்கு பக்கம் மதில்களால் சூழப்பட்டு இருந்தது. வெளியே வர, ஒரே ஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது. இக்கூட்டத்தைக் கண்டு கொதிப்படைந்த ஆங்கிலேய அரசு, ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பியது. நாடு முழுவதும் மக்களிடம் பயத்தை ஏற்படுத்த எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார் டயர். வெளியே செல்ல ஒரு வழி மட்டுமே இருந்ததால், மக்களால் தப்பிக்க முடியவில்லை. நெரிசலில் மிதிபட்டும், குண்டு பாய்ந்தும் மக்கள் பலியாகினர். பத்து நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என சொல்லப்படுகிறது. ஆங்கிலேய அரசோ, 379 பேர் கொல்லப்பட்டனர். 2 ஆயிரம் பேர் காயமடைந்தனர் என தெரிவித்தது. 

மன்னிப்பு :

இச்சம்பவம் நடந்த 94 ஆண்டுகள் கழித்து, சமீபத்தில் இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஜாலியன்வாலா பாக் நினைவிடத்திற்கு சென்றார். அப்போது பேசிய அவர், "இச்சம்பவம், பிரிட்டன் வரலாற்றில் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என, குறிப்பிட்டார். இந்த இடத்திற்கு வந்த முதல் பிரிட்டன் பிரதமர் இவரே. இதற்கு முன், இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத், 1997ல் வந்திருந்தார். 

https://www.facebook.com/tamilseythikal
-தமிழ் செய்திகள்

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:12 | Best Blogger Tips


* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
* பித்தத்தைப் போக்கும்.
* உடலுக்குத் தென்பூட்டும்.
* இதயத்திற்கு நல்லது.
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
* கல்லீரலுக்கும் ஏற்றது.
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
* இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
*பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.
பப்பாளியின் மருத்துவப் பண்புகள்

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
* பித்தத்தைப் போக்கும்.
* உடலுக்குத் தென்பூட்டும்.
* இதயத்திற்கு நல்லது.
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
* கல்லீரலுக்கும் ஏற்றது.
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
* இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது.
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர். 
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
*பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது.

தைரொயிட் சுரப்பும், பெண்களும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:10 | Best Blogger Tips


பொதுவாகவே இன்று பெண்கள் தத்தமது அழகினை மெருகேற்றிக் கொள்வதிலும் அதனை பேணுவதிலும் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அந்தவகையில் இந்த தைரொயிட் சமச்சீர் அல்லாத நிலையால் ஏற்படும் கழுத்து வீக்கம் அல்லது கட்டி தொடர்பாக ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அவர்கள் விஷேடமாக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகின்றது.

தைரொயிட் என்பது கழுத்துப் பகுதியில் சுரக்கும் ஒரு சுரப்பியாகும். இது தைரொக்ஷின் என்கின்ற ஹோமோனை சுரந்து எமது உடலில் எற்படுகின்ற அனுசேப வீதங்களை கட்டுப்படுத்துகின்ற பணியை செய்கின்றது.

இந்த தைரொக்ஷின் அளவு எமது உடலில் கூடும் போதோ அல்லது குறைகின்ற போதோ எற்படுகின்ற பாதிப்புகள் ஏராளம். அது சாதாரணமாக கண்களுக்கு தெரியாது. ஒரு சிலருக்கு தொண்டையில் வீக்கம் ஏற்படும். இதனை நாம் கண்டக்காளை என அழைக்கின்றோம். எனவே கண்டக்காளையை ஏற்படுத்தும் முக்கியமானதொரு ஹோமோனாக இந்த தைரொக்ஷின் விளங்குகின்றது.

பெண்களை பொறுத்தவரைக்கும் அவர்கள் பூப்படைதல் மற்றும் கர்ப்பம் தரித்தல் போன்ற நேரங்களிலேயே தைரொக்ஷின் அதிகமாக சுரக்கப்படுகின்றது.
அதன் சமச்சீர் தொடர்பான அளவுகோளினை அறிந்துகொள்வதோ அல்லது அது தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதோ ஒரு சிக்கலான விடயமாகவே இருக்கின்றது. எனவே தொண்டையில் ஏதேனும் வீக்கம் மற்றும் கட்டிபோன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் நாம் வைத்தியரை அணுகுவதே சிறந்ததொரு வழியாக அமையும்.

எமது உடலில் இந்த தைரொக்ஷின் அளவு அதிகரிக்கும்போது (Hyperthyrodism)எவ்வாறான அறிகுறிகளை எற்படுத்துகின்றது என்று இப்போது நாம் பார்ப்போம்.

01. கை, கால்களில் நடுக்கம் ஏற்படும்.
02. உடல் அதிகமாக வியர்க்கும்.
03. பசிக்கும் தன்மை அதிகரித்துக் காணப்படும்.
04. உடல் மெலிந்து கொண்டே போகும்.
05. எந்த காரியத்தை செய்வதிலும் ஒரு பதற்ற நிலைமை காணப்படும்.
06. எந்வொரு வேலையிலும் முழுமையாக கவனஞ் செலுத்த முடியாமல் போகும்.
07. கோப உணர்ச்சி மேலோங்கி காணப்படும்.
08. சிலருக்கு வயிற்றோட்டம் எற்படும்.
09. மாதவிடாயில் பிரச்சினைகள் ஏற்படும்.

அடுத்து நாம் தைரொக்ஷின் அளவு உடலில் குறைவடையும் பொழுது( Hypothyrodism) எவ்வாறான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது என்பதனை பார்ப்போம்.

01. உடல் சோர்வடையும்.
02. எதிலும் ஓர் ஆர்வம் இல்லாத தன்மை காணப்படும்.
03. தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.
04. உடற் பருமன் அதிகரித்துக் கொண்டே போகும்.
05. பசியல்லாத தன்மை காணப்படும்.
06. தூக்கத்தில் ஒழுங்கில்லாத தன்மை ஏற்படும்.
07. மலச்சிக்கள் ஏற்படும்.

அது மட்டுன்றி இந்த தைரொயிட் சுரப்பியின் சமச்சீரற்றத் தன்மையால் மாதவிடாய் காலங்களில் குருதி வெளியேற்றமும் அதிகமாக காணப்படும். எனவே உங்கள் கழுத்துப் பகுதியில் வீக்கம் அல்லது கட்டி போன்று காணப்படுவதுடன் மேற்குறிப்பிட்ட ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாயின் நீங்கள் உடனடியாக வைத்தியரை நாடுவது சிறந்ததொரு முறையாக அமையும்.


தைரொயிட் சமச்சீரற்ற தன்மையால் தொண்டையில் ஏற்படும் கட்டி அல்லது வீக்கத்திற்காக நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இவ்வாறான அறிகுறிகளை உடையவர்கள் வைத்தியர்களை அணுகி முறையான இரத்த பரிசோதனைகள் மற்றும் தொண்டையில் ஏற்படுகின்ற கட்டிகளில் ஊசியை ஏற்றி களங்களை பரிசோதிப்பதன் வாயிலாகவும் இது கண்டக்காளையா அல்லது புற்றுநோயா என்பதை துள்ளியமாக தெரிந்துகொள்ள முடியும். பின்னர் அதற்கேற்ப நாம் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டு கண்டக்காளை ஏற்படுவதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளவதோடு பெண்கள் தங்களின் அழகினை தொடர்ந்தும் பேணிக்கொள்ள முடியும்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/535671_502864643107237_811164532_n.jpg
 

இன்று 70 கோடி செங்கல்லில் ஆச்சரிய மாளிகை!-ஜனாதிபதி மாளிகை பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:54 | Best Blogger Tips

இந்திய ஜனநாயகத்தின் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது இந்த பாரம்பரிய மாளிகை. 1911-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது `வைஸ்ராய் மாளிகை’யாகத்தான் இது உருவாக்கப்பட்டது. தற்போது ஜனாதி பதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகத் திகழும் இம்மாளிகை, இந்தியா சுதந்திரம் பெற்ற போது `அரசு இல்லம்’ என்று மறுபெயர் சூட்டப்பட்டது. நாடு 1950-ல் குடியரசானபோது `ராஷ்டிரபதி பவன்’ என்ற தற்போதைய பெயரைப் பெற்றது.
...
புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் ஜனாதிபதி மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, பழைய ரெய்சினா, மால்ச்சா கிராமங்களில் இருந்து 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நான்காண்டுகளில் கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர், கட்டுமானப் பணியைப் பாதித்தது. கடைசியில், 1929-ம் ஆண்டு, மாளிகை பூர்த்தியானது.

ஜனாதிபதி மாளிகைக்கு ஆகும் செலவு என்று ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது 4 லட்சம் பவுண்டுகள். ஆனால் கடைசியில் கணக்குப் பார்த்தபோது அது 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாக எகிறி யிருந்தது (அந்த காலத்தைய மதிப்பு இந்திய பணத்தில் ரூ. 2 கோடி).

* கடலெனப் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களில் 340 அறைகளைக் கொண்டுள்ளது.

* மாளிகையின் நீளம் 630 அடி. இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை விட நீளமானது.

* மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.

* இரும்பை மிகக் குறைவான அளவு பயன்படுத்திக் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

* மாளிகை கட்டுமானத்தில் 30 லட்சம் கன அடி கல்லும், 70 கோடி செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.

முதலில் குடியேறியவர்கள்

ஜனாதிபதி மாளிகையில் முதலில் வசித்தவர் லார்டு இர்வின். அவர் இங்கு 1931-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி குடியேறினார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி, ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்.

ராஜாஜியைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கு வசித்தார்.

விருந்தினர்கள், பணியாளர்கள் தங்க தனித்தனி பகுதி உள்ளது. ராஜாஜி, இதன் பிரதான வசிப்பிடப் பகுதி ரொம்பப் பெரிதாக இருப்பதாக நினைத்தார். எனவே அவர் விருந்தினர்களுக்கான பகுதியிலேயே தங்கினார். அதே வழக்கத்தை ராஜேந்திர பிரசாத்தும், அவருக்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளும் பின்பற்றினார்கள். எனவே, மாளிகையின் உண்மையான வசிப்பிடப் பகுதியில் தற்போது இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குகிறார்கள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மொகலாயத் தோட்டம்

ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று, இங்குள்ள `மொகல் கார்டன்’ எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும், பலவண்ண மலர்களுமாய் 342 ஏக்கர்களுக்குப் பரந்திருக்கும் மொகலாயத் தோட்டம், ஜனாதி பதி மாளிகைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமர் தோட் டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக் கப்பட்ட மொகலாயத் தோட்டம், உலக முழுவதி லும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலமே இது திறந்து விடப்படுகிறது
See More
இன்று 70 கோடி செங்கல்லில் ஆச்சரிய மாளிகை!-ஜனாதிபதி மாளிகை பற்றிய தகவல்.

SHARE & Like the page here-->> @[293309174033072:274:World Wide Tamil People]

இந்திய ஜனநாயகத்தின் கம்பீர அடையாளமாகத் திகழ்கிறது இந்த பாரம்பரிய மாளிகை. 1911-ம் ஆண்டில் ஆங்கிலேய அரசு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்குத் தலைநகரை மாற்றியபோது `வைஸ்ராய் மாளிகை’யாகத்தான் இது உருவாக்கப்பட்டது. தற்போது ஜனாதி பதியின் அதிகாரப்பூர்வ இருப்பிடமாகத் திகழும் இம்மாளிகை, இந்தியா சுதந்திரம் பெற்ற போது `அரசு இல்லம்’ என்று மறுபெயர் சூட்டப்பட்டது. நாடு 1950-ல் குடியரசானபோது `ராஷ்டிரபதி பவன்’ என்ற தற்போதைய பெயரைப் பெற்றது.

புகழ்பெற்ற பிரிட்டீஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லாண்ட்சீர் லுட்யன்ஸ் மேற்பார்வையில் ஜனாதிபதி மாளிகை கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, பழைய ரெய்சினா, மால்ச்சா கிராமங்களில் இருந்து 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நான்காண்டுகளில் கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை நடைபெற்ற முதலாம் உலகப் போர், கட்டுமானப் பணியைப் பாதித்தது. கடைசியில், 1929-ம் ஆண்டு, மாளிகை பூர்த்தியானது.

ஜனாதிபதி மாளிகைக்கு ஆகும் செலவு என்று ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது 4 லட்சம் பவுண்டுகள். ஆனால் கடைசியில் கணக்குப் பார்த்தபோது அது 8 லட்சத்து 77 ஆயிரத்து 136 பவுண்டுகளாக எகிறி யிருந்தது (அந்த காலத்தைய மதிப்பு இந்திய பணத்தில் ரூ. 2 கோடி).

* கடலெனப் பரந்து விரிந்திருக்கும் ஜனாதிபதி மாளிகை, நான்கு தளங்களில் 340 அறைகளைக் கொண்டுள்ளது.

* மாளிகையின் நீளம் 630 அடி. இது பிரான்சின் பிரபல வெர்செய்ல்ஸ் அரண்மனையை விட நீளமானது.

* மாளிகையின் மொத்த தளப் பரப்பளவு 2 லட்சம் சதுர அடி.

* இரும்பை மிகக் குறைவான அளவு பயன்படுத்திக் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

* மாளிகை கட்டுமானத்தில் 30 லட்சம் கன அடி கல்லும், 70 கோடி செங்கற்களும் பயன்படுத்தப்பட்டன.

முதலில் குடியேறியவர்கள்

ஜனாதிபதி மாளிகையில் முதலில் வசித்தவர் லார்டு இர்வின். அவர் இங்கு 1931-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி குடியேறினார். இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான ராஜாஜி, ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய முதல் இந்தியர்.

ராஜாஜியைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் இங்கு வசித்தார்.

விருந்தினர்கள், பணியாளர்கள் தங்க தனித்தனி பகுதி உள்ளது. ராஜாஜி, இதன் பிரதான வசிப்பிடப் பகுதி ரொம்பப் பெரிதாக இருப்பதாக நினைத்தார். எனவே அவர் விருந்தினர்களுக்கான பகுதியிலேயே தங்கினார். அதே வழக்கத்தை ராஜேந்திர பிரசாத்தும், அவருக்குப் பின்னால் வந்த ஜனாதிபதிகளும் பின்பற்றினார்கள். எனவே, மாளிகையின் உண்மையான வசிப்பிடப் பகுதியில் தற்போது இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தங்குகிறார்கள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மொகலாயத் தோட்டம்

ஜனாதிபதி மாளிகையின் கவரும் அம்சங்களில் ஒன்று, இங்குள்ள `மொகல் கார்டன்’ எனப்படும் மொகலாயத் தோட்டம். பச்சைப் போர்வையும், பலவண்ண மலர்களுமாய் 342 ஏக்கர்களுக்குப் பரந்திருக்கும் மொகலாயத் தோட்டம், ஜனாதி பதி மாளிகைக்குக் கூடுதல் அழகு சேர்க்கிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷாலிமர் தோட் டத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக் கப்பட்ட மொகலாயத் தோட்டம், உலக முழுவதி லும் இருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. ஆனால் குறிப்பிட்ட காலமே இது திறந்து விடப்படுகிறது

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:03 | Best Blogger Tips


ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம்


ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.
 
எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார்.

கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் - யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.

உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.

உங்களால் முடிந்த அளவுக்கு , உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்துங்கள். 

வாழ்க வளமுடன்!
மெய்ப்பொருள் எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார்.

கீழே கொடுக்கப் பட்டிருக்கிற விஷயம் - யாரும் சனியோட கடுமையால பாதிக்க படக்கூடாதுங் கிறதுக்காக ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.

வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்துபோய்விடும்.இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.

ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி - சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.

உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.

உங்களால் முடிந்த அளவுக்கு , உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப் படுத்துங்கள்.

வாழ்க வளமுடன்!
மெய்ப்பொருள்

" என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே"

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:03 | Best Blogger Tips
என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சித்திரை 1-ம் (ஏப்ரல் 14ந்)  தேதி பிறக்கும் புதிய ஆண்டில் எல்லோருக்கும் எல்லாம் வளமும், செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
ரமேஷ் ராமலிங்கம்

ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:45 | Best Blogger Tips


சிலர் ஸ்ரீராம ஜெயத்தை 108 முறை,ஆயிரம் முறை,லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர்.

உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.

'ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி 'மரா' என்றே முதலில் உச்சரித்தார். 'மரா' என்றாலும், 'ராம' என்றாலும் 'பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள்.

ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். 'ரமா' என்று அவளுக்கு பெயருண்டு. 'ரமா' என்றால் 'லட்சுமி'. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம்.
ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும்.

ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். 'ரா' என்றால் 'இல்லை' 'மன்' என்றால் 'தலைவன்'. 'இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை' என்பது இதன் பொருள் ஆகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

பழைய சோறா? அப்படீன்னா என்ன? என்று கேட்கும் காலம் வந்துவிட்டது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:43 | Best Blogger Tips


முதலில் எல்லாம் பானையில் சோறாக்கி, வடிப்பார்கள். சாப்பிட்டு மிஞ்சிய சோற்றில் தண்ணீரை ஊற்றி, மறுநாள் பழைய சோறாகச் சாப்பிடுவார்கள்.

இப்போது எல்லாம் குக்கர்மயமாகிவிட்டதால், கையில் சுட்டுக் கொள்ளாமல் கஞ்சி வடிக்கவே எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

காலையில் ரெண்டு பிரட் துண்டுகளை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு பறப்பவர்களுக்கு, பழைய சோறு - சின்ன வெங்காயத்தின் மகிமை எப்படித் தெரியும்?

* பழைய சாதத்தில் பி 6, பி 12 நிறைய இருக்கிறது.

* சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ஏகப்பட்ட நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.

* காலையில் பழைய சோற்றைச் சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடல் சூடு தணியும். குடல் புண், வயிற்றுவலி குணமாகும்.


* இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

* பழைய சாதத்துடன் இரண்டு சின்ன வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

* அலர்ஜி,அரிப்பு போன்றவை குணமாகும்
மீனா
பழைய சோறா? அப்படீன்னா என்ன? என்று கேட்கும் காலம் வந்துவிட்டது.

முதலில் எல்லாம் பானையில் சோறாக்கி, வடிப்பார்கள். சாப்பிட்டு மிஞ்சிய சோற்றில் தண்ணீரை ஊற்றி, மறுநாள் பழைய சோறாகச் சாப்பிடுவார்கள்.

இப்போது எல்லாம் குக்கர்மயமாகிவிட்டதால், கையில் சுட்டுக் கொள்ளாமல் கஞ்சி வடிக்கவே எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.

காலையில் ரெண்டு பிரட் துண்டுகளை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு பறப்பவர்களுக்கு, பழைய சோறு - சின்ன வெங்காயத்தின் மகிமை எப்படித் தெரியும்?

*   பழைய சாதத்தில் பி 6, பி 12 நிறைய இருக்கிறது.

*   சிறுகுடலுக்கு நன்மை செய்யும் ஏகப்பட்ட நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.

*   காலையில் பழைய சோற்றைச் சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடல் சூடு தணியும். குடல் புண், வயிற்றுவலி குணமாகும்.


*   இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

*   பழைய சாதத்துடன் இரண்டு சின்ன வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.

*   அலர்ஜி,அரிப்பு போன்றவை குணமாகும்
மீனா

இஸ்லாத்தில் இந்து மத சடங்கு...!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:42 | Best Blogger Tips



இஸ்லாம் மதம் என்பது முகமது நபி அவர்களுக்கு இறைவன் தனியாக அறிவித்தது அதில் இறைவனின் சொந்தக் கருத்துக்கள் கொள்கைகள் மட்டுமே இருக்கிறது என்று பல இஸ்லாமிய பெருமக்கள் நம்புகிறார்கள் மற்ற மதத்தாரிடம் பிரச்சாரமும் செய்கிறார்கள். நிஜமாகவே இஸ்லாம் என்பது இறைவனால் வகுத்து சொல்லப்பட்ட மார்க்கம் தானா? அல்லது நபி அவர்களின் காலத்திற்கு முன்பு உள்ள கருத்துக்களை அவர் தொகுத்து வெளியிட்டரா? என்று சிந்தித்தால் பல உண்மைகள் மேலோட்டமாகவே தெரிகிறது

அரபு நாட்டில் முகமது நபி அவர்கள் பிறப்பதற்கு முன்பு விக்கிரக வணக்க மதமும், யூத மதமும், கிறிஸ்த்துவ மதமும் இருந்ததாக இஸ்லாம் நூல்கள் கூறுகின்றன. யூத கிறிஸ்த்துவ மதங்கள் தோன்றுவதற்கு முன்பு அந்த பகுதிகளில் சூரிய வழிபாடும், லிங்க வழிபாடும் மற்றும் சில குட்டி தேவதைகளின் வழிபாடும் இருந்தது

புதிதாக தோன்றிய ஹீபுரு கிறிஸ்த்துவ மதங்களில் சிலர் இணைந்தாலும் கூட ஆதி மதத்திலேயே பெருவாரியான மக்கள் இருந்து இருக்கிறார்கள். மெக்காவிலுள்ள புனித காபாவில் முன்னூற்றி அறுபது சிலைகள் இருந்திருக்கின்றன . தினமும் ஒவ்வொரு சிலையாக வணங்கி வந்து ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்கள் விரதம் இருந்து காபாவிற்குள் உள்ள மூல லிங்கத்தை மக்கள் வழிபடுவார்களாம். இயேசு பிறப்பதற்கு முன்னூற்றி அறுபது வருஷத்திற்கு முன்பே அரேபியாவில் யூத மதம் காலூன்றி விட்டது.

அப்போதைய ஏமன் மன்னன் தனது ஆதி மதத்தை கைவிட்டு யூத மதத்தை தழுவினாராம். மேலும் அரேபியாவிலுள்ள குரேஷியர்கள் காலங்காலமாக சிலை வணக்கத்தையே மேற்கொண்டிருந்தனர்.

இப்படி ஆதி மதம், சிலை வணக்க மதம் என்று சொல்லப்படுவது எந்த மதத்தை என்று மேலோட்டமாக ஆராய்ந்தாலே மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் மண்ணுக்கடியில் கிடக்கும் சிவலிங்கங்கள் அது இந்து மதம் தான் என நமக்கு சொல்லாமல் சொல்லி விடும்.

ரமலான் மாதம் பத்தாம் பிறை என்று பதினாராயிரம் குதிரை படையுடன் போர் ஆயுதங்களுடன் வந்த முகமது நபி அவர்கள் காபிர்கள் என்ற சிலை வழிபாட்டினை வென்று மெக்காவை ஆக்கிரமித்து காபாவிற்குள்ள 360 சிலைகளையும் குபல் என்று அழைக்கப்பட்ட மூல விக்கிரகத்தையும் உடைத்து சின்னா பின்னா படுத்தினார். அது முதலே அரபு நாடுகளில் இந்து மதம் அழிய தொடங்கி விட்டது எனலாம். குரானில் ஒவ்வொரு இஸ்லாமியனும் தனது வாழ்நாளில் ஐந்தாவது கடமையாகிய ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்கிறது. இந்த பயணத்தின் போது இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தை உற்று நோக்கினால் இந்து மத சாயல் இருப்பதை பார்க்கலாம்.

இஸ்லாமிய சின்னமான தொப்பி அணிய கூடாது. தையலும் கரையும் இல்லாத ஒரு வெள்ளைத் துண்டை அங்கவஸ்திரம் போல் உடலின் மேற்பகுதியில் போட்டு கொள்ள வேண்டும். இடுப்பிலும் அதே போல் ஒரு துணித்தான் கட்ட வேண்டும். வாசனை திரவியங்களை உடலில் பூசிக் கொள்ள கூடாது. மிக கண்டிப்பாக பிரம்மசரியத்தை கடைபிடிக்க வேண்டும். உயிர் கொலை செய்யக் கூடாது. இவைகள் எல்லாம் ஏறக்குறைய இந்து மத விரத முறைகளே ஆகும். இதை விட முக்கியமானது ஹஜ் புனித பயணம் காபாவில் உள்ள புனித கல்லை தொட்டு முத்தமிடுவதோடு நிறைவடைகிறது . இந்த கல் ஏறக் குறைய சிவலிங்க வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

குரனுக்குள் ஆழமாக நுழைந்து சென்றால் அர்த்த சாஸ்திரத்தின் சில கருத்துக்கள் பரவி கிடப்பதை காணலாம்.

இந்து மத கருத்துக்கள் வாழ்வியல் நடை முறைகள் இந்த அளவு இஸ்லாத்தில் வெளிப்படையாக தெரிகிறது என்றால் குரான் முழுவதும் பல இடங்களில் பைபிளின் அரபு மொழி பெயர்ப்பு போலவே தான் உள்ளது. இஸ்லாமிய சட்டமான ஷரியத் ஒன்றை தவிர மீதம் எல்லாமே மற்றும் சில மதங்களில் இருந்து கடனாக பெற்றது போல் தான் தோன்றுகிறது. இஸ்லாமியர்களின் தனித்துவமான பழக்கம் என்று சொல்லப்படும் சுன்னத் கூட யூதர்களிடம் இருந்து வந்ததே ஆகும். இஸ்லாம் என்ற சொல்லுக்கு கடவுளுக்கு முற்றிலுமாக அடி பணிதல் அவனை மட்டுமே வழி படுதல் என்ற பொருள் சொல்லப்படுகிறது. மேலும் இறைவனுடைய விருப்பத்தையே தனது விருப்பமாகவும் அவனது வெறுப்பை தனது வெறுப்பாகவும் ஆக்கி கொள்ளுதல் இஸ்லாத்தின் உயிர் சட்டமாக கருதப்படுகிறது

இந்த எண்ணம் நம்பிக்கை மனிதனிடம் வளர்ந்தால் மனங்களின் ஊசலாட்டம் ஆசாபாசங்கள் மற்றும் இச்சைகள் எல்லாம் மறைந்து இறை சிந்தனையில் உள்ளம் நிரம்பி வழியும் என்றும் சொல்லப்படுகிறது .உண்மையில் இந்த கருத்துக்கள் கூட ஆதி கால யூத மதத்திற்கு தோற்றுவாயாக இருந்த சொராஷ்திரிய மதத்தின் மைய கருத்தே ஆகும். இன்னும் ஆழமாக பல விஷயங்களை எடுத்து அலசினால் இஸ்லாம் என்ற கட்டிடம் முகமது நபியின் தனி சிந்தனையில் உருவானது அல்ல

இதற்கு முன்பு இல்லாது இருந்த ஒரு புதிய விஷயத்தை அல்லா நபிக்கு மட்டும் பிரத்தியேகமாக தரவில்லை என்பது தெரியும். இதை முஸ்லிம் மக்கள் ஒத்துக் கொள்வது மிகவும் கடினம் காரணம் இத்தகைய நிஜங்கள் அவர்கள் நம்பிக்கையே குறைப்பதாகவே எடுத்துக் கொள்வார்களே தவிர ஒத்து கொள்ள மாட்டார்கள் இஸ்லாத்தின் அடி நாதமான மத விஷயங்கள் பல்வேறு இடங்களிலிருந்து தொகுக்கப்பட்ட தொகுப்பே ஆகும் மற்ற படி உள்ள ஜிகாத்,ஷரியத் என்பவைகள் தான் நபியின் தனி கண்டுப்பிடிப்பு அதுவும் வாழ்வியலுக்கானது அல்ல அக்கால அரசியல் காரணங்களுக்கானதே ஆகும்.

கம்பு கூழ்/கம்மங்கஞ்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:40 | Best Blogger Tips


இது வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு. கேப்பங்கஞ்சி (ராகி கூழ்)தான் பொதுவாக வெயில்கால வேளையில் மாரியம்மன் கோவில்களில் கொடுக்கப்படுவது. கம்மங்கஞ்சி பெரும்பாலும் வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்படும் தனிச் சிறப்புடையது..

எங்கள் வீட்டில் ஏப்ரல், மே மாத பரீட்சை விடுமுறை நாட்களில் அம்மா இதை எங்களுக்கு செய்து கொடுப்பார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும் நல்ல குளுமையான உணவு இது. சத்தான ஆகாரமும் கூட.

தேவையான பொருட்கள்:

கம்பு – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்- தேவைக்கேற்ப

செய்முறை:
கம்பை நன்கு களைந்து, சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். கம்பில் உள்ள உமியை அகற்ற, மீண்டும் சிறிது தண்ணீர்விட்டு நன்கு களைந்து, வடிகட்டியால் வடிகட்டவும். இரண்டிலிருந்து மூன்று முறை இவ்வாறு செய்ய உமி நீங்கிவிடும். களைந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், கம்பை காய்ச்ச பயன்படுத்த கெட்டியான, சுவையான கம்மங்கஞ்சி கிடைக்கும். அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து, 4 கப் களைந்த தண்ணீரை ஊற்றி, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரைத்த கம்பை சேர்த்து கிளறவும். நன்கு கெட்டியாக பொங்கல் போன்று வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறிய பின் தயிர் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

ஊறுகாய், மோர் மிளகாய் தொட்டுகொண்டு சாப்பிட அடடா … தனி ருசிதான் போங்க. வத்தல், கஞ்சி வடகம் தொட்டும் சாப்பிட நன்றாக இருக்கும். அசைவ விரும்பிகள் உப்புகண்டம், உப்புகருவாடு பொரித்து இதனுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தயாரிக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள்.

கிடைக்கும் அளவு : 4 நபருக்கு


For more Cooking Books:

http://www.nammabooks.com/Buy-Food-Diet-Tamil-Books-Online
கம்பு கூழ்/கம்மங்கஞ்சி:

இது வெயில் காலத்திற்கு ஏற்ற உணவு. கேப்பங்கஞ்சி (ராகி கூழ்)தான் பொதுவாக வெயில்கால வேளையில் மாரியம்மன் கோவில்களில் கொடுக்கப்படுவது. கம்மங்கஞ்சி பெரும்பாலும் வீடுகளில் மட்டுமே தயாரிக்கப்படும் தனிச் சிறப்புடையது..

எங்கள் வீட்டில் ஏப்ரல், மே மாத பரீட்சை விடுமுறை நாட்களில் அம்மா இதை எங்களுக்கு செய்து கொடுப்பார்கள். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சி தரும் நல்ல குளுமையான உணவு இது. சத்தான ஆகாரமும் கூட.

தேவையான பொருட்கள்:

கம்பு – 1 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்- தேவைக்கேற்ப

செய்முறை:
கம்பை நன்கு களைந்து, சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைக்கவும். கம்பில் உள்ள உமியை அகற்ற, மீண்டும் சிறிது தண்ணீர்விட்டு நன்கு களைந்து, வடிகட்டியால் வடிகட்டவும். இரண்டிலிருந்து மூன்று முறை இவ்வாறு செய்ய உமி நீங்கிவிடும். களைந்த தண்ணீரை கீழே ஊற்றாமல், கம்பை காய்ச்ச பயன்படுத்த கெட்டியான, சுவையான கம்மங்கஞ்சி கிடைக்கும். அடுப்பில் அடிகனமான பாத்திரம் வைத்து, 4 கப் களைந்த தண்ணீரை ஊற்றி, உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரைத்த கம்பை சேர்த்து கிளறவும். நன்கு கெட்டியாக பொங்கல் போன்று வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கவும். ஆறிய பின் தயிர் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

ஊறுகாய், மோர் மிளகாய் தொட்டுகொண்டு சாப்பிட அடடா … தனி ருசிதான் போங்க. வத்தல், கஞ்சி வடகம் தொட்டும் சாப்பிட நன்றாக இருக்கும். அசைவ விரும்பிகள் உப்புகண்டம், உப்புகருவாடு பொரித்து இதனுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தயாரிக்க ஆகும் நேரம்: 20 நிமிடங்கள்.

கிடைக்கும் அளவு : 4 நபருக்கு


For more Cooking Books:

http://www.nammabooks.com/Buy-Food-Diet-Tamil-Books-Online

மூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:39 | Best Blogger Tips


ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.
மூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை!! 

  LIKE & SHARE ===> @[239983426107165:274:இன்று ஒரு தகவல்(பக்கம்)]

 ===>http://inruoruthagaval.com/


ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா? மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந் துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்தபோது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். 

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரேட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என் 3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்காரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளைதான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த் தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதி நோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும். அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும். 

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்து விடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செயல் பாடும் உடையவர்களாக இருந்தனர் .ஆனால், அவர்களில் பி6 பி12 ஃபே லேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர். 

பி வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிக மெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. 
இதனால் மூளையின் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:35 | Best Blogger Tips

ஆன்ட்ராய்ட்(ANDROID) என்பது ஒரு இயங்குதளமாகும்.
அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட்.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.
ஆன்ராய்ட் இயங்குதளத்தின் சிறப்புகள்:

நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி - Customize Home Screen
வழக்கமான தோற்றத்தில் SMS கள் இருக்காமல் புதிய தோற்றத்தில் இருக்கும். அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி. அதற்கு Threaded SMS என்று பெயர்.

ஆண்ட்ராய் வலை உலவி. இது கணினியில் நாம் பயன்படுத்தும் Browser போன்ற முழுமையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. YouTube வீடியோக்கள் பார்க்க Flash வசதியை கொண்டிருக்கிறது.
கூகிள் வழங்கும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களும் இதில் நிறுவப்பட்டிருக்கும்.
குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி.
ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது. அதாவது கணினியில் Screen shot எடுப்பதைப் போன்றே இந்த ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீன் சாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது.
ஆன்ட்ராய்ட் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது?

நீங்கள் Tablet pc அல்லது புது மொபைல் வாங்கியவுடன் அதனை கூகிள் கணிக்கில் இணைக்கச் சொல்லிக் கேட்கும். உங்கள் கூகிள் கணக்கைப் பயன்படுத்தி இணைக்கும்பொழுது, அதில் Android Application Market உள்ள வசதிகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.

உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கிப் பயன்படுத்த முடியும். இதற்கு Android market பயன்படுகிறது. இதில் பணம் கொடுத்து அப்ளிகேஷன்களை வாங்க முடியும். இலவசமாகவும் ஒரு சில அப்ளிகேஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? 

 LIKE & SHARE ===> @[239983426107165:274:இன்று ஒரு தகவல்(பக்கம்)]

 ===>http://inruoruthagaval.com/


ஆன்ட்ராய்ட்(ANDROID) என்பது ஒரு இயங்குதளமாகும்.
அதாவது கணினிகளுக்கு இயங்குதளங்கள் (Operating system)இருப்பதைப் போன்று மொபைல்களுக்கென கூகிள் உருவாக்கிய புதிய வகையான ஒரு இயங்குதளமே ஆன்ட்ராய்ட்.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது Linux Kernel என்ற இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு புதிய மொபைல் இயங்குதளமாக பரிணமித்தது.

ஆன்ட்ராய்ட் இயங்குதளமானது இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆன்ராய்ட் இயங்குதள பதிப்புகள் ஒவ்வொன்றிற்குமே இனிப்பு வகையான cupcake, Donut, Eclair, Froyo, Gingerbread, Honecomb, Ice Creame Sandwich போன்ற பெயர்களைக் கொண்டுள்ளது.
ஆன்ராய்ட் இயங்குதளத்தின் சிறப்புகள்: 

நாம் விரும்பியபடி மொபைலின் முகப்பு பக்கத்தை வைத்துக்கொள்ளும் வசதி - Customize Home Screen
வழக்கமான தோற்றத்தில் SMS கள் இருக்காமல் புதிய தோற்றத்தில் இருக்கும். அதாவது ஒருவர் அனுப்பிய SMS திறக்கும்பொழுது, அவர் அனுப்பிய அனைத்து SMS களையும் அதே வரிசையில் தொடர்ச்சியாக பார்த்துக்கொள்ளும் வசதி. அதற்கு Threaded SMS என்று பெயர். 

ஆண்ட்ராய் வலை உலவி. இது கணினியில் நாம் பயன்படுத்தும் Browser போன்ற முழுமையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. YouTube வீடியோக்கள் பார்க்க Flash வசதியை கொண்டிருக்கிறது. 
கூகிள் வழங்கும் அனைத்து பயன்பாட்டு மென்பொருள்களும் இதில் நிறுவப்பட்டிருக்கும். 
குரல் மூலம் மொபைலை இயக்கும் வசதி.
ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது. அதாவது கணினியில் Screen shot எடுப்பதைப் போன்றே இந்த ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் ஸ்கிரீன் சாட் எடுக்கும் வசதியைக் கொண்டிருக்கிறது. 
ஆன்ட்ராய்ட் பயன்பாட்டை எப்படி பயன்படுத்துவது? 

நீங்கள் Tablet pc அல்லது புது மொபைல் வாங்கியவுடன் அதனை கூகிள் கணிக்கில் இணைக்கச் சொல்லிக் கேட்கும். உங்கள் கூகிள் கணக்கைப் பயன்படுத்தி இணைக்கும்பொழுது, அதில் Android Application Market உள்ள வசதிகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த முடியும்.

உங்களுக்குத் தேவையான அப்ளிகேஷன்களை தரவிறக்கிப் பயன்படுத்த முடியும். இதற்கு Android market பயன்படுகிறது. இதில் பணம் கொடுத்து அப்ளிகேஷன்களை வாங்க முடியும். இலவசமாகவும் ஒரு சில அப்ளிகேஷன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

வாழைப்பூவின் மகத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:34 | Best Blogger Tips



வாழைப்பூவும், அதன் தண்டும் கூட‌ மருத்துவ குணமுள்ளவை. வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருக்கிறது.அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்ட‌மின் கிடைக்கிறது

பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது

வாழைத் தண்டு நரம்புச் சோர்வை நீக்கும், குடலில் சிக்கிய கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும்.

வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்.

ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும்.

வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.மலச்சிக்கலைப் போக்கும் .

வாழைப்பூவை பொரியல் அல்லது கூட்டாக செய்து சாப்பிடலாம். அடையாகவும் வடையாகவும் கூட செய்து ருசியாக சாப்பிடலாம். வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.
வாழைப்பூவின்  மகத்துவம்


வாழைப்பூவும், அதன் தண்டும் கூட‌ மருத்துவ குணமுள்ளவை. வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருக்கிறது.அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்ட‌மின் கிடைக்கிறது

பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது

வாழைத் தண்டு நரம்புச் சோர்வை நீக்கும், குடலில் சிக்கிய கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும்.  

வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்  தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும். 

ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும்.

வாழைப்பூ மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.மலச்சிக்கலைப் போக்கும் . 

வாழைப்பூவை பொரியல் அல்லது கூட்டாக செய்து சாப்பிடலாம். அடையாகவும் வடையாகவும் கூட செய்து ருசியாக சாப்பிடலாம்.  வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

சித்திரையில் தான் தமிழ்ப் புத்தாண்டு!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:11 | Best Blogger Tips


பூமி, சூரியனை சுற்றி வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே தமிழ் புத்தாண்டு பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே (சித்திரை) தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது

கீழே உங்கள் வசதிக்காக தமிழ் வருடங்கள்.

எண் தமிழ் வருடங்கள்

1 பிரபவ
2 விபவ
3 சுக்ல
4 பிரமோதூத
5 பிரசோற்பத்தி
6 ஆங்கீரச
7 ஸ்ரீமுக
8 பவ
9 யுவ
10 தாது
11 ஈஸ்வர
12 வெகுதானிய
13 பிரமாதி
14 விக்கிரம
15 விஷூ
16 சித்திரபானு
17 சுபானு
18 தாரண
19 பார்த்திப
20 விய
21 சர்வசித்து
22 சர்வதாரி
23 விரோதி
24 விக்ருதி
25 கர
26 நந்தன
27 விஜய
28 ஜய
29 மன்மத
30 துன்முகி
31 ஹேவிளம்பி
32 விளம்பி
33 விகாரி
34 சார்வரி
35 பிலவ
36 சுபகிருது
37 சோபகிருது
38 குரோதி
39 விசுவாசுவ
40 பரபாவ
41 பிலவங்க
42 கீலக
43 சௌமிய
44 சாதாரண
45 விரோதிகிருது
46 பரிதாபி
47 பிரமாதீச
48 ஆனந்த
49 ராட்சச
50 ந‌ள
51 பிங்கள
52 காளயுக்தி
53 சித்தார்த்தி
54 ரௌத்திரி
55 துன்மதி
56 துந்துபி
57 ருத்ரோத்காரி
58 ரக்தாட்சி
59 குரோதன
60 அட்சய

மருத்துநீர்

புத்தாண்டினைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் ஆயத்தங்களில் மருத்துநீர் வைத்து நீராடல் ஒன்றாகும்.

இம் மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி, சுக்கு என்பனவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்பெறுவதாகும். பெரும்பாலும் புத்தாண்டு நாளுக்கு முதல்நாள் மருத்துநீர் அருகிலிருக்கும் கோயிலிலே காய்ச்சப்படுகின்றது. மக்கள் பெரும்பாலும் இலவசமாகவே இதனைப் பெற்றுக் கொள்வர். சிலர் பணம் கொடுத்தும் பெறுவர்.

மருத்துநீர் தலையிலே தேய்த்து நீராடினால்தான் சித்திரைப் புத்தாண்டின் நல்ல பலன்களைப் பெறலாம் என்னும் நம்பிக்கை இந்துக்களிடையே உண்டு. அவ்வாறு நீராடிய பின்னர் புதிய ஆடைகளைக் குடும்பத்தினர் எல்லோரும் அணிவர்.

சித்திரைப் பொங்கல்

தைத்திங்கள் முதல் நாளிலே பொங்கலிடுவது போல சித்திரைத் திங்கள் முதல்நாளிலும் பொங்கல் செய்வது வழக்கமாகும். வீட்டு முற்றத்திலே பொங்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. வீட்டு முற்றத்தில் பொங்கலிடும் இடம் சாணியினாலே மெழுகப்பட்டுத் தூய்மையாயிருக்கும். மாவிலை, தோரணம் கட்டப்படும். மூன்று கற்கள் வைத்து அதன்மேலே பாலுடன் கலந்த நீர் விட்ட பானை ஏற்றப்படும். பால் பொங்கிவரும் போது வீட்டின் தலைவர் அதனுள் கிழக்குப் பக்கமாகவோ வடக்குப் பக்கமாகவோ பார்த்து அரிசியும் பயறும் சேர்ந்த கலவையைக் கையினால் அள்ளி மூன்று தடவை இடுவர். மிகுதியை வீட்டுத் தலைவி பானையுள் இட்டு, ஏனைய பொருட்களையும் சேர்த்து பொங்கல் தயாரிப்பார். மஞ்சளிலே குட்டிப் பிள்ளையார் அமைப்பர். பழம், வெற்றிலை, பாக்கு முதலியனவற்றுடன் பொங்கல் படையல் இடப்படும். கற்பூர ஆரத்தியின் பின்னர் ஒரு சிறிய வாழை இலைத் துண்டிலே பொங்கலில் ஒரு பகுதியை இட்டு, காகத்தைக் கூவி அழைத்து, அது உண்ணுவதற்கேற்றபடி உயரமான ஓர் இடத்திலே வைக்கப்படும். அதன் பின்னர் குடும்பத்தினர் பொங்கல் உண்பர். பொங்கலுடன் பலகார வகைகளையும் பரிமாறும் வழக்கமும் இருந்தது.

இன்று, தைத்திங்களிலே வீட்டு முற்றத்திலே பொங்குவது போல சித்திரைத் திங்களிலே பொங்கும் வழக்கம் அருகியே விட்டது. பெரும்பாலானவர்கள் வீட்டினுள் அடுப்பிலே பொங்குவர். பலர் பொங்கும் வழக்கத்தினையே கைவிட்டுவிட்டனர்.

கைவிசேடம்

சித்திரைப் புத்தாண்டில் கைவிசேடம் கொடுக்கும் வழக்கமுண்டு. இதற்கான உகந்த நேரம் பஞ்சாங்கத்திலே குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நேரத்தைக் கடைப்பிடித்து, வீட்டிலே தந்தையே பெரும்பாலும் கைவிசேடம் வழங்குவார். வெற்றிலையில் பணத்தை வைத்துக் கொடுக்க வாங்குபவர்கள் அவருடைய காலிலே விழுந்து வணங்கி ஆசிபெற்ற பின்னர் கைவிசேடத்தை வாங்கிக் கொள்வர். சிலரிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்குமென்ற நம்பிக்கையும் உண்டு. இதனால் அவர்களைத் தேடிச் சென்று சித்திரைப் புத்தாண்டிலே கைவிசேடம் பெற்றுக் கொள்வர். அவ்வாறு கைவிசேடமாகப் பெற்ற பணத்தினை அடுத்த சித்திரைப் புத்தாண்டு வரை பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு.

விளையாட்டுக்கள்

போர்த் தேங்காய் அடித்தல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக அமைந்தது. போர்த் தேங்காய் அடித்தல் தமிழரிடையே நடைபெற்றுவந்த பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும். இது கோயில் திருவிழாக்களிலும் விசேட கொண்டாட்ட நாட்களிலும் நடைபெறுவதுண்டு. சித்திரைப் புத்தாண்டு நாளிலே இவ்விளையாட்டுப் பல காலமாக நடைபெற்று வந்தது.

‘கோழிச்சண்டை’ இன்னொரு பரம்பரை விளையாட்டுப் போட்டி சித்திரைப் புத்தாண்டின் போது நடைபெற்று வந்தது. இம்மரபுவழிபட்ட நிகழ்வினையும் டானியல் தன்னுடைய நாவலிலே விரிவாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். சண்டை செய்வதற்கென்றே சேவல்கள் வளர்க்கப்பட்டன. அவை வளர்க்கப்படும் பக்குவம் பற்றி டானியல் தன்னுடைய அடிமைகள் நாவலில் மிக நுணுக்கமாகக் கூறுகின்றார். இன்று ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் முக்கிய விடயமாகத் திகழும் ‘கோழிச்சண்டை’ நம்முடைய தேசத்திலே சிறப்பாக நடைபெற்றதென்பதற்கு டானியலுடைய நாவல் சான்றாக உள்ளது.

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுக்களில் ஒன்று ‘தாச்சி’ எனப்படும் ‘கிளித்தட்டு’ ஆகும். இதனை விட எல்லை, சடுகுடு போன்ற விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடுவார்கள். பெண்கள் கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, சொக்கட்டான், நாயும் புலியும் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவர்.

பஞ்சாங்கம்

சித்திரைப் புத்தாண்டுக் காலத்திலேயே புதிய பஞ்சாங்கம் வெளி வரும். இலங்கையிலே ‘இரகுநாதையர்’ குழுவினர் கணித்து வெளியிடும் வாக்கிய பஞ்சாங்கமும் ‘திருக்கணித’ குழுவினர் கணித்து வெயியிடும் திருக்கணித பஞ்சாங்கமும் வெளிவருகின்றன. சீனர்கள் தங்களுடைய காலக் கணிப்பில் 60 ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளனர். அவற்றுக்குப் பெயர்களும் இட்டுள்ளனர். கீழைத் தேயக் காலக் கணிப்பில் இது பொதுவான விடயமாக அமைகின்றது. இந்துக் காலக் கணிப்பிலும் 60 ஆண்டுக் கணக்கு இடம்பெறுகின்றது. பிரபவ ஆண்டு தொடக்கம் அஷய ஆண்டு வரையிலான 60 ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டே பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்றது. “இப்பஞ்சாங்கத்திற்கு ஆதாரமாகவுள்ள கணித சித்தாந்தம் மக்களை உய்விக்கும் பொருட்டு மஹாமகத்துவம் பொருந்தியவர்களும் யோக சித்தியால் திரிகால ஞானமுணர்ந்த தத்துவஞானிகளும் ஆகிய முனிசிரேஷ்டர்களால் ஒரு கற்பகாலம் வரையுமுள்ள கிரககால வரையறைகளை எக்காலமும் எளிதிற் கணிக்குமாறு யுக்தியனுபவங்களுக்கியைய நன்கருளிச் செய்யப்பட்டுள்ளது” என்று வாக்கிய பஞ்சாகக்காரர் குறிப்பிடுவதை நோக்குக. இரண்டு பஞ்சாங்கங்கள் பெற்ற மகிழ்ச்சி ஒரு பக்கம்; அதனாலே சில வேளைகளில் உபத்திரவமும் ஏற்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நமது பெரியோர்கள் சொன்ன மேலும் சில விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்!
சித்திரை 1 ஐ தமிழ்புத்தாண்டாக கொண்டாடி வந்த வழக்கத்தை மாற்றி, தமிழக அரசு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. சித்திரை ஒன்று அன்று வழக்கமான பஞ்சாங்கம் படிப்பதைக்கூட கோவில்களில் வாய்மொழியாக தடைசெய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆண்டு என்பது மாதம், வாரம் மற்றும் நாள் ஆகிவற்றால் ஆனதால் இவைபற்றி பார்ப்போம்.

காலத்தை அளவு செய்வதன் அளவுகோல் வானவியலை சார்ந்தது. பருப்பொருள்களின் நகர்தலினால்தான் காலம் என்பதே உருவானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் நமது பாரம்பரிய வானசாஸ்த்திரம் வான் கோள்களின் மாறாத இயக்கத்தை காலக்கடிகாரத்தின் முற்களாய் கொண்டு அளந்தது. நாள், வாரம், திங்கள்,வருடம் எல்லாம் கோள்களின் சுழற்சியினால் கணிக்கப்படுவது. நாளின் மணித்துளிகளை ஹோரை என்றனர் (இதுவே Hour ஆனது). நாழி, விநாழி (தமிழில் வினாடி ஆனது) என்பன நேரத்தின் அளவுகோல்கள்.

நமது வானசாஸ்த்திரம் அனைத்து வகையான காலப்பகுதிகளுக்கும் கோள்களின்/கிரஹங்களின் பெயரைச் சூட்டியது. எனவேதான் கிழமைகளின் பெயர்கள் ஞாயிறு மற்றும் ஏனைய கிரஹங்களின் பெயரில் அமைந்தது. [கிரஹிக்கும் அதாவது ஈர்க்கும் சக்தியினால் (Gravitation) இயங்குவதால் கிரஹம் என்றனர். எனவேதான் சூரியனும் ஜோதிட நோக்கில் மையத்தில் உள்ள ஒரு கிரஹம்தான், நவகிரஹங்களில் காண்பது போல். (சுய ஒளி உடையது நட்சத்திரம், பூமி முதலியன கோள்கள்/கிரஹங்கள் என்பது சமீபகாலத்தில் நம் பள்ளிகளில் எழுதப்பட்டது).

ராகு கேது ஆகியன வெறும் நிழற்கோள்களானதால் அவை கிழமைகளில் இல்லை. திதி என்பது தமிழில் தேதி என ஆனது. பனிரெண்டு ராசிகளால் பனிரெண்டு மாதங்களாயின. இந்தப் பதிவின் முக்கியமான விஷயம் கிழமைப்பெயர்களைப் போன்று தமிழ் மாதங்களின் பெயர்களும் வானவியலை சேர்ந்தது என்பதும் அதில் சித்திரைதான் வருடத்தின் முதல் மாதமாக வைக்கப்பட்ட காரணங்களும் இதனை மாற்றக்கூடாததிற்கான காரணங்களைப் பற்றி விவரிப்பதற்காகவும்.
சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்(விவரம் கீழே காண்க). எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.
ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான்.
எனவே முதல் மாதமாக சித்திரை தவிற வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். எப்படி அர்த்தமே இல்லாமல் தை முதல் மாதமாகமுடியும்?
ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ்மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். மட்டுமல்லாது அன்றைய தினம் விஷேச தினமாகவும் இருக்கும். சித்திரை மாதம் பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வரும். எனவே மாதத்தின் பெயர் சித்திரையானது. அந்நாளும் சித்ராபெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]

விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]

அனுசம் = ஆனி

பூராடம் - பூராடி = ஆடி

சிரவணம் - ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]

பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]

அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]

கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]

மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி

பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]

மகம் - வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]

உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].

ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமியன்று அதற்குரிய நட்சத்திரம் வருவதை காணலாம். இந்த நட்சத்திரப் பெயர்கள் ஏதோ வலிந்துபொருத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்டவை அல்ல. சித்திரையில் தொடங்கி பிற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக 30 அல்லது 31 நாட்சுழற்சியில் வரும். சித்திரையிலிருந்து 31 வது நாள் விசாக(வைசாக) நட்சத்திரம் மற்றும் இதுபோல. மேலும் வைகாசி விசாகம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மாதத்தின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காணலாம்.

இன்னும் அனேகவிஷயங்கள் உள்ளன. இப்படி காலஅளவுகள் நமது பெரியோர்களால் வானசாஸ்த்திரத்தில் அறிவியல் பூர்வமாக கணித்து வழக்கத்தில் உள்ள வருடத்தின் முதல் நாளை மாற்றுவது தவறு. தமிழ் உணர்வு என்பது எல்லாருக்கும் உண்டு. இதனை தேவையில்லாத இடங்களில் புகுத்தி மக்களை உசிப்பேற்றி குளிர்காயக்கூடாது. தமிழை காரணங்காட்டி வங்கிக் கணக்குகளுக்கான வருட ஆரம்பத்தை தை 1 க்கு மாற்ற அரசு உத்தரவிட முடியுமா? தேவையா?
முடிவாக, மாதங்களின் பெயர் சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும்போது, சூரியன் சித்திரையில் நம்மீது நேராக பிராகசிக்கும் வரை சித்திரை தான் வருடத்தின் முதல் மாதமாக இருக்கமுடியும். முதல்மாதம் தை என்பது வெறும் வீம்பாகத்தான் இருக்க முடியும். இதை மக்கள் உணர்ந்து தெரிந்தவர்கள் இவ்விஷயங்கள் தெரியாதுபோன்று இருக்கும் நம் அரசுக்கு உணர்த்தவேண்டும். தெரியாதவர்களுக்கு எடுத்துச்சொல்வோம்.

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

- திருமந்திரம் (திருமூலர்)

தமிழர்கள் பிறந்த நாளை எந்த நாளில் கொண்டாட வேண்டும்?

உண்மையில் நாம் என்று பிறந்தோமோ அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பது நியதி. அப்படிப் பார்க்கும் போது தமிழர்கள் அறுபது வருடத்திற்கு ஒருமுறை தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். நமது தமிழ் வருடங்கள் வான் கோள்களின் சுழற்சியின் அடிப்படையில் இயற்கையின் கணக்கீடுகளைக் குறிப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருகிறது. தமிழ் மாதங்களும் அவ்வாறே. அப்படிப் பார்க்கும் போது நாம் என்று பிறந்தோமோ அந்த வருடமும், எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ அந்த நாளில் தான் தமிழர்கள் உண்மையாகப் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.

அதாவது நாம் எந்த தமிழ் வருடத்தில் பிறந்தோமோ, அந்தத் தமிழ் வருடம், தமிழ் மாதம், தமிழ் நாள் எப்பொழுது மீண்டும் வருகிறதோ அன்று தான் நாம் முதல் பிறந்த நாளையே கொண்டாட வேண்டும். அது தானே சரி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் அறுபது வருடங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது.

இப்படி நாம் பிறந்த அதே நாள் அதே வருடம் திரும்பி வருவதற்க்கு அறுபது வருடங்கள் ஆவதால் அந்த நாளை மிகச்சிறப்பாக அறுபதாம் கல்யாணமாக முழுகுடும்பத்துடன் கொண்டாடுகின்றோம். அதாவது அறுபது வயதில் ஒரு மனிதன் கண்டிப்பாக குடும்பத்துடன் தான் இருப்பான் என்பது இயற்க்கை என்பதால் அதை வெறும் பிறந்த நாளாக மட்டும் கொண்டாடாமல் குடும்ப நாளாகக் கொண்டாடுகின்றோம். மேலும் ஒரு மனிதன் வாழ்வின் ஒரு சுற்றை முடிப்பதற்க்குளே பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள். சிலர் இல்லாமலே போகிறார்கள். இதனாலேயே இவைகளைத் தாண்டி இந்த முதல் பிறந்தநாள் அதாவது அறுபதாவது திருமணம் கொண்டாடுபவர்களை வணங்கி ஆசி பெறுகின்றனர். இப்படி இல்லாமல் ஆண்டுக்கொரு முறை பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் தமிழர்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதை எல்லோரும் மனதில் வைத்து தமிழ் வருடப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டும். சரி இதையும் மூட நம்பிக்கை என்று பகுத்தறிவு மூடர்கள் சொன்னார்கள் என்றால் , தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றிய அவர்கள் தமிழ் வருட கணக்கீடுகளை மாற்ற ஏன் முன்வரவில்லை? தமிழ் வருடங்களின் பெயர்களை ஏன் மாற்றத் துணியவில்லை? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆதலால் அந்த மூடர்கள் படுத்தும் பாடுகளை மறந்து விட்டு நாம் உண்மையான தமிழர்களாக தமிழ்ப் புத்தாண்டை தமிழ் வருடப்படியே கொண்டாடுவோம்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:09 | Best Blogger Tips
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர்....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:07 | Best Blogger Tips


சகோதர, சகோதரிகளே, இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அங்கிருந்த பல்வேறு நாடுகளையும், பல்வேறு மதங்களையும் சேர்ந்த 6 ஆயிரம் பேர் அசைவற்று நின்றனர். அதுவரை அப்படியொரு வார்த்தையை அவர்கள் மேடைப்பேச்சில் கேட்டதே இல்லை. சீமான்களே, சீமாட்டிகளே வார்த்தைகளுக்கு பழகிப் போன அவர்களது காதுகளுக்கு, அந்த வார்த்தை சற்றே அதிர்ச்சியையும், ஒருவித சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. முதல்... வார்த்தையிலேயே அங்கு கூடியிருந்தவர்களை அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தர், அடுத்து பேசிய வார்த்தைகளால் அனைவரையும் கட்டிப்போட்டார்.

காவி உடை தரித்து மேடையில் நிமிர்ந்த நெஞ்சுடன், நேர்கொண்ட பார்வையுடன் நின்றுகொண்டிருந்த இளைஞன் அன்று அனைவரையும் வசீகரித்தான். அந்த இளைஞன் பேச தொடங்கியதும், அங்கிருந்தவர்கள் அவரது குரல் வளத்துக்கும், வார்த்தைகளின் கருத்துச் செறிவுக்கும் தங்ளையே இழந்துவிட்டதாக அடுத்த நாள் அமெரிக்காவில் வெளியான பத்திரிக்கைகள் குறிப்பிட்டன.

1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 11 நாளில் சிகாகோவில் நடைபெற்ற உலக சர்வமத மாநாட்டில், கடைசியாக பேச சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டபோது அவர் உரையை யாரும் கேட்பதற்குத் தயார் இல்லை என்ற தோரணையில் ஆங்காங்கு கூட்டமாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் சகோதர, சகோதரிகளே என்று பேச்சைத் தொடங்கியதும், நிசப்தம் ஏற்பட்டது. அனைவரது பார்வையும், எண்ணங்களும் விவேகானந்தரை நோக்கி செல்லத் தொடங்கியது. அவர் பேசத் தொடங்கும் வரை, இந்தியா அறிவு இல்லாத மக்கள் வசிக்கும் நாடு, பொருளாதாரத்தில் மட்டுமன்றி அறிவிலும் ஏழைகளே அங்கு வசிப்பர், இந்து மதம் துறவறத்தை மட்டும் வலியுறுத்தும் என பலவாறு தாங்கள் நினைத்ததைப் பேசி வந்த மேலைநாட்டு மேதைகள் விவேகானந்தரின் உரையைக் கேட்ட பின்னர், தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.

பல நூற்றாண்டுகளாக இந்தியா மீதும், இந்து மதத்தின் மீதும் பிற நாட்டினர் வைத்திருந்த சில தவறான எண்ணங்களுக்கு, அவர் சில நிமிஷங்களிலே முடிவு கட்டினார். மற்ற மதங்களின் மதத் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை பற்றி உயர்வாகவும், அவர்கள் வணங்கும் இறைவனை பற்றி புகழ்ந்தும், தங்களது கலாசாரமே உயர்ந்தது என்றும் பேசிவிட்டுச் சென்றனர். ஆனால், விவேகானந்தர் இந்து மதத்தின் சகிப்புத்தன்மை, பகுத்தறிவு பற்றி பேசிவிட்டு, இறுதியாக இம் மாநாட்டில் ஒலிக்கும் மணி ஒலி, மத வெறிக்குச் சாவு மணியாக இருக்கட்டும் என்று கூறியபோது அனைத்து மதத் தலைவர்களையும் உணர்ச்சிவசப்படச் செய்து, ஒன்றுபடச் செய்தது. அதன்பின்னர் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டங்களில், விவேகானந்தர் பேச்சைக் கேட்பதற்காகவே மக்கள் அதிகமாகக் கூடினர். விவேகானந்தர் பேச்சே 10 நாள் மாநாட்டின் பிரதானமாக இருந்தது.

மாநாட்டின் முன்புவரை இந்தியர்களுக்கு அறிமுகமாயிருந்த விவேகானந்தர், மாநாட்டிற்குப் பின்னர் உலகின் அனைத்து நாட்டினருக்கும் அறிமுகமானார். இந்தப் புகழை அவர் சாதாரணமாகவோ, எந்த கஷ்டமும் இல்லாமலோ பெற்றுவிட்டதாகக் கூறிவிட முடியாது.சென்னையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலாலும், முயற்சியாலும், சிகாகோவுக்கு அந்த ஆண்டு மே மாதம் கப்பலில் புறப்பட்ட விவேகானந்தருக்கு ஜூலை மாதம் சர்வமத மாநாடு என்று கூறப்பட்டு இருந்தது. சிகாகோவில் இறங்கிய விவேகானந்தருக்கு இடியேன ஒரு செய்தி கிடைத்தது. ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, செப்டம்பர் மாதம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.

குறைவான பணத்துடனே சென்றிருந்த விவேகானந்தருக்கு அந்த குளிர் பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் எங்கு தங்குவது, எங்கு சாப்பிடுவது என்ற பல பிரச்னைகள் எழத் தொடங்கின. ஒருவாறு, திடீரென அறிமுகமாகிய சில நண்பர்கள் வீட்டில் தங்கி, நாள்களை ஓட்டினார் விவேகானந்தர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பதிவுசெய்ய வேண்டிய தேதி முடிந்துபோன நிலையில், பின்னர் பதிவு செய்தவதற்காக அவர் ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பலவாறு கஷ்டப்பட்டு மாநாட்டுக்குச் சென்ற விவேகானந்தர், ஒட்டுமொத்த பாரதத்துக்காகவே பேசினார். விவேகானந்தர் பேச்சுக்கு அடிமையாகிப் போன அமெரிக்கர்கள், மாநாட்டுக்குப் பின்னர் அவரை உடனே நாடு திரும்ப விடவில்லை. அமெரிக்கர்களின் அழைப்பை ஏற்று, அவர்கள் எங்கெல்லாம் பேச அழைத்தார்களோ, அங்கெல்லாம் பேசினார். தனது ஒவ்வொரு மேடைப் பேச்சுக்கும் அவர்களிடமிருந்து பணமும் பெற்றுக் கொண்டார்.

அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் பிரசங்கம் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு 1897ம் ஆண்டு பாரதம் திரும்பினார். தாயகம் திரும்பிய விவேகானந்தர், முதல் வேளையாக பேலூரில் தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பெயரில் ஒரு மடத்தை உருவாக்கினார். அந்த மடத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்ய, தனது சீடர்களை பணித்தார். 120 ஆண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தர் இந்தியாவுக்கு ஏற்படுத்திய புதிய முகாந்திரம்தான் இன்றளவும் நமக்கு வெளிநாடுகளில் உள்ளது. இந்தவேளையில், அவரது 150 ஆம் ஆண்டு பிறந்த ஆண்டான இந்த வருடம் விவேகானந்தரையும், அவரது கருத்துகளையும் பற்றி மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/644209_502705856456449_880473254_n.jpg