மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்..!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:47 | Best Blogger Tips


மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்..!

மல்லிகைப் பூ என்றாலே தலையில் சூடிக் கொள்ளவும், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படும் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்! ! ! !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:23 | Best Blogger Tips


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்க ு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது...!

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்...!

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...!

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று...!

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை...!

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வுகொடுக்கும் . வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பத ு மூளைக்குநீண்டகா லப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது...!

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது...!

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது...!

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும ் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள்உருவா கின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது...!

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்! ! ! !

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்க ு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது...!

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்...!

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...!

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று...!

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை...!

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வுகொடுக்கும் . வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பத ு மூளைக்குநீண்டகா லப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது...!

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது...!

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது...!

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும ் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள்உருவா கின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது...!

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:19 | Best Blogger Tips


மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.
நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு

இதில்,

நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.

மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.

சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.

வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.

யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.
நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.
நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு

இதில்,

நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.

மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.

சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.

வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.

யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.

நக்ஷத்திரங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:06 | Best Blogger Tips
நக்ஷத்திரங்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன .அவை முறையே

தேவ கணம் ,மனுஷ கணம்,.ராக்ஷச கணம் ஆகும் .

தேவ கணத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த எண்ணங்களோடும் ,நல்ல செயல்களோடும் இருப்பார்கள்.

மனுஷ கணத்தில் பிறந்தவர்கள் ,பிறருடன் அனுசரித்து போவார்கள் . மனிதனுக்கு உண்டான அனைத்து குணங்களும் பொருந்தியவராக இருப்பார்கள் .

ராக்ஷஸ கணத்தில் பிறந்தவர்கள் பிறரிடம் அனுசரித்து போக மாட்டார்கள் .அடிக்கடி ஆத்திரப்படுவார்கள் .

தேவகணம் என்று சொல்லப்படும் நக்ஷத்திரங்கள் :-
------------------------------------------------------------------------------------

அசுவதி, மிருகசீரிஷம் , புனர்வசு, பூசம், ஹஸ்தம், சுவாதி , அனுஷம், திருவோணம், ரேவதி.

மனுஷ கணம் என்று சொல்லப்படும் நக்ஷத்திரங்கள்:-
-------------------------------------------------------------------------------------
பரணி, ரோஹிணி , திருவாதிரை, பூரம், உத்திரம் , பூராடம், உத்திராடம் , பூரட்டாதி , உத்திரட்டாதி .

ராக்ஷஸ கணம் என்று சொல்லப்படும் நக்ஷத்திரங்கள் :-
------------------------------------------------------------------------------------------
கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் .

திருமண பொருத்தம்
-------------------------------

ஆண் , பெண் இருவருக்கும் ஒரே கணமானால் உத்தமம் .

தேவகணம் -மனுஷ கணம் என்றால் மத்யமம் .

ராக்ஷஸ கணம் -தேவ கணம் என்றால் சேர்க்க கூடாது.

மனுஷ கணம் -ராக்ஷச கணம் -- ம்ருத்யு -சேர்க்ககூடாது.

பெண் ராக்ஷஸ கணம் -ஆண் தேவ அல்லது மனுஷ கணம் என்றால் சேர்க்ககூடாது. இதில் பெண் நக்ஷத்திரம் முதல் ஆண் நக்ஷத்திரம் 14-க்கு மேல் இருந்தால் பெண் ராக்ஷஸ கணமானாலும் தோஷமில்லை ,சேர்க்கலாம்.

குறிப்பாக மனுஷ கணத்திலோ ,அல்லது தேவ கணத்திலோ பிறந்த பெண்ணை ராக்ஷச கணத்தை தவிர்த்து இதர இரு கணங்களில் உள்ள நக்ஷத்திரங்களுக்கு சேர்த்தால் குடும்ப வாழ்க்கை நன்மை பயக்கும்.
நக்ஷத்திரங்கள்  மூன்று  வகையாக  பிரிக்கப்படுகின்றன .அவை  முறையே

தேவ கணம் ,மனுஷ  கணம்,.ராக்ஷச கணம்  ஆகும் .

தேவ கணத்தில் பிறந்தவர்கள்  உயர்ந்த  எண்ணங்களோடும் ,நல்ல செயல்களோடும் இருப்பார்கள்.

மனுஷ கணத்தில் பிறந்தவர்கள் ,பிறருடன்  அனுசரித்து  போவார்கள் . மனிதனுக்கு  உண்டான  அனைத்து  குணங்களும்  பொருந்தியவராக இருப்பார்கள் .

ராக்ஷஸ  கணத்தில்  பிறந்தவர்கள் பிறரிடம்  அனுசரித்து  போக மாட்டார்கள் .அடிக்கடி  ஆத்திரப்படுவார்கள் .

தேவகணம்  என்று சொல்லப்படும்  நக்ஷத்திரங்கள் :-
------------------------------------------------------------------------------------

அசுவதி, மிருகசீரிஷம் , புனர்வசு, பூசம், ஹஸ்தம், சுவாதி , அனுஷம், திருவோணம், ரேவதி.

மனுஷ கணம்  என்று சொல்லப்படும் நக்ஷத்திரங்கள்:-
-------------------------------------------------------------------------------------
பரணி,  ரோஹிணி , திருவாதிரை, பூரம், உத்திரம் ,  பூராடம், உத்திராடம் , பூரட்டாதி , உத்திரட்டாதி .

ராக்ஷஸ  கணம் என்று சொல்லப்படும்  நக்ஷத்திரங்கள் :- 
------------------------------------------------------------------------------------------
கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் .

திருமண பொருத்தம் 
-------------------------------

ஆண் , பெண்  இருவருக்கும்  ஒரே  கணமானால்  உத்தமம் .

தேவகணம் -மனுஷ கணம்  என்றால்  மத்யமம் .

ராக்ஷஸ  கணம் -தேவ கணம் என்றால்  சேர்க்க கூடாது. 

மனுஷ கணம் -ராக்ஷச கணம் -- ம்ருத்யு -சேர்க்ககூடாது.

பெண்  ராக்ஷஸ  கணம் -ஆண்  தேவ  அல்லது மனுஷ  கணம் என்றால்  சேர்க்ககூடாது.  இதில்  பெண்  நக்ஷத்திரம்  முதல் ஆண்  நக்ஷத்திரம்  14-க்கு  மேல்  இருந்தால்  பெண்  ராக்ஷஸ கணமானாலும்  தோஷமில்லை ,சேர்க்கலாம்.

குறிப்பாக  மனுஷ கணத்திலோ ,அல்லது தேவ கணத்திலோ பிறந்த பெண்ணை   ராக்ஷச கணத்தை  தவிர்த்து  இதர  இரு கணங்களில்  உள்ள  நக்ஷத்திரங்களுக்கு  சேர்த்தால்  குடும்ப வாழ்க்கை  நன்மை  பயக்கும்.

ஒரு குட் நியூஸ் ஒரு BAD நியூஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:02 | Best Blogger Tips

முதலில் BAD நியூஸ் :

அந்தரங்க ஆபத்து....உஷார்......!!!

என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா… வெயிட்… உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்…(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன)

அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது. அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. ‘செல்போனில் இருந்து Delete செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு Delete செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை Delete செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ… என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் Delete செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.

”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software) மூலமாக.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் Delete செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சர்வீஸ் மட்டும் செய்வதில்லை, ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று (‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள்' மூலம்) தேடிப்பார்த்து, வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். (சர்வீஸ் செய்பவர்களில் நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ...அதை மறுப்பதற்கில்லை..)

இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்… உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

முக்கியமாக துணிக்கடைகளின் "ட்ரையல் ரூம்கள்" போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…!

சில வைரஸ் சாப்ட்வேர் மூலம் உங்கள் வெப் கேமரா வை ஆன் செய்து அதை ரெகார்ட் செய்யவும் முடியும்...

நல்ல செய்தி :

ஹர்ட்-டிஸ்/மெமரி-கார்டு களில் DELETE செய்த புகுதிகளை நிரந்தரமாக நீக்க கீழ்வரும்
சாப்ட்வேர் பயன்படுத்தி அழிக்கலாம்...

Eraser சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் ...

http://sourceforge.net/projects/eraser/files/Eraser%206/6.0.10/Eraser%206.0.10.2620.exe/download



தொப்பையை குறைக்க வழி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:00 | Best Blogger Tips

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி...ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
 
Via Relax Please

தேன் மருத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:55 | Best Blogger Tips
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு. தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திறக்கும் மருந்தாக உள்ளது.
தினமும் வெறும் வயிற்ட்ருடன் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்பதர்க்கு முன் சுத்தமான தேனை ஒன்று முதல் மூன்று தேக்கரண்டி தேனை எடுத்து கொண்டு ஆறிய சுடுதண்ணியுடன் அதை கலந்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை அழற்சி ஈரல், வயிற்று புண், பித்தப்பை நோய்கள் குணமாகும்.
தேனுடன் வெங்காய சாரைதேன் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது , இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிர் வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது
எலுமிச்சம் பழச்சாறுடன் தேனை கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலை வல சரியாகும் .( மருத்துவ குணங்கள் )
கண்பார்வை பிரகாசமாக தெறிய தேனுடன் வெங்காய சாரை கலந்து சாப்பிட்டு வரவேண்டும்== தேனுடன் முட்டை மற்றும் பாலை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம

உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது.
ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.

இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.

120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.

நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

மதுரை மீனாக்க்ஷி அம்மன் கோவில் ஒரு சிறப்பு !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:56 | Best Blogger Tips


மீனாக்ஷி அம்மன் கோயில்இந்தியாவில் மதுரை மாநகரில் அமைந்துள்ள வரலாற்று சிறுப்பு மிக்க புனித ஸ்தலமாகும்.இங்கு சிவ பெருமானை ”சுந்தரேஸ்வரர்” என்றும் அம்பாளை “மீனாட்சி” என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோயில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை நகரின் உயிர் நாடியாக விளங்குகின்றது. பண்டைய கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் பறை சாற்றுகின்ற இக்கோவிலில் இரண்டு தங்க கோபுரம் உட்பட 14 கம்பீரமான கோபுரங்கள் உள்ளது. இது தமிழ் மக்களின் ஒரு அடையாளமாக உள்ளது, மற்றும் தற்போதைய அமைப்பு 1600 இல் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. என்றாலும், தமிழ் இலக்கியத்தில் பழங்காலத்தில் இருந்து குறிப்பிடப்பட்டுள்ளது. உயரமான கோவில் கோபுரம் உயர் 51,9 மீட்டர் (170 அடி) ஆகும்.
இந்து மதம் புராணத்தின் படி, இரண்டாவது பாண்டிய மன்னர் மலயத்துவ பாண்டியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனமாலை நடத்திய புத்திர காமேஷ்டி வேள்வியின் பயனாக யாகத் தீயிலிருந்து பார்வதி தோன்றியதாக கூறப்படுகிறது . மற்றொரு புராணத்தின் படி,முற்பிறவியில் காஞ்சனமாலைக்கு பார்வதி தேவியே மகளாக பிறப்பதற்கு வரம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. யாகத்தீயிலிருந்து பிறந்த பெண் குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருப்பதை கண்டு மன்னர் அதிர்ச்சியுற்றார். அப்போது அவர்க்கு ஓர் அசரிரீ கேட்டது.”மன்னனே கவலைப்பட வேண்டாம். அந்தப் பெண் தன் எதிர்காலக் கணவனை சந்திக்கும் போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும்“ என்று கூறியது. பின்னர் மன்னன் அந்த பெண் குழந்தைக்கு ’தடாதகை’ என்று பெயரிட்டு சந்தோசமாக வளர்த்தார்.
அந்தப்பெண் தான் ஒரு தெய்வபிறவி என்றில்லாமல் சாதாரண மானிடப் பெண் போலவே வளர்ந்தார்.மலயத்துவ மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தடாதகை போர் பயிற்சி உட்பட 64 கலைகளையும் கற்று தேர்ந்தால். எட்டு திசைகளிலும் போர் புரிந்து மூவுலகையும் வென்று சிவனின் உறைவிடமான கைலாசத்தை நோக்கி முன்னேறினால்.அங்கு எளிதாக நந்தியை முறியடித்து போர் புரிய சிவனை நோக்கி சென்றால்.சிவனை கண்டவுடன் போர் புரிய முடியாமல் தலை குனிந்து நின்றால் .அந்த கணமே அவளுடைய மூன்றாவது மார்பும் மறைந்தது. அப்போது தான் தடாதகை சிவன் தான் தன்னை மணக்க வந்தவர் என்றும் தான் பார்வதியின் அம்சம் என்றும் உணர்ந்தாள்.பின்னர் சிவனும் தடாதகையும் மதுரைக்கு திரும்பினர். மலையத்துவ மன்னன் முதலில் பார்வதிக்கு முடிசூட்டு விழாவும் அடுத்தநாளில் திருமண ஏற்பாடும் செயதார் . அந்த திருமணம் பூமியில் நடக்கும் மிகப்பெரிய நிகழ்வாவதால் உலகமே மதுரையில் கூடியது. இந்த திருமணத்திற்காக பார்வதியின் சகோதரரான விஷ்ணு வைகுண்டத்திலிருந்து பிரயானப்பட்டார்.தெய்வீக விளையாட்டினால் ,இந்திரன் விஷ்ணுவின் பயணத்தில் தடை ஏற்ப்படுத்தி தாமதப்படுத்தினார்.இதற்கிடையில் மதுரையில் இருக்கும் திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாள் தலைமையில் திருமணம் இனிதே நடந்தேறியது. இதனை அடிப்படையாகக் கொண்டு நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரையில் ஆண்டுதோறும் “சித்திரை திருவிழா” கொண்டாடப்பட்டது.

பின்னர் வந்த திருமலை நாயக்க மன்னர் “அழகர் திருவிழா”வையும் “மீனாக்க்ஷி திருக்கல்யானத்தையும்” இணைத்து இன்று வரை ”சித்திரை திருவிழா” வாக கொண்டாடப்படுகிறது.

நவீன வரலாறு.
அசல் கட்டமைப்பு வரலாறு சரியாக தெரியவில்லை, ஆனால் தமிழ் இலக்கியங்களின் வாயிலாக இக்கோயிலின் சில நூற்றாண்டுகளின் வரலாட்ற்றை அறிய முடிகிறது.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ துறவி ’திருஞானசம்பந்தர்’ இக் கோயிலின் இறைவனை ’ஆலவாய் இறைவன்’ என்று விவரித்துள்ளார் . 1310 ஆம் ஆண்டில் மாலிக் கபூர் என்பவரின் கீழ் முஸ்லீம்களின் வூடுருவளால் பண்டைய கூறுகள் அழிக்கப்பட்டன.
அதன் பின் முதல் நாயக்க மன்னனான மதுரை விஸ்வநாத நாயக்கர் (கி.பி.1559-1600) இக் கோயிலை ’அரியநாத முதலியார்’ எனும் மந்திரியின் மேற்பார்வையில் புனரமைத்தார். அதன் பின் வந்த ‘திருமலை நாயக்க’ (1623-1659)மன்னர் இதில் பெரும் பங்காற்றினார். கோயிலுக்கு வுள்ளேயும் வெளியேயும் விரிவாக்கம் செய்தார். வசந்த உத்சவத்திற்கு ’வசந்த மண்டபம்’,'கிளிக்கூட்டு மண்டபம்’ மற்றும் ’தெப்பக்குளம்’ ஆகியவற்றை ’ராணி மங்கம்மாள்’ வுருவக்கினார். ‘மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்’ ராணி ‘மீனாக்ஷி’யால் உருவாக்கப்பட்டது.

https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-snc7/482377_371758806273816_783800630_n.jpg

மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:55 | Best Blogger Tips


எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை.

அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம். இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவது எப்படி என்பது குறித்த சில முக்கியமான குறிப்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம். நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோ மனச்சோர்வில் இருந்தால், இவற்றை படிக்குமாறு கூறி, வாழ்வை இனிமையாக்குங்கள்.

உடற்பயிற்சி செய்வது:

மன அழுத்தத்தை நீக்க சிறந்த வழி உடற்பயிற்சி. இது நல்ல உடல் அமைப்பை கொடுப்பது மட்டுமின்றி, நேரிடையான சிந்தனைகளையும் அதிகரிக்கின்றது. உணர்வுகளை சீர்படுத்துகின்ற செரோடொனின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகியவற்றை சுரக்க உடற்பயிற்சி உதவுகின்றது. அதோடு மனச்சோர்வு அளிக்கும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிடுகின்றது.

உதவி கேட்பது:

வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை. வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர்பாப்பது இல்லை. ஆகவே தாய், தந்தை, துணைவர், உடன் பணியாளர் அல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும்.

சமச்சீர் உணவு :

பழங்கள், காய்கரிகள், மாமிசம், தானியங்கள் மற்றும் கார்போ ஹைட்ரேடுகள் ஆகிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல், சிந்தனை சிதறாமல் இருக்க உதவுகின்றன. சமச்சீர் உணவு உடல்நலனையும், மனநலனையும் சீர்படுத்துகின்றது.

சுய விழிப்புணர்வு :

வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாமல், தங்களை அளவுக்கு மீறி அழுத்துவதால் மக்கள் பொதுவாக மனச்சோர்வு அடைகிறோம். எனவே சரியாக தம்மை புரிந்து கொண்டு, அதை சந்தோஷமாக விரும்பி செய்தால், மனச்சோர்வானது நீங்கும்.

எடை குறைத்தல் :

மனச்சோர்வுக்கு அதிகமான எடை பிரச்சனையாக இருந்தால், எடையை குறைக்க முயல்வது ஒரு நல்ல தீர்வைத் தரும். மேலும், உடல் வலிமை ஆரோக்கியத்தையும், சுய கருத்துக்கும் நேர்மறையான சிந்தனையை கூட்டுகின்றது.

நண்பர்கள் :

நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும், தேவையுள்ள நேரத்தில், சொல்வதை காதுகொடுத்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர்மறையான சிந்தனைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.

டைரி எழுதுவது :

தினசரி உணர்வுகளை எழுத்து மூலமாக பதிவு செய்வது சுய பரிசோதனை செய்வதற்கும், ஆராய்வதற்கு ஒரு சிறந்த வழி ஆகும். இவ்வாறு வாழ்க்கையை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அனுதினமும் பதிவு செய்தால், மனச்சோர்வில் இருந்து விடுபட ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

எதிர்மறையான மக்களிடம் இருந்து விலகி இருப்பது :

தொடர்ச்சியாக பிறரை குறைத்து பேசுகிறவர்களோடு இருக்க யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதானத்தையும் கொடுக்கும்.

வேலையை விட்டு விடுதல் :

பிரச்சனைகளின் வேர் வேலையில் இருந்தால், அதை விட்டுவிடுவது மன அமைதியை கொடுக்கும். தனிப்பட்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் விட்டுக் கொடுக்காமல், குறிக்கோளை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு வேலை ஒரு தடையாக இருந்தால், அதை விட்டு விடுங்கள்.

தனிமையாக இருப்பதை தவிர்ப்பது:

மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமே தவிர, அமைதியடையாது. அதற்காக எப்போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால், அவை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச்சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும்.

சுற்றுலா செல்லுதல் :

எதிர்மறையான சிந்தனைகளை அகற்றுவதற்கு, காட்சி அமைப்பை மாற்றுவது எப்போதுமே உதவியாக இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான சிந்தனைகளை கொண்டு வர ஒருநாள் பிரயாணம் மேற்கொள்வதற்கு ஈடாக எதுவுமே இல்லை. எனவே மனச்சோர்வின் போது எங்கேனும் வெளியே சென்றால், எளிதில் மனச்சோர்வானது நீங்கும்.

நேர்மறையான எண்ணங்கள்:
வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடுக்கும் சிந்தனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. மனதிலே எதிர்மறை உணர்வுகள் இருக்கின்றன. சிந்தனைகளை நேர்மறையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச்சோர்வின் தாக்கங்களை அகற்றிவிடலாம்.

மனநல வல்லுநரிடம் பேசுவது :

மனச்சோர்வில் இருந்து வெளிவருவதற்கு மிகவும் எளிதான மற்றும் ஆற்றல் வாய்ந்த வழி மனநல வல்லுநரிடம் பேசுவது தான். இதனால் மனச்சோர்வின் வேரை கண்டுபிடித்து அகற்ற முடியும்.

செல்லப்பிராணியை வளர்ப்பது:

செல்லப்பிராணிகள் தங்கள் எஜமான்களிடம் அற்புதமான வழியில் தொடர்பு கொள்கின்றன. தனியாக வாழ்கிறவர்களை காட்டிலும், செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மனச்சோர்வின் தாக்கங்களில் இருந்து பிழைத்துக் கொள்கிறார்கள் என்று பல ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. ஆகவே செல்லப்பிராணியுடன் உணர்வுபூர்வமாக தொடர்புகொள்வது, எதிர்ம்றையான உணர்வில் இருந்து வெளிவர உதவும்.

நிகழ்காலத்தில் வாழ வேண்டும் :

இறந்தகால தவறுகளிலும், எதிர்காலத்தின் நிலையின்மையிலும் உழல்வதில் அர்த்தமே இல்லை. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அச்சூழ்நிலையில் உங்கள் உணர்வுகளை செலுத்துவது பலன் அளிக்காது. 'எப்போது',‘எங்கே' மற்றும் ‘நாளை' என்பனவற்றுக்கு பதிலாக, 'இப்போது', ‘இங்கே',‘இன்று' என்பனவற்றில் கவனம் செலுத்துங்கள்.

நன்றாக தூங்குவது :

நேர்மறையான சிந்தனைக்கு திரும்ப ஒருவருக்கு தேவைப்படுவது எல்லாம் ஒரு நல்ல உறக்கமே. இரவு தோறும் 7-8 மணிநேரம் உறங்குவது குறைவான மனச்சோர்வுக்கான அறிகுறிகளை காட்டுவதாக ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

இசையை கேட்பது :

மனச்சோர்வில் இருக்கும் போது, உணர்வை எழுப்பும் இசையை கேட்பது சோர்வடைந்த மனதிற்கு ஊக்கம் அளிக்கும். உணர்வுகளை மாற்றவும், ஆன்மாவை உயர்த்தவும், உணர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் ஆற்றல் இசைக்கு இருக்கின்றது. எனினும், மிகவும் உணர்வுபூர்வமான பாடல்களை கேட்பதால், எதிர்மறையான விளைவு ஏற்படும் என்பதால், அவற்றை தடுக்க வேண்டும்.

வைட்டமின் சேர்க்கைகள்:

ஊட்டச்சத்து குறைபாடுகளும் மனச்சோர்வு அளிக்கும் சிந்தனையை விளைவிக்கலாம். இதனால் வெளிப்படும் அறிகுறிகளை மருத்துவரிடம் ஆலோசித்து, சமன்பாட்டை சரிசெய்ய வைட்டமின் சேர்க்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

 
Thanks to :Thannambikkai

கோடைக் கால குறிப்புகள் - 7

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:53 | Best Blogger Tips



பாசிப் பயறு சாலட்டும் பட்டாணி சூப்பும்

1) பட்டாணி சூப்

தேவையான பொருட்கள்

பச்சைப் பட்டாணி - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 2 பல்
எலுமிச்சம்பழச் சாறு - 1 மேஜைக் கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பூண்டு, இஞ்சி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உருளைக்கிழங்கு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.

3. அதனுடன் 100 கிராம் அளவு பட்டாணி, மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

4. 300 மில்லி தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவிடவும்.

5. பிறகு நீரை வடிகட்டி தனியே வைத்துவிட்டு, காய்களை நன்கு அரைக்கவும்.

6. அரைத்த விழுதை தனியே வைத்துள்ள தண்ணீருடன் கலக்கவும். பின்னர் மீண்டும் வடிகட்டவும்.

7. அதனுடன் மிளகுத்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

8. மீதி உள்ள 50 கிராம் பட்டாணியை தனியே உப்பு போட்டு வேகவைத்து கடைசியாக சூப்பில் மிதக்கவிட்டுப் பரிமாறவும்.


2) பாசிப்பயறு சாலட்

தேவையான பொருட்கள்

முழு பாசிப் பயறு - அரை கப்,
எலுமிச்சம் பழம் - 1,
கேரட் துருவல் - 1 கப்,
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,
பொடியாக்கிய பச்சை மிளகாய் -தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது,
கடுகு - தாளிக்க.

செய்முறை

பச்சைப் பயறைக் கழுவி, ஊற வைத்து, வடித்து, ஒரு துணியில் கட்டி முளை கட்ட வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கித் தனியே எடுத்து வைக்கவும். முளை கட்டிய பயறு, தேங்காய் துருவல், கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் அப்படியே பச்சையாகக் கலந்து, அதன் மேல் தாளித்து வைத்துள்ளதைக் கொட்டிக் கிளறி பரிமாறவும்.

இந்த சூப்பும் சாலட்டும் சத்து மட்டுமல்ல சுவையும் நிறைந்தது. வெயில் சூடு தணிய நிறைய காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முடிந்த வரையில் உணவில்காரத்தை குறைத்து சாப்பிடுவது நல்லது.
கோடைக் கால குறிப்புகள் - 7
------------------------------------------------

பாசிப் பயறு சாலட்டும் பட்டாணி சூப்பும்

1) பட்டாணி சூப்

தேவையான பொருட்கள்

பச்சைப் பட்டாணி - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 2 பல்
எலுமிச்சம்பழச் சாறு - 1 மேஜைக் கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பூண்டு, இஞ்சி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, உருளைக்கிழங்கு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.

3.  அதனுடன் 100 கிராம் அளவு பட்டாணி, மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

4.  300 மில்லி தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வேகவிடவும்.

5. பிறகு நீரை வடிகட்டி தனியே வைத்துவிட்டு, காய்களை நன்கு அரைக்கவும்.

6. அரைத்த விழுதை தனியே வைத்துள்ள தண்ணீருடன் கலக்கவும். பின்னர் மீண்டும் வடிகட்டவும்.

7. அதனுடன் மிளகுத்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

8. மீதி உள்ள 50 கிராம் பட்டாணியை தனியே உப்பு போட்டு வேகவைத்து கடைசியாக சூப்பில் மிதக்கவிட்டுப் பரிமாறவும்.


2) பாசிப்பயறு  சாலட்

தேவையான பொருட்கள்

முழு பாசிப் பயறு - அரை கப்,
எலுமிச்சம் பழம் - 1,
கேரட் துருவல் - 1 கப்,
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்,
பொடியாக்கிய பச்சை மிளகாய் -தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - சிறிது,
கடுகு - தாளிக்க.

செய்முறை

பச்சைப் பயறைக் கழுவி, ஊற வைத்து, வடித்து, ஒரு துணியில் கட்டி முளை கட்ட வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கித் தனியே எடுத்து வைக்கவும். முளை கட்டிய பயறு, தேங்காய் துருவல், கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லி,  பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் அப்படியே பச்சையாகக் கலந்து, அதன் மேல் தாளித்து வைத்துள்ளதைக் கொட்டிக் கிளறி பரிமாறவும்.

இந்த சூப்பும் சாலட்டும் சத்து மட்டுமல்ல சுவையும் நிறைந்தது. வெயில் சூடு தணிய நிறைய காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முடிந்த வரையில் உணவில்காரத்தை குறைத்து சாப்பிடுவது நல்லது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாம்பிற்கு பால் ஊற்றுவதும் ,முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன ?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:42 | Best Blogger Tips



உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
பாம்பிற்கு பால் ஊற்றுவதும் ,முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன ?

SHARE & Like the page here-->> @[293309174033072:274:World Wide Tamil People]

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

சென்செக்ஸ் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:07 | Best Blogger Tips



What Is Sensex How Is It Calculated

சென்செக்ஸ் என்ற வார்த்தை, நிதித்துறை வட்டாரங்களுக்கு அப்பாலும், மிகவும் புகழ்பெற்ற ஒரு சொல்லாடல் ஆகும். சென்செக்ஸ் என்றால் சென்சிடிவ் இன்டெக்ஸ், அதாவது, அடிக்கடி மாறக்கூடிய சுட்டெண் அல்லது குறியீட்டு எண் என்று அர்த்தம். இச்சொல் மும்பை பங்குச் சந்தை சென்சிடிவ் இன்டெக்ஸில் அடிக்கடி உபயொகிக்கப்படும் ஒரு சொல்லாக விளங்குகிறது. இந்தியாவின் மிகப் பழமையான இன்டெக்ஸான இது, மும்பை பங்குச் சந்தையின் மிகப் பெரியதான முப்பது பங்குகளின் போக்கைக் கண்காணிக்க உதவுகிறது.

இந்த 30 பங்குகளும், பல்வேறு பண்பளவுகளையும், குறியீட்டு முறைகளையும் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுகிறன. பொதுவாக, இப்பங்குகள் அதிக மூலதன மதிப்பாக்கத்தைக் கொண்ட பங்குகளாகவே இருக்கும். தற்போது, பங்குச்சந்தையின் போக்கை கணிக்கக்கூடிய ஒரு சிறந்த அளவுகோலாக சென்செக்ஸ் விளங்குகிறது.

சென்செக்ஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மும்பை பங்குச் சந்தையின் மிகப் பெரியதான முப்பது பங்குகளின் போக்கைப் பொறுத்தே சென்செக்ஸ் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு, கணக்கிடப்படுவதற்கு, "வரம்புகளற்ற மிதவை பங்கு மூலதன மதிப்பாக்கம்" என்ற பெயர் கொண்ட ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது. இம்முறை, உலகெங்கும் பரவலான வரவேற்பைப் பெற்ற ஒரு வழிமுறையாகும். ஒரு நிறுவனத்தில், நிறுவனரிடமோ அல்லது அரசிடமோ உள்ள பங்குகள் விற்பனைக்கு அனுப்பப்படமாட்டாது. இப்பங்குகள் தவிர்த்து, மற்ற சில பங்குகள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

சென்செக்ஸ் தற்போது உள்ளடக்கிய பங்குகளின் பட்டியல் பின்வருமாறு:

பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், பி.ஹெச்.எல், சிப்லா, கோல் இந்தியா, டி.எல்.எஃப், கெயில் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹின்டால்கோ இண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோஸிஸ், ஐடிஸி, ஜிண்டால் ஸ்டீல், எல்&டி, மஹிந்திரா & மஹிந்திரா, மாருதி சுஸுகி, என்டிபிசி, ஓஎன்ஜிசி, ஆர்ஐஎல், எஸ்பிஐ, ஸ்டெர்லைட் இண்ட்ஸ், சன் ஃபார்மா, டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா ஸ்டீல், டிசிஎஸ் மற்றும் விப்ரோ
மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றுக்கு அடுத்ததாக எம்சிஎக்ஸ்- எஸ்எக்ஸ் இந்தியாவின் மூன்றாவது பெரிய பங்குச் சந்தையாக விளங்குகிறது.

Thanks to Thatstamil

டீமாட் கணக்கு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:01 | Best Blogger Tips

Demat Account How It Works
சென்னை: வங்கிக் கணக்கில், எவ்வாறு உங்கள் வங்கி இருப்பு என்பது உங்கள் கையில் தொகையாக இல்லாமல், வங்கி கணக்கேட்டில் வரவாக, குறிக்க மட்டுமே படுகிறதோ, டீமாட் கணக்கும் அது போலவே செயல்படக்கூடிய ஒன்றாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிக் கணக்கில் எவ்வாறு ஆவணங்கள் மற்றும் பற்று வரவு ஆகியன மின்னணு வடிவில் உள்ளதோ, அவ்வாறே டீமாட் கணக்கிலும் இருக்கும்.

எதனால் உங்களுக்கு டீமாட் கணக்கு அவசியமாகிறது?

எஸ்இபிஐ வழிமுறைகளின்படி, பங்குகளை பருப்பொருள் தன்மை நீக்கிய (டீமெட்டீரியலைஸ்ட்) நிலையிலேயே வாங்கவோ, விற்கவோ முடியும். அதனால், நீங்கள் பங்குச் சந்தை மூலமாக பங்குகளை வாங்கவோ, விற்கவோ விரும்பினால், உங்களுக்கு டீமாட் கணக்கு கட்டாயத் தேவையாகிறது.

இது எவ்வாறு செயல்படுகிறது?

நீங்கள் பங்குகள் வாங்கும்போது, தரகர் அப்பங்குகளை உங்கள் டீமாட் கணக்கில் வரவு வைப்பார். இது நீங்கள் கைக்கொண்டுள்ள முதலீட்டுப் பங்குகளின் விவர அறிக்கையிலும் பிரதிபலிக்கப்படுகிறது. நீங்கள் கணினிமூல (ஆன்லைன்) இணையத்தின் வழியாக பங்குகள் வாங்கினால், உங்கள் முதலீட்டுப் பங்குகளின் நிலவரத்தை, ஆன்லைனில் நேரடியாகவே பார்த்துக் கொள்ளலாம். பொதுவாக, தரகர் உங்கள் பங்குகளை வர்த்தகம் நடந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்குப் பின் உங்கள் கணக்கில் வரவு வைப்பார்.
நீங்கள் உங்கள் பங்குகளை விற்கும்போது, உங்கள் தரகரிடம், விற்கப்படும் பங்குகள் பற்றிய தகவல்கள் நிறைந்த ஒரு வழங்குமுறை குறிப்பை, தந்து வைக்க வேண்டும். இப்பங்குகள் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பின், உங்களுக்கு பங்குகள் விற்றதற்கான பணம் வழங்கப்படும். நீங்கள் இணையத்தின் வழியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தால், விற்கப்பட்ட பங்குகள் மற்றும் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட தகவல்களை உங்கள் டீமாட் கணக்கு தானாகவே பிரதிபலிக்கும்.
இந்தியாவில், தி நேஷனல் செக்யூரிடீஸ் டெப்போஸிட்டரீஸ் லிமிடெட் (என்எஸ்டிஎல்) மற்றும் தி சென்ட்ரல் டெப்போஸிட்டரி சர்வீசஸ் லிமிடெட் (ஸிடிஎஸ்எல்) என்ற இரண்டு சேமிப்புக் களஞ்சியங்கள் உள்ளன. இவ்விரு களஞ்சியங்கள் மூலமாகவே பல பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை நிலைநிறுத்துகின்றனர்.

டீமாட் கணக்கு திறப்பதினால் கிடைக்கும் நன்மைகள்:

பங்குகளை பொருள் வடிவில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லாமை
புதுமையான குலுக்கல் முறை இல்லாமை
ஒரேயொரு பங்கைக் கூட வர்த்தகம் செய்யக்கூடிய வாய்ப்பு
முத்திரை வரி இல்லாமை
மாற்று ஒப்பாவணம் தேவையில்லாமை

தேவைப்பட்டால், நீங்கள் என்எஸ்டிஎல் மற்றும் ஸிடிஎஸ்எல் ஆகியவற்றின் வளைத்தளங்களுக்கு https://nsdl.co.in/
மற்றும் http://www.cdslindia.com/ முறையே சென்று பார்க்கலாம்.

Thanks to Thatstamil

கேஒய்சி என்றால் என்ன? அது அவசியமா?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:59 | Best Blogger Tips



What Is Kyc Is It Necessary

சென்னை: உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கமே கேஒய்சி(know your customer) என்று அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளரைப் பற்றித் தெரிந்து கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கும் வரையறைகளே இந்த கேஒய்சி என்பதாகும்.


ஒரு கணக்கின் உண்மையான உரிமையாளர் யார்? அந்தக் கணக்கின் நாமினி யார்? இந்த கணக்கிற்கு எங்கிருந்து பணம் வருகிறது? கணக்கு உரிமையாளரின் உண்மையான தொழில் என்ன? அவர் செய்யும் வங்கி நடவடிக்கைகளுக்கான உண்மையான காரணங்கள் என்ன போன்றவற்றை அறிய இந்த கேஒய்சி வழிகாட்டுகிறது. மேலும் வாடிக்கையாளர் மூலம் பிற்காலத்தில் வங்கிக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் அதை வங்கி திறமையாக கையாள இந்த கேஒய்சி உதவுகிறது.

இந்த கேஒய்சியின் முக்கிய நோக்கம் மணி லாண்டரியை ஒழிப்பதாகும். அதாவது சட்டத்திற்கு புறம்பான பணத்தை ஒழிப்பதாகும்.
வாடிக்கையாளரின் இரண்டு தகவல்களை இந்த கேஒய்சி வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. ஒன்று வாடிக்கையாளரின் அடையாளம், மற்றொன்று வாடிக்கையாளரின் முகவரி. பொதுவாக வாடிக்கையாளரின் அடையாளத்தில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் வாடிக்கையாளரின் முகவரி மாற வாய்ப்பிருக்கிறது. எனவே வங்கிகள் அவ்வப்போது வாடிக்கையாளரின் முகவரியை சரி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் வாடிக்கையாளரின் பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை சரி பார்க்க வேண்டும்.

வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை பரிசோதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறதா?

ஆம் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் 1949ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7ல் சொல்லப்பட்டிருக்கும் மணி லாண்டரிங்கை தடை செய்தல் என்ற சட்டம் ஒரு வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரியை பரிசோதிக்க வழி செய்கிறது.

வங்கிகளில் செய்யப்படும் வைப்புத் தொகைகளுக்கும் கேஒய்சி பொருந்துமா?

வைப்புத் தொகைகளுக்கான வரையைறகளை மிகத் தெளிவாக ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. எனினினும் வைப்புத் தொகையில் முதலீடு செய்யும் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரி ஆகியவற்றை பரிசோதிப்பது என்பது சம்பந்தப்பட்ட வங்கியைப் பொருத்ததாகும். அவ்வாறு செய்வதம் மூலம் மணி லாண்டரிங்கைத் தடுக்க முடியும்.

  Thanks to Thatstamil