பாட்டி வைத்தியம் 3 !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:29 | Best Blogger Tips

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....
பித்தவெடிப்பு மறைய
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!
சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....
பித்தவெடிப்பு மறைய
காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும். 

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும். 

கட்டிகள் உடைய 

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும். 

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும். 

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது. 

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

சளித்தொல்லை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:14 | Best Blogger Tips


சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை.

பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம்.

சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.

நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கி, பெருகி, வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி.

'ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.
சளித்தொல்லை

சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. 

பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம்.

சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.

நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கி, பெருகி, வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி.

'ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:13 | Best Blogger Tips
பெரியவர்கள் நம்மை ஆசிர்வதிக்கும் பொழுது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவது ஏன்..?!

பதினாறு என்று அவர்கள் குறிப்பிடுவது ,

௧) கல்வி (Education)
௨) அறிவு (Intelligence/ Knowledge)
௩) ஆயுள் (Long-life)
௪) ஆற்றல் (Talent)
௫) இளமை (Youth)
௬) துணிவு (Courage)
௭) பெருமை (Greatness)
௮) பொன் (Wealth)
௯) புகழ் (Praise/ Glory/ Fame)
௰) நெல் (Food)
௰௧) நன்மைகள் (Benefits)
௰௨) நல்லொழுக்கம் (Discipline/Good behavior)
௰௩) நோயின்மை (Health)
௰௪) முயற்சி (Endeavour)
௰௫) வெற்றி (Victory/ Triumph/ Success)
௰௬) அழகு (Beauty)

என்னும் பதினாறு செல்வங்களையே !
பெரியவர்கள் நம்மை ஆசிர்வதிக்கும் பொழுது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துவது ஏன்..?!

பதினாறு என்று அவர்கள் குறிப்பிடுவது ,

௧) கல்வி (Education)
௨) அறிவு (Intelligence/ Knowledge)
௩) ஆயுள் (Long-life)
௪) ஆற்றல் (Talent)
௫) இளமை (Youth)
௬) துணிவு (Courage) 
௭) பெருமை (Greatness)
௮) பொன் (Wealth)
௯) புகழ் (Praise/ Glory/ Fame)
௰) நெல் (Food)
௰௧) நன்மைகள் (Benefits)
௰௨) நல்லொழுக்கம் (Discipline/Good behavior)
௰௩) நோயின்மை (Health)
௰௪) முயற்சி (Endeavour)
௰௫) வெற்றி (Victory/ Triumph/ Success) 
௰௬) அழகு (Beauty) 

என்னும் பதினாறு செல்வங்களையே !

பான் கார்டு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:59 | Best Blogger Tips


What Is Pan What You Need Know About It
சென்னை: இந்தியாவில் தற்போது ஏராளமானோர் பான் (பெர்மனன்ட் அகௌண்ட் நம்பர்) கார்டு வைத்துள்ளனர். ஆனால் எத்தனை பேருக்கு இந்த பான் கார்டின் முக்கியத்துவமும் அதன் பயன்பாடும் தெரிந்திருக்கிறது என்பது கேள்விக்குறியே. எனவே பான் கார்டின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வது நல்லது.


பான் என்றால் என்ன?

பான் என்றால் இந்திய வருமான வரித் துறை வழங்கும் 10 இலக்க எண்களாகும். இந்த 10 இலக்க எண்களில் ஆங்கில எழுத்துக்களும் மற்றும் எண்களும் கலந்து இருக்கும். இந்த பான் எண்கள், ஒரு கார்டில் பதிவு செய்யப்பட்டு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பான் கார்டு என்கிறோம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு இந்த பான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

பான் கார்டின் முக்கியத்துவம்

ஒருவரின் வங்கி நடவடிக்கைகளை, அதாவது அவருடைய வரி கட்டுதல், டிடிஎஸ் அல்லது டிசிஎஸ் கிரெடிட்டுகள், அவருடைய வரி சேமிப்பு, சொத்து, அன்பளிப்பு மற்றும் எப்பிடி போன்றவற்றை அவர் வைத்திருக்கும் பான் கார்டு வருமான வரித் துறைக்குத் தெரிவித்துவிடும். எனவே இந்த பான் கார்டின் உதவியுடன் வருமானத் துறை ஒரு இந்திய குடிமகனின் வங்கி வரவு செலவு நடவடிக்கைகளை மிக எளிதாகத் தெரிந்து கொள்ளும்.

பான் எண்களை எளிதாக தெரிந்து கொள்ள

எடுத்துக்காட்டாக ஒருவருடைய பான் எண்கள் ஏஎஃப்இசட்பிகே7190கே (AFZPK7190K) என்று வைத்துக் கொள்வோம்.
இதில் இருக்கும் முதல் மூன்று எண்கள் ஆங்கில எழுத்துக்களான ஏ முதல் இசட் வரையிலான எழுத்துக்களிலிருந்து கொடுக்கப்படும் 3 எழுத்துக்களாகும்.
நான்காவது எழுத்து எப்போதுமே பான் கார்டை வைத்திருப்பவரின் நிலையைக் குறிக்கும். பி என்று கொடுக்கப்பட்டுள்ளதால் அது ஒரு தனி நபரைக் குறிக்கிறது. ஒரு வேளை எஃப் என்று கொடுக்கப்பட்டிருந்தால் அது ஒரு ஃபர்மை குறைக்கும். அல்லது சி என்று குறிப்பிட்டிருந்தால் அது ஒரு கம்பெனியைக் குறிக்கும். ஹெச் என்று குறிக்கப்பட்டிருந்தால் அது இந்து கூட்டு குடும்பத்தை குறிக்கும். ஏ என்று இருந்தால் அது ஒரு ஏஓபியைக் குறிக்கும். டி என்று இருந்தால் அது ஒரு ட்ரஸ்டைக் குறிக்கும்.
ஐந்தாவது எண்ணான கே, பான் அட்டையை வைத்திருப்பவரின் இறுதிப் பெயர் அல்லது அவருடைய பட்டப் பெயரின் முதல் எழுத்தைக் குறிக்கும்.
அடுத்த நான்கு எண்கள் 0001 முதல் 9999 வரையிலான எண்களுக்குள் இருக்கும் வரிசை எண்களாகும்.
இறுதி எண்ணான கே, ஆங்கில எழுத்தில் இருக்கிறது. இது ஒரு சோதனை இலக்க எண்ணாகும்.

பான் கார்டு முக்கியமா?

ஆம். பான் கார்டு மிகவும் முக்கியம். ஏனெனில் நம்முடைய எல்லா பொருளாதார வங்கி நடவடிக்கைகளிலும் இந்த பான் எண்களைக் குறிப்பிட வேண்டும் என்பது அவசியம் என்று வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது.

பான் கார்டை பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?

பான் கார்டைப் பெற படிவம் 49ஐ நிரப்பி, விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிவம் 49ஐ, வருமான வரித் துறை அல்லது யுடிஐஐஎஸ்எல் அல்லது என்எஸ்டிஎல் ஆகியவற்றின் இணைய தளங்களான www.incometaxindia.gov.in, www.utiisl.co.in or tin-nsdl.com ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த படிவம் 49ஐ, ஐடி பான் சேவை மையங்கள் மற்றும் டிஐஎன் பெசிலிடேஷன் மையங்கள் போன்றவற்றிலும் கிடைக்கும்.
மேலே சொல்லப்பட்ட இணையதளங்களுக்கு சென்று பான் நிலவரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே பான் கார்டு வைத்திருந்தால் www.https://incometaxindiaefiling.gov.in/portal/knowpan.do என்ற இணையதளத்திற்கு சென்ற உங்களது பான் கார்டின் நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

பான் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றுகளில் ஏதாவது ஒன்றின் நகலை சமர்பிக்க வேண்டும்.

1. பள்ளி மாற்றுச் சான்றிதழ்
2. மெட்ரிகுலேஷன் சான்றிதழ்
3. கல்லூரி சான்றிதழ்
4. வங்கிக் கணக்கு அறிக்கை
5. கிரெடிட் கார்ட் அறிக்கை
6. வங்கி பாஸ்புக் அறிக்கை
7. தண்ணீர் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
8. ரேஷன் அட்டை
9. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
10. பாஸ்போர்ட்
11. வாக்காளர் அடையாள அட்டை
12. ஓட்டுனர் உரிம அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.

வாழ்விடத்திற்கான சான்றுகள்

1. மின் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
2. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீது
3. வங்கிக் கணக்கு அறிக்கை
4. கிரெடிட் கார்டு அறிக்கை
5. வங்கி பாஸ்புக் அறிக்கை
6. வீட்டு வாடகை செலுத்தியதற்கான ரசீது
7. வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் சான்று
8. பாஸ்போர்ட்
9. வாக்காளர் அடையாள அட்டை
10. சொத்து வரி அசஸ்மென்ட் ஆணை
11. ஓட்டுநர் உரிம அட்டை
12. ரேஷன் அட்டை
13. நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டசபை உறுப்பினர் அல்லது முனிசிபாலிட்டி கவுன்சிலர் அல்லது கெசடட் ஆபீசர் ஆகிய இவர்கள் யாரிடமாவது இருந்து கையொப்பம் பெற்ற சான்று.
விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் மேற்கூறிய சான்றுகளோடு அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்.
Thanks to Thatstamil.com

காலை உணவு அவசியம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:01 | Best Blogger Tips


காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு "பெட்ரோலாக" தேவைப்படும் உணவு அது.

காலை உணவு முறையை "பிரேக் பாஸ்ட்" என்று கூறுவர். "பாஸ்ட்"டை (உண்ணாதிருத்தலை) "பிரேக்" (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.

என்ன சாப்பிடணும்?

காலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில், ழுமு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்பிடுகின்றனர்.

ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும். குறிப்பாக, வீட்டு, ஆபீஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம்.

உணவு என்றால்.....

உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான். அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.

இரும்புச் சத்து

பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உணவு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதியாக திடத்தன்மை ஏற்படுகிறது. காலை உணவில், மக்காச்சோள உணவை சேர்த்துக்கொள்ளலாம். "கார்ன்பிளேக்ஸ்" போன்ற பாக்கெட் உணவுகளை பின்பற்றினால், இரும்புச் சத்து கிடைக்கும். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச்சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கைகொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.

ஸ்லிம்மாக முடியும்

காலை உணவு சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீராக இருக்கும். அதனால், "ஸ்லிம்"மை தொடர்ந்து பாதுகாத்து வரலாம். ஆனால், பலரும் காலை உணவை தவிர்த்தால் "ஸ்லிம்"மாக முடியும் என்று நினைக்கின்றனர். இது தவறு. காலை உணவை தவிர்த்தால், மதிய வேளையில் அதிகமாக சாப்பிட தூண்டப்படுகிறது. அதனால் எந்த உணவாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏறியும் விடுகிறது. காலை உணவில், புரோட்டீனும், நார்ச்சத்தும் அதிகம் தேவை. அப்படிப்பட்ட தானிய வகை உணவை சேர்த்துக் கொள்ளலாம். இதில் எரிசக்தியை வெளிப்படுத்தும் வைட்டமின் "பி" ஆன்டி ஆக்சிடென்டாக உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன.

நீண்ட வாழ்நாள்

காலை உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் வாழலாம். அதற்கேற்ப, உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன. பாக்கெட், உணவு வகைகள், இப்போது கொழுப்பு நீக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம், சாப்பாடாகவும் காலை உணவை சாப்பிடலாம்.

எது நல்ல உணவு?

காலை உணவில் பலவகை உண்டு. தானிய வகை சத்துக்களாக சமைத்து சிற்றுண்டியாக சாப்பிட்டாலும், முழு உணவாக சாப்பிட்டாலும் நல்லது தான். ஆனால், முதல் நாள் சமைத்ததை மறுநாள் பயன்படுத்துவது கூடாது. அதனால், உடலுக்கு சத்துக்கள் கிடைக்காது. முழு அளவில் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.

ருசிக்கு ருசி

காலை உணவில் எல்லா சத்துக்களும் இருக்க வேண்டுமானால், தானிய வகை உணவு, பானங்கள், யோகர்ட், பால் உணவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுடன் பழங்களையும் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு இன்னும் நல்லது. காலை உணவை சாப்பிட்டவுடன், ஓய்வு எடுப்பது தவறான பழக்கம். வேலைக்கு போகாத பெண்கள் என்றால், காலாற நடக்கலாம்; ஏதாவது வேலையில் இறங்கலாம். வேலைக்கு போவோராக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், உட்கார்ந்தபடி பல மணி நேரம் ஒரே வேலையை செய்யக் கூடாது. உடலை இயக்கும் வண்ணம் அரை மணிக்கு ஒரு முறை நடக்க வேண்டும்; குறைந்தபட்சம் நாற்காலியை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

மாற்றக்கூடாது

சிலர் காலை சிற்றுண்டி சாப்பிடுவர்; சிலர் முழு உணவு சாப்பிடுவர். ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். ஆனால், இந்த பழக்கத்தை திடீரென மாற்றக்கூடாது. மாற்றினால், உடலுக்கு பாதிப்பு தான் அதிகம்.

உடலுக்கு அவசியமான அயோடின்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:00 | Best Blogger Tips


மனிதனின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது அயோடின். ஒருவரது உடலில் இது சராசரி அளவைவிட குறைவாக இருந்தால், அவர்கள் எப்போதுமே சோகமயமான தோற்றத்தில் காணப்படுவார்கள். எந்த வேலையை செய்தாலும் உடனே சோர்ந்துபோய் விடுவார்கள். சுறுசுறுப்பு என்பதும் இவர்களிடம் மிகக் குறைவாகவே இருக்கும்.

கர்ப்பிணி பெண்ணின் உடலிலும் அயோடின் சரியான அளவில் இல்லாவிட்டால், அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கும் அயோடின் குறைபாடு பிரச்சினை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, பிறக்கும் அந்த குழந்தையானது மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டதாக பிறப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் டாக்டர்கள்.

இதே அயோடின் குறைபாடோடு அந்த குழந்தை வளர்ந்தால், அக்குழந்தைக்கு மேலும் பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த அயோடின் பற்றிய சில சந்தேகங்களையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்:

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு அயோடின் தேவை?

வளர்ந்த ஒரு மனிதனுக்கு 150 மைக்ரோ கிராம் அளவு அயோடினே ஒரு நாளைக்குத் தேவை (10,00,000 மைக்ரோ கிராம் 1 கிராம்). அயோடின் உப்பை தினசரி உணவில் பயன்படுத்தி வந்தாலே தேவையான அயோடின் நமக்கு கிடைத்துவிடும்.

அயோடினை ஏன் உப்புடன் மட்டும் கலக்க வேண்டும்? அதைத் தவிர்த்து, தனியொரு மருந்தாக அதை எடுத்துக்கொள்ளக்கூடாதா?

அயோடின் சத்து எல்லோருக்கும் தேவையான ஒன்றாக இருந்தாலும், மிக மிகக் குறைந்த அளவிலேயே தேவையாக இருக்கிறது. இதை உப்புடன் சேர்க்கும்போது, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அது ஏறக்குறைய எல்லா மனிதர்களையும் சம அளவில் சென்றடைகிறது. அதனால்தான், அதை உப்புடன் எடுத்துக் கொள்கிறோம்.

அயோடின் ஒருவரது உடலில் குறைந்து காணப்பட்டால் என்ன பிரச்சினை ஏற்படும்?

முக்கியமாக கழுத்துக் கழலை என்கிற நோய் ஏற்படும். கழுத்துப் பகுதி வீங்கியிருப்பது போன்ற பிரச்சினையும் அயோடின் குறைபாட்டினால் வரும் நோய்தான்.

அடுத்ததாக தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டால், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பது கூட தள்ளி போகிறது. அது மட்டுமல்லாமல், அபார்ஷன் மற்றும் இறந்தே பிறக்கும் குழந்தைகள் எனப் பல சோதனைகளும் இதனால் பெண்களுக்கு வருகின்றன.

ஒரு கர்ப்பிணியின் உடலில் அயோடின் சத்து சரியான அளவில் இருந்தால்தான், அந்த சத்தானது அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையையும் சென்றடைந்து, அக்குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்க வழிவகை ஏற்படுகிறது.

ஒருவேளை, அயோடின் குறைபாட்டுடன் குழந்தை பிறந்துவிட்டால்...?

இந்தக் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் அயோடைஸ்டு உப்பு சேர்த்து உணவு உட்கொள்வதால், அந்த குறைபாடு சரியாக வாய்ப்புள்ளதா என்று கேட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் சில சிறிய குறைபாடுகள் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அயோடைஸ்டு உப்பு சேர்த்துக் கொள்வதே வரும்முன் காப்பதற்கு சுலபமான வழி.

எனவே, சாதாரண உப்பை வாங்கி பிரச்சினைகளை வரவழைத்துக்கொள்ளாமல், அயோடின் கொண்ட உப்பை வாங்கி பயன்படுத்துங்கள். அயோடின் பற்றாக்குறையை போக்கிடுங்கள்.
உடலுக்கு அவசியமான அயோடின்!

மனிதனின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது அயோடின். ஒருவரது உடலில் இது சராசரி அளவைவிட குறைவாக இருந்தால், அவர்கள் எப்போதுமே சோகமயமான தோற்றத்தில் காணப்படுவார்கள். எந்த வேலையை செய்தாலும் உடனே சோர்ந்துபோய் விடுவார்கள். சுறுசுறுப்பு என்பதும் இவர்களிடம் மிகக் குறைவாகவே இருக்கும்.

கர்ப்பிணி பெண்ணின் உடலிலும் அயோடின் சரியான அளவில் இல்லாவிட்டால், அந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கும் அயோடின் குறைபாடு பிரச்சினை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, பிறக்கும் அந்த குழந்தையானது மூளை வளர்ச்சி குறைபாடு கொண்டதாக பிறப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் டாக்டர்கள்.

இதே அயோடின் குறைபாடோடு அந்த குழந்தை வளர்ந்தால், அக்குழந்தைக்கு மேலும் பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த அயோடின் பற்றிய சில சந்தேகங்களையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்:

ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு அயோடின் தேவை?

வளர்ந்த ஒரு மனிதனுக்கு 150 மைக்ரோ கிராம் அளவு அயோடினே ஒரு நாளைக்குத் தேவை (10,00,000 மைக்ரோ கிராம் 1 கிராம்). அயோடின் உப்பை தினசரி உணவில் பயன்படுத்தி வந்தாலே தேவையான அயோடின் நமக்கு கிடைத்துவிடும்.

அயோடினை ஏன் உப்புடன் மட்டும் கலக்க வேண்டும்? அதைத் தவிர்த்து, தனியொரு மருந்தாக அதை எடுத்துக்கொள்ளக்கூடாதா?

அயோடின் சத்து எல்லோருக்கும் தேவையான ஒன்றாக இருந்தாலும், மிக மிகக் குறைந்த அளவிலேயே தேவையாக இருக்கிறது. இதை உப்புடன் சேர்க்கும்போது, ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அது ஏறக்குறைய எல்லா மனிதர்களையும் சம அளவில் சென்றடைகிறது. அதனால்தான், அதை உப்புடன் எடுத்துக் கொள்கிறோம்.

அயோடின் ஒருவரது உடலில் குறைந்து காணப்பட்டால் என்ன பிரச்சினை ஏற்படும்?

முக்கியமாக கழுத்துக் கழலை என்கிற நோய் ஏற்படும். கழுத்துப் பகுதி வீங்கியிருப்பது போன்ற பிரச்சினையும் அயோடின் குறைபாட்டினால் வரும் நோய்தான்.

அடுத்ததாக தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டால், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பது கூட தள்ளி போகிறது. அது மட்டுமல்லாமல், அபார்ஷன் மற்றும் இறந்தே பிறக்கும் குழந்தைகள் எனப் பல சோதனைகளும் இதனால் பெண்களுக்கு வருகின்றன.

ஒரு கர்ப்பிணியின் உடலில் அயோடின் சத்து சரியான அளவில் இருந்தால்தான், அந்த சத்தானது அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தையையும் சென்றடைந்து, அக்குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்க வழிவகை ஏற்படுகிறது.

ஒருவேளை, அயோடின் குறைபாட்டுடன் குழந்தை பிறந்துவிட்டால்...?

இந்தக் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகள் அயோடைஸ்டு உப்பு சேர்த்து உணவு உட்கொள்வதால், அந்த குறைபாடு சரியாக வாய்ப்புள்ளதா என்று கேட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் சில சிறிய குறைபாடுகள் சரியாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அயோடைஸ்டு உப்பு சேர்த்துக் கொள்வதே வரும்முன் காப்பதற்கு சுலபமான வழி.

எனவே, சாதாரண உப்பை வாங்கி பிரச்சினைகளை வரவழைத்துக்கொள்ளாமல், அயோடின் கொண்ட உப்பை வாங்கி பயன்படுத்துங்கள். அயோடின் பற்றாக்குறையை போக்கிடுங்கள்.

இரும்புச் சத்துள்ள உணவுகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:59 | Best Blogger Tips


இந்திய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கிறது. இதற்கு அனிமீயா என்று பெயர். இந்த நோய்க்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இரும்புச்சத்து போதுமான அளவுக்கு இல்லாவிட்டால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களின் அளவு குறைகிறது. ஹீமோகுளோபின் என்பது உடல் முழுவதும் உள்ள உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் முக்கியமான வேதிப் பொருள். பெரும்பாலும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளும் போதும், ரத்த தானம் செய்யும் போதுதான் அனிமீயா இருப்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். மற்றபடி இதனை லேசில் கண்டு பிடித்து விட முடியாது.

ஆனாலும் ஆக்சிஜன் போதுமான அளவுக்கு கிடைக்காத பட்சத்தில் உறுப்புகள் சோர்ந்து விடும். ஆம், சோர்வு தான் அனிமீயாவுக்கு முக்கியமான அறிகுறி. அதுபோல நீளமான மூச்சு விட முடியாது. வெளுத்து போய் காணப்படுவர். படபடப்பு இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் மூலம் அனிமீயாவை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

இந்நோய் பெண்களுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக மாதவிலக்கை குறிப்பிடலாம். ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் அவர்களுக்கு ரத்த இழப்பு ஏற்படுகிறது. அதிலும் அதிகமான உதிரப்போக்கு உள்ள பெண்களுக்கு நிலைமை இன்னும் சிக்கலை உண்டாக்கும். அனிமீயாவை சமாளிப்பதற்கு பெண்கள் இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. குறிப்பாக சைவச் சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இரும்புச் சத்து கிடைப்பதற்காக வாய்ப்பு கொஞ்சமாகவே இருக்கிறது.

இரும்புச் சத்து அதிகமாக காணப்படும் பொருட்கள்

* ஆடு, கோழி உள்ளிட்ட மாமிச வகைகள், ஈரல் (ஆனால் கர்ப்பிணி பெண்கள் ஈரலை சாப்பிட வேண்டாம். ஏனெனில் ஈரலில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. அது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கக்கூடும்.)

* காலை உணவில் போதுமான அளவுக்கு தானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

* புத்தம் புதிய பச்சை காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

* டீயில் டானின் என்ற பொருள் இருக்கிறது. இந்த டானின் குடலின் இரும்புச் சத்து ஈர்ப்பு தன்மையில் குறுக்கிடுகிறது. ஆகையால் சாப்பாட்டுடன் சேர்த்து டீ குடிப்பதை தவிர்த்து விடுங்கள். ஆனால் வைட்டமின் சி நேரெதிராக செயல்படுவதால் உணவு சேர்த்து ஒரு கப் ஆரெஞ்சு ஜூஸ் அருந்தலாம்.

* உணவு மூலம் போதிய அளவுக்கு இரும்புச் சத்தை பெற முடியாதவர்கள் மருந்து மாத்திரைகள் மூலம் இரும்பு சத்தை பெற முடியும். இரும்புச் சத்து தரும் மருந்து- மாத்திரைகள் நிறையவே இருக்கின்றன. உரிய மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
இரும்புச் சத்துள்ள உணவுகள்!

இந்திய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கிறது. இதற்கு அனிமீயா என்று பெயர். இந்த நோய்க்கு பல்வேறு சமூக, பொருளாதார காரணங்கள் இருக்கின்றன. இரும்புச்சத்து போதுமான அளவுக்கு இல்லாவிட்டால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்களின் அளவு குறைகிறது. ஹீமோகுளோபின் என்பது உடல் முழுவதும் உள்ள உறுப்புகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் முக்கியமான வேதிப் பொருள். பெரும்பாலும் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளும் போதும், ரத்த தானம் செய்யும் போதுதான் அனிமீயா இருப்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். மற்றபடி இதனை லேசில் கண்டு பிடித்து விட முடியாது.

ஆனாலும் ஆக்சிஜன் போதுமான அளவுக்கு கிடைக்காத பட்சத்தில் உறுப்புகள் சோர்ந்து விடும். ஆம், சோர்வு தான் அனிமீயாவுக்கு முக்கியமான அறிகுறி. அதுபோல நீளமான மூச்சு விட முடியாது. வெளுத்து போய் காணப்படுவர். படபடப்பு இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் மூலம் அனிமீயாவை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

இந்நோய் பெண்களுக்கு வருவதற்கு முக்கிய காரணமாக மாதவிலக்கை குறிப்பிடலாம். ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் அவர்களுக்கு ரத்த இழப்பு ஏற்படுகிறது. அதிலும் அதிகமான உதிரப்போக்கு உள்ள பெண்களுக்கு நிலைமை இன்னும் சிக்கலை உண்டாக்கும். அனிமீயாவை சமாளிப்பதற்கு பெண்கள் இரும்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. குறிப்பாக சைவச் சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இரும்புச் சத்து கிடைப்பதற்காக வாய்ப்பு கொஞ்சமாகவே இருக்கிறது.

இரும்புச் சத்து அதிகமாக காணப்படும் பொருட்கள்

* ஆடு, கோழி உள்ளிட்ட மாமிச வகைகள், ஈரல் (ஆனால் கர்ப்பிணி பெண்கள் ஈரலை சாப்பிட வேண்டாம். ஏனெனில் ஈரலில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. அது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கக்கூடும்.)

* காலை உணவில் போதுமான அளவுக்கு தானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

* புத்தம் புதிய பச்சை காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

* டீயில் டானின் என்ற பொருள் இருக்கிறது. இந்த டானின் குடலின் இரும்புச் சத்து ஈர்ப்பு தன்மையில் குறுக்கிடுகிறது. ஆகையால் சாப்பாட்டுடன் சேர்த்து டீ குடிப்பதை தவிர்த்து விடுங்கள். ஆனால் வைட்டமின் சி நேரெதிராக செயல்படுவதால் உணவு சேர்த்து ஒரு கப் ஆரெஞ்சு ஜூஸ் அருந்தலாம்.

* உணவு மூலம் போதிய அளவுக்கு இரும்புச் சத்தை பெற முடியாதவர்கள் மருந்து மாத்திரைகள் மூலம் இரும்பு சத்தை பெற முடியும். இரும்புச் சத்து தரும் மருந்து- மாத்திரைகள் நிறையவே இருக்கின்றன. உரிய மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

தீ பற்றிய தகவல்கள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:27 | Best Blogger Tips

தீ பற்றி கொண்டால் என்ன செய்ய வேண்டும்?


நெருப்பு / தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் . வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்ப்படுகிறது . அப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம்.

நெருப்பு என்றால் என்ன .?

வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும் தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது . நெருப்பு என்பது
நான்கு காரணிகள் உள்ளடக்கியது .

வெப்பம்
ஆக்சிஜென்
எரிபொருள்
தொடர்வினை

மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெருப்பை உண்டாக்குகின்றன . அதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .


இந்த நெருப்பு 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன
Class A நெருப்பு
Class B நெருப்பு
Class C நெருப்பு
Class D நெருப்பு

Class A தீ / நெருப்பு :

சாதாரணமாக பேப்பர் , மரம் , துணி போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது . இந்த நெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும் . தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறது . எனவே நெருப்பு அணைக்கப்படுகிறது . இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class A தீ அனைப்பான்களை ( Class A Fire Extinguishers ) பயன்படுத்தலாம் .


Class B தீ / நெருப்பு :

எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது . இந்த மாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் முதல வகுப்பு தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினது போல அநேகர் செய்கின்றனர் . ஆனால் அது தவறான நடவடிக்கை


இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும் , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும் , நெருப்பு அதிகமாகும் . எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப்படும்

Class C தீ / நெருப்பு :

மின்சார தீ இந்த வகையில் வருகிறது . இப்படி தீ ஏற்ப்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் . அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா எனபதை அறிந்து அதற்கேற்ற தீ அனைப்பானை பயன்படுத்த வேண்டும் .

Class D தீ / நெருப்பு :

தொழிற்சாலைகளில் உள்ள சோடியம் , பொட்டாசியம் , டைட்டானியம் போன்ற உலோகங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது . சோடியம் க்ளோரைட் எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம் .

பொதுவாக தீ பிடித்தால் நீங்கள் கீழ்க்கண்ட காரியங்களை கடைபிடியுங்கள்

பதட்டப்படாதீர்கள் பதறிய காரியம் சிதறும்
தீ தீ என்று சத்தமிட்டு அனைவரையும் உஷார் செய்யுங்கள்.

தீ அணைக்க கூடிய அளவில் இருந்தால் அணைக்க முயற்சி செய்யுங்கள்.

பெரும் தீ என்றால் தீ அணைப்பு நிலையத்திற்கு அழைப்பு கொடுத்து விட்டு அவர்கள் அந்த இடத்தை அடைவதற்கு தேவையான் வசதிகளை செய்து கொடுக்கலாம்.

உயிருக்கு கேடு என்றால் தயவு செய்து இடத்தை காலி செய்யுங்கள் . உங்கள் உயிருக்கு முன் உடமைகள் ஒன்றும் அல்ல

பொன்மொழிகள்:-

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:23 | Best Blogger Tips


1. நல்ல ஆலோசனையைக் கேட்பது நம் திறமையை அதிகப்படுத்தும்! - ஆல்ஜெர்

2. ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் மதிக்கப்படும்! - யாரோ

3. அடுத்தவர் வீட்டை நீ உலுக்கினால், உன் வீடே உன் தலைமேல் விழும்! - சாணக்கியர்

4. தனியாகப் பயணம் செய்பவனே மிக விரைவாகப் பயணம் செய்வான்! - கிப்ளிங்

5. பணிவைப் போதிக்கும் நீண்ட பாடமே வாழ்க்கை! - ஜேம்ஸ் எம்.பேர்ரி

6. இதமான பதில் சினத்தை ஓட்டும்; கடுமையான பதில் சினத்தை மூட்டும்! - சாலமன் மன்னன் (பைபிள்)

7. துக்கமும் தூக்கமும் எப்போது குறைகிறதோ அப்போது நீ மேதை! - காந்தியடிகள்

8. அவசரம் ஒரு காரியத்தை முடிக்க உதவாது. ஆனால், பொறுமையும் உறுதியும் வெற்றிக்கு வழி! - நிக்கார் வொன்வேர்

9. அன்பில்லாமல் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது! - ஸ்டைடன்

10. காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது! - பழமொழி


via - கார்த்திகேயன் மதன்
பொன்மொழிகள்:-

1. நல்ல ஆலோசனையைக் கேட்பது நம் திறமையை அதிகப்படுத்தும்! - ஆல்ஜெர்

2. ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் மதிக்கப்படும்! - யாரோ

3. அடுத்தவர் வீட்டை நீ உலுக்கினால், உன் வீடே உன் தலைமேல் விழும்! - சாணக்கியர்

4. தனியாகப் பயணம் செய்பவனே மிக விரைவாகப் பயணம் செய்வான்! - கிப்ளிங்

5. பணிவைப் போதிக்கும் நீண்ட பாடமே வாழ்க்கை! - ஜேம்ஸ் எம்.பேர்ரி

6. இதமான பதில் சினத்தை ஓட்டும்; கடுமையான பதில் சினத்தை மூட்டும்! - சாலமன் மன்னன் (பைபிள்)

7. துக்கமும் தூக்கமும் எப்போது குறைகிறதோ அப்போது நீ மேதை! - காந்தியடிகள்

8. அவசரம் ஒரு காரியத்தை முடிக்க உதவாது. ஆனால், பொறுமையும் உறுதியும் வெற்றிக்கு வழி! - நிக்கார் வொன்வேர்

9. அன்பில்லாமல் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது! - ஸ்டைடன்

10. காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது! - பழமொழி


via - கார்த்திகேயன் மதன்

உடல், மன -அழகு, ஆரோக்கியம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:22 | Best Blogger Tips


1.அதிகாலையில் எழுந்ததும் இரண்டு இலைகள் துளசி, ஒரு பல் பூண்டு, கொஞ்சம் பனங்கற்கண்டு, மூன்று வறண்ட திராட்சை, ஒரு டம்ளர் மிதமான சூட்டில் வெந்நீர் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

2. கிரீன் டீ .. நான் அருந்தும் விதம் - இலையை கொதிக்க வைக்கும் போது, பெரிய நெல்லிக்காய் பேஸ்ட் ஒரு ஸ்பூன் கலந்து கொதித்து ஆறியதும் தேன் கலந்து அருந்துவது பொலிவு பிளஸ் நலம்... இதில் வடிகட்டிய சக்கையை முகத்துக்கு ஸ்க்ரப் போட்டுக்கொள்ளலாம் வாரத்தில் இருமுறை.

3.வெயில் காலத்தில் வெந்தய பொடி கொஞ்சம் உள்ளுக்கு எடுத்து வெந்நீர் குடிக்கலாம். கூடவே தலைக்கு வெந்தய பொடி பேக் போட்டு வாரம் ஒரு முறை அலசுவதும் குளிர்ச்சியை கொடுக்கும்.

4.. சீரான மூச்சு பயிற்சி பத்து நிமிடம்

5.கவனத்தை நெற்றி பொட்டில் அல்லது முதுகு தண்டுவடத்தில் நிலைநிறுத்தி 10 நிமிடங்கள் மெடிட்டேசன் செய்வது நலம்.
6.காலாற காற்று வெளியில் 10 நிமிடம் நடந்து விட்டு வருவதும் உசிதம்.

7.அவசியம் அற்ற கண்டதை யோசித்து எந்நேரமும் குழம்பிகொண்டு இருக்காமல் இருத்தல்.

8.மனதிற்கு வருத்தம் தர கூடிய எதுவாக இருந்தாலும் சரி ... ஒரு காகிதத்தில் நிறைக்க எழுதி, ஒரு முறை வாசித்து விட்டு கிழித்து கூடையில் போட்டு, அடுத்த வேலையை பார்க்க போவது ஒரு நல்ல பயிற்சி.

9..கடல் அலைகள் மற்றும் பச்சை தாவரங்களை பார்ப்பது மன அழுத்தம் குறைக்க உதவும்.ஒரு வகையில் கண் வழி யோக பயிற்சி இது.

10.ஒரே மாதிரியான வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம் மாறி வேறு இடத்தில கொஞ்சம் இளைபாறிவிட்டு வருவது நலம்.

-புவனா கணேஷன்
"நலமுடன் வாழ"

உடல், மன -அழகு, ஆரோக்கியம் 

1.அதிகாலையில் எழுந்ததும் இரண்டு இலைகள் துளசி, ஒரு பல் பூண்டு, கொஞ்சம் பனங்கற்கண்டு, மூன்று வறண்ட திராட்சை, ஒரு டம்ளர் மிதமான சூட்டில் வெந்நீர் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

2. கிரீன் டீ .. நான் அருந்தும் விதம் - இலையை கொதிக்க வைக்கும் போது, பெரிய நெல்லிக்காய் பேஸ்ட் ஒரு ஸ்பூன் கலந்து கொதித்து ஆறியதும் தேன் கலந்து அருந்துவது பொலிவு பிளஸ் நலம்... இதில் வடிகட்டிய சக்கையை முகத்துக்கு ஸ்க்ரப் போட்டுக்கொள்ளலாம் வாரத்தில் இருமுறை.

3.வெயில் காலத்தில் வெந்தய பொடி கொஞ்சம் உள்ளுக்கு எடுத்து வெந்நீர் குடிக்கலாம். கூடவே தலைக்கு வெந்தய பொடி பேக் போட்டு வாரம் ஒரு முறை அலசுவதும் குளிர்ச்சியை கொடுக்கும். 

4.. சீரான மூச்சு பயிற்சி பத்து நிமிடம்

5.கவனத்தை நெற்றி பொட்டில் அல்லது முதுகு தண்டுவடத்தில் நிலைநிறுத்தி 10 நிமிடங்கள் மெடிட்டேசன் செய்வது நலம்.
6.காலாற காற்று வெளியில் 10 நிமிடம் நடந்து விட்டு வருவதும் உசிதம். 

7.அவசியம் அற்ற கண்டதை யோசித்து எந்நேரமும் குழம்பிகொண்டு இருக்காமல் இருத்தல். 

8.மனதிற்கு வருத்தம் தர கூடிய எதுவாக இருந்தாலும் சரி ... ஒரு காகிதத்தில் நிறைக்க எழுதி, ஒரு முறை வாசித்து விட்டு கிழித்து கூடையில் போட்டு, அடுத்த வேலையை பார்க்க போவது ஒரு நல்ல பயிற்சி. 

9..கடல் அலைகள் மற்றும் பச்சை தாவரங்களை பார்ப்பது மன அழுத்தம் குறைக்க உதவும்.ஒரு வகையில் கண் வழி யோக பயிற்சி இது. 

10.ஒரே மாதிரியான வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம் மாறி வேறு இடத்தில கொஞ்சம் இளைபாறிவிட்டு வருவது நலம். 

-புவனா கணேஷன்

திமிங்கிலம் பற்றிய சில தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:18 | Best Blogger Tips


1) நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டியாகும். (பொதுவாக 100 அடி நீளம் 150 டன் எடை)
2) திமிங்கிலம் நுரையீரல் வழி உயிர்ப்பிக்கின்றன (மூச்சு விடுகின்றன).
3) நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும்.
4) திமிங்கிலம் ஒரு சாதுவான விலங்காகும், இவை எப்போதும் முரடாக நடந்து கொள்ளாது.
5) திமிங்கிலங்கள் மீன் வகையைச் சேர்ந்தது அல்ல, எனவே இவை உடலில் பிற மீன்களைப் போல செதில்கள் இருக்காது. மாறாக, தோல் கொண்ட உடலும், உடலின் மேற்புறத்தில் மயிரையும் கொண்டிருக்கும்.
6) இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் சூட்டைத் தக்க வைக்க உதவுகிறது.
7) திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே உயிர்ப்பிக்கின்றன.
8) வெளிச்சம் இல்லாத ஆழ்க்கடலில், இரையைப் பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி (echo location) வழி இரையின் இருப்பிடத்தைத் திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கின்றன.
9) பிற மீன்களைப் போல செதிள்கள் இல்லாமல் நுரையீரல் கொண்டு உயிர்ப்பிப்பதால், அவை நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும்.
10) திமிங்கிலத்தின் மூக்கு அவற்றின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும். சில திமிங்கிலம் இரண்டு மூக்குகளையும் கொண்டிருக்கும்.
11) இவை 70 ஆண்டுக்காலம் உயிர் வாழக்கூடியவை.
12) மிகுதியான எடைக் கொண்ட திமிங்கிலங்கள் விரைவாக நீந்தும் திறன் படைத்தவையாகும்.
13) நீலத் திமிங்கிலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், விந்துத் திமிங்கிலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.
14) பெண் திமிங்கிலங்களின் பேறுக்காலம் 12 முதல் 17 திங்கள் வரை ஆகும். குட்டியை ஈன்றெடுக்கும் பொழுது, மற்ற திமிங்கிலங்கள் தாய் திமிங்கிலத்தைச் சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன.
15) குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன.|
16) திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது.
17) 1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக முரட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கில எண்ணெய் தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
18) தற்பொழுது திமிங்கிலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டு வருகிறது, எத்தனையோ அமைப்புகள இருப்பினும் இன்னமும் திமிங்கில வேட்டை ஓயவில்லை. யப்பான், நோர்வே போன்ற நாடுகள் இன்னமும் பல தேவைகளுக்காக இவ்விலங்கைக் கொன்று குவிக்கின்றன.

திமிங்கிலம் பற்றிய சில தகவல்கள்

1) நீலத் திமிங்கிலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டியாகும். (பொதுவாக 100 அடி நீளம் 150 டன் எடை)
2) திமிங்கிலம் நுரையீரல் வழி உயிர்ப்பிக்கின்றன (மூச்சு விடுகின்றன).
3) நீலத் திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும்.
4) திமிங்கிலம் ஒரு சாதுவான விலங்காகும், இவை எப்போதும் முரடாக  நடந்து கொள்ளாது. 
5) திமிங்கிலங்கள் மீன் வகையைச் சேர்ந்தது அல்ல, எனவே இவை உடலில் பிற மீன்களைப் போல செதில்கள் இருக்காது. மாறாக, தோல் கொண்ட உடலும், உடலின் மேற்புறத்தில் மயிரையும் கொண்டிருக்கும்.
6) இவற்றின் தோலின் உட்புறம் ஒரு கொழுப்பு அடுக்கினைக் கொண்டுள்ளன. இது திமிங்கிலங்களுக்கு உடல் சூட்டைத் தக்க வைக்க உதவுகிறது.
7) திமிங்கிலங்களின் தலைப்பகுதியில் குழாய் போன்ற மேல் நோக்கிய துளை ஒன்று உள்ளது. இவை இத்துளைகளின் வழியாகவே உயிர்ப்பிக்கின்றன.
8) வெளிச்சம் இல்லாத ஆழ்க்கடலில், இரையைப் பிடிக்க பயன்படுத்தும் எதிரொலி உத்தி (echo location) வழி இரையின் இருப்பிடத்தைத் திமிங்கிலங்கள் துல்லியமாக அறிந்து கொள்கின்றன. 
9) பிற மீன்களைப் போல செதிள்கள் இல்லாமல் நுரையீரல் கொண்டு உயிர்ப்பிப்பதால், அவை நீரின் மேற்பரப்புக்கு வந்து காற்றை மூக்கு வழியாக உள்ளிழுத்துச் செல்லும். 
10) திமிங்கிலத்தின் மூக்கு அவற்றின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும். சில திமிங்கிலம் இரண்டு மூக்குகளையும் கொண்டிருக்கும்.
11) இவை 70 ஆண்டுக்காலம் உயிர் வாழக்கூடியவை.
12) மிகுதியான எடைக் கொண்ட திமிங்கிலங்கள் விரைவாக நீந்தும் திறன் படைத்தவையாகும்.
13) நீலத் திமிங்கிலங்கள், நீரில் உள்ள விலங்கு மிதவை உயிரினங்களையும், விந்துத் திமிங்கிலங்கள், மீன் மற்றும் கணவாய்களை உண்டும் வாழ்கின்றன.
14) பெண் திமிங்கிலங்களின் பேறுக்காலம் 12 முதல் 17 திங்கள் வரை ஆகும். குட்டியை ஈன்றெடுக்கும் பொழுது, மற்ற திமிங்கிலங்கள் தாய் திமிங்கிலத்தைச் சூழ்ந்து கொண்டு செவிலித் தாயார் போன்று உதவுகின்றன.
15) குட்டித் திமிங்கிலம் பிறந்த உடன் மற்ற செவிலித் திமிங்கிலங்கள் அதை நீரின் மேல் மட்டத்திற்கு தூக்கி, முதல் சுவாசத்தை ஏற்படுத்துகின்றன.|
16) திமிங்கிலக் குட்டி பிறக்கும்போது 25 அடி நீளமுடன் ஒரு யானையின் எடையுடன் இருக்கும். ஒரு நாளைக்கு 200 லிட்டர் பாலைத் தம் தாயிடம் இருந்து குடித்து மணிக்கு 5 கிலோ எடை வீதம் வளருகிறது. 
17)  1700 மற்றும் 1800 களில் திமிங்கிலங்கள் அவற்றின் கொழுப்பு எண்ணெய்க்காக முரட்டுத்தனமாக வேட்டையாடப்பட்டு கொன்று குவிக்கப்பட்டன. அந்தக் காலக்கட்டங்களில் திமிங்கில எண்ணெய் தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
18) தற்பொழுது திமிங்கிலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டு வருகிறது, எத்தனையோ அமைப்புகள இருப்பினும் இன்னமும் திமிங்கில வேட்டை ஓயவில்லை. யப்பான், நோர்வே போன்ற நாடுகள் இன்னமும் பல தேவைகளுக்காக இவ்விலங்கைக் கொன்று குவிக்கின்றன.

மேலும் சில பொது அறிவு தகவல்கள் - https://www.facebook.com/media/set/?set=a.532454403454081.124235.246712722028252&type=3

கச்சத்தீவு தமிழர்களின் சொத்தா ?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:17 | Best Blogger Tips
1974 இல் ஆரம்பித்து 2010 வரை தொடரும் இந்த பிரச்சனையின் மூலம் தான் என்ன? உண்மையில் நமக்கு கச்சதீவில் உரிமை இருக்கிறதா? அதற்கு என்ன சாட்சி? வரலாற்றின் பக்கங்களில் கச்சதீவு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா? இது எல்லாவற்றிற்கும் விளக்கம் தரும் வகையில் இந்த இடுகையை சமர்பிக்கிறேன். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம் தான், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின.

01 ராமேஸ்வரம்

02 குந்துகால்

03 புனவாசல்

04 முயல் தீவு

05 பூமரிசான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குடுசடி தீவு

ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.

1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.

1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.

இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.

1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை. இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.

டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை. 17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை.

1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை தேசப்படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.

1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

1976ம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.

1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம். சிங்களவன் நம் மீனவர்களை சுட்டுக் கொண்டே இருக்கிறான்

சீர்காழி கோவிந்தராஜன்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:16 | Best Blogger Tips


சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம் கலைநாட்டம் மிக்கவர் . சீர்காழி கோவிலொன்றில் இராமயண இசை நாடம் நடத்தி வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்து பாடல்களும் பாடினார்.

கோவிந்தராஜன்,இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்துவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அப்போதே கணித்துச்சொன்னார்கள்.

பி.ஏஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது.. கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் கோவிந்தராஜன். ஆனால் இந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த அவ்வையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும் சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும் பாடி வந்தார்கள். கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (ஏழு நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார். பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88).

திரைப்படத்துக்காக பாடிய பிரபல பாடல்கள் சில
===================================

• பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு

• அமுதும் தேனும் எதற்கு - படம்:தை பிறந்தால் வழி பிறக்கும்,இசை :கே.வி.மகாதேவன்

• மாட்டுக்கார வேலா - படம்:வண்ணக்கிளி,இசை :கே.வி.மகாதேவன்

• வில் எங்கே கணை இங்கே - படம்:மாலையிட்ட மங்கை,இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்,இராமமூர்த்தி

• வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்

• கொங்கு நாட்டுச் செங்கரும்பே - படம்:கோமதியின் காதலன்,இசை :ஜி.இராமநாதன்

• மலையே என் நிலையே - வணங்காமுடி ,இசை :ஜி.இராமநாதன்

• ஜக்கம்மா - வீரபாண்டிய கட்டபொம்மன்,இசை :ஜி.இராமநாதன்

• பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு

பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில
==========================

• பட்டணந்தான் போகலாமடி - படம்:எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு

• மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை

• காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை

• ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு!)

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
===========================================

சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கானஅனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.

• நிலவோடு வான்முகில்,இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)

• எல்லை இல்லாத இன்பத்திலே - (சக்கரவர்த்தி திருமகள்)

• உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)

• வண்டு ஆடாத சோலையில் ,ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)

• சிரிப்பது சிலபேர் ,யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)

• ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்)ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்

• யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)

• ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)
அழுத்தமான தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களை ஈர்த்த பாடல்கள்

• ஒற்றுமையாய் வாழ்வதாலே (பாகப்பிரிவினை 1959)

• எங்கிருந்தோ வந்தான் (படிக்காத மேதை 1960)பாரதியார் பாடல் ,இசை:கே.வி.மகாதேவன்

• ஓடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்)

• கோட்டையிலே ஒரு ஆலமரம் (முரடன் முத்து)

• நல்ல மனைவி நல்ல பிள்ளை (நம்ம வீட்டு லட்சுமி 1966)

• பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா (அக்கா தங்கை 1969)

• கண்ணான கண்மணிக்கு அவசரமா(ஆலயமணி 1962)

• கண்ணன் வந்தான் (ராமு).

குறட்டை விடுவது ஆபத்தின் அறிகுறியா ?குறட்டை பற்றிய தகவல்கள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:13 | Best Blogger Tips
ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.

நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது.

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும்.
அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வரை, குறட்டை விடுபவர்களை கிண்டல் செய்பவர்கள் அதிகம். குறட்டை ஏற்படுத்தும் குழந்தைகள் தொந்தரவு ஏற்படுத்துபவர்களாகக் கருதப்பட்டனர். இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப்படுகிறது. ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது, நம் கண்கள் வேகமாக அசையும். அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று, வெளியேறும். இதற்கு, “அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

“அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ ஏற்படுவதற்கான

அறிகுறிகள்:


அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் “எப்ஒர்த்’ என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

கீழே உள்ள கேள்விக்கான பதில்களுக்கு, 0, 1, 2, 3 என மதிப்பெண்கள் கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது எந்த மாதிரியான உபாதை எனக் கண்டுபிடித்து விடலாம்.

(0 – எப்போதும் இல்லை, 1 – குறைந்த அளவு வாய்ப்பு, 2 – போதுமான அளவு வாய்ப்பு, 3 – அதிக அளவு வாய்ப்பு).

1. எப்போதெல்லாம் தூக்கம் வருகிறது?

அ) “டிவி’ பார்க்கும் போது.

ஆ) “மீட்டிங்’கில் உட்கார்ந்திருக்கும் போது.

இ) தொடர்ந்து ஒரு மணி நேரம் காரில் பயணிக்கும் போது.

ஈ) மதிய நேரத்தில் படுக்கும் போது.

உ) மதிய உணவுக்குப் பின், சும்மா அமர்ந்திருக்கும் போது.

ஊ) நீங்கள் அமர்ந்திருக்கும் கார், “டிராபிக் சிக்னலில்’ நிற்கும் போது.

மேலே உள்ள பதில்களுக்கு மதிப்பெண் கொடுத்து விட்டீர்களா? இந்த மதிப்பெண்களைக் கூட்டும் போது விடை, 1 முதல் 9 வரை வந்தால், உங்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை எனக் கொள்ளலாம். 12 முதல் 16 வரை விடை வந்தால், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கொள்ளலாம்.

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நம் பொருளாதார நிலை, மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எம்.பி.ஏ., பட்டதாரிகளையும், மற்ற பட்டதாரிகளையும் பணிக்கு அமர்த்தி, கற்பனை செய்ய இயலாத அளவு சம்பளம் கொடுக்கிறது.

சொந்த தொழில் செய்பவர்கள், பொதுத் துறை ஊழியர்கள், இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த புதிய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதில்லை. மாலை நேரங்களில், “டிவி’ பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறது. உடல் பருமன் அதிகரித்த நிலை, தொற்று நோய் போல பரவி விட்டது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, “ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர்.

காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.
ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, “ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம்.

மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்; இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும். மூக்குக் கவசக் கருவி மூலம், தொடர் நேர் அழுத்த சுவாசம் (கன்டின்யுவஸ் பாசிட்டிவ் பிரெஷர் வென்டிலேஷன்) மேற்கொண்டால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கும்.

தேவையான இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து, நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் 


விளம்பரப்படுத்தப்படுகின்றன. டி-ஷர்ட்டின் பின்புறம், டென்னிஸ் பால் தைத்துக் கொள்ளுதல், விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என, பல வகைகள் உள்ளன. இவற்றின் நம்பகத் தன்மை, விவாதத்துக்கு உரியது. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்க வைத்தாலே, குறட்டை ஒலி குறையும்.

“ஸ்பைரோ மீட்டர்’ கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், புட்பால் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால், குறட்டை குறைகிறது என்பது, ஆய்வில் கண்டறிந்த உண்மை. யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது.
தினமும் 45 நிமிட யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம்; திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.



நன்றி - பரமக்குடி சுமதி

மெட்டி அணிவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:32 | Best Blogger Tips
மெட்டி அணிவது ஏன்?

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

பாதாம் பருப்பு உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:30 | Best Blogger Tips


இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.

பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.'

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.
மேலும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில்

பாதாமில் உள்ள சத்துக்கள்

பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.
பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.
பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.

பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.

ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.

பாதாமின் பயன்கள்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.

பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன.