நோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:51 | Best Blogger Tips



நோய் கிருமிகள் தொற்றும் முன் நம்மை பாதுகாத்துக் கொள்வது வரும்முன் காப்பதற்கு சமம். அது நமது ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் நல்லது. நோய் கிருமிகள் மிக சுலபமாக தொற்றக்கூடியவை.

சில பொதுவான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்...


கை கழுவதல்: கை கழுவதல் என்பது சாதாரண விஷயம் தானே என்று நினைக்கலாம். ஆனால் நோய் கிருமிகள் முதலில் தொற்றுவது கைகளில் தான். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பேருந்துகளில் பயணித்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்ததும் கைகளை கைழுவாமல் தின்பண்டகளை எடுத்து சாப்பிடுவது தவறான செயலாகும். இதனால் நோய் கிருமிகள் சுலபமாக தொற்றுகிறது. வீட்டிற்கு சென்றதும் நோய் கிருமிகள் அகற்றக்கூடிய "சோப்", அல்லது "ஹன்ட் வாஷ்" கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

வைட்டமின்: வைட்டமின் சத்துள்ள பொருட்களை தினமும் உணவில் எடுத்துக் கொண்டாலே நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கிடைத்துவிடும். வைட்டமின் "சி" சத்து குறைவதினால் எளிதில் சளி, இரும்பல் ஆகியவை ஏற்படுகிறது. வைட்டமின் சத்துள்ள காய்கள், பழங்கள் தினமும் உணவில் சேர்த்து கொண்டால், நோய் கிருமிகள் தொற்றமல் பாதுகாக்கலாம்.

ஓய்வும் உடற்பயிற்சியும்: நம் உடலுக்கு ஓய்வும், உடற்பயிற்சியும் கட்டாயமாக தேவையானதொன்றாகும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றத்தால் உடற்பயிற்சிக்கும், ஓய்வுக்கும் நேரம் ஒதுக்குவதே இல்லை. பெருபாலானவர்கள் பிபிஓ.,க்களில் இரவு நேரப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சரியான உணவு, உறக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடிப்பதில்லை. இதனால் உடலின் நிலையில் மாற்ற ஏற்படுகிறது. எனவே எட்டு மணி நேர உறக்கமும், சரியான உடற்பயிற்சியும் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்ணாவிரதம்: உண்ணாவிரதம் இருப்பது நம்பிக்கையை அதிகரிப்பதாகும். விரதமிருப்பதால் உடல் எடை சரியான அளவில் வைப்பதோடு, நோய் கிருமிகள் எளிதில் அழிக்கக் கூடிய சக்தி உடலுக்கு ஏற்படுகிறது. தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வதும் தடுக்கப்படுகிறது. எனவே மாதம் இரு முறை விரதமிருந்தால் உடல் வலிமை பெறும். நோய் கிருமிகள் அண்டாது.
நோய்க்கிருமிகளின் தாக்கத்திலிருந்து விடுபட சில எளிய வழிமுறைகள்...


நோய் கிருமிகள் தொற்றும் முன் நம்மை பாதுகாத்துக் கொள்வது வரும்முன் காப்பதற்கு சமம். அது நமது ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் நல்லது. நோய் கிருமிகள் மிக சுலபமாக தொற்றக்கூடியவை.

சில பொதுவான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்...
  

கை கழுவதல்: கை கழுவதல் என்பது சாதாரண விஷயம் தானே என்று நினைக்கலாம். ஆனால் நோய் கிருமிகள் முதலில் தொற்றுவது கைகளில் தான். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் பேருந்துகளில் பயணித்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்ததும் கைகளை கைழுவாமல் தின்பண்டகளை எடுத்து சாப்பிடுவது தவறான செயலாகும். இதனால் நோய் கிருமிகள் சுலபமாக தொற்றுகிறது. வீட்டிற்கு சென்றதும் நோய் கிருமிகள் அகற்றக்கூடிய "சோப்", அல்லது "ஹன்ட் வாஷ்" கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

வைட்டமின்: வைட்டமின் சத்துள்ள பொருட்களை தினமும் உணவில் எடுத்துக் கொண்டாலே நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கிடைத்துவிடும். வைட்டமின் "சி" சத்து குறைவதினால் எளிதில் சளி, இரும்பல் ஆகியவை ஏற்படுகிறது. வைட்டமின் சத்துள்ள காய்கள், பழங்கள் தினமும் உணவில் சேர்த்து கொண்டால், நோய் கிருமிகள் தொற்றமல் பாதுகாக்கலாம்.

ஓய்வும் உடற்பயிற்சியும்: நம் உடலுக்கு ஓய்வும், உடற்பயிற்சியும் கட்டாயமாக தேவையானதொன்றாகும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றத்தால் உடற்பயிற்சிக்கும், ஓய்வுக்கும் நேரம் ஒதுக்குவதே இல்லை. பெருபாலானவர்கள் பிபிஓ.,க்களில் இரவு நேரப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் சரியான உணவு, உறக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடிப்பதில்லை. இதனால் உடலின் நிலையில் மாற்ற ஏற்படுகிறது. எனவே எட்டு மணி நேர உறக்கமும், சரியான உடற்பயிற்சியும் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்ணாவிரதம்: உண்ணாவிரதம் இருப்பது நம்பிக்கையை அதிகரிப்பதாகும். விரதமிருப்பதால் உடல் எடை சரியான அளவில் வைப்பதோடு, நோய் கிருமிகள் எளிதில் அழிக்கக் கூடிய சக்தி உடலுக்கு ஏற்படுகிறது. தேவையற்ற கொழுப்பு உடலில் சேர்வதும் தடுக்கப்படுகிறது. எனவே மாதம் இரு முறை விரதமிருந்தால் உடல் வலிமை பெறும். நோய் கிருமிகள் அண்டாது.

காசியில் அன்னபூரணி தேவி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:28 | Best Blogger Tips
காசியில் அன்னபூரணி தேவியின் கோயிலையும், அன்னை வீற்றிருக்கும் அழகையும் இப்பதிவில் காண்போம்.

காசி விஸ்வநாதர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் துண்டி விநாயகரைத் தரிசிப்பது முக்கியமானது. அதன் பின்பு சற்று தூரத்தில் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோயில் அமைந்துள்ளது. அழகிய சித்திர வேலைப்பாடுடன் கூடிய நுழை வாயில் வலது புறத்தில் பாதாள லிங்கம். அதன் முன்பு சிறிய கிணறு. மராட்டியர் கால கட்டட அமைப்பு. நடுவில் சந்நிதிக்கு முன்பு அஷ்டகோண வடிவில் அமைந்த மண்டபத்தைப் பன்னிரெண்டு கற்தூண்கள் தாங்கி நிற்கின்றன. கருவறையில் மூன்று வாயில்கள் உள்ளன.

தென்கிழக்கு நோக்கிய வாயிலில் கருவறை தரிசனம் செய்யலாம். மற்ற இரண்டு வாயில்களும் முறையை “தர்மத்துவாரம்” என்றும் “பிட்சத்துவாரம்” என்றும் அழைக்கப்படுகின்றன. அந்த இரு வாயில்களும் மூடப்பட்டிருக்கின்றன. அதன் முன்பு பக்தர்கள் அன்னச் செல்வத்தையும், அருட்கடாட்சத்தையும் அன்னையிடம் வேண்டி நிற்கின்றனர். கருவறை முழுவதும் சலவைக்கல் பரப்பப்பட்டு வண்ணப் பூவேலைப்பாட்டுடன் மிக அழகுடன் காட்சி அளிக்கின்றது.

தீபாவளிப் பண்டிகை நாட்களில் மட்டுமே அன்னையின் முழு திருவுருவத்தையும் நின்ற கோலத்தில் நாம் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் சிலாரூப தரிசனம் இல்லை. திருமுக தரிசனம் மட்டுமே. ஸ்வர்ணகவசம் சாத்தப்பட்ட திருமுக தரிசனம்தான் காண முடியும். மற்ற பகுதிகள் புடவையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கருவறை முழுவதும் பலவிதமான லட்டு வகைகள், பால் மூலம் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள், உலர் பழவகைகள் முதலியன தட்டுகளில் அழகாக வைக்கப்படுகின்றன. அன்னை ஸ்வர்ணக் கவசத்துடன் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு சிவபெருமானுக்கு பிட்சையிடும் காட்சியை நாம் தரிசிக்கலாம். அன்னையின் பாதக் கமலத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கர மேரு உள்ளது.

கருவறைக்கு அருகில் உள்ள மாடியில் தங்க அன்னபூரணியின் விக்ரஹம் வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி சமயம் மூன்று நாட்கள் மட்டும் அன்ன பூரணியின் தங்க விக்ரஹமும், பெரிய விக்ரஹமும் வைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் தரிசிக்க முடியாது. பசிப்பிண் போக்கும் மருத்துவராக அகிலாண்ட நாயகி சுவர்ண பீடத்தில் தங்கக் கொலு வீற்றிருக்கிறாள். சுத்தப் பொன் விக்ரஹமாதலால் ஒளியில் கண்கள் கூசுகின்றன. திருவுரும் முழுவதும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மிக்க அழகுடன் காட்சியளிக்கின்றாள். இடது திருக்கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கரத்தில் தங்க அகப்பையும் கொண்டு, நவரத்னக் கிரீடம் அணிந்து, அதன் மேல் தங்கக் குடையும், சொர்ணப் புடவையும் உடுத்தி, மார்பிலும் கழுத்திலும் நவரத்னங்கள் மின்ன, பத்மாசனத்தில் அமர்ந்து அன்னை அருள் பாலிக்கின்றாள்.

அவளருகே ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களும் தங்க விக்ரஹங்களாக அமர்ந்திருக்கின்றார்கள். அன்ன பூரணி மக்களின் பசியை நீக்குகிறாள் என்பதை ஆமோதிக்கும் வகையில் இரு தாயார்களும் வலக்கரத்தைத் தூக்கி நம்மை ஆசீர்வதித்து, கட்டியம் கூறுவது போல் அமர்ந்திருக்கின்றனர். ஓர் ஆள் உயரத்தில் வெள்ளி விக்ரஹமாக பிக்ஷாடனரும் திருவோடு தாங்கி அன்னபூரணியிடம் அன்னம் பெறுகிறார். நாகாபரணத்தை அணிந்து, இடுப்பில் புலித் தோலுடன் ஒரு கையில் உடுக்கையும் மறுகையில் பிரம்ம கபாலமும் ஏந்திய திருக்காட்சியைக் கண்டவர் மனம் உருகும். ஓர் அற்புதமான காட்சி. தீபாவளி சமயம் மூன்று நாட்களுக்கு இத்திருக்காட்சியை மக்கள் தரிசிக்கலாம்.

அன்னபூரணி கோயில் தீபாவளி அன்று சிறப்பாக அலங்கரிக்கப்படுகிறது. அன்னம்மலைபோல் குவித்து வைக்கப்படுகிறது. பலகாரங்களும் இனிப்பு வகைகளும் சிறிய சிறிய குன்றுகள் போல் குவித்து வைக்கப்படுகின்றன. அரிசி, பருப்பு, தானிய வகைகள், உப்பு, புளி போன்ற சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருள்களும், பாத்திரங்களிலும், தட்டுகளிலும் அடுக்கி வைக்கப்படும். காய்கறி வகைகளும் பல விதமாகத் தயாரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றன.

இதையடுத்து இரு கட்டில்கள், வெல்வெட் திண்டுகள், மெத்தை போன்றவை இறைவன் - இறைவி துயில் கொள்ள அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இனிப்பு வகைகளை, பலவித தின்பண்டங்கள், உலர் பழவகைகளும் காணப்படுகின்றன. இது ஓர் அற்புதமான காட்சியாக விளங்குகிறது. பக்தர்கள் யாவருக்கும் பசியாறும் வண்ணம் அன்னமும், இனிப்பு வகைகளும் வாரி வழங்கப்படுகின்றன. பக்தர்கள் அன்ன பூரணிக்குக்காணிக்கையாக ரூபாய் நோட்டுக்களை வாரி வழங்குகின்றனர். ஆகவே, ஆதிசங்கரர் அன்னபூரணியை “நித்தியான்ன தானேஸ்வரி” என்று மிக அழகாக வர்ணித்துப் பாடியுள்ளார்.

தீபாவளி சமயத்தில் லட்டுகளினால் செய்த தேரில் அன்னபூரணி அமர்ந்து, பவனி வருவதைக் காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்லலாம். பவனி முடிந்ததும் அந்த லட்டுகளே பிரசாதமாக மக்களுக்குத் தரப்படுகிறது. தீபாவளி தினங்களில் சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் காலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அன்ன பூரணியைத் தரிசிக்க முடிகிறது.

தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ??

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:26 | Best Blogger Tips


பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:

1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.

** கட்டி உடைய தேனைப்பூசு **

2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.

** காயங்கள் ஆற தேனைத்தடவு **

3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.

** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **

4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.

** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **

5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.

** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **

தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது:

‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

- B.R.Viswanadhan.
தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ??

பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:

1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும். 
 
 ** கட்டி உடைய தேனைப்பூசு **

2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம். 

 ** காயங்கள் ஆற தேனைத்தடவு **

3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும். 

 ** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **

4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து. 

 ** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **

5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும். 

 ** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **

தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது: 

‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. 

- B.R.Viswanadhan.