வாஸ்து பார்க்காத மனிதர்களே இல்லை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:33 | Best Blogger Tips
இன்று வாஸ்து பார்க்காத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் வாஸ்து சாஸ்திரம் வளர்ச்சி அடைந்துள்ளது வாஸ்து சாஸ்திரம் என்பது பண்டைய இந்தியர்களின் கட்டிட விஞ்ஞானம் என்ற நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது. ஆனால் எனது நண்பன் ஒருவன் வாஸ்து சாஸ்திரம் என்பதே ஐநூறு அல்லது அறநூறு ஆண்டுகளாக இருந்து வருவது தான் ஆதிகாலத்தில் வாஸ்து என்பதே கிடையாது இன்றைக்கு அதை தொழிலாக நடத்துபவர்கள் என்னவோ ஆண்டாண்டு காலமாக வாஸ்து சாஸ்திரம் இருப்பதாக பேசி கொள்கிறார்கள் என்று சொல்கிறான். உண்மையில் வாஸ்து சாஸ்திரம் ஆதிகாலம் தொட்டே இருக்கிறதா?

மகாபாரதம் தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள் அதில் பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து எரித்து கொல்ல துரியோதனன் சதி செய்தான் என்பதையும் அனைவரும் அறிவார்கள். அந்த அரக்கு மாளிகை வாரனாவதம் என்ற ஊரில் அமைக்க படுகிறது. அதை கட்டுவதற்கு முன்பு எந்த வடிவத்தில் கட்டினால் உடனடியாக நெருப்பு பிடித்து கொள்ளூம் என்ற விபரத்தை வாஸ்து சாஸ்திரிகளிடம் துரியோதனன் கேட்டறிந்தான் என்ற குறிப்பு இருக்கிறது.

பாண்டவர்களுக்காக இந்திர பிரஸ்தம் என்ற நகரத்தை வாஸ்து சாஸ்திர முறைப்படி மயன் என்ற நிபுணரை வைத்து ஸ்ரீ கிருஷ்ணன் அமைத்ததாகவும் அதே கிருஷணர் வடமதுரையை கடல் சீற்றம் கொண்டு அழிந்த போது வாஸ்துமுறைப்படி துவாரகா என்ற புதிய தலைநகரை கட்டியதாகவும் மகாபாரதம் தெளிவாக சொல்கிறது.

ராமாயணத்திலும் ராமன் நாட்டை விட்டு காட்டுக்கு வந்தவுடன் தனது தம்பி லஷ்மணனிடம் பஞ்சவடி என்ற குடிலை வாஸ்து படி அமைக்குமாறு கூறுவதாக தகவல் பதிவாகி இருக்கிறது. அதே ராமாயணத்தில் வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிரப்படி கிழக்கு முகமாக அமர்ந்து இயற்கை உபாதையை தீர்க்க கூடாது என்ற தகவலும் இருக்கிறது.

இவற்றை எல்லாம் விட மனிதன் கண்டறிந்த முதல் நூலான ரிக் வேதத்தில் வாஸ்தோஸ்பதி என்ற சொல் வருகிறது இந்த வார்த்தைக்கான பொருள் பாதுகாப்பு மகிழ்ச்சி வளமை என்பதாகும். இதிலிருந்தே வாஸ்து என்ற சொல் உற்பத்தி ஆகி இருப்பதாக வடமொழி அறிஞர்கள் கருதுகிறார்கள் எனவே வாஸ்துவுக்கு வேத ஆதாரமும் இருக்கிறது.

இவைகளை வைத்து பார்க்கும் போது வாஸ்து சாஸ்திரம் ஐநூறு அறநூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தது அதற்கு முன் அப்படி எதுவுமில்லை என்று கூறுவது உங்கள் நண்பரின் அறியாமையை மட்டும் காட்டவில்லை. இந்த தேசத்து கலைகளை விஞ்ஞானங்களை கீழ்மை படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பல புனைவுகளை நுணுக்கமாக பரப்பி வரும் விஷ அறிவாளிகளின் வக்கிரம் மட்டுமே தெரிகிறது.
இன்று வாஸ்து பார்க்காத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் வாஸ்து சாஸ்திரம் வளர்ச்சி அடைந்துள்ளது வாஸ்து சாஸ்திரம் என்பது பண்டைய இந்தியர்களின் கட்டிட விஞ்ஞானம் என்ற நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது. ஆனால் எனது நண்பன் ஒருவன் வாஸ்து சாஸ்திரம் என்பதே ஐநூறு அல்லது அறநூறு ஆண்டுகளாக இருந்து வருவது தான் ஆதிகாலத்தில் வாஸ்து என்பதே கிடையாது இன்றைக்கு அதை தொழிலாக நடத்துபவர்கள் என்னவோ ஆண்டாண்டு காலமாக வாஸ்து சாஸ்திரம் இருப்பதாக பேசி கொள்கிறார்கள் என்று சொல்கிறான். உண்மையில் வாஸ்து சாஸ்திரம் ஆதிகாலம் தொட்டே இருக்கிறதா?

மகாபாரதம் தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள் அதில் பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து எரித்து கொல்ல துரியோதனன் சதி செய்தான் என்பதையும் அனைவரும் அறிவார்கள். அந்த அரக்கு மாளிகை வாரனாவதம் என்ற ஊரில் அமைக்க படுகிறது. அதை கட்டுவதற்கு முன்பு எந்த வடிவத்தில் கட்டினால் உடனடியாக நெருப்பு பிடித்து கொள்ளூம் என்ற விபரத்தை வாஸ்து சாஸ்திரிகளிடம் துரியோதனன் கேட்டறிந்தான் என்ற குறிப்பு இருக்கிறது.

பாண்டவர்களுக்காக இந்திர பிரஸ்தம் என்ற நகரத்தை வாஸ்து சாஸ்திர முறைப்படி மயன் என்ற நிபுணரை வைத்து ஸ்ரீ கிருஷ்ணன் அமைத்ததாகவும் அதே கிருஷணர் வடமதுரையை கடல் சீற்றம் கொண்டு அழிந்த போது வாஸ்துமுறைப்படி துவாரகா என்ற புதிய தலைநகரை கட்டியதாகவும் மகாபாரதம் தெளிவாக சொல்கிறது.

ராமாயணத்திலும் ராமன் நாட்டை விட்டு காட்டுக்கு வந்தவுடன் தனது தம்பி லஷ்மணனிடம் பஞ்சவடி என்ற குடிலை வாஸ்து படி அமைக்குமாறு கூறுவதாக தகவல் பதிவாகி இருக்கிறது. அதே ராமாயணத்தில் வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிரப்படி கிழக்கு முகமாக அமர்ந்து இயற்கை உபாதையை தீர்க்க கூடாது என்ற தகவலும் இருக்கிறது.

இவற்றை எல்லாம் விட மனிதன் கண்டறிந்த முதல் நூலான ரிக் வேதத்தில் வாஸ்தோஸ்பதி என்ற சொல் வருகிறது இந்த வார்த்தைக்கான பொருள் பாதுகாப்பு மகிழ்ச்சி வளமை என்பதாகும். இதிலிருந்தே வாஸ்து என்ற சொல் உற்பத்தி ஆகி இருப்பதாக வடமொழி அறிஞர்கள் கருதுகிறார்கள் எனவே வாஸ்துவுக்கு வேத ஆதாரமும் இருக்கிறது.

இவைகளை வைத்து பார்க்கும் போது வாஸ்து சாஸ்திரம் ஐநூறு அறநூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தது அதற்கு முன் அப்படி எதுவுமில்லை என்று கூறுவது உங்கள் நண்பரின் அறியாமையை மட்டும் காட்டவில்லை. இந்த தேசத்து கலைகளை விஞ்ஞானங்களை கீழ்மை படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பல புனைவுகளை நுணுக்கமாக பரப்பி வரும் விஷ அறிவாளிகளின் வக்கிரம் மட்டுமே தெரிகிறது.

வெயில் கால உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:32 | Best Blogger Tips

பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்

இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகு சாதனப்பொருள்

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
வெயில் கால உஷ்ணக் கோளாறுகளை குணமாக்கும் பாசிப்பயறு!

பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ - சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது.

பாசிப்பயறில் உள்ள சத்துக்கள்

இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத் திறன் கூடும்

மனத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகு சாதனப்பொருள்

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

காளானின் மருத்துவ குணம் !!! (மஷ்ரூம்')

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:15 | Best Blogger Tips


மஷ்ரூம்' என்று அழைக்கப்படும் உணவு காளான்களின் மகத்துவம் என்ன என்பதை இப்போதுதான் இந்தியர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்தொடர்ச்சியாக, நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன. சிலர், காளான் வளர்ப்பை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகிறார்கள்.காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.


இந்த உணவு காளானுக்கு, பெண்களின் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. காளானைப் போன்று கிரீன் டீ என்று அழைக்கப்படும் பச்சைத் தேயிலைக்கும் இந்த ஆற்றல் இருக்கிறதாம்.
காளான், கிரீன் டீ அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் குறைகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோனை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் காளான்களுக்கு இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் காளானை கையில் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் குதித்து இருக்கிறார்கள்.

காளான் வகைகள்:

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் மருத்துவ பயன்கள்:

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

குறிப்பு :

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.