தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்..!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:26 | Best Blogger Tips
தொப்பை உருவாகும் விதமும் அதைத் தடுக்கும் முறைகளும்..!


பெரும்பாலும் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதில்லையே ஏன்?

எல்லோருக்கும் வணக்கம், மனிதர்களின் உருவ அழகையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை இன்றைய நவீன காலகட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை முறைகளால் தான் மனிதர்களுக்கு இந்த தொப்பை ஏற்படுகிறது. ஆனாலும் கூட இந்த தொப்பை பிரச்சனையிலிருந்து பெரும்பாலும் பெண்கள் தப்பிக்கொள்கிறார்கள்
என்றுதான் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை கூடுகிறதே தவிர, தொப்பை மிகக் குறைவானவர்களுக்கே ஏற்படுகிறது என்று தான் கூற வேண்டும். அதற்க்கு சில காரணங்கள் இருக்கிறது அதைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் இந்த தொப்பை எப்படி ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்

நமது உடலை பற்றி சொல்வதனால் அது ஒரு எந்திரம் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி எந்திரங்கள் இயங்க மின்சாரம் என்கின்ற ஆற்றல் தேவையோ அதுபோலவே நம் உடல் என்கின்ற எந்திரம் இயங்க கலோரி என்கிற ஆற்றல் தேவை, அந்த கலோரியை நமது உடல், நாம் தினந்தோறும் உண்கின்ற உணவின் வழியாக பெற்றுக்கொள்கிறது. அப்படி உணவின் வழியாக பெறப்படும் கலோரிகள் நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான அளவையும் தாண்டி கிடைக்கும் போது அந்த கலோரிகளை வீணடிக்க விரும்பாத மூளை அவசர காலத்தில் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற நல்ல எண்ணத்தில் (?) எஞ்சியிருக்கும் கலோரிகளை கொழுப்பாக மாற்றி உடலின் ஒரு பகுதியில் சேமிக்க உத்தரவிடுகிறது.

உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் நம்மை காட்டிலும் நமது மூளை மிகவும் எச்சரிக்கை உணர்வோடுதான் செயல்பட ஆரம்பிக்கிறது. உடம்பில் கொழுப்பு சேர ஆரம்பித்ததும் அதை எங்கே எப்படி சேமிக்க வேண்டும் என்பதை மூளை நேரடியாக தலையிட்டு தீர்மானிக்கிறது. இருபத்திநான்கு மணிநேரமும் செயல்படும் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் ஆகியவை இருக்கும் இடங்களை தவிர்த்து உடலின் எந்த பாகம் அதிக வேலையின்றி இருக்கிறதோ அங்கே கொழுப்பை சேமிக்கும்படி மூளை உத்தரவிடுகிறது.

அப்படி மனித உடலில் அதிகவேலையின்றி இருக்கும் இடம் என்று மூளையின் கண்களுக்கு முதலில் தென்படும் இடம் அடிவயிறுதான். மூளையின் உத்தரவின் பேரில் நமது உடலின் வயிற்று தோலின் அடிப்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாய் கொழுப்பை சேர்த்துவைக்கும் வேலை துவங்குகிறது. அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து வயிறு மேடு தட்டும் போது நாம் உசாராக இல்லை என்றால் கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வயிறை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கி இறுதியில் ஒரு பானையின் அளவிற்கு பெரிதாக்கிவிடுகிறது. இப்படித்தான் நண்பர்களே மனிதர்களுக்கு தொப்பை உருவாகிறது.

ஆனால் பெண்களுக்கு என்று பார்க்கும் போது ஆரம்பத்திலேயே அடிவயிற்றில் கொழுப்பை சேர்க்க மூளை உத்தரவிடுவதில்லை காரணம் பெண்களின் அடிவயிற்று பிரதேசத்தில் ஆண்களுக்கு இல்லாத கர்ப்பப்பை இருப்பதால்தான். கர்ப்பபை என்பது உயிர்களை உருவாக்கும் அதிமுக்கியமான இடம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கர்ப்பப்பையின் செயல்பாடுகள் குறைந்து விடக்கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் மூளை ஆரம்பத்திலேயே பெண்களுக்கு கொழுப்பை அடிவயிற்றில் சேமிக்க உத்தரவிடுவதில்லை. கர்ப்பப்பை இருக்கும் ஏரியாவை தவிர்த்து கொழுப்பை எங்கு சேமிக்கலாம் என்று மூளை யோசித்துக்கொண்டிருக்கும் போது வயிற்று பகுதிக்கு அடுத்ததாக அதிக வேலையற்ற இடம் என்று மூளையின் கண்ணில் தென்படுவது தொடைப்பகுதியாகும். தொடைப்பகுதி கொழுப்பை சேமிக்க தகுந்த இடம் என்று மூளை கருதியதும் அங்கே கொழுப்பை சேமிக்கும் வேலை துவங்குகிறது. தொடைப்பகுதியில் ஓரளவுக்கு கொழுப்பு சேர்ந்த பின்னாலும் உடலில் கொழுப்பு சேர்ந்துகொண்டே இருந்தால் அடுத்ததாக கொழுப்பை சேர்த்துவைக்க தகுந்த இடம் என்று மூளையின் கண்ணில் தென்படும் இடம் பெண்களின் பின்பகுதியாகும். இதன் காரணமாகத்தான் ஒரு பெண் மெலிந்த (Slim) தோற்றம் உடையவராக இருந்தாலும் கூட அவர்களின் தொடைப்பகுதியும், பின்புறமும் பெரிதாகத் தெரிகிறது.

மெனோபாஸ் துவங்காத அதாவது பூப்பெய்தாத பெண்களுக்கும் மெனோபாஸ் நின்று போன பெண்களுக்கும் கர்ப்பபைகளின் செயல்பாடுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் அந்த வயதில் இருக்கும் பெண்களின் அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை மூளை தடுக்க முயர்ச்சிப்பதில்லை இதன் காரணமாகத்தான் பெண்களில் சிலருக்கு ஆண்களுக்கு நிகராக தொப்பை உருவாகிவிடுகிறது.

தொப்பை, தொப்பையோடு நின்றுவிட்டால் பரவாயில்லை அது உடலில் பல நோய்கள் உண்டாவதற்க்கான வழியை ஏற்படுத்தி விடுவதால் குறிப்பாக இதயம் சம்பந்தப்பட்ட உண்டாவதற்கு அடிப்படை காரணமாக இருப்பதால் நாம், நமது உடலில் தொப்பை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இன்றியமையாததாகிறது. முறையான உணவு கட்டுப்பாட்டினை பின்பற்றுவோர் இருக்கும் திசையையே தொப்பை எட்டிப்பார்க்காது என்று தான் சொல்ல வேண்டும். அதோடில்லாமல் தினந்தோறும் குறைந்தது நாற்பது நிமிடம் நடக்கும் பழக்கமும் (Walking) இருந்தால் அது நம் உடலில் ஏற்படும் பாதி நோய்களுக்கு தீர்வாக இருக்கும் என்று சொன்னால் மிகையில்லை.

நடக்க சிரமப்படுபவர்கள் வீட்டுக்குள் இருந்தபடியே சில யோகாசனங்களை செய்யலாம். தொப்பையை குறைப்பதற்கு என்று பார்த்தோமானால் மிகச் சிறந்த பலன் தரும் யோகாசனங்களாக தனுராசனம், சலபாசனம், சர்பாசனம், மற்றும் நல்காசனம் ஆகிய யோகாசனங்களை குறிப்பிடலாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த யோகாசனங்களை செய்ய முயற்சிக்கும் போது புத்தகங்களையோ அல்லது டி.வி.களையோ பார்த்து செய்யாமல் சிறந்த யோகா மாஸ்டர் மூலமாக செய்ய முயற்சிப்பது மிகுந்த பயனளிக்ககூடியதாக இருக்கும். தொப்பை விழுந்த பின் கடும் முயற்சி செய்து அவற்றை குறைப்பதைக் காட்டிலும் முறையான உணவு பழக்கவழக்கத்தை பின்பற்றி வரும்முன் தடுப்பதே சிறந்ததாகும்.

மரங்கள் செய்யும் சமூக சேவை..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:10 | Best Blogger Tips
மரங்கள் செய்யும் சமூக சேவை..

ஒரு மரம் சமூகத்திற்கு செய்யும் சேவையின் மதிப்பு ரூ. 15.90 லட்சங்களாகும்.

1. பத்து குளிர்சாதனப் பெட்டிகள் (ஏ.சி.) இருபத்து நாலு மணி நேரமும் தொடர்ந்து ஓடுவதால் ஏற்ப்படும் குளிர்ச்சியை ஒரே ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது

2. பதினெட்டுப் பேருக்கு ஒரு ஆண்டுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன.

3. பிராணவாயு உற்பத்தியின் மதிப்பு - ரூ.3 இலட்சங்கள்

4. காற்றினைச் சுத்தமாக்குவதின் மதிப்பு ரூ. 5 இலட்சங்கள்
பூமியின் மேலே இருக்கும் மண்சத்து- குறையாமல் பாதுகாக்க -
ரூ.2 இலட்சங்கள்.

5. காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதின் மதிப்பு - ரூ 3 இலட்சங்கள்..

6. பறவைகளுக்கும்,விலங்குகளுக்கும் நிழல் கொடுப்பதின் மதிப்பு ரூபாய் 2.50 இலட்சங்கள்.

7. உணவுச் சத்துக் கொடுப்பதின் மதிப்பு ரூபாய் 20000
பூக்கள் மற்றவை வழங்குவதின் மதிப்பு ரூபாய் 20000

ஆக ஒரு மரத்தின் மொத்த மதிப்பு- ரூ.15.90.லட்சங்கள்..

இவ்வளவு பயன்களைத் தரும் மரங்களை ஏதேதோ காரணங்களுக்காக மனிதர்கள் வெட்டி சாய்த்துக்கொண்டிருக்கின்றார்கள்..

வெட்டிய மரங்களுக்கு இணையாக மரக்கன்றுகளை வளர்ப்பதினால் வருங்கால சந்ததியினர் பயனுறுவர்.. வாழும் காலங்களில் எதைச் செய்கின்றோமோ இல்லையோ அட்லீஸ்ட் ஒரு மரக்கன்றையாவது நட்டுவிட்டு செல்வோமே!

மரங்களை வளர்ப்போம்! வருங்கால சந்ததியினரைக் காப்போம்.

To know about all flowers of the world step in and like this page
https://www.facebook.com/Flowersonearth
மரங்கள் செய்யும் சமூக சேவை..

ஒரு மரம் சமூகத்திற்கு செய்யும் சேவையின் மதிப்பு ரூ. 15.90 லட்சங்களாகும்.

1. பத்து குளிர்சாதனப் பெட்டிகள் (ஏ.சி.) இருபத்து நாலு மணி நேரமும் தொடர்ந்து ஓடுவதால் ஏற்ப்படும் குளிர்ச்சியை ஒரே ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது 

2. பதினெட்டுப் பேருக்கு ஒரு ஆண்டுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவை ஒரு ஏக்கரில் வளர்ந்த மரங்கள் தருகின்றன.

3. பிராணவாயு உற்பத்தியின் மதிப்பு - ரூ.3 இலட்சங்கள்

4. காற்றினைச் சுத்தமாக்குவதின் மதிப்பு ரூ. 5 இலட்சங்கள்
பூமியின் மேலே இருக்கும் மண்சத்து- குறையாமல் பாதுகாக்க - 
ரூ.2 இலட்சங்கள்.

5. காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதின் மதிப்பு - ரூ 3 இலட்சங்கள்..

6. பறவைகளுக்கும்,விலங்குகளுக்கும் நிழல் கொடுப்பதின் மதிப்பு ரூபாய் 2.50 இலட்சங்கள்.

7. உணவுச் சத்துக் கொடுப்பதின் மதிப்பு ரூபாய் 20000
பூக்கள் மற்றவை வழங்குவதின் மதிப்பு ரூபாய் 20000

ஆக ஒரு மரத்தின் மொத்த மதிப்பு- ரூ.15.90.லட்சங்கள்..

இவ்வளவு பயன்களைத் தரும் மரங்களை ஏதேதோ காரணங்களுக்காக மனிதர்கள் வெட்டி சாய்த்துக்கொண்டிருக்கின்றார்கள்..

வெட்டிய மரங்களுக்கு இணையாக மரக்கன்றுகளை வளர்ப்பதினால் வருங்கால சந்ததியினர் பயனுறுவர்.. வாழும் காலங்களில் எதைச் செய்கின்றோமோ இல்லையோ அட்லீஸ்ட் ஒரு மரக்கன்றையாவது நட்டுவிட்டு செல்வோமே!

மரங்களை வளர்ப்போம்! வருங்கால சந்ததியினரைக் காப்போம்.

To know about all flowers of the world step in and like this page 
https://www.facebook.com/Flowersonearth

சிவப்பு தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:30 | Best Blogger Tips
சிவப்பு தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை!

உடல் எடையை குறைக்க சிறந்தது தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியின் அளவை கரைத்த விடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு.

வாரத்திறுகு இரண்டு முதல் 6 முறை தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை கிடைப்பதாக இவர்களின் கிளினிக்கல் பதிவுகளே கூறுகின்றனர்.

முட்டைக்கோஸ், காரட்கள், வெங்காயம் ஆகிய பிற காய்கறிகளினால் உளவியல் ரீதியான மேலோட்ட உபாதைகள் குறையும் என்று கூற முடியாது.
தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற சத்தே அதற்கு அந்த சிகப்பு நிறத்தை அளிக்கிறது.

இதுவே சுரப்பி புற்றுநோய் மற்றும் மாரடைப்பு நோய்களை திறம்பட தடுக்கிறது என்று ஆய்வுகள் எடுத்துக் கூறியுள்ளன.

தற்போது இந்த ஆய்வில் மன ஆரோக்கியத்தையும் தக்காளி காப்பதாக கூறப்ப்ட்டுள்ளது. தக்காளியினால் சில உடல் நலன்கள் ஏற்படுவதாக இந்த ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது. சிவப்பு நிற தக்காளியால் செய்யப்படும்

சூப் புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
சிவப்பு தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை!

உடல் எடையை குறைக்க சிறந்தது தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியின் அளவை கரைத்த விடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு.

வாரத்திறுகு இரண்டு முதல் 6 முறை தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை கிடைப்பதாக இவர்களின் கிளினிக்கல் பதிவுகளே கூறுகின்றனர்.

முட்டைக்கோஸ், காரட்கள், வெங்காயம் ஆகிய பிற காய்கறிகளினால் உளவியல் ரீதியான மேலோட்ட உபாதைகள் குறையும் என்று கூற முடியாது.
தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற சத்தே அதற்கு அந்த சிகப்பு நிறத்தை அளிக்கிறது.

இதுவே சுரப்பி புற்றுநோய் மற்றும் மாரடைப்பு நோய்களை திறம்பட தடுக்கிறது என்று ஆய்வுகள் எடுத்துக் கூறியுள்ளன.

தற்போது இந்த ஆய்வில் மன ஆரோக்கியத்தையும் தக்காளி காப்பதாக கூறப்ப்ட்டுள்ளது. தக்காளியினால் சில உடல் நலன்கள் ஏற்படுவதாக இந்த ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது. சிவப்பு நிற தக்காளியால் செய்யப்படும்

சூப் புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

சமையல் பொருள் மட்டுமல்ல பூண்டு

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:29 | Best Blogger Tips
சமையல் பொருள் மட்டுமல்ல பூண்டு

நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
சமையல் பொருள் மட்டுமல்ல பூண்டு

நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை  அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.  பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து  தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்  தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப்  ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம். 

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும்  உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து  விழுங்குவது நல்லதே.

தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை  நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு  சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும்  பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும்,  அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல்  பயமுறுத்துகிறது.

கூந்தல் பிரச்சனை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:28 | Best Blogger Tips
கூந்தல் பிரச்சனைகளில் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவது கூந்தல் உதிர்தல், முனைகளில் அதிக வெடிப்பு, கூந்தல் வளர்ச்சி குறைவு என்று தான். இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு விரைவிலேயே வலுக்கை ஏற்பட்டு விடுகிறது. இதற்கெல்லாம் காரணம், மோசமான டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாதது மற்றும் மாசடைந்து சுற்றுச்சூழல் போன்றவையே. இதற்காக ஸ்பாக்களுக்குச் சென்று சிகிச்சையை மேற்கொள்வதை விட, வீட்டிலேயே இதற்கான சிகிக்சை எடுத்து கொள்ளலாம். கூந்தலுக்கு போதிய ஈரப்பசை வேண்டுமென்பதற்காக, நிறைய தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது, ஒரு சில பழ ஹேர் மாஸ்க்கையும் ட்ரை செய்ய வேண்டும். அது என்ன ஹேர் மாஸ்க் என்பதை சற்று படித்து, செய்து பாருங்களேன்...

வாழைப்பழம் மற்றும் தயிர் மாஸ்க்:
===========================

கூந்தல் வெடிப்பிற்கும், பொலிவிழந்த கூந்தலுக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது. இந்த பழம் மிகவும் சிறந்த விலைக் குறைவான விட்டில் செய்யப்படும் ஹேர் மாஸ்க். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது. இந்த பழ ஹேர் மாஸ்க்கிற்கு கூந்தலுக்கு ஏற்ற அளவு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டு, அதை நன்கு மசித்து, சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு நன்கு கலந்து, ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் படும் படி தேய்த்து, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால், ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் கூந்தல் நன்கு பட்டுப்போன்று, மென்மையாக இருக்கும்.

கொய்யா மற்றும் எலுமிச்சை மாஸ்க்:
============================

கொய்யாவில் இருக்கும் வைட்டமின் ஏ, கூந்தல் வளர்வதிலும், பாதிப்படைந்த செல்கள் புதுப்பிக்கப்படவும் உதவுகிறது. அதற்கு நன்கு கனிந்த கொய்யா பழத்தை எடுத்துக் கொண்டு, நன்கு மசித்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, தலைக்கு நன்கு தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு இருந்தாலும் போய்விடும்.

பப்பாளி மற்றும் பால்:
================

பப்பாளி ஒரு இயற்கையான சரும செல்கள் மற்றும் கூந்தலை நன்கு சுத்தம் செய்யும் பொருள். அத்தகைய கனிந்த பப்பாளியுடன், பால், தயிர் சேர்த்து, நன்கு நைசாக மசித்து, பின் அவற்றை கூந்தலுக்கு தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சை சாறு:
============================

இந்த ஹேர் மாஸ்க் ஸ்கால்பில் ஏற்படும் பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, அரிப்பு, அதிக எண்ணெய் பசையான ஸ்கால்ப், இதனால் கூந்தல் உதிர்தல் போன்றவற்றிற்கு சிறந்தது. ஆகவே சிறிது ஸ்ட்ராபெர்ரிகளை எடுத்து, அவற்றை நன்கு மசித்து, பால், எலுமிச்சை போன்றவற்றை சேர்த்து, நன்கு பேஸ்ட் செய்து, கூந்தல் மற்றும் தலைக்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு நீரால் அலச வேண்டும்.


பீச் மற்றும் தயிர் மாஸ்க்:
===================

வறண்ட மற்றும் அரிப்பான ஸ்கால்ப்பிற்கு இந்த வகையான ஹேர் மாஸ்க் சிறந்தது. அதற்கு பீச் பழங்களை நன்கு மசித்து, சிறிது தயிரை விட்டு, வேண்டுமென்றால் இதனுடன் மற்ற பழங்களான ஆரஞ்சு, பப்பாளி போன்றவைகளை சேர்த்து, கூந்தலுக்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால், ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

மேற்கூறியவையெல்லாம் சில வகையான வீட்லேயே செய்யக்கூடிய ஹேர் மாஸ்க். இதனை 10 நிமிடம் செய்யலாம். அதிலும் இந்த மாஸ்க் போடும் போதெல்லாம், தலையில் கொஞ்சம் எண்ணெய் இருக்க வேண்டும். இல்லையெனில் மாஸ்க் போட்ட பின்பு, வலி ஏற்படும். ஆகவே தலைக்கு மாஸ்க் போடும் முன், இரவில் படுக்கும் போது தலைக்கு எண்ணெய் தடவி, மறுநாள் காலையில் ஹேர் மாஸ்க் போட்டால் நல்லது.

கூந்தலை பராமரிக்க உதவும் மருதாணி!!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:27 | Best Blogger Tips
கூந்தலை பராமரிக்க உதவும் மருதாணி!!

சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும். தலை வரும்போதே அதிக அளவு உதிரும். மருதாணி பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வைத்த டீ தூள் டிக்காஷனை ( ஆறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெள்ளை கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சாறு ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும். உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.

* கூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது கோல்டன் கலராக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.

* நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் எண்ணெய் போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.

* சிறிது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் டீ தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.

* நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கப் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும். இவ்வாறு மாதம் ஒரு முறை (அ) இரண்டு முறை செய்து வாருங்கள். வித்தியாசம் தெரியும். இதனால் முடி உதிராது. நன்கு திடப்படும்.
கூந்தலை பராமரிக்க உதவும் மருதாணி!!

சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும். தலை வரும்போதே அதிக அளவு உதிரும். மருதாணி பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வைத்த டீ தூள் டிக்காஷனை ( ஆறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெள்ளை கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சாறு ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும். உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.

* கூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது கோல்டன் கலராக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.

* நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் எண்ணெய் போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.

* சிறிது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் டீ தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.

* நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கப் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும். இவ்வாறு மாதம் ஒரு முறை (அ) இரண்டு முறை செய்து வாருங்கள். வித்தியாசம் தெரியும். இதனால் முடி உதிராது. நன்கு திடப்படும்.