கிட்னி அறிந்ததும் அறியாததும்..!:

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:39 | Best Blogger Tips
தெரியாததை தெரிந்து கொள்வோம்
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

தமிழில் சில செய்திகள் உங்களுக்காக :

நம் உடல்நலத்தை நாம் அறிந்துகொள்வது மிகவும் நல்லது , வருமுன் காப்போம் அது எதுவாக இருந்தாலும் சரி , கிட்னி செய்யும் வேலைகள் மற்றும் அதன் பலன்களும் அது எதனால் கேடாகிறது என்பதையும் நாம் இதில் பார்போம் , உங்கள் கிட்னியை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள இது ஒரு அறிய வாய்ப்பு என நீங்கள் நினைத்தால் மற்றவருடன் பகிர்ந்து கொண்டு அவருக்கும் இந்த வாய்ப்பை கொடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

கிட்னி அறிந்ததும் அறியாததும்..!:

"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-

யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.

பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?

வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?

முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.

அதை எப்படி கண்டுபிடிப்பது..?

வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.

அறிகுறிகள் இருக்குமா..?

இருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீ­ர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்­ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.

எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..?

தண்­ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.

தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

உணவு முறைகள் என்ன?

எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.

எந்தெந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..?

வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாசியம் சாப்பிடக்கூடாதா..?

அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலைவரைக்கும் போனவர்கள் பொட்டாசியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...?

வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?

முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.

சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.

இல்லாவிட்டால்...

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.

அப்புறம்...

இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.

இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?

இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.

கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?

என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?

முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?

முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.


சிறுநீரக:
சிறுநீரகங்கள் தான் முதுகு விலா கீழே, முதுகெலும்பு அல்லது பக்கத்தில் காணப்படுகின்றன என்று உறுப்புகளின் ஒரு ஜோடி உள்ளன. சிறுநீரகங்கள்:

இரத்தம் கழிவு பொருட்கள் வடிகட்டி மற்றும் சிறுநீர் உடல் வெளியே அனுப்ப

. உடலில் இரத்த அழுத்தம் மற்றும் நீர் நிலைகள், உப்புக்கள், மற்றும் கனிமங்கள் கட்டுப்படுத்தும்
உடலின் மற்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். விளைபொருட்களை ஹார்மோன்கள்
சிறுநீரகங்கள் சேதம் நீரிழிவு நன்றாக கட்டுப்படுத்த முடியாத, குறிப்பாக, பல வருடங்களாக நீரிழிவு இருந்தது மக்கள் ஏற்படலாம்.

சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து கழிவு பொருட்களை அகற்றி தண்ணீர் திரவ அளவை கட்டுப்படுத்தும் அத்தியாவசிய செயல்படுபவை. கீழே விளக்கப்படம் சிறுநீரக அடிப்படை கட்டமைப்பு காட்டுகிறது.


சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து வடிகட்டி கழிவுகள் (யூரியா போன்றது) மற்றும் சிறுநீர், தண்ணீர் சேர்த்து, அவர்களை வெளியேற்ற என்று உறுப்பாக. சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் படிக்கும் மருத்துவ துறையில் சிறுநீரகவியலின் (; சிறுநீரக தொடர்பான பெயரடை சிறுநீரக பொருள் சிறுநீரகங்கள் அதாவது, லத்தீன் rēnēs இருந்து nephro-பொருள் சிறுநீரக பண்டைய கிரேக்கம் வார்த்தை nephros இருந்து) என்று அழைக்கப்படுகிறது.

மனிதர்களில், சிறுநீரகங்கள் வயிறு பின்பக்க பகுதியில் அமைந்துள்ளது. முதுகெலும்பு ஒவ்வொரு பக்கத்தில் ஒரு உள்ளது; சரியான சிறுநீரக இடது இடைப்படலம் மற்றும் மண்ணீரல் அருகில் கீழே, ஒரு கல்லீரல் கீழே அமைந்திருக்கும். ஒவ்வொரு சிறுநீரக மேலே ஒரு அட்ரினல் சுரப்பி (மேலும் suprarenal சுரப்பி என அழைக்கப்படுவது). இடது சிறுநீரகம் சற்று உள்நோக்கிய அமைந்துள்ளது போது வலது சிறுநீரகம் இடது ஒரு விட சற்று குறைவாக இருப்பது கல்லீரல் முடிவு ஏற்படும் அடிவயிற்று உள்ள சமச்சீரின்மையாகும்.

சிறுநீரகங்கள் retroperitoneal உள்ளன, அவை, வயிற்றறை உறையில் பின்னால் வயிற்று துவாரத்தின் அகவுறை பொய் பொருள். அவர்கள் L3 வேண்டும் முதுகெலும்பு நிலை T12 சுமார் உள்ளன. சிறுநீரகங்கள் மேல் பகுதிகளில் ஓரளவு பதினோராவது மற்றும் பன்னிரண்டாவது விலா பாதுகாக்கப்படும், மற்றும் ஒவ்வொரு முழு சிறுநீரக அது மெத்தை உதவி இது கொழுப்பு (perirenal மற்றும் pararenal கொழுப்பு) இரண்டு அடுக்குகள் சூழப்பட்டுள்ளது. ஒருதலைப்பட்ச அல்லது இருதரப்பு சிறுநீரக agenesis occur.1 முடியும் என்று அறியப்பட்ட ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்கள், ஆகியவற்றின் பிறவி இல்லாத

மனித உடல் பற்றி மேல் 5 ஆச்சரியம் உண்மைகள்:

1. உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும். ஒரு வளர்ந்த மனிதன் அதை 1.9m2 (20sq அடி) பற்றி உள்ளடக்கியது. விட்டு தோல் தொடர்ந்து செதில்களாக - ஒவ்வொரு நபரும் தோல் 18kg (40 பவுண்டு) சுற்றி வடிக்கிறாள் ஒரு வாழ்நாளில்.

2. நீங்கள் தூங்க போது, உன்னை பற்றி 8mm (0.3in) மூலம் வளரும். அடுத்த நாள் உங்கள் முன்னாள் உயரம் தயங்குவதில்லை. காரணம் நீ நிற்க அல்லது உட்கார போது உங்கள் குருத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசை மூலம் கடற்பாசிகள் போன்ற பிழியப்பட்ட என்பதுதான்.

3. மேற்கு சராசரி நபர் அவரது வாழ்க்கையின் போது உணவு மற்றும் திரவ பானங்கள் 50,000 லிட்டர் (11,000 கேலன்கள்) என்ற 50 டன்கள் சாப்பிடுவார்.

4. ஒவ்வொரு சிறுநீரக 1 மில்லியன் தனிப்பட்ட வடிகட்டிகளை கொண்டுள்ளது. அவர்கள் நிமிடத்திற்கு இரத்தம் சுமார் 1.3 லிட்டர் (2.2 pints) சராசரியாக வடிகட்ட, மற்றும் 1.4 லிட்டர் (2.5 pints) சிறுநீர் ஒரு நாள் வரை வெளியேற்ற.

5. கண்கள் குவிமைய தசைகள் 100,000 முறை ஒரு நாள் நகர. உங்கள் கால் தசைகள் அதே வொர்க்அவுட்டை கொடுக்க, நீங்கள் ஒவ்வொரு நாளும் 80km (50 மைல்கள்) நடக்க வேண்டும்.


சிறுநீரகங்கள் முதுகெலும்பிகள் மற்றும் சில முதுகெலும்பில்லாத உட்பட பெரும்பாலான விலங்குகளில் பல அத்தியாவசிய கட்டுப்பாட்டு பாத்திரங்கள், சேவை என்று உறுப்பாக. அவர்கள் சிறுநீர் அமைப்பு அவசியமாக உள்ளது, மேலும் இது போன்ற எலக்ட்ரோலைட்கள் கட்டுப்பாடு, அமிலகார சமநிலை பராமரிப்பு, மற்றும் இரத்த அழுத்த கட்டுப்பாடு (உப்பு மற்றும் நீர் சமநிலையை பராமரிப்பது வழியாக) என ஹோமியோஸ்டசிஸ் செயல்பாடுகளையும். அவர்கள் இரத்த ஒரு இயற்கை வடிகட்டி உடலின் சேவை, மற்றும் சிறுநீர்ப்பை விடப்படுகிறது அவை கழிவுகள் நீக்க. சிறுநீர் உற்பத்தி, சிறுநீரகங்கள் வெளியேற்றம் போன்ற யூரியா மற்றும் அம்மோனியம் போன்ற கழிவுகள், மற்றும் அவர்கள் தண்ணீர் மீளுறிஞ்சல், குளுக்கோஸ், மற்றும் அமினோ அமிலங்கள் பொறுப்பு. சிறுநீரகங்கள் கால்சிட்ரியல், எரித்ரோபொயிடின், மற்றும் நொதி ரெனின் உட்பட ஹார்மோன் உற்பத்தி.

Retroperitoneum உள்ள அடிவயிற்று பின்புறம் அமைந்துள்ள, சிறுநீரகங்கள் ஜோடியாக சிறுநீரக தமனிகள் ரத்தம் பெற, மற்றும் ஜோடியாக சிறுநீரக நரம்புகள் ஒரு சாக்கடை. ஒவ்வொரு சிறுநீரக தன்னை, ஒரு காரணங்களாலும், சிறுநீர்க்குழாய் ஒரு ஜோடியாக அமைப்பு சிறுநீர் excretes என்று சிறுநீர்ப்பை இந்த empties.

சிறுநீரகவியலின் சிறுநீரக நோய்கள் அக்கறை மருத்துவ சிறப்பு போது சிறுநீரக உடலியல், சிறுநீரக செயல்பாடு ஆய்வு. சிறுநீரக நோய்கள் மாறுபட்ட, ஆனால் சிறுநீரக நோய் உள்ளவர்கள் அடிக்கடி குறிப்பிடத்தக்க மருத்துவ வசதிகள் காட்ட. சிறுநீரக சம்பந்தப்பட்ட பொதுவான மருத்துவ நிலைமைகள் nephritic மற்றும் nephrotic அறிகுறிகள், சிறுநீரக நீர்க்கட்டிகள், தீவிரமான சிறுநீரக காயத்துடன், நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீர் பாதை நோய் தொற்று, சிறுநீரகக்கல், மற்றும் சிறுநீரக பாதை தடுப்புகளும் அடங்கும் [1] சிறுநீரக பல்வேறு புற்றுநோய்களுக்கு உள்ளன;. மிக பொதுவான பெரியோர் சிறுநீரக புற்றுநோய் சிறுநீரக உயிரணு புற்றுநோய் உள்ளது. புற்றுநோய், நீர்க்கட்டிகள், மற்றும் வேறு சில சிறுநீரக நிலைமைகள் சிறுநீரக அகற்றுதல், அல்லது குண்டிக்காயை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிதல் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். குளோமரூலர் வடிகட்டுதல் விகிதம் மூலம் அளவிடப்படுகிறது சிறுநீரக செயல்பாடு, தொடர்ந்து ஏழை போது, கூழ்மப்பிரிப்பு மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை விருப்பங்கள் இருக்கலாம். அவர்கள் கடுமையாக தீங்கு இல்லை என்றாலும், சிறுநீரக கற்கள் ஒரு வலி மற்றும் ஒரு தொந்தரவும் இருக்க முடியும். சிறுநீரக கற்கள் நீக்குவது பிறகு சிறுநீர் குழாய் வழியாக இவை சிறிய துண்டுகள், ஒரு கல் உடைக்க ஒலி அலை சிகிச்சை கொண்டுள்ளது. சிறுநீரக கற்கள் ஒரு பொதுவான அறிகுறி குறைந்த திரும்பி உள்நோக்கிய / பக்கவாட்டு பிரிவுகளில் ஒரு கூர்மையான வலி.