கனவுகள் ஓர் அறிமுகம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:31 | Best Blogger Tips

Photo: கனவுகள் ஓர் அறிமுகம் 

வகுப்பறையில் ஆசிரியர் தாலாட்டில் உறங்க ஆரம்பித்து கனவில் திளைக்கும் மாணவர்கள் முதல் வேலைப்பளு தாளாமல் இடைவேளை யின் போது குட்டித் தூக்கத்தில் சுகமான கனவுகளில் மூழ்கும் மூத்தவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் கனவுகள் சுவாரஸ்யமான ஒன்றாகும்.
 
“அனைவரும் கனவு காண்பது சகஜம் தானே! இதில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது... என்று நினைப்ப வராக இருந்தால் உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டிய சமயம் இதுவே!
 
உடல், மனம் மற்றும் உயிர் ஆகியவை சங்கேதமாக தொடர்பு கொள்ளும் சூழலையே கனவு என்கிறோம். இச் சூழலில் உடல், மனம், மற்றும் உயிர் தங்கள் கருத்துக்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி பரிமாறிக் கொள்கின்றன. இச்செயல் இவை மூன்றையும் சரிசமம் செய்து ஆரோக்கிய வாழ்விற்கு வழி செய்கிறது.
 
எப்பொழுது மூளை, மனம் மற்றும் உயிராற்றல் ஓய்வு நிலையில் இருக்கிறதோ அவ்வேளையில் முன்னர் சேமிக்கப்பட்ட பதிவுகளை மறுசீராய்வு செய்யப்படுகிறது. அப்போது மனதில் சேமிக்கப்பட்ட மனக்கிளர்ச்சிகள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் இவற்றோடு குறுகிய கால நினைவுகள் இணைந்து ஒலி, ஒளி வடிவிலான ஒரு ஒழுங்கு முறை நிறைந்த மனத்திரைப்படமே கனவு எனப்படுகிறது. இனி கனவுகள் பற்றி விரிவாகக் காண்போம்.
 
வரலாறுகளில் கனவுகள் பற்றி:
 
பழங்காலங்களில் சில இன மரபுக் குழுக்கள் கனவுகளை ஆராய்ந்து அதில் தங்கள் குழு பற்றியும், மனிதர்கள் பற்றியும் புரிந்து கொள்ள முயன்றனர்.
 
கிரேக்கர்கள் கனவுகளைக் கொண்டு, நோய்களைக் கண்டறியவும், குணப்படுத்தவும் பல வழிமுறைகளை கண்டனர். இவர்கள் கனவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் மருத்துவமனைகளையே கட்டினர். அதனை அஸ்கிலாபியன் சாங்சுவரிஸ் (Asklepian Sanctuaries) என்று அழைத்தார்கள்.
 
19ம் நூற்றாண்டில் பல மேற் குடி மக்கள் இத்துறையில் ஆர்வம் கொண்டு செயல்பட்டனர். எவ்வாறு ஒலி, வாசனை போன்றவை ஒன்றினைந்து செயல்பட்டு கனவு களின் உட்பொருளை பாதிக்கின்றன என்பதனை விரிவாக ஆராய்ந்தனர்.
 
20ம் நூற்றாண்டில் கனவு அறிவியலுக்கு முக்கியத்துவம் உயர்ந்தது. முக்கியமாக ரெம் (REM) தூக்கம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு ஆராய்ச்சிகள் வெகுவாக உயர்ந்தன.
 
கலாச்சாரமும் கனவும்:
 
பாபிலோனியர்கள் கனவுகளை தெய்வத்திடமிருந்து வரும் நற்செய்திகளாகவும் தீய சக்திகளிடமிருந்து வரும் கெட்ட செய்திகளாக வும் கருதுகின்றனர்.
 
அசீரியர்கள் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கும் அறிகுறிகளாக கனவுகளைக் கருதினர். கெட்ட கனவுகளுக்கு உடனடி பரிகாரங்கள் செய்ய வேண்டும் என கருதினர். மற்ற கனவுகளை ..ஆலோசனைகளாக நினைத்தனர்.
 
எகிப்தியர்கள் கனவுகளை கடவுள் தங்களுக்கு கூறும் செய்திகளாகவும், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் தீய காரியங்களுக்கு எச்சரிக்கைகளாகவும் கருதினர்.
 
கிரேக்கர்கள் எதிர்காலம் பற்றி கூறுவனவாக கனவுகள் அமைகின்றன என்கின்றனர். சில சமயம் நல்ல கனவுகள் மட்டும் வர வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை பின் பற்றினர். ரோமானியர்களும் இதனை யே நம்பினர்.
 
ஜப்பானியர்கள் தங்கள் ஆழ்மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் களாகவும், தங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான பதில்களைத் தருவதாகவும் கனவுகளைக் கருதினர்.
 
உறக்க‌ம் - படிநிலைகள்:
 
கனவுகள் பற்றி விரிவாக காண்பதற்கு முன் உறக்கத்தின் படிநிலைகள் பற்றி அறிய வேண்டியது அவசியம்.
 
படிநிலை-1: இது விழிப்பு நிலையி லிருந்து தூக்க நிலைக்கு மாறும் போது உள்ள நடுநிலை. இது நான்-ரெம் (Non-REM--Non Rapid Eye Movement) வகையை சேர்ந்தது.
 
படிநிலை-2: இதுவும் நான் ரெம் (Non-REM) வகையைச் சேர்ந்தது. இந்நிலையில் உடலின் வெப்பநிலை குறைந்து, தசைகள் தளர்வடைந்து ஓய்வு நிலையில் இருக்கும்.
 
படிநிலை-3: இதுவும் நான் ரெம் (Non-REM) வகையே. இந்த நிலையில் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறோம்.
 
படிநிலை-4: இந்த படிநிலை ரெம்(REM) வகையைச் சார்ந்ததாகும். இந்த நிலையில் நமது கண்கள் விரைவாகவும், அப்படியும், இப்படியும் அசைந்து கொண்டிருக்கும். நாம் காணும் பெரும்பாலான கனவுகள் இந்த நிலையிலேயே வருகின்றன. இவ்வேளையில் ஒருவரை எழுப்பினால் அவர் அப்போது கண்ட கனவுகளை தெளிவாக நினைவில் வைத்திருப்பார்.
 
இந்த நான்கு படிநிலைகளும் சுழற்சி முறையில், தூங்கும் போது மாறிக்கொண்டே இருக்கும். இவற்றில் முதல் 3 படிநிலைகளை விட 4ஆம் படிநிலையில் தான் அதிக நேரம் தூங்குகிறோம். என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
கனவுகளின் இயக்கவியல்:
 
நாம் கனவு கண்டு கொண்டி ருக்கும் போது கவனிக்கத் தக்க மாறுதல்கள் உடலில் ஏற்படுகிறது. அட்ரீனலின் ஹார்மோன் அளவு அதிகரிக்கிறது. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கிறது. இதனால் தான் மிகவும் வலுவிழந்த இதயம் கொண்டவர்கள் இந்த மாற்றங்களைத் தாங்க முடியாமல் தூக்கத்தோடு தூக்கமாக உயிரை விட்டு விடுகின்றனர்.
 
நாம் நன்றாக உறங்க ஆரம்பித்து 30லிருந்து 90 நிமிடங்களுக்குப் பிறகே கனவுகள் ஆரம்பிக் கின்றன. ஓரு இரவில் 4லிருந்து 7 முறைகள் வரை ரெம் படிநிலை வருகிறது. இந்த வேலையிலும் உடலும் உடற் தசைகளும் முழுமையான ஓய்வு எடுக்கின்றன. ஆனால் ரெம் படிநிலையில் மனம் முழு செயல் பாட்டில் இருக்கும்.
 
வேதியியல் மாற்றங்கள்:
 
கனவுகளின் போது மூளையில் நார்-அட்ரீனலின் மற்றும் செரடோனின் அளவுகள் வீழ்ச்சியடைகின்றன. இதனால்தான் கனவுகளை நீண்ட காலம் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
 
கனவு -வகைகள்:
 
கனவுகளை பல விதங்களாக பிரிக்கின்றனர். இங்கு முக்கியமான வகைகளை மட்டும் காண்போம்.
 
1. பகல் கனவுகள்
 
2. தெளிவுநிலை கனவுகள் (Lucid dreams)
 
3. கொடுங்கனவுகள் (Nightmares)
 
4. அடிக்கடி வரும் கனவுகள் (Recurring dreams)
 
5. எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள் (prophetic dreams)
 
6. இதிகாசக்கனவுகள் (Epic dreams)
 
7. நோய்நீக்கும்கனவுகள் (healing dreams)
 
8. பொய் விழிப்பு கனவுகள் (False Awakening dreams)
 
1.பகல் கனவுகள்
 
உறக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் நடுவே உள்ள உணர்வு நிலையைத்தான் பகற்கனவு என்கிறோம். ஆராய்ச்சிகளில் ஒரு மனிதர் ஒரு நாளில் சராசரியாக 70-120 நிமிடங்கள் பகற் கனவுகளில் செல விடுகிறார்கள் என கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது நமது கற்பனை குதிரையை ஓடவிடும் வேளையே பகல் கனவு.
 
2. தெளிவு நிலை கனவு:
 
இந்த நிலையில் நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம் என்று நன்றாக உணர்ந்திருப்போம். சிலர் அப்படியே ஆனந்தமாக கனவை தொடர்ந்து கொண்டிருப்பர். பெரும் பாலும் இந்த வகை கனவு களில், கனவு காண்பவர் ஒரு கதாபாத்திரமாகவே இருப்பார்.
 
3.கொடுங் கனவு:
 
இதனை சிறு வயதுப் பிள்ளை களிடம் அதிகமாகக் காணலாம். தூங்கும் போது பயங்கரமான கனவுகள் தோன்றி திடீரென்று படபடப்புடனும், பயத்துடனும் எழ வைக்கும் கனவுகளையே கொடுங் கனவு என்கிறோம். சில சமயங்களில் வாழ்வில் நடக்கும் விபத்துக்கள் அல்லது மோசமான சூழ்நிலைகளாலும் இத்தகைய கனவுகள் வரலாம். இந்த கனவுகளை போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் நைட் மேர் என்று அழைக்கிறார்கள்.
 
சிலருக்கு இக்கனவுகள் தோன்றுவது வழக்கமாகவே இருக்கும். இது பரம்பரையில் யாருக்காவது மனப் பிரச்சனைகள் இருந்திருந்தாலோ அல்லது அந்நபரின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலோ ஏற்படும். ஆழ் மனதில் உள்ள பயங்களை சுட்டிக் காட்டுபவையாக இக் கனவுகள் அமைகின்றன.
 
4. அடிக்கடி வரும் கனவுகள்:
 
இவை பெரும்பாலும் கொடுங் கனவு வகை கருத்துருவையே கொண்டுள்ளது. சிற்சில மாற்றங்கள் இருக்கும். சில சமயம் நல்ல கனவுகளாகவும் இருக்கும். இக் கனவுகள் வாழ்வில் சரி செய்யப்படாத சில பிரச்சனைகளால் வருகிறது. அப்பிரச்சனைகளுக்கு விடை கண்டு தீர்த்து விட்டால் மீண்டும் வருவது நின்று விடலாம்.
 
5.எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள்:
 
இக்கனவின் போது ஒரு கோட்பாடாக மனது பல கருத்துக்களையும், நுண்காட்சிப் படிவுகளையும் பொருள் தரும்படியான திரை ஓட்டமாக மாற்றுகிறது. இதனால் எதிர் காலத்தில் என்ன நடக்கலாம் என்று ஓரளவுக்கு கணிக்க முடியும்.
 
6. காவியக் கனவுகள்:
 
இவை மிகவும் அழகாக, பிரம் மாண்டமாக அமைந்திருக்கும். இந்தக் கனவுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும். இந்த கனவுகளில் தோன்றும் காட்சிகள் உண்மையிலேயே உள்ளது போலத் தோன்றும். இக் கனவு முடிந்து துயில் எழும்போது ஏதோ ஒன்றை கண்டுபிடித்தது போன்ற வியப்பு நமக்குள் எழும்.
 
7.நோய் நீக்கும் கனவு: இவ் வகைக் கனவுகள் கனவு காண்பவரின் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்களை சொல்கிறது. பண்டைய கிரேக்கர்கள் இதனை நோய் வருவதற்கு முன் வரும் செய்தியாக கருதுகின்றனர். ஆராய்ச்சி களில் ஆஸ்த்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற நோய் உடையவர்கள் நோய் தாக்குவதற்கு முன்பு ஒருவித எச்சரிக்கை கனவுகள் காண்கின்றனர் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கனவின் போது நமது உடல் உயிர் மற்றும் மனம், ஒன்றுக்கொன்று கருத்துக்களை பரிமாறிக் கொள்வதால் இது சாத்தியமாகிறது என்கின்றனர். இவ்வாறு நோய் வருவதை எச்சரிக்கை ஒலியாக உணர்த்துவது மட்டுமின்றி, அந்நோயை எவ்வாறு சரி செய்வது என்று கூட ஆலோசனையும் வழங்குவதுண்டு என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
8. பொய் விழிப்பு கனவுகள்:
 
நாம் சில சமயம் காலையில் துயில் கலைந்து எழுந்து, பல் துலக்கி, குளித்து, உணவு உண்டு முடித்து, வேலைக்கு சென்றது போல உணர்வோம். ஆனால் பிறகு தான் தெரியும் அது அத்தனையும் கனவு என்று! இதைத்தான்என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
 
சிக்மண்ட் ப்ராய்டு-(1856 -1939)
 
சிக்மண்ட் ப்ராய்டு உள்ளப் பகுப்பாய்வின் தந்தையாக கருதப்படுகிறார். அவர் “தி இன்டர்பிரடேசன் ஆப் டிரீம்ஸ் (Interpretation of Dreams) என்ற புத்தகத்தின் மூலம் இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.
 
நாம் செய்யும் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக நடப்பதில்லை. நமது அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் ஆழ்மனது கட்டுப்படுத்துகிறது.
 
இந்த நாகரீக உலகில் அனைவருடனும் ஒத்து வாழ நாம் பல உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியும், அடக்கியும் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆதலால் இவ்வகை உணர்ச்சிகள் வேறு சில வழிகளில் வெளிப்படுகின்றன. இவ்வாறு உணர்ச்சிகளை வெளிக் கொணரும் ஒரு வழியே கனவுகள் என்று ப்ராய்டு கூறுகிறார்.
 
நமது ஆழ்மனம் உணர்வுகளை குறியீட்டு மொழியில் (உருவக வடிவில்) வெளிப்படுத்துகிறது.
 
மரு. ப்ராய்டு மனதின் தன்மைகளை மூன்று வகைகளாக பிரிக்கிறார்.
 
1. இட் (Id) : இன்பம், விருப்புகள், உணர்ச்சிகள் மற்றும் விருப்பத்தீர்வு
 
2. ஈகோ (Ego): விழிப்பு நிலை, பகுத்தறிதல், தன்னிலை அறிதல், போன்றவை
 
3. சூப்பர் ஈகோ (Super Ego): இது இட் டினை தணிக்கை செய்து பகுத்தறிந்து ஈகோவினை வெளிக் கொணர்கிறது.
 
நாம் விழிப்பு நிலையில் இருக்கின்ற போது இட்- டின் உணர்வுகள் மற்றும் விருப்புகள் சூப்பர் ஈகோவினால் கட்டுப்படுத்தப் படுகின்றன. ஆனால் தூக்கத்தின் போது இது செயல்படுவதில்லை என்பதால் இந்த உணர்வுகள் கனவுகளாக வெளி வருகின்றன.
 
இட்- டின் உணர்வுகள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிப்பனவாக இருந்தால் அது தணிக்கை செய்யப்பட்டு, குறியீட்டு மொழிகளாக மாற்றி கனவுகளில் ஓட விடுகிறது. இதனால் இட் டின்உணர்வுகளும் வெளிப்படுகின்றன. தூக்கமும் கலைவதில்லை. சில சமயம் வரும், குழப்பக் கூடிய மற்றும் முழுமை பெறாத கனவுகளுக்கும் இந்த செயல் முறையே காரணம்.
 
எனவே கனவுகளை சரியாக புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதனின் மனதை எளிதாக புரிந்து கொள்ளலாம். இதன் காரணமாகவே ப்ராய்டு கனவுகளை ஆழ்மனதின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள இட்டுச் செல்லும் இராஐ பாட்டைகள் என்று குறிப்பிடுகிறார்.
 
ப்ராய்டு கனவுகளில் வரும் உருவகங்களை 5 வகைகளாகப் பிரிக்கின்றார்.
வகுப்பறையில் ஆசிரியர் தாலாட்டில் உறங்க ஆரம்பித்து கனவில் திளைக்கும் மாணவர்கள் முதல் வேலைப்பளு தாளாமல் இடைவேளை யின் போது குட்டித் தூக்கத்தில் சுகமான கனவுகளில் மூழ்கும் மூத்தவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் கனவுகள் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

“அனைவரும் கனவு காண்பது சகஜம் தானே! இதில் ஆராய்வதற்கு என்ன இருக்கிறது... என்று நினைப்ப வராக இருந்தால் உங்கள் கருத்தை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டிய சமயம் இதுவே!

உடல், மனம் மற்றும் உயிர் ஆகியவை சங்கேதமாக தொடர்பு கொள்ளும் சூழலையே கனவு என்கிறோம். இச் சூழலில் உடல், மனம், மற்றும் உயிர் தங்கள் கருத்துக்களை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி பரிமாறிக் கொள்கின்றன. இச்செயல் இவை மூன்றையும் சரிசமம் செய்து ஆரோக்கிய வாழ்விற்கு வழி செய்கிறது.

எப்பொழுது மூளை, மனம் மற்றும் உயிராற்றல் ஓய்வு நிலையில் இருக்கிறதோ அவ்வேளையில் முன்னர் சேமிக்கப்பட்ட பதிவுகளை மறுசீராய்வு செய்யப்படுகிறது. அப்போது மனதில் சேமிக்கப்பட்ட மனக்கிளர்ச்சிகள், எண்ணங்கள், செயல்கள் மற்றும் இவற்றோடு குறுகிய கால நினைவுகள் இணைந்து ஒலி, ஒளி வடிவிலான ஒரு ஒழுங்கு முறை நிறைந்த மனத்திரைப்படமே கனவு எனப்படுகிறது. இனி கனவுகள் பற்றி விரிவாகக் காண்போம்.

வரலாறுகளில் கனவுகள் பற்றி:

பழங்காலங்களில் சில இன மரபுக் குழுக்கள் கனவுகளை ஆராய்ந்து அதில் தங்கள் குழு பற்றியும், மனிதர்கள் பற்றியும் புரிந்து கொள்ள முயன்றனர்.

கிரேக்கர்கள் கனவுகளைக் கொண்டு, நோய்களைக் கண்டறியவும், குணப்படுத்தவும் பல வழிமுறைகளை கண்டனர். இவர்கள் கனவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் மருத்துவமனைகளையே கட்டினர். அதனை அஸ்கிலாபியன் சாங்சுவரிஸ் (Asklepian Sanctuaries) என்று அழைத்தார்கள்.

19ம் நூற்றாண்டில் பல மேற் குடி மக்கள் இத்துறையில் ஆர்வம் கொண்டு செயல்பட்டனர். எவ்வாறு ஒலி, வாசனை போன்றவை ஒன்றினைந்து செயல்பட்டு கனவு களின் உட்பொருளை பாதிக்கின்றன என்பதனை விரிவாக ஆராய்ந்தனர்.

20ம் நூற்றாண்டில் கனவு அறிவியலுக்கு முக்கியத்துவம் உயர்ந்தது. முக்கியமாக ரெம் (REM) தூக்கம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு ஆராய்ச்சிகள் வெகுவாக உயர்ந்தன.

கலாச்சாரமும் கனவும்:

பாபிலோனியர்கள் கனவுகளை தெய்வத்திடமிருந்து வரும் நற்செய்திகளாகவும் தீய சக்திகளிடமிருந்து வரும் கெட்ட செய்திகளாக வும் கருதுகின்றனர்.

அசீரியர்கள் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துரைக்கும் அறிகுறிகளாக கனவுகளைக் கருதினர். கெட்ட கனவுகளுக்கு உடனடி பரிகாரங்கள் செய்ய வேண்டும் என கருதினர். மற்ற கனவுகளை ..ஆலோசனைகளாக நினைத்தனர்.

எகிப்தியர்கள் கனவுகளை கடவுள் தங்களுக்கு கூறும் செய்திகளாகவும், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் தீய காரியங்களுக்கு எச்சரிக்கைகளாகவும் கருதினர்.

கிரேக்கர்கள் எதிர்காலம் பற்றி கூறுவனவாக கனவுகள் அமைகின்றன என்கின்றனர். சில சமயம் நல்ல கனவுகள் மட்டும் வர வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை பின் பற்றினர். ரோமானியர்களும் இதனை யே நம்பினர்.

ஜப்பானியர்கள் தங்கள் ஆழ்மனதில் உள்ள கேள்விகளுக்கு பதில் களாகவும், தங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான பதில்களைத் தருவதாகவும் கனவுகளைக் கருதினர்.

உறக்க‌ம் - படிநிலைகள்:

கனவுகள் பற்றி விரிவாக காண்பதற்கு முன் உறக்கத்தின் படிநிலைகள் பற்றி அறிய வேண்டியது அவசியம்.

படிநிலை-1: இது விழிப்பு நிலையி லிருந்து தூக்க நிலைக்கு மாறும் போது உள்ள நடுநிலை. இது நான்-ரெம் (Non-REM--Non Rapid Eye Movement) வகையை சேர்ந்தது.

படிநிலை-2: இதுவும் நான் ரெம் (Non-REM) வகையைச் சேர்ந்தது. இந்நிலையில் உடலின் வெப்பநிலை குறைந்து, தசைகள் தளர்வடைந்து ஓய்வு நிலையில் இருக்கும்.

படிநிலை-3: இதுவும் நான் ரெம் (Non-REM) வகையே. இந்த நிலையில் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறோம்.

படிநிலை-4: இந்த படிநிலை ரெம்(REM) வகையைச் சார்ந்ததாகும். இந்த நிலையில் நமது கண்கள் விரைவாகவும், அப்படியும், இப்படியும் அசைந்து கொண்டிருக்கும். நாம் காணும் பெரும்பாலான கனவுகள் இந்த நிலையிலேயே வருகின்றன. இவ்வேளையில் ஒருவரை எழுப்பினால் அவர் அப்போது கண்ட கனவுகளை தெளிவாக நினைவில் வைத்திருப்பார்.

இந்த நான்கு படிநிலைகளும் சுழற்சி முறையில், தூங்கும் போது மாறிக்கொண்டே இருக்கும். இவற்றில் முதல் 3 படிநிலைகளை விட 4ஆம் படிநிலையில் தான் அதிக நேரம் தூங்குகிறோம். என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கனவுகளின் இயக்கவியல்:

நாம் கனவு கண்டு கொண்டி ருக்கும் போது கவனிக்கத் தக்க மாறுதல்கள் உடலில் ஏற்படுகிறது. அட்ரீனலின் ஹார்மோன் அளவு அதிகரிக்கிறது. இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கிறது. இதனால் தான் மிகவும் வலுவிழந்த இதயம் கொண்டவர்கள் இந்த மாற்றங்களைத் தாங்க முடியாமல் தூக்கத்தோடு தூக்கமாக உயிரை விட்டு விடுகின்றனர்.

நாம் நன்றாக உறங்க ஆரம்பித்து 30லிருந்து 90 நிமிடங்களுக்குப் பிறகே கனவுகள் ஆரம்பிக் கின்றன. ஓரு இரவில் 4லிருந்து 7 முறைகள் வரை ரெம் படிநிலை வருகிறது. இந்த வேலையிலும் உடலும் உடற் தசைகளும் முழுமையான ஓய்வு எடுக்கின்றன. ஆனால் ரெம் படிநிலையில் மனம் முழு செயல் பாட்டில் இருக்கும்.

வேதியியல் மாற்றங்கள்:

கனவுகளின் போது மூளையில் நார்-அட்ரீனலின் மற்றும் செரடோனின் அளவுகள் வீழ்ச்சியடைகின்றன. இதனால்தான் கனவுகளை நீண்ட காலம் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

கனவு -வகைகள்:

கனவுகளை பல விதங்களாக பிரிக்கின்றனர். இங்கு முக்கியமான வகைகளை மட்டும் காண்போம்.

1. பகல் கனவுகள்

2. தெளிவுநிலை கனவுகள் (Lucid dreams)

3. கொடுங்கனவுகள் (Nightmares)

4. அடிக்கடி வரும் கனவுகள் (Recurring dreams)

5. எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள் (prophetic dreams)

6. இதிகாசக்கனவுகள் (Epic dreams)

7. நோய்நீக்கும்கனவுகள் (healing dreams)

8. பொய் விழிப்பு கனவுகள் (False Awakening dreams)

1.பகல் கனவுகள்

உறக்கத்திற்கும் விழிப்பு நிலைக்கும் நடுவே உள்ள உணர்வு நிலையைத்தான் பகற்கனவு என்கிறோம். ஆராய்ச்சிகளில் ஒரு மனிதர் ஒரு நாளில் சராசரியாக 70-120 நிமிடங்கள் பகற் கனவுகளில் செல விடுகிறார்கள் என கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது நமது கற்பனை குதிரையை ஓடவிடும் வேளையே பகல் கனவு.

2. தெளிவு நிலை கனவு:

இந்த நிலையில் நாம் கனவு கண்டு கொண்டிருக்கிறோம் என்று நன்றாக உணர்ந்திருப்போம். சிலர் அப்படியே ஆனந்தமாக கனவை தொடர்ந்து கொண்டிருப்பர். பெரும் பாலும் இந்த வகை கனவு களில், கனவு காண்பவர் ஒரு கதாபாத்திரமாகவே இருப்பார்.

3.கொடுங் கனவு:

இதனை சிறு வயதுப் பிள்ளை களிடம் அதிகமாகக் காணலாம். தூங்கும் போது பயங்கரமான கனவுகள் தோன்றி திடீரென்று படபடப்புடனும், பயத்துடனும் எழ வைக்கும் கனவுகளையே கொடுங் கனவு என்கிறோம். சில சமயங்களில் வாழ்வில் நடக்கும் விபத்துக்கள் அல்லது மோசமான சூழ்நிலைகளாலும் இத்தகைய கனவுகள் வரலாம். இந்த கனவுகளை போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ் நைட் மேர் என்று அழைக்கிறார்கள்.

சிலருக்கு இக்கனவுகள் தோன்றுவது வழக்கமாகவே இருக்கும். இது பரம்பரையில் யாருக்காவது மனப் பிரச்சனைகள் இருந்திருந்தாலோ அல்லது அந்நபரின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலோ ஏற்படும். ஆழ் மனதில் உள்ள பயங்களை சுட்டிக் காட்டுபவையாக இக் கனவுகள் அமைகின்றன.

4. அடிக்கடி வரும் கனவுகள்:

இவை பெரும்பாலும் கொடுங் கனவு வகை கருத்துருவையே கொண்டுள்ளது. சிற்சில மாற்றங்கள் இருக்கும். சில சமயம் நல்ல கனவுகளாகவும் இருக்கும். இக் கனவுகள் வாழ்வில் சரி செய்யப்படாத சில பிரச்சனைகளால் வருகிறது. அப்பிரச்சனைகளுக்கு விடை கண்டு தீர்த்து விட்டால் மீண்டும் வருவது நின்று விடலாம்.

5.எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள்:


இக்கனவின் போது ஒரு கோட்பாடாக மனது பல கருத்துக்களையும், நுண்காட்சிப் படிவுகளையும் பொருள் தரும்படியான திரை ஓட்டமாக மாற்றுகிறது. இதனால் எதிர் காலத்தில் என்ன நடக்கலாம் என்று ஓரளவுக்கு கணிக்க முடியும்.

6. காவியக் கனவுகள்:

இவை மிகவும் அழகாக, பிரம் மாண்டமாக அமைந்திருக்கும். இந்தக் கனவுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கும். இந்த கனவுகளில் தோன்றும் காட்சிகள் உண்மையிலேயே உள்ளது போலத் தோன்றும். இக் கனவு முடிந்து துயில் எழும்போது ஏதோ ஒன்றை கண்டுபிடித்தது போன்ற வியப்பு நமக்குள் எழும்.

7.நோய் நீக்கும் கனவு: இவ் வகைக் கனவுகள் கனவு காண்பவரின் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்களை சொல்கிறது. பண்டைய கிரேக்கர்கள் இதனை நோய் வருவதற்கு முன் வரும் செய்தியாக கருதுகின்றனர். ஆராய்ச்சி களில் ஆஸ்த்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற நோய் உடையவர்கள் நோய் தாக்குவதற்கு முன்பு ஒருவித எச்சரிக்கை கனவுகள் காண்கின்றனர் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கனவின் போது நமது உடல் உயிர் மற்றும் மனம், ஒன்றுக்கொன்று கருத்துக்களை பரிமாறிக் கொள்வதால் இது சாத்தியமாகிறது என்கின்றனர். இவ்வாறு நோய் வருவதை எச்சரிக்கை ஒலியாக உணர்த்துவது மட்டுமின்றி, அந்நோயை எவ்வாறு சரி செய்வது என்று கூட ஆலோசனையும் வழங்குவதுண்டு என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

8. பொய் விழிப்பு கனவுகள்:


நாம் சில சமயம் காலையில் துயில் கலைந்து எழுந்து, பல் துலக்கி, குளித்து, உணவு உண்டு முடித்து, வேலைக்கு சென்றது போல உணர்வோம். ஆனால் பிறகு தான் தெரியும் அது அத்தனையும் கனவு என்று! இதைத்தான்என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

சிக்மண்ட் ப்ராய்டு-(1856 -1939)


சிக்மண்ட் ப்ராய்டு உள்ளப் பகுப்பாய்வின் தந்தையாக கருதப்படுகிறார். அவர் “தி இன்டர்பிரடேசன் ஆப் டிரீம்ஸ் (Interpretation of Dreams) என்ற புத்தகத்தின் மூலம் இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.

நாம் செய்யும் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக நடப்பதில்லை. நமது அனைத்து எண்ணங்களையும் செயல்களையும் ஆழ்மனது கட்டுப்படுத்துகிறது.

இந்த நாகரீக உலகில் அனைவருடனும் ஒத்து வாழ நாம் பல உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியும், அடக்கியும் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆதலால் இவ்வகை உணர்ச்சிகள் வேறு சில வழிகளில் வெளிப்படுகின்றன. இவ்வாறு உணர்ச்சிகளை வெளிக் கொணரும் ஒரு வழியே கனவுகள் என்று ப்ராய்டு கூறுகிறார்.

நமது ஆழ்மனம் உணர்வுகளை குறியீட்டு மொழியில் (உருவக வடிவில்) வெளிப்படுத்துகிறது.

மரு. ப்ராய்டு மனதின் தன்மைகளை மூன்று வகைகளாக பிரிக்கிறார்.

1. இட் (Id) : இன்பம், விருப்புகள், உணர்ச்சிகள் மற்றும் விருப்பத்தீர்வு

2. ஈகோ (Ego): விழிப்பு நிலை, பகுத்தறிதல், தன்னிலை அறிதல், போன்றவை

3. சூப்பர் ஈகோ (Super Ego): இது இட் டினை தணிக்கை செய்து பகுத்தறிந்து ஈகோவினை வெளிக் கொணர்கிறது.

நாம் விழிப்பு நிலையில் இருக்கின்ற போது இட்- டின் உணர்வுகள் மற்றும் விருப்புகள் சூப்பர் ஈகோவினால் கட்டுப்படுத்தப் படுகின்றன. ஆனால் தூக்கத்தின் போது இது செயல்படுவதில்லை என்பதால் இந்த உணர்வுகள் கனவுகளாக வெளி வருகின்றன.

இட்- டின் உணர்வுகள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிப்பனவாக இருந்தால் அது தணிக்கை செய்யப்பட்டு, குறியீட்டு மொழிகளாக மாற்றி கனவுகளில் ஓட விடுகிறது. இதனால் இட் டின்உணர்வுகளும் வெளிப்படுகின்றன. தூக்கமும் கலைவதில்லை. சில சமயம் வரும், குழப்பக் கூடிய மற்றும் முழுமை பெறாத கனவுகளுக்கும் இந்த செயல் முறையே காரணம்.

எனவே கனவுகளை சரியாக புரிந்து கொள்வதன் மூலம் ஒரு மனிதனின் மனதை எளிதாக புரிந்து கொள்ளலாம். இதன் காரணமாகவே ப்ராய்டு கனவுகளை ஆழ்மனதின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள இட்டுச் செல்லும் இராஐ பாட்டைகள் என்று குறிப்பிடுகிறார்.

ப்ராய்டு கனவுகளில் வரும் உருவகங்களை 5 வகைகளாகப் பிரிக்கின்றார்.

 Via -நலம், நலம் அறிய ஆவல்.