தமிழ் இனத்தின் வரலாறு - (மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் - 105 )

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:37 | Best Blogger Tips
 
அமெரிக்கா இலங்கையிடம் தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. அப்போதுதான் இலங்கையில் பிரபாகரன் என்ற இளைஞரின் தலைமையில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது அமெரிக்காவிற்குத் தெரிய வந்தது.
கி.பி.1974- ல் முதன்முதலாக பொக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை செய்து அன்னை இந்திரா உலகை அதிர வைத்தார். இலங்கை வெலவெலத்துப் போனது. இதுதான் சாக்கென்று அமெரிக்கா பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. இந்தியர்கள் இந்திராவைக் கொண்டாடினாலும் கம்யுனிஸ்ட்டுகள் நெருக்கடியை உருவாக்கினார்கள்.

எப்படியெனில் சோனியாவைத் தங்கள் உளவாளியாக அனுப்பினாலும், அவருடைய கணவர் ராஜீவ் அரசியல் ஈடுபாடு இல்லாமல் பைலட் ஆசையில் சுற்றிக் கொண்டிருந்தார். இளைய மகன் சஞ்சய்தான் அம்மாவோடு அரசியலில் ஈடுபாடு காட்டினார்.
இதனால் சோனியாவால் எந்தத் தகவலையும் தெரிவிக்க இயலவில்லை. குவாத்ரோச்சி வெறுமனே விருந்தாளியாக வந்து போய்க் கொண்டிருந்தார்.

இதனால் மாற்று உளவாளியைத் தேடினார்கள். ஒருவரல்ல இரண்டு பேர் கிடைத்தார்கள். ஒருவர் சுப்ரமணிய சுவாமி, இன்னொருவர் சந்திரா சுவாமி. இவர்கள் மூலமாக எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து போராடத் தூண்டினார்கள்.

இந்த நேரத்தில் இலங்கை தமிழ் போராட்டக்காரர்களை கண்காணிப்பதற்காகக் கச்சத் தீவைக் குறி வைத்தது. தங்களுக்கு எல்லாமே இந்தியாதான் என்றும், விசுவாசமானவர்கள் என்றும் பொய்யாக நடித்து சாதுரியமாகப் பேசிக் கச்சத் தீவைத் தங்களின் பயன்பாட்டிற்குத் தருமாறுக் கெஞ்சினார்கள். அமெரிக்க நெருக்கடியில் இருந்த இந்திரா இலங்கையின் நயவஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாமல் நட்பு நாடு என்று நம்பி கச்சத் தீவைத் தாரை வார்த்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டு விட்டு அமைதியாகி விட்டார். காரணம் அப்போது அவர் ஒரு ஊழல் வழக்கில் மாட்டி, அதை விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டிருந்தது.
கருணாநிதியின் இந்த அமைதிதான் இன்று தமிழக மீனவர்கள் உயிரை இழப்பதற்கு முக்கியக் காரணம்.

சுப்ரமணிய சுவாமியின் வலையில் சிக்கிய எதிர்க் கட்சியினர் இந்திராவுக்கு எதிராகப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்கடிகளை எதிர் கொள்வதற்காக அன்னை இந்திரா " நெருக்கடி நிலை " பிரகடனம் செய்தார்.

நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது அரசு நிர்வாகம் சுறுசுறுப்பாக இயங்கியது. அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்குப் பணிக்கு வந்தார்கள்.

அரசியல்வாதிகள், அரசு ஊழியர்களுக்கு நெருக்கடி நிலை சிரமத்தைக் கொடுத்தது போன்று தோன்றினாலும், பொதுமக்களின் வரவேற்புக்கு உரியதாகவே இருந்தது.
. நெருக்கடி நிலை அமலில் இருந்த காலகட்டத்தில் சஞ்சய் நிறைய பேருக்கு கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்தார். அவர்கள் அனைவரும் குறைந்த பட்சம் ஆறேழு குழந்தைகளைப் பெற்றிருந்தனர்.

இந்தியாவில் பிரச்சினைகள் ஓய்ந்த பிறகு மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வந்தார். சஞ்சய்க்கும், மேனகாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

ராஜிவும், சஞ்சயும் தனித் தனியாக பயிற்சி விமானத்தில் பைலட்டாகப் பயிற்சி எடுத்தார்கள்.

இலங்கையில் நெருக்கடி அதிகரிக்க, அதிகரிக்க ஈழத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கும், தமிழகத்திற்கும் கொஞ்சம் கொஞ்சமாய் இடம் பெயர ஆரம்பித்தனர்.

அமெரிக்கா குவாத்ரோச்சியிடம் அழுத்தம் தர, அவன் சோனியாவிடம் பேசினான்.

சோனியா, சஞ்சய் இருக்கும்வரை தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றதும், அமெரிக்கா, சோனியாவின் உதவியுடன் சஞ்சயின் நடமாட்டத்தைக் கண்காணித்தது.

ஒருநாள் வழக்கம்போல் பைலட் பயிற்சிக்குச் சென்ற சஞ்சய் விமானம் (அமெரிக்கக் குண்டு) வெடித்து சிதறிப் போனார்.

சஞ்சயின் அதிரடிகளால் வெறுத்துப் போய் இந்திராதான் சதி செய்து கொன்று விட்டார் என்று வதந்தி பரப்பப்பட்டது.

மனமுடைந்த மேனகா, இந்திரா தடுத்தும் கேட்காமல் தனிக் குடித்தனம் போய் விட்டார்.

சோனியாவுக்கு உற்சாகம் பிறக்க, மாமியாரிடம் குழைந்து குலாவினார்.

மகன் மரணம், மருமகள் தனிக் குடித்தனம் என்று நொந்து போயிருந்த இந்திரா, சோனியாவின் கபட நாடகத்தைப் புரிந்து கொள்ளாமல் ஏமாற ஆரம்பித்தார்.

இலங்கையில் மேதகு பிரபாகரன் சரியான வழிகாட்டல் இல்லாமல் தவிக்க, உதவ முன்வந்தார் கண்டியில் அவதரித்த மனித தெய்வம் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். அவர்கள் பிரபாகரனை அழைத்துப் போய் அன்னை இந்திராவின் முன் நிறுத்தினார்.

அனைத்தையும் பரிவோடு கேட்ட இந்திரா " ரா " மற்றும் ராணுவ உயர் அலுவலர்களை அழைத்து பிரபாகரன் உள்ளிட்ட ஈழ இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், தேவையான உதவிகளையும் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் அனைத்துப் போராளிகள் குழுக்களும் தனித்தனியாகப் பயிற்சி எடுத்தார்கள். ஆனால் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் மட்டும் முறையாக அனைத்துப் போர்க்கலைகளையும் கற்றனர்.

LTTE இயக்கத்தின் "GOD MOTHER" அன்னை இந்திரா.
"GOD FATHER" வள்ளல் எம்.ஜி.ஆர்

தமிழ் இனத்தின் வரலாறு - (மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் - 105 ). - 
 
நன்றி வேலுமணி பழனி.
 
Via தமிழ் - Tamil