தர்பூசணியை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:53 | Best Blogger Tips
தர்பூசணியை ஃப்ரீஸரில் வைத்தால், பழத்தில் இருக்கும் தண்ணீர் ஃப்ரீஸ் ஆகி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போல் இருக்கும்.

நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பருகலாம்.

கருப்பஞ்சாறு கோடைக்கு ஏற்ற சிறந்த பானம். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொள்ளலாம்.

வியர்வையைப் போக்கி ஃப்ரஷ் ஆக இருக்க நான்கு சொட்டு எலுமிச்சம்பழச் சாறை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளித்துப் பாருங்கள்.

நுங்குகளை வாங்கி உரித்துக் கையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட இயற்கையான ஐஸ்க்ரீம் ரெடி.

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது நுங்கை மசித்துத் தடவுங்கள்.

நீராகாரம் அருமையான இயற்கையான பானம். காலையிலும் ஒரு டம்ளர், டிபன் சாப்பிட்டப் பிறகும் ஒரு டம்ளர் அருந்தலாம்.

கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் என்று ஏதாவது ஒன்றை தினமும் அவசியம் பருகுங்கள்.

வீட்டில் வெயில்படும் இடத்தில் பெரிய கார்டு போர்டு அட்டைப் பெட்டியை படிமானமாகச் செய்து பால்கனி, ஜன்னல் கம்பி வலைக்குள் செருகிவிட்டால் வீட்டிலுள்ளவர்கள் டி.வி. பார்க்கும் போது கிளார் அடிக்காமல் இருக்கும். குளுமையாகவும் இருக்கும்.

வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்ஸியில் அரைத்து கொதிக்க வைத்து பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட வயிற்று வலி பறந்து போகும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி கசகசாவும் போடலாம்.

வெயில் காலத்தில் மிக அதிகாலையில் அல்லது மாலையில் நன்றாக வெயில் தாழ்ந்த பிறகு செடிகளுக்கு நீர்விட வேண்டும். இதனால் நீண்ட நேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.

செடித் தொட்டிகளில் நீர் விட்டபின் ஒரு பாலிதீன் பேப்பரை சற்று இடைவெளி விட்டுப் பரத்தி ஒரு கல்லை வெயிட்டாக வைத்து விட்டால் எளிதில் நீர் ஆவியாகாது.

கோடை காலத்தில் வாரத்தில் ஒருநாள் இரவு "ஃப்ரூட் நைட்' என்று வைத்துக் கொள்ளவும். "ஃப்ரூட் சாலட்' சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும். சமையல் செய்யும் வேலையும் மிச்சமாகும்.

கோடை காலத்தில் வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்க கற்களை பாலிதீன் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருக்கும் மண், தூசி வடாமில் கலக்காது.

வெயில் காலத்தில் கார இனிப்புப் பண்டங்களை கேஸரோல், ஹாட்பாக்ஸ் இவற்றில் வைத்துவிடுங்கள். எறும்பு பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

மொட்டை மாடியிலும் முன் முற்றத்திலும் தென்னை ஓலையில் கொட்டகை கட்டிவிடுங்கள். இரவில் ஓலையில் நீர் தெளித்துவிட்டால் ஏ.சி.யில் இருப்பது போல இருக்கும்.
கோடை டிப்ஸ்
By -சி.ஆர்.ஹரிஹரன், சென்னை

தர்பூசணியை ஃப்ரீஸரில் வைத்தால், பழத்தில் இருக்கும் தண்ணீர் ஃப்ரீஸ் ஆகி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போல் இருக்கும்.



நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பருகலாம்.



கருப்பஞ்சாறு கோடைக்கு ஏற்ற சிறந்த பானம். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.



பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொள்ளலாம்.



வியர்வையைப் போக்கி ஃப்ரஷ் ஆக இருக்க நான்கு சொட்டு எலுமிச்சம்பழச் சாறை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளித்துப் பாருங்கள்.



நுங்குகளை வாங்கி உரித்துக் கையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட இயற்கையான ஐஸ்க்ரீம் ரெடி.



கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது நுங்கை மசித்துத் தடவுங்கள்.



நீராகாரம் அருமையான இயற்கையான பானம். காலையிலும் ஒரு டம்ளர், டிபன் சாப்பிட்டப் பிறகும் ஒரு டம்ளர் அருந்தலாம்.



கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.



மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் என்று ஏதாவது ஒன்றை தினமும் அவசியம் பருகுங்கள்.



வீட்டில் வெயில்படும் இடத்தில் பெரிய கார்டு போர்டு அட்டைப் பெட்டியை படிமானமாகச் செய்து பால்கனி, ஜன்னல் கம்பி வலைக்குள் செருகிவிட்டால் வீட்டிலுள்ளவர்கள் டி.வி. பார்க்கும் போது கிளார் அடிக்காமல் இருக்கும். குளுமையாகவும் இருக்கும்.



வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்ஸியில் அரைத்து கொதிக்க வைத்து பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட வயிற்று வலி பறந்து போகும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி கசகசாவும் போடலாம்.



வெயில் காலத்தில் மிக அதிகாலையில் அல்லது மாலையில் நன்றாக வெயில் தாழ்ந்த பிறகு செடிகளுக்கு நீர்விட வேண்டும். இதனால் நீண்ட நேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.



செடித் தொட்டிகளில் நீர் விட்டபின் ஒரு பாலிதீன் பேப்பரை சற்று இடைவெளி விட்டுப் பரத்தி ஒரு கல்லை வெயிட்டாக வைத்து விட்டால் எளிதில் நீர் ஆவியாகாது.



கோடை காலத்தில் வாரத்தில் ஒருநாள் இரவு "ஃப்ரூட் நைட்' என்று வைத்துக் கொள்ளவும். "ஃப்ரூட் சாலட்' சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும். சமையல் செய்யும் வேலையும் மிச்சமாகும்.



கோடை காலத்தில் வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்க கற்களை பாலிதீன் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருக்கும் மண், தூசி வடாமில் கலக்காது.



வெயில் காலத்தில் கார இனிப்புப் பண்டங்களை கேஸரோல், ஹாட்பாக்ஸ் இவற்றில் வைத்துவிடுங்கள். எறும்பு பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.



மொட்டை மாடியிலும் முன் முற்றத்திலும் தென்னை ஓலையில் கொட்டகை கட்டிவிடுங்கள். இரவில் ஓலையில் நீர் தெளித்துவிட்டால் ஏ.சி.யில் இருப்பது போல இருக்கும்.