பெண்களின் பாதுகாப்புக்கு தேவைப்படும் மொபைல் அப்ளிகேசன்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:59 | Best Blogger Tips
பெண்களின் பாதுகாப்புக்கு தேவைப்படும் மொபைல் அப்ளிகேசன்கள்

நண்பர்களே இந்த பதிவை அதிகம் பகிருங்கள் நட்புகளிடையே குறிப்பாக பெண்களிடம் .....இன்றைய கால சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பிற்கு உதவும் என்று நம்புவோம் .

தற்போதுள்ள சூழ்நிலைகளில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகவும் இன்றியமையாததாகும். பெண்கள் தான் இதைப்படிக்கவேண்டும் என்பது அல்ல. நீங்கள் ஆணாக இருந்தால் உங்கள் அன்னையோ, துணைவியோ, தோழியோ கூட அவசர நேரங்களில் இதைப் பயன்படுத்தலாமல்லவா?
நாங்கள் இங்கே வரிசைப்படுத்தியுள்ள இந்த சிறந்த அப்ளிகேசன்கள் உங்களுக்கு பக்கத்தில் உள்ளவர்கள், பிடித்தமானவர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு நீங்கள் ஆபத்தில் உள்ளீர்கள் என்பதைத் தெரியப்படுத்தும்.

1) பிசேஃப் [BeSafe]:

இது ஒரு GPS முறையைப்பயன்படுத்தும் பாதுகாப்பு அலாரம். இது ஆபத்து நேரங்களில் SOS என்ற குறுஞ்செய்தி முறை மூலமாக முன்னரே குறிப்பிட்ட தொலைப்பேசி எண்களுக்கு ஆபத்தை தெரியயப்படுத்தும்.

உங்களுக்கு பக்கத்தில் உள்ளவர்கள், பிடித்தமானவர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் தொலைப்பேசி எண்களைக்கூட பதிந்து வைத்துக்கொள்ளலாம்.

ஒரு சிவப்பு பொத்தான் போன்ற அமைப்பு திரையில் இருக்கும் அதை அழுத்தினால் உடனே SMS அல்லது கால் சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்லும்.

இதை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
https://play.google.com/store/apps/details?id=com.bipper.app.bsafe&hl=en



2) லைப் 360 பேமிலி லோக்கேட்டார் [Life 360 Family Locator]:

இதுவும் பிசேஃப் போன்றே GPS தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்துகிறது. இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தற்போதைய இடத்தை GPS, WiFi மற்றும் மொபைல் ட்ரையாங்குலேசன் உதவியுடன் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் தாண்டி சாதாரண மொபைல் போன் வைத்துள்ளவர்களும் பயன்படுத்தும் வகையில் SOS என்ற முறை மூலமாக ஆபத்து நேரங்களில் குறுஞ்செய்திகள் அனுப்பமுடியும்.

இதிலும் ஒரு பொத்தான் இருக்கும் அதை அழுத்தினாலே போதுமானது.

இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
google.com/store/apps/details?id=com.life360.android.safetymapd

3) சர்கிள்ஆஃப் 6: [Circle Of 6]

பெயரிலிருந்தே தெரிந்திருக்குமல்லவா? ஆம். இதில் ஒரு சிலரை மட்டும் கொண்ட ஒரு குழுவை உருவாக்கிக்கொள்ளலாம். இந்த குழுவில் மொத்தம் 6 நம்பத்தகுந்த நண்பர்கள் இருப்பது நலம்.

நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது முன்னதாகவே தெரியப்படுத்தப்படும். ஆனால் இந்த அப்ளிகேஷன் ஐஒஸ் பயன்படுத்தும் ஐபோன்களில் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
https://itunes.apple.com/us/app/circleof6/id507735256?mt=8


4) பைட்பேக்: [FightBack]

இந்த அப்ளிகேஷன் இந்தியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இது எல்லா போன்களுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஜாவா வசதிகொண்ட போன்களிலும் பயன்படுத்த முடியும்.

இது GPS, SMS, லொகேசன் மேப்ஸ், GPRS, ஈமெயில் மற்றும் உங்கள் பேஸ்புக் கணக்கு ஆகியவற்றிலுள்ள பிடித்தமானவர்களுக்கு ஆபத்து நேரங்களில் தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்தும்.

இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
http://www.fightbackmobile.com/welcome


5) SOS விசில்: [SOS Whistle]

இந்த அப்ளிகேசன் SOS மூலமாக குருஞ்ச்செய்திகளோ அல்லது நண்பர்களுக்கோ தெரியப்படுத்தாது. இதுவொரு சாதாரண செயல்பட்டைக்கொண்டது.

அதாவது நீங்களோ அல்லது உங்களைச்சார்ந்த பெண் ஒருவரோ ஆபத்தில் இருக்கும்பொழுது இந்த அப்ளிகேசன் விசில் போன்ற பலமான சப்தத்தை எழுப்பும். இதன்மூலம் அருகில் உள்ளவர்கள் உதவி செய்யலாம்.

இதை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
https://play.google.com/store/apps/details?id=jp.co.comp.android.whistle&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImpwLmNvLmNvbXAuYW5kcm9pZC53aGlzdGxlIl0


தேங்காய் உடைப்பதன் தத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:56 | Best Blogger Tips
தேங்காய் உடைப்பதன் தத்துவம்

ஆன்மீகம் கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

நன்றி:ஆன்மீகம் இணையம்.
(www.yarl.com
)
தேங்காய் உடைப்பதன் தத்துவம் 

ஆன்மீகம் கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

நன்றி:ஆன்மீகம் இணையம். 
(www.yarl.com)

தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள். . .!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:51 | Best Blogger Tips
தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள். . .!!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பூவரசன் வேர் 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்
சிறுநாகப் பூ 15 கிராம்
வெடியுப்பு 10 கிராம்
புனுகு 10 கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.
தோல் நோய்களைப் போக்கும் கஸ்தூரி மஞ்சள். . .!!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

* பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

* ஆண்கள் கஸ்தூரி மஞ்சளை முகத்தில் பூசக் கூடாது. முடி வளருவது அங்கங்கு தடைப்படும்.

* கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் 50 கிராம்
பூவரசன் வேர் 30 கிராம்
வெள்ளெருக்கன் வேர் 25 கிராம்
சிறுநாகப் பூ 15 கிராம்
வெடியுப்பு 10 கிராம்
புனுகு 10 கிராம்

இவற்றை நீர் தெளித்து மை போல அரைக்க வேண்டும். சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் அரைத்து வைத்ததைப் பரவலாகப் பூச வேண்டும். இத் துணியை நன்றாய்க் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் போது சுருட்டு சுற்றும் அளவுக்குத் துணியைக் கிழித்து எடுக்க வேண்டும். கிழித்த துணியைச் சுருட்டுப் போல் சுருட்டி நெருப்பில் காட்டினால் புகை வரும். அப்புகையை மூக்கினால் சுவாசிக்க வேண்டும். இதைக் காலை, மாலை இரு வேளைகளும் சுவாசித்தால் மூக்கு சம்பந்தமான எல்லா நோய்களும் குணமாகும்.

* கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

* கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

* சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாரா.

கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:30 | Best Blogger Tips
கொழுப்பை குறைக்கும் 12 இந்திய உணவுகள்!!

உலகம் முழுவதுமே இன்று ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு மூல காரணம் கொழுப்பு சத்து உடலில் அதிகம் சேர்வதுதான். இத்தகைய கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் ஆலிவ் எண்ணை, சோயா என்று தேடிப்போக வேண்டாம். கொழுப்பை குறைக்கக் கூடிய ஆற்றல் நமது இந்திய உணவுகளிலேயே இருக்கிறது என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.

இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு மற்றும் உவர்ப்பு என அனைத்து சுவைகளையும் உங்களது உணவில், நாளொன்றுக்கு ஒரு சுவை என்ற விகிதத்திலாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது ஆயுர்வேதம். உங்களது எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே:

1) மஞ்சள்: மஞ்சளை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அதில் உள்ள குர்க்குமின் எனப்படும் ஒருவகை வேதிப்பொருள் கெட்ட கொழுப்பை கரைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.அத்துடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தம் உறைவதை தடுப்பதோடு இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

2) ஏலக்காய்: வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரித்து கரைக்க உதவுகிறது. மேலும் ஜீரணத்திற்கும் மிகச்சிறப்பான பங்காற்றுகிறது.

3) மிளகாய்: மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பை எரிப்பதாக கூறப்படுகிறது.அத்துடன் அது வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுவதோடு, மிளகாயை சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே கலோரிகளையும் எரிக்கிறது.

4) கறிவேப்பிலை: கறிவேப்பிலையை உங்களது உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால், அது உங்களது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சு பொருட்களையும் அது வெளியேற்றிவிடுகிறது.நீங்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் போன்ற பானங்களுடன் அருந்தவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணவோ செய்யலாம்.

join nagapattinamnews@gmasil.com

5) பூண்டு: கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகைகளில் ஒன்று பூண்டு.இதில் உள்ள சல்பர் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதோடு கொழுப்பையும், ஊளை சதைகளையும் குறைக்கிறது.

6) கடுகு எண்ணெய்: மற்ற சமையல் எண்ணைகளுடன் ஒப்பிடுகையில் இது கொழுப்பு குறைந்த எண்ணை ஆகும். அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ள இது கொழுப்பை குறைப்பதோடு, இதயத்திற்கும் மிகவும் நல்லது.

7) உளுந்தம் பருப்பு: உளுந்தம் பருப்பில் வைட்டமின் ஏ,பி,சி, மற்றும் ஈ ஆகியவை ஏராளமாக உள்ளதோடு, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு சத்து உடையது என்பதால் உடல் மெலிய பரிந்துரைக்கப்படும் உணவு வகைகளில் உளுந்தும் ஒன்று.மேலும் புரதம் மற்றும் நார்சத்தும் அதிகம் உள்ளதோடு, ரத்தத்திலும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

8) தேன்: உடல் பருமனுக்கு இது ஒரு வீட்டு வைத்தியமாகவே உபயோகப்படுகிறது.உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுவதோடு, வழக்கமான செயல்பாடுகளுக்கு தேவையான சக்திக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.தினமும் காலையில் 10 கிராம் அல்லது ஒரு மேஜைக்கரண்டி தேனை சுடு நீருடன் கலந்து அருந்தலாம்.

9) மோர்: உயிர் ஆகாரமாக கருதப்படும் மோர் இலேசான புளிப்பு சுவையுடையது.8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரிகளும் கொண்ட பாலுடன் ஒப்பிடுகையில் இதில் வெறும் 2.2 கிராம் கொழுப்பும், 99 விழுக்காடு கலோரியும் உள்ளது. அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் கொண்ட மோரை தினமும் அருந்துவதால் உடல் எடை குறையும்.

10) சிறு தானியங்கள்: சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளதோடு, கொழுப்பை உறிஞ்சவும்,பித்த நீரை பிரிக்கவும் உதவுவதோடு, கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.

11) பட்டை, கிராம்பு: இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் குளுகோஸ் அளவையும், கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.

வேக வைத்து சாப்பிட வேண்டிய 12 உணவுகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:29 | Best Blogger Tips
வேக வைத்து சாப்பிட வேண்டிய 12 உணவுகள்!!!

உணவுகளில் சிலவற்றை வேக வைக்காமல் சாப்பிடலாம். ஆனால் அனைத்து உணவுகளையுமே அவ்வாறு சாப்பிட முடியாது. ஒரு சில உணவுகள எப்படி சாப்பிட வேண்டுமோ, அவ்வாறு தான் சாப்பிட வேண்டும். அதிலும் வேக வைத்த உணவுகள் மட்டும் தான் சுவையாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வேக வைத்தால் தான் நல்லது. மேலும் அதில் உள்ள சத்துக்களை எளிதாக பெறலாம். உதாரணமாக அரிசி, பாஸ்தா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை வேக வைக்காமல் சாப்பிட முடியாது. மேலும் இவற்றையெல்லாம் நீரில் கொதிக்க வைத்து தான் சாப்பிட முடியும். இதனால் தான் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.

காய்கறிகள் மட்டுமின்றி அசைவ உணவுகளான சிக்கன், முட்டை மற்றும் கடல் உணவுகள் போன்றவற்றையும் நன்றாக வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது. மேலும் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது தான் சிறந்த வழி. அதிலும் வேக வைப்பதில் எந்த உணவுகளை எந்த அளவு வேக வைத்து சாப்பிடுகிறோமோ, அதைப் பொறுத்தும் ஆரோக்கியம் உள்ளது. முக்கியமாக பொரித்து சாப்பிடும் உணவுகளை விட, வேக வைத்து சாப்பிடும் உணவுப் பொருட்களில் கொழுப்புகள் குறைவாக இருக்கும்.

எனவே இப்போது எந்த உணவுகளை வேக வைத்து சாப்பிட வேண்டும் என்பதையும், அவற்றில் சுவையை அதிகரிக்க எதையெல்லாம் அதனுடன் சேர்த்து சமைக்கலாம் என்பதையும் பார்ப்போமா!!!

வேக வைத்த உருளைக்கிழங்கை பொதுவாக மசித்து தான் பயன்படுத்துவோம். அதிலும் அதனை பூண்டு சேர்த்து வதக்கி சமைத்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

நன்கு வேக வைத்த முட்டையை பிரட் உடன் சாப்பிட நன்றாக இருக்கும். அதிலும் அதனுடன் மிளகுத்தூளை தூவி சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும்.

சைனீஸ் உணவுகளான நூடுல்ஸ் அல்லது பாஸ்தாவை சமைக்கும் போது, முதலில் நீரில் போட்டு வேக வைக்க வேண்டும். அதிலும் அதில் ஆலிவ் எண்ணெய் சிறிது சேர்த்து சமைத்தால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். பின் அதனை மற்ற பொருட்கள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

சிக்கனை வேக வைக்கும் போது, அதனை அளவுக்கு அதிகமான வேக வைத்துவிட வேண்டாம். மேலும் வேக வைக்கும் போது, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து, பின் அந்த நீரில் சூப் போட்டு குடிக்கலாம்.

பீன்ஸை பச்சையாக சாப்பிட முடியாது. ஆகவே அதனை வேக வைத்து, சுவைக்கு தேவையான சாஸ் மற்றும் இதர பொருட்கள் சேர்த்து, ருசியாக சமைத்து சாப்பிடலாம்.

பருப்பு வகைகளை நன்கு நீரில் போட்டு கொதிக்க வைத்து, வேக வைக்க வேண்டும். பின் அதில் மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்தால் சுவையோ சுவை தான்.

அரிசியை தண்ணீர் போட்டு வேக வைத்து சாப்பிடும் போது, அதில் சற்று அதிகமான தண்ணீர் விட்டு, வேக வைத்து, பின் எஞ்சிய நீரை வடித்துவிட்டால், அதில் உள்ள ஸ்டார்ச் வெளியேறிவிடும். மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமலும் தடுக்கலாம்.

கடல் உணவுகளை நன்கு வேக வைத்து சாப்பிட்டால் தான் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் தங்கும். மேலும் அவ்வாறு வேக வைப்பதால், அதில் உள்ள சில கடல் கனிமங்கள் அழிந்துவிடும். பின் அவற்றை குழம்பு, சூப் என்று செய்து குடிக்கலாம்.

இனிப்பான சோளத்தை வேக வைக்க கூடாது. ஆனால் மற்ற முதிர்ந்த சோளத்தை நன்கு வேக வைத்து, அதில் உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து சாப்பிட, அருமையாக வேண்டும்.

பொதுவாக ப்ராக்கோலி மற்றும் இதர இலைக் காய்கறிகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த காய்கறியை ஓரளவு வேக வைத்து சமைத்து, சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.

மாட்டிறைச்சியில் கொழுப்புகள் அதிகம் இருக்கும். ஆனால் இதில் உள்ள கலோரியை சேமிக்க, எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக, வேக வைப்பது நல்லது.

அனைத்து கீரைகளையுமே நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் என்பதில்லை. ஆனால் பசலைக் கீரையை நன்கு வேக வைக்க வேண்டும். அதேப்போல் கடுகுக்கீரை, வெந்தயக்கீரை மற்றும் கேல் போன்றவற்றையும் நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

பிளம்ஸ் பழத்தின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:29 | Best Blogger Tips
பிளம்ஸ் பழத்தின் மருத்துவ குணங்கள்

பல்வேறு சுவைகளிலும், பல்வேறு பெயர்களிலும் வலம் வரும் பிளம்ஸ் பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும்.

இப்பழத்தில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகளில் காணப்படுகிறது.

1. குறிப்பாக இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.

2. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு பொருட்களை கரைக்கும் குணமுடையது.

3. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும், தசைகளின் இறுக்கத்தை குறைத்து மென்மையடைய செய்யும்.

join nagapattinamnews@gmail.com

4. நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து, மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.

5. நினைவாற்றலைத் தூண்டுவதுடன், கண்பார்வை தெளிவுறச் செய்யும்.

6. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இதயத்திற்கு சிறந்த டானிக்காக செயல்படுகிறது.
பிளம்ஸ் பழத்தின் மருத்துவ குணங்கள் 

பல்வேறு சுவைகளிலும், பல்வேறு பெயர்களிலும் வலம் வரும் பிளம்ஸ் பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும்.

இப்பழத்தில் வைட்டமின் ஏ சத்துக்கள் அதிகளில் காணப்படுகிறது.

1. குறிப்பாக இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.

2. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு பொருட்களை கரைக்கும் குணமுடையது.

3. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும், தசைகளின் இறுக்கத்தை குறைத்து மென்மையடைய செய்யும்.

join nagapattinamnews@gmail.com

4. நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து, மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.

5. நினைவாற்றலைத் தூண்டுவதுடன், கண்பார்வை தெளிவுறச் செய்யும்.

6. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இதயத்திற்கு சிறந்த டானிக்காக செயல்படுகிறது.

ஏழரை சனிக்கு சரியான பதிகாரம் வில்வ இலை!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:21 | Best Blogger Tips


ஏழரை சனிக்கு சரியான பதிகாரம் வில்வ இலை!
===================================

வில்வ இலைக்கு அதிக சக்தி உண்டு. மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை போக்கும். விந்தணு நீர்த்த தன்மை பிரச்சினை இருப்பவர்கள் வில்வ இலையை சாப்பிட்டாலே போதும்.அதற்காகத்தான், அந்த காலத்தில் பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் பெருமாள் கோயிலில் கொடுப்பது துளசி, சிவன் கோயிலில் கொடுப்பது வில்வம். இவை இரண்டுக்குமே அதீத சக்தி உண்டு.

பிரசாதங்கள் என்று கோயிலில் கொடுப்பவை அனைத்துமே மூலிகைகள்தான். ராஜ ராஜன் காலத்தில் எல்லாம் மூலிகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் எல்லாம் உண்டு. சில கோயில்களில் எல்லாம் அபிஷேகங்கள் இருக்காது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள லிங்கம் மண்ணால் ஆனது என்றும் சொல்லப்படும். அதாவது மண்ணை மூலிகைச் சாறுகள், வில்வக் குழம்புகளை வைத்து செய்யப்பட்டது. அதனால்தான் அவற்றிற்கு அபிஷேகங்கள் செய்வதில்லை.

வில்வத்தின் வடிவத்தைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாகப் பிரிந்திருக்கும். சூலம் என்று எடுத்துக்கொடுக்கலாம். மூன்று தெய்வங்களை குறிப்பதாகவும், நங்கூரத்தின் வடிவிலும் இருப்பதாக கூறலாம்.

சாதாரணமாக சிவனுக்கு எத்தனை ரத்தினம் அணிவித்தாலும், வில்வத்தால் பூஜை செய்தால் அதீத சக்தி கிட்டும். வில்வத்திற்கு அவ்வளவு மகிமை.

மேலும் நாம் தினமும் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் கிட்டும். ரத்தத்தை சுத்திகரிப்பது, விந்தணு நீர்த்தத் தன்மை போன்ற பல பிரச்சினையை சீர் செய்யும். அம்மன் கோயிலில் கொடுக்கப்படும் வேப்பிலைக்கும் அதிக மருத்துவ குணம் உள்ளது.

வில்வத்தால் சிவனை அர்சிக்கும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும், சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் வில்வம் தான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்
ஏழரை சனிக்கு சரியான பதிகாரம் வில்வ இலை! 
===================================

வில்வ இலைக்கு அதிக சக்தி உண்டு. மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை போக்கும். விந்தணு நீர்த்த தன்மை பிரச்சினை இருப்பவர்கள் வில்வ இலையை சாப்பிட்டாலே போதும்.அதற்காகத்தான், அந்த காலத்தில் பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஏனென்றால் பெருமாள் கோயிலில் கொடுப்பது துளசி, சிவன் கோயிலில் கொடுப்பது வில்வம். இவை இரண்டுக்குமே அதீத சக்தி உண்டு.

பிரசாதங்கள் என்று கோயிலில் கொடுப்பவை அனைத்துமே மூலிகைகள்தான். ராஜ ராஜன் காலத்தில் எல்லாம் மூலிகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் எல்லாம் உண்டு. சில கோயில்களில் எல்லாம் அபிஷேகங்கள் இருக்காது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள லிங்கம் மண்ணால் ஆனது என்றும் சொல்லப்படும். அதாவது மண்ணை மூலிகைச் சாறுகள், வில்வக் குழம்புகளை வைத்து செய்யப்பட்டது. அதனால்தான் அவற்றிற்கு அபிஷேகங்கள் செய்வதில்லை. 

வில்வத்தின் வடிவத்தைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாகப் பிரிந்திருக்கும். சூலம் என்று எடுத்துக்கொடுக்கலாம். மூன்று தெய்வங்களை குறிப்பதாகவும், நங்கூரத்தின் வடிவிலும் இருப்பதாக கூறலாம். 

சாதாரணமாக சிவனுக்கு எத்தனை ரத்தினம் அணிவித்தாலும், வில்வத்தால் பூஜை செய்தால் அதீத சக்தி கிட்டும். வில்வத்திற்கு அவ்வளவு மகிமை.

மேலும் நாம் தினமும் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் கிட்டும். ரத்தத்தை சுத்திகரிப்பது, விந்தணு நீர்த்தத் தன்மை போன்ற பல பிரச்சினையை சீர் செய்யும். அம்மன் கோயிலில் கொடுக்கப்படும் வேப்பிலைக்கும் அதிக மருத்துவ குணம் உள்ளது.

வில்வத்தால் சிவனை அர்சிக்கும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும், சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் வில்வம் தான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்