தொப்பை குறைக்கும் அன்னாசி பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:24 | Best Blogger Tips
தொப்பை குறைக்கும் அன்னாசி பற்றிய தகவல்...

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்

1. அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறதது.

2. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
இன்று தொப்பை குறைக்கும் அன்னாசி பற்றிய தகவல்...

ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .

இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்

1. அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறதது. 

2. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

முகபரு மறைய சில குறிப்புகள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:53 | Best Blogger Tips

இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.

சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.

பருக்கள் மறைய

பொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.

முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.

செம்பருத்திப் பூ ரோஜா மொட்டுவெள்ளரிக்காய் சாறு
இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு போன்றவை நீங்கும்.


வேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். முடி உதிர்வது குறையும். புழுவெட்டு நீங்கும்.
முகபரு மறைய சில  குறிப்புகள் !!

இயற்கை அழகே அழகு.  சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை  பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.

சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.

பருக்கள் மறைய

பொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது.  மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.  உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.

முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன்  பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும்.  அது காய்ந்தபின் முகத்தைப்  பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும்.  இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.

செம்பருத்திப் பூ ரோஜா மொட்டுவெள்ளரிக்காய்  சாறு
இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு  போன்றவை நீங்கும்.


வேப்பிலை, மருதோன்றி இலை, இரண்டையும் எடுத்து அதனுடன் சிறு துண்டு வசம்பு சேர்த்து மை போல் அரைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால்,  பேன், பொடுகு  நீங்கும்.  முடி உதிர்வது குறையும்.  புழுவெட்டு நீங்கும்.

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:45 | Best Blogger Tips
காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி
===============================================

பொதுவாகவே ராகு காலம், யமகண்டம் சமயங்களில் எந்த ஒரு நல்ல செயல்களும் செய்யலாகாது என்பது ஹிந்து சாஸ்திரப்படி நம்ப கூடிய ஐதிகம், ராகு மற்றும் கேது அவர்களின் வரலாறு பற்றி தெளிவாக கடந்த கட்டுரையில் விளக்கி இருக்கிறேன், இந்த கட்டுரையில் ராகு காலம் மற்றும் எம கண்டம் எப்படி கணக்கிடுவது என்பதை பற்றி பா

ப்போம்.....

சூரிய உதயத்துக்கும், அஸ்தமனத்துக்கும் இடைப்பட்ட நேரமே சரியான பகல் பொழுது, இதையே பஞ்சாங்கத்தில் அகஸ் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த பகல் பொழுதை (அகஸ்) எட்டாக பிரித்து அதில் வரும் பாகத்தை கிழமை அடிபடையில் ராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை கணக்கிட வேண்டும்.

தினசரி நாட்காட்டியில் குறிக்கப்பட்டுள்ள இந்த காலங்கள் பொதுவாக ஒன்றரை மணி நேரம் குறிக்கப்பட்டு இருக்கும், இதை அப்படியே பின்பற்றுவது சரியல்ல.பொதுவாக இந்த காலங்கள் ஆறு மணி சூரிய உதயத்தையும் மாலை ஆறு மணி சூரிய அஸ்தமனத்தையும் வைத்து கணக்கிடப்பட்டு வழக்கில் உள்ளது. இந்த காலங்கள் அந்தந்த ஊரின் அகஸ் (பகல் பிரமாணம்) மற்றும் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு தான் கணக்கிட வேண்டும். பஞ்சாங்கங்களில் சூரிய உதயமும் அஸ்தமனமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இப்பொழுது ராகு காலம் எப்படி கணக்கிடுவது என்பதை பற்றி பார்ப்போம் :
------------------------------------------------------------------------------------------


ராகு காலம் என்பது
ஞாயிறு அன்று எட்டாவது பாகத்திலும்,
திங்கள் - இரண்டாவது பாகத்திலும்
செவ்வாய்- ஏழாவது பாகத்திலும்
புதன் - ஐந்தாவது பாகத்திலும்
வியாழன் - ஆறாவது பாகத்திலும்
வெள்ளி - நான்காவது பாகத்திலும்
சனி - மூன்றாவது பாகத்திலும் வரும்,

இதை நினைவில் கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிய முறை,

ராகு காலத்தை கணக்கிட கிழ் வரும் வாக்கியத்தை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வாக்கியம்.

"திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்லுதல் ஞாயமா?"

மேற்படி வாக்கியத்திலுள்ள சொற்களின் முதல் எழுத்து அந்த எழுத்தில் தொடங்கும் கிழமையைக் குறிக்கும்.

இதன்ப்படி திங்கள் - இரண்டாவது பாகத்திலும், சனி மூன்றாவது பாகத்திலும், வெள்ளி நான்காவது பாகத்திலும், புதன் ஐந்தாவது பாகத்திலும், வியாழன் ஆறாவது பாகத்திலும், செவ்வாய் ஏழாவது பாகத்திலும், ஞாயிறு எட்டாவது பாகத்திலும் வரும் என நினைவில் கொள்ளலாம்.

இதன் முலம் ராகு காலம் ஒரு குறிப்பிட்ட கிழமை இந்த பாகத்தில் தான் வரும் என கூறும் நம்மால், இந்த குறிப்பிட்ட நிமிடங்களில் தான் வரும் என நிலையாக சொல்ல முடியாது, ஏனெனில் அது சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பொறுத்து மாறுபடும், இதை எப்படி கணக்கிடுவது என்பதை பின்வரும் எடுத்துக்காட்டு முலம் பார்ப்போம்

எ.கா: வரும் திங்கட்கிழமை(12 -11-2012), கோவையில் சூரிய உதயம் : 6.15, அஸ்தமனம் 6.39 எனில்

அகசு = 6.15 – 6.39 = 12.24 ம/நி(பகல் பொழுது)

12.24 ஐ நிமிடமாக்க = 744, இது அகசு அதாவது நிமிடங்களில்

744 ஐ எட்டால் வகுக்க = 93 நிமிடம் அதாவது 1 .33 நிமிடங்கள்.

திங்கள் அன்று ராகு காலம் 2 வது பாகத்தில் உள்ளது எனவே முதலில் 1 வது பாகத்திற்கான முடிவை அறிய

1 * 93 நிமிடங்கள் = 1 மணி 33 நிமிடங்கள்

முடிவு நேரம் 2 * 93 நிமிடங்கள் = 3 மணி 6 நிமிடங்கள்

இதனுடன் சூரிய உதயத்தை கூட்டி வருவது அன்றைய ராகு காலமாகும்

அன்றைய சூரிய உதயம் 6.15 + 1.33 = 7. 48 முதல்
6.15 + 3.06 =9.21 வரை ஆகும்.

முடிவு: கோவையில் (12 -11-2012) அன்று ராகு காலம் 7. 48 முதல் 9.21 வரை ஆகும்.

எமகண்டம் கணக்கிடும் முறை
======================

எமகண்டம் என்பது
ஞாயிறு அன்று - ஐந்தாவது பாகத்திலும்,
திங்கள் - நான்காவது பாகத்திலும்
செவ்வாய்- மூன்றாவது பாகத்திலும்
புதன் - இரண்டாவது பாகத்திலும்
வியாழன் - ஒன்றாவது பாகத்திலும்
வெள்ளி - ஏழாவது பாகத்திலும்
சனி - ஆறாவது பாகத்திலும் வரும்,

இதை நினைவில் கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிய முறை,

எமகண்டத்தை கணக்கிட கிழ் வரும் வாக்கியத்தை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வாக்கியம்.

"விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்".

மேற்படி வாக்கியத்திலுள்ள சொற்களின் முதல் எழுத்து அந்த எழுத்தில் தொடங்கும் கிழமையைக் குறிக்கும்.

இதன்ப்படி வியாழன்- ஒன்றாவது பாகத்திலும், புதன் - இரண்டாவது பாகத்திலும், செவ்வாய் மூன்றாவது பாகத்திலும், திங்கள் நான்காவது பாகத்திலும், ஞாயிறு- ஐந்தாவது பாகத்திலும், சனி- ஆறாவது பாகத்திலும், வெள்ளி- ஏழாவது பாகத்திலும் வரும் என நினைவில் கொள்ளலாம்.

இதன் முலம் எமகண்டம் ஒரு குறிப்பிட்ட கிழமை இந்த பாகத்தில் தான் வரும் என கூறும் நம்மால், இந்த குறிப்பிட்ட நிமிடங்களில் தான் வரும் என நிலையாக சொல்ல முடியாது, ஏனெனில் அது சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பொறுத்து மாறுபடும், இதை எப்படி கணக்கிடுவது என்பதை பின்வரும் எடுத்துக்காட்டு முலம் பார்ப்போம்

எடுத்துக்காட்டாக : வரும் திங்கட்கிழமை(12 -11-2012), கோவையில் சூரிய உதயம் : 6.15, அஸ்தமனம் 6.39 எனில்

அகசு = 6.15 – 6.39 = 12.24 ம/நி(பகல் பொழுது)

12.24 ஐ நிமிடமாக்க = 744, இது அகசு அதாவது நிமிடங்களில்

744 ஐ எட்டால் வகுக்க = 93 நிமிடம் அதாவது 1 .33 நிமிடங்கள்.

திங்கள் அன்று எமகண்டம் 4 வது பாகத்தில் உள்ளது, எனவே முதலில் 3வது பாகத்திற்கான முடிவை அறிய

3* 93 நிமிடங்கள் = 4 மணி 39 நிமிடங்கள்

முடிவு நேரம் 4 * 93 நிமிடங்கள் = 6 மணி 12 நிமிடங்கள்

இதனுடன் சூரிய உதயத்தை கூட்டி வருவது அன்றைய எமகண்டம் காலமாகும்

அன்றைய சூரிய உதயம் 6.15 + 4.39 = 10. 54 முதல்
6.15 + 06.12 =12.27 வரை ஆகும்.

முடிவு: கோவையில் (12 -11-2012) அன்று எமகண்டம் 10. 54 முதல்12.27 வரை ஆகும்.

குளிகன் காலம் கணக்கிடுவது மிக மிக சுலபம்
==================================

நாம் எந்த கிழமைக்கு கணக்கிட வேண்டுமோ அந்த கிழமையில் இருந்து சனி கிழமை எத்தனை நாட்கள் வருகிறதோ அந்த பாகம் தான் குளிகன் காலம்.

எடுத்துக்காட்டாக : திங்கள் கிழமை குளிகன் கணக்கிட வேண்டும் என்றால் திங்கள் தொடங்கி சனி வர 6 நாட்கள் ஆகும், அப்பொழுது 6 வது பாகத்தில் குளிகன் காலம் வரும்,

இதன் முலம் குளிகன் ஒரு குறிப்பிட்ட கிழமை இந்த பாகத்தில் தான் வரும் என கூறும் நம்மால், இந்த குறிப்பிட்ட நிமிடங்களில் தான் வரும் என நிலையாக சொல்ல முடியாது, ஏனெனில் அது சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பொறுத்து மாறுபடும், இதை எப்படி கணக்கிடுவது என்பதை பின்வரும் எடுத்துக்காட்டு முலம் பார்ப்போம்

எடுத்துக்காட்டாக : வரும் திங்கட்கிழமை(12 -11-2012), கோவையில் சூரிய உதயம் : 6.15, அஸ்தமனம் 6.39 எனில்

அகசு = 6.15 – 6.39 = 12.24 ம/நி(பகல் பொழுது)

12.24 ஐ நிமிடமாக்க = 744, இது அகசு அதாவது நிமிடங்களில்

744 ஐ எட்டால் வகுக்க = 93 நிமிடம் அதாவது 1 .33 நிமிடங்கள்.

திங்கள் அன்று குளிகன் 6 வது பாகத்தில் உள்ளது, எனவே முதலில் 5வது பாகத்திற்கான முடிவை அறிய

5* 93 நிமிடங்கள் = 7 மணி 45 நிமிடங்கள்

முடிவு நேரம் 6 * 93 நிமிடங்கள் = 9 மணி 18 நிமிடங்கள்

இதனுடன் சூரிய உதயத்தை கூட்டி வருவது அன்றைய குளிகன் காலமாகும்

அன்றைய சூரிய உதயம் 6.15 + 7.45 = 14. 00 முதல்
6.15 + 09.18 =15.33 வரை ஆகும்.

முடிவு: கோவையில் (12 -11-2012) அன்று குளிகன் 14. 00 முதல்15.33 வரை ஆகும்.


இந்த கட்டுரையில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டவும், தவறை திருத்தி கொள்கிறேன்.

நன்றி
-- பிரவீன் சுந்தர் பு.வெ

மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:43 | Best Blogger Tips
மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்
===========================================

உணவுப்பழக்கம் மாறியதாலேயே உடலில் புதிது புதிதாய் நோய்கள் தோன்றுகின்றன. சரிவிகித சத்துணவு சாப்பிடாத காரணத்தினால் தான் இன்றைக்கு பெரும்பாலோனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

வெந்தையம்
==========

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும். ஊறவைத்த விதைகளை களியாக செய்து சாப்பிடலாம்.

இயற்கை ஜூஸ்
============

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை ஜூஸ் பருகுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு எற்றது. ஆன்டி ஆக்ஸி டென்ட்கள் நிரம்பிய காய்கறிகளை ஜூஸ் ஆக எடுத்து பருகலாம். பாகற்காய் ஜூஸ், திராட்சை ஜூஸ் குடிக்கலாம். மாமரத்தின் இலைகளை பறித்து வேகவைத்து அதனை வடிகட்டி அந்த சாறினை ஜூஸ் ஆக பருகலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

கற்றாழை ஜெல்
============

நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகச்சிறந்த நிவாரணி. பிரிஞ்சி இலையை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், இரண்டு டீஸ்பூன் சோற்றுக் கற்றாழை ஜெல் கலந்து சாப்பிடலாம். தினசரி மதிய உணவுக்குப் பின்னரும், இரவு உண வருந்துவிட்டும் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு கட்டுப்படும்.

சப்பாத்தி சாப்பிடுங்க
===============

நீரிழிவு நோயாளிகள் தினசரி சப்பாத்தி சாப்பிடவேண்டும். இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சேயா போன்றவைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

மூலிகை கசாயம்
============

வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.
மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்
===========================================

உணவுப்பழக்கம் மாறியதாலேயே உடலில் புதிது புதிதாய் நோய்கள் தோன்றுகின்றன. சரிவிகித சத்துணவு சாப்பிடாத காரணத்தினால் தான் இன்றைக்கு பெரும்பாலோனோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மருந்து மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் நீரிழிவை கட்டுப்படுத்த நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

வெந்தையம்
==========

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த மருந்து வெந்தையம். வெந்தையத்தை இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சரியான அளவில் நடைபெறும். ஊறவைத்த விதைகளை களியாக செய்து சாப்பிடலாம்.

இயற்கை ஜூஸ்
============

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கை ஜூஸ் பருகுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு எற்றது. ஆன்டி ஆக்ஸி டென்ட்கள் நிரம்பிய காய்கறிகளை ஜூஸ் ஆக எடுத்து பருகலாம். பாகற்காய் ஜூஸ், திராட்சை ஜூஸ் குடிக்கலாம். மாமரத்தின் இலைகளை பறித்து வேகவைத்து அதனை வடிகட்டி அந்த சாறினை ஜூஸ் ஆக பருகலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

கற்றாழை ஜெல்
============

நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை மிகச்சிறந்த நிவாரணி. பிரிஞ்சி இலையை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள், இரண்டு டீஸ்பூன் சோற்றுக் கற்றாழை ஜெல் கலந்து சாப்பிடலாம். தினசரி மதிய உணவுக்குப் பின்னரும், இரவு உண வருந்துவிட்டும் சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு கட்டுப்படும்.

சப்பாத்தி சாப்பிடுங்க
===============

நீரிழிவு நோயாளிகள் தினசரி சப்பாத்தி சாப்பிடவேண்டும். இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள். கோதுமை மட்டும் இல்லாமல், கொண்டைக்கடலை, சேயா போன்றவைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு சப்பாத்தி செய்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

மூலிகை கசாயம்
============

வேப்பிலை, துளசி, வில்வம், நெல்லி போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த நிவாரணம் தரும் மூலிகைகள். இவைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். அதை காய்ச்சி வடிகட்டி அதன் தண்ணீரை மூலிகை நீராக பருகலாம்.

நாகப்பட்டினம்:-

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:42 | Best Blogger Tips
நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகபட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.

நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது 'நாவல் பட்டிணம்' -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:- 

நாகப்பட்டினம் ஒரு வரலாற்றுச் சிறப்புக்கொண்ட இடமாகும். பண்டைத் தமிழ் நாடுகளில் ஒன்றான சோழ நாட்டில் ஒரு பகுதியாகிய நாகப்பட்டினம், முற்காலச் சோழர் காலத்திலேயே ஒரு முக்கிய துறைமுக நகராக விளங்கியது. பிற்காலத்தில், இராஜராஜ சோழனின் விருதுப்பெயர்களில் ஒன்றான சத்திரிய சிகாமணி என்னும் பெயரில் அமைந்த பகுதியின் தலைமை இடமாகவும் இது விளங்கியது. நாகபட்டினம் முற்காலத்தில் சோழகுலவல்லிப் பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. 

கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்மா நாட்டு வரலாற்று நூலொன்றில் நாகபட்டினம் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இதே நூலில், அசோகப் பேரரசன் கட்டிய புத்த விகாரம் ஒன்று இங்கே இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனப் பயணியான ஹியுவென் சாங் (Hiuen Tsang) என்பவனும் தனது நூலில் இங்கிருந்த புத்த விகாரம் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். பண்டைய புத்த இலக்கியங்களில், நாகபட்டினம், படரிதித்த என்ற பெயரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று நாகபட்டினத்தின் ஒரு பகுதியின் பெயரான அவுரித்திடல், படரிதித்த என்பதன் திரிபாக இருக்கலாமென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். படரிதித்த என்பது இப் பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஒரு பழமரம் ஆகும்.

நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது 'நாவல் பட்டிணம்' -கப்பல்களின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.

அதலைக்காய்களின் ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ பயன்கள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:37 | Best Blogger Tips

அதலைக்காய்களின் ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ பயன்கள் !!

நம் நாவில் பட்டவுடன், முதலில் எந்த உணர்ச்சியை நாவிற்கும், மூளைக்கும் உணர்த்துகிறதோ, அந்த உணர்வே நாம் உட்கொள்ளும் பண்டத்தின் சுவையாகும். இவை நாவிற்கு ருசியை தருவதுடன், உண்பதற்கு இனிமையையும், மனதிற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஊட்டத்தையும், நுண்கிருமிகளுக்கு எதிர்ப்பையும் தருபவையே. கசப்பு சுவை, ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலுக்கு கெடுதல் விளைவிக
்கும் நுண்கிருமிகளை வெளியேற்றி, உடல் எரிச்சலை தணித்து, அதிகரித்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. அது மட்டுமின்றி, சளி, அஜீரணம் போன்ற நாட்பட்ட தொல்லைகளை நீக்குவதுடன், வாய் மற்றும் உணவுப்பாதைகளிலுள்ள அழுக்குகளையும் கழிவாக வெளியேற்றும் தன்மை உடையன.

இதுபோன்ற கசப்பு தன்மையுடைய, மருந்தாக பயன்படும் உணவு தான் “அதலைக்காய்!’
“மொமார்டிகா டியுபரோசா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட “குக்கர்பிட்டேசியே’ குடும்பத்தை சார்ந்த அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான பண்புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

செடி அமைப்பு

அதலைச்செடிகள் பொதுவாகத் தரையில் படர்பவை. சில வேளைகளில் வயல் வரப்புகளில் இவற்றை வளர்க்கும்போது வேறு செடிகளிலோ கொம்புகளிலோ பற்றிப் படர்கின்றன. . மலர்கள் மெல்லிய மஞ்சள் நிறத்தில் நுனிவளர் தார் அமைப்பில் (racemose) இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்மலரிலும் இரண்டு மகரந்த உறுப்புகள் இருக்கின்றன. பெண் மலர்த்தார் 28 மி.மீ. நீளத்தில் ஒரே ஒரு மலரைத் தாங்கி நிற்கும். காய்கள் 20-25 மி.மீ. நீளம் வரை இருக்கின்றன. காய்களின் கரும்பச்சை நிறப் புறத்தோலில் எட்டு நுண்ணிய வரைகள் இருக்கும்.விதைகள் நீளவாக்கில் 4.6 மி.மீ. அளவில் முட்டை வடிவில் வழுவழுப்பாகவும் பளிச்சென்றும் இருக்கின்றன.

அதலைக்காய்களின் ஊட்டச்சத்துகள்

கூறு அதலைக்காய் பாகற்காய்
அண்மைப் பகுதிக்கூறுகள் (100 கிராமில் பகுதி கிராம்)
நீர்ச்சத்து 84.30 83.20
நார்ச்சத்து 6.42 1.70
மாவுச்சத்து 12.60 10.60
புரதம் 2.15 2.10
உணவு ஆற்றல் (கிலோ காலரி/100g) 73.00 60.00
ஊட்டப்பொருள் (100 கிராமில் பகுதி மி.கி.)
கால்சியம் 72.00 23.00
பொட்டாசியம் 500.00 171.00
சோடியம் 40.00 2.40
இரும்பு 1.70 2.00
செப்பு 0.18 0.19
மங்கனீசு 0.32 0.08
துத்தநாகம் 2.82 0.46
பாசுப்பரசு 0.46 38.00
உயிர்ச்சத்து சி 290.00 96.00
β கரோட்டீன் 0.01 126.00

தோட்டக்கலை ஆய்வாளர்களான பார்வதி, குமார் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் தங்களது பல்வேறு ஆய்வுகள் வழியாக அதலைக்காய்களின் கூறுகளைப் பிரித்து அவற்றின் விகித அளவுகளை வெளியிட்டுள்ளனர்.இவ்வாராய்ச்சியின் வழியாக அதலைக்காய்களில் உள்ள நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், புரதம் போன்றவற்றின் அளவுகள் ஏறத்தாழ கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்காயை முழுவதும் எரித்த சாம்பலைக் கொண்டு இவற்றிலுள்ள வேதிப் பொருட்களின் விகிதத்தையும் அளந்துள்ளனர். இதே முறைகளில் முன்னதாக பாகற்காய்களின் மீது நடத்திய ஆய்வு முடிவுகளையும் ஒப்பீட்டுக்காகத் தந்துள்ளனர்.

மருத்துவத் திறம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் அதலை விளையும் பிற பகுதிகளிலும் நெடுங்காலமாக நீரிழிவு, குடற்புழு போன்றவற்றுக்கான நாட்டுமருந்தாகவும், சில வேளைகளில் கருக்கலைப்புக்கும் அதலைக்காய்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.மருந்தாய்வர்கள் இவற்றைக் கொண்டு மாந்தரிலும் பிற விலங்குகளிலும் ஆய்வு செய்துள்ளனர். நீரில் கரைத்த அதலைக்காய்கள் நீரிழிவுக்கு ஆட்பட்ட முயல்களின்குருதியில் இருந்த குளுக்கோசின் அளவைக் குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.இச்செடிகளின் கிழங்குகளை அரைத்து எத்தனாலில் கரைத்து எலிகளுக்குப்புகட்டியபோது இதயத்தில் குருதிக்குழாய் அடைப்புகளின் போது ஏற்படும் திசு இறப்பைக் குறைப்பதாகவும் அறிந்துள்ளனர். கார்பன் டெட்ரா குளோரைடினாலும்பாராசிட்டமாலினாலும் விளையும் கல்லீரல் பாதிப்பையும் இவை தடுக்க உதவுகின்றன என்று அறியப்பட்டுள்ளது.

இவற்றின் இலைகளில் இருந்து பெறப்பட்ட மருந்து யானைக்கால் நோயைஉண்டாக்கும் கியூலெக்சு வகை கொசுக்களை எதிர்க்கவல்லது என்றும் அறிந்துள்ளனர்

துவரம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து, குழைய வேகவைத்து கொள்ள வேண்டும். அத்துடன் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிய அதலைக்காய் – 10 கலந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பூண்டு – 1 பல், தக்காளி – 2,சிறிய வெங்காயம் – 5 அனைத்தையும் மைய நசுக்கி, சட்டியில் தேவையான நீர் சேர்த்து நன்கு வேக வைத்து, அத்துடன் பருப்பு மற்றும் “அதலைக்காய்’ கலவையை கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, இறுதியில் சோம்பு, லவங்கப்பட்டை மற்றும் கறிவேப்பிலையை தாளித்து போட்டு, இறக்கி வைத்து கொள்ள வேண்டும்.

வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதை குடித்து வர வயிற்றில் நுண்புழுக்கள், குடற்கிருமிகள் ஆகியன நீங்கும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச்சத்து குறையும். நாட்பட்ட புண்கள் ஆறும்.