மனித நுரையீரலின் ஒப்பற்ற பணிகள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:16 | Best Blogger Tips


மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் ப ரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்
வதும் இதன் மற்ற பணிகளாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்ஸிஜனை உள் எடுத்துக் கொள்வதற்கும் கார்பன்-டை- ஆக்ஸைடை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் 22,000 முறை மூச்சு விடுகிறான். கிட்டத்தட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறான்.

நுரையீரலின் செயல்பாடு

நுரையீரல் எவ்வாறு தன்னுடைய பணியை திறம்பட செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று மூச்சுக் குழாய் (Trachea) வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து வலது, இடது நுரையீரலுக்குச் செல்கிறது. நுரையிரலுக்குள் நுழைந்தவுடன் மூச்சுக்குழல் ஒவ்வொன்றிலிருந்தும் கிளைகள் பிரியும். பின்னர் அவற்றிலிருந்து இன்னும் சிறு கிளைகள் என நிறைய பிரிவுகள் ஒரு மரத்தின் பெரிய கிளையிலிருந்து பரந்து பிரிந்து சின்னச்சின்ன தளிர்கள் வருவதுபோல் பிரிகின்றன. அதனாலேயே இதனை மூச்சுமரம் (Respiratory tree) என்று அழைக்கின்றோம். முதல் நிலை மூச்சுக் குழல் (Primary bronchi), இரண்டாம் நிலை மூச்சுக் குழல், மூன்றாம் நிலை மூச்சுக்குழல், மூச்சுக் குறுங்குழல் (bronchiole) என்று படிப்படியாகப் பிரிந்து கடைசியாக சின்னச் சின்ன பலூன்கள் மாதிரி தோன்றும் குட்டிக்குட்டி அறைகளுக்குள் இந்த குழல்கள் நீட்டிக் கொண்டிருக்கும். இவற்றை காற்று நுண்ணறைகள் (Alveoli) என்று அழைக்கிறோம். நாம் இழுக்கும் மூச்சுக்காற்று மூச்சு மரம் வழியாக காற்று நுண்ணறைகளுக்குள் வந்துவிடும்.

உடலில் பல பாகங்களிலும் இருந்து பயன்படுத்தப்பட்ட ரத்தம் இதயத்தின் வலது வெண்டிரிக்கலை அடையும். அங்கிருந்து நுரையீரல், தமணி மூலம் நுரையீரலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. நுரையீரல் தமணியும், வலது கிளை, இடது கிளை, என்று இரண்டாகப் பிரிந்து இரண்டு நுரையீரலுக்கும் செல்கிறது. இதுவும் பலமுறை கிளைகளாகப் பிரியும். இப்படிப் பிரியும்போது காற்று நுண்ணறைகளின் பக்கத்தில் தமணிகளின் மிக மிகச் சிறிய கிளைகள் அமைந்திருக்கும். இந்தச் சின்ன தமணிக் கிளைகள்தான் தந்துகிகள் (Capillaries) எனப்படுகிறது.
காற்று நுண்ணறை பக்கத்திலேயே தந்துகிகள் இரண்டின் சுவர்களும் மிக மிக நுண்ணியவையாக இருக்கும். அடுத்தடுத்து நுண்ணறைக்குள் காற்று நிறைந்திருக்கும் தந்துகிக்குள் ரத்தம் நிறைந்திருக்கும்.
வெளியிலிருந்து மூச்சுக்குழல் மூலம் உள்ளிழுக்கப்பட்ட காற்றில் நிறைய ஆக்ஸிஜன் இருக்கும். எனவே, நுண்ணறைக்குள்ளும் அதே அளவு ஆக்ஸிஜன் இருக்கும். தந்துகியில் உள்ள ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு குறைவு. கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகம். உடலுக்கு வேண்டாத உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய மற்ற சில பொருட்களும் தந்துகியில் உண்டு.

இந்த நிலையில் நுண்ணறை – தந்துகி சுவர்களின் வழியாக ஒரு பரிமாற்றம் நடக்கிறது. நுண்ணறையில் அடர்த்தியாக இருக்கும் ஆக்ஸிஜன் தந்துகிக்குள் பாயும். தந்துகியில் அடர்த்தியாக இருக்கும் கார்பன்டை ஆக்ø-ஸடு நுண்ணறைக்குள் பாயும். இதுதான் வாயுப் பரிமாற்றம் (Exchange & gases). இதைத்தான் ரத்த சுத்திகரிப்பு என்று அழைக்கிறோம்.

ஆக்ஸிஜன் ஊட்டப்பட்ட ரத்தம் நுரையீரலிலிருந்து சிரைகள் மூலமாக இதயத்தின் இடது வெண்டிரிக்கிளுக்குள் எடுத்துச் செல்லப் படுகிறது. அங்கிருந்து மீண்டும் உடலின் பல பாகங்களுக்கு தமனிகள் மூலம் இந்த சுத்த ரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது.

நுரையீரலைச் சுற்றி இரண்டு உறைகள் உள்ளன.

1. வெளிப்படலம் (Outer pleura)
2. உள்படலம் (Inner pleura)
இந்த இரண்டு படலங்களுக்கும் இடையே ஒரு இடம் உண்டு. அதற்கு ஃப்ளூரல் இடம் என்று பெயர். இதனுள் மிகச் சிறிய அளவு ஃப்ளூரல் திரவம் இருக்கும். இந்தத் திரவம்தான் சுவாசத்தின் போது நுரையீரல்களின் அசைவினால் உராய்வு ஏற்படாமல் தடுக்கிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்தி சீராக வைப்பதே முகுளப்பகுதி. அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 18 முதல் 20 சுவாசம் என சீராக வைப்பது மூளையில் உள்ள முகுளத்தின் வேலை.

மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக 6 லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின் அளவு 5 லிட்டர்தான். எப்போதும் நுரையீரலுக்குள்ளே இருந்துகெண்டிருக்கும் காற்றின் அளவு 1 லிட்டர்.
பொதுவாக நுரையீரலில் சுரக்கும் சளி போன்ற நீர்மம் சில தூசிகளை அகற்றி வெளியேற்றும். இதுபோல் மூச்சுக் குழாய்களில் மேல் சிலியா என்ற பொருள் இருக்கும். இதுவும் மிக நுண்ணிய தூசியைக் கூட அகற்றிவிடும்.
இது மூச்சுக் குழாய்களில் வரும் தூசியை மேல்நோக்கி திருப்பி அனுப்பிவிடும். நாம் அறியாமலே சில சமயங்களில் அதை விழுங்கிவிடுவோம். உடல் நலம் சரியில்லாமல் போனால் மட்டுமே அவை சளியாக மூக்கின் வழியாக வெளியேறும். இதையும் தாண்டி ஏதேனும் தூசு உள்ளே நுழைந்தால் இருமல், தும்மல் முதலியவற்றால் வெளியேற்றப் பட்டுவிடும்.

நுரையீரலின் பணிகள்

காற்றில் உள்ள ஆக்ஸிஜனை (ஆக்ஸிஜன்= உயிர்வளி, பிராணவாயு) இரத்தத்தில் சேர்ப்பதும், இரத்ததில் உள்ள கார்பன்-டை ஆக்ஸைடை (கரியமில வாயு) பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.
இதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருந்து இதயத்தை அதிர்வுகளிலிருந்து காப்பாற்றுகிறது.
சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது, வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்கச் செய்வது போன்ற உடலுக்கு உயிர்தரும் வேலைகளை நுரையீரல் செய்து வருகிறது.
நுரையீரல் பாதிப்புஉலகில் இலச்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு அதாவது சிலிகா, ஆஸ்பெட்டாஸ், கந்தகம், போன்றவற்றைப் பயன்படுத்தும் தொழிற் சாலைகளில் பணி புரிபவர்களின் நுரையீரல்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.
புகைபிடிப்பது

புகை பிடிக்கும்போது நிறைய கரித் துகள்கள் (Carbon particles) நுரையீரலுக்குள் சென்று அங்கேயே படிந்து விடுகின்றன. இதனால் ஆக்ஸிஜன்- கார்பன்டை ஆக்ஸைடு பரிமாற்றம் தடைபடுகிறது. மற்றும் சிகரெட், சுருட்டு, இவற்றிலுள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து கனிமப் பொருள்களின் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, ரத்தக் குழாய்களின் அடைப்பை உண்டாக்குகிறது. புகைப் பழக்கத்தால் மூச்சுக்குழல் அலர்ஜி, காற்றறைகளின் சுவர்கள் சிதைந்துபோதல், எம்ஃபசிமா, நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உண்டாகின்றன. புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, பக்கத்தில் இருப்பவர்களுக்கும் (Passive smoking) இதே தீங்குகள் நேரிடும்.

நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள்

இருமல்
மூச்சு வாங்குதல்
மூச்சு இழுப்பு
நெஞ்சுவலி
ஹீமாப்டிஸிஸ் (இருமும்போது ரத்தம் வெளியேறுதல்)
நுரையீரலைத் தாக்கும் சில முக்கிய நோய்கள்
மூச்சுக்குழாய் அலர்ஜி(Bronchitis), நுரையீரல் அலர்ஜி (Pneumonia), காற்றறைகள் சிதைந்து போதல்(Emphysema), மூச்சுக்குழல்கள் சுருங்கிக் கொள்ளுதல் (Asthma).

நுரையீரலை பாதுகாக்க சில எளிய வழிகள்

· தூசு நிறைந்த பகுதிகளுக்கு செல்லும் போது மூக்கில் துணியைக் கட்டிக்கொள்வது (Mask) நல்லது.
· பிராணயாமம், நாடி சுத்தி, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்றவற்றை தினமும் கடைப்பிடிப்பது.
· புகைப் பிடிப்பதை தவிர்ப்பது
· உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சாப்பிடுவது

இன்றைய சூழ்நிலையில் மாசடைந்த காற்று அதிகம் இருப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலும் அதிகம் இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் மினரல் வாட்டர் பாட்டிலைப் போல் ஆக்ஸிஜனை பாக்கெட்டுகளில் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்நிலை மாற சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் பசுமை நிறைந்த பகுதிகளாகவும் மாற்றினாலே போதும்.. ஆரோக்கிய வாழ்வைப் பெற்றிட முடியும்.

பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:12 | Best Blogger Tips
பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்

பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. இந்த பூசணிக்காயை சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும். பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல்,நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
பூசணிக்காயின் மருத்துவக் குணங்கள்

பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. இந்த பூசணிக்காயை சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், இரத்தசுத்தியாகும். பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல்,நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

எந்த உணவில் லிமிட் வேணும் தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:11 | Best Blogger Tips

எந்த உணவில் லிமிட் வேணும் தெரியுமா?

இன்றைய அவசர காலத்தில் எந்த ஒரு ஆரோக்கியமான உணவையும் தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொறுமை யாருக்கும் இல்லை. அதனால் நிறைய மக்கள் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் அவ்வாறு ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உணவில் சேர்ப்பதால், இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்றவை ஏற்பட்டு, இதனால் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றன.

இவை அனைத்திற்கும
் காரணம் நாம் உண்ணும் உணவில் சரியான கவனம் இல்லாததே ஆகும். மேலும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் ஒரு சில உணவுகளை எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி வாங்கி சாப்பிட்டுவிடுகிறோம். அவ்வாறு கட்டுப்பாடு இல்லாததால், பலருக்கு திருமணத்திற்கு முன்னரே பல நோய்கள் வந்துவிடுகின்றன. அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியாமல் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர்.

அதற்காக எந்த ஒரு உணவையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லவில்லை, உண்ணும் உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்று தான் சொல்றோம். அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இருந்தால், எந்த ஒரு நோயும் உடலை தாக்காது. அதிலும் நமது முன்னோர்கள் சொல்லும் ஒரு பழமொழியான "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான்" என்று சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அளவோடு சாப்பிட்டால், வளமோடு வாழலாம். இப்போது எந்த உணவுகளில் கட்டுப்பாடு வேண்டும் என்று பார்ப்போமா!!!

காப்ஃபைன்

நிறைய ஆய்வில் காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலுக்கு கேடு விளையும் என்று சொல்கிறது. ஆனால் அந்த பொருட்களை குறைந்த அளவில் சாப்பிட்டால், எந்த ஒரு தீமையும் ஏற்படாது. அதுவே அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, தூக்கமின்மை ஏற்படும். அதிலும் இது ஒரு அடிமையாக்கும் பொருள் என்றும் சொல்லலாம்.

கோலா

கார்போனேட்டட் பானமான கோலாவில் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. மேலும்அவற்றில் சர்க்கரை மற்றும் அடிமையாக்கும் பொருள் அதிகம் உள்ளது. இவற்றால் வயிற்றில் எரிச்சல் ஏற்படுவதோடு, எலும்புகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே இந்த வகையான கார்போனேடட் பானங்களை அளவாக பருகுவது நல்லது.

வெண்ணெய்

வெண்ணெயில் அதிக அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆகவே இதனை ஒரு நாளைக்கு 1 டீஸ்பூன் மட்டும் உணவில் சேர்த்தால் போதுமானது.

பாஸ்ட் ஃபுட் பர்க்கர்

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கலோரிகள், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை பாஸ்ட் ஃபுட் கடைகளில் சுவைக்காக அதிக ஆரோக்கியமற்ற பொருட்களை சேர்த்து தயாரித்து விற்பதை வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டிலேயே காய்கறிகளை பயன்படுத்தி, செய்து சாப்பிடலாம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

இந்த மாதிரியான இறைச்சியில் நைட்ரேட்ஸ் அதிகம் உள்ளது. இது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பொருள். அதுமட்டுமல்லாமல் அதில் சாச்சுரேடட் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. ஆகவே அத்தகைய இறைச்சியை அதிகம் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட உணவுகளான சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்களில் மிகவும் குறைவான அளவிலேயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே அவற்றில் ஒன்றான சர்க்கரையை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, பற்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் மாவில் எந்த ஒரு நார்ச்சத்தும். எனவே அதனை அதிக அளவில் சாப்பிடுவது நல்லது.

காய்கறி எண்ணெய்

சமையலில் பயன்படுத்தும் காய்கறி எண்ணெயில் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் விரைவில் எடை அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாமல், அவற்றை உணவில் சேர்த்தால், இதய நோய், புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிலம் இந்த எண்ணெயை குழந்தைகளுக்கு உணவில் தினமும் 3-4 டீஸ்பூன் சேர்த்தால் போதுமானது.

பயனுள்ள அழகுக் குறிப்புக்கள்………..

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:08 | Best Blogger Tips
பயனுள்ள அழகுக் குறிப்புக்கள்………..

* சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.

* முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.

* வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.

* அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும்.

* மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால்,செம்பட்டை முடி கருமையாக மாறும்.

* கணினி, வெல்டிங், வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் பறந்துபோய்விடும், கண்களின் சிவப்பு.

* சிறிதளவு பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், கால்களிலுள்ள வெடிப்பு மறைந்துவிடும்.

* வெள்ளை மிளகை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ) பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

* ஒரு நாளைக்கு 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், ( அதாவது நினைத்தபோதெல்லாம் தண்ணீர் குடிப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். ) உதட்டில் வெடிப்பு வராது. காலையில் எழுந்தவுடனும், மாலையிலும் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் உதட்டில் வெடிப்பைப் பார்க்க முடியாது.
பயனுள்ள அழகுக் குறிப்புக்கள்………..

* சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உறைத்து பூசி வந்தால், முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.

* முருங்கைப் பிசினை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.

* வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும்.

* அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும்.

*  மரிக்கொழுந்து இலையையும் சில ஆவாரை இலைகளையும் சம அளவு எடுத்து அரைத்து தலையில் தடவி வந்தால்,செம்பட்டை முடி கருமையாக மாறும்.

* கணினி, வெல்டிங், வெயில் இவற்றில் வேலை செய்பவர்கள் பலருக்கு கண்கள் தக்காளிப் பழம் போல் சிவந்து காணப்பட்டால், வைத்தியம் வேறு ஒன்றுமில்லை. தக்காளிதான். தினம் இரண்டு தக்காளி வீதம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பத்து நாட்களில் பறந்துபோய்விடும், கண்களின் சிவப்பு.

*  சிறிதளவு பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து வெடிப்பு வந்த பகுதிகளில் தடவி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், கால்களிலுள்ள வெடிப்பு மறைந்துவிடும்.

* வெள்ளை மிளகை ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ) பசும்பாலில் அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

* ஒரு நாளைக்கு 10 அல்லது 12 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், ( அதாவது நினைத்தபோதெல்லாம் தண்ணீர் குடிப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். ) உதட்டில் வெடிப்பு வராது. காலையில் எழுந்தவுடனும், மாலையிலும் கொஞ்சம் வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் உதட்டில் வெடிப்பைப் பார்க்க முடியாது.

முடக்கு வாதம் இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:07 | Best Blogger Tips

முடக்கு வாதம் இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க...

இன்றைய காலத்தில் எந்த ஒரு நோயும் விரைவில் உடலை தாக்குகிறது. அதிலும் சில நேரங்களில் அதிகமாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்து விட்டால், ஆங்காங்கு வலிகள் ஏற்படும். இதற்கு உடலில் உள்ள எலும்புகளுக்கு போதிய சத்துக்கள் இல்லை என்பது அர்த்தம். ஆகவே உண்ணும் உணவில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது. அதிலும் சிலருக்கு மூட்டுகள் மட்டும் அதிக வலியுடன் இருக்
கும். அவ்வாறு வலி ஏற்பட்டால், எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும். அப்படி உங்களுக்கு நீண்ட நாட்கள் வலி இருந்தால், முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) உள்ளது என்று அர்த்தம்.

முடக்கு வாதம் என்பது நாள்பட்ட மூட்டுவலி. அதாவது இந்த நோய் வந்தால் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப் பகுதி மற்றும் திசுக்களை பாதித்து, அதன் செயல்பாடுகளை குறைத்துவிடும். அதிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களை விட, மூன்று மடங்கு அதிகமாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இந்த முடக்கு வாதம் நுரையீரல், இதயத்தை சுற்றியிருக்கும் பெரிகார்டியம், நுரையீரலைச் சுற்றியுள்ள ப்ளியூரா, கண்ணின் வெள்ளை பகுதியான ஸ்கிளிரா போன்ற இடங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த முடக்கு வாதத்தை சரிசெய்ய நிறைய சிகிச்சைகள் உள்ளன.

சரி, இப்போது அந்த முடக்கு வாதம் எந்தெந்த இடங்களை எல்லாம், தாக்குமென்று பார்ப்போமா!!!

முழங்கால்கள்

முழங்கால்களில் வீக்கம் ஏற்பட்டால் நடக்கவே முடியாது. இவை அடிக்கடி ஏற்படுவதற்கு அந்த இடத்தில் உள்ள மூட்டுகளுக்கான திரவம் அதிக அளவில் சுரப்பதால் வீக்கம் ஏற்பட்டு, கடுமையான வலி வருகிறது. அதிலும் இது அடிக்கடி முட்டியில் இடித்தாலோ அல்லது முட்டிக்கால் போடுவதால், அதிகம் ஏற்படுகிறது.

தோள்பட்டை மற்றும் முழங்கை

எப்போதும் முடக்கு வாதத்தில் பாதிக்கப்படும் இடங்களில் முக்கியமான ஒரு பகுதி தான் தோள்பட்டை. இந்த வலி ஏற்பட்டால், எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாது. எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. ஏன் கையை கூட அசைக்க முடியாத நிலையில் நீண்ட நாட்கள் வலி ஏற்படும்.

கண்கள்

முடக்கு வாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் பெரும்பாலும் வறட்சியுடன் காணப்படும். மேலும் மற்ற கண் பிரச்சனைகளான கருவிழியில் வீக்கம் அல்லது கண்ணின் வெள்ளை பகுதிக்கு செல்லும் இரத்த குழாய்களில் வீக்கம் போன்றவையும் இதற்கு காரணங்களாகின்றன. அந்த வீக்கம் கண்களில் சிவப்பு நிறத்தில் வீக்கத்துடன் காணப்படும்.

கழுத்து மற்றும் தாடை

சில நேரங்களில் கழுத்து நிறைய வலியுடன் இருக்கும். இவ்வாறு வலியானது நீண்ட நாட்கள் ஏற்பட்டால், கழுத்துடன் இணைந்துள்ள தாடையிலும் வலி ஏற்படும்.

நுரையீரல் மற்றும் இதயம்

இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டால், சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, அவையே அனீமியாவை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு சரியான இரத்த ஓட்டமில்லாமல், அதைச் சுற்றியுள்ள பகுதியில் வீக்கம், இதய நோய் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இந்த முடக்கு வாதம் வந்தால், உடல் எடை குறைந்துவிடும்.

கைகள் மற்றும் மணிக்கட்டு

முடக்கு வாதம் கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் கூட அதிகம் ஏற்படும். அதிலும் அந்த வலி வந்தால், கை விரல்களை சரியாக மடக்கவோ, கைகளை சுழற்றவோ முடியாது. அதிலும் இது ஏற்படுவதற்கு கைகள் எப்போதும் ஒரே நிலையில் நீண்ட நேரம் இருந்தால், சரியான இரத்த ஓட்டம் இல்லாமல், அந்த இடத்தில் புண் அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும்.

பாதம் மற்றும் கணுக்கால்

இந்த நோய் வந்தால், முதலில் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்று தான் பாதம் மற்றும் கணுக்கால். இந்த இடத்தை தான் முதலில் முடக்கு வாதம் தாக்கும். இவை வந்தால், அதிக வலியுடன், நடக்கக்கூட முடியாமல் இருக்கும்.
— 

சரும பிரச்சனைகள் எதுவும் வராமலிருக்க என்ன பண்ணலாம்?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:59 | Best Blogger Tips
சரும பிரச்சனைகள் எதுவும் வராமலிருக்க என்ன பண்ணலாம்?

அழகை விரும்பாதவர்கள இந்த உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சருமம் அழகாக இருந்து, ஆரோக்கியமாக இருந்தால், அந்த அழகு நிச்சயம் வேஸ்ட் தான். அதிலும் தற்போதுள்ள இளம் பெண்கள் பிம்பிள் எனப்படும் முகப்பரு, வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நமது சருமத்தின் இயற்கைத் தன்மையே காரணமாகும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தான் மிகுந்த பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். சரி, இப்போது அந்த எண்ணெய் பசை சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பார்ப்போமா!!!

முகப்பரு

பொதுவாக முகப்பருவானது டீனேஜ் பருவத்தில் தான் வரத் தொடங்கும். ஏனெனில் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் ஏற்படுகிறது. ஆகவே இந்த முகப்பரு வராமலிருக்க க்ரீம்களை பயன்படுத்துவதை விட, ஒரு சில நல்ல உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதற்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், பிஸ்கட், ஸ்வீட், கேக், குளிர் பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிலும் கொக்கோ நிறைந்த உணவுகளான டீ, காபி போன்றவற்றை அளவாக குடிக்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை, பால், புரோட்டீன் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 4-5 முறை முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிக்க வேண்டும். முகப்பரு காரணமாக கூட ஸ்கால்ப்பில் பொடுகு வரக்கூடும். ஆகவே எப்போது கூந்தலை கூத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நிறமூட்டல்

சருமத்தில் ஆங்காங்கு புள்ளிகள் போன்று காணப்படுகிறதா? அப்படியெனில் உடலில் புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஆகவே இநத் குறைபாட்டினால், சருமத்தில் உள்ள நிறமிகள் ஆங்காங்கு தங்கி, புள்ளிகள் போன்று காணப்படுகின்றன. அதிலும் இந்த பிரச்சனை கர்பபமாக இருக்கும் போது ஏற்பட்டால், அது பிரசவத்திற்கு பின் உண்ணும் வைட்டமின் உணவால் சரியாகிவிடும். மேலும் அவை மசாஜ் செய்தால், முற்றிலும் போய்விடும்.

கரும்புள்ளிகள் - வெள்ளை புள்ளிகள்

சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் தான் வெள்ளை மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. முக்கியமாக மூக்கு, உதட்டிற்கு கீழ் மற்றும் தாடை போன்ற இடங்களில் தான் வரும். இந்த பிரச்சனை நீங்குவதற்கு குறைந்த ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிடுவது, வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிப்பது போன்றவற்றால் சரியாகிவிடும். மேலும் இந்த பிரச்சனையை அழகு நிலையங்களுக்குச் சென்றால், அதற்காக உள்ள சிறப்பு சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.
இந்த வகையான பிரச்சனைகள் அனைத்தும் எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு தான் பெரிதும் ஏற்படும். ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.
சரும பிரச்சனைகள் எதுவும் வராமலிருக்க என்ன பண்ணலாம்?

அழகை விரும்பாதவர்கள இந்த உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். அவ்வாறு சருமம் அழகாக இருந்து, ஆரோக்கியமாக இருந்தால், அந்த அழகு நிச்சயம் வேஸ்ட் தான். அதிலும் தற்போதுள்ள இளம் பெண்கள் பிம்பிள் எனப்படும் முகப்பரு, வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நமது சருமத்தின் இயற்கைத் தன்மையே காரணமாகும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தான் மிகுந்த பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். சரி, இப்போது அந்த எண்ணெய் பசை சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பார்ப்போமா!!!

முகப்பரு

பொதுவாக முகப்பருவானது டீனேஜ் பருவத்தில் தான் வரத் தொடங்கும். ஏனெனில் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால் ஏற்படுகிறது. ஆகவே இந்த முகப்பரு வராமலிருக்க க்ரீம்களை பயன்படுத்துவதை விட, ஒரு சில நல்ல உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதற்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், பிஸ்கட், ஸ்வீட், கேக், குளிர் பானங்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதிலும் கொக்கோ நிறைந்த உணவுகளான டீ, காபி போன்றவற்றை அளவாக குடிக்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை, பால், புரோட்டீன் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு 4-5 முறை முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிக்க வேண்டும். முகப்பரு காரணமாக கூட ஸ்கால்ப்பில் பொடுகு வரக்கூடும். ஆகவே எப்போது கூந்தலை கூத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நிறமூட்டல்

சருமத்தில் ஆங்காங்கு புள்ளிகள் போன்று காணப்படுகிறதா? அப்படியெனில் உடலில் புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஆகவே இநத் குறைபாட்டினால், சருமத்தில் உள்ள நிறமிகள் ஆங்காங்கு தங்கி, புள்ளிகள் போன்று காணப்படுகின்றன. அதிலும் இந்த பிரச்சனை கர்பபமாக இருக்கும் போது ஏற்பட்டால், அது பிரசவத்திற்கு பின் உண்ணும் வைட்டமின் உணவால் சரியாகிவிடும். மேலும் அவை மசாஜ் செய்தால், முற்றிலும் போய்விடும்.

கரும்புள்ளிகள் - வெள்ளை புள்ளிகள்

சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் தான் வெள்ளை மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. முக்கியமாக மூக்கு, உதட்டிற்கு கீழ் மற்றும் தாடை போன்ற இடங்களில் தான் வரும். இந்த பிரச்சனை நீங்குவதற்கு குறைந்த ஃபேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிடுவது, வாரத்திற்கு ஒரு முறை ஆவி பிடிப்பது போன்றவற்றால் சரியாகிவிடும். மேலும் இந்த பிரச்சனையை அழகு நிலையங்களுக்குச் சென்றால், அதற்காக உள்ள சிறப்பு சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.
இந்த வகையான பிரச்சனைகள் அனைத்தும் எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு தான் பெரிதும் ஏற்படும். ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.

வல்க்ரோ- நம்மில் எத்தனை பேர் இதன் பெயர் அறிவோம் !!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:58 | Best Blogger Tips
வல்க்ரோ- நம்மில் எத்தனை பேர் இதன் பெயர் அறிவோம் !!

"வல்க்ரோ ", நம்மில் சிலர் மட்டுமே இதன் பெயரை அறிந்திருப்போம்.ஆனால் தினமும் எதாவது ஒரு வகையில் எதாவது ஒட்டுவதற்கு பயன்படுத்திக் கொண்டு இருப்போம்.

காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள 'வல்க்ரோ' என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டுபிடிப்புக்கு 'வல்க்ரோ' என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் 'வல்க்ரோ'வுக்கு உண்டு.
வல்க்ரோ- நம்மில் எத்தனை பேர் இதன் பெயர் அறிவோம் !!

"வல்க்ரோ ", நம்மில் சிலர் மட்டுமே இதன் பெயரை அறிந்திருப்போம்.ஆனால் தினமும் எதாவது ஒரு வகையில் எதாவது ஒட்டுவதற்கு பயன்படுத்திக் கொண்டு இருப்போம்.

காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள 'வல்க்ரோ' என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா?

ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார்.

ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் பட்டையை உருவாக்க முடியுமா என்று மெஸ்ட்ரால் சிந்தித்தார். அதற்காகப் பல ஆண்டு காலம் உழைத்தார்.

ஒரு முயற்சியாக, இரண்டு துண்டுத் துணிகளைப் பயன்படுத்திப் பார்த்தார். ஒன்றில், நூற்றுக்கணக்கான சிறு கொக்கிகள் இருந்தன. மற்றொன்றில், நூற்றுக்கணக்கான சிறு வளைவுகள் இருந்தன. இரண்டையும் சேர்த்தபோது அவை அட்டகாசமாகப் பற்றிக் கொண்டன. இழுத்தால், இரண்டு துணிகளும் பிரிந்தன. தனது கண்டுபிடிப்புக்கு 'வல்க்ரோ' என்று பெயரிட்ட டீ மெஸ்ட்ரால், 1957-ல் அதற்குக் காப்புரிமை பெற்றார்.

அதற்குப் பிறகு, ஸ்நூக்கர், ஸ்னோசூட் போன்ற சிறப்பு உடைகளிலும் இவை பயன்படுத்தப்பட்டன. விண்வெளி வீரர் உடையிலும், செயற்கை இதயத்திலும் பயன்படுத்தப்படும் பெருமையும் 'வல்க்ரோ'வுக்கு உண்டு.

ஆண்கள் எப்போதும் தங்கள் வலிகளை வெளிப்படுத்தமாட்டாங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:58 | Best Blogger Tips
ஆண்கள் எப்போதும் தங்கள் வலிகளை வெளிப்படுத்தமாட்டாங்க...

அனைவருக்குமே பெண்களை விட ஆண்கள் சற்று வலிமையானவர்கள் என்பது தெரியும். ஏனெனில் ஆண்கள் எதையுமே தைரியமாக, மன வலிமையுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள். ஆனால் பெண்கள், தங்கள் வலிகளை கோபத்தின் வாயிலாகவோ அல்லது அழுதோ வெளிப்படுத்திவிடுவார்கள். அதுவே ஆண்கள் தனக்கு ஏற்படும் வலிகளை ஒரு போதும் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிலும் கஷ்டம் மனதில் இருந்தாலும் ஆண்கள் அழுது வெளிப்படுத்துவது மிகவும் அரிதானது.

முதலில் ஆண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்பது ஏற்கனவே ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்போது லீட்ஸ் மெட்ரோபாலிட்டன் பல்கலைகழகத்தில், பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வலியை பொறுத்துக் கொள்வார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எப்படியெனில் ஆண்களுக்கு ஈகோ மிகவும் அதிகம். அதனால் தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் வலிகளை ஏற்றக் கொள்ள முடிகிறது. இதனால் அவர்களது உணர்ச்சி கட்டுப்படுத்தப்படுவதோடு, பலமடைகிறது. ஆகவே தான் ஆண்கள் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், மன தைரியத்துடன், மனதை அந்த கஷ்டத்தினால் தளர விடாமல், போராட முடிகிறது. ஆனால் அவர்கள் வருத்தத்தில் இருக்கும் போது, அவர்களது நடவடிக்கையை வைத்து அவர்கள் மனதில் வலி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, கணவன் மனைவியை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டால், அதனால் பெண்கள் தங்கள் வலியை அழுது வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால் ஆண்கள் அந்த நேரத்தில் எதுவும் செய்யாமல், பேசாமல் அமைதியாக யாரிடமும் பேசாமல், தனிமையிலேயே இருப்பர். வேண்டுமெனில் சில சமயங்களில் தன்னுடைய நெருங்கிய நண்பரிடம் பேசி, தன் மனதை ஆற்றிக் கொள்வார்கள்.

எப்படியெல்லாம் ஆண்கள் தங்கள் வலியை மறைப்பார்கள்?

* யாரிடமும் எந்த ஒரு உரையாடலையும் மேற்கொள்ளமாட்டார்கள். அதாவது, ஆண்களிடம் அவர்களுக்கு வலியை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றி கேட்டால், அப்போது ஒரு வார்த்தையில் பதிலளிப்பர் அல்லது அந்த டாபிக்கையே மாற்றிவிடுவர். இதை வைத்து அவர்கள் மனதில் வலி இருப்பதை மறைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

* சில ஆண்கள் வலியை மறக்க, எப்போதுமே நண்பர்களுடன் இருப்பர். ஏனெனில் தனிமை அவர்களுக்கு பெரும் வலியை ஏற்படுத்தும் என்று எந்த நேரமும் நண்பர்களுடன் இருந்து, வலியை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றி நினைக்காமல் இருக்க முயற்சிப்பர்.

* ஆண்களின் ஈகோ மிகவும் வலிமையானது. அந்த ஈகோ தான் அவர்களது வலியை தாங்கிக் கொள்ள வைக்கிறது. மேலும் இந்த ஈகோ மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ள விடாமல் தடுக்கும். அதிலும் ஆண்கள் தங்கள் வலியை மற்றவர்களுக்கு காண்பித்து, அதனால் மற்றவர்கள் தங்கள் மீது கருணை கொள்வதை விரும்ப மாட்டார்கள்.

* ஆண்களுள் சிலர் தங்களுக்கு இருக்கும் ஈகோவின் அளவை அதிகரிப்பார்கள். இதனால் அவர்கள் எந்த வலியையும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியும்.

என்ன நண்பர்களே! இதை ஒப்புக் கொள்கிறீர்களா?
ஆண்கள் எப்போதும் தங்கள் வலிகளை வெளிப்படுத்தமாட்டாங்க...

அனைவருக்குமே பெண்களை விட ஆண்கள் சற்று வலிமையானவர்கள் என்பது தெரியும். ஏனெனில் ஆண்கள் எதையுமே தைரியமாக, மன வலிமையுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள். ஆனால் பெண்கள், தங்கள் வலிகளை கோபத்தின் வாயிலாகவோ அல்லது அழுதோ வெளிப்படுத்திவிடுவார்கள். அதுவே ஆண்கள் தனக்கு ஏற்படும் வலிகளை ஒரு போதும் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிலும் கஷ்டம் மனதில் இருந்தாலும் ஆண்கள் அழுது வெளிப்படுத்துவது மிகவும் அரிதானது.

முதலில் ஆண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்பது ஏற்கனவே ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்போது லீட்ஸ் மெட்ரோபாலிட்டன் பல்கலைகழகத்தில், பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வலியை பொறுத்துக் கொள்வார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எப்படியெனில் ஆண்களுக்கு ஈகோ மிகவும் அதிகம். அதனால் தான் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் வலிகளை ஏற்றக் கொள்ள முடிகிறது. இதனால் அவர்களது உணர்ச்சி கட்டுப்படுத்தப்படுவதோடு, பலமடைகிறது. ஆகவே தான் ஆண்கள் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், மன தைரியத்துடன், மனதை அந்த கஷ்டத்தினால் தளர விடாமல், போராட முடிகிறது. ஆனால் அவர்கள் வருத்தத்தில் இருக்கும் போது, அவர்களது நடவடிக்கையை வைத்து அவர்கள் மனதில் வலி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, கணவன் மனைவியை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு விவாகரத்து ஏற்பட்டால், அதனால் பெண்கள் தங்கள் வலியை அழுது வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால் ஆண்கள் அந்த நேரத்தில் எதுவும் செய்யாமல், பேசாமல் அமைதியாக யாரிடமும் பேசாமல், தனிமையிலேயே இருப்பர். வேண்டுமெனில் சில சமயங்களில் தன்னுடைய நெருங்கிய நண்பரிடம் பேசி, தன் மனதை ஆற்றிக் கொள்வார்கள்.

எப்படியெல்லாம் ஆண்கள் தங்கள் வலியை மறைப்பார்கள்?

* யாரிடமும் எந்த ஒரு உரையாடலையும் மேற்கொள்ளமாட்டார்கள். அதாவது, ஆண்களிடம் அவர்களுக்கு வலியை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றி கேட்டால், அப்போது ஒரு வார்த்தையில் பதிலளிப்பர் அல்லது அந்த டாபிக்கையே மாற்றிவிடுவர். இதை வைத்து அவர்கள் மனதில் வலி இருப்பதை மறைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

* சில ஆண்கள் வலியை மறக்க, எப்போதுமே நண்பர்களுடன் இருப்பர். ஏனெனில் தனிமை அவர்களுக்கு பெரும் வலியை ஏற்படுத்தும் என்று எந்த நேரமும் நண்பர்களுடன் இருந்து, வலியை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றி நினைக்காமல் இருக்க முயற்சிப்பர்.

* ஆண்களின் ஈகோ மிகவும் வலிமையானது. அந்த ஈகோ தான் அவர்களது வலியை தாங்கிக் கொள்ள வைக்கிறது. மேலும் இந்த ஈகோ மற்றவர்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ள விடாமல் தடுக்கும். அதிலும் ஆண்கள் தங்கள் வலியை மற்றவர்களுக்கு காண்பித்து, அதனால் மற்றவர்கள் தங்கள் மீது கருணை கொள்வதை விரும்ப மாட்டார்கள்.

* ஆண்களுள் சிலர் தங்களுக்கு இருக்கும் ஈகோவின் அளவை அதிகரிப்பார்கள். இதனால் அவர்கள் எந்த வலியையும் எளிதில் தாங்கிக் கொள்ள முடியும்.

என்ன நண்பர்களே! இதை ஒப்புக் கொள்கிறீர்களா?

உணவு விஷமாவதை சரி செய்ய எளிய வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:53 | Best Blogger Tips
உணவு விஷமாவதை சரி செய்ய எளிய வழிகள்
==============================

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஏராளமான இனிப்புகளும், உணவுகளும் செய்யப்படும் காலம் இது. இந்த சமயத்தில் பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை உணவு விஷமாதல் தான்!

பொதுவாகவே புட் பாய்சன் ஏற்பட்டால், அதனால் வாந்தி, பேதி, வயிற்று வலி, வயிறு எரிச்சல், லேசான காய்ச்சல், தலைவலி, தசைவலி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்படும்.

இதுபோன்ற புட்பாய்சன் பிரச்னைகளை தீர்க்க எளிய வழிகள் உள்ளன.

இஞ்சி சாறு

************

இஞ்சி சாறினை தேனில் கலந்து உட்கொள்ளலாம். அல்லது இஞ்சியை தேனில் தொட்டு மென்று சாப்பிடலாம். அது முடியாதவர்கள் இஞ்சி கலந்த தேனீரை அருந்தலாம். இவ்வாறு செய்வதால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகச் சாறு
***********

சீரகப் பொடி சேர்த்து சூப் குடிப்பது அல்லது சீரகத்தை நன்கு வறுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதனை அருந்துவதால் வாந்தி நிற்கும்.

துளசிச் சாறு
*************

துளசியை வெறுமனே எடுத்து வாயில் போட்டு மென்றால் கூட உடனடியாக அஜீரணக் கோளாறுகள் சரியாகும். புட் பாய்சன் அதிகமாக இருந்தால், துளசிச் சாறினை வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது, உணவு உண்ட பிறகு ஏற்படும் பிரச்சினையாக இருப்பின், துளிச் சாறு எடுத்து அதனை தேனுடச் சேர்த்து சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு
*****************

புட் பாய்சனால் வயிற்றில் ஏற்பட்ட கிருமிகளை அழிக்கும் ஆற்றல் எலுமிச்சை சாறுக்கு உள்ளது. எனவே, எலுமிச்சை சாற்றை உப்பு கலந்து குடித்தால் வயிற்று உபாதைகள் குறையும். முடிந்தால் எலுமிச்சை கலந்து தேனீர் அருந்தலாம். மேலும், வயிற்று உபாதையால் அவதிப்படுவோர் எலுமிச்சை சாறு குடிப்பதால் உடனடியாக புத்துணர்ச்சி அடைய முடியும்.

புதினாச் சாறு
**************

புதினாச் சாறு வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்தாகும். அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. புதினாச் சாறை டீயுடன் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அஜீரணக் கோளாறு அதிகமாக இருப்பவர்கள் புதினாச் சாறு எடுத்தும் குடிக்கலாம்.

- By Vanisri Sivakumar, சென்னை
உணவு விஷமாவதை சரி செய்ய எளிய வழிகள்
==============================

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஏராளமான இனிப்புகளும், உணவுகளும் செய்யப்படும் காலம் இது. இந்த சமயத்தில் பலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்னை உணவு விஷமாதல் தான்!

பொதுவாகவே புட் பாய்சன் ஏற்பட்டால், அதனால் வாந்தி, பேதி, வயிற்று வலி, வயிறு எரிச்சல், லேசான காய்ச்சல், தலைவலி, தசைவலி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்படும்.

இதுபோன்ற புட்பாய்சன் பிரச்னைகளை தீர்க்க எளிய வழிகள் உள்ளன.

இஞ்சி சாறு

************

இஞ்சி சாறினை தேனில் கலந்து உட்கொள்ளலாம். அல்லது இஞ்சியை தேனில் தொட்டு மென்று சாப்பிடலாம். அது முடியாதவர்கள் இஞ்சி கலந்த தேனீரை அருந்தலாம். இவ்வாறு செய்வதால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

சீரகச் சாறு
***********

சீரகப் பொடி சேர்த்து சூப் குடிப்பது அல்லது சீரகத்தை நன்கு வறுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதனை அருந்துவதால் வாந்தி நிற்கும்.

துளசிச் சாறு
*************

துளசியை வெறுமனே எடுத்து வாயில் போட்டு மென்றால் கூட உடனடியாக அஜீரணக் கோளாறுகள் சரியாகும். புட் பாய்சன் அதிகமாக இருந்தால், துளசிச் சாறினை வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது, உணவு உண்ட பிறகு ஏற்படும் பிரச்சினையாக இருப்பின், துளிச் சாறு எடுத்து அதனை தேனுடச் சேர்த்து சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு
*****************

புட் பாய்சனால் வயிற்றில் ஏற்பட்ட கிருமிகளை அழிக்கும் ஆற்றல் எலுமிச்சை சாறுக்கு உள்ளது. எனவே, எலுமிச்சை சாற்றை உப்பு கலந்து குடித்தால் வயிற்று உபாதைகள் குறையும். முடிந்தால் எலுமிச்சை கலந்து தேனீர் அருந்தலாம். மேலும், வயிற்று உபாதையால் அவதிப்படுவோர் எலுமிச்சை சாறு குடிப்பதால் உடனடியாக புத்துணர்ச்சி அடைய முடியும்.

புதினாச் சாறு
**************

புதினாச் சாறு வயிற்று உபாதைகளுக்கு நல்ல மருந்தாகும். அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. புதினாச் சாறை டீயுடன் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். அஜீரணக் கோளாறு அதிகமாக இருப்பவர்கள் புதினாச் சாறு எடுத்தும் குடிக்கலாம்.

- By Vanisri Sivakumar, சென்னை

எலுமிச்சை பற்றிய தகவல்:

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:53 | Best Blogger Tips

வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.

சட்டென இரண்டாக வெட்டி அதன் சாறை தண்ணீரில் கலந்து உப்போ, சர்க்கரையோ போட்டு கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் சுவையான குளிர்பானம் தயார்.
இப்படி சட்டென நாம் தயாரிக்கும் எலுமிச்சைப் பழச்சாற்றில் எத்தனை நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.
எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு என்பது கவனிக்கத் தக்கது.
எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதனால் வரும் பலன்களில் சில இதோ…

1. எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணி.

2. எலுமிச்சைப் பழச்சாறு குருதி சுத்தீகரிப்பானாகவும் செயல்படுகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.

3. எலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.

4. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும். மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.

5. எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

6. வாய் துற்நாற்றம் இருக்கிறதா ? பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா ? எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து !

7. உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா ? தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

8. உயர் குருதி அழுத்தம் உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மிகவும் நல்லது. உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் கூட எலுமிச்சைப் பழச்சாறு குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

9. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.

10. மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு எலுமிச்சைப் பழச்சாறு மருந்தாகிறது. உடலிலுள்ள தேவையற்ற நச்சுத்தன்மை, பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றுவதன் மூலம் உடலுக்கு நலமளிக்கிறது எலுமிச்சைப் பழச்சாறு !

இத்தனை பயன்கள் கொண்ட எலுமிச்சை பழச்சாறை பழச்சாறை எப்படி அருந்தலாம் ? எவ்வளவு அருந்தலாம் ? எனும் குழப்பம் இருக்கிறதா ? மருத்துவர்களின் ஆலோசனையைப் பாருங்கள்.

எழுபது கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழுமையான எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது பயனளிக்கும். குறிப்பாக காலையில் குடிப்பது சாலச் சிறந்தது. எழுபது கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்களுக்கு அரை எலுமிச்சைச் சாறே போதுமானது