மச்சத்தை வைத்து உங்கள் தலைவிதியை தெரிந்து கொள்ளலாமா!!!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:52 | Best Blogger Tips
மச்சத்தை வைத்து உங்கள் தலைவிதியை தெரிந்து கொள்ளலாமா!!!

பொதுவாகவே மச்சம் உடலில் இருந்தால் ஏதோ அதிர்ஷ்டம் உள்ளது என்று சொல்வார்கள். அதிலும் சில மச்சங்கள் கண்ணுக்கு தெரியாத இடத்தில் இருக்கும். சிலருக்கு உடலில் மச்சமே இல்லாமல் இருக்கும். மேலும் மச்சம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் சற்று வித்தியாசமான அதிர்ஷ்டக் காற்று வீசிவிட்டால், உடனே அனைவரும் அவனுக்கு அந்த இடத்தில் மச்சம் இருப்பதால் தான், அவன்

ஏதோ செய்யப் போக நல்ல அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என்று சொல்வார்கள்.

நமது முன்னோர்கள் அனைவருமே அக்காலத்தில் மச்சத்தை வைத்தே ஒரு சிலவற்றை சரியாக கணித்து சொல்வார்கள். அதேப்போலவே, வளர்ந்து பெரிய நிலைக்கு வந்த பின்னர், நமது பாட்டி, தாத்தா சொன்ன வார்த்தைகள் அனைத்தும் ஞாபகத்திற்கு வரும். இதனால் சிலர் நமது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள, பல சோதிடர்களை பார்த்து, ஜோசியம் பார்த்து, எதிர் காலத்தை தெரிந்து கொள்வார்கள்.

அதிலும் அவ்வாறு மச்சம் இருக்கும் போது எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை இந்திய மற்றும் சைனீஸ் ஜோதிடம் சிலவற்றை சொல்கிறது. இதில் இப்போது முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால், எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்ப்போமா!!!

நெற்றி

நெற்றி பெரிதாகவும், மச்சம் வலது பக்கத்திலும் இருந்தால், அது செல்வத்தை குறிக்கும். எப்போதும் சமூகத்தில் நல்ல செழிப்புள்ளவராக, நல்ல பெயர் மற்றும் செல்வாக்கோடு வாழ்வர். சிறந்த கொடை வள்ளல். ஆனால் நெற்றி குறுகலாகவும், மச்சமானது இடது பக்கத்திலும் இருந்தால், சுயநலவாதியாக, யாருக்கும் உதவி செய்யாமல், மற்றவர்களை மதிக்காமல் இருப்பர்.

நாக்கு

நாக்கின் நுனியில் மச்சம் இருந்தால், தன் புத்திசாலித்தனத்தான பேச்சாலேயே அனைவரையும் கவர்ந்து விடுவர். மேலும் எதிர்காலம் செழிப்போடு இருக்கும். அதுவே நாக்கின் நடுவில் இருந்தால், கல்வியில் தடை, சரியான பேச்சாற்றல் இல்லாதது மற்றும் உடலில் பல பிரச்சனைகள் போன்றவை இருக்கும்.

கன்னம்

கன்னத்தின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், பெற்றோர்கள், கணவன், மனைவி மற்றும் உறவினர்கள் மீது மிகுந்த பாசம் இருக்கும். வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக ரசித்து நீண்ட நாட்கள் வாழ்வார்கள். அதுவே இடது கன்னத்தில் இருந்தால், வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கும். ஆனால் திருமணம் ஆனப் பின், குழந்தைகளால் பிற்காலத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பர்.

உதடுகள்

உதட்டின் மேல்புறத்தில் இருந்தால், அனைவருக்குமே நல்லவர்களாக இருப்பர். அதுமே கீழ் உதட்டில் இருந்தால், அவர்கள் நன்கு சாப்பிடுவதோடு, நடிப்பதிலும், படம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாக இருப்பர்.

மூக்கு

மூக்கின் துனியில் மச்சம் இருந்தால், எதையும் விரைவில் சிந்திக்கக்கூடியவர். மேலும் அதிக சுயமரியாதைக் கொண்டவர்கள், எப்போதும் வெற்றி பெறக்கூடியவர்கள். அந்த மச்சமே வலது பக்கத்தில் இருந்தால், சிறு முயற்சியிலேயே அதிக பணத்தை பெறுவர். அதுவே இடது புறத்தில் இருந்தால், அனைத்துமே கெட்டதாக முடியும்.

காதுகள்

மச்சம் காதுகளில் எங்கிருந்தாலும், நல்ல வருமானம் இருப்பதோடு, ஆடம்பர வாழ்க்கையுடன் வாழ்வர். அதே நேரம் அந்த ஆடம்பரத்தால், மூழ்கும் நிலை கூட ஏற்படும். ஆனால் காதுகளின் பின்புறம் இருந்தால், அவர்களுக்கு வரும் வாழ்க்கைத்துணை மிகவும் பணக்காரர்களாக இருப்பர்.

புருவங்கள்

புருவத்திற்கு இடையில் மச்சம் இருந்தால், தலைமை பண்புகளுக்குரியவராக இருப்பர். அதுவே வலது புருவத்தில் இருந்தால், விரைவிலேயே நல்ல குணமுடையவரை திருமணம் செய்து கொள்வர். மிகவும் அதிர்ஷ்டசாலி. இடது பக்கத்தில் இருந்தால், கையில் எப்போதுமே பணம் இருக்காது, நிறைய பிரச்சனைகளை சந்திப்பர். சொல்லப்போனால் ஒரு துரதிர்ஷ்டசாலி.

கண்கள்

மச்சமானது வலது கண்ணில் இருந்தால், கைகளில் எப்போதுமே பணம் இருக்கும். அதுவும் வேலையே இல்லாவிட்டாலும், பணம் கையில் எப்போதும் இருக்கும். அதுவே இடது கண்ணில் இருந்தால், அதிக திமிரு பிடித்தவர்களாக இருப்பர்.

சாத்துக்குடியின் உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:50 | Best Blogger Tips

சாத்துக்குடியின் உடல்நல நன்மைகள்
மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது.

தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந
்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

நோயுற்றவர்களுக்கு

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு

சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய

சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

நன்கு பசியைத் தூண்ட

பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு

ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

பெண்களுக்கு

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

முதியோர்களுக்கு

வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்

முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:36 | Best Blogger Tips
முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.

“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.

அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.

முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.

முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.

முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.

வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.

பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள் .
<<<<நலமுடன் வாழ>>>>

முட்டை சைவப் பிரியர்களின் முதன்மை உணவாக மாறிப்போயிருக்கும் காலம் இது. முட்டை அசைவம் என்றாலே நம்பத் தயாராய் இல்லை இன்றைய இளம் தலைமுறை. ஆனால் அவர்களைக் கலக்கமுறச் செய்வதெல்லாம் முட்டையைக் குறித்து உலவிக் கொண்டிருக்கும் ஏராளமான கட்டுக் கதைகள் தான்.

“முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது ..” என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.

அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்குகின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.

முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

முட்டை வயிற்றில் உள்ள என்சைம்களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும் அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள்.

முட்டையை வேகவைத்து என்றல்ல, பொரித்து ஆம்லேட்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி ஆம்லேட் பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர் இவர்கள்.

முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.

உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல. மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை. இன்னும் சொல்லப்போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது. உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர்.

வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கியமானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த கட்டுப்பாடுகளின் கட்டுகளையெல்லாம் அவிழ்த்து விட்டு , தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்.

பிறகென்ன, நீங்களும் முட்டையை மறுபடியும் நேசியுங்கள் .