பீட்ரூட் சாப்பிடுங்கள்... பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:02 | Best Blogger Tips


பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்

* புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
* மலச்சிக்கலைப் போக்கும்.
* பித்தத்தைக் குறைக்கும்
* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

கிட்டி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த கத்திரிகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்..


தெரியாததை தெரிந்து கொள்வோம்
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்.

உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:33 | Best Blogger Tips

சூரிய நமஸ்காரம் என்பது ஒரு வகையான ஆசனம். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன. இந்த ஆசனம் ஒரு முழுமையான சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது. இந்த ஆசனத்தை தினமும் காலையில் செய்து வந்தால், உடல் மற்றும் மனம் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு செயல்படும்.
மேலும் அலுவலகத்தில் அதிக வேலையின் காரணமாக மனஅழுத்தம், டென்சன் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆசனத்தை தினமும் காலையில் செய்து வந்தால், அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மனம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். சொல்லப்போனால், இந்த சூரிய நமஸ்காரம் நமது முன்னோர்கள் தந்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மேலும் இந்த சூரிய நமஸ்காரம் செய்யும் போது மனதிற்குள் "ஓம்" என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே செய்ய வேண்டும். இப்போது அந்த சூரிய நமஸ்காரத்தில் உள்ள பன்னிரெண்டு நிலையான ஆசனங்களை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!!
பிராணமாசனம்
இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து நேராக நிமிர்ந்து நின்று, கைகளை பக்கவாட்டில் இருந்து மெதுவாக தலைக்கு மேலே தூக்கி இணைக்கும் போது மூச்சை உள்ளிழுத்து, பின் மெதுவாக மார்புக்கு நேராக கொண்டு வந்து, நமஸ்காரம் செய்வது போன்று வரும் போது மூச்சை நன்கு வெளியிட
இந்த சூரிய நமஸ்காரத்தில் நாம் செய்யும் ஆசனங்கள் அனைத்தும் சுவாசம் சம்பந்தப்படது. மேலும் இந்த பன்னிரெண்டு நிலையை செய்யும் போது மனதை ஒருநிலைப்படுத்தவே, மனதிற்குள் "ஓம்" என்னும் மந்திரத்தை சொல்கிறோம். மேலும் இந்த பன்னிரெண்டு நிலையில், செய்ததையே செய்தது போன்று இருக்கும். ஆனால் அதுவே இந்த சூரிய நமஸ்காரத்தின் சரியான முறை. இதனால் உடல் உள்ள அனைத்து உறுப்புகளும் நன்கு வளைந்து, ஒரு விதமான புத்துணர்ச்சியை அடையும். ஆகவே நண்பர்களே! நீங்களும் இந்த ஆசனத்தை செய்து ஆரோக்கியமாக வாழுங்கள்.


இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து நேராக நிமிர்ந்து நின்று, கைகளை பக்கவாட்டில் இருந்து மெதுவாக தலைக்கு மேலே தூக்கி இணைக்கும் போது மூச்சை உள்ளிழுத்து, பின் மெதுவாக மார்புக்கு நேராக கொண்டு வந்து, நமஸ்காரம் செய்வது போன்று வரும் போது மூச்சை நன்கு வெளியிட வேண்டும்.

அஸ்ட உட்டனாசனம்

இந்த ஆசனத்தின் போது மூச்சை உள்ளிழுத்து, கைகளை மேலே தூக்கி, கைகள் இரண்டும் காதுகளை தொடும் படியாக கும்பிட்டு, மெதுவாக பின்புறமாக உடலை வளைக்க வேண்டும்.

அஸ்டபாதாசனம்

இதில் மூச்சை மெதுவாக வெளியே விடும் படியாக, கைகள் இரண்டும் தரையை தொடும் படியும், தலை கால்களின் முட்டியை தொட்ட படி, சில விநாடிகள் இருக்க வேண்டும்.

ஏகபாதபிரஸர்நாசனம்

மூச்சை உள்ளிழுத்த படியாக, வலது காலை பின்னோக்கி வைத்து, இடது காலை முன்னோக்கி வைத்து, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை மேலே தூக்கி, சில விநாடிகள் இருக்க வேண்டும்.

தந்தாசனம்

இதில் மூச்சை வெளிவிட்ட படி, இரண்டு கால்களையும் பின்னே வைத்து, இரண்டு கைகளையும் முன்னே வைத்து, இடுப்பை மேலே தூக்கி, வளைந்து இருக்க வேண்டும்.

அஷ்டாங்க நமஸ்காரம்

இந்த நிலையில் மூச்சை உள்ளிழுத்து, தரையில் படுத்து, கைகளை மார்புக்கு நேராக ஊன்றி, கால்கள், முட்டி, மார்பு மற்றும் தாடை தரையில் படும் படியும், இடுப்பு பகுதி மட்டும் சற்று மேலே தூக்கியும் இருக்க வேண்டும். இந்த நேரத்தில் சற்று நேரம் மூச்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
Light on

புஜங்காசனம்

இந்த நிலை ஆசனத்தில் மூச்சை உள்ளிழுத்த படியாக, தரையில் படுத்து, கைகளை மார்புக்கு நேராக வைத்து, மார்பு மற்றும் முகத்தை மேலே தூக்கி, முதுகை எவ்வளவு வளைக்க முடியுமோ, அவ்வளவு வளைக்க வேண்டும்.

அதோ முக்கா ஸ்வானாசனம்

இதில் மூச்சை வெளியே விட்டபடியாக, கைகளை தரையில் பதித்து, இடுப்பு மற்றும் தலையை உயர்த்தி, வளைந்து இருக்க வேண்டும்.

ஆஷ்வா சஞ்சலனாசனம்

மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து, வலது காலை முன்னே வைத்து, முட்டியை மடக்கி, கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் நேராக வைத்து, தலையை மேலேத் தூக்கி உடலை வளைக்க வேண்டும்.

உட்டனாசனம்

மூச்சை வெளியே விட்ட படி, கால்களை இணைத்து, கைகள் தரையையும், தலை முட்டியையும் தொடும் படி செய்ய வேண்டும்.

அஸ்ட உட்டனாசனம்

இந்த நிலை இரண்டாவதாக கூறிய நிலையே ஆகும். அதாவது மூச்சை உள்ளிழுத்து, கைகளை மேலே தூக்கி, கைகள் இரண்டும் காதுகளை தொடும் படியாக கும்பிட்டு, மெதுவாக பின்புறமாக உடலை வளைக்க வேண்டும் என்பதே.

பிராணமாசனம்

இந்த நிலையே சூரிய நமஸ்காரத்தின் இறுதி நிலை. இது சூரிய நமஸ்காரத்தை எவ்வாறு தொடங்குகின்றோமோ, அதே நிலையில் நமஸ்காரம் செய்து முடிக்க வேண்டும். இது செய்யும் போது மூச்சை வெளிவிட வேண்டும்.